வியாழன், ஜூலை 04, 2013

அன்பே அழகானது. – பகுதி – 5.



மதியம் என்ன லஞ்ச் என சுதாவிடம் மாலாதி டீச்சர் கேட்டதும். 

உதடு பிரியாமல் புன்னகைத்த சுதா, அப்பாவோட ப்ரண்ட் பொண்ணுக்கு கல்யாணம். அதனால காலையில எல்லாரும் அங்க போய்ட்டாங்க. அதனால லஞ்ச் கொண்டு வரல. வீட்டுக்கு போய் சாப்பிட்டு தான் வரனும் மேடம்.

என்ன மேடம் வந்து ஓருவாரம்மாச்சி. உங்க வீட்டப்பத்தி சொல்லவேயில்ல என ப்ரியா தான் கிளறினாள்.

நான், அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அண்ணன் பொண்ணு சுவாதி ஐந்து பேர் தான். அப்பாவும், அண்ணனும் பிஸ்னஸ் பண்றாங்க, அம்மா ஹவுஸ்ஒய்ப், அண்ணி இந்தியன் பேங்க்ல அசிஸ்டன்ட் மேனேஜரா இருக்காங்க.

ப்ரியா தயங்கி தயங்கி உங்களுக்கு கல்யாணம்மாயிடுச்சில்ல.

ம்.

வீட்டுக்காரர் என மாலதி இழுக்க சுதாவின் செல்போன் அன்பென்ற மழையிலே என பாடல் பாட அதை எடுத்து பார்த்தவள் அம்மா கூப்பிடறாங்க எனச்சொல்லியபடி ஆன் செய்தாள். சொல்லும்மா. இன்னும் கொஞ்ச நேரத்தல லஞ்ச் ஃபெல் அடிப்பாங்க வீட்டுக்கு வர்றம்மா எனச்சொல்லிவிட்டு காலை கட் செய்யவும் லஞ்ச் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.

நானும் இன்னைக்கு வீட்டுக்கு தான் போறன் வாங்களேன் உங்கள ட்ராப் பண்றன் என்றாள் ப்ரியா.

உங்களுக்கு எதுக்கு சிரமம்.

இதலபோய் என்னயிருக்கு வாங்க என்றாள்.

ப்ரியாவும், சுதாவும் பார்கிங் ஏரியாவுக்கு நடந்து செல்ல குட் ஆப்டர்னோ மேடம் என்றார் கணக்கு ஆசிரியரான ஸ்டீபன்.

திரும்பி பார்த்த ப்ரியா வணக்கம் சார் என்றாள்.

எங்க போறிங்க ?.

லஞ்ச் கொண்டு வரல சார் அதனால வீட்டுக்கு போறன். அதிருக்கட்டும் சார் ஸ்கூல் திறந்தது ஒருவாரம்மாச்சி இப்பத்தான் வர்றிங்க.

ஃபேமிலி டூர் முடிஞ்சி, சொந்த ஊர்க்கு போய்ட்டு நேத்து தான் வந்தோம்.

ஓஹே.

இவுங்க யார் டீச்சர் ?.

நியூ அப்பாய்மென்ட் சார். பேரு சுதா.

சுதா பக்கம் திரும்பி ஸ்டீபன் புன்னகைக்க சுதாவும் பதிலுக்கு புன்னகைத்தாள்.

சார் டுவல்த்துக்கு மேக்ஸ் எடுக்கறாரு என ப்ரியா அறிமுகப்படுத்த சுதா ஹலோ சார் என்றாள்.

சரி சார் டைம்மாகிடுச்சி போய்ட்டு வந்துடறோம் என்றாள் ப்ரியா. அவரும் தலையாட்டிவிட்டு தன் டூவீலரை எடுத்துக்கொண்டு சென்றார். ப்ரியா தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வர சுதா ஏறி அமர இருவரும் பள்ளியில் இருந்து வந்தனர். சுதா தன் வீட்டுக்கு வழிச்சொல்ல ப்ரியா வண்டியை விரட்டினாள். காந்தி நகரில் உள்ள தன் வீட்டு முன் வந்ததும் நீங்களும் வாங்க இப்படியே சாப்பிட்டுட்டு ஸ்கூல் போகலாம் என அழைக்க ப்ரியா மறுத்துவிட்டு ரிட்டன் நான் வந்து பிக்கப் பண்ணிக்கட்டுமா என கேட்டதும் சுதா உங்களுக்கு எதுக்கு சிரமம். நூன் ஸ்கூல்க்கு வந்துடறன் எனச்சொல்ல ப்ரியா கிளம்பினாள்.

வீட்டுக்குள் நுழைந்த சுதாவை கண்டதும் அவளது அம்மா காவேரி, ஏண்டீ காலையில தோசையாவது சுட்டு சாப்பிட்டுட்டு போக வேண்டியதுதானே.

குhலையில பசிக்கல அதனால அப்படியே போய்ட்டன் என்றபடி பாத்ரூம் சென்று திரும்பி வந்து டைனிங்டேபிள் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டபடியே கல்யாணம் எப்படிம்மா நடந்தது என கேட்டபடியே சாப்பிட்டாள். சுhப்பிட்டு முடித்ததும் ஃபேக்கை எடுத்துக்கொண்டு கிளம்ப எப்படிடீ போற என கேட்டார் காவேரி.

ஏதாவது ஆட்டோ புடிச்சி போய்க்கறம்மா எனச்சொல்லியபடி வெளியே மெயின் ரோட்டுக்கு வந்து ஆட்டோவுக்காக காத்திருந்தாள்.

அப்போது அவள் அருகே சர்ரென ஒரு டூவீலர் வந்து பிரேக் அடித்து நின்றார் ஆசியர் ஸ்டீபன். மேடம் இங்க என்ன நிக்கறிங்க ?

பக்கத்தல தான் சார் வீடு. ஸ்கூல்க்கு போகனும் ஆட்டோவுக்காக நிக்கறன்.

எதுக்கு ஆட்டோ நானும் ஸ்கூல் தான் போறன், எதுவும் சங்கடம்மில்லைன்னா என்னோட வாங்க.

பரவாயில்ல சார். ஆட்டோவுலயே வந்துடறன்.

நீங்க என்னை ஃப்ரண்டா நினைச்சி வாங்க என சொல்லியபடி ஸ்டீபன் சுதாவை பார்க்க அதை காதில் வாங்கியபடி ரோட்டில் காலியாக வந்த ஆட்டோவை சுதா பார்க்க அது அவள் அருகே வந்து நின்றது. ஸாரி சார் நான் ஆட்டோவுலயே வந்துடறன் என்றபடி ஆட்டோவில் அமர்ந்தபடி குழந்தை ஏசு ஸ்கூல் போங்க எனச்சொல்ல ஆட்டோ புறப்பட்டது. ஆட்டோவையே பார்த்தபடி நின்றிருந்தார் ஸ்டீபன்.

பள்ளிக்கு வந்து வகுப்புகளை நடத்தியவள் மாலை வீட்டுக்கு கிளம்பும்போது  ப்ரியாவிடம் மதியம் ஸ்டீபன் வண்டியில் வாங்க என அழைத்தது பற்றி சுதா சொன்னாள்.

வந்தன்னைக்கே உங்கிட்ட ஆரம்பிச்சிட்டாரா?.

என்ன மேடம் சொல்றிங்க என சந்தேகமாகவே கேட்டாள்.

அவர் ரொமான்ஸ் மன்னன். கூட வேலை பாக்கற டீச்சராச்சேன்னு பாக்கமாட்டாரு வழிவாரு. மேனேஜ்மென்ட் அவர் விவகாரத்த கண்டுக்கறதில்ல. சர்ச்ல அவருக்கு செல்வாக்குயிருக்கு. அரசியல் செல்வாக்கும் வச்சியிருக்காரு. அதனால அவர்க்கிட்ட ஒதுங்கியே இருக்காங்க. அவரோட மனைவியும் டீச்சர் தான் ரொம்ப நல்லவங்க. மதியம் உன்ன பாத்துட்டு நீ யாருன்னு தெரிஞ்சிக்க தான் பேச்சு கொடுத்தாரு. நீ மட்டும் அவரோட வண்டியில வந்திருந்த உன் இமேஜ் காலியாகியிருக்கும். அவர்கிட்ட ஜாக்கிரதையா இரு. உங்க ஏரியாவுக்கு பக்கத்து ஏரியால தான் அவரோட வீடு இருக்கு என்றாள்.

பாத்து ஒரு மணி நேரம் கூட ஆகல. அதுக்குள்ள உங்கள ட்ராப் பண்றன்னு கேட்கறது கொஞ்சம் கூட நல்லாயில்லைங்க. வந்த கோபத்துக்கு திட்டிட்டுயிருப்பன் வேணாம்ன்னு விட்டுட்டன்.

அவர் விவகாரத்தல கொஞ்சம் ஜாக்கிரதையா இரு என்றவள் வாங்க உங்கள வீட்ல ட்ராப் பண்ணிடறன். சரியென சுதா தலையாட்ட ஸ்கூட்டி சுதாவின் வீட்டுக்கு சென்றது. கதவை திறந்து வரவேற்ற காவேரியிடம் இவுங்க பேர் ப்ரியா கூட வேலை பாக்கறாங்கன்னு சொன்னயில்ல இவுங்க தான் என அறிமுகப்படுத்தினாள் சுதா.

வாம்மா என்றவர் இருங்க காபி போட்டு எடுத்து வர்றன் எனச்சொல்லிவிட்டு உள்ளே சென்றார். சுதா ப்ரியாவுக்கு வீட்டை சுற்றி காட்டினாள். காபியுடன் வந்த காவேரி, ப்ரியாவிடம் நீ எங்கம்மாயிருக்க என விசாரிக்க தொடங்கினார். எனக்கு சொந்தவூர் விழுப்புரம். இங்க கல்யாணம் பண்ணி தந்தாங்க. என் வீட்டுக்காரரும் ஆசிரியரா இருக்காரு. ஒரு பொண்ணு. லலிதான்னு பேரு நாமக்கல் போர்டிங் ஸ்கூல்ல எட்டாவது படிக்கறா என்றார்.

வேலைக்கு போய் சம்பாதிக்கனும்கிற நிலமையில இவயில்ல. வேலைக்கு போகனம்ன்னு அடம்பிடிச்சதால தான் இவுங்கப்பா அனுப்பிவைக்கறாரு. இவ சந்தோஷமா இருக்கனம்ன்னு நினைக்கறோம். அவ விதி அவளை சுத்தி விட்டு வேடிக்கை பாக்குது என கண் கலங்க ப்ரியாவுக்கு புரியவில்லை என்றாளும், சுதா வாழ்க்கை மகிழ்ச்சியா இல்லை என்பதை உணர்ந்தாள். காவேரி அழுவதை கண்டதும் என்னம்மா நீ என சுதா கேட்க தன் கண்களை முந்தானியால் துடைத்தபடி நான் ஒன்னும் அழுவலடியம்மா என்ற காவேரி கிச்சன் பக்கம் நடந்தார்.

ஏதோ ஞாபகம் வந்தவளாக திரும்பி, மதியம் சாப்பிட வந்த உங்கப்பா நீ சாப்பிட வந்தியான்னு கேட்டாரு. வந்து சாப்பிட்டுட்டு ஆட்டோவுல திரும்ப போய்ட்டான்னு சொன்னதும் என்னை திட்டி தீத்துட்டாரு. உனக்கு ஸ்கூட்டி வாங்க போயிருக்காரு என்ன கலர் வேணும்ன்னு உன்ன போன் பண்ணச்சொன்னாரு என காவேரி சொன்னபோது ப்ரியா ஜெர்க்காகிவிட்டாள்.

முன் சீட்டில் பாண்டியன், ரஞ்சித் அமர்ந்திருக்க, நடு சீட்டில் நான், பிரபு, ஸ்ரீதர் அமர்ந்திருந்தோம். பின் சீட்டில் மஞ்சு, கீதா, ரேவதி அமர்ந்திருந்த குவாலிஸ் கார் சென்னையை நோக்கி போய்க்கொண்டு இருந்தது.

ஏன் கீதா ஆஸ்பிட்டல் சேர்த்து பத்து நாளாகியிருக்கு. அத ஆபிஸ்ல யார்க்கிட்டயும் சொல்லாம மறைச்சிட்டு கொஞ்சம் பணம் வேணும்ன்னு கேட்கற. பிரபு மட்டும் பிரச்சனை என்னன்னு சொல்லலன்னா இது தெரிஞ்சே இருக்காது. பணம் இல்லன்னா கேட்க வேண்டியது தானே. எதுக்கு அலையனும் என கேட்டதற்க்கு அமைதியாகவே வந்தது.

நேத்து காலையில எங்க மாமியார் வீட்டுக்கு போய்ட்டு வந்தப்ப அவுங்க தான் கீதா அம்மா பத்தி சொன்னாங்க. நான் கீதாக்கிட்ட கேட்கலாம்ன்னு இருந்தன் மறந்தே போய்ட்டன். அது வெறும் முப்பதாயிரம் கேட்குதுன்னு சொன்னப்ப தான் கோபம் வந்துச்சி. 2 லட்ச ரூபாய் செலவாகும்ன்னு ஹாஸ்பிட்டல்ல சொன்னாங்களாம். நிறைய இடத்தல பணம் கேட்டுயிருக்கு. கடைசி வரை நம்மக்கிட்ட கேட்கவேயில்ல முப்பதாயிரம் தாங்கன்னு கேட்டதும் தான் கோபம் வந்துடுச்சி அதான் திட்டிட்டன் என்றான் பிரபு.

ஸாரி சார் என்ற கீதா அவ்ளோ பணம் என்னை நம்பி தருவீங்களான்னு சந்தேகத்தல கேட்காம விட்டுட்டன் சார் என்றாள்.

ஐந்து வருஷமா வேலை பாக்கற. இன்னமும் கூட வேலை பாக்கறவங்கள புரிஞ்சிக்கலயே என்றதும் அமைதியாக இருந்தாள்.

ஏதாவது வேலை பாக்கனும்மேன்னு நானும், பிரபுவும் கல்யாண பத்திரிக்கை, போஸ்டர் விளம்பரம் டிசைன் பண்ணி தர்றவங்களா பத்துக்கு பத்து அறையில ஒரு கம்ப்யூட்டர வச்சிக்கிட்டு வேலை செய்ய ஆரம்பிச்சோம். மாசத்தல பாதி நாள் வெட்டியா உட்கார்ந்துயிருப்போம். பாண்டியன் வந்தப்பிறகு பாண்டியனோட கைவண்ணம் தான் பெருசா வளர முடிஞ்சது. பெரிய அளவுல ஆபிஸ் திறக்கலாம்ன்னு முடிவு செய்தப்ப நானும் பிரபுவும் பணம் போட்டோம், பாண்டியனால பணம் போட முடியலன்னாலும் பாண்டியனும் பாட்னர் மாதிரி தான். பாண்டியன் மட்டுமல்ல இந்த கம்பெனியில யார் வந்து வேலைக்கு சேர்ந்து உழைச்சாலும் அவுங்களோட நல்லது கெட்டதுல எல்லாருக்கும் பங்குயிருக்கும்ன்னு சொன்னோம். அதுப்பிறகாறம் தான் நடந்துக்கிட்டு வர்றோம். இத கம்பெனியா பதிவு செய்ததால நான் எம்.டி, இவன் மேனேஜர், மஞ்சுக்கு அக்கவுண்டன்ட்ன்னு பதவியிருக்கே தவிர அதுயெல்லாம் சும்மா. என்னைப்பொருத்தவரை எல்லாரும்மே ஒன்னு தான். இன்னைக்கு எங்களை தவிர 5 பேர் இருக்கிங்க. அதுவே 70 பேர் வேலை செய்யற இடமா மாறனாலும் இப்படித்தான் நடந்துப்போம்.

பாஸ் அப்போ நாங்களும் பாட்னர்களா பாஸ்.

இருக்க இடம் கொடுத்தா மடத்த புடிக்கனும்ன்னு நினைக்காதடா என பாண்டியன் சவுண்ட் விட்டதும் அமைதியானான். 

மருத்துவ செலவுக்குன்னு தர்ற பணம் கடன் தான். சம்பளத்தல புடிச்சிக்குவோம் என பிரபு சொன்னதும் என்னயிருந்தாலும் நீங்க கணக்குல சரியா இருக்கிங்க சார் என்றான் ஸ்ரீதர்.

சும்மா தருதுன்னு வச்சிக்க நீ மாசத்துக்கு இரண்டு முறை வண்டியில இருந்து கீழ விழுந்து ஆஸ்பிட்டல் பில் கட்டுன்னுவ அதனால தான் கடிவாளம் போட்டு வச்சியிருக்காரு சார் என மஞ்சு சொன்னதும் ஈஈ என சிரித்தான். 

டாப்பிக்கை மாத்துவோம் என நினைத்து என்ன ஸ்ரீதர் எப்போ கல்யாணம்.

யாருக்கு பாஸ்.

உனக்குதான்யா

நான் குழந்தை பாஸ்.

டேய் உனக்கு காலாகாலத்துல கல்யாணம்மாகியிருந்தா இன்னேறம் நாலு புள்ளைக்கு அப்பனாயிருப்ப. நீ குழந்தையா என பிரபு காலாய்த்ததும் அனைவரும் சிரித்துவிட்டோம்.



உங்களுக்கு எப்பவும் கிண்டல் தான் சார்.

கேட்டதுக்கு பதில் சொல்லுடா என பாண்டியன் சொன்னதும் தங்கச்சியிருக்கு பாஸ். அதுக்கப்பறம் தான் எனக்கு என்றான்.

உன்னாலே உன்னாலே என திடீரென கார் ஸ்பீக்கரில் பாட்டு அலறியது. என்னவென பார்த்தாள் ரஞ்சித் தான் பாட்டு போட்டுயிருந்தான்.

எங்கடா அமைதியா வர்றானேன்னு பாத்தன். ஆரம்பிச்சிட்டியா ?.

ஃபோர் அடிக்குதுப்பா.

சவுண்ட் கம்பியா வச்சி கேளு.

தலையாட்டினான். அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை இராமச்சந்திரா மருத்துவமனை முன் நின்றிருந்தோம். கீதா அனைவரையும் வார்டுக்கு அழைத்து சென்றாள். வெளியே கீதாவின் அண்ணனும், அப்பாவும் நின்றிருந்தார்கள். எங்களைப்பார்த்து வாங்க என அழைத்தனர்.

மஞ்சு, ரேவதி, ரஞ்சித்தை தன் அம்மா இருந்த அறைக்குள் கீதா அழைத்து சென்றாள்.

எப்படி இருக்காங்க என கீதாவின் அப்பாவிடம் நாங்கள் கேட்டதும், உள்ள தான் இருக்கா போய் பாருங்க என்றார். அவுங்க பாத்துட்டு வரட்டும் எனச்சொல்லிவிட்டு ஆரம்பத்தலயே பாக்க வேண்டியது தானே.

நம்ம ஊர்லயே பாத்துக்கிட்டு தான் இருந்தோம், சரியா வைத்தியம் பாக்காததால வந்த விணை சார். எல்லாம் விதி என்றார் விரக்தியான குரலில்.

ஆஸ்பிட்டல்ல சேர்த்திங்கயில்ல பணம்மில்லைன்னா கீதாக்கிட்ட சொல்லி ஆபிஸ்ல கேட்க சொல்ல வேண்டியதானே என பிரபு கேட்டதும் சொந்தக்காரங்ககிட்ட கேட்டுயிருந்தன் தர்றன்னு சொன்னாங்க கடைசியல தரல அதான் என்றார் தயங்கி தயங்கி.

இப்ப எவ்ளோ கட்டனும் என பாண்டியன் கேட்டதும் ஒரு லட்ச ரூபாய் கட்டியாச்சி. நாளைக்கு ஆப்ரேசன் பண்ண டேட் குறிச்சியிருக்காங்க மீதிய டிஸ்சார்ஜ் பண்ணறப்ப கட்டனா போதும்ன்னு சொன்னாங்க என்றான் கீதாவின் அண்ணன்.

உள்ளே போனவர்கள் வெளியே வர நாங்கள் உள்ளே சென்றோம். வாங்க என கிதாவின் அம்மா அழைத்தார். கையில் வைத்திருந்த பொருட்களை பெட் அருகே வைத்துவிட்டு உடம்பு எப்படியிருக்கும்மா என ஸ்ரீதர் தான் கேட்டான்.

நாளைக்கு ஆப்ரேஷன்னு சொல்லியிருக்காங்;க தம்பி.

கவலைப்படற அளவுக்கு ஒன்னும்மில்ல. சுகர், பிபி அதிகமாயிருக்கும் அதனால முடியாம போயிருக்கும். நாளைக்கு சின்ன ஆப்ரேஷன் தான் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும் என்றான் பிரபு. பின் பொதுவாக பேசிக்கொண்டு இருந்தோம்.

மஞ்சு என அழைத்ததும் அனைவரும் உள்ளே வந்தனர். தலையாட்டியதும் உள்ளே வந்த மஞ்சு தன் ஃபேக்கில் இருந்த 500 ரூபாய் கட்டுகள் இரண்டை எடுத்து கீதாவிடம் தந்தாள்.

என்னத்துக்குங்க இவ்ளோ பணம் என கீதாவின் அம்மா பதற. ஓன்னும்மில்லம்மா மெடிக்கல் செலவுக்குண்ணு கடன் கேட்டா அதான் சார் தரச்சொன்னாரு என மஞ்சு சொன்னதும் அனைவரும் அமைதியாக நின்றிருந்தனர்.

வெளியே வந்த நாங்கள் கீதாவின் அண்ணன், அப்பாவிடம் பணம் வேணும்ன்னா கேளுங்க தந்து விடறோம். காசுயில்லன்னு அலையாதிங்க எனச்சொல்லிவிட்டு புறப்பட்டோம்.

கார் வரை வந்த கீதாவிடம் அம்மா வீட்டுக்கு அழைச்சி வந்ததுக்கப்பறம் ஆபிஸ் வந்தா போதும் கீதா எனச்சொல்லிவிட்டு கிளம்பினோம்.

கார் மெயின் ரோட்டுக்கு வந்ததும் பாஸ் என அழைத்தான் ஸ்ரீதர்.

ம்.

இங்க எக்ஸ்பிரஸ் மால், ஸ்பென்சர் பிளாசான்னு ஏதோ இருக்காம் பாஸ். அங்க போய்ட்டு போகலாம் பாஸ்.

அவன் பக்கம் திரும்பி அங்க எதுக்கு என கேட்டதும் ஈஈஈ என இளித்தான். பின்னால் உட்கார்ந்திருந்த ரேவதி சைட் அடிக்கவா இருக்கும் சார் எனச்சொல்ல அதெல்லாம் இல்ல சார் என பதறி மறுத்தான்.

டிரைவர் சார். எல்.ஐ.சி பக்கம் போங்க என்றதும் அவர் சரியென தலையாட்டினார். எல்.ஐ.சி தாண்டி ஸ்பென்ஸர் வந்ததும் காரை நிறுத்தி இறங்கிக்க ஸ்ரீதர், நீங்களும் போறதாயிருந்தா போங்க என மஞ்சு, ரேவதியிடம் சொன்னதும் நீங்க பாஸ் என கேட்டவனிடம், கொஞ்சம் ஒர்க் இருக்கு போய்ட்டு வந்துடறோம். நாங்க வர்றதுக்கு இரண்டு மணி நேரமாகும் அதுவரைக்கும் ஏதாவது வாங்கறதாயிருந்தா வாங்கிக்கிட்டு வெயிட் பண்ணுங்க எனச்சொன்னதும் மூவரும் இறங்கினர். நானும் போய்ட்டு வர்றன் டாடி என்றான் ரஞ்சித்.

கொஞ்சம் யோசித்துவிட்டு ரேவதி இவனை பாத்துக்க என பொறுப்பை ஒப்படைத்ததோடு ஏதாவது கேட்டான்னா வாங்கித்தா, ஐஸ்கிரிம் மட்டும் அதிகம் வாங்கி தராத எனச்சொல்லிவிட்டு சேட்டை பண்ணாம ஒழுங்கா அவுங்களோட இரு என சொல்லிவிட்டு கிளம்பினோம்.

எங்கடா போறோம் என பிரபு தான் கேட்டான்.

டிஸ்ப்ளே பத்தி நேத்து பேசனும்மில்ல. அதான் சோனி, சாம்சங் கம்பெனியில போய் என்ன ரேட் ஆகுதுன்னு விசாரிச்சிட்டு வருவோம் என்றதும் தலையாட்டினான். இரண்டு ஷோ ரூம்களை தேடிப்பிடித்து விசாரித்துவிட்டு, மாடல்களை பார்த்துவிட்டு கிளம்பினோம். வரும்போதே ஸ்ரீதர்க்கு போன் செய்து நாங்க வந்துக்கிட்டு இருக்கோம் வெளியில வந்து ஆப்போசிட்ல நில்லுங்க என்றேன். சரியாக 2.15க்கு ஸ்பென்சர் அருகே பஸ் ஸ்டாப்பில் ரேவதி, மஞ்சு, ஸ்ரீதர் நின்றிருந்தனர். கார் அவர்களை நோக்கி சென்றுக்கொண்டு இருந்தபோதே சார் ரஞ்சித்த காணோம் என்ற பாண்டியனின் குரலை கேட்டு அதிர்ச்சியாகி பார்த்தபோது அவர்கள் அருகில் அவன் இல்லை என்பதை என் கண் உறுதி செய்ததும் ஆயிரம் மடங்கு அதிர்ந்து போனேன்.

தொடரும்……………..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக