சனி, மார்ச் 07, 2015

பகுத்தறிவாதி செய்யும் செயலா தோழியிது??????



ஆச்சர்யத்தை தந்தது ஒரு இணைய தளம். சேலத்தை சேர்ந்த தற்போது பெங்களுரூவில் கணிப்பொறி பொறியாளராக பணியாற்றும் இந்துஜாவுக்கு திருமணம் செய்துவைக்க மாப்பிள்ளை தேடுகிறார்கள். அதற்காக தன்னுடைய விருப்பத்தை அதற்காக ஒரு இணைய தளம் தொடங்கி அதில் தன் கருத்தை வெளிப்படுத்தி இப்படிப்பட்டவர் தான் வேண்டும் என கேட்டுள்ளார்.

இந்துஜா இயற்கை விரும்பி, புகைப்பட எடுப்பதில் விருப்பம் உள்ளவராகவும், தன் மனதில் தோன்றியதை எழுத்தில் பதியவைக்க இணையத்தில் பிளாக், முகநூலில் தனக்கென பக்கம் தொடங்கி பலவற்றை எழுதி வருகிறார். தனக்கு துணையாக வரப்போகும் கணவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை வெளிப்படையாக, வித்தியாசமான முறையில் சொன்னதை மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம். தான் ஒரு பகுத்தறிவாதி எனவும் பறைசாற்றியுள்ளார்.

ஒரு இளைஞனுக்கு பெண் பார்க்க போகும் போது, பையனுக்கு மேட்ச் சாக இருக்கிறளா, படித்திருக்கிறளா, வேலை பார்க்கிறாளா, அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் பற்றி, குடும்பம் பற்றி, சொத்து, சமூக அந்தஸ்த்து போன்றவற்றை இன்னும் இன்னும் பலவற்றை பார்க்கிறார்கள்.

பெண் குடும்பத்தாரும், மாப்பிள்ளை எப்படி, படிப்புயென்ன, வேலையென்ன, வருமானம் என்ன, குடும்பத்தில் சொத்து, உடன்பிறந்தவர்கள், பையனின் பழக்கவழக்கங்கள் எக்ஸட்ரா  எக்ஸட்ராக்களை விசாரிக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் வாழ்க்கையில் அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான். இரு தரப்புக்கும் “தகுதிகள்“ இருக்கிறது என தெரிந்தபின் படித்த நகரத்து வர்க்கம்மோ, படித்தும் படிக்காத கிராமத்து வர்க்கம்மோ பெரும்பாலும் பெண்ணின் சம்மதத்தை ஒப்புக்கு கேட்பது தான் நடைமுறையாக உள்ளது.

இந்த பெண் வெளிப்படையாக பொது வெளியில் எனக்கு இப்படிப்பட்டவன் தான் துணையாக வேணும் என கேட்டதை பல சமூக அமைப்புகள், பெண்ணிய அமைப்புகள், படித்த பெண்கள், ஆண்கள் பாராட்டுவதை போல நானும் இரு கைகளை மேலே தூக்கி கைதட்டி ஆதரிக்கிறேன்.

ஆனால்..............

அந்த தோழி வெளிப்படுத்திய மாப்பிள்ளைக்கான தகுதியில் சில இடங்களில் முரண்பாடுகள் உள்ளது.

நான் ஆண்கள் போல் முடிவெட்டிக்கொள்வேன் என்றுள்ளார் அதிலல்ல என் முரண்பாடு.

குடும்பபாங்கான மணமகன் தேவையில்லை எனச்சொல்லியுள்ளார். அதில் கூட எனக்கு முரண்பாடில்லை. ஒழுக்கமானவன் அ ஒழுக்கமானவள் தான் தேவை என துணை தேடும் போது நீங்கள் குடும்பபாங்கானவன் தேவையில்லை என்றுள்ளார் நிச்சயமாக இதில் கூட நான் முரண்படவில்லை.

எனது விருப்படி தான் வாழ்வேன் என கூறியுள்ளீர்கள் எப்படி என்பதை வெளிப்படுத்தவில்லை இருந்தும் சமைப்பது, வேலைக்கு செல்வது, நண்பர்களுடன் பழக்கம், குடிப்பது என இருந்தால் அதில் கூட எனக்கு முரண்பாடில்லை. பசங்க என்னவேண்டுமானாலும் செய்யலாம், கல்யாணத்துக்கு பின் பெண்கள் கட்டுப்பெட்டியாக இருக்க வேண்டும் என்பதை வெறுக்கிறேன்.  

குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் எனக்கூறும் மணமகனுக்கு முன்னுரிமை என்றது தான் முரண்பட்டு நிற்கிறேன். குழந்தை பெறுவது பெண்களின் அடிமையாக்கும் முறை என வாதிடுபவர்கள் பலர் இருக்கின்றனர். இன்னும் கொஞ்சம் முன்னே போய் திருமணம் என்பது அடிமையாக்குவதின் மற்றொரு வடிவம் என பேசும் பெண்ணியவாதிகள், பெண் விடுதலைக்காக குரல் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள் நம் சமூகத்தில்.


திருமண என்ற பந்தம் பெண்ணை அடிமைப்படுத்துவதல்ல. இரண்டு பாலினம் குறிப்பிட்ட வயதுக்கு மேல் “சேர்ந்து“ வாழ வேண்டும் என்பது இயற்கை விதி. சேர்ந்தல் என்பது யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது ஒருவருடன் மட்டுமே இருக்க வேண்டும் அதுதான் நாகரிகம், பண்பாடு என வரையறுக்கப்பட்டது. அதனால் தான் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பந்தத்தை உருவாக்க திருமணம் செய்து வைக்கிறார்கள்.

ஒரு மனிதன் இறுதி காலத்தில் நோய் நொடியில் படுக்கையில் விழும்போது தங்களை பாதுகாக்க, பராமரிக்க, அன்பு செலுத்த தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும்மே என்பதற்காக தான் திருமணத்துக்கு பின் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்து செயல்படுகிறது. 
கல்யாணம் வேண்டாம் எனச்சொல்லும் பெண்கள் உண்டு. அதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் திருமணத்துக்கு பின் என் சுதந்திரத்துக்கு இடையூராக இருக்கிறது என குழந்தை வேண்டாம் எனச்சொல்லும் பெண்கள் அரிதனினும் அரிது. ( குறிப்பிட்ட சதவித இன்றைய பெண்கள் குழந்தை பெற்றுக்கொண்டால் அழகு போய்விடும், குழந்தைக்கு தாய்ப்பால் தந்தால் அழகு போய்விடும் எனச்சொல்லி தள்ளிப்போட்டவர்கள் பின்னால் பட்ட துன்பங்கள் பல )

சாதனைக்கு வயதோ, உடலோ, ஆண் - பெண் என்ற பேதம்மோ கிடையாது. நம்பிக்கையும், உறுதியும், உழைப்பும் இருந்தால் போதும். இன்று உலகில், இந்தியாவில் எத்தனையோ பெண்களை உதாரணமாக காட்டலாம். சாதனை பெண்மணிகளாக வலம் வருகிறார்கள். உலகத்தை வலம் வருகிறார்கள். அவர்களுக்கும் குழந்தை, குடும்பம் உள்ளது. அதையும் தன் பராமரிக்கிறார்கள். அவர்கள் யாரும் இப்படியொரு கண்டிஷன் போடவில்லை. 

நீங்கள் மற்றொன்றை புரிந்துக்கொள்ளுங்கள் ஆண்கள் கருவை சுமந்து, குழந்தை பெற்றுக்கொள்ளும் உடல் தன்மையிருந்தால் பெண்களுக்கான முக்கியத்தும் இந்த உலகில் இல்லாமலே போயிருக்கும். 

நீங்கள் விளம்பரத்துக்காக இப்படி அறிவித்துள்ளீர்கள் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. நீங்கள் பகுத்தறிவாதி எனக்குறிப்பிட்டுள்ளீர்கள். பகுத்தறிவாதி விளம்பரத்துக்கு ஆசைப்படமாட்டான் என நம்புகிறேன். ஏன் எனில் எந்த பகுத்தறிவாதியும் இப்படி அறிவிக்கமாட்டார்கள் என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள்.

1 கருத்து: