புதன், நவம்பர் 09, 2016

தயக்கத்தை உடை………… தலைநிமிர்…………………..




23 வயது இளைஞன் அவன், பி.எஸ்.சி கம்பயூட்டர் சைன்ஸ் படித்துள்ளான். சில மாதங்களுக்கு முன்பு, அண்ணே வேலை தேடறன் சரியா கிடைக்கல. உங்களுக்கு நிறையப்பேரை தெரியும், ஏதாவது ஒருயிடத்தல சொல்லி எனக்கொரு வேலை வாங்கி தாங்கண்ணே என வந்து நின்றான். 

நானும் சிலயிடங்களில் வேலைக்கு சொல்ல என் படிப்புக்கு ஏத்த வேலையில்லண்ணா, நல்ல வேலையா பார்த்து சொல்லுங்கண்ணா என்றான். சரியென மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச மருந்து விற்பனை நிறுவனத்தில் நண்பர்கள் வேலை செய்ய அவர்கள் மூலமாக விற்பனை பிரதிநிதி வேலைக்கான நேர்காணல்க்கு அனுப்பிவைத்தேன். 80 சதவிதம் வேலை உறுதி, 22 ஆயிரம் சம்பளம் எனச்சொல்ல அதற்கான நேர்காணல்க்கு அவனை அனுப்பிவைத்தேன். போன வேகத்தில் சுவற்றில் அடிக்கப்பட்ட பந்தாக திரும்பி வந்தான். கம்மி சம்பளமாக இருந்தாலும் பரவாயில்லை இங்கயே சொல்லுங்கண்ணா என்றான். என்னடா என கேட்டும் சரியான பதில்யில்லை.

நேர்காணல் நடத்தியவர் உடன் பணிபுரிந்த எனது நண்பரிடம் விவகாரத்தை கேட்டபோது, ஒரு கேள்வி கேட்கறோம், பதில் தெரியலன்னா தெரியலன்னு சொல்லனும், அதவிட்டுட்டு தயங்கி தயங்கி, தலையை கீழ தொங்கப்போட்டுக்கிட்டு நிக்கறான், சரியாவே பேச வரல, இப்படிப்பட்டவன் எப்படி டாக்டர்கள்கிட்ட பேசி கம்பெனி பொருட்களை சிபாரிசு பண்ண வைப்பான், அதான் போடான்னு சொல்லிட்டன் என்றுள்ளான். 

இது அந்த இளைஞனின் தவறல்ல. கிராமபுற சூழ்நிலையில் பிறந்து, படித்துவிட்டு வரும் 99 சதவித இளைஞர்கள் ஒருவித தாழ்வு மனப்பான்மையோடு தான் கல்லூரி படிப்பை முடிக்கிறார்கள். கீழ்நிலை கல்வி மாணவர்கள் மட்டும்மல்ல உயர்கல்வி படித்து முடிக்கும் பிள்ளைகளும் அப்படித்தான் இருக்கிறார்கள். நகர் புறத்தில் பயிலும் பிள்ளைகள் பரவாயில்லை, தயக்கத்தை அதிகமாகவே உடைத்துள்ளார்கள்.
எதனால் உள்ளுரிலேயே வேலை கேட்கிறான் என்பதை உணர்ந்துக்கொண்டு, அவனிடம் பேச தொடங்கியபோது தான் கவனித்தேன். அவன் என்னிடம்மே அவ்வளவு பயத்தோடும், தயக்கத்தோடும் பேசினான்.
தம்பீ, தயங்காதே. என்ன பார்த்து எதுக்கு பயப்படற, தயங்கி தயங்கி பேசற, முதல்ல சேர் நுனியில உட்கார்றதுக்கு பதிலா நல்லா உட்கார். நீ என்ன கடனா வாங்க வந்துயிருக்கற. படிச்சியிருக்கற. வேலை ஏதாவுது இருந்தா சொல்லிவிடச்சொல்ற அவ்வளவு தானே இதுக்கு எதுக்கு தயங்கிக்கிட்டு என்றதும், இல்லண்ணா நீங்க பெரிய ஆளுங்களோட பழங்கறிங்க, அதான். 

நான் தொழில் நிமித்தமா பலதரப்பட்டவங்களோட பழகறன், அவ்வளவு தான். அதுக்கு நீ எதுக்கு பயந்து பயந்து பேசற, எங்கிட்ட எதுக்கு தயங்கனும் என கேட்டதும் அமைதியாக இருந்தான்.

உனக்கிருக்கற தயக்கம், இப்ப வரைக்கும் எனக்கும் உண்டு. நீ வந்து என்கிட்ட நிக்கற. 15 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு என்ன படிக்கனும்ன்னு கூட தெரியாது, வழிகாட்ட ஆள்கிடையாது. எதைப்பார்த்தாலும் பயம். அப்படியிருந்தவன் தான். இந்த பயம் தொடர்ச்சியா இருந்தா நம்மை முடக்கிடும். பயத்தை, தயக்கத்தை முதல்ல விட்டுடு. பயமும், தயக்கமும் இருந்தா சாதிக்க முடியாது, தெளிவான முடிவு எடுக்க முடியாது. பயத்தோட வேலை செய்யறப்ப வேலையை நடக்காது. அப்படிப்பட்ட இளைஞர்களை எந்த நிறுவனமும் விரும்பாது. 

நீ நேர்காணல்க்கு போறப்ப நேர்காணல் நடத்தறவரை நேர்கொண்ட பார்வையா பார்த்து பேசு. அவுங்க கேள்வி கேட்டதும் நீ சொல்றதை தயக்கமில்லாம சொல்லு. உனக்கு தெரியாததை தெரியாது, ஆனா தெரிசிக்குவன்னு சொல்லு. இங்க யாரும் பிறக்கும் போதே எல்லாம் கத்துக்கிட்டு வந்தவங்கயில்ல. அதுக்காக மக்கு சாம்பிராணியா போய் நிக்காத. பொது அறிவ வளர்த்துக்க. தினமும் செய்தித்தாள்களை படி. நீ நேர்காணல்க்கு போகும் நிறுவனத்தைப்பத்தி, அந்த நிறுவனத்தின் பணிகளைப்பத்தி கொஞ்சமாவுது தெரிஞ்சிக்க. ஒரு வேலைய முழு ஈடுப்பாட்டோட செய்தா தான் அதில் வெற்றி பெற முடியும். விருப்பம்மில்லாம வேலை செய்தா அந்த நிறுவனத்துக்கும் இழப்பு, உன் வாழ்க்கைக்கும் இழப்பு. 

டவுன்ல இருக்கற பசங்களோட போட்டி போட முடியலண்ணா ?. 

நகரத்தில் இருப்பவர்கள் வானத்தில் இருந்து வந்தவங்கயில்ல. அவுங்க தாத்தா கிராமத்தில் ஏர் ஓட்டிக்கிட்டு இருந்தாலும், பையனை படிக்க வச்சார். அந்த பையன் நகரத்துக்கு வேலைக்கு வந்தான். அந்த பையன் தன் மகனை நகரத்தில் படிக்க வச்சான். அதனால் அவனுக்கு பறந்துப்பட்ட உலகத்தை தெரிஞ்சி வச்சிக்கறான், தயக்கத்தோட நிக்காம, தைரியமா எதையும் எதிர்கொள்றான். 

உன் தாத்தா ஏர் ஓட்டிக்கிட்டு இருந்தார், உங்கப்பா ஏர் ஓட்டிக்கிட்டு இருந்தாலும், உன்ன படிக்கவச்சியிருக்கார். என்ன அந்த நகர வாழ்க்கை வாழும் தந்தையைப்போல உன் தந்தை கிடையாது. அதனால உனக்கு பறந்துப்பட்ட உலகம் அறிய முடியாம போச்சி. அவ்வளவு தான். அதுக்காக அவனோட எந்த விதத்திலும் நீ குறைந்தவனில்லை. 

அவன் படிச்ச அதே படிப்பதான் நீயும் படிச்சியிருக்கற. அவன் படிக்கறப்பயிருந்து தன்னோட தகுதிகளை வளர்த்துக்கிட்டான், அதுக்கான வாய்ப்புகள் இருந்தது. உனக்கில்ல, அவ்வளவுதான். இப்ப கத்துக்க. மோதிப்பார். மோதாமலே என்னால முடியாதுன்னு சொல்லாத. அத சோம்பேறி சொல்றது. 

நீ தைரியமா சவால்களை எதிர்க்கொள், அதற்கு தகுந்தார்போல் உன்னை தயார் படுத்திக்க என்ன உதவி வேணும்ன்னாலும் கேளு செய்யறன் என்றேன். கேட்டுக்கொண்டு போனவன் அதன்பின் வரவில்லை. அடுத்த சில நாட்களில் அவன் ஊரில் இல்லை. அவனை நானும் மறந்துபோயிருந்தேன். 

இரண்டு மாதத்துக்கு பின் இப்போது இனிப்பு பாக்ஸ்சோடு வந்து சந்தித்து வேலைக்கு சேர்ந்துட்டன், முதல் மாத சம்பளம் வாங்கனன், நீங்க சொன்னமாதிரி என்னை மாத்திக்கிட்டன், வேலை கிடைச்சிடுச்சி. அதான் உங்களுக்கு நன்றி சொல்ல வந்தன் என்றான். 

வாழ்த்துக்கள்டா………… நகர வாழ்க்கைக்கு போற கிராமத்தை மறந்துடாத என்றேன். யோசித்தபடியே சென்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக