செவ்வாய், ஜூலை 30, 2013

அன்பே அழகானது. – பகுதி – 7.



சோபாவில் அமர்ந்திருந்த தேவராஜ், என்னம்மா வேலை எப்படியிருக்கு என தன் மகள் சுதாவிடம் கேட்டதும் நல்ல ஸ்கூல்ப்பா, எல்லாரும் நல்ல பழகறாங்கப்பா.

நீ வேலைக்கு போறது எனக்கு சுத்தமா புடிக்கல. ஏதோ நீ ஆசைப்பட்டியேன்னு தான் அனுப்பி வைக்கறன்.

வீட்ல உட்கார்ந்துக்கிட்டு சும்மா டீவி பாத்துக்கிட்டே இருக்கறது புடிக்கலன்னு தான் வேலைக்கு போறன்ப்பா.

உன் மனசுக்கு எது சரின்னு படுதோ அத செய். நீ வேலைக்கு போய் தான் சம்பாதிக்கனும்கிற அவசியம்மில்ல. உனக்கு புடிக்கலன்னா நின்னுடு.

சரிப்பா.

சரிம்மா உனக்கு வண்டி புடிச்சியிருக்கா.

நல்லாயிருக்குப்பா. கறுப்பு கலரா இருந்தா நல்லாயிருந்திருக்கும்.

நீ சொன்னதும் கறுப்பு கலர் தான் கேட்டன். அவன் அது வர்றதுக்கு இரண்டு மாசமாகும்ன்னிட்டான் அதான் சரின்னு ஒயிட் கலர் எடுத்துட்டன். மாத்தறதாயிருந்தா மாத்திக்கலாம்மா.

வேணாம்ப்பா.

போகும்போதும், வரும்போதும் ரோட்ல பொருமையா போம்மா.

சரிப்பா.

சாப்பிட்டியா?

இன்னைக்கு சன்டே தானேப்பா. நான் அப்பறம்மா சாப்பிட்டுக்கறன்.

டைம்க்கு சாப்பிடும்மா. வீணா பழச நெனைச்சி மனச போட்டு கஸ்டப்படுத்திக்காத.

அதெல்லாம் ஒன்னும்மில்லப்பா நீங்க வந்து சாப்பிடுங்க என அழைத்தபடி சோபாவில் அமர்ந்திருந்த சுதா எழ தாத்தா என அழைத்தபடி ஓடி வந்தாள் ஏழு வயது சுவாதி.

வாடா வாடா என் கண்ணு என முகத்தில் புன்னகையுடன் தன் பேத்தியை தூக்கி மடியில் உட்கார வைத்து முத்தமிட்டவர். எங்க போயிருந்திங்கடா செல்லம்?. 

சினிமாவுக்கு தாத்தா.

என்ன படத்துக்கு போனிங்க ?

தீ… தீ….. ஆங் தீல ஓடு குமாரு என சொல்ல சுதாவின் அண்ணன் ரமேஷ் சிரித்தபடி அப்பாவின் எதிரில் அமர அவனது மனைவி ரம்யா நின்றபடி சுவாதியின் பதிலை கேட்டு சிரித்தாள்.

வாயாடி எப்படி தப்பு தப்பா சொல்றா பாருங்கப்பா என சுதா அவளை முறைக்க.

நீ தான் வாயாடி அத்தை எனச்சொல்ல

நானா நானா என சுதா அடிக்க கையை ஓங்க தாத்தாவை கட்டி பிடித்துக்கொண்டாள்.

சாப்பிட்டிங்களா என தன் மகனிடமும், மருமகளை பார்த்து தேவராஜ் கேட்க

இன்னும் இல்லப்பா.

சரி வாங்க சேர்ந்தே சாப்பிடலாம்.

நீங்க சாப்பிடுங்கப்பா. நான் குளிச்சிட்டு வந்து சாப்பிடறன்.

தாத்தா நானும் சாப்பிட வர்றன் தாத்தா.

நீ வாடா செல்லம் என கொஞ்சியபடி டைனிங் டேபிளுக்கு செல்ல ரமேஷ்சும், ரம்யாவும் தங்களது அறைக்கு சென்றனர்.

உங்கம்மா எங்க சுதா.

பக்கத்து வீட்டு ஆன்டி வீட்டுக்கு போயிருக்காங்கப்பா.

எப்ப பாத்தாலும் கதை பேசறதே உங்கம்மாவுக்கு பொழப்பா போச்சி என்றபடி சாப்பிட அமர்ந்தார். பேத்திக்கு ஊட்டி விட்டபடி தானும் சாப்பிட்டு முடிக்கவும் ரமேஷ் குளித்து உடை மாற்றிக்கொண்டு சாப்பிட வரவும் சரியாக இருந்தது. பின்னாடியே ரம்யாவும் வந்தாள். தேவராஜ் அந்தயிடத்தை விட்டு நகர்ந்ததும் ரம்யா, ரம்யாவிடம் நீயும் வந்துயிருக்கலாம் படம் சூப்பராயிருந்துச்சி.

நீங்க வேற அண்ணி. புதுசா க்ளாஸ் எடுக்கறன்னா கோர்வையா வரல. அதுக்கு ப்ராக்டிஸ் பண்ணிக்கிட்டு, நோட்ஸ் எடுத்துக்கிட்டு இருக்கன்.

நீ வேலைக்கு போகனும்மா என ரமேஷ் சாப்பிட்டபடி கேட்க.

உன் பொண்டாட்டி போறத கேள்வி கேட்க மாட்டேன்கிறயே.

நான் வேணாம்ன்னு தான் சொன்னன். அப்பாத்தான் கவர்மெண்ட் வேலை. பேங்க் உத்தியோகம்ன்னு ஏதோதோ சொல்லி போக சொல்லிட்டாரு. இவளுக்கு அது ப்ளஸ்சாகி இப்ப நில்லுடீன்னா நிக்கமாட்டேன்கிறா.

நான் வேலைக்கு போறதும் ஒன்னு சும்மாயிருக்கறதும் ஒன்னு தான். நான் மேனேஜரான இந்த ஆறு மாசமா இவருக்கு பர்சனல் லோன் தா, அவருக்கு ஹவுசிங் லோன் தான்னு ஒரே டார்ச்சர் பண்றாரு உங்கண்ணன்.

நீ தந்துட்டு தான் மறுவேலை பாக்கறியாயென்ன என ரமேஷ் கேட்க.

நீங்க அனுப்பற ஆளுங்கள பாத்தா ஒருத்தரும் திருப்பி கட்டறவங்க மாதிரியே தெரியல.

கட்டமாட்டாங்கன்னு நீயா நினைச்சா எப்படி ?.

நீ கேளு சுதா, நாலு நாளைக்கு முன்னாடி இவர் பெயரை சொல்லிக்கிட்டு ஒருத்தர் வந்து சார் அனுப்பி வச்சாரு. ஹவுசிங் லோன் தருவிங்க வாங்கி வரச்சொன்னாருன்னு கேட்டதும் செம டென்ஷனாகிட்டன். போய் அவரை வரச்சொல்லுங்கன்னு சொல்லி அனுப்பனன். அன்னைக்கு மட்டும் இவர் வந்திருந்தாரு. லெப்ட் அன் ரைட் வாங்கியிருப்பன்.

எப்படிண்ணா இன்ஜினியரிங் படிச்ச உன் கூட இப்படி புத்திசாலி ப்ரண்ட்ஸ்களா வச்சியிருக்க என நக்கலடிக்க

அதுயில்லடா, என் ப்ரண்ட் சக்தி புது வீடு கட்ட லோன்க்காக அலைஞ்சிக்கிட்டு இருக்கான். அவன் தன்னோட மச்சானை அனுப்பி பேங்க்குக்கு போ மேனேஜரா பாத்து ரமேஷ் சொன்னாரு, ஹவுசிங் லோன் அப்ளிக்கேஷன் வாங்கி வரச்சொன்னாருன்னு சொல்லு தருவாங்க வாங்கி வாடான்னு சொல்லியிருக்கான். போன புத்திசாலி ஹவுசிங் லோன் வாங்கி வரச்சொன்னாருன்னு கேட்டுயிருக்கான். தப்பு அவன் மேல. இதல நான் ஏதோ தப்பு பண்ண மாதிரி குதிக்கறா. இதுக்கு முன்னாடி இருந்த மேனேஜர், என் பெயரை கேட்டாலே எழுந்து நிப்பாரு அந்தளவுக்கு பிஸ்னஸ் தந்தன். இவ என்னவோ அலட்டிக்கறா. வேலையே தெரியாம பந்தா பண்றா இவ.

ஏது கமிஷன் தந்திங்க அதனால அவர் சலாம் போட்டாரு.

எப்படியோ முடிச்சன். உனக்கு வேணும்னா கேட்டு வாங்கிக்க.

எனக்கு ஒன்னும் வேணாம். உங்க பேரை சொல்லி யாரும் வராமயிருந்தா போதும்.

சாப்பிடற நேரத்தல எதுக்கு சண்டை. சண்டை போடறதாயிருந்தா உங்க ரூம்ல போய் போடுங்க என பொய் கோபத்துடன் சுதா சொன்னதும். இருவரும் அமைதியாக சாப்பிட்டுவிட்டு எழுந்து அவர்களது ரூம்க்கு சென்றனர். அவர்கள் சாப்பிட்ட தட்டை எடுத்து வைத்துவிட்டு சுதா சாப்பிட அமர உள்ளே வந்த காவேரி உங்கப்பா சாப்பிட்டா ?.

ம். நீயும் நானும் தான் சாப்பிடல என்றதும் காவேரி ஒரு தட்டை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தாள். தண்ணீர் டம்பளர் வைக்காம என்ன சாப்பிடறா எனச்சொல்லியடி காவேரி மீண்டும் எழ நீங்க உட்காருங்க அத்தை எனச்சொல்லியபடி கிச்சன்க்குள் சென்ற ரம்யா டம்பளரோடு வந்தாள்.

என்ன படத்துக்கு போனிங்க ?.

தீயா வேலை செய்யனும் குமாரு படத்துக்கு அத்த.

இவளையும் அழைச்சிம் போயிருக்கலாம்மில்ல.

நான் போறப்ப கூப்டன் வரலன்னிட்டா.

வண்டியில உட்கார்ரப்ப நீயும் வாயேன்னு கூப்பிட்டுயிருப்ப என காவேரி கடுப்பாக சொன்னதும் ரம்யா பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

நைட்டே அண்ணீ சொன்னாங்க. நான் தான் வரலன்னு சொன்னம்மா என சுதா சொன்னதும் க்கும் என்றாள் காவேரி.

சிறிது நேரம் அங்கு அமைதி நிலவ. ரம்யா சுதாவுக்கு தெரியாமல் காவேரியின் கையை சீண்டி விட்டு சுதாவுக்கு பின் பக்கமாக போய் கேளுங்க கேளுங்க என சைகை செய்தாள். சாப்பிட்டு முடிக்கட்டும் என காவேரி கண்களாலே சைகை செய்தாள். கை கழுவும் போது சுதா என காவேரி அழைத்ததும் என்னம்மா என்றாள்.

நைட் கேட்டனே என்ன முடிவு செய்துயிருக்க என கேட்டதும் திரும்பி ரம்யாவை முறைத்தாள்.


மதன் தன் அப்பாவுக்கு போன் செய்து ஊருக்கு கிளம்பிக்கிட்டுருக்கன் மதியத்துக்குள்ள வந்துடுவன்ப்பா.

பார்த்து ஜாக்கிரதையா வா.

சரியென்று செல்போன் லைனை கட் செய்தவன் ரஞ்சித்தை அழைத்துக்கொண்டு டூ வீலரில் தன் சொந்த கிராமமான அரசனூரை நோக்கி பறந்தான். 12 மணிக்கெல்லாம் ஊருக்கு போய்விட்டான். மதனின் அப்பா திண்ணையில் அமர்ந்திருந்தார். தாத்தா என்றபடி ரஞ்சித் பைக்கை விட்டு இறங்கி ஓடி அவரை கட்டி பிடித்துக்கொண்டான்.

பழைய காலத்து மாடி வீடு. வீட்டின் முற்றம் முதல் அனைத்தையும் பர்மா தேங்கு தாங்கிக்கொண்டு இருந்தது. விஸ்தாரமான அந்த வீட்டில் மதனின் அப்பா கலிவரதனும், கோதையம்மாள் என்கிற கோதையும் மட்டுமே இருந்தனர். பேரனின் குரல் கேட்டதும் நடக்க முடியவில்லை என போனில் குறைபட்டுக்கொண்ட கோதை ஓட்டமும், நடையுமாக வந்தாள். பாட்டியை பார்த்ததும் ரஞ்சித் அப்படியே தாவினான். பேரனை பிடித்தபடி எப்படிடா இருக்க என தாயின் அன்பு மகனின் மீதே இருந்தது.

நல்லாயிருக்கம்மா.

கால் வலிக்குதுன்ன இப்ப எப்படியிருக்கு.

மருந்து வாங்கி தடவிக்கிட்டு இருக்கன் இப்ப பரவாயில்ல. நீ முதல்ல போய் கை, கால் கழுவிட்டு வந்து சாப்பிடு.

நான் அப்பறம் சாப்பிடறன். நீ குடிக்க தண்ணி எடுத்து வாம்மா என்றபடி உள்ளே நடக்க பேரனை தன் கணவரிடம் தந்துவிட்டு உள்ளே சென்றான் கோதை.

வேலையெல்லாம் எப்படி போகுது என கலிவரதன் கேட்டதும்

நல்லா போய்க்கிட்டு இருக்கு.

அந்த பிரபு, பாண்டியன் எப்படி இருக்கானுங்க.

நல்லாயிருக்காங்க.

கோதை தன் மகனிடம் தண்ணி சொம்பை தந்தபடி, அந்த பிரபு பையன் எப்படிடா இருக்கான்.

நல்லாயிருக்கம்மா.

அவன் பசங்க

நல்லாயிருக்காங்க என்றபோது சமையல்கட்டில் இருந்து குக்கரின் விசில் சத்தம் வர கோதை சமையலறைக்கு சென்றார். நிலத்துக்கா போய்ட்டு வர்றன் என தன் அப்பாவிடம் சொல்லிவிட்டு வெளியே செல்ல முயன்றான்.

நிலத்துக்கு போறவன் இந்த துணியில தான் போவானாடா என கடுப்பான குரலில் கேட்டதும் தன் அறைக்கு சென்று பேன்ட் சர்ட்டை கழட்டிவிட்டு லுங்கி கட்டிக்கொண்டு கிளம்பினான். கலிவரதன் தன் பேரனுடன் விளையாட தொடங்கினார். மதன் தெருவில் இறங்கி நடக்க தொடங்கினான். பத்து வீடு தாண்டியிருப்பான் என்ன மைனரே எப்ப ஊருக்கு வந்த என சைடில் இருந்து குரல் வந்தது. அந்த திசையை நோக்கி திரும்பி பார்த்தான். பாக்யராஜ் தன் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தான். 

மைனரு நீயா? நீனாடா ?.

நீ தான் மச்சான்.

கொழுப்புடா உனக்கு. சரி வா நிலத்துக்கா போய்ட்டு வரலாம்.

இப்பத்தான் நெலத்துலயிருந்த வந்தான் நீ போய் வா.

சும்மா துணைக்கு வாடா.

டவுன்லயே இருக்க வேண்டியதானே எதுக்கு ஊரு பக்கம் வந்து உசுர எடுக்கறிங்க என்றபடி எழுந்தவன் உள் பக்கமாக திரும்பி ஏய் இதே வந்துடறன்டீ என கத்திவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் அருகில் வந்தவனிடம் என்னடா இப்படி சலிச்சிக்கற.

ஞாயித்துக்கிழமை மச்சான். நாட்டு கோழி கறி. சூடா, காரத்தோட சாப்பிட்டா ருசியா இருக்கும், நாட்டுகோழி உடம்ப சூடாக்கும் அப்பறம் அத தனிக்க ஆரம்பிக்கனும் என பல்லை காட்டினான்.

பகல்லயே வாடா.

நீ ஏதோ நல்ல புள்ள மாதிரி கேட்கற என்றவனுக்கு பதில் சொல்லாமல் ஒரு வரட்டு புன்னகையை வீசியதும் சுதகரித்தவன் மன்னிச்சிடு மச்சான். அதவிடு ஊர்ல என்ன விசேஷம் என கேட்க பெருசுகளின் அடவாடிகளை சொல்லியபடி வந்தான். மதனின் நிலத்துக்கு வந்திருந்தார்கள். கரும்பு பயிர் வச்சியிருக்காரே வெட்டறதுக்கு ஆள் வருவாங்களாடா ?.

வெட்டி, ஏத்தறது வரை கம்பெனிகாரனே பாத்துக்கறன் அதனால எந்த பிரச்சனையும்மில்ல. அதெல்லாம் கிடக்கட்டும் உங்கப்பா எப்பபாத்தாலும் உன்னைப்பத்தியே தான் பேசறாரு. அவர் சொல்றதத்தான் கேளேண்டா.

எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என மதன் சொல்ல கரும்பு தோட்டத்துக்குள் இருந்து பொங்கிய நெஞ்சோடு, சீமை பசு போல் பார்வதி வெளியே வந்தாள்.

ஏய் மத்தியான நேரத்தல கரும்பு தோட்டத்துக்குள்ளயிருந்த வர்ற என மதன் உரிமையோடு கேட்டான்.

எல்லாம் நீ வந்து தூக்கி விடுவன்னு தான் என டபுள் மீனிங்கில் சொல்ல

எனக்கு நிறைய சோலி கிடக்கு. இதோ இவன் வருவான்.

க்கும். காய்க்கும், பழத்துக்கும் வித்தியாசம் தெரியாத இது வந்து என்ன பண்ண போகுது எனச்சொல்ல கோபமான பாக்யராஜ், கொழுப்புடீ உனக்கு என்றவன் உள்ள என்ன பண்ண அதச்சொல்லு.

மாட்டுக்கு புல்லு புடுங்கி கட்டி வச்சியிருக்கன். தூக்கிவிட ஆள்யில்ல. பேச்சு சத்தம் கேட்டுச்சி வெளியில வந்து கூப்ட்டும் போலாம்ன்னு வந்தன்.

நீ போய் தூக்கிவிட்டுட்டு வாடா என்றதும் பார்வதி முன்னால் நடக்க பாக்யராஜ் பின்னால் சென்றான். ச்சீ கைய எடு என்ற குரல் சன்னமாக கேட்டது. புல் கட்டை தூக்கிக்கொண்டு பார்வதி வெளியே வந்து நான் கிளம்பறன் என மதனிடம் சொல்லிவிட்டு நடந்தாள். அவள என்னடா பண்ண.

ஒன்னும் பண்ணல மச்சான்.

அது சொன்னதுதான் இங்க கேட்டுச்சு. யார் மைனருன்னு இப்ப தெரியுது. அதோட வீட்டுக்காரன் எங்க.

அந்த நாய் இரண்டாவதா ஒன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டான். கோவலத்தல போடான்னு பசங்கள இழுத்துக்கிட்டு ஊரோட வந்துடுச்சி என சொல்லியபடி வந்தான். நெல் வயலுக்கு வந்தோம். அப்படியே சுத்தி பாத்துவிட்டு ஊரை நோக்கி நடந்தோம். பாக்யராஜ் வீடு வந்ததும் வாசல் திண்ணையில் அமர்ந்திருந்த பாக்யராஜ் மனைவி எங்களை பார்த்ததும் எழுந்து நின்றது. எப்பண்ணா வந்திங்க ?.

இப்பதாம்மா வந்தன். பசங்க எப்படி இருக்காங்க ?.

நல்லாயிருக்காங்க.

சரி வர்றம்மா ?.

சாப்பிட்டு போங்கண்ணா.

அம்மா சமைச்சி வச்சிட்டு காத்திருப்பாங்க. இன்னோரு நாளைக்கு வந்து சாப்பிடறன். சரிண்ணா. பாக்யராஜ்யிடம் வர்ரண்டா எனச்சொல்லிவிட்டு நகரும் போது அவன் மனைவி பக்கம் திரும்பி, உன் வீட்டுக்காரன் இன்னமும் மைனர் நெனப்புலயே இருக்கான். பாத்து கொஞ்சம் கவனிம்மா.

டேய் நல்லவனே கொஞ்சம் மூடிக்கிட்டு போறயா என கத்தியவனை பார்த்து சிரித்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தேன். வீட்டுக்குள் நுழைந்ததும் முகம் கழுவிட்டு வந்து சாப்பிடுடா என்றார் அம்மா. முகம் கழுவி விட்டு வரும்போது ஊஞ்சலில் பேரனுடன் உட்கார்ந்திருந்தவரை பார்த்து நீங்க சாப்பிட்டிங்களா என கேட்ட மதனிடம் நான் சாப்ட்டுட்டன் நீ சாப்பிடு என்றார். தரையில் சம்மனம் போட்டு அமர்ந்ததும் தட்டு எடுத்து வைத்து பச்சரிசி சாதம், வெள்ளாட்டு கறி குழம்பு என எடுத்து வைத்தார்கள். அம்மாவின் கை பக்குவம் அருமையாக இருந்தது. ரசம் சாப்பிடும் போது அவன் என்ன சாப்பிட்டான்ம்மா.


கறி நாலு துண்டுதாம்ப்பா சாப்பிட்டான். கொஞ்சோண்டு ரசம் சாதம் சாப்பிட்டான் என அம்மா கவலையாக சொன்னதும் போதுமாடா என கேட்டேன்.

வயிறு ரொம்பிடுச்சிப்பா வயிற்றை தட்டி காட்டியபடி. 

வாழைப்பழம் இருந்தா தாம்மா என்றதும் உள்ளே சென்று மூன்று பேருக்கும் எடுத்து வந்து தந்தார். கலிவரதன் மடியில் அமர்ந்திருந்த பேரனுக்கு வாழைப்பழத்தை உரித்து ஊட்டிவிட்டுக்கொண்டு இருந்தார். சாப்பிட்ட இடத்தில் இருந்து தள்ளி சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்து பழத்தை சாப்பிட தொடங்கினான் மதன்.

இங்க பார்றா என கலிவரதன் மதனை அழைத்ததும் என்னவென மதன் பார்த்தான். நீ ஒரு துணை வேணாம்ன்னு நினைக்கலாம். ஆனா இவன் சின்ன பையன்.

அதுக்கு என்ன பண்ணனும்கிறிங்க.

சொல்றத கேளுடா.

இரண்டு வருஷமா சொல்றதுத்தான். நீங்க எத்தனை முறை சொன்னாலும் என்னைக்கும் என் முடிவுல எந்த மாற்றமும்மில்ல.

என்னடா பெரிய மயிரு முடிவு. இந்த புள்ளைய அம்மா பாசம் தெரியாம வளர்க்க போறியா ?.

நான் அதிகமாவே பாசத்த காட்டறன்.

நீ காட்டற பாசம் கால் தூசுக்கு சமம். அம்மான்னு ஒருத்தி கூப்பிடறதுக்கு இல்லாம அவன் மனசு என்ன கஸ்டப்படும் தெரியுமா என்றதும் ரஞ்சித்தை பார்த்து கோபமாக உனக்கு அம்மா வேணுமாடா ?.

வேணாம் என தலையாட்டினான்.

போதும்மா. இதான் என் பையன் என பெருமையாக சொன்னதும்.

நீ என்ன லட்சணத்தல புள்ளய வளக்கறன்னு நீ அவன்கிட்ட பேசறதுலயிருந்தே தெரியுது என கோபமாக சொன்னதும் கோதை சமையல் கட்டில் இருந்து வேகமாக வெளியே வந்து தன் கணவரின் அருகே நின்றவள். அவர் சொல்றதத்தான் கொஞ்சம் கேளேம்பா.

என்னால சரியா பாத்துக்க முடியலன்னு சொல்றாருயில்ல. அப்ப நீங்க இரண்டு பேரும் வந்து என்கூட இருந்து இவனை பாத்துக்குங்க.

பெத்த புள்ள நீயே நாங்க சொல்றத கேட்கமாட்டேன்கிற, எடுத்தெறிச்சி பேசற. அப்படியிருக்கும் போது நான் சொல்றத உன் புள்ள எப்படி கேட்பான் என கலிவரதன் கோபமாக கேட்டதும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த மதன் வெறுப்பான குரலில் இப்பயென்ன என்கூட இருக்க முடியாதுயில்ல விடுங்க அவனை நானே பாத்துக்கறன்.

சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்கும். இன்னைக்கு உடம்புல தெம்புயிருக்கு ஓடுவ. அவனை பாத்துக்குவ. என்னயமாதிரி வயசானபிறகு என்னப்பண்ணுவங்கறதயும் யோசிச்சிக்க என்றார் கலிவரதன். மதன் அமைதியாக இருக்க மாடு கூட ஒரு முறை அடிச்சா அதுக்கப்பறம் ஒழுங்காயிருக்கும். எருமை மாதிரி என்ன சொன்னாலும் சொரணையில்லாம இருந்தா என்ன அர்த்தம்மோ என்றார் உச்ச கோபத்தில்.

மதன் கோபமாக எழுந்து அறைக்கு சென்றான்.

தொடரும்………………

வெள்ளி, ஜூலை 26, 2013

பொருளாதார புண்ணாக்குகள்.


இந்தியாவில் கிராமபுறத்தில் ஒரு நாளைக்கு 27 ரூபாய்க்கு மேல், நகரத்தில் 33 ரூபாய்க்கு மேல் சாப்பிடுபவர்கள் அல்லது செலவு செய்பவர்கள் ஏழைகள் இல்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது திட்டக்குழு. பல கட்சிகளும் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளன. 

திட்டக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பார்த்தால் 22 ரூபாய்க்கு அம்மா உணவகத்தில் வேண்டுமானால் கோலி குண்டு சைசில் விற்கப்படும் 22 இட்லிகளை வாங்கி உண்ணலாம் அரை வயிறு நிரம்பும் அவ்வளவே. 

50 காசு டீசல் விலை ஏற்றம் நடைபெற்றால் 5 ரூபாய் தோசையில் விலை உயர்த்தப்படுகிறது. தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவனால் ஒரு வேளை உணவைக்கூட வயிறு நிரம்ப உண்ண முடியாத நிலையில் உள்ளான். அப்படியிருக்க 22 ரூபாய்க்கு மேல் சாப்பிடுபவர்கள் இந்தியாவில் பணக்காரர்கள் என்கிறது இந்த அறிக்கை. 


இதன் முடிவுப்படி பார்த்தால் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் குறைந்துள்ளார்கள் என சுட்டிக்காட்டுயள்ளார்கள் இந்த பொருளாதார அறிஞர் பெருமக்கள். 

தினமும் இரண்டு இட்லி சாப்பிட்டால் அவன் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளான் என அறிவித்து அதன்படி புள்ளி விபரங்களை தயாரித்தால் இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் யாரும் இல்லை என்பது போலாகிவிடும். 

இந்தியாவின் மக்கள் தொகையில் 22 சதவிதம் தான் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளார்களாம். 2004-2005ல் இது 37 சதவிதமான இருந்தது. தற்போது இது குறைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்கிறது அந்த அறிக்கை. 

2004ல் ஒரு கிலோ அரிசி 20 ரூபாய், இன்று 45 ரூபாயை தாண்டி விற்கிறது. 2004ல் ஒரு கிலோ பருப்பு 50 ரூபாய்க்கு விற்றது இன்று 120 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. 2004ல் ஒரு லிட்டர் பெட்ரோல் 34 ரூபாய்க்கு விற்றது இன்று 74 ரூபாய்க்கு விற்கிறது. இப்படி குண்டூசி முதல் விமானம் வரை, கருவேப்பிலை முதல் பீசா வரை விலை உயர்ந்துள்ளது. இதை வைத்து பொருளாதார புலிகள் கணக்கிடமாட்டார்களாம். 

2000த்தில் வைக்கப்பட்ட சாப்பிடுவதற்கான அளவு கோலை வைத்து இன்றைய மக்களின் நிலையை கணக்கிடுவார்களாம். என்னங்கடா உங்க கணக்கீடு. இந்த மயிருக்கு நீங்கள் நாட்டில் ஏழையே இல்லை என அறிவித்து விடுங்களேன். 

உலக சுகாதார நிறுவனம் 2007ல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உலகில் குழந்தைகள் அதிகளவில் நோஞ்சானாக அதாவது ஊட்டசத்து குறைபாடு உள்ளவர்களாக இருக்கும் நாடுகளில் இந்தியா முதல் ஐந்து இடங்களில் உள்ளதாக குறிப்பிடுகிறது. அதாவது 45 சதவிதம் குழந்தைகள். இந்த நிலை இன்றும் அப்படியேத்தான் உள்ளது. 


படிப்பு தந்துவிட்டால் வறுமை ஒழிந்துவிடும் என்கிறார்கள் ஒரு சாரார். படித்தவர்களை கொண்டு வறுமை ஒழிந்தது என்ற கணிப்பும் ஒரு பக்கம்மிருக்கிறது. படித்துவிட்டால் வறுமை ஒழிந்துவிடும் என்பது கற்பனை. 

இந்தியா ஒரு விவசாய நாடு. ஆனால் விவசாயத்துக்கு நம் அதிகார வர்க்கம் முக்கியத்துவம் தரவேயில்லை. தொழில்துறைக்கும், கணினி துறைக்கும் அதிகார வர்க்கம் தந்த முக்கியத்துவம் விவசாயத்துக்கு தரவேயில்லை. விவசாயத்தல் லாபம்மில்லாமல் மக்கள் கூலிகளாக கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி நகர்ந்தார்கள். தொழில் வளர்ச்சியின் போது அந்த மக்களை வா வா என தன்னோடு அழைத்துக்கொண்டது. மனித உழைப்பு சுரண்டலுக்கு பின் தொழில்துறையில் ஒரு விதமான வளர்ச்சிக்கு வந்தபின் இயந்திரங்களை கொண்டு பணிகள் செய்ய தொடங்கியபோது கூலிகளாக வந்தவர்கள் மீண்டும் பணியில்லாமல் துரத்தப்படும் நிலை. இவர்களால் மீண்டும் கிராமத்துக்கும் செல்ல முடியவில்லை, இவர்களின் வாரிசுகளாலும் விவசாயத்தை செய்ய முடியவில்லை. உணவுக்கு திண்டாட தொடங்கிவிட்டார்கள். 

நூறு நாள் வேலை என்ற ஒன்றை கொண்டு வந்து மக்களை சோம்பேறிகளாக்கியது தான் இந்திய காங்கிரஸ் அரசு செய்த சாதனை. அதை தவிர ஏழை மக்கள் முன்னேற என்ன திட்டத்தை இந்த அரசாங்கம் செய்துள்ளது. தொழில் துறையின் அத்துமீறல், சுற்றுச்சூழல் மாசுபாடு, அரசாங்கத்தின் திட்டமிடா திட்டங்கள் போன்றவை கொஞ்ச நஞ்ச விவசாயத்தையும் அழித்துவிட்டன. இதனால் கிராமங்களில் வாழ்பவர்களை சோம்பேறிகாக உள்ளனர். இதனால் வறுமையில் வாடும் மக்களின் நிலை அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை.

உலக அரங்கில் தன்னை வல்லரசாக காட்டிக்கொள்ள நினைக்கும் இந்திய அதிகார வர்க்கம் உண்மையை மறைத்து பொய்யை அறிக்கை வாயிலாக அவிழ்த்து விடுகிறது. இதனால் உலக வங்கியிடம் தேவையான அளவு கடன் கிடைக்கும். கடனை மக்களின் தலையில் சுமத்தவே இந்த அறிக்கைகள் பயன்படும்மே தவிர ஏழையை ஒரு வேளை உணவை நிம்மதியாக உண்ண வைக்க இந்த புள்ளி விவரங்கள் பயன்படாது. 

முதலாளித்துவ அடிமைகள் நம்மை ஆளும் வரை நாம் அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும். இது போன்ற அபத்தனமான அறிக்கைகளை படிக்கத்தான் வேண்டும். 

சனி, ஜூலை 20, 2013

அன்பே அழகானது. – பகுதி – 6.



ஏண்டா ஐஸ்கிரிம் வாங்க போறவன் கூட யாரையாவது அழைச்சி போகலாம்மில்ல.

இல்ல டாடி.

நீ வர வர ரொம்ப மோசமா நடந்துக்கற ரஞ்சித் என கோபமாக சொன்னதும் அமைதியாக வந்தான்.

பாஸ் தப்பு ரேவதி மேல. நீங்க ஏன் குட்டி பையனை திட்டறிங்க.

ரேவதிக்கிட்ட ஒப்படைச்சிட்டு போனா நீங்க யாரும் அவனை பாத்துக்கமாட்டிங்களா என கேட்டதும் அதில்ல சார் என ஸ்ரீதர் தலை குனிந்தான். மஞ்சு சோகமாக அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

கிடைச்சிட்டான்யில்ல விடுடா என்ற பிரபு, ரஞ்சித்தை அழைத்து புதுயிடத்துக்கு வந்தா தனியா போக கூடாது. யாராவது பெரியவங்க ஒருத்தர் துணையோடத்தான் போகனும். இங்கயெல்லாம் நீ தொலைஞ்சி போய்ட்டின்னா உன்ன கண்டு பிடிக்கவே முடியாது. அதனால ஜாக்கிரதையா இருக்கனும் சரியா என்றான்.

சரி அங்கிள்.

ஆமாம் ஐஸ்கிரிம் வாங்க உனக்கேது காசு என நான் கேட்டதும்

அமைதியாக இருந்தான்

கேட்கரன்யில்ல பதில் சொல்லு என கோபமாக கேட்டதும் ட்ரஸ் எடுக்க போனப்ப ஐஸ்கிரிம் வாங்க பணம் தந்திங்களேப்பா அதல மீதி காசு எங்கிட்ட இருந்துச்சி அதலதான் வாங்கனன்.

உனக்கு காசு தர்றது தப்பா போச்சி.

சின்னப்பையன் சொன்னா புரிஞ்சிக்கபோறான். அதவிட்டுட்டு திட்டிக்கிட்டே இருக்கற என பிரபு மீண்டும் சொல்ல அமைதியாக வந்தேன். இரவு 8 மணியளவில் அனைவரும் ஊர் வந்து சேர்ந்தோம்.

வீட்டுக்கு வந்து உள் நுழைந்ததும் என்னடா கோபமா என கேட்டேன்.

அமைதியாக இருந்த ரஞ்சித் எதுவும் சொல்லமால் நி;ன்றான். இந்த வயசுல உங்க பையன் பிர்லியன்டா இருக்கான்னு மத்தவங்க சொல்லும் போது சந்தோஷமா இருக்கு. ஆனா நீ பண்ற வாலு தனத்த தான் பொருத்துக்க முடியல என்றதும். அதற்கும் அமைதியாக இருந்தான். சரி ட்ரஸ் மாத்திக்க டிபன் செய்யறன் சாப்பிடலாம் என்றதும் அமைதியாக பெட்ரூம்குள் நுழைந்தான். நானும் சென்று உடை மாற்றிக்கொண்டு டிபன் செய்ய தொடங்கினேன். தோசை ஊத்தி சட்னி வைத்து தந்ததும் சாப்பிட்டுவிட்டு ரூம்குள் சென்றுவிட்டான். நான் பெட்ரூம்குள் நுழைந்த போது அவன் தூங்கியிருந்தான். அவன் தலையை தடவி தந்தபடி நானும் தூங்கியிருந்தேன்.

காலையில் எழுந்தவன் அவனே குளிக்க சென்றான். என்ன சார் இன்னும் கோபம் போகலயா ?

அதெல்லாம் ஒன்னும்மில்ல.

உன் முகத்த பாரு குரங்கு மாதிரியிருக்கு.

உன் மூஞ்சிதான் எங்கிட்டயிருக்கு என பதில் சொல்ல அவனை முறைப்பது போல பார்த்ததும் பாத்ரூம்குள் ஓடிவிட்டான். குளித்துவிட்டு வெளியே வந்து பள்ளிக்கு கிளம்பியவனின் கழுத்தில் டை கட்டியபடி மெல்லிய குரலில் நீ அவுங்க கூட இல்லன்னதும் நான் எப்படி துடிச்சன் தெரியுமா. அந்த கோபத்தல திட்டிட்டன்டா ஸாரி.

நீங்க சென்னை அழைச்சிம் போகும்போது என்ன சொன்னிங்க.

என்ன சொன்னன்.

பொம்மையெல்லாம் வாங்கி தர்றன்னு சொன்னீங்க. எதுவும் வாங்கி தரல.

மஞ்சுக்கிட்ட நான் தான் வாங்கி தரச்சொன்னனே.

எதுவும் வாங்கி தரலப்பா.

நானும் டென்ஷன்ல மறந்துட்டன். அடுத்தமுறை போறப்ப நிறைய வாங்கி தர்றன்.

ஓ.கே டாடி என தலையாட்டியவன் சந்தோஷத்தில் கன்னத்தில் ஒரு முத்தம் தந்தான். தட்டில் போட்டு வைத்திருந்த மூன்று இட்லியை சாப்பிட்டபோது வெளியே வீட்டு வாசலில் வந்து நின்று ஹாரன் அடித்தது ஆட்டோ. இரு ரஞ்சித் உன்ன நான் ட்ராப் பண்றன்.

வேணாம் டாடி. நான் ஆட்டோவுல போறன். மதியம் லஞ்ச் டாடி. மறந்துட்டன் இரு என சமையல் அறைக்கு சென்று அவனுக்காக வைத்திருந்த டிபன் பாக்ஸ் எடுத்து வந்து தந்தபடி ஐந்து இட்லி வச்சியிருக்கன். மிச்சம் வைக்காம சாப்பிடு என டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டிலை தந்ததும் வாங்கிக்கொண்டு வெளியே நின்ற ஆட்டோவில் ஏறிக்கொண்டு சிரித்தபடி டாடா காட்டினான்.

நானும் குளித்துவிட்டு முடித்து சாப்பிட்டுவிட்டு அலுவலம் சென்ற போது வேலைகள் நடந்துக்கொண்டு இருந்தன. ஒரு கம்ப்யூட்டரில் அமர்ந்து பிரபு டிசைன் செய்துக்கொண்டு இருந்தவனை உள்ள வாடா என்றதும் வந்தவன் வீட்ல போயும் அவனை திட்டனியா ?.

இல்லடா. காலையில வரைக்கும் கோபமா இருந்தான். ஸ்கூல் போகும்போது தான் கொஞ்சம் சிரிச்சான்.

அவனுக்கு அம்மா பாசமும், அரவணைப்பும் தேவைடா. ஒரு அப்பா எவ்ளோ பாசத்த காட்டனாலும், அம்மா மாதிரி வராது. அதனால கோபப்படாம நாங்க சொல்றத கொஞ்சம் கேளுடா என்னும் போதே ஃபோன் மணி அடித்தது. மதன் ஃபோனை எடுத்து ஹலோ என்றான்.

எதிர் தரப்பு குரலை கேட்டதும் வணக்கம் சார். நல்லாயிருக்கிங்களா ?

நல்லாயிருக்கனப்பா. நீ எப்படியிருக்கற ?.

நான் நல்லாயிருக்கன் சார்.

செல்போன்க்கு கூப்பிட்டன் எடுக்கல.

பைக்ல ஆபிஸ் வந்துக்கிட்டு இருந்தன் சத்தத்தல கேட்கல சார்.

தலைவர் அடுத்த மாசம் இங்க வர்றாரு.

என்ன சார் திடீர்ன்னு.

மாவட்ட தலைவர் பையன்க்கு கல்யாணம். அதுக்காக வர்றாரு. நாம நல்லா விளம்பரம் செய்யனும்.

செய்துடலாம் சார்.

வாசகம் சொல்றன் குறிச்சிக்கப்பா.

சொல்லுங்க சார் என ஒரு பேப்பர் பேனாவை எடுத்து அவர் சொன்னதை குறிக்க தொடங்கினான். பத்து நிமிடம்மானது. டிசைன் பண்ணி நாளைக்கு ஆபிஸ்க்கு 11 மணிக்கு தந்து அனுப்பறன் சார். கரெக்ஷன் ஏதாவது இருந்து சொன்னிங்கன்னா மாத்தி நாளைக்கு ஈவ்னிங் பைனல் பண்ணிடலாம் சார் என முடித்து ஃபோனை வைக்க 15 நிமிடமானது.

பிரபுவிடம் எல்லாரையும் உள்ள வரச்சொல்லு.

எதுக்கு.

வரச்சொல்லு சொல்றன்.

கண்ணாடி டோரை திறந்த பிரபு, ஆல் ஆபிசர்ஸ் ப்ளீஸ் கம் என்றதும் அடுத்த இரண்டு நிமிடத்தில் எல்லோரும் மதன் முன் அமர்ந்திருந்தனர்.

அடுத்த மாசம் மக்கள் முன்னேற்ற முன்னணி கட்சியோட தலைவர் முக்கிய கட்சிக்காரர் வீட்டு கல்யாணத்துக்கு இங்க வர்றாறாம். இப்பத்தான் டேட் கன்பார்ம்மாச்சாம். அந்த கட்சி மா.செவாயிருக்கற வேலாயுதம் எம்.எல்.ஏ இப்பத்தான் போன் பண்ணி சொன்னாரு.  நியூஷ் பேப்பர், பேனர், போஸ்டர்க்கு டிசைன் கேட்டுயிருக்காரு. ரொம்ப நல்லாயிருக்கன்னு தலைவர் நின்னு ரசிக்கற மாதிரி இருக்கனம்ன்னு சொல்றாரு.

செய்து தந்துடலாம் சார் என்றான் பாண்டியன்.

ஆனா நாளைக்கே வேணும்ன்னு கேட்கறாரு.

நாளைக்கா என ரேவதி அதிர்ச்சியாக.

ஆமாம்.

ஸ்கூல், காலேஜ் அட்மிஷன் டைம் சார். வாராவாரம் புது டிசைன்ங்க தந்துக்கிட்டே இருக்கனம்ன்னு சொல்லியிருக்காங்க. நம்மோட ரெகுலர் கஸ்டமர்களோடதே நிறைய பென்டிங் இருக்கு. அதனால இத நாளைக்கே செய்து தர முடியாது சார் இரண்டு நாளாவது ஆகும் சார் என்றாள் ரேவதி.

இவரும் நம்ம ரெகுலர் கஸ்டமர் தான் ரேவதி என்ற நான் கொஞ்சம் யோசித்துவிட்டு

எம்.எல்.ஏவத பாண்டியனும், ரேவதியும் செய்யட்டும். காலேஜ், ஸ்கூல் ஓர்க்குகள பிரபு செய்யட்டும். மஞ்சு நீ கொஞ்சம் அப்படியே இந்த வேலைகளையும் கவனி.

சரியென தலையாட்டிய மஞ்சு. சார் அந்த எம்.எல்.ஏ போனமுறையே ஐந்தாயிரம் பென்டிங் வச்சியிருக்காரு என்றாள் மஞ்சு.

இந்தமுறை வாங்கிடலாம் மஞ்சு. ஸ்ரீதர் எங்க?.

இன்னும் வரல சார்.

பேங்க்ல ஏதாவது ஓர்க் இருக்கா.

செக்குங்க இருக்கு சார் அத அக்கவுண்ட்ல போடனும்.

அத எங்கிட்ட குடு நான் பாத்துக்கறன். ஸ்ரீதர் வந்ததும் எம்.எல்.ஏ விளம்பரத்த டிசைன் பண்ணச்சொல்லு.

சரி சார்.

பாண்டியன் வேலைய பிரிச்சி பாருங்க. நீங்க பேனர் வேலைகள பாருங்க, ரேவதி பேப்பர் விளம்பரத்த டிசைன் பண்ணட்டும், போஸ்டர் விளம்பரத்த ஸ்ரீதர்க்கிட்ட தந்துவிடுங்க. தேதியும், வாசகமும் சொல்லியிருக்காரு. எல்லாத்தலயும் அவர் படமும், கட்சி தலைவர் படமும் தான் போடனுமாம். தம்பதிங்க படத்த தந்துவிட்டுயிருக்காறாம். அதுக்கு இடத்த விட்டுட்டு டிசைன் பண்ணுங்க. சி.டி வந்ததும் படத்த எடுத்து வச்சி ஃபில் பண்ணுங்க.

சரி சார்.

சரி எல்லோரும் போய் வேலைய பாருங்க என்றதும் அனைவரும் எழுந்து சென்றனர்.

பிரபு எனக்கொரு ஐடியா, நாம இதுவரைக்கும் டிசைன் மட்டும் தான் செய்து தந்துக்கிட்டு இருந்தோம். இந்தமுறை அதை பிரிண்ட் செய்து தர ஆர்டரை எடுத்த எப்படியிருக்கும் ?.

என்னடாயிது புதுசா. 

ஆமாம் புதுசு தான். வளருனும்டா. எத்தனை வருஷத்துக்கு தான் அப்படியே இருக்கறது. கொஞ்சம் வளருவோம்;டா. நீ ஒருவேளை செய். நல்லா பிரிண்ட் போடறவங்க எங்க எங்க இருக்காங்கன்னு பாரு. ரேட் எவ்ளோன்னு விசாரி நான் இதோ வந்துடறன்.

ஏத்தனை வேலைடா நான் செய்யறது.

சார் நீங்க மேனேஜர் மட்டும்மில்ல பாட்னரும்கிறத ஞாபகத்த வச்சிக்கிட்டு வேலையப்பாரு. நான் வரும் போது பட்டியல் ரெடியா இருக்கட்டும்.

ம்.

ஃபைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான் மதன்.

மதியம் 2 மணிக்கு திரும்பி வரும்போது ரிஷப்சனில் அமர்ந்து அனைவரும் அரட்டையடித்துக்கொண்டு இருந்தனர்.

ஏய் என்னப்பாயிது, நிறைய ஓர்க் பென்டிங் இருக்குன்னு காலையில தான் சொன்னிங்க. இப்ப என்னடான்னா எல்லாரும் உக்காந்து கதையடிச்சிக்கிட்டு இருக்கிங்க.

கரண்ட் இல்ல சார்.

நாம தான் யூ.பி.எஸ் போட்டுயிருக்கோம்மே?.

நாம போட்ட யூ.பி.எஸ் நாலு மணி நேரம் தான் வருது. காலையில 9 மணிக்கு போன கரண்ட் இப்பவரை வரல. மதியம்மே பேக்கப் காலியாகி ஒரே ஒரு சிஸ்டம் தான் ஒர்க்காகுது. அதலத்தான் பாண்டியன் சார் வேலை பாத்துக்கிட்டு இருக்காரு என்றான் ஸ்ரீதர்.

காலையில நீ எங்க போன ?

ஓர்க் பாஸ்.

என்ன வேலை பாத்த.

ஃபில் வராம சிலது இருந்தது அத வாங்கிவர போனன் பாஸ்.

வாங்கிட்டியா

நாளைக்கு வரச்சொல்லிட்டாங்க.

ஊர் சுத்த நிறைய காரணத்த வச்சியிருக்க

இல்ல பாஸ்.

பிரபு எங்க ?.

லஞ்ச்க்கு போயிருக்கார் சார்.

அவனை மொபைல் லைனில் பிடித்து சாப்பிட்டியா ?.

ம் என்றவனிடம் வேலை முடிஞ்சதா.

உன் லேப்டாப்ல ஸ்டோர் பண்ணி வச்சியிருக்கன் பாரு.

சரி சீக்கிரம் வா எனச்சொல்லிவிட்டு மதன் தன் அறைக்குள் சென்றான். லேப்டாப்பை ஆன் செய்து பிரபு ஸ்டோர் செய்த ஃபைலை ஓப்பன் செய்து பார்த்தபோது விதவிதமான ரேட்களில் பிரிண்ட் போடப்படுவது தெரிந்தது. தன்னிடம்மிருந்த சில குறிப்புகளை பார்த்தான் அவன் சொன்னதை விட விலை கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. பிரபு உள்ளே நுழைந்தவன் கரண்ட் வந்துடுச்சிடா என சொன்னபடி ஃபேனை சுழல விட்டவன் பாத்துட்டியா ?

பாத்துக்கிட்டு தான் இருக்கன். இத நீயும் பாரு என நான் குறித்து வந்திருந்த சில தகவல்களை அவனிடம் தந்தேன். கொஞ்சம் நேரம் பார்த்தவன் எனக்கு குழப்பமாயிருக்கு என்ன பண்றதா ஐடியா என கேட்டான்.

விதவிதமான ரேட்களா இருக்கு. இதல கொஞ்சம் டீப்பா போனாதான் குவாலிட்டி தர முடியும், நாமளும் லாபம் பாக்க முடியும் அதனால இப்போதைக்கு பெருசா வேணாம். இத படிப்படியா செய்வோம். அவசரப்பட்டு இறங்கி சிக்கிட்டோம் இருக்கறதும் போயிடும்.

இந்த கம்பெனி ஆரம்பிச்ச இந்த எட்டு வருஷத்தல இப்பத்தாண்டா ஒழுங்க யோசிச்சியிருக்கற என்றான் பிரபு.

பாஸ் என அழைத்தபடி வேகவேகமாக அறைக்குள் வந்த ஸ்ரீதர், பாஸ் ஆல் இன்டியா முழுக்க பிராஞ்ச் வச்சியிருக்கற தேவ் கம்பெனியோட பெங்களுரூ பிராஞ்ச் மேனேஜர் பேசனாரு. அவுங்களோட கிளையண்ட் ஒருத்தர் நம்மவூர்ல பெரிய ஜிவல்லரி திறக்கறாறாம். அதை மக்கள்க்கிட்ட புரமோட் பண்ணனுமாம், ஜிவல்லரி ஓனர் பிரஸ்ச மீட் பண்ணனும்மாம் அரேஞ்ச் பண்ணி தர முடியுமான்னு கேட்கறாரு.

ஓ.கே சொல்லு. அவுங்க நம்மள ஓவர் லுக் பண்ணக்கூடாது. பிடி நம்மக்கிட்ட இருக்கட்டும் ஸ்ரீதர்.

நீங்க பேசறிங்களா பாஸ்.

இல்ல மேனேஜர் பேசுவாருன்னு சொல்லு.

ஓ.கே பாஸ் என்றபடி வெளியே சென்றான்.

ஓபி அடிச்சாலும் நல்ல கான்டக்ட் வச்சியிருக்கனேடா.

அவன் கேடி. ஒரு நாள் நமக்கு அல்வா தரப்போறான் பாரு என்றவனிடம்

தரும்போது பாத்துக்கலாம். இங்க அந்த கம்பெனி எது பண்றதாயிருந்தாலும் அது நம்ம ஏஜென்சி வழியாத்தான் பண்ணனும் அந்தளவுக்கு பேசி அவனை நம்ம கண்ட்ரோல்ல வச்சிக்க. நமக்கு தர்ற ரேட் விஷயத்தல தயங்குவாங்க. எங்க ரேட் இதுதான்னு கட்டன்ரைட்ட பேசிடு.

பெரிய கம்பெனிடா விட்டு பிடிப்பமே ?.

ஒன்னும் வேணாம். நம்மக்கிட்ட வர்றது அந்த ஜிவல்லரி கிடையாது. ஜிவல்லரி நியமிச்சியிருக்கற அட்வர்டைசிங் கம்பெனி. நியூஸ் பேப்பர், மீடியா விளம்பரத்த அவுங்களே தயாரிப்பாங்க. வெளியிடப்போறதும் அந்த கம்பெனி தான். இங்க லோக்கல்ல தெருவுல, வினையல் போர்டு, பிட் நோட்டீஸ் தர்ற சின்ன சின்ன விஷயத்துக்கு தான் நம்மள பயன்படுத்துவாங்க. அவனால அவ்வளவா வருமானம் கிடையாது. அதனால அவன் சொல்ற வேலைய கேட்டுக்க செஞ்சிட்டு அதுக்கு ஏத்தமாதிரி பில் போட்டு அனுப்பிடு.

நாம ஏன் அந்த ஜிவல்லரி ஓனரை அப்ரோச் பண்ணி இங்கத்தி அட்வர்டைசிங்க நாங்க பாத்துக்கறன்னு கேட்டா பிரபுவை முறைத்தேன்.

தொடரும்……………

ஞாயிறு, ஜூலை 07, 2013

வன்னியர்கள் சாதி வெறியர்களா ?.


தலைப்பை படித்துவிட்டு படிக்க வந்துள்ள தோழர்களே கீழே இருப்பதை நீங்கள் படித்து முடித்தப்பின் நீங்கள் என்னை சாதி வெறியன் என பட்டம் சூட்டலாம். சூட்டுங்கள்……. சில விஷயங்களை பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் போனால் அதுவே குற்றம் தான்.

வடமாவட்டங்களில் வன்னியர்கள் - தாழ்த்தப்பட்ட மக்கள் தான் மெஜாரிட்டி. கடந்த 25 ஆண்டுகாலமாக பெரும் கலவரங்கள் இல்லாமல் ஒற்றுமையாக இருந்து வருகிறது இந்த இரு சமூகமும். மற்ற மாவட்டங்களை விட காஞ்சிபுரம், திருவள்ளுவர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் சாதி பிரச்சனைகள் குறைவு. இரட்டை டம்பளர் என்பதோ, ஊர் பகுதியில் செருப்பு போட்டு நடக்ககூடாது என்ற கட்டுப்பாடு விதிப்பது என்பதோ இங்கு குறைவு. வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுக்கு பின் படித்து தங்களை பொருளாதார, கல்வி ரீதியில் மேம்படுத்திக்கொண்டு வாழ பழகிவிட்டார்கள். அப்படி வாழ்பவர்கள் காதல்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு சில ஆண்டுகளாகவே வந்து விட்டார்கள் என்பதே நிகழ்கால உண்மை.

தருமபுரி நாயக்கன்கொட்டாயை சேர்ந்த வன்னிய சமூக பெண்ணான திவ்யாவை தாழ்த்தப்பட்ட சமூகமாக குறிப்பிடப்படும் தலித் இளைஞன் இளவரசன் காதல் திருமணம் செய்துக்கொண்டதால் கலவரம் வந்தது என்ற செய்தி பரப்பப்படுகிறது. உண்மை அதுவல்ல. திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்தே பிரச்சனை வருகிறது. எதனால் பிரச்சனை வந்தது என்பதை எல்லோரும் மூடி மறைக்கிறார்கள். இளவரசன் - திவ்யா இருவரும் ஓடிப்போய் காதல் திருமணம் செய்துக்கொள்கின்றனர். அதை அரசு துறையில் பதிவு செய்ய முடியாத நிலை. காரணம் பையனுக்கு 18 வயது, பெண்ணுக்கு 20 வயதாகிறது. சாதி கௌரவம் இருவரையும் பிரிக்க வேண்டும்மென பிரச்சனையை பெண் தரப்பு காவல்நிலையத்துக்கு கொண்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி, பெண்ணின் தந்தையை சாதியை குறிப்பிட்டு மோசமாக திட்டியதால் அந்த பெண்ணின் தந்தை தற்கொலை செய்துக்கொள்கிறார்.

அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி தான் அந்த மக்கள் சாலை மறியல் செய்கிறார்கள். காவல்துறை அந்த பக்கம்மே வரவில்லை என்பதால் மக்களின் கோபம் அந்த பையனின் உறவினர்கள் மீது திரும்புகிறது. அந்த பையனின் உறவினர்கள் வீடுகள் அடித்து நொறுக்கி கொளுத்தப்படுகின்றன. காலணியே அடித்து நொறுக்கிவிட்டார்கள், 500 குடிசைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன என திசை திருப்பப்பட்டு வன்னியர்கள் கலவரக்காரர்களாக சித்திரிக்கும் போக்கு தொடங்கியது. இளவரசன் - திவ்யா விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றன………..

வன்னியர் சங்கம் நடத்திய விழாவுக்கு சென்றபோது மரக்காணம் அருகே பாமகவினருக்கும் - விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதற்கு காரணம் பாமக தான் என அரசாங்கம், கருத்தாளர்கள் விவகாரத்தை திசை திருப்பினர். ராமதாஸ் போராட்டம் நடத்தியதன் விளைவாக ராமதாஸ் உட்பட பாமகவினர் கைது செய்யப்பட்டனர். பல கடுமையான சட்டப்பிரிவுகளில் பாமகவினர் அடைக்கப்பட்டனர். ஜாமினில் வெளியே வந்தவர்களை மீண்டும் சட்டத்துக்கு புறம்பாக சிறையில் அடைக்கும் நிலையை ஜெ அரசாங்கம் கடைபிடித்து வருகிறது.

இந்நிலையில் தான் பாமக மீதான தாக்குதலோடு மறைமுகமாக வன்னியர்களை கலவரக்காரர்களாக சித்தரிக்கும் போக்கு அதிகரிக்க தொடங்கியது.


4ந்தேதி இளவரசன் மரணம்? நிகழ்ந்ததும் வன்னியர்கள் கொலைகாரர்கள் என மக்கள் மத்தியில் நிறுவும் முயற்சி வேகமாக நடத்தி வருகிறார்கள். பாமகவின் சாதி வெறி, கலவர பேச்சை எதிர்ப்பது என்பது வேறு ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்குவது என்பது வேறு. இன்று சாதியை எதிர்ப்பதாக காட்டிக்கொள்பவர்களும், கருத்தாளர்களும், மீடியா துறையினரும் வன்னிய சாதியினரை குற்றவாளியாக்கி கொண்டு இருக்கிறார்கள்.

வன்னியர்கள் ஏதோ காலம் காலமாக தங்கள் சாதியில் மட்டும் பெண் எடுத்து, பெண் கொடுத்து வந்தவர்கள் போலவும், தங்கள் சாதி பெண்களை தாழ்த்தப்பட்ட மற்றும் பிற சமூகத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக்கொண்டால் கொலை செய்கிறார்கள் என்பது போல கருத்தாளர்கள் ஒரு கருத்தை இணைய தளம், தொலைக்காட்சி, செய்தி ஏடுகள் மூலம் பரப்பி வருகிறார்கள். ஒரு சமூகத்தை குற்றவாளியாக்குவது நியாயம்மா ?. பல தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் வன்னிய பெண்களையும், சில வன்னிய இளைஞர்கள் தாழ்த்தப்பட்ட யுவாதிகளை திருமணம் செய்துக்கொண்டு பிள்ளை குட்டிகளோடு ‘சில பிரச்சனைகளை’ எதிர்கொண்டு நிம்மதியாக வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் என்ன கொல்லப்பட்டா விட்டார்கள்.

இன்னொன்று தெரியுமா? தலித் சாதியினர் அடிமையாக நடத்தும் சக்கிலி இனத்தில் திருமண உறவு வைத்துக்கொள்ளமாட்டார்கள். வன்னியர்கள் சிலர் அந்த சக்கிலி சமூக பெண்களை காதலித்து திருமணம் செய்க்கொண்டு பிள்ளைகளோடு வாழ்கிறார்கள்.

சாதியை எதிர்க்கிறோம் என்பவர்கள் தலித் சமூகத்தால் நசுக்கப்படும், அடிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள சக்கிலி சாதிக்காக ஏன் உங்கள் குரல் ஒலிப்பதில்லை?, சக்கிலியை ஒதுக்கி வைக்கும் தலித் சாதியினரை ஏன் நீங்கள் கண்டிப்பதில்லை?. தென் தமிழகத்தில் தேவர் சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களை எப்படி நடத்துக்கிறார்கள் என்பது கண்கூடு. அந்த தேவர் சாதி தலைவர்களை கண்டிக்க ஏன் உங்கள் குரல் எழுவதில்லை?, தென் தமிழகத்தில் மறைந்த சாதி தலைவர்களுக்கு மலை மரியாதை செய்யும் போது எதனால் வாய் மூடி மவுனியாக இருக்கிறிர்கள்?, சாதியை எதிர்ப்பவர்கள் எல்லா சாதியையும் தானே எதிர்க்க வேண்டும்? ஏன் நீங்கள் அதை செய்வதில்லை ?.

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பதை போல வன்னியர்களை பிள்ளையார் கோயில் ஆண்டியாக பார்க்கிறிர்கள். அதனால் தான் அவர்கள் மீது மட்டும் குற்றம்சாட்டுகிறிர்கள். மற்றவர்கள் மீது குற்றம் சாட்டாததற்க்கு காரணம் உங்கள் மனங்களில் புரயோடி போயிருக்கும் சாதி வெறி தான்.

ஒரு விவகாரம் நடந்துவிட்டப்பின் அதில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை எப்படி காப்பாற்ற வேண்டும், பாதிப்பு மேலும் பரவாமல் தடுக்க வேண்டும் என்பதில் தான் நமது கருத்து இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இரு சாதிகளுக்குள் தீராத பகையை ஏற்படுத்துவது போல் நடந்துக்கொள்வது எந்த விதத்தில் நியாயம். 


வன்னிய - தாழ்த்தப்பட்ட சமூகத்தை குறிப்பாக தலித் மக்களோடு மோதவிடும் சூழ்ச்சி நடக்கிறது. இது திட்டமிட்டு செய்யப்படுகிறது. அரசியலுக்கு பாமக செய்வதாக குற்றம்சாட்டப்படுகிறது. இருக்கலாம் மறுப்பதற்கில்லை. ஆனால் அதையேத்தானே தலித் இயக்கங்களும் செய்கின்றன?. பாமகவின் சாதி வெறியை கண்டிக்க துணிந்த வாய்களுக்கு, எழுத தெரிந்த பேனாக்களுக்கு ஏன் இதனை கண்டிக்க முன் வருவதில்லை ?.நேர்மையாக பதில் சொல்லுங்கள்……….. விவாதிப்போம்……………

தவறு யார் செய்தாலும் கண்டிக்க வேண்டும். அப்போது தான் பிரச்சனை தீரும். ஒரு சாராருக்கு சார்பாக நடந்துக்கொண்டால் நிச்சயம் நம்மை காலம் மன்னிக்காது.

வியாழன், ஜூலை 04, 2013

அன்பே அழகானது. – பகுதி – 5.



மதியம் என்ன லஞ்ச் என சுதாவிடம் மாலாதி டீச்சர் கேட்டதும். 

உதடு பிரியாமல் புன்னகைத்த சுதா, அப்பாவோட ப்ரண்ட் பொண்ணுக்கு கல்யாணம். அதனால காலையில எல்லாரும் அங்க போய்ட்டாங்க. அதனால லஞ்ச் கொண்டு வரல. வீட்டுக்கு போய் சாப்பிட்டு தான் வரனும் மேடம்.

என்ன மேடம் வந்து ஓருவாரம்மாச்சி. உங்க வீட்டப்பத்தி சொல்லவேயில்ல என ப்ரியா தான் கிளறினாள்.

நான், அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அண்ணன் பொண்ணு சுவாதி ஐந்து பேர் தான். அப்பாவும், அண்ணனும் பிஸ்னஸ் பண்றாங்க, அம்மா ஹவுஸ்ஒய்ப், அண்ணி இந்தியன் பேங்க்ல அசிஸ்டன்ட் மேனேஜரா இருக்காங்க.

ப்ரியா தயங்கி தயங்கி உங்களுக்கு கல்யாணம்மாயிடுச்சில்ல.

ம்.

வீட்டுக்காரர் என மாலதி இழுக்க சுதாவின் செல்போன் அன்பென்ற மழையிலே என பாடல் பாட அதை எடுத்து பார்த்தவள் அம்மா கூப்பிடறாங்க எனச்சொல்லியபடி ஆன் செய்தாள். சொல்லும்மா. இன்னும் கொஞ்ச நேரத்தல லஞ்ச் ஃபெல் அடிப்பாங்க வீட்டுக்கு வர்றம்மா எனச்சொல்லிவிட்டு காலை கட் செய்யவும் லஞ்ச் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.

நானும் இன்னைக்கு வீட்டுக்கு தான் போறன் வாங்களேன் உங்கள ட்ராப் பண்றன் என்றாள் ப்ரியா.

உங்களுக்கு எதுக்கு சிரமம்.

இதலபோய் என்னயிருக்கு வாங்க என்றாள்.

ப்ரியாவும், சுதாவும் பார்கிங் ஏரியாவுக்கு நடந்து செல்ல குட் ஆப்டர்னோ மேடம் என்றார் கணக்கு ஆசிரியரான ஸ்டீபன்.

திரும்பி பார்த்த ப்ரியா வணக்கம் சார் என்றாள்.

எங்க போறிங்க ?.

லஞ்ச் கொண்டு வரல சார் அதனால வீட்டுக்கு போறன். அதிருக்கட்டும் சார் ஸ்கூல் திறந்தது ஒருவாரம்மாச்சி இப்பத்தான் வர்றிங்க.

ஃபேமிலி டூர் முடிஞ்சி, சொந்த ஊர்க்கு போய்ட்டு நேத்து தான் வந்தோம்.

ஓஹே.

இவுங்க யார் டீச்சர் ?.

நியூ அப்பாய்மென்ட் சார். பேரு சுதா.

சுதா பக்கம் திரும்பி ஸ்டீபன் புன்னகைக்க சுதாவும் பதிலுக்கு புன்னகைத்தாள்.

சார் டுவல்த்துக்கு மேக்ஸ் எடுக்கறாரு என ப்ரியா அறிமுகப்படுத்த சுதா ஹலோ சார் என்றாள்.

சரி சார் டைம்மாகிடுச்சி போய்ட்டு வந்துடறோம் என்றாள் ப்ரியா. அவரும் தலையாட்டிவிட்டு தன் டூவீலரை எடுத்துக்கொண்டு சென்றார். ப்ரியா தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வர சுதா ஏறி அமர இருவரும் பள்ளியில் இருந்து வந்தனர். சுதா தன் வீட்டுக்கு வழிச்சொல்ல ப்ரியா வண்டியை விரட்டினாள். காந்தி நகரில் உள்ள தன் வீட்டு முன் வந்ததும் நீங்களும் வாங்க இப்படியே சாப்பிட்டுட்டு ஸ்கூல் போகலாம் என அழைக்க ப்ரியா மறுத்துவிட்டு ரிட்டன் நான் வந்து பிக்கப் பண்ணிக்கட்டுமா என கேட்டதும் சுதா உங்களுக்கு எதுக்கு சிரமம். நூன் ஸ்கூல்க்கு வந்துடறன் எனச்சொல்ல ப்ரியா கிளம்பினாள்.

வீட்டுக்குள் நுழைந்த சுதாவை கண்டதும் அவளது அம்மா காவேரி, ஏண்டீ காலையில தோசையாவது சுட்டு சாப்பிட்டுட்டு போக வேண்டியதுதானே.

குhலையில பசிக்கல அதனால அப்படியே போய்ட்டன் என்றபடி பாத்ரூம் சென்று திரும்பி வந்து டைனிங்டேபிள் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டபடியே கல்யாணம் எப்படிம்மா நடந்தது என கேட்டபடியே சாப்பிட்டாள். சுhப்பிட்டு முடித்ததும் ஃபேக்கை எடுத்துக்கொண்டு கிளம்ப எப்படிடீ போற என கேட்டார் காவேரி.

ஏதாவது ஆட்டோ புடிச்சி போய்க்கறம்மா எனச்சொல்லியபடி வெளியே மெயின் ரோட்டுக்கு வந்து ஆட்டோவுக்காக காத்திருந்தாள்.

அப்போது அவள் அருகே சர்ரென ஒரு டூவீலர் வந்து பிரேக் அடித்து நின்றார் ஆசியர் ஸ்டீபன். மேடம் இங்க என்ன நிக்கறிங்க ?

பக்கத்தல தான் சார் வீடு. ஸ்கூல்க்கு போகனும் ஆட்டோவுக்காக நிக்கறன்.

எதுக்கு ஆட்டோ நானும் ஸ்கூல் தான் போறன், எதுவும் சங்கடம்மில்லைன்னா என்னோட வாங்க.

பரவாயில்ல சார். ஆட்டோவுலயே வந்துடறன்.

நீங்க என்னை ஃப்ரண்டா நினைச்சி வாங்க என சொல்லியபடி ஸ்டீபன் சுதாவை பார்க்க அதை காதில் வாங்கியபடி ரோட்டில் காலியாக வந்த ஆட்டோவை சுதா பார்க்க அது அவள் அருகே வந்து நின்றது. ஸாரி சார் நான் ஆட்டோவுலயே வந்துடறன் என்றபடி ஆட்டோவில் அமர்ந்தபடி குழந்தை ஏசு ஸ்கூல் போங்க எனச்சொல்ல ஆட்டோ புறப்பட்டது. ஆட்டோவையே பார்த்தபடி நின்றிருந்தார் ஸ்டீபன்.

பள்ளிக்கு வந்து வகுப்புகளை நடத்தியவள் மாலை வீட்டுக்கு கிளம்பும்போது  ப்ரியாவிடம் மதியம் ஸ்டீபன் வண்டியில் வாங்க என அழைத்தது பற்றி சுதா சொன்னாள்.

வந்தன்னைக்கே உங்கிட்ட ஆரம்பிச்சிட்டாரா?.

என்ன மேடம் சொல்றிங்க என சந்தேகமாகவே கேட்டாள்.

அவர் ரொமான்ஸ் மன்னன். கூட வேலை பாக்கற டீச்சராச்சேன்னு பாக்கமாட்டாரு வழிவாரு. மேனேஜ்மென்ட் அவர் விவகாரத்த கண்டுக்கறதில்ல. சர்ச்ல அவருக்கு செல்வாக்குயிருக்கு. அரசியல் செல்வாக்கும் வச்சியிருக்காரு. அதனால அவர்க்கிட்ட ஒதுங்கியே இருக்காங்க. அவரோட மனைவியும் டீச்சர் தான் ரொம்ப நல்லவங்க. மதியம் உன்ன பாத்துட்டு நீ யாருன்னு தெரிஞ்சிக்க தான் பேச்சு கொடுத்தாரு. நீ மட்டும் அவரோட வண்டியில வந்திருந்த உன் இமேஜ் காலியாகியிருக்கும். அவர்கிட்ட ஜாக்கிரதையா இரு. உங்க ஏரியாவுக்கு பக்கத்து ஏரியால தான் அவரோட வீடு இருக்கு என்றாள்.

பாத்து ஒரு மணி நேரம் கூட ஆகல. அதுக்குள்ள உங்கள ட்ராப் பண்றன்னு கேட்கறது கொஞ்சம் கூட நல்லாயில்லைங்க. வந்த கோபத்துக்கு திட்டிட்டுயிருப்பன் வேணாம்ன்னு விட்டுட்டன்.

அவர் விவகாரத்தல கொஞ்சம் ஜாக்கிரதையா இரு என்றவள் வாங்க உங்கள வீட்ல ட்ராப் பண்ணிடறன். சரியென சுதா தலையாட்ட ஸ்கூட்டி சுதாவின் வீட்டுக்கு சென்றது. கதவை திறந்து வரவேற்ற காவேரியிடம் இவுங்க பேர் ப்ரியா கூட வேலை பாக்கறாங்கன்னு சொன்னயில்ல இவுங்க தான் என அறிமுகப்படுத்தினாள் சுதா.

வாம்மா என்றவர் இருங்க காபி போட்டு எடுத்து வர்றன் எனச்சொல்லிவிட்டு உள்ளே சென்றார். சுதா ப்ரியாவுக்கு வீட்டை சுற்றி காட்டினாள். காபியுடன் வந்த காவேரி, ப்ரியாவிடம் நீ எங்கம்மாயிருக்க என விசாரிக்க தொடங்கினார். எனக்கு சொந்தவூர் விழுப்புரம். இங்க கல்யாணம் பண்ணி தந்தாங்க. என் வீட்டுக்காரரும் ஆசிரியரா இருக்காரு. ஒரு பொண்ணு. லலிதான்னு பேரு நாமக்கல் போர்டிங் ஸ்கூல்ல எட்டாவது படிக்கறா என்றார்.

வேலைக்கு போய் சம்பாதிக்கனும்கிற நிலமையில இவயில்ல. வேலைக்கு போகனம்ன்னு அடம்பிடிச்சதால தான் இவுங்கப்பா அனுப்பிவைக்கறாரு. இவ சந்தோஷமா இருக்கனம்ன்னு நினைக்கறோம். அவ விதி அவளை சுத்தி விட்டு வேடிக்கை பாக்குது என கண் கலங்க ப்ரியாவுக்கு புரியவில்லை என்றாளும், சுதா வாழ்க்கை மகிழ்ச்சியா இல்லை என்பதை உணர்ந்தாள். காவேரி அழுவதை கண்டதும் என்னம்மா நீ என சுதா கேட்க தன் கண்களை முந்தானியால் துடைத்தபடி நான் ஒன்னும் அழுவலடியம்மா என்ற காவேரி கிச்சன் பக்கம் நடந்தார்.

ஏதோ ஞாபகம் வந்தவளாக திரும்பி, மதியம் சாப்பிட வந்த உங்கப்பா நீ சாப்பிட வந்தியான்னு கேட்டாரு. வந்து சாப்பிட்டுட்டு ஆட்டோவுல திரும்ப போய்ட்டான்னு சொன்னதும் என்னை திட்டி தீத்துட்டாரு. உனக்கு ஸ்கூட்டி வாங்க போயிருக்காரு என்ன கலர் வேணும்ன்னு உன்ன போன் பண்ணச்சொன்னாரு என காவேரி சொன்னபோது ப்ரியா ஜெர்க்காகிவிட்டாள்.

முன் சீட்டில் பாண்டியன், ரஞ்சித் அமர்ந்திருக்க, நடு சீட்டில் நான், பிரபு, ஸ்ரீதர் அமர்ந்திருந்தோம். பின் சீட்டில் மஞ்சு, கீதா, ரேவதி அமர்ந்திருந்த குவாலிஸ் கார் சென்னையை நோக்கி போய்க்கொண்டு இருந்தது.

ஏன் கீதா ஆஸ்பிட்டல் சேர்த்து பத்து நாளாகியிருக்கு. அத ஆபிஸ்ல யார்க்கிட்டயும் சொல்லாம மறைச்சிட்டு கொஞ்சம் பணம் வேணும்ன்னு கேட்கற. பிரபு மட்டும் பிரச்சனை என்னன்னு சொல்லலன்னா இது தெரிஞ்சே இருக்காது. பணம் இல்லன்னா கேட்க வேண்டியது தானே. எதுக்கு அலையனும் என கேட்டதற்க்கு அமைதியாகவே வந்தது.

நேத்து காலையில எங்க மாமியார் வீட்டுக்கு போய்ட்டு வந்தப்ப அவுங்க தான் கீதா அம்மா பத்தி சொன்னாங்க. நான் கீதாக்கிட்ட கேட்கலாம்ன்னு இருந்தன் மறந்தே போய்ட்டன். அது வெறும் முப்பதாயிரம் கேட்குதுன்னு சொன்னப்ப தான் கோபம் வந்துச்சி. 2 லட்ச ரூபாய் செலவாகும்ன்னு ஹாஸ்பிட்டல்ல சொன்னாங்களாம். நிறைய இடத்தல பணம் கேட்டுயிருக்கு. கடைசி வரை நம்மக்கிட்ட கேட்கவேயில்ல முப்பதாயிரம் தாங்கன்னு கேட்டதும் தான் கோபம் வந்துடுச்சி அதான் திட்டிட்டன் என்றான் பிரபு.

ஸாரி சார் என்ற கீதா அவ்ளோ பணம் என்னை நம்பி தருவீங்களான்னு சந்தேகத்தல கேட்காம விட்டுட்டன் சார் என்றாள்.

ஐந்து வருஷமா வேலை பாக்கற. இன்னமும் கூட வேலை பாக்கறவங்கள புரிஞ்சிக்கலயே என்றதும் அமைதியாக இருந்தாள்.

ஏதாவது வேலை பாக்கனும்மேன்னு நானும், பிரபுவும் கல்யாண பத்திரிக்கை, போஸ்டர் விளம்பரம் டிசைன் பண்ணி தர்றவங்களா பத்துக்கு பத்து அறையில ஒரு கம்ப்யூட்டர வச்சிக்கிட்டு வேலை செய்ய ஆரம்பிச்சோம். மாசத்தல பாதி நாள் வெட்டியா உட்கார்ந்துயிருப்போம். பாண்டியன் வந்தப்பிறகு பாண்டியனோட கைவண்ணம் தான் பெருசா வளர முடிஞ்சது. பெரிய அளவுல ஆபிஸ் திறக்கலாம்ன்னு முடிவு செய்தப்ப நானும் பிரபுவும் பணம் போட்டோம், பாண்டியனால பணம் போட முடியலன்னாலும் பாண்டியனும் பாட்னர் மாதிரி தான். பாண்டியன் மட்டுமல்ல இந்த கம்பெனியில யார் வந்து வேலைக்கு சேர்ந்து உழைச்சாலும் அவுங்களோட நல்லது கெட்டதுல எல்லாருக்கும் பங்குயிருக்கும்ன்னு சொன்னோம். அதுப்பிறகாறம் தான் நடந்துக்கிட்டு வர்றோம். இத கம்பெனியா பதிவு செய்ததால நான் எம்.டி, இவன் மேனேஜர், மஞ்சுக்கு அக்கவுண்டன்ட்ன்னு பதவியிருக்கே தவிர அதுயெல்லாம் சும்மா. என்னைப்பொருத்தவரை எல்லாரும்மே ஒன்னு தான். இன்னைக்கு எங்களை தவிர 5 பேர் இருக்கிங்க. அதுவே 70 பேர் வேலை செய்யற இடமா மாறனாலும் இப்படித்தான் நடந்துப்போம்.

பாஸ் அப்போ நாங்களும் பாட்னர்களா பாஸ்.

இருக்க இடம் கொடுத்தா மடத்த புடிக்கனும்ன்னு நினைக்காதடா என பாண்டியன் சவுண்ட் விட்டதும் அமைதியானான். 

மருத்துவ செலவுக்குன்னு தர்ற பணம் கடன் தான். சம்பளத்தல புடிச்சிக்குவோம் என பிரபு சொன்னதும் என்னயிருந்தாலும் நீங்க கணக்குல சரியா இருக்கிங்க சார் என்றான் ஸ்ரீதர்.

சும்மா தருதுன்னு வச்சிக்க நீ மாசத்துக்கு இரண்டு முறை வண்டியில இருந்து கீழ விழுந்து ஆஸ்பிட்டல் பில் கட்டுன்னுவ அதனால தான் கடிவாளம் போட்டு வச்சியிருக்காரு சார் என மஞ்சு சொன்னதும் ஈஈ என சிரித்தான். 

டாப்பிக்கை மாத்துவோம் என நினைத்து என்ன ஸ்ரீதர் எப்போ கல்யாணம்.

யாருக்கு பாஸ்.

உனக்குதான்யா

நான் குழந்தை பாஸ்.

டேய் உனக்கு காலாகாலத்துல கல்யாணம்மாகியிருந்தா இன்னேறம் நாலு புள்ளைக்கு அப்பனாயிருப்ப. நீ குழந்தையா என பிரபு காலாய்த்ததும் அனைவரும் சிரித்துவிட்டோம்.



உங்களுக்கு எப்பவும் கிண்டல் தான் சார்.

கேட்டதுக்கு பதில் சொல்லுடா என பாண்டியன் சொன்னதும் தங்கச்சியிருக்கு பாஸ். அதுக்கப்பறம் தான் எனக்கு என்றான்.

உன்னாலே உன்னாலே என திடீரென கார் ஸ்பீக்கரில் பாட்டு அலறியது. என்னவென பார்த்தாள் ரஞ்சித் தான் பாட்டு போட்டுயிருந்தான்.

எங்கடா அமைதியா வர்றானேன்னு பாத்தன். ஆரம்பிச்சிட்டியா ?.

ஃபோர் அடிக்குதுப்பா.

சவுண்ட் கம்பியா வச்சி கேளு.

தலையாட்டினான். அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை இராமச்சந்திரா மருத்துவமனை முன் நின்றிருந்தோம். கீதா அனைவரையும் வார்டுக்கு அழைத்து சென்றாள். வெளியே கீதாவின் அண்ணனும், அப்பாவும் நின்றிருந்தார்கள். எங்களைப்பார்த்து வாங்க என அழைத்தனர்.

மஞ்சு, ரேவதி, ரஞ்சித்தை தன் அம்மா இருந்த அறைக்குள் கீதா அழைத்து சென்றாள்.

எப்படி இருக்காங்க என கீதாவின் அப்பாவிடம் நாங்கள் கேட்டதும், உள்ள தான் இருக்கா போய் பாருங்க என்றார். அவுங்க பாத்துட்டு வரட்டும் எனச்சொல்லிவிட்டு ஆரம்பத்தலயே பாக்க வேண்டியது தானே.

நம்ம ஊர்லயே பாத்துக்கிட்டு தான் இருந்தோம், சரியா வைத்தியம் பாக்காததால வந்த விணை சார். எல்லாம் விதி என்றார் விரக்தியான குரலில்.

ஆஸ்பிட்டல்ல சேர்த்திங்கயில்ல பணம்மில்லைன்னா கீதாக்கிட்ட சொல்லி ஆபிஸ்ல கேட்க சொல்ல வேண்டியதானே என பிரபு கேட்டதும் சொந்தக்காரங்ககிட்ட கேட்டுயிருந்தன் தர்றன்னு சொன்னாங்க கடைசியல தரல அதான் என்றார் தயங்கி தயங்கி.

இப்ப எவ்ளோ கட்டனும் என பாண்டியன் கேட்டதும் ஒரு லட்ச ரூபாய் கட்டியாச்சி. நாளைக்கு ஆப்ரேசன் பண்ண டேட் குறிச்சியிருக்காங்க மீதிய டிஸ்சார்ஜ் பண்ணறப்ப கட்டனா போதும்ன்னு சொன்னாங்க என்றான் கீதாவின் அண்ணன்.

உள்ளே போனவர்கள் வெளியே வர நாங்கள் உள்ளே சென்றோம். வாங்க என கிதாவின் அம்மா அழைத்தார். கையில் வைத்திருந்த பொருட்களை பெட் அருகே வைத்துவிட்டு உடம்பு எப்படியிருக்கும்மா என ஸ்ரீதர் தான் கேட்டான்.

நாளைக்கு ஆப்ரேஷன்னு சொல்லியிருக்காங்;க தம்பி.

கவலைப்படற அளவுக்கு ஒன்னும்மில்ல. சுகர், பிபி அதிகமாயிருக்கும் அதனால முடியாம போயிருக்கும். நாளைக்கு சின்ன ஆப்ரேஷன் தான் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும் என்றான் பிரபு. பின் பொதுவாக பேசிக்கொண்டு இருந்தோம்.

மஞ்சு என அழைத்ததும் அனைவரும் உள்ளே வந்தனர். தலையாட்டியதும் உள்ளே வந்த மஞ்சு தன் ஃபேக்கில் இருந்த 500 ரூபாய் கட்டுகள் இரண்டை எடுத்து கீதாவிடம் தந்தாள்.

என்னத்துக்குங்க இவ்ளோ பணம் என கீதாவின் அம்மா பதற. ஓன்னும்மில்லம்மா மெடிக்கல் செலவுக்குண்ணு கடன் கேட்டா அதான் சார் தரச்சொன்னாரு என மஞ்சு சொன்னதும் அனைவரும் அமைதியாக நின்றிருந்தனர்.

வெளியே வந்த நாங்கள் கீதாவின் அண்ணன், அப்பாவிடம் பணம் வேணும்ன்னா கேளுங்க தந்து விடறோம். காசுயில்லன்னு அலையாதிங்க எனச்சொல்லிவிட்டு புறப்பட்டோம்.

கார் வரை வந்த கீதாவிடம் அம்மா வீட்டுக்கு அழைச்சி வந்ததுக்கப்பறம் ஆபிஸ் வந்தா போதும் கீதா எனச்சொல்லிவிட்டு கிளம்பினோம்.

கார் மெயின் ரோட்டுக்கு வந்ததும் பாஸ் என அழைத்தான் ஸ்ரீதர்.

ம்.

இங்க எக்ஸ்பிரஸ் மால், ஸ்பென்சர் பிளாசான்னு ஏதோ இருக்காம் பாஸ். அங்க போய்ட்டு போகலாம் பாஸ்.

அவன் பக்கம் திரும்பி அங்க எதுக்கு என கேட்டதும் ஈஈஈ என இளித்தான். பின்னால் உட்கார்ந்திருந்த ரேவதி சைட் அடிக்கவா இருக்கும் சார் எனச்சொல்ல அதெல்லாம் இல்ல சார் என பதறி மறுத்தான்.

டிரைவர் சார். எல்.ஐ.சி பக்கம் போங்க என்றதும் அவர் சரியென தலையாட்டினார். எல்.ஐ.சி தாண்டி ஸ்பென்ஸர் வந்ததும் காரை நிறுத்தி இறங்கிக்க ஸ்ரீதர், நீங்களும் போறதாயிருந்தா போங்க என மஞ்சு, ரேவதியிடம் சொன்னதும் நீங்க பாஸ் என கேட்டவனிடம், கொஞ்சம் ஒர்க் இருக்கு போய்ட்டு வந்துடறோம். நாங்க வர்றதுக்கு இரண்டு மணி நேரமாகும் அதுவரைக்கும் ஏதாவது வாங்கறதாயிருந்தா வாங்கிக்கிட்டு வெயிட் பண்ணுங்க எனச்சொன்னதும் மூவரும் இறங்கினர். நானும் போய்ட்டு வர்றன் டாடி என்றான் ரஞ்சித்.

கொஞ்சம் யோசித்துவிட்டு ரேவதி இவனை பாத்துக்க என பொறுப்பை ஒப்படைத்ததோடு ஏதாவது கேட்டான்னா வாங்கித்தா, ஐஸ்கிரிம் மட்டும் அதிகம் வாங்கி தராத எனச்சொல்லிவிட்டு சேட்டை பண்ணாம ஒழுங்கா அவுங்களோட இரு என சொல்லிவிட்டு கிளம்பினோம்.

எங்கடா போறோம் என பிரபு தான் கேட்டான்.

டிஸ்ப்ளே பத்தி நேத்து பேசனும்மில்ல. அதான் சோனி, சாம்சங் கம்பெனியில போய் என்ன ரேட் ஆகுதுன்னு விசாரிச்சிட்டு வருவோம் என்றதும் தலையாட்டினான். இரண்டு ஷோ ரூம்களை தேடிப்பிடித்து விசாரித்துவிட்டு, மாடல்களை பார்த்துவிட்டு கிளம்பினோம். வரும்போதே ஸ்ரீதர்க்கு போன் செய்து நாங்க வந்துக்கிட்டு இருக்கோம் வெளியில வந்து ஆப்போசிட்ல நில்லுங்க என்றேன். சரியாக 2.15க்கு ஸ்பென்சர் அருகே பஸ் ஸ்டாப்பில் ரேவதி, மஞ்சு, ஸ்ரீதர் நின்றிருந்தனர். கார் அவர்களை நோக்கி சென்றுக்கொண்டு இருந்தபோதே சார் ரஞ்சித்த காணோம் என்ற பாண்டியனின் குரலை கேட்டு அதிர்ச்சியாகி பார்த்தபோது அவர்கள் அருகில் அவன் இல்லை என்பதை என் கண் உறுதி செய்ததும் ஆயிரம் மடங்கு அதிர்ந்து போனேன்.

தொடரும்……………..

புதன், ஜூலை 03, 2013

தலாக் என்கிற முத்தலாக்........



இஸ்லாம் மார்கத்தில் மிக மோசமான ஒரு பழக்கம் தலாக். குணவன் - மனைவிக்குள் விவகாரத்து செய்ய வேண்டும் என்றால் முத்தலாக் சொல்லிவிட்டு பிரிந்துவிடலாம். முத்தலாக் சொல்வதற்கான நடைமுறை அதிகம். ஆனால் தற்போது பெண் பித்து, பண பித்து பிடித்த சிலர் செல்போன் வழியாக, எஸ்.எம்.எஸ் வழியாக, கடிதம் மூலமாக தலாக் சொல்லிவிடுகின்றனர். இதுப்பற்றி அவ்வப்போது தகவல்கள் வெளிவந்தள்ளன.

தலாக் சொல்வதற்க்கு வழி முறைகள் உள்ளது. ஜமாத்தில் பெரியவர்கள் முன்பு கூடி கணவன் - மனைவி இருவரிடமும் பிரிவுக்கான அவர்களது கருத்தையும் கேட்பார்கள். அவர்களுக்கு நல் புத்தி கூறி சேர்ந்து வாழ வைக்க முயற்சிப்பார்கள். அப்படியும் அவர்கள் சேர்ந்து வாழ முடியவில்லை என்றால் கடைசி வாய்ப்பாக ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று மனைவியை பார்த்து கணவன் தலாக் சொல்ல வேண்டும். இப்படி மூன்று மாதங்கள் தலாக் சொன்னால் அவர்களுக்குள் திருமண பந்தம் முறிவு ஏற்பட்டுவிடும். இதனை முத்தலாக் என்கிறார்கள். இதனைத்தான் சில இஸ்லாமிய ஆண்கள் ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்லி திருமண உறவை முறித்துக்கொள்கின்றனர். மார்க்கப்படி இது செல்லாது என்றாலும் ஜமாத்தில் பிற்போக்கு ஆண்களின் ஆதிக்கம் இருப்பதாலும், பணம் விளையாடுவதால் வெளிநாட்டில் உட்கார்ந்துக்கொண்டு இமெயில் மூலமாக சொல்லப்படும் தலாக்கள் ஏற்;றுக்கொள்ளப்படுகிறது என்கிறார்கள்.

தலாக் சொல்லிவிட்டால் அந்த பெண்ணுக்கும் - கணவனுக்குமான பந்தம் அந்த நிமிடத்தில் இருந்து முற்றிலும் அறுந்தது. இனி அவர்கள் சேர முடியாது. ஒரு வேளை சேர நினைத்தால் அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு பின் அவன் தலாக் சொன்னப்பின்னால் முதல் கணவன் மீண்டும் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்கிறது. தலாக் செய்யப்பட்ட பெண்ணுக்கு ஜுவனாம்சம் கிடையாது. திருமணத்தின் போது பெண் வீட்டார் தரும் மெஹார் என்ற பணம் மட்டும் திருப்பி தரப்படும். மெஹார் பணம் என்பது குறைவானது. ஜீவனாம்சம் தரமாட்டார்கள் என்பது அயோக்கியத்தனம். தலாக் முறையை பாகிஸ்தான், இந்தோனிசியா போன்ற நாடுகளில் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதால் இந்த இஸ்லாமிய நாடுகள் தடை செய்துள்ளன என்கிறார்கள்.

இந்தியா போன்ற நாடுகள் அதை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கின்றன. காரணம், சிறுபான்மை நலம் என்கிறார்கள் எந்த அரசியல் கட்சியினர் வந்தாலும். மோசமான ஒரு சட்டத்துக்கு எதற்காக அரசாங்கம் வாக்கலாத்து வாங்க வேண்டும்.

அதுமட்டுமல்ல இஸ்லாமிய சட்டப்படி பெண்களுக்கும் தலாக் சொல்லும் உரிமை தரப்பட்டள்ளது. ஆனால் பிற்போக்கு இஸ்லாமியர்கள் அந்த உரிமையை தருவதில்லை. அதேபோல் முதல் மனைவி சம்மந்தம் இல்லாமல், கணவன் பலதார மணம் புரிந்துக்கொள்ளலாம் என்பது இஸ்லாமிய நடைமுறை. இதை மனைவியானவர் எதிர்க்ககூடாது.

இந்திய நாடு என்பது மதசார்ப்பற்ற நாடு என்கிறார்கள். அப்போது சட்டங்கள் அனைவருக்கும் ஒரேமாதிரியாக தானே இருக்க வேண்டும். அதுயென்ன இஸ்லாமிய ஆண்களுக்கு மட்டும் சட்டங்கள் வேறு மாதிரி இருப்பது. இந்து சமூகத்திலோ, கிருத்துவ சமூகத்திலோ முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டுவது திருமணம் செய்துக்கொண்டால் முதல் மனைவி நினைத்தால் கம்பி என்னவைக்கப்படுவான். இதை முஸ்லிம் சமூக ஆண்களும் இந்த சட்டத்துக்குள் வர வேண்டும்மல்லவா ஏன் வருவதில்லை. அதுமட்டுமல்ல, விவாகரத்து செய்தால் சட்டப்படி கணவன் ஜீவனாம்சம் தர வேண்டும். இஸ்லாமிய சட்டம் இதை மறுக்கிறது.

இந்த தலாக் முறையை முதல்வர் ஜெவின் தோழியும், முன்னால் வாக்ப் போர்டு தலைவியுமான பதர் சையித் கடுமையாக எதிர்த்து பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். வரவேற்க வேண்டியவிஷயம். இதற்காக எந்த பெண்கள் இயக்கமும் அவருக்கு துணை நின்றதாக தெரியவில்லை.

முஸ்லிம் தனி நபர் சட்டவாரியமும், பிற்போக்கு தன கருத்துக்களை கொண்டவர்கள் பெண்களுக்கு எதிராக செய்யும் இது போன்ற மனித உரிமை மீறல்களை தடுக்க வேண்டும். இஸ்லாத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கிடைக்க வேண்டும்.