சனி, செப்டம்பர் 19, 2015

அரசியல் அகதி வை.கோ.





ஈழப்போர் முடிந்தபின் ஈழப்பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான அகதிகள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள படகு முதலாளிகளை பிடித்து தங்கள் உயிரை காப்பாற்றச்சொல்லி கேட்டார்கள். பணம் வேண்டும் என படகு முதலாளிகள் கேட்க ஆயிரக்கணக்கான ரூபாய்களை கொட்டி தரதயாராக இருந்தனர். 

உயிரை காப்பாற்றுவாரா, சொன்னயிடத்தில் கொண்டும்போய் சேர்ப்பாரா என ஆராயவில்லை. காரணம், படகோட்டியின் வாய் வார்த்தைகள் அவர்களை கட்டிப்போட்டது. அவர் சொல்வதை அப்படியே அந்த அகதிகளை நம்பவைத்தது. படகோட்டியின் வார்த்தைகளை நம்பி பலர் போட்டி போட்டுக்கொண்டு அந்த படகில் ஏறினர். கடல் பயணம் மேற்க்கொள்ளும்போது தான் தெரிந்தது அந்த படகின் முதலாளிக்கு படகை செலுத்த தெரியவில்லை என்பது. அதுமட்டும்மல்ல கப்பலில் பெரிய ஓட்டை விழவும் படகோட்டியே காரணமாகம் என்பதும் தெரியவந்தது. இருந்தும் தன் வாய்வார்த்தையால் உங்களை நான் கொண்டும்போய் சேர்ப்பேன் என்றார். லட்சக்கணக்கில் பணம் தந்தும் தம் உயிரை இந்த படகின் முதலாளி பறித்துவிடுவான் போல் உள்ளதே என பயந்த பலர் படகின் அருகில் பயணம் செய்துக்கொண்டுயிருந்த கப்பல் முதலாளியிடம் பேசி அதில் தொத்திக்கொண்டு உயிர் பிழைத்தார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் ஓட்டையை அடைத்துவிடுவார், கொஞ்ச தூரம் போனால் படகை சரியாக ஓட்டிவிடுவார் என நம்பிக்கையில் சிலர் படகிலேயே இருந்தனர். அப்படி இருந்தவர்களும் நம்பிக்கை மெல்ல மெல்ல குறைய இதை உணர்ந்த படகு முதலாளி, அந்த கப்பல் பழைய கப்பல், நம் படகு நல்ல தரமான படகு, நியாயமான கூலி வாங்குகிறேன், அதோடு, படகில் பெட்ரோல் உள்ளது என நம்பிக்கை குறையாமல் பேசினார். அதுபோன்ற பேச்சை நம்பிதான் படகில் ஏறினோம். இப்போதும் அப்படியே பேசுகிறாறே என சிலருக்கும் பயம் வந்து என்ன செய்வது என தெரியாமல் தவித்தனர். 

இந்த கதையை அப்படியே ஈழ ஆதரவு கட்சியான மதிமுகவிற்கு பொருத்தி பார்த்துக்கொள்ளுங்கள். 

( படகு மதிமுக, படகோட்டி வை.கோ, அகதிகள் மதிமுக தொண்டர்கள். ) 

வை.கோபால்சாமி என்கிற வை.கோ திமுகவில் இருந்து நீக்கப்பட்டதும், 93ல் தமிழகத்தை ஆண்ட அதிமுக ஆதரவுடன் பெரும் ஆராவரத்துடன் துவங்கிய கட்சி மதிமுக. திமுகவில் இருந்த பல பலம்மிருக்க மா.செக்கள் வை.கோ பின்னால் சென்றார்கள். போன வேகத்தில் பலர் திரும்பி ஓடிவந்தார்கள். அப்போதே வை.கோ உஷாராகியிருக்க வேண்டும். ஆனால் அதை அவர் செய்யவில்லை.

96 தேர்தலில் ஒரு கட்சியுடன் கூட்டணி, 98 நாடாளமன்ற தேர்தலில் ஒரு கூட்டணி, 99 நாடாளமன்ற தேர்தலில் ஒரு கூட்டணி, 2001 சட்டமன்ற தேர்தலில் ஒரு கட்சியுடன் கூட்டணி, 2004 நாடாளமன்ற தேர்தலில் ஒரு கூட்டணி, 2006 சட்டமன்ற தேர்தலில் ஒரு கூட்டணி, 2009 நாடளாமன்ற தேர்தலில் ஒரு கூட்டணி, 2011 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை, 2014 நாடாளமன்ற தேர்தலில் ஒரு கூட்டணி. அழைக்கிறார்கள் என இப்படி மாறி மாறி கூட்டணி வைத்த வை.கோவை யாரும் குற்றம்சொல்லவில்லை. தேர்தல் அரசியலாக பார்த்தார்கள். ஆனால், 2006 சட்டமன்ற தேர்தலின் போது, திமுக கூட்டணியில் இருந்த வை.கோ யாரும் எதிர்பாராத நிலையில் (அவரது தாயர் கூட எதிர்பார்க்கவில்லை ) அதிமுகவுடன் கூட்டணி வைத்தபோது, அவரது செல்வாக்கு சுத்தமாக மக்கள் மத்தியில் சரிந்து சராசரி அரசியல்வாதியை விட மிக மோசமானவராக பார்க்கப்பட்டார். 

அந்த கரையை துடைக்க வை.கோவின் அடிப்பொடிகள் ஊடகம் மூலமாகவும், இணையதளம் மூலமாக எத்தனை பிரச்சாரம் செய்தும் எடுபடவில்லை என்பதே எதார்த்தம். ஆனாலும் இன்றளவும் அதை புரிந்துக்கொள்ளாமல் இருக்கிறார் வை.கோ.

 ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி என்ன செய்வார். நிறுவனத்துக்கு லாபம் வரும் வழிகளை ஆராய்வார். அப்படித்தான் ஒரு அரசியல் கட்சி தலைவரும் இருக்கவேண்டும். அரசியல் கட்சி தேர்தலில் பங்குகொண்டு சேர்மன், எம்.எல்.ஏ, எம்.பி, வாரியம் என ஏதாவது ஒரு பதவியில் கட்சியினரை உட்காரவைக்க வேண்டும். உட்கார்ந்தால் தான் அவன் சம்பாதிப்பான், சம்பாதித்தால் தான் அவன் போஸ்டர் ஓட்டுவான், கொடிபிடிப்பான், பேனர் வைப்பான், ஆட்களை அழைத்து வருவான். தொண்டனுக்கு பதவியே கிடைக்காமல் கட்சியை நடத்த செய்தால் இப்போது நடப்பது போன்று தான் தொண்டன் தாவி குதித்து தப்பி ஓடிவிடுவான்.

 
ஒரு கட்சிக்கு கொள்கை என்பது இருக்க வேண்டும். ஆனால் தேர்தல்களம் என வரும்போது, கொள்கைகளோடு முரண்டுபட்டுதான் ஆக வேண்டும். இல்லையேல் யாருடனும் கூட்டணி வைக்கமுடியாது, வெற்றி பெற முடியாது, கட்சியை நடத்த முடியாது. இது தெரிந்தவர் தான் வை.கோ. ஆனால் அவரால் செயல்பட முடியவில்லை. காரணம் கட்சியை நடத்த தெரியவில்லை என்பதை விட வெகுவாக உணர்ச்சி வசப்படுகிறார். உணர்ச்சி வசத்தால் எடுக்கப்படும் எந்த முடிவும் சரியாகயிருக்காது.

முக்கியமாக அரசியல் தலைவர்கள் உணர்ச்சி படுவது கூடாது. கட்சி தலைவருக்கு என்றும்மே அழகல்ல, கூடவேகூடாது. ஆனால் வை.கோ மிக அதிகமான உணர்சிவசப்படும் தலைவர். அரசியலில் உணர்ச்சி வசப்படுபவர்கள் காணாமலே போவார்கள் தமிழகத்தில் அப்படி காணாமல் போனவர்களை உதாரணமாக காட்ட பல அரசியல் பிரபலங்கள் உள்ளார்கள். அந்த பட்டியலில் வை.கோ சேர்ந்துவிட்டார் என்பது அதிர்ச்சியாகவுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் அரசியலில் ஒரு அகதியாக வலம் வருகிறார் வை.கோ. 

காலம் கடந்துவிடவில்லை. சரியான முடிவு எடுப்பதற்கான நேரம் உள்ளது. அதை வை.கோ தற்கால அரசியலோடு பொருத்தி முடிவு எடுக்க வேண்டும்.

2 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்லும் பலவற்றில் எனக்கு உடன்பாடுதான் .வைகோ மாவு விற்கப் போனால் காற்று அடிக்கிறது உப்பு விற்க போனால் மழை அடிக்கிறது .கட்சியில் இருந்து பலரும் கட்சி மாற தொடங்கிவிட்டார்கள் .பார்ப்போம் வைகோ என்ன செய்யப் போகின்றார் என்று இப்போது இருக்கும் தலைவர்களில் ஓரளவு நல்லவர் இவர்தான்

    பதிலளிநீக்கு