ஞாயிறு, செப்டம்பர் 27, 2015

ஸ்டாலின் பயணம் வெற்றி பெறுமா ?.



தனது ஐடி டீம் ஐடியாப்படி நமக்கு நாமே என மக்களுடன் நேரடியாக கலந்துரையாடி வருகிறார் ஸ்டாலின். தமிழகத்துக்கு இது புதியது.

மேற்கத்திய நாடுகளில் இது பழைய பார்மூலா. எம்.பியாக, அதிபராக விரும்புகிறவர்கள் சுமார் ஓராண்டுக்கு முன்பாகவே பிரச்சார பயணத்தை தொடங்கிவிடுவார்கள். மக்களோடு பேசுவார்கள், கருத்துக்களை கேட்பார்கள். எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களுடன் ஒரே மேடையில் மக்கள் முன் தோன்றி கேள்விக்கு பதில் சொல்வது சர்வசாதாரணம். வளர்ந்து வரும் டெக்னாலஜிகளை பயன்படுத்தி குறிப்பாக இணையத்தை பிரச்சார வாகனமாக பயன்டுத்தி, வெற்றி பெற முடியும் என்பதை செய்து காட்டியவர் அமெரிக்க அதிபர் ஓபாமா. அதை அப்படியே காப்பியடித்து இந்தியாவில் நடைமுறைப்படுத்தி பிரதமர் பதவியை பிடித்தவர் மோடி. அதைத்தான் இன்று தமிழக அரசியல் கட்சிகள் காப்பியடிக்கின்றன. பாமக போஸ்டர் ஒட்டுகிறது. இருந்தும் அதன் பணிகள் வன்னியர் என்ற சமுதாயத்தின் வட்டத்ததை தாண்டி செல்லவில்லை.

ஓபாமா, மோடி ஸ்டைலில் ஸ்டாலின் முழு மூச்சாக களம்மிறங்கி இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பல தரப்பினருடன் கருத்துக்களை கேட்கிறார், ஆட்டோ பயணம், ஸ்கூட்டி ஓட்டுதல், சைக்கிள் ஓட்டுதல் என சாமானியனாக தன்னை காட்டிக்கொள்வதை ஒரு பக்கம் கிண்டல் அடிக்கப்பட்டாலும் மற்றொரு புறம் மக்களை ஆச்சர்யத்தோடு பார்க்க வைக்கிறது.


துணை முதல்வராக இருக்கும் போதே சுய உதவிக்குழு பெண்களின் மனதில் சிம்மாசனம் போட முயன்றவர் அது ஓரளவு தான் ஓர்க் அவுட் ஆனது. சட்டமன்ற, நாடாளமன்ற தேர்தல் தோல்விக்கு பின் கட்சியின் அடிமட்டத்தினருடன் நெருக்கம் காட்டிய ஸ்டாலின். இப்போது அனைத்து தர மக்களுடன் நெருக்கம் காட்ட துவங்கியுள்ளார்.

இதனை சில அரசியல் தலைவர்கள், நடுநிலையா பேசறோம் என்பவர்கள் அரசியலுக்காக ஸ்டாலின் இதை செய்கிறார் என கிண்டலடிக்கிறார்கள். அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள், தங்களால் முடியாததை, ஜெவால் செய்ய முடியாததை ஸ்டாலின் செய்கிறார் அதனால் கிண்டல் செய்கிறார்கள். ஸ்டாலின் செய்வது முழுக்க முழுக்க அரசியல் தான். அதில் மாற்றுக்கருத்துயில்லை.

இதில் இன்னொன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். இனி மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும். கடந்த காலங்களைப்போல ஏசி போட்ட கார்க்குள் அமர்ந்தபடி சென்றால் மக்கள் துரத்திவிடுவார்கள். நடுத்தர, படித்த மக்கள் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். தங்கள் மனதில் பட்டதை வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர், பிளாக் போன்றவற்றில் எழுதி தங்களது கருத்தை வெறிப்படுத்தி விடுவார்கள். இதனால் அரசியல்வாதிகள் தங்களை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். மாறவில்லையென்றால் மாற்றம் தருபவர் என நம்புவர் பக்கம் போய்விடுவார்கள்.

மாற்றத்தை நோக்கி போகும் ஸ்டாலினின் இந்த பயணம் வெற்றி பெறுமா?.

திமுகவை தாண்டி பல தரப்பினரின் கேள்வி, எதிர்பார்ப்பு இதுதான். வெற்றியா, தோல்வியா என்பது ஒருபுறம்மிருக்கட்டும். ஸ்டாலின் கட்சியில் மட்டும்மல்ல மக்கள் மத்தியிலும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளார். இனி கலைஞரே கூட ஸ்டாலினை தலைமை பதவிக்கு கொண்டு வரவில்லையென்றால் மக்கள் ஏச்சுக்கு ஆளாகும் அளவுக்கு பல தரப்பட்ட மக்களுடன் தன்னை இணைத்துக்கொண்டு முதல்வருக்கு தகுதியானவர் என்ற பெயரை பெறுகிறார். அந்த விதத்தில் இது வெற்றி.

மக்களிடம் இந்த பயணம் நம்பிக்கையை தந்துள்ளதா ?.

மக்களுடன் பேசும்போது, அவர்களின் கோரிக்கைகள், குறைகளை கேட்கிறார். இந்த குறைகள் எல்லா அரசியல் தலைவர்களும் கேட்பது தான். ஆனால், இதனை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். மக்களின் அடிப்படை தேவை, பிரச்சனைகளை புரிந்துக்கொள்ள வேண்டும். 30 ரூபாய் இருந்தால் இந்தியாவில் ஒரு மனிதன் நிம்மதியாக உண்டு உறங்கிவிடலாம் என கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு அறிக்கை மத்தியரசால் வெளியிடப்பட்டது. அது எந்தளவுக்கு அபத்தம் என்பதை இந்த பயணம் புரிந்துக்கொள்ள உதவியிருக்கும். தம்மிடம் கேட்ட கோரிக்கைகளை, பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்திவிட்டால் போதும். நம்பிக்கையை தந்துள்ளதா என கேட்டால் தேர்தல் முடிவுகள் தான் அதை காட்டும்.


இது ஸ்டாலின்க்கு தேர்தலில் வெற்றி கிட்டுமா ?.

இது அதிபர் தேர்தல் கிடையாது. மக்கள் முதல்வரை நேரடியாக ஓட்டுப்போட்டு தேர்வு செய்து வைக்க. எம்.எல்.ஏ என்ற பிரதிநிதிகள் மூலம் தேர்வு செய்வது. தன் பயணத்தின் மூலம் மக்களின் நம்பிக்கையை போல மக்களின் நம்பிக்கை பெற்ற வேட்பாளரை நிறுத்த வேண்டும். தொகுதியில் சீனியர், ஜீனியர் என பார்க்காமல் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவரை தேர்வு செய்ய வேண்டும். பணம் உள்ள வேட்பாளர் வேண்டும்மென பார்க்காமல், பிரச்சனையில்லாத ஆளா?, மக்கள் நம்பிக்கை பெற்றவரா?, இளைஞரா? எம்.எல்.ஏ பதவிக்கு தகுதியானவரா? என பார்த்து சீட் தந்தால் வெற்றிக்கு மிக அருகில் செல்லலாம்.

1 கருத்து: