வியாழன், நவம்பர் 15, 2012

தாத்தாவை போல பேரன். காதலோ காதல்.




ஹீனாவின் காதலைப்பற்றி எழுதிய வங்க தேச பத்திரிக்கை ஆசிரியர் கைது செய்யப்பட்டதில் மீண்டும் பரபரப்பாகியிருக்கிறது பாகிஸ்தானின் மேல்மட்ட காதல் விவகாரம்.
பாகிஸ்தான் வெளியுறத்துறை அதிபர் ஹீனா ரப்பானி. 35 வயது அழகு பெண்மணி. இரண்டு குழந்தைகளுக்கு தாய். பொருளாதார நிபுணி. 1977ல் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரத்தில் பிறந்த மங்கை. பஞ்சாப் மேல்தட்டு பெண்களுக்கே உள்ள பேரழகு. பஞ்சாப் மாநிலத்தின் முன்னால் கவர்னர் குலாம் முஸ்தபா கார் மகள் தான் இவர். 

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் 2002ல் பாராளமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2008ல் பொருளாதாரத்துறையின் துணை அமைச்சராக முதலில் நியமிக்கப்பட்டார். 2010ல் நிதித்துறையின் இணை அமைச்சராக மாற்றப்பட்டார். 2011ல் வெளியுறவுத்துறையின் இணை அமைச்சராக இருந்தவர் தற்போது அந்த துறையின் அமைச்சராக உயர்ந்து நாடுகளுக்கிடையே கண்டம் விட்டு கண்டம் பறந்து வருகிறார்.

இவர் செல்லும் நாடுகளில் எல்லாம் இவரின் பணிகள் பற்றி கொஞ்சமாக பேசிவிட்டு இவரது அழகை பற்றி வர்ணித்து பக்கங்களை நிரப்புகிறார்கள். இவரின் பேச்சை விட இவரின் அழகை தான் மீடியாக்கள் கவர் செய்கின்றன. இவரின் வயதும், அழகும் தான் செய்தியாகிறது.   

இந்த சிறிய வயதில் அதுவும் மிக முக்கிய துறையான வெளியுறவுத்துறை என்ற பதவி உயர்வுகளுக்கு பின்னால் ஒரு மெல்லிய காதல் கதை ஓடுவதாக பாகிஸ்தான் பரபரத்துக்கிடக்கிறது. ஹீனாவும் அவரது காதலரும் முத்தம் தந்துக்கொண்டு இருக்கும் ரொமான்ஸ் படங்கள் இணையத்தில் பரவியுள்ளன. ஹீனா காதலருடன் நிரந்தரமாக இணைய கணவரை விவாகரத்து செய்யவுள்ளனார் என்கிறது மீடியா உலகம். காதல்யில்லை என ஹீனா ஹீனஸ்வரத்தில் முழங்குகிறார். மீடியாக்கள் சொல்வது பொய் என ஹீனா கணவர் பெரோஸ் குல்கார் உதவிக்கு வருகிறார். 



ஆனால் ஒரு தரப்பு மட்டும் அமைதியாக இருக்கிறது. அது ஹீனாவின் காதலர் என சுட்டிக்காட்டப்படும் பிலால். ‘மக்கள் தலைவி’ என புகழப்பட்டவரும் எதிரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னால் ஜனாதிபதி பெனாசீர்பூட்டோ – இன்னால் ஜனாதிபதி சர்தாரி தம்பதியின் மகன் பிலால். தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் இந்த பிலால். 1988ல் பிறந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் மாடன் அரசியல் படித்த இளைஞன். திருமணம்மாகாத பாகிஸ்தான் பெண்களின் கனவு நாயாகனாக வலம் வர தகுதி படைத்த பேரழகன். ஹீனாவை விட 11 வயது இளையவர். இன்னமும் இவர் ஹீனா மீதான காதலை மறுக்கவில்லை. 

பிலால் தன் தாத்தாவின் வரலாற்றை படித்திருப்பார். அல்லது அவரின் அணுக்கள் இவருக்கும் வந்திருக்கும். அதனால் தான் அவரைப்போலவே ‘வாழ முற்படுகிறார்’. அரசியல் அறிந்தவர்களுக்கு தெரியும் பிலாலின் தாத்தா பூட்டோ என்பது. 

கிழக்கு பாகிஸ்தானில் 1960களில் வசித்த மிகப்பெரிய கோடீஸ்வரர் அப்துல் அஹத். தன் தொழில்க்கு வெளியுறவுத்துறை அமைச்சரின் ‘ஆசி’ இருந்தால் பிற நாட்டு தொழிலதிபர்களின், அதிகாரிகளின் நட்பு கிடைக்கும் என ஆராய்ந்து அப்போது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பூட்டோவை அடிக்கடி சந்திப்பார். ஒரு சந்திப்பின் போது தன் இல்லத்துக்கு விருந்துக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். பூட்டோ அப்துல்லின் மாபெரும் மாளிகைக்கு சென்றார். அங்கு தான் அந்த அழகியை கண்டார். பேரழகி. ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்திருந்தாலும் வெளிநாட்டில் படித்து, வளர்ந்த அவருக்கு ‘அந்நிய மோகம்’ அதிகமாகவே இருந்தது. 

அப்துல் அஹத் அந்த அழகியை அழைத்தார் இது என் மனைவி ஹஸ்னா என அறிமுகப்படுத்தினார். பூட்டோவின் காதல் மனது குழப்பமானது. இந்த அழகு சிலை இவனின் மனைவியா என தவித்தபோது எதிரில் இருப்பவரின் மனதை நன்கறிந்தவனே நல்ல வர்த்தகன். அதன்படி பூட்டோவின் மனதை அறிந்த வர்த்தகர் அப்துல் தன் மனைவியிடம் இவர் நம் முக்கிய விருந்தாளி இவருக்கு சிறப்பான விருந்து தா என சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

பூட்டோவின் பார்வையில் அவர் மீதான காதல் ஏக்கத்தை நன்கு அறிந்த ஹஸ்னா தன்னையே விருந்தாக்கினார். தான் இரு பெண்களின் கணவன் என்பதை பூட்டோ மறந்தார். தான் மற்றொருவனின் மனைவி என்பதை ஹசீனா மறந்தார். காதல் இருவருக்குள்ளும் பொங்கியது. கிழக்கு பாகிஸ்தான் பக்கம் எப்போதாவது வந்தவர் இப்போது கிழக்கு பாகிஸ்தானில் ஹஸ்னாவின் இல்லம்மே என் உலகம் என மாறிப்போனார். பாய் விரித்து, அதில் மல்லிப்பூ தூவி, தாகத்துக்கு பால் சொம்பு வரை வைத்த அப்துல்க்கு அதற்கு பிரிதிபலனாக தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொண்டார். கோடிகளை சம்பாதித்தார்.

பூட்டோ அமைச்சர் பதவியை துறந்து அரசியல் கட்சி தொடங்கினார். அதுவரை பூட்டோவை சுற்றி சுற்றி வந்த அப்துல் வேறு அதிகாரத்தை தேடிப்போய்விட்டார். அங்கும் தன் மனைவியை பாகடை காயக்கா முயல. ஹஸ்னா – அப்துல் திருமணம் தலாக்கில் முடிந்தது. எதிர்க்கட்சி தலைவராக இருந்த “பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்“ பூட்டோவை காலமும், மக்களும் அவரை பிரதமராக்கினர். அப்போது, கிழக்கு பாகிஸ்தான் மக்கள் தனி நாடு வேண்டும் என கேட்டு போராடினர். 1971ல் பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் என்ற நாட்டை உருவாக்கி தந்தார் இந்திராகாந்தி.

எதிர்கட்சி தலைவராக இருந்தாலும், பிரதமராக மாறினாலும் தன் காதலி ஹஸ்னாவை மறக்க முடியாமல் தவித்தார் பூட்டோ. நாடு பிளவுக்கு பின் இந்த ஏக்கம் அதிகரித்தது. 

ஹஸ்னா இருந்தது வங்க தேசத்தில். பூட்டோ பாகிஸ்தான் பிரதமர். ஹஸ்னா பூட்டோவை நினைத்து உருகினார். பூட்டோ வாடினார் வதங்கினார். பூட்டோ அலுவல் ரீதியாக இந்தியா வந்தார். இந்திராகாந்தியை சந்தித்தார். தன் காதலியை பாகிஸ்தானுக்கு அனுப்பிவையுங்கள் என கோரிக்கை விடுத்தார். இந்திரா வங்கதேச பிரதமரிடம் பேசினார். அடுத்த சில தினங்களில் ஹஸ்னா பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இருந்தார். இரண்டாவது மனைவி நசரேத் கராச்சி, முதல் மனைவி அமீர்பேகம் லார்க்கானா என்ற இடத்தில் தங்கவைத்திருந்தார். ஹஸ்னாவை முறைப்படி திருமணம் செய்துக்கொண்டார் பூட்டோ. நசரேத் எதிர்த்தார், தற்கொலை முயற்சி மேற்க்கொண்டார் பிரதமரின் மனைவி என்கிற பதவி உனக்கு, என் இதயம் ஹஸ்னாவுக்கு என்றார். 

1977 பொது தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானாலும் பூட்டோவுக்கு எதிராக எதிர்கட்சிகள் பிரச்சாரம் செய்தன. உடனே ஹஸ்னாவை கோடிகளில் பணம், தங்கத்தை தந்து லண்டனில் பாதுகாப்பாக தங்கவைத்தார். இராணுவப்புரட்சியின் மூலம் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. இராணுவ ஆட்சியில் சிறையில் இருந்த பூட்டோ விரும்பி கேட்டது ஒரே ஒருமுறை நான் ஹஸ்னாவை பார்க்க வேண்டும் என்பதே. நசரேத் குடும்பம் அதை முற்றிலும் நிராகரித்தது. பாகிஸ்தான் வந்தால் அவர் விசாரணைக்கு ஆளாவார் என்றது இராணுவ அரசு. தன் காதல் தேவதையை காண முடியாத ஏக்கத்தில் இருந்தவரை தூக்கிலிட்டு கொன்றது இராணுவம். இதோடு நிறுத்துவோம். 



தாத்தாவை பேல பேரன் உள்ளார். என்ன பிலால் தன்னை விட 11 வயது மூத்தவரை திருமணம் செய்துக்கொள்வது தான் இடிக்கிறது. சரி என்னச்செய்ய அதிகாரம், பணம் இருக்கும் இடத்தில் இது சகஜம். 

புதன், நவம்பர் 14, 2012

சாதியும் வெண்டக்காயும்.




தருமபுரி மாவட்டத்தில் கொல்லன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த வன்னிய சமூகத்தை சேர்ந்த ஒருவரின் மகளை, அந்த கிராமத்துக்கு மிக அருகில் உள்ள தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரின் மகன் காதலித்து வீட்டுக்கு தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்துக்கொண்டனர். தன் மகளை கடத்தி திருமணம் செய்துக்கொண்டான் என அந்த பெண்ணின் பெற்றோர், ஊராசர் சிலர் காவல்நிலையத்தில் புகார் தந்தபோது, பையன் சார்பாக சிலர் காவல்நிலையத்துக்கு வந்துள்ளனர். இரு தரப்புக்கும் காரசாரமாக பேசிக்கொள்ள அப்போது அங்கு பணியில் இருந்த எஸ்.ஐ, பொண்ண ஒழுங்கா வளக்க தெரியல புகார் தரவந்துட்டான் மானம் போச்சின்னா போய் சாவுடா என ஏச அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார் பெண்ணின் அப்பா. 

இதில் கோபமான வன்னிய சமூக இளைஞர்கள் இறந்து போனவரின் உடலோடு சாலை மறியல் செய்துள்ளனர். காவல்துறை கண்டுக்கொள்ளாததால் தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து சில வீடுகளை தாக்கி தீ வைத்துள்ளார்கள் வன்னிய இளைஞர்கள். அதன்பின் காவல்துறை வருகை தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்கு பாதுகாப்பு. வன்னிய மக்கள் வசிக்கும் பகுதியில் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், குடும்பதலைவர்களை கைது செய்ய தேடுதல் வேட்டையென காவலர்கள் நுழைய பதட்ட பரபரப்பில் உள்ளது தருமபுரியின் பென்னாகரம் பகுதியே. அங்கு என்ன நடக்கிறது என தெரியாமலே பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும், வன்னிய தரப்பு மக்களுக்கு எதிர்ப்பாகவும் களம்மிறக்கி கருத்துக்களை பதிவிட்டு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றி வருகிறார்கள். 

முதலில் சாதி ஒழிப்பையும் காதலையும் போட்டு குழப்பிக்கொள்வதை நிறுத்துங்கள். காதலித்து சாதி மாறி திருமணம் செய்துக்கொண்டால் சாதி ஒழிந்து விடும் என எண்ணுவது முட்டால் தனமான கற்பனை. 



காதலித்து திருமணம் செய்துக்கொள்பவர்கள் ஆண் தலித்தாக, பெண் பிராமின் வகுப்பை சார்ந்தவராக இருந்தால் திருமணத்துக்கு பின் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தாழ்த்தப்பட்ட சமூக குழந்தையாக வளர்கிறது. ஆண் முதலியராக இருந்து பெண் தலித், வன்னியர், செட்டியராக ஏதோ ஒன்றாக இருந்தாலும் அவர்களது குழந்தை முதலியராக பதிவு செய்யப்படுகிறது. அல்லது எந்த சாதியில் சலுகைகள் கிடைக்கிறதோ அந்த சாதியை பதிவிடுகிறார்கள். பிறப்பு சான்றிதழிலும், பள்ளி சேர்ப்பிலும் சாதி குறிக்காமல் இருப்பதில்லை. (சாதி குறிப்பிட தேவையில்லை என சட்டம் கூறுகிறது) ஆக காதல் திருமணங்களால் எந்த நிலையிலும் சாதி அழிக்கப்படுவதில்லை. சாதியை ஏதோ ஒரு வடிவில் உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள் காதல் திருமணம் செய்தவர்களும். 

அதுமட்டுமல்ல மேல்சாதி என அழைத்துக்கொள்ளும் முதலியார், நாயுடு, வன்னியர், தேவர், பிராமின் இப்படி எந்த சாதியினராக இருந்தாலும் இந்த சாதிகளுக்குள் உள்ள இளம் தலைமுறையினர் காதலித்தால் அவர்களது பெற்றோர் சாதி மாறி திருமண பந்தம் வைத்துக்கொள்ள முற்படுவதில்லை. இந்து மதத்தில் மட்டுமல்ல இஸ்லாமிய, கிருத்துவ மதத்திலும் இந்த வழக்கம் உள்ளது. தற்போது அதிகரித்து வருகிறது. சாதி பிரச்சனைகளை காதல் திருமணங்களால் மட்டும் முடித்து வைக்க முடியாது. 

காரணம், வர்ணாசிரம் என ஒன்றை காட்டி சாதி பிரிக்கப்பட்டது முதல் நம் உடலில் உள்ள அணுக்களில் பதியமிட்டு வைத்துவிட்டார்கள். தலைமுறைகள் மாறினாலும் அந்த அணுக்களில் எந்த மாற்றமும் ஏற்படாமல் அப்படியே நிலவி வருகிறது. தந்தை பெரியார் தமிழகத்தில் சாதியை எதிர்த்து பலப்பல போராட்டங்களை தன் வாழ்நாள் முழுக்க நடத்தி தமிழகத்தில் சாதியை வெளிப்படையாக பேசும் தன்மையை வெகுவாக குறைத்தார். ஆனால் அரசியல் கட்சிகள் சாதியை அழியவிடாமல் பார்த்துக்கொண்டார்கள்.

தேர்தலில் நிற்க ‘சீட்’ பெற சாதியை முக்கிய காரணியாக, தகுதியாக ஒவ்வொரு கட்சியும் முன் வைக்கிறது. எம்.எல்.ஏ, எம்.பி முதல் அடிமட்ட தொண்டன் வரை ஒவ்வொரு கட்சியிலும் இரண்டு சாதிக்குள் பிரச்சனை என வந்தால் தாங்கள் பிறந்த சாதிக்கே முக்கியத்துவம் தருகிறார்கள். வெளியுலகத்துக்கு சாதிகளே இல்லை என பேசுவது. அரசியல்வாதிகள் மட்டுமல்ல சாதியில்லை என போராடுபவர்கள் பலர் தங்கள் குடும்பத்தில், உறவு வட்டாரங்களில் இப்படி சாதி மாறி காதலிக்கும் தங்களது பிள்ளைகளை மிரட்டுவது இல்லையேல் கவுரவ கொலை செய்கிறார்கள். 



ஆக அரசியல் கட்சிகள், காதல் திருமணம் செய்துக்கொண்டவர்கள், காதலிப்பவர்கள், சாதி மறுப்பாளர்கள், முற்போக்கு சிந்தனை பேசுபவர்கள், பொதுமக்கள் என எல்லோர் தரப்பிலும் சா’தீ’ உள்ளது. இதனை சாதி சங்கங்கள், இயங்கங்கள், சாதிக்கென கட்சி வைத்துள்ளவர்கள் கன கட்சிதமாக அந்த தீயை அணைய விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். 

சாதி அடையாளத்தை தோளில் கிடக்கும் துண்டை போல் வைத்திருக்க வேண்டும். வேண்டாம் என்னும் போது அதை தூக்கி எறியும் மனம் வேண்டும். தங்களது பிள்ளைகளுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை நான் எந்த சாதியையும் சார்ந்தவனில்லை என குறிப்பிட்டு வளர்க்கும் மனம் இருந்தால் எந்த சாதி தலைவனும் பிரிவை ஏற்படுத்த முடியாது. இரண்டாயிரம் ஆண்டாக உணவு முதல் உடுப்பு வரை மனிதனை பிரித்து வைத்துள்ளதோடு, உயிர்களை பலி வாங்கும் இந்த சாதி தீயை ஒரே நூற்றாண்டில் அணைத்து விடலாம்.