அறிந்துக்கொள்வோம்!
தினம் ஒரு வரலாறு!
ஏப்ரல் – 4. – கறுப்பு காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள்.
ஐநா
சபை இந்த நாளை உலக நிலக்கண்ணிவெடி விழிப்புணர்வு நாளாக அறிவித்துள்ளது.
நிலக்கண்ணி வெடிகள் பற்றி நாம் அறியாததல்ல. இலங்கையின் உள்நாட்டுப்போர்,
இந்தியாவின் காஷ்மீர் போர், வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் உட்பட
உலகின் பல நாடுகளில் எதிரிகளை கொல்ல நிலக்கண்ணி வெடிகளை நிலத்தில் புதைத்து
வைத்தனர். இதில் எதிரிகளை விட அப்பாவி மக்களே அதிகளவில் இறந்துள்ளனர்
என்பது குறிப்பிடதக்கது. மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காக
நிலக்கண்ணிவெடிகளை அழிக்க அதுப்பற்றிய விழிப்புணர்வு நாளாக இந்த நாளை
அறிவித்துள்ளது ஐநா.
இதே
நாளில் தான், சக மனிதர்களுக்குள் வேறுபாடு எதற்கு, நாங்களும் உரிமையுடன்
வாழவேண்டும், எங்கள் மக்களுக்கு அமைதியான வாழ்க்கை வேண்டும் என கேட்டு
போராடிய கறுப்பின தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட நாள் இது.
கறுப்பு காந்தி படுகொலை
1929
ஜனவரி 15ந்தேதி அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா மாகாண நகரில் பிறந்தவர்
மைக்கல் கிங். இவரது தந்தை மைக்கல், தாயார் அல்பெர்டா. இவருக்கு இரண்டு
தங்கைகள், ஒரு சகோதரன். இவரது தந்தை படித்தவர், கடவுளின் பெயரால் மக்களை
ஏமாற்றுவதை விரும்பாதவர், அதோடு, வெள்ளை நிறம் கொண்ட மனிதர்களால், கறுப்பின
மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு, அடிமையை விட மோசமாக நடத்தப்படுவதை
எதிர்த்து குரல் கொடுத்து வந்தவர் மைக்கல்.
1934ல்
ஜெர்மன் நகரில் உலகளாவிய ஒரு பொது மாநாட்டுக்கு சென்றவர், அங்கு அறிமுகமான
சீர்த்திருத்தவாதி மார்டின் லூதர் மீது விருப்பம் கொண்டு, ஊருக்கு
வந்ததும் தனது பெயரை மார்டின் லூதர் கிங் என மாற்றிக்கொண்டார். தன் மகன்
பெயரையும் மார்டின் லூதர் கிங் 2 என மாற்றி பதிவு செய்தார். இந்த மார்டின்
லூதர் கிங் 2 தான் கறுப்பின மக்களின் உரிமைகளை பெற்று தந்த சமூக
தலைவராவார்.
படிப்பில்
சுட்டியாக விளங்கிய மார்டின் லூதர்கிங் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர்
அங்கிருந்து நேரடியாக கல்லூரி படிப்புக்கு சென்றார். பிறப்பில்
கிருஸ்த்துவரான மார்டின் லூதர்கிங், காலப்போக்கில் சமய நம்பிக்கை
அதிகரித்து சமய கல்வி கற்று 25 வயதில் பாதிரியாரானார். கொரெட்டா ஸ்காட்
கிங் என்கிற இளம்பெண்ணை 1953ல் திருமணம் செய்துக்கொண்டு, 4 குழந்தைகளுடன்
தான் வாழ்ந்தார். வாழ்க்கை நமக்கு மட்டும் இனிமையாக இருந்தால் போதாது, நம்
இன மக்களுக்கும் இந்த இனிமையான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என எண்ணினார்.
தனது
இன மக்கள் சொந்த நாட்டுக்குள் உள்ள வெள்ளை நிறம் கொண்ட மக்களால்
நசுக்கப்படுவதை கண்டு கொதித்துக்கொண்டு இருந்தார். மக்கள் மட்டும்மல்ல
அமெரிக்க அரசாங்கமும் நசுக்கியது. கறுப்பின மக்களுக்கு குறைந்த பட்ச
உரிமைகள் கூட வழங்கவில்லை. இதனை எதிர்த்து இந்திய விடுதலைக்கு அமைதியான
வழியில் காந்தி போராடியதை போல, நம் உரிமைக்காக அமைதி வழியில் போராட
வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தார் மார்டின் லூதர்கிங். இவர் பாதிரியராக
இருந்ததால் மக்கள் அவர் சொல்வதை கேட்டனர். காலையில் தேவாலயத்தில்
மதக்கோட்பாடுகள் பற்றி பேசும் அதே மார்டின் லூதர்கிங், மாலையில் நடைபெறும்
பொதுக்கூட்டத்தில் அரசியல் பேசினார். நம் கைகளில் பூட்டப்பட்ட அடிமைவிலங்கை
நம்மால் உடைக்க முடியும். அப்படி செய்தால் அது வன்முறை. நம் கைகளில் அடிமை
விலங்கை பூட்டியவர்களே அதை உடைக்க வேண்டும். அதுதான் நிரந்த வெற்றி.
அதுவரை நாம் போராட வேண்டும் என்றார்.
உலகத்துக்கே
ஜனநாயகத்தை கற்று தருகிறோம் என பீற்றிக்கொள்ளும் அமெரிக்கா மார்டின்
லூதர்கிங் மற்றும் மற்ற கறுப்பின தலைவர்களை அடக்கி ஒடுக்க தொடங்கியது.
இதில் சற்றும் தளராமல் பின் வாங்காமல் நின்றவர் கிங். அவரை கைது செய்து
சிறையிலும் அடைத்தது. ஆனால், அமைதி வழி போராட்டம்மே என் பக்கம்
நிற்பவர்களின் போராட்டம் என அறிவித்து போராடினார். உலக அமைதிக்கான நோபல்
பரிசு 1964ல் அவருக்கு வழங்கப்பட்டது.
கறுப்பின
மக்களை இனியும் பூட்டி வைக்க முடியாது என்பதை உணர்ந்த அமெரிக்காவின்
வெள்ளையர்களின் அரசாங்கம், 1965ல் கறுப்பின மக்களுக்கு தேர்தலில்
வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. பின்பு, நிற வேறுபாடு நாட்டில்
இருக்ககூடாது என்கிற மனித உரிமை சட்டத்தினை நிறைவேற்றி நாட்டில் அனைவரும்
சமம் என்றது. கிங் பேசியது போல, அடிமை விலங்கை பூட்டிய வெள்ளையர்களும்,
அதன் அதிகாரத்தில் இருந்த அரசாங்கமும் அந்த விலங்கை உடைத்தது.
அதன்பின்,
கறுப்பின மக்கள், ஆட்சி, அதிகாரங்களில் மெல்ல மெல்ல வர தொடங்கினர். ( இந்த
சட்டம் அமலுக்கு வந்த 45 ஆண்டுகளுக்கு பின்பே அமெரிக்காவின் கறுப்பினத்தை
சேர்ந்தவர் நாட்டின் அதிபராக ஒபாமா வர முடிந்தது). இந்த சாதனையை செய்த
மார்டின் லூதர்கிங் 2, உன் அருகில் இருப்பவர்களையும், உன்னை சுற்றி
இருப்பவர்களையும் உன்னைப்போல் நிறவேறுபாடு பாராமல் அன்பு செலுத்து
எனப்பேசுவார். அரசியல் இயக்கத்திலும் அதன்படி செயல்பட, வெள்ளை இனத்தவர்களை
இணைத்துக்கொண்டு போராடினார்.
கிங்கின்
வெற்றியை சகித்துக்கொள்ள முடியாத வெள்ளை நிறத்தவர்கள் பெரும்பாலானவர்கள்
கிங்கை எதிர்த்து வந்தனர். அவரது உயிருக்கு குறிவைத்தது தீவிரவாதம் கொண்ட
வெள்ளை நிறத்தவர்கள் குழு.
1968
ஏப்ரல் 4ந்தேதி வாசிங்டன் மாநகரத்தில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்துக்கு
தயாராகி கொண்டு இருந்தவர், அவர் தங்கியிருந்த லூரைன் என்கிற தங்கும்
விடுதிக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கிங்கை பார்க்க காத்திருந்தனர்.
அந்த மக்களை பார்க்க பால்கானிக்கு வந்தவர், தன் மக்களை பார்த்து மகிழ்சியாக
கையசைத்துக்கொண்டு இருந்தார். அப்போதுதான் அது நடந்தது. கூட்டத்தில்
இருந்த வெள்ளைக்காரன் ஒருவன் மார்டின் லூதர்கிங்கை, துப்பாக்கியால்
சுட்டான். அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்டும் அந்த கறுப்பு வைரம் மறைந்தது. உலகமே
கண்ணீர்விட்டது.
என்னுடைய
கனவுகள் என்கிற பெயரில் 1963ல் வாசிங்டன்னில் பெரும் மக்கள் திரளில்
மார்டின் லூதர்கிங் பேசிய பேச்சு, மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.
அது பேசப்பட்டு 50 ஆண்டுகளை கடந்த பின்பும் கறுப்பின மக்கள் இப்போதும் அந்த
உரையை வாசித்தும், கேட்டும் சிலாகிக்கின்றனர்.