சனி, ஏப்ரல் 30, 2011

திமுகவை அழிக்க நினைக்கும் ராகுல் - காங்கிரஸ்.


ஸ்பெக்ட்ராமில் கூட்டு விளையாட்டு. திமுகவின் எதிர்காலம் ( http://anbanavargal.blogspot.com/2010/12/blog-post_20.html) என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 20ந்தேதி எழுதிய பதிவை மீண்டும் வாசித்துப்பாருங்கள் அன்று நான் சொன்னது இன்று அப்படியே நடந்து வருகிறது. 

திமுகவை அழிக்க காங்கிரஸ் செய்யும் சதியே ஸ்பெக்ட்ராம் விவகாரம் என்று தொிவித்திருந்தேன். அது படிப்படியாக வெளிப்படையாக நடை முறைக்கு வந்துக்கொண்டிருக்கிறது. சமீபமாக பத்திாிக்கைகளில் நம் எழுதியதை ஒட்டி கட்டுரை எழுதி வருகிறார்கள். 

காங்கிரஸ் ஏன் திமுகவை அழிக்க துடிக்க வேண்டும்?

தமிழகத்தில் காங்கிரஸ்சின் ஆட்சி கனவை முற்றிலும் கலைத்தது திமுக. தமிழகம் மட்டுமல்ல வேறு பல மாநிலங்களுக்கு திமுக ஆட்சி பிடித்தது தான் முன்னோடி. திமுகவை பார்த்து கட்சி தொடங்கிய பல பிற மாநிலத்தில் காங்கிரஸ்க்கு தண்ணீ காட்டி முடக்கினார்கள். காலப்போக்கில் காங்கிரஸ் அதை முறியடித்து கொஞ்சம் கொஞ்சம் மேலே வந்தது. இருந்தும் கட்டெறும்பு கதை தான் அதன் நிலை. 

மற்ற மாநிலங்களில் இழந்த ஆட்சியை பிடிக்க முடிந்த காங்கிரஸ்சால் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. அதற்க்கு காரணம் பொியார், அண்ணா ஊட்டிய வெறி, துரோக காங்கிரஸ்சை கருவறுக்க வேண்டும் என்ற கொள்கையை நாம் தொடர்ந்து  மனதில் இருப்பதால் தான். அதை திமுகவில் இருந்து கட்சி ஆரம்பித்த எம்.ஜீ.ஆரும் சாியாக புாிந்துக்கொண்டு காங்கிரஸ்சை டம்மியாக்கும் பணியில் ஈடுபட்டு ஒரளவு சாதித்தார். 

காலப்போக்கில் காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சிபொறுப்புக்கு வர முடியாது என உணர்ந்து காங்கிரஸார் திராவிட கட்சிகளின் முதுகில் சவாாி செய்தனர். இந்தியாவில் அரை காலி டாப்பாகி போன காங்கிரஸ்சை   200ல் மத்தியில் காங்கிரஸ் கட்சி திமுகவின் ஆதரவுடன் ஆட்சி பொறுப்புக்கு வந்தது. காங்கிரஸ் தலைவரான சோனியாகாந்தி திமுக தலைவர்களை விழுந்து விழுந்து கவனித்தார். கூழை கும்பிடு போட்டார். நம்மவுர் அதிமுக பிரமுகர்களை விட அதிகமாக குழைந்தார்.

வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்த சீமான் வீட்டு சிட்டெறும்பு வாழையாடி வாழை வாாிசு பதவியை பெற இந்தியாவுக்கு வந்து காங்கிரஸ் எம்.பியானார். கட்சியின் பொது செயலாளர் ஆனார். ( அம்மா தலைவர், பையன் பொதுசெயலாளர். ). கட்சியை மாற்றி அமைக்க போகிறேன். இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தர போகிறேன் என மாநிலம் தோறும் இளைஞர் காங்கிரஸ்க்கு நிர்வாகிகளை நியமித்தார். 

புது செருப்பு கடிக்கும் என கிராமங்களில் ஒரு பழமொழியுண்டு. அதற்க்கேற்ப பொறுப்புக்கு வந்தவர்கள் அடுத்து நாங்கள் தான் ஆட்சியமைக்க போகிறோம் என கனவு கண்டார்கள் ராகுல் கால் வைத்த இடம்மெல்லாம் மண்ணை கவ்வினார்கள் காங்கிரஸார். கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலயே என தோல்வியை முடி மறைத்த ராசா வீட்டு கன்னுக்குட்டியின் பார்வை தமிழக தேர்தல் களத்தின் மீது திரும்பியது. 

அதற்க்கு முன்பே ராகுல் காங்கிரஸ் தமிழகத்தில் திமுகவை ஒழிக்கும் அசைண்மென்ட்டை தொடங்கியிருந்தது. இந்த டீமின் தலைவர் காங்கிரஸ் கட்சியின் ராகுல், உறுப்பினர்களாக அம்பானி சகோதரர்கள், மாறன் சகோதரர்கள் நியமிக்கப்பட்டார்கள். 

ஸ்பெக்ட்ராம் விவகாரம் ஊதப்பட்டு, கிளறப்பட்டது, ஸ்பெக்ட்ராம் விவகாரம் திமுகவை நோக்கியே தள்ளப்பட்டது. அதற்க்கு வட இந்திய, பர்ப்பன மீடியாக்கள் நிரம்ப உதவின, உதவி வருகின்ற. டாக்மெண்ட்ஸ், ஆடியோ போன்றவை காங்கிரஸ் அரசின் உயர்மட்ட ஆதரவுடன் படிப்படியாக லீக் செய்யப்பட்டன. ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் காங்கிரஸ்சின் 60 சதவித பங்குகள் முழுமையாக மூடி மறைக்கப்பட்டன. 

திமுக அமைச்சர், கனிமொழி எம்.பி போன்றவர்கள் அடைந்த லாபம் மட்டும் காட்டப்பட்டன. ஒட்டு மொத்த ஊழல்க்கும் ராசா மட்டுமே காரணம் என ஜோடிக்கப்பட்டது. அதற்க்கு மத்தியரசின் கையில் உள்ள புலனாய்வு துறைகள், மத்தியரசின் அரசு துறைகள் நிரம்ப பணி செய்தன. திமுக அமைச்சர் மற்றும் காங்கிரஸ்க்கு எதிர்ப்பாகயிருந்த சில தொழிலதிபர்கள் கைது செய்ய வைத்தனர். 

சி.பி.ஐயை குற்றப்பத்திாிக்கை தாக்கல் செய்ய கால தாமதம் செய்ய வைத்து குழந்தையை புச்சாண்டியை காட்டி மிரட்டுவதை போல திமுகவை சி.பி.ஐ என்ற புதத்தை காட்டி மிரட்டி தமிழக தேர்தல் களத்தில் வாக்கு வங்கியே இல்லாத காங்கிரஸ் கட்சி 63 சீட்களை பெற்றது. அடுத்து தாயாளுஅம்மாளை கைது செய்வோம் எனச்சொல்லி ஆட்சியில் பங்கு என்ற அஸ்திரத்தை ஏவுகிறது. 

காங்கிரஸ் நம்பிக்கை துரோக கட்சி. தான் வாழ யாரையும் அழிக்கும் குரோதமனம் கொண்டவர்கள் காங்கிரஸ்காரர்கள் என திமுக தலைவருக்கு பலர் பல வழியில் எடுத்து சொன்னார்கள் அதிகார, பண போதை திமுகவின் மேல் மட்டத்தை யோசிக்கவிடாமல் செய்துவிட்டது. சொக்க தங்கத்தை நம்பி ஏமாந்து போனார்கள். இன்று எங்கள் முன்னோர்க்கு நான் சளைத்தவளில்லை என்பதை சோனியா காட்டி விட்டார்.

ஸ்பெக்ட்ராம்மை கிளறி கிளறி தமிழகத்தில் ஆட்சி கனவில் உள்ளது ராகுல் காங்கிரஸ். அதுவும் ஆட்சி பொறுப்பை விட்டு அகற்றிய திமுக மூலமே ஆட்சியில் அமர காய் நகர்த்துக்கிறது. வரும் காலங்களில் திமுகவை ஒழித்து விட்டால் அதிமுகவை ஒழிப்பது சுலபம். அதன் பின் தனிக்காட்டு ராஜா நாம் தான் என ராகுல் நினைக்கிறார். 

அது எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம் தமிழகத்தில் ராகுல் மண்ணுக்குள் போனாலும் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது. திமுகவை மிரட்டி வேண்டுமானால் பின் கதவு வழியாக ஆட்சிக்கு வரலாம். ( நான் ராகுல் வாழ்க்கையை பத்தி இங்க சொல்லலைங்கோ.......) தனித்து நின்றோ, காங்கிரஸ் தலைமையில் மாபெரும் கூட்டணி அமைத்தேயொல்லாம் ஆட்சிக்கு வர முடியாது. திமுக, அதிமுக என்ற கட்சிகள் தமிழகத்தில் இருக்கும் வரை அந்த கட்சியை சார்ந்தவர்கள் மட்டுமே முதல்வர்களாக அமர முடியும்.

சனி, ஏப்ரல் 23, 2011

உலகின் முதல் நிர்வாண அலுவலகத்திற்க்கு ஆள் தேவையாம்.



காமத்திற்க்கு என தனியாக காமகூ+த்திரா என்ற புத்தகத்தை உருவாக்கிய இந்தியாவில் தான் பெண்களின் சேலை ஒரு பக்கம் ஒதுங்கியிருந்தாலும், டைட்டான ஜீன்ஸ், டிசர்ட் போட்டு போகும் இளம்பெண்ணை கண்டாலும் நம்மவூர் ஆண்களின் கண் ஒதுங்கி தெரியும் பாகத்தை வெரித்து வெரித்து பார்க்கும். நாம் இயற்றி தந்த காமசூத்ராவை படித்த வெளிநாட்டினர் ஜட்டி- பிராவுடன் தெருவில் நடப்பார்கள், வனவிலங்குகளை காக்க வேண்டும் என்ற பிரச்சாரமா? வெஜிடேரியன் மட்டுமே உண்ண வேண்டும் என்ற விளக்கமா? மக்களை ஈர்க்க நிர்வாண ஊர்வலம் நடத்துவார்கள் அங்குள்ள பொது நல அமைப்பினர். மக்கள் அதை வேடிக்கை பார்த்துவிட்டு போய்விடுவார்கள். அதெல்லாம் அங்கு சகஜம். 

அப்படிப்பட்ட நாட்டில் நிர்வாண அலுவலகம் திறந்து அதில் பணிபுரிய ஆள் வேண்டும் என கேட்டு விளம்பரம் தந்துள்ளார்கள். அது அவர்களுக்கு ஆச்சர்யம்மோ, அதிசயமோயில்லை. நமக்கு ஆச்சர்யம் மற்றும் அதிசம். இந்த மாதிரி மேட்டர்ன்னா நாம தான் ஜொள்விட்டுக்கிட்டே படிப்போமே. அதனால தான் என்னால முடிஞ்ச அளவுக்கு கொஞ்சமா தகவல்களை தேடி தந்துயிருக்கன். படிங்க, ரசிங்க.

பிரான்ஸ் நாட்டில் உள்ளது நியூடு ஹவுஸ் என்ற அலுவலம். சாப்ட்வேர்கள் உருவாக்குவதற்க்கு கோடிங் எழுதுவது, இணைய தளம் உருவாக்கி தருவது, அதை பராமரிப்பது போன்ற பணிகளை இந்த கம்பெனி செய்கிறது. இந்த கம்பெனி 3 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பிக்கப்பட்ட போதே எழுதப்பட்ட விதி, முதலாளி முதல் பணியாளர்கள், ஆபிஸ்பாய் உட்பட எல்லாருமே நிர்வாணமாக தான் இருக்க வேண்டும். அலுவலக வாசல் வரை உடை அணிந்து வரலாம். அலுவலகத்திற்க்குள் வலது காலை எடுத்து வைக்கும் முன் நிர்வாணமாகி விட வேண்டும். உடலில் பிட் அளவுக்கு கூட துணி இருக்க கூடாது. வேலை பார்க்கும் போது, டீ சாப்பிடும் போது, மதியம் உணவு உண்ணும் போது, குழு மீட்டிங் நடக்கும் போது என எல்லா நேரத்திலும் முழு நிர்வாணமாகவே அலுவலகத்திற்க்குள் உலா வர வேண்டும். வீட்டுக்கு போகும் போது உடை அணிந்து கொள்ளலாம். இதில் எந்த காரணத்தை கொண்டும் விதிவிலக்கில்லை.


இதற்க்கு ஒப்புக்கொள்பவர்கள் பணியில் சேரலாம் என்பதே விதி. இந்த விதிகளை ஒப்புக்கொண்டு அந்த அலுவலகத்திற்க்குள் தற்போது கொஞ்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அதில் ஆண்கள் அதிகம், பெண்களில் ஒரு சிலரே பணியாற்றுகின்றார்களாம். இதை கவனித்த கம்பெனி நிர்வாகம், கம்பெனியில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லையாம். அதனால் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் தர எண்ணி அலுவலகத்தில் பெண் ஊழியர்களை அதிகரிக்க நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நிர்வாணமாக பணியாற்ற விருப்பம் உள்ள 20 முதல் 32 வயது வரையுள்ள பெண்கள் விண்ணப்பம் அனுப்ப தகுதியானவர்கள் என விளம்பரம் செய்துள்ளார் நியூடு ஹவுஸ் நிர்வாகியான 63 வயதேயான கிறிஸ்டேலர். மாத சம்பளம் 24 ஆயிரம் பவுண்ட் என அறிவித்துள்ளார். இதுவரை 7 பெண்கள் விண்ணப்பம் அனுப்பியுள்ளார்களாம்.

நிர்வாணம் என்பது அவர்களின் பார்வையில் கலை. நம் பார்வையில் காமம். இந்தியர்களின் பார்வையில் கட்டுரையில் உள்ள புகைப்படத்தை காணாமல் பிரான்ஸ்காரன் பார்வையில் நியூடு ஹவுஸ் அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் படங்களை பாருங்கள்……………

புதன், ஏப்ரல் 20, 2011

குள்ளநாி கூட்டம் பார்த்தபின் வந்த ஆசை. ...............


சில ஆண்டுகளுக்கு முன் வடிவேல் நடித்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்திற்க்கு பின் திரையரங்கில் போய் படம் பார்ப்பது அரவே இல்லாமல் போனது. ஆனால் சமீபத்தில் குள்ளநாி கூட்டம் படம் பார்க்கும் ஆவல் ஏற்பட்டு அப்படத்தை காண நேர்ந்தது. 

என்ன திடீர் ஞானோதயம் என்கிறிர்களா? டிவியில் ஒளிப்பரப்பான பாடல்கள் கேட்டபோது சிறப்பாக இருந்தது ஒரு காரணம் என்றால் நாயகி ரம்யாநம்பீசன் மற்றொரு காரணம். உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அழகியாய் ஜொலித்ததால் படம் பார்க்க வேண்டிய ஆவல் என நினைக்கிறேன்.

ரம்யா நம்பீசனை ரசிக்க போனயிடத்தில் வயிறு குலுங்க, கண்ணீல் நிர் வரும் அளவுக்கு காமெடியில் கலக்கியிருந்தார்கள் படத்தில். லாஜிக் இல்லாமல் பார்த்தால் சிறப்பாக இருந்தது படம். சிலயிடங்களில் நடிப்பு என்பது அப்பட்டமாக தொிந்தது. 

அதிலும் அந்த நண்பர்களின் செல்போன் பேச்சு, காதலர்களின் செல்போன் பேச்சு, மாமியார்-மருமகளின் போன் பேச்சு ரகளை பெரும் ரகளை.


குடும்ப படமா எல்லோரும் பார்க்கற மாதிாி எடுத்துயிருக்காங்க. ஆனா என்னை போன்ற பசங்க காதலியோட உட்கார்ந்து பார்த்தா நல்லா தான் இருக்கும். பாருங்க ரசிங்க..........



நானும் படம் பார்த்துட்டு வந்ததுலயிருந்து என் மொபைல் நம்பர்க்கு அந்த மாதிாி யாராவது போன் பண்ணுவாங்களான்னு அடிக்கடி எடுத்துயெடுத்து பாக்கறன் யாரையும் பண்ண மாட்டேன்கிறாங்க. இதுக்கு யாராவது ஐடியா தாங்கப்பா  ..............



சனி, ஏப்ரல் 09, 2011

மக்களும் தேர்தல் களமும்.


கடந்த சில மாதங்களாக ஸ்பெக்ட்ராம் பிரச்சனை, திமுக-காங்கிரஸ் சீட் நாடகம், ஜெ-விஜயகாந்த் முறுக்கல், ரவுடிஸம், குடும்ப ஆட்சி, விலைவாசி உயர்வு………. போன்றவற்றை பற்றி இணைய தளங்களிலும், செய்திதாள்களிலும் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். இது தமிழக சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என ஆருடம் வேறு சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் உண்மை நிலை முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கிறது என்பதை அனுபவ பூர்வமாக உணரவைத்துவிட்டார்கள் மக்கள். கடந்த 10 தினங்களில் குறைந்தது 800 கி.மீ தூரம் 1200 சொச்சம் கிராமங்களை சுத்தி வந்திருப்பேன். அரசியல்வாதிகளை விமர்சிப்பவர்கள், இணைய தளங்களில் எழுதுபவர்கள் மக்களிடம்மிருந்து எந்தளவுக்கு அந்நியப்பட்டு போய்வுள்ளார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியது.

நான் சுற்றிய கிராமங்களில் ஸ்பெக்ட்ராம் பற்றி பேச ஆள்யில்லை. கிராமங்களில் வாழும் மக்களில் 20 சதவிதமானவர்களுக்கே ஸ்பெக்ட்ராம் பற்றி தெரிகிறது. அதை விடக்கொடுமை நகரங்களில் ஸ்பெக்ட்ராம் என்றால் என்ன என கேட்பவர்கள் 60 சதவிதமானவர்கள். ஊழல் என சொல்வதைக்கூட மக்கள் தற்போது எப்படி பார்க்கிறார்கள் என்றால் நாம ஓட்டுக்கு காசு வாங்கறோம். நமக்கு செலவு பண்ண பணத்த திருப்பி எடுக்க ஊழல் பண்றாங்க. இதுக்கு காரணம் நாம தான். ஓட்டுக்கு பணம் வாங்காம நல்லவன் யாருன்னு பாத்து ஓட்டு போட்டுயிருந்தா அவன் ஜெயிச்சி நல்லது செய்துயிருப்பான். ஆனா ஒட்டுக்கு காசு வாங்கறதால செலவு பண்ணவன் பணத்த வட்டியோட திருப்பியெடுக்க தப்பான வழியில சம்பாதிக்கறான். நாம காசு வாங்காமயிருந்தா அவுங்களை கேள்வி கேட்கலாம், நாம காசு வாங்கறோம் அதனால அதப்பத்தி பேசறது தப்பு என்கிறார்கள் 70 சதவிதம் பேர்.

காலம் மாற மாற விலைவாசி ஏறத்தான் செய்யும். விலைவாசி ஏற ஏற ஒருத்தருடைய சம்பளமும், கூலியும் ஏறுவது, ஏத்துவதுப்பத்தி யாரும் பேசமாட்டேன்கிறாங்களே. அதலயும் சிமெண்ட், கம்பி, செங்கல் மாதிரியான பொருட்கள் விலை ஏறனத தாங்க ஏத்துக்க முடியல. ஒரு லிட்டர் பெட்ரோல் மேல 1 ரூபா அரசாங்கம் ஏத்தனா, ஒரு லோடு மணல் மேல ஆயிரம் ரூபாய் ஏத்தறாங்க. இது தாங்க அநியாயம். ஒரு பகுதியில் விலைவாசி உயர்வை ஏற்றுக்கொள்பவர்கள் மற்றொரு புறத்தில் எதிர் கருத்தை கொண்டு உள்ளனர்.


டிவி, கேஸ் அடுப்பு, காப்பீட்டு திட்டத்தை பாராட்டும் மக்கள் தற்போது இரண்டு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு இலவசங்களை வாரி வழங்குவதாக சொல்வதை தான் ரசிக்கவில்லை. கிராமம் முதல் நகரங்கள் வரை இலவசத்தை 85 சதவிதம் மக்கள் விரும்பவில்லை. மற்றவர்கள் ஏதோ இவுங்க வீட்டு பணத்தலயிருந்து தர்ற மாதிரி இலவசம், இலவசம்ங்கறாங்க. அது நாங்க கட்டற வரி பணம்ங்க. இத எப்படி இவுங்க இலவசம்ன்னு சொல்லலாம் என விபரமாகவே பேசினார்கள்.

அரசியல்வாதிகளிடம் நம்பகத்தன்மையை அதிகளவு மக்கள் எதிர்பார்க்கின்றனர். கிராமங்கள் முதல் நகரங்கள் வரை சாதி கட்சிகள், அமைப்புகளுக்கான செல்வாக்கு குறைந்து வருகிறது. தொகுதிக்கு சம்மந்தமேயில்லாத வெளியூர் நபர்களை வேட்பாளர்களாக அறிவித்தால் காலப்போக்கில் மக்களே அவர்களை அடித்து துரத்தும் அளவுக்கு கடும் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். அரசியலில் அராஜக போர்வழிகளை ரசிக்கவில்லை என 100 சதவித மக்களின் கருத்து தெரிவிக்கின்றனர்.


தேசிய கட்சிகள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். காங்கிரஸ்சாகட்டும், பாஜக வாகட்டும் அது அந்நிய கட்சிகள் என்கின்றனர். மனம் நொந்த விஷயம் இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டது பற்றி பெரும்பாலான மக்கள் கோப கருத்துக்களை வெளியிட்டனர். அது தேர்தலில் எதிரொலிக்குமா என்றால் இல்லை என்பதே அவர்களின் பதிலாக உள்ளது. அதற்கான காரணம் தேடியபோது, ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்யற கட்சின்னா அது திமுக, அதுக்கடுத்து மதிமுக.

ஆனா மத்தியில ஆட்சியில இருந்த காங்கிரஸ் சோனியாகாந்தி புருஷன கொன்னவங்கள பழிவாங்க முடிவு செய்து குண்டு போட்டு மொத்த ஜனத்தயும் அழிச்சது. திமுக கேள்வி கேட்டுயிருந்தா திமுக ஆட்சிய கலைச்சியிருக்கும். இதுக்கு பயந்து கருணாநிதி, மக்களை ஏமாத்த உண்ணாவிரதம் நாடகம் ஆடனாரு. வைகோ போராடியிருக்கனும், அதிமுக கூட்டணியில இருந்துக்கிட்டு குரல் கொடுத்தது எடுபடல. இப்பயில்ல எப்பவுமே புலிங்க விஷயத்தல ஜெயலலிதா நம்பகமான ஆள்யில்லைங்க என்கிறார்கள் 70 சதவிதமானோர்.

அதைவிட நம்ப முடியாத விஷயம், ஈழ விவகாரத்தில் இன்னமும் திமுக மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பது. கருணாநிதி ஈழ விவகாரத்தால உறுதியான முடிவு எடுக்கனும். அவருக்கு பின்னாடி அந்த மக்களுக்கு யாரும் குரல் கொடுக்க மாட்டாங்க. அந்த மக்களுக்கு நல்லது நடக்கனம்ன்னா கருணாநிதியால மட்டும் தான் முடியும். அத செய்தாருன்னா ஈழ துரோகின்னு அவர சொல்றது குறையும் என டீக்கடை பெஞ்ச்சுகளில் பல கிராமங்களில் நாம் சந்தித்த நடுத்தர வயதினர் வெளிப்படையாக கூறினர்.

விஜயகாந்த் மீது கடந்த காலங்களில் இருந்ததை போல பெண்களிடம் ஈர்ப்புயில்லை. ஆனால் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு வளர்ந்துள்ளது. இன்னும் கொஞ்ச காலம் மக்களுக்காக போராடியிருந்தால் ஆட்சியை தீர்மானிக்கும் அளவுக்கு வளர்ந்துயிருக்க முடியும். கூட்டணி சேர்ந்தது, குடிகாரர் என்ற இமேஜ் அவரை காலி செய்து விட்டது. கிராம புறமாகட்டும், நகர் புறத்தில் செய்தி தாள்கள், தொலைக்காட்சிகளை நம்பும் போக்கு குறைந்து வருகிறது. டிவி சேனல்களில் நடுநிலையான, பரபரப்பான செய்தி சேனல்க்கான இடம் காலியாக உள்ளது. அப்படி ஒரு சேனல் தொடங்கப்பட்டால் முதல் இடத்திற்க்கு வெகு விரைவில் வருவதற்க்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


இப்படி பல சுவாரஸ்யமான, நம்ப முடியாத விஷயங்கள் காண முடிந்தது. உட்கார்ந்தயிடத்தில் இணையத்தை மேய்ந்துவிட்டு எழுதுபவர்களுக்கும் மக்களுக்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது.

புதன், ஏப்ரல் 06, 2011

தமிழர்கள் மீது பாசமும், பிணைப்பும் எங்கள் குடும்பத்திற்க்கு உள்ளது. - ராகுல்


தமிழகத்துடனும், தமிழர்களுடனும் என் குடும்பத்திற்க்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. பிண்ணி பினைந்த பாசமும், நேசமும் உள்ளது என பிரச்சாரத்திற்க்கு வந்தயிடத்தில் உளறியிருக்கிறார் காங்கிரஸ்சின் வருங்கால நட்சத்திரம் என அழைக்கப்படும் நிழல் பிரதமர் ராகுல்காந்தி. 

இதையெல்லாம் கேட்க வேண்டிய தலையெழுத்து தமிழனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இவர்க்கும், இவரது குடும்பத்திற்க்கும் தமிழர்கள் மீதும், தமிழகத்தின் மீது பாசமும், பிணைப்பும் உள்ளதாம். 

ஏன்ப்பா ராகுல் சில சந்தேகம் ...........

உங்களது இந்த பாசம் தான் ஈழத்தமிழர்கள் 1 லட்சத்திற்க்கும் அதிகமானோரை கொல்ல வைத்தது. 

இந்த பாசம் தான் உலக நாடுகளில் வாழும் தமிழர்களை தேடி தேடி கொல்கிறது.

இந்த பிணைப்பு தான் பதவியை தேடி கூட்டணி கட்சியை அழிக்கிறது. 

இந்த பிணைப்பு தான் 2ஜி ஊழலில் தமிழன் ஒருவரை மாட்ட வைத்துவிட்டு அதிகமாக கொள்ளையடித்த உங்கள் கட்சியும், உங்கள் குடும்பமும் தப்பித்துக்கொண்டது.

இப்படி தமிழர்கள் மீது உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்க்கும் உள்ள பாசம், பிணைப்பு பற்றி எங்களுக்கு தொியும். அதனால் வரும் தேர்தலில் காங்கிரஸ்க்கு தக்க பாடம் கற்று தர தயாராகவே உளளார்கள் கவலைப்பாடாதீர்கள் ராகுல்.