செவ்வாய், டிசம்பர் 13, 2016

வாருங்கள் சின்னம்மா.......... நாளை உங்களுக்கும் இதுதான்..........





 கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவா?. என்ன அநியாயம்மிது என பொதுமக்கள் தான் கொதிக்கிறார்களளே தவிர அதிமுகவின் எந்த எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி, கட்சியின் மா.செக்கள் கொதித்துள்ளார் என கேட்டால் ஒருவரும் கொதிக்கவில்லை, ஏன் முனுமுனுக்க கூடயில்லை. அவர்கள் தான் பொறுப்பில் உள்ளார்கள் என்றால் கட்சியின் அடிமட்ட கிளை கழக உறுப்பினர் கூட எதிர்த்து முனுமுனுக்கவில்லை. 

எப்போதும், தலைமைக்கு எதிராக முனுமுனுக்ககூடாது என்பதற்காகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது கட்சி அதிமுக. கட்சியினரை தொண்டர்களாக வைத்திருக்காமல் அடிமையாக வைத்திருக்கும் கட்சி எதுவென்றால் அது அக்கட்சி தான். அடிமைகள் கூட ஒருக்கட்டத்தில் குரல் எழுப்புவார்கள். எம்.ஜி.ஆர் இறந்தபோது அப்படித்தான் குரல் எழுப்பினார்கள். 

அடிமைகள் எப்வோதாவுது கேள்வி கேட்பார்கள், கொத்தடிமைகள் அதுக்கூட கேட்கமாட்டார்கள். அதனால் அடிமைகளை விட கொத்தடிமைகள் தான் சரியென தான் பதவிக்கு வந்ததும் அதிமுகவினரை கொத்தடிமைகளாக உருவாக்கினார்.

அதிமுக உருவானபோது அதிமுக வுக்கு என கொள்கை, கோட்பாடு என ஏதாவுது இருந்ததா எனக்கேட்டால் எந்த ஒரு வெங்காயமும் கிடையாது. கருணாநிதி எதிர்ப்பு, சினிமா பிரபலம் இதை மட்டும்மே வைத்துக்கொண்டு பதவிக்கு வந்த ராமச்சந்திரனுக்கு, பூணுல் கும்பல் சாதி ரீதியாக, மத ரீதியாக பெரும் பலமாக இருந்து அவரை தாங்கி பிடித்து தொடர்ந்து பதவியில் உட்கார வைத்தது. 

கருணாநிதி எதிர்ப்பு என்பது நீண்ட ஆண்டுகளுக்கு எடுபடாது என நினைத்தே கட்சியினரை அடிமையாக வைத்துக்கொள்ள விரும்பினார் எம்.ஜி.ஆர். அதனால் தான் கட்சியினர் ஒவ்வொருவரையும் அவர் படத்தை கைகளில் பச்சைக்குத்திக்கொள்ள வைத்தார். கட்சியினரை காலில் விழத்தான் சொன்னார், இவர்கள் அப்படியே படுத்துவிட்டார்கள். நிர்வாக திறமையற்ற, 10 ஆண்டுகள் முதல்வராக இருந்த ராமச்சந்திரன் தமிழகத்துக்கு என எதையும் செய்யவில்லை. இலவசத்தை ஊக்கு வித்து செருப்பு, பல்பொடி, துணி என தந்து அரசு பணத்தில் வல்லள் பெயர் எடுத்தார். அந்த ராமச்சந்திரன் மறைவின் போது, அந்த பிம்பத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக தான் மெரினா கடற்கரையில் சமாதி கட்டினார்கள். அதை காட்டியே 28 ஆண்டுகள் அந்தகட்சியின் பொது செயலாளராக இருந்தார் ஜெயலலிதா. 

கட்சியினரை எம்.ஜி.ஆர் அடிமையாக நடத்தினார் என்றால், அவர்களை கொத்தடிமையாக மாற்றினார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆராவுது தன் பெயரை கையில் பச்சை குத்திக்கொள்ளத்தான் சொன்னார். ஜெயலலிதா, திமுகக்காரன் உட்பட நம் எதிரிகட்சியினரின் நல்லது, கெட்டதுகளில் கூட கலந்துக்கொள்ள கூடாது என வெளிப்டையாக அறிவித்தார். அதை ஒருவரும் கேள்வி கேட்கவில்லை, அப்படியே நடந்துக்கொண்டர்கள். மீறி கலந்துக்கொண்டவர்களின் பதவியை பறித்தார் ஜெயலலிதா. 

ஒருவருக்கு பதவி தருவது, பின் பிடுங்குவது, எதற்கு தந்தார்கள், எதனால் பிடுங்கினார்கள் என சம்மந்தப்பட்டவருக்கே தெரியாது. அந்த இடத்தில் எங்கேயோ உள்ள ஒருவனை தூக்கி வந்து பதவியில் உட்காரவைப்பது. இதை பார்க்கும் போது அடிமட்ட தொண்டனுக்கும் பதவி கிடைக்கிறது என நினைக்கலாம். உண்மையில் இதனை நுணுக்கமாக பார்க்க வேண்டும், அரசியல் தெரிகிறதோ, தெரியவில்லையோ கட்சியின் அடிமட்டத்தில் உள்ள ஒருவருக்கு பதவி தந்தால் அவன் விசுவாச கொத்தடிமையாக இருப்பார், எதிர்த்து கேள்வி கேட்கமாட்டார் என்பதாலே அப்படிப்பட்டவர்களுக்கு பதவிகள் தந்தார்கள். இது கட்சியில் மட்டும்மல்ல ஆட்சியிலும் எதிரொலித்தது. யார் அதிகமாக ஜால்ரா அடிப்பது என்பது உயர் அதிகாரிகளுக்குள்ளயே போட்டி ஏற்பட்டதை கடந்த காலங்களில் கண்டோம். கொத்தடிமைகள் அழுதது, காலில் விழுந்தது போன்ற பணிவெல்லாம் எதற்காக பதவிக்காக. 

 அதனால் தான், அம்மா அம்மா என பாடிய வாய்கள் ஜெ அடக்கம் செய்த சுவடு காயும்முன், சின்னம்மாவே எல்லாம் என அவர் போட்டோவை சட்டையின் மேல்பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஜெ படத்தை தூக்கி வீசினார்கள். நீங்கள் தான் கட்சியை, எங்களை காப்பாற்ற வேண்டும் என கதற தொடங்கிவிட்டார்கள்.

எல்லாம் எதற்காக ?. 

பதவி, பணத்துக்காக. தங்களிடம் உள்ள பதவியை, பணத்தை, அதிகாரத்தை காப்பாற்றிக்கொள்ள அந்த பதவிக்கு சசிகலாவல்ல, ஜெயா வீட்டு வேலைக்காரர் வந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள். 

ராமச்சந்திரன் மறைவுக்கு பின், எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆர் என கட்சியினர் புகழ் பாடுவதை ஜெ விரும்பவில்லை என்பது கடந்த கால வரலாறு. எம்.ஜி.ஆர் என்கிற பெயரை தன்னை நிலை நிறுத்தவும், ஓட்டு வாங்கவும் பயன்படுத்திய ஜெ, மற்றப்படி அவரை நிராகரிக்கவே செய்தார். எங்கும் நான், நான், எனது அரசு என பேசியதும், திட்டங்களுக்கு தன் பெயரை வைத்துக்கொண்டது அதற்காக தான். இதனை உணர்ந்தே மாண்புமிகுக்கள் முதல் கட்சி நிர்வாகிகள் வரை எம்.ஜி.ஆர் பெயரைக்கூட சொல்லாமல் ஜெயலலிதா காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்தார்கள், கார் டயரை நக்கினார்கள், பறக்கும் விமானத்தை கும்பிட்டார்கள். இத்தனையும் செய்தது பதவிக்காக. அந்த பதவியை வைத்து பணத்தை சம்பாதிக்க, பணம் இருந்தால் எல்லாம்மே நம் வசம் என நம்பினார்கள், செய்தார்கள். 

கட்சியினரிடம்மிருந்து எம்.ஜி.ஆர் புகழை மறைக்கும் வகையில் தான், தான் இறந்தபின் தன் உடலை எம்.ஜி.ஆர் சமாதி அருகே புதைக்க வைத்துவிட்டார் ஜெ. எம்.ஜி.ஆரை காண செல்லும் முன் தன்னை வணங்கி விட்டுத்தான் போக வேண்டும் என்கிற ஜெ வின் விருப்பத்தை சசிகலா நிறைவேற்றியுள்ளார். தனக்கு அரசியல் வாழ்வளித்த எம்.ஜி.ஆரை மறக்க வைக்கலாம் என ஜெ நினைத்தார். ஆனால், கட்சியினர் அவரையே தூக்கி எறிந்துவிட்டார்கள். கட்சியை நடத்துவதில், தொண்டர்களை அடிமைப்படுத்துவதில், கட்சியை வளர்த்ததில் ராமச்சந்திரனை ஜெயலலிதா மிஞ்சினார் என்றால் கட்சி  அடிமைகளின் விசுவாசத்தை பெறுவதில் ஜெயலலிதா எம்.ஜி.ஆரிடம் தோற்றுவிட்டார்.

நாளை சசிகலாவுக்கு அடுத்து யார் பதவிக்கு வருகிறார்களோ அவர்களை ஏற்றுக்கொள்வார்கள். காரணம் அடிமைகளுக்கு விடுதலை முக்கியம்......... கொத்தடிமைகளுக்கு சோறு ( பதவி, பணம் ) தான் முக்கியம்.

செவ்வாய், டிசம்பர் 06, 2016

தயக்கத்தை உடை......... தலைநிமிர்....... பகுதி 2



டந்த வார பகுதியில் பகுதி - 1 கீழ்க்கண்ட கேள்விகளோடு அந்த கட்டுரையை முடித்திருந்தேன்.

நகர்ப்புற இளைஞர்களை விட கிராமப்புற இளைஞர்கள் தகுதி குறைவானவர்களா?, பொறியியல் படித்த கிராமப்புற இளைஞர்கள் பெரும் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாததன் காரணம்மென்ன?, கிராமப்புற இளைஞர்கள் அதிக தயக்கத்தோடு நேர்காணலை சந்திப்பதற்கான காரணம் என்ன?, படித்த இளைஞர்களை எதை வைத்து நகரம் –கிராமம் என பிரிக்கிறார்கள்?. கிராமப்புற இளையோர்களின் தயக்கத்தை, பயத்தை போக்குவது எப்படி ?. கிராமப்புற இளைஞர்கள் சாதிக்கவே முடியாதா ?. இந்த கேள்விக்கான பதிலை பார்த்துவிடுவோம்..........

நகர்ப்புற இளைஞர்களை விட கிராமப்புற இளைஞர்கள் தகுதி குறைவானவர்களா?,

புற்றீசல் போல் இன்று கிராமத்துக்கு கிராமம் கல்லூரிகள் பெருகிவிட்டன. பொறியியல் கல்லூரிகளுக்கு மவுசு குறைந்துவிட்டது என்றதும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அதற்கும் இறங்கு முகம் என்றதும் இப்போது, கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. நகரம் – கிராமம் என நீக்கமற நிறைந்துள்ள கல்லூரிகளை தேர்வு செய்யும் போது, நகர்ப்புறத்தில் உள்ள இளைஞர்கள் மேற்படிப்புக்கு எது சிறந்தது என விசாரித்து போய் சேர்க்கிறார்கள், சேர்க்கப்படுகிறார்கள். அதற்கு பல வாய்ப்புகள் அவர்கள் முன்வுள்ளது. கிராமப்புறத்திலோ, நமக்கு பக்கத்திலேயே காலேஜ் வந்துடுச்சி என அங்கே சேர்க்கப்படுகிறார்கள்.

நகர்ப்புறங்களில் இயல்பிலேயே இருக்கும் உஷார் தன்மை அவர்களை கல்லூரிகளில் அதிகம் கற்க வைக்கிறது. கிராமப்புற மாணவர்களிடம் இருக்கும் நம்பகத்தன்மை அவர்களை கல்லூரியில் எது கற்று தந்தாலும் அதை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்கிறது. வாத்தியார் பொய் சொல்லமாட்டார் என கிராமப்புறங்களில் ஓர் நம்பிக்கை. நகர்ப்புற கல்லூரிகள், தங்களது பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை திறமையானவர்களை கண்டறிந்து தேர்வு செய்கிறது, கிராமப்புறத்தை மையமாக வைத்து தொடங்கப்பட்ட கல்லூரிகள் திறமை குறைந்தவர்களை வைத்து பாடம் நடத்துகிறது.

இங்குயிருந்து தான் அதிகரிக்கிறது கிராமப்புற இளைஞர்களின் தயக்கம். இயல்பிலேயே தயக்கத்தோடு கல்லூரிக்கு வருபவனிடம் தயக்கத்தை, பயத்தை உடைக்கும் இடமாக கல்லூரிகள் இருப்பதில்லை. இங்கும் அவனை அழுத்தியே வைத்திருப்பது. அவன் படித்து முடித்ததும் வேலைக்கு எனச்செல்லும் போது அந்த தயக்கம் இன்னும் அதிகரிக்கிறது.

படித்த கிராமப்புற இளைஞர்கள் பெரும் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாததன் காரணம்மென்ன?, கிராமப்புற இளைஞர்கள் அதிக தயக்கத்தோடு நேர்காணலை ஏன் சந்திக்கிறார்கள் ?,

பெரும் நிறுவனத்தின் நேர்காணல்க்கு ஒரு நகர்ப்புற இளைஞனும், கிராமப்புற இளைஞனும் செல்லும்போது, நகர்ப்புற இளைஞனின் நடை, நுனி நாக்கு ஆங்கிலம் போன்றவற்றை கவனிக்கும் கிராமப்புற இளைஞன் நிலை குலைந்து போகிறான். நகர்ப்புற இளைஞனை காணும்போதே இவுங்களோட நாம எங்க போட்டிப்போடறது என மனதுக்குள் போராட தொடங்கிவிடுகிறார்கள். அந்த போராட்டம் தரும் பதட்டம் நேர்காணல் நடத்துபவரின் முன் வெளிப்பட்டுவிடுகிறது. இதுதான் அவர்களை பின்னுக்கு தள்ளிவிடுகிறது. பெரும் நிறுவனங்களில் முண்டாசுப்பட்டி போன்ற கிராமங்களில் இருந்து படித்தவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் போகுவதன் காரணம். அதோடு, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், எனக்கு அ, ஆ கற்றவன் தான் வேண்டும். அது கற்காதவனை நான் ஏன் எடுக்க வேண்டும் என நினைக்கிறது.

படித்த இளைஞர்களை எதை வைத்து இவன் நகரம் – அவன் கிராமம் என பிரிக்கிறார்கள்?.

நடை, உடை, பேச்சு தான் ஒருவரை அடையாளப்படுத்துகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவுக்குள் பேன்ட் – சண்டை நுழைந்து, இன்று தமிழகத்தில் வேட்டி அணிந்தால் கிறுக்கனாக பார்க்கும் நிலை தான் இருக்கிறது. 2 நூற்றாண்டாக நாம் பேன்ட்-சட்டை அணிந்தாலும் நகர்ப்புறவாசிகள் அணியும் அந்த பேன்ட் சட்டைக்கும், கிராமப்புற பின்னணியில் வாழ்பவர்கள் போடும் பேன்ட் – சட்டைக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. பேன்ட் – சட்டை போட்டால் செருப்போ, சூவோ போடவேண்டும் என தெரியாத பாமர மக்கள் அதிகம் உள்ளது கிராமப்புறத்தில் தான். அப்படிப்பட்ட கிராமப்புற பின்னணியை கொண்டவர் கல்லூரிக்குள் நுழைந்தாலும், மேற்படிப்பு படித்துவிட்டு வேலைக்கு மெட்ரோ நகரங்களுக்குள் நுழைந்தாலும் அவனது ஆடை நேர்த்தி அவனை காட்டிக்கொடுத்துவிடுகிறது.

அதற்கடுத்து ஒருவருடைய பேச்சு. என்னதான் பெரிய படிப்பு படித்தாலும் நகர்புற இளைஞர்களின் மொழி உச்சரிப்புக்கும், கிராமப்புற இளைஞர்கள் மொழி உச்சரிப்புக்கும் பலமடங்கு வித்தியாசம் உண்டு. இதுதான் நகர்ப்புறம் – கிராமப்புறம் என அடையாளப்படுத்துகின்றன.
 

கிராமப்புற இளையோர்களின் தயக்கத்தை, பயத்தை போக்குவது எப்படி?. கிராமப்புற இளைஞர்கள் சாதிக்கவே முடியாதா ?.

பயம், தயக்கம் என்பது நகரம் – கிராமம் என இருதரப்புக்கும் இருக்கும். நகர்ப்புற இளையோர்கள் அதை அணுகுவதற்கு சிறு வயதில் இருந்தே, பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள் வழியாக பழகிக்கொள்கிறார்கள். அந்த வாய்ப்பு கிராமப்புற இளையோர்களுக்கு குறைவு. முதல் கட்டுரையில் குறிப்பிட்டது போல, கிராமப்புற இளைஞன் இப்போதுதான் மேலே வருகிறான். எங்கே தவறு நடந்துவிடும்மோ என்ற பயத்திலேயே பயணம் செய்கிறான். நகர்ப்புற இளைஞன் தவறு நடந்தால் பார்த்துக்கொள்ளலாம் என செயல்படுகிறான் அவ்வளவு தான்.

தவறு என்பது திருத்தமுடியாததல்ல, தவறு செய்தால் தான் கற்றுக்கொள்ள முடியும். இதை கிராமப்புற இளையோர் அறிந்துக்கொண்டாலே வெகுவேகமாக நகர்ப்புற இளைஞர்களோடு போட்டிபோட முடியும்.

நகர்ப்புற இளைஞர்கள் சறுக்கினால் சோர்ந்துபோய்விடுவார்கள். கிராமப்புற இளைஞன் சறுக்கினால் கவலைப்படமாட்டான். அதற்கு உதாரணம் கூறி இந்த கட்டுரையை முடிக்கிறேன். கிருஷ்ணகிரி – திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் உள்ளது அந்த குக்கிராமம். 34 வயதான அந்த இளைஞனை 5 வருடங்களுக்கு முன்பு சந்தித்தேன். கல்லூரிக்கு சென்றும் சரியாக படிப்பு வரவில்லையென படிப்பை விட்டுவிட்டு பெங்களுருக்கு கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலைக்கு சென்றார். வேலை கத்துக்கொண்டுவந்தபோது, ஒரு தீபாவளிக்கு சொந்த ஊருக்கு அங்கிருந்து பைக்கில் வந்துக்கொண்டு இருந்தார். இரவு பயணம் ஊருக்கு மிக அருகில் வரும்போது எதிரே வந்த ஒரு லாரி மோதிவிட்டு போய்விட்டது. உடலெல்லாம் காயம், அதோடு அவரது இடது கால் முட்டிக்கு மேல் கட்டாகி துண்டாகி கீழே விழுந்தது. வலியால் கத்தி கூச்சல் போட்டும் இரவு நேரம் யாரும் அந்தப்பக்கம் வரவில்லை. அந்த வலியிலும், இரவில் தனது கால் கட்டானதை தேடி எடுத்து தன் அருகே வைத்துக்கொண்டார். கீழே விழுந்த தனது செல்போனை தேடி எடுத்து ஊரில் உள்ள குடும்பத்தார்க்கு போன் செய்து வரச்சொல்ல அவர்கள் வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். இருந்தும் நீண்ட நேரமானதால் காலை ஒன்று சேர்க்க முடியவில்லை. 6 மாதத்துக்கு மேலானது அவரது உடல் சீராக. ஒத்த காலை வைத்துக்கொண்டு என்ன செய்வது, உறவினர்கள் ஒதுக்கினார்கள் கலங்கவில்லை. ஒற்றைக்காலோடு மீண்டும் பெங்களுரூ பயணம், ஒற்றை காலோடு வேலை செய்ய கற்றுக்கொண்டார். வேலை, வேலை.......... ஊரில் வீடு கட்டினார். ஒரு தங்கைக்கு திருமணம் செய்து வைத்தார், தம்பியை படிக்கவைத்தார். இவரின் தன்னம்பிக்கையை பார்த்து பட்டதாரி பெண் காதலிக்க, ஒருகால்யில்லையே என தயங்கியவரை விடாப்பிடியாக காதலிக்க வைத்து திருமணம் செய்துக்கொண்டார். இதுதான் கிராமப்புற இளைஞனின் தன்னம்பிக்கை. மனதில் தைரியம் அதிகம் உள்ளவர்கள் கிராமப்புற இளைஞர்கள். அவர்களால் சாதிக்க முடியும். அதற்கு ஊக்கசக்தி தான் தேவை.

பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள், கற்றோர் ஊக்குவித்தால் போதும் பெரும் சாதனைகளை செய்வார்கள் கிராமப்புற இளையோர்களும்.

'ஆணவம்' மறைந்தது. நிம்மதியாக உறங்குகள்...




தமிழக முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5ந்தேதி மறைந்தார். சர்வாதிகரிகளை மிஞ்சிய சர்வாதிகாரி ஜெ மறைந்தார் என எழுதலாம் என நினைத்தேன். ஆனால் கொஞ்சம் தயக்கம். இறந்தவர்களை பற்றி தூற்றக்கூடாது என்பது தமிழக மரபு. அதனால் அதிகமாக எழுதவில்லை. அதற்காக அவரை புனிதராக்குவதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்தியாவில் இப்போதுள்ள முதலமைச்சர்களில், இதற்கு முன்பு இருந்தவர்கள், இனி முதலமைச்சராக இருக்கபோகிறவர்கள் ஜெ போல் ஆணவமாக இருந்ததுயில்லை. 

அவர் மீதான நீதிமன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றத்தையே தன் காலுக்கு கீழ் வைத்திருந்தவர். நீதியை நிலைநாட்டக்கூட ஜெயாவை எதிர்க்க முடியாமல் முனுககூட முடியாதவர்களாக தான் இருந்தார்கள் பல நீதிமான்கள். நீதிமன்றம் என்பது அதிகாரம் இருந்தால் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தலாம் என இந்திய அரசியல்வாதிகளுக்கு காட்டியவர். 

சட்டங்களை, விதிகளை துச்சம்மென தூக்கி எறிந்தார். எதிர்கேள்வி வரும்போதுயெல்லாம் என்னை கையை பிடித்து இழுத்தார், சேலையை உருவினார், நான் பெண் என்பதால் எதிர்க்கிறார்கள் என பதில் தந்து எதிர் குரல்களை அடைத்தார். 

தன் அதிகாரத்தை பயன்படுத்தி பிடிக்காதவர்கள் மீது கஞ்சா வழக்குகளாக பாய்ச்சினார், ஆள் வைத்து அடித்தார், ஆசிட் வீசினார். 

சட்டமன்றத்தை நாடக கொட்டையாக மாற்றியவர். அங்கு அவர் மட்டும்மே எல்லா வேடங்களையும் ஏற்றிருந்தார். சட்டமன்ற விதிகளை தன் ரோமமாக நினைத்தவர். அவர் செய்த சட்டவிதி சிதைவுகளை சரிச்செய்ய இன்னும் பலப்பல ஆண்டுகள் ஆகும்.  

உயர் அதிகாரிகளை பந்தாடுவதாக இருக்கட்டும், அதிகாரத்தில் உள்ள ஆண்களை காலில் விழவைப்பதாக இருக்கட்டும், ஒரே கையெழுத்தில் 10 ஆயிரம் சாலை பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாகட்டும், எஸ்மா, டெஸ்மா மூலம் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை வேலையை விட்டு துரத்துவதாகட்டும், அவர்களை கைது செய்வது போன்ற முட்டாள்தனமான முரட்டு தனத்தை தைரியம் என பாராட்டி புலங்காகிதம் அடைவதே அவரின் விசுவாசிகளின் வேலை. 

எம்.ஜி.ஆர்க்கு பின் கட்சியில் தனக்கு நம்பகமானவர்களை அவர் உருவாக்கவில்லை. அதற்கு பதில் அடிமைகளை உருவாக்கினார். அந்த அடிமைகளை ஏவல் நாயாக பயன்படுத்தினார். அவர்களையே உயர்த்தி வைத்தார். இந்த அடிமை முறை தமிழகத்தில் அதிமுகவை பார்த்து அனைத்து கட்சிகளுக்கும் பரவியது. இந்த அரசியல் அடிமைத்தனம் போக இன்னும் ஒரு நூற்றாண்டு தேவை. 

அரசியல் மூலம் அதிகாரத்துக்கு வந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடிக்கலாம், அதை பாதுகாக்கலாம், அதை வைத்து யாரை வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கலாம் என இளைய தலைமுறைக்கு கற்று தந்தவர். இப்படி ஒரு சமூகத்தை தன் சுயநலத்துக்காக ஜோக்கராக்கியவர் இன்று மரணம் அடைந்திருக்கிறார்.
அவரின் மரணத்திலும் ஏகப்பட்ட மர்மங்கள். இதை அந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள், ஏன் இப்போது முதல்வராக வீற்றிருக்கும் பன்னீர்செல்வம், 31 அமைச்சர்கள் உட்பட யாரும் கேள்வி கேட்கவில்லை. எதனால் அவருக்கு மரணம் வந்தது என்பது கட்சியினருக்கோ, பொதுமக்களுக்கோ தெரியவில்லை. இது எத்தனை பெரிய அநியாயம். யாரும் இதுப்பற்றி கேள்வி எழுப்பவில்லை. அதற்கு பதில் அவரை புனிதராக்கும் பணியை தான் செவ்வனே செய்கிறார்கள். 

மறைந்தபின் அவரை புகழக்கூடாதா என கேட்கிறார்கள். நல்லதை புகழட்டும். ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதும், தனிப்பட்ட முறையிலும் அவரால் பயன்பெற்றவர்கள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் இருப்பார்கள். அவர்கள் புகழ்கிறார்கள். அந்த கருத்துக்களை நிச்சயம் வரவேற்கிறேன். எனக்கு கூட தனிப்பட்ட முறையில் ஒரு விஷயத்தில் ஜெவை எனக்கு ரொம்ப பிடிக்கும். இவர் நமக்கு நம்பகமானவர் என தெரிந்தால் அவர்களை எப்போதும், எங்கும் அவர் கைவிட்டதில்லை, உதவிக்கு பதில் உதவி செய்து தன் நன்றிக்கடனை தீர்த்துக்கொள்வார். அதற்காக அவரது ஆணவ ஆட்சியை, அதிகார திமிறை விமர்சிக்காமல் இருப்பது என்பது இன்னும் பல தலைவர்களை நாம் அந்த தன்மையில் உருவாக்கவே வைக்கும், அது தமிழகத்தை சவக்குழியில் தள்ளிவிடும், ஜாக்கிரதை.