புதன், ஜூலை 25, 2012

ஆசிரியர்களின் ஆடை அராஜகம்..........




நாகரீகம் என்ற பெயரில் எங்களது சுதந்திரத்தில் அரசாங்கம் தலையிடுகிறது. தனது அதிகாரத்தை எங்கள் மீது காட்டுகிறது என சில ஆசிரியர் சங்கங்கள் போர்கொடி தூக்கியுள்ளன. எதனால் இத்தனை கொதிப்பு?. ஆசிரியைகள் புடவை கட்டிக்கொண்டு தான் பள்ளிக்கு வரவேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு தான் இப்படி கொதிக்கின்றனர். பெண்ணியவாதிகள் பலர் எதிர்ப்பு குரல் கொடுக்கிறார்கள். 

ஒருவர் என்ன உடை உடுத்த வேண்டும் என்பது அவர்களின் உரிமை என்பதற்காக என்ன உடை வேண்டுமானாலும் உடுத்தலாமா?. விதவிதமான உடை உடுத்த அனைவருக்கும் ஆசை தான். அதற்காக எப்படி வேண்டுமானாலும் உடை உடுத்தலாமா ?.

ஆடை என்பது உடலை மறைக்கவே. உடல் அங்கங்களை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக அல்ல. ஆனால் இன்றைய 'நவீன நாகரீக' உலகில் உடலை மறைக்க ஆடை உடுத்துகிறோம் என்ற பெயரில் உடலின் வளர்ச்சியை மற்றவர்களுக்கு விருந்து வைக்கிறார்கள் ஆண்களும் - பெண்களும். 

நம் வீட்டில் எப்படி வேண்டுமானாலும் உடை உடுத்தலாம். சாலைக்கு வரும்போது கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்கிற சிறு எண்ணம் கூட இங்கு யாருக்கும்மில்லை.  மற்றவர்கள் தான் அப்படி செய்கிறார்கள் என்றால் சமூகத்தில் பெறுப்பாக இருக்ககூடிய சிறுபிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் எங்களுக்கு ஆடை உடுத்துவதில் சுதந்திரம் வேண்டும் என கேட்பது எந்த விதத்தில் நியாயம். பிள்ளைகளின் ரோல் மாடலான ஆசிரியர்கள் ஆடை உடுத்துவது இப்படித்தான் என கற்று தந்து அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க வேண்டும் என்கிறிர்கள் போல. 

15 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். மாணவ சமூதாயத்துக்கு எது நல்லது, எது தவறு என கற்று தந்தார்கள். பிள்ளைகளை தங்கள் பிள்ளைகள் போல் பர்த்துக்கொண்டார்கள். படிக்கவில்லை என்றால் அடித்து உதைத்தப்பார்கள். அதே மாணவன் நின்றுவிட்டால் வீட்டுக்கே போய் சண்டை போட்டு பள்ளிக்கு அழைத்து வருவார்கள் பெரும்பாலான ஆசிரியர்கள். 

நான் உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டுயிருந்த சமயம், எங்களுக்கு ஆங்கில ஆசிரியராக ஒரு பெண்மணி இருந்தார். பள்ளியில் எந்த மாணவ-மாணவி தப்பு செய்தாலும் மற்ற ஆசிரியர்கள் அவரிடம் தான் அனுப்பி வைப்பார்கள். தப்பு என்றால் தயங்கவே மாட்டார் கம்பு உடையும் அளவுக்கு அடிப்பார். மற்றவர்கள் முன் நாம் கண்ணியமாக இருக்க வேண்டும் என வலியுறுத்துவார். ஒருநாள் மதியம் எட்டாம் வகுப்புக்கு பாடம் நடத்த வந்தார். அரை மணி நேரம் பாடம் எடுத்தவர் பின் படிங்கடா எனச்சொல்லிவிட்டு தன் இரண்டு கால்களை தூக்கி டேபிள் மேல் போட்டுக்கொண்டு தூங்க தொடங்கினார். அவர் வகுப்பில் இருந்தாலே அமைதியாக இருப்போம். ஆனால் அன்று மாணவிகள் மத்தியில் இருந்து சிரிப்பு மற்றும் கிசுகிசு சத்தம். எதனால் என பசங்களுக்குள் ஆர்வம் வந்து என்னவென்று ஆளாளுக்கு கேட்டபோது ஒரு பையன் சுட்டிக்காட்டினான். அதிர்ச்சியானது. ஒரு மாணவி எழுந்து போய் சொல்ல, அதிர்ச்சியாகி அதன்பின் அவர் பள்ளிக்கே வரவில்லை. சில வாரங்களில் டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு வேறு பள்ளிக்கு போய்விட்டார். அவர் சக ஆசிரியர்களிடம், நான் முன் மாதிரியா இருந்திருக்கனும், பசங்க முன்னாடி அநாகரீகமா இருந்துட்டன். இனி அவர்கள் என்னை எந்த பர்hவையில பார்ப்பாக , நானும் தான் அவர்கள் முன்னாடி எப்படி நிப்பன். நான் செய்தது தவறு என சொல்லியுள்ளார். 

ஆனால் இன்று பள்ளிகளில் தவறு செய்யும் ஆசிரியர், ஆசிரியைகள் பெருகிவிட்டார்கள். பிள்ளைகளை தங்களது இச்சையை தீர்த்துக்கொள்ள பயன்படுத்துகின்றனர். சமீப காலங்களில் நியமிக்கப்பட்டுள்ள இளம் வயது ஆசிரியர் – ஆசிரியைகளின் நடவடிக்கைகளை காணும் போது அருவருப்பும் ஆத்திரமும் வருகிறது. 

சில வாரங்களுக்கு முன், நான் எப்போதும் சாப்பிடும் மெஸ்சில் சாப்பிட அமர்ந்திருந்தேன். நான்கு இளம் வயது இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். பேச்சின் போது தான் அவர்கள் ஆசிரியர்கள் என அறியமுடிந்தது. எட்டாவதுக்கு பாடம் எடுக்க நேத்து போயிருந்தம்ப்பா. அதான் அந்த கும்முன்னு ஒரு பொண்ணுயிருக்கே அது வந்து உங்க டிரஸ் நல்லாயிருக்குன்னு பேசுச்சி. நானும் கை புடிச்சி பேசனன் என்றான். வேறு இரு ஆசிரியர்கள் எங்க ஸ்கூல்ல மூனு, நாலு இருக்குங்க கவுக்க நானும் என்னன்னவோ பண்றன் அன்னைக்கு சென்ட் போட்டுக்கு போனன். வாசைன தூக்குச்சி எதிர்பாத்த மாதிரியே ஒரு பொண்ணு வந்து ஸ்டாப் ரூம்ல இருந்த எங்கிட்ட வந்து சூப்பரா இருக்கிங்க சார்ன்னு சொல்லிட்டு, என்ன சென்ட் போட்டுயிருக்கிங்கன்னு கேட்டுக்கிட்டு போச்சி என்றான். அவன்களை எழுந்து செருப்பால் அடிக்க வேண்டும் போல்யிருந்தது. 

இளம் வயதில் படித்தவுடனே வாத்தியார் வேலை தந்தது முதல் தவறு. இப்படி நடந்துக்கொள்ளத்தான் ஆசிரியர் பயிற்சியில் கற்று தந்தார்களா?. குறைந்த பட்ச ஆடை கட்டுப்பாடு கூடயில்லை என்றால் இவர்கள் எப்படி நடந்துக்கொள்வார்கள் என யோசித்து பார்த்தால் அதிர்ச்சியாக உள்ளது. 

ஆடை உடுத்துவதில் கட்டுப்பாடு விதிக்கிறார்கள் என உரிமை பேசுபவர்கள் தாம் பேசுவது முறைதானா என கொஞ்சம் யோசித்து பாருங்கள். புடவையில் அசிங்கமாக உள்ளது என்கிறிர்கள். அப்படியெனில் மற்ற உடை நாகரீகமாகவா உள்ளது?. 

புடவையை தவிர நாகரீக உடை வேறுயேது. விதவிதமாக உடை உடுத்த விரும்புபவர்கள் தயவு செய்து பள்ளி நேரம் முடிந்து உங்களது வீடுகளில், விசேஷங்களுக்கு செல்லும் போது உங்கள் விருப்பப்படி உடை உடுத்திக்கொண்டு சொன்று உங்களது ஆசையை தீர்த்துக்கொள்ளுங்கள் தயவு செய்து சீரழிந்து வரும் இளம் சமுதாயத்தின் முன் நீங்களும் போய் மேலும் சீரழிக்காதீர்கள். 

வெள்ளி, ஜூலை 20, 2012

செக்ஸ்க்கு தேவை வெங்காயம்




சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருகிறது. சிறு வயதிலேயே சர்க்கரை நோயாள் பாதிக்கப்படுபவர்கள் அதிகளவில் உள்ளனர். 30 வயதிலேயே அந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிக்கின்றனர். இது வாழ்க்கையை தொடங்கும் காலக்கட்டம். ஆனால் இவ்வியாதி இன்பமான வாழ்க்கையை துன்பமாக்குகிறது. 

காரணம், சர்க்கரை நோயாளிகளால் செக்ஸ் உறவில் ஈடுபடமுடிவதில் சிக்கல் உள்ளது. ஆண்களுக்கு ஆணுறுப்பு விரைப்பு தன்மைக்கு வருவதில்லை. பெண்களுக்கு, அவர்களுக்கான உறுப்பில் வறட்டு தன்மை ஏற்படுகிறது. இதனால் செக்ஸ் துன்பமாக மாறிவிடுகிறது. கணவன் - மனைவிக்குள் நடக்கும் சண்டையை தீர்க்கும் இடமாக இருப்பது படுக்கையறை. அந்த படுக்கை அறையே பயன்படுத்த முடியாமல் போனால் சண்டை சச்சரவுகள் அதிகமாகும். 

இனி அந்த பிரச்சனையில்லை. ஆண்மை சக்தி அதிகமாக்க, ஆண்மைக்கான ஹார்மோன்களை அதிகமாக்கும் ஒரு உணவு பொருள் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளார்கள் மருத்துவர்கள். சர்க்கரை நோயாளிகளும் கவலைப்படதேவையில்லை. ஏன் எனில் அந்த உணவு பொருளை சர்க்கரை நோயாளிகளும் உண்ணலாம். அது 

வெங்காயம். 

உரிக்க உரிக்க கடைசியில் ஒன்னுமேயில்லாத உணவு பொருள் வெங்காயம். இதனால் தான் பெரியார் பலயிடங்களில் பலரை திட்ட வெங்காயம் என்ற சொல்லாடலை பயன்படுத்தினார். கிராமங்களில், சும்மாவே அறு அறு என அறுப்பவனை வெங்காயம் மாதிரி பேசாதடா என்பார்கள்.   


ஓன்னும்மில்லாத அந்த வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு விற்க அது இந்தியாவில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டது. ஆயிரங்களில் பணம் தந்து வயாக்ரா மாத்திரை வாங்கி பெட்ரூமில் பலத்தை காட்டுவதற்கு பதில் வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொண்டால் குதிரை பலம் கிடைக்கும் என மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வு நம் ஊரில் நடக்கவில்லை. ஈரானில் நடத்தப்பட்டுள்ளது. ஆய்வு முடிவில் வெங்காயத்தில் செலினியம் என்னும் தாது உப்பு வெங்காயத்தில் அதிகமாகவுள்ளது. அந்த உப்பு ஆண்களின் ஆன்டிஆக்ஸிடென்சும் என்ற ஹார்மேனை அதிகமாக்கி டென்டோஸ்டிரான் என்ற ஹார்மேன் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. இதனால் செக்ஸ் உணர்வு அதிகமாக தூண்டப்பட்டு ஜோடியோடு நீண்ட நேரம் உறவு கொள்ளவும் இருவருக்குள் ஹார்மோன் உற்பத்தியையும் அதிகப்படுத்துகிறது. இதனால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கும் குழந்தை பேறு கிடைக்கும் என்கிறது அவ்வறிக்கை. இதனால் ஈரானியர்கள், எகிப்தியர்களும் பல ஆண்டுகளாகவே வெங்காய ஜீஸ் குடித்து குதுகலமாக தங்களது பெட்ரூம் வாழ்வை அமைத்துக்கொள்கிறார்கள். 

நம்மவூர் சித்த மருத்துவத்தில் முருங்கைக்காய்யை விட வெங்காயம் அதிகளவில் பாலியல் உணர்வு தூண்டும் சக்தியுள்ளது. அதனால் தான், ஜெயினர்கள் உணவில் வெங்காயத்தை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் அதற்கு காரணம், பாலியல் உணர்வை தூண்டிவிடும் என்பதால் தான். அதனால் அந்த வெங்காயம் இயற்கை வயாக்கரா என வர்ணிக்கப்படுகிறது. அதேபோல், பூண்டுவிலும் உணர்வை தூண்டும் சக்தி அதிகமாகவுள்ளது என ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. அதனை இப்போது தான் வெளிநாட்டில் கண்டறிகிறார்கள். 

அதனால் மகாஜனங்களே வெங்காயம் அதிகமாக சாப்பிடுங்கள், பெட்ரூம்மில் கலக்குங்கள். 

வியாழன், ஜூலை 19, 2012

தங்கத்தாய் ஆட்சியிலும் மின்வெட்டா? வெட்கம் வெட்கம்.




2017 வரை மின்வெட்டு என்கிறார்கள் மின்வாரிய பொறியாளர்கள். இனி வரும் மாதங்களில் 8 மணி நேரமாக இருக்கும் மின்வெட்டை இன்னும் அதிகப்படுத்த முடிவு செய்து ‘பொருத்துக்கொள்க’ என அறிவித்துவிட்டது மின்சார வாரியம். இனி 8 மணி நேரம் என்பது 12 மணி நேரமாகும் அதற்கு மேல் கூட ஆகலாம். முன்கூட்டியே அறிவித்ததற்க்கு வாரியத்தை பாராட்ட வேண்டும். காற்று அடிக்கவில்லை அதனால் காற்றாலை மின்சாரம் தடைப்பட்டுவிட்டது, அதேபோல் தென்மேற்கு பருவமழை தாமதமாகிறது இதனால் நீர் மின்சாரம் தயாரிக்க முடியவில்லை அதனாலே இந்தப்பற்றாக்குறை என்கிறார்கள். மழை வரவில்லை ஒத்துக்கொள்கிறோம். காற்றாலை காத்தாடிகள் எதனால் சுற்றாமல் நின்றது என கேட்டால் காற்று அடிக்கலன்னு சொல்றோம்மில்ல நம்புங்க என்கிறார்கள். 

ஆடி காத்துல அம்மியும் நகரும்ன்னு எங்க அப்பச்சிங்க எழுதிவச்சியிருக்காங்க. அது உண்மையாவும் இருக்கு அப்படியிருக்க காற்று அடிக்கலன்னு சொல்றிங்க. அதோட ஆசியாவுலயே அதிகமா காற்று வீசும் பகுதி கன்னியாகுமரி, நாகர்கோயில் பகுதிதான்னு இந்த விஞ்ஞானிங்கயெல்லாம் அறிவிச்சாங்களே அதெல்லாம் பொய்யாங்க?. 

காற்று அடிக்கவில்லை என்பது உண்மையல்ல. உண்மையான காரணம், தனியார் முதலாளிகளுக்கும் அரசுக்கும் நடக்கும் பண யுத்தம். காற்றாலை மின்சாரம், நிலக்கரி மின்சாரம் போன்றவற்றை அரசாங்கம் மட்டுமல்ல தனியார்களும் உற்பத்தி செய்து நமக்கு விற்பனை செய்கின்றனர். அவர்களிடம்மிருந்து வாங்கி தான் நமக்கு அரசாங்கம் சப்ளை செய்கிறது. தனியாரிடம்மிருந்து 1 யூனிட் 9 ரூபாய் வரை வாங்கி நமக்கு அரசாங்கம் தருகிறார்கள். (இதல எத்தனை பர்சன்ட் ஆள்றவங்களுக்கு கேட்காதிங்க எனக்கு தெரியாது.) இதனால் 95களுக்கு பின் டி.என்.இ.பி கையிருப்பு குறைய தொடங்கி கடன் மேல் கடன் இ.பியின் சொத்துக்கள் விற்பனைக்கும், அடமானத்துக்கும் சென்றன. தற்போது கடன்கார அமைப்பாக உள்ள இ.பி தனியார் முதலாளிகளுக்கு தரவேண்டிய தொகையாக நூற்றுக்கணக்கான கோடியை பாக்கி வைத்துள்ளது. 


இதனால் அடிக்கடி தனியார் முதலாளிகள் பணத்தை தந்தா தான் மின் உற்பத்தி எனச்சொல்லி ‘ஸ்ட்ரைக்’ செய்கின்றனர். இதனால் தான் பற்றாக்குறை. தாய் உள்ளம் கொண்டவரின் ஆட்சியில் எந்த அதிகாரியும் முயற்சி எடுத்து அதை சரிச்செய்ய முயல்வதில்லை. ( செஞ்சிட்டாலம்………….. )

தற்போது தமிழ்நாட்டில் மின்விளக்கு எரிய வேண்டும்மா என்பதை அரசை விட தனியார் முதலாளிகள் தீர்மானிக்கும் நிலைக்கு போய்விட்டோம். இத்தனைக்கும் இந்த தனியார் காற்றாலை மற்றும் நிலக்கரி பவர் பாயின்ட் முதலாளிகள் தமிழகத்தில் தொழில் தொடங்க மானியம் என்ற பெயரில் பலப்பல சலுகை தந்தது அரசாங்கம். அவர்கள் தான் இப்போது அல்வா தருகிறார்கள். சில மாதங்களுக்கு முன் 14 மணி நேரம் கரண்ட் கட் இருந்தபோது மதுரையில் உள்ள ஒரு நிறுவனம், தூத்துக்குடியில் உள்ள ஒரு நிறுவனம் பணம் கேட்டு ‘ஸ்ட்ரைக்’ செய்தது. 

கடன் சொல்லி மின்சாரத்தை வாங்கியாயிற்று பிறகென்ன சொன்ன தேதியில் பணம் தருவதில்லை. அவன் கேட்க வரும்போதுயெல்லாம் அப்பறம் தர்றனே, அட விடுங்க அப்பறம் தர்றன் என வள்ளல் மனம் கொண்ட தங்கத்தாய் ஆட்சியில் சொல்வதால் இன்று போய் நாளை வா கதை எங்கிட்ட வேணாம் என நிறுத்திவிட்டார்கள். அதன்பின் அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி பாதி பணத்தை தந்து உற்பத்தியை தொடங்க வைத்தார்கள். அரசாங்கமும், தனியார்களுக்கு சரியான நேரத்தில் பணம் தருவதில்லை. காரணம் நிதி பற்றாக்குறை. 

ஏன் மாநில அரசுகளே மின்உற்பத்தியில் ஈடுபடக்கூடாதா ?. 

மத்தியரசு 1990ல் மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையின் வாயிலாக, எந்த மாநிலமும் புதிய மின்உற்பத்தி யூனிட்களை அமைக்கக்கூடாது. இருக்கும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு லேட்டஸ்ட் உபகரணங்கள் எதுவும் வாங்ககூடாது. தனியார் முதலாளிகள் மின் உற்பத்தி செய்வார்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும், அவர்களிடம்மிருந்து மின்சாரத்தை வாங்கி தனியார் முதலீடுகளை ஊக்கவியுங்கள் என கூறிவிட்டது. (என்னவொரு பாசக்கார பயபுள்ளைங்க.)

இதனால் புதிய பிளான்ட்கள் எதையும் மாநில அரசுகளால் அமைக்க முடியவில்லை. கடந்த ஆட்சியில், அதற்கு முந்தைய ஆட்சியில் மத்தியரசிடம் கெஞ்சி கூத்தாடி 3 பிளான்ட்களை அமைக்க அனுமதி பெற்ற கட்டி முடித்துள்ளார்கள். அதில் இருந்து வரும் மின்சாரம் பற்றவில்லை. ( டூ பாத்ரூம் கூட குளு குளுன்னு இருக்கனம்ன்னு நினைக்கறான்.)

வடகிழக்கு மாநிலங்களில் அதிகமாக மின் உற்பத்தி நடக்கிறது. அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகம் கொண்டுவர ஒரு யூனிட்க்கு அதிகபட்சம் 1 ரூபாய் 50 பைசா தான் செலவாகும் என பொறியார்கள் சொன்னதின் அடிப்படையில் 2001ல், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை கொண்டு வர மத்தியரசின் மூலம் தமிழகரசு திட்டமிட்டது. அதற்காக டெண்டர் விட்டது. மின்கம்பங்கள் அமைக்கும் பணிக்கான அந்த டெண்டரை அம்பானி குரூப் எடுத்தது. டெண்டரை எடுத்த புண்ணியவான், எனக்கு தொகை பத்தாது என அடுத்த மூன்றாவது மாதம் உச்சநீதிமன்றத்தை அணுகி இன்னும் கூடுதலா வேணும் என கேட்டு மனு போட்டான். 

நாங்க சொன்ன தொகையை ஒத்துக்கிட்டு நீ டெண்டரை எடுத்துட்டு இப்ப வந்து கூட்டி குடு (அந்த கூட்டு கொடுயில்லைங்க) ன்னு கேட்டா எப்படி தரமுடியும். அதெல்லாம் தரமுடியாது என்றது. (அப்பவும் பாருங்க டெண்டரை கேன்சல் செய்து, வேற டெண்டர் விடல. அரசாங்கம் நினைத்தால் டெண்டரை ரத்து செய்யலாம்). வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஓர் ஆண்டாக நிலுவையில் உள்ளது. ( உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு நிறைய வேலையாம் ………………………… என்னது கேட்கல …………. என்ன வேலைன்னு கேட்கறிங்களா?........................ மணியாட்டற வேலை …………. சாமிக்குப்பா.) 

இதனால் வடகிழக்கு மாநில மின்சாரத்துக்கும் வழியில்லாமல் உள்ளது. மோடி என்கிற கேடி அரசாங்கம் தரும் மின்சாரம், நெய்வேலி மின்சாரம் போன்ற சிலதே தற்போது இருட்டில் இருந்து நம்மை காப்பாற்றுகிறது. 

மத்தியரசுக்கும், மாநில அரசுகளும் வருங்காலத்தை கணக்கில் கொண்டு திட்டங்கள் தீட்டுவதேயில்லை என்பது இந்த மின்சாரம் விஷயத்தில் உறுதியாக அறியமுடிகிறது. ஆண்டுக்கு ஆண்டு மக்களுக்கான மின் தேவை அதிகமாகிக்கொண்டே செல்கிறது. அதோடு 90களுக்கு பின் பன்னாட்டு கம்பெனிகள் பல இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் தொழில் தொடங்கின. அவர்களுக்கு தடையில்லா மின்சாரம், அதுவும் சலுகை விலையில் தருவதாக ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இப்படி செய்யுமபோது இதனை கணக்கிட்டு மின் உற்பத்தியில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், மாநில அரசுகளை மின் உற்பத்தியில் ஈடுபடாதே எனச்சொன்னதால் அப்பாடா என இவர்களும் விட்டுவிட்டார்கள். இப்போது இருட்டில் தவிக்கும் போது மக்களிடம் திட்டு வாங்குவது மாநிலத்தை ஆளும் கட்சிகள் தான். 

சரி விடுங்க நாம குறைப்பட்டு என்னப்பண்றத்து செவிடம் காதுல ஊதல சங்கு தான். உங்களுக்கு ஒரு விஷயம் நீங்க முடிஞ்ச கேட்டுக்கங்க. 2013 முதல் மின்வெட்டின் நேரம் அநேகமாக 15 மணி நேரம் இருக்கும் என்கிறார்கள் மின்சார வாரியத்தில் உள்ள பொறியாளர்கள். 

திங்கள், ஜூலை 16, 2012

நடுரோட்டில் மனித நாய்கள்.........

 
 
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் நடந்த விவகாரம் மன்னிக்க முடியாத குற்றம். 19வயது இளம்பெண்ணை பிஸியாக காணப்படும் சாலையில் இரவில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்ததை எந்த விளக்கத்தை கூறியும் நியாயப்படுத்த முடியாது.

கடந்த 10ந்தேதி தன் தோழியின் பிறந்தநாள் விழா வின்ட் கிளப்பில் மது விருந்துடன் நடந்துள்ளது. அப்போது அங்கிருந்த இளைஞர்களில் சிலருக்கும் அப்பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கிளப்பின் பாதுகாவலர்கள் அந்த பெண், அந்த பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர்களை அங்கிருந்து விரட்டியுள்ளது. அந்த பெண் அங்கிருந்து கிளம்பி குவாத்தி-ஷில்லாங்க சாலையில் நடந்தே வந்துள்ளார். அப்போது அந்த ஹோட்டலில் இருந்து பின்னாடியே வந்த சில இளைஞர்கள் அந்த பெண்ணின் உடல் அங்கங்கள் மீது கைவைத்துள்ளனர்.

இதனை பார்த்து சாலையில் சென்ற சிலப்பல இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வந்து அந்த பெண்ணின் மீது பாய்ந்து அரை நிர்வாணமாக்கினர். அந்த பெண் அழுதும், திமிறியும் விடவில்லை அந்த இளைஞர்கள். இதனை டிவி சேனல் ஒன்று படம் எடுப்பதையும் பொருட்படுத்தாமல் அந்த பெண்ணின் அங்கங்கள் மீதே குறியாக இருந்தனர். வெறிக்கொண்டு தங்கள் காம இச்சையை காட்டிய அவர்களில் பெரும்பாலானோர் படித்தவர்கள் தான் என்பது தான் வேதனை.

அந்த பெண்ணை துரத்தியவர்களின் நோக்கம். அந்த பெண்ணை அடைய வேண்டும் என்பதே. ஆதனை மற்றவர்கள் தடுத்திருக்க வேண்டும் ஆனால் இதுதான் சந்தர்ப்பம் என நடுரோட்டில் நாய்கள் வன்புனர்ச்சிக்கு அலைவதைப்போல அலைந்தனர்.

சில மனிதாபிமானவாதிகள் காவல்துறைக்கு தகவல் சொல்ல அதன்பின்பே போலிஸார் வந்து அந்த பெண்ணை காப்பாற்றி சென்றுள்ளனர். அப்போதும் அந்த பெண்ணின் உடலோடு விளையாடியவர்களை கைது செய்யவில்லை. தொலைக்காட்சிகளில் அந்த காட்சிகள் ஒளிபரப்பானபின் கண்டனங்கள் வந்தபின் காவல்துறை சிலரை மட்டும் கைது செய்துள்ளது.

அந்தபெண் குடித்தால், தகராறு செய்தால் உச்சபட்சமாக தவறான நடத்தை கொண்ட பெண் என்றும் எதிர்ப்புகாட்டுபவர்கள் கூறலாம் அந்த பெண் என்ன தவறு வேண்டுமானாலும் செய்துயிருக்கட்டும். ஒரு இளம் பெண்ணிடம் நடந்துக்கொண்ட முறையா அது.

தற்போது, டிவி நிருபர் மீதும் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. அதாவது, அந்த பெண் துடித்தபோது காப்பாற்ற டிவி மீடியாவினர் வரவில்லை என்றும், இது பரபரப்புக்காக நிருபரே உருவாக்கினார் என்றும் கூறப்படுகிறது. அவ்வளவு முட்டாளா அந்த தொலைக்காட்சி நிருபர்?.

ஒரு தவறை மறைக்க இன்னோரு தவறை செய்யாதீர்கள்.

ஞாயிறு, ஜூலை 15, 2012

சுகமான சுமைகள் …………. 28.




உங்கக்கா என்னை அசிங்கப்படுத்திட்டா. பணக்காரின்னு பந்தா பண்றாலா. பெங்களுரூ வந்துட்டா பெரிய இவளா?, அவ வீட்டுக்கு வந்துட்டன்னு நடு வீட்ல நிக்கவச்சி கேள்வி கேட்கறா என்ன நினைச்சிக்கிட்டு இருக்கறா என்னைப்பத்தி? அவளை நான் சும்மா விடமாட்டன்? நான் இப்பவே ஊருக்கு போறன் அவ ஊருக்கு வரட்டும் நான் யாருன்னு காட்டறன்னு சொல்லி என்னை திட்டனியாமே. என்ன மனசுல பெரிய இதுன்னு நினைப்பா? ஊருக்கு வந்தா கிழிச்சிடுவியா நீ என கேட்க ப்ரியா பின்னால் கை கட்டிக்கொண்டு நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டுயிருந்தாள் கவிதா. 

பதிலேதும் சொல்லாமல் டிபன் எடுத்து வைங்க பசிக்குது. 

நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. 

சும்மா கற்பனை பண்ணிக்கிட்டு ஏதாவது பேசாதிங்க. 

நான் ஒன்னும் கற்பனை பண்ணல. இவக்கிட்ட தான் நீ திட்டியிருக்க. 

இங்க பாருங்க மேடம். நான் வந்தது தப்பு தான் நான் ஊருக்கு போறன்னு சொன்னன். உங்கள திட்டல.  

அப்ப அவ பொய் சொல்றாளா?. 

அத நீங்க அங்கத்தான் கேட்கனும். 

அக்கா பொய் சொல்றாரு. விடாத கேளு. 

வாய மூடிக்கிட்டு இருக்கியா. நீ தூண்டிவிடாத. 

அவ பொய் சொல்லமாட்டா. 

ஆமாம். உங்கிட்ட சொன்னதை விட ரொம்ப அதிகமாவே திட்டனன். திட்டனது மட்டும் தான் சொன்னாங்கள. பாத்ரூம் மேட்டர் எதுவும் சொல்லயா?. 

உடனே பதறிய கவிதா அக்கா நீ போய் டிபன் எடுத்து வா. எனக்கும் பசிங்குது. 

என்ன பாத்ரூம் மேட்டர் என ப்ரியா இழுக்கும்போதே. 

இல்லக்கா பாத்ரூம்ல தண்ணீ வரலயேன்னு திட்டனாரு அவ்ளோ தான் என படப்படப்பாக பதில் சொன்னவள் நீ போய் டிபன் எடுத்தாக்கா என பிடித்து தள்ளினாள். 

கொஞ்சம் சந்தேகத்துடனே உள்ளே போக நாற்காலியில் அமர்ந்த என்னை நங்க்கென மண்டையில் கொட்டியபடியே மூஞ்சப்பாரு என்றாள் கவிதா.  ப்ரியா டிபன் எடுத்து வந்து வைக்க நானும், கவிதாவும் சாப்பிட்டு விட்டு ஹாலில் வந்து அமர்ந்தேன். அக்காவும், தங்கையும் பின்னாடியே வந்தனர். 

ஸாரிப்பா உன்ன பாத்ததும் ஷாக்காயிட்டன். எங்க மாமியார் – மாமனார் கேட்;டா என்ன சொல்றது, என்ன சொல்வாங்களோன்னு பயந்து தான் எதுக்கு வந்தன்னு கேட்டன். 

நீ கேட்டதுல தப்புயில்ல. நான் வந்ததுல தான் தப்பு. நான் வரலன்னு தான் சொன்னன். உன் அருமை தங்கச்சி தான் விடாம இழுத்து வந்தாங்க. 

நான் தான் ஸாரி கேட்கறன்யில்ல. 

அத விடுங்க. 

என்ன வாங்க, போங்கன்னு மரியாதை தூள் பறக்குது. 

கல்யாணமாகிடுச்சே அதனால தான். 

கல்யாணமாகிட்டா ரொம்ப மரியாதை தரனம்ன்னு யார் சொன்னது. நீ எப்பவும் போலவே கூப்பிட்டு. நான் உன்னப்பத்தி அவர்க்கிட்ட சொல்லியிருக்கன். அவர் எதுவும் தப்பா எடுத்துக்கமாட்டாரு. 

ம். 

என்ன ப்ரோகிராம் ?. 

இன்னைக்கு நல்லா தூங்கனும். ஊர் சுத்தறதெல்லாம் நாளைக்கு தான். 

டிவியை ஆன் செய்துவிட்டு ரிமோட்டை கையில் தர ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டு அப்படியே ஊர் கதை பேசிக்கொண்டு இருந்தோம். ஆமாம், உன் வீட்டுக்காரரை திட்டனதும் ஆபிஸ்க்கு போறன்னு எஸ்கேப்பாகிட்டாரே எப்ப வருவாரு. 

வந்துடுவாரு எனச்சொல்லும்போதே வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. 

வந்ததும் காபி கேட்பாரு என்றபடி கிச்சன்க்கு செல்ல கொஞ்ச நேரத்தில் மேலே வந்தவர். ஹாலில் இருந்த எங்களை ஓரக்கண்ணால் பார்த்தபடி அவரது ரூம்க்கு போக முயன்றார். 

எதிரே வந்த ப்ரியா ஏங்க வீட்டுக்கு வந்துயிருக்கவங்ககிட்ட நல்லாயிருக்கிங்களா அப்படின்னு கேட்டிங்களா? பாத்துட்டு நீங்க மாட்டுன்னு உள்ள போறிங்க, அவன் என்ன நினைப்பான் என கேட்டதும் அப்படியே அதிர்ச்சியில் நின்றார். 

ஏய் உன் மனசுல என்னத்தான் நினைச்சிக்கிட்டு இருக்கறா. தங்கச்சியும், அம்மாவும் வர்றாங்க வீட்லயே இருன்னு லீவு போடச்சொன்ன. வந்தவங்கக்கிட்ட பேசும்போதே திட்டன. ஏதுடா வம்புன்னு வெளியில போய்ட்டு வந்தவன்க்கிட்ட கண்டுக்காம பேறன்னு கேட்கற?.

அப்படியா கேட்டன்?. 

ஏய் உலக நடிப்பு உன்னிது என்றவரின் பேச்சை காதில் வாங்கியபடியே கிச்சன் சென்று காபி டம்பளை தந்த ப்ரியாவிடம், அவுங்களுக்கு. 

சாப்ட்டாங்க. 

பிரச்சனை முடிஞ்சதா?.

என்ன பிரச்சனை. நீங்களா எதையாவது கற்பனை பண்ணிக்காதிங்க. அவுங்க ஒரு வாரம் இங்கத்தான் இருக்க போறாங்க. எங்கங்க போறதுன்னு ப்ளான் பண்ணுங்க. 

பாஸ் பாத்திங்களா. பொண்ணு பாக்க வரும்போது ஊமச்சி மாதிரி இருந்தாங்க. இப்ப பேசி சமாளிக்க முடியல. 

விடுங்க சார். கல்யாணமான ஆம்பளைங்க அடிமைதானே. 

அடிமையா இருக்கற மாதிரி நடிக்கறதுன்னு சொல்லு என ப்ரியா சொல்ல கப்சிப்பென ஆனது. அடுத்த மூன்று நாள் தீம்பார்க், கார்டன் என பெங்களுரை ஒரு ரவுண்ட் வந்தோம். அடுத்ததாக இரண்டு நாள் ட்ரிப்பாக ஜோக்பால்ஸ்க்கு காரிலேயே பயணமானோம். நானும் அவரும் மாறி மாறி காரை ஓட்டிக்கொண்டு செல்லும் போது, என்ன பாஸ் நீங்களும் கவிதாவும் காதலிக்கறிங்களா என சடாரென கேட்டபோது ஒரு நிமிடம் தயங்கினோம். 

தப்பா எடுத்துக்காதிங்க. நீங்க இரண்டு பேரும் தனியா வரும்போதே லேசா புரிஞ்சது அதனால தான் கேட்டன். 

ம். காதலிக்கறோம். இரண்டு பேர் வீட்டுக்கும் தெரியாது. உங்க வீட்ல இருக்கறவங்களுக்கு மட்டும் தான் தெரியும். வேலைக்கு போனதுக்கப்பறம் தான் இரண்டு பேர் வீட்லயும் சொல்லனும். 

நான் கூட காதலிச்சிதான் கல்யாணம் பண்ணனும்ன்னு பாத்தன். நல்ல நல்ல பிகர்ங்க ரூட் விட்டதுங்க. நான் ஒன்ன செலக்ட் பண்ணலாம்ன்னு பாத்தப்ப வீட்ல பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. சரி கல்யாணத்துக்கப்பறம் மனைவிய காதலிக்கலாம்ன்னு பாத்தன். கல்யாணத்தப்ப தான் தெரிஞ்சது இது மொக்க பிகர், சுத்த நாட்டுப்புறம்ன்னு அப்பறம் எங்க காதல் பண்றத்து. சண்டை தான் போடவேண்டியதா இருக்கு. 

இருக்கும் இருக்கும் என ப்ரியா லேசாக முறைக்க. சைலண்டானவர் உங்க லவ் மேட்டரை சொல்லுங்க சார் என கேட்டார். 

உங்க மச்சனிச்சி. கைல கிரிட்டிங் கார்ட வச்சிக்கிட்டு என் பின்னாடியே சுத்தி சுத்தி வந்தாங்க. அப்பறம் தான் போனா போகுதுன்னு ஓ.கே சொன்னன். லவ்வ ஓ.கே சொன்னதுக்கப்பறம் தான் தெரிஞ்சது லவ் பண்ற பொண்ணு இவுங்களோட தங்கச்சின்னு. 

அப்பறம். 

முதல்லயே தெரிஞ்சியிருந்தா லவ்வ ஓ.கே பண்ணியிருக்கவே மாட்டன். 

ஏன். 

உங்க மனைவியப்பாத்தா காலேஜ்ஜே பயப்படும். அப்படின்னா எப்படிப்பட்ட ஆளுன்னு பாத்துக்குங்க. அவுங்களோட தங்கச்சியப்போய் எவன் காதலிப்பான். நான் தான் தெரியாம ஏமாந்துட்டன்.

நான் உன் பின்னாடி சுத்தனன்னா. உன் மூஞ்சிய கண்ணாடியில போய் பாரு யாரு யார் பின்னாடி சுத்தனாங்கன்னு தெரியும் என கவிதா பதிலடிக்க நக்கலும், நய்யான்டியுமாய் இரண்டு நாள் ட்ரிப் முடிந்து பெங்களுரூ திரும்பியபோது இரவு 8 மணியாகியிருந்தது. 

ப்ரியாவின் அம்மா அவரது சம்மந்தியுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள். நாங்கள் உள்ளே நுழைந்ததும் எழுந்து நின்று எப்படி இருக்கிங்க மாப்ள என்றதும் ப்ரியாவின் வீட்டுக்காரர் நல்லாயிருக்கன் அத்தை என்றார். 

எப்ப வந்திங்க. 

நேத்து சாயந்தரம் வந்துட்டன். உங்களை டிஸ்டப் பண்ண வேணாம்ன்னு தான் சொல்லல. 

மாமா வரலியா ?. 

கடையில வேலையிருக்கு நீ மட்டும் போய் வான்னாரு. அதனால நான் மட்டும் தான் வந்தன். இரும்மா வந்துடறோம் என்றபடி கணவரை தள்ளிக்கொண்டு ரூம்க்குள் சென்றார். 

என்னப்பா எப்படியிருக்கற. 

நல்லாருக்கேம்மா. உங்க உடம்பு சரியாகிடுச்சா. 

ம். சரியாகிடுச்சி. அதனால தான் ஊருக்கு வந்தன். 

சரி. ட்ரஸ் மாத்திக்கிட்டு வா. சாப்பிடுவிங்க என்றதும். நான்மேலே ரூம்க்கு சென்று துணியை மாத்திக்கொண்டு வந்தேன். 

அனைவரும் இரவு உணவை முடித்தபின் அவரவர் ரூம்க்கு சென்றோம். காலையில் நான் எழுந்தபோது ஒன்பதாகியிருந்தது. குளித்துவிட்டு கீழே வந்தபோது எதிரே வந்த கவிதா, விடிஞ்சது கூட தெரியாம தூங்கிக்கிட்டு இருக்கற. 

கார்ல வந்த டயர்டு. அதிருக்கட்டும் என்ன வீடே அமைதியாயிருக்கு. யாரையும் காணோம். 

அம்மாவும், அக்காவும் கோயிலுக்கு போயிருக்காங்க. மாமா ஆபிஸ் போயாச்சி. அத்தை ஏதோ தெரிஞ்ச வீட்ல விசேஷம்ன்னு காலையிலயே போனாங்க. 

அப்போ வீட்ல நீயும் நானும் மட்டும் தானா?. 

ஆமாம். ஏன் கேட்கற. 

இல்ல சும்மாத்தான் கேட்டன். 

கையையும், காலையும் வச்சிக்கிட்டு சும்மாயிருக்கனும் ஏதாவது சில்மிஷம் பண்ண அவ்ளோ தான் என கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்லிவிட்டு போனால். 

போடீ போ. எத்தனை நாளைக்குன்னு நானும் தான் பாக்கறன். 

தாலி கட்டற வரைக்கும். 

அப்ப இப்பவே கட்டிடறன். 

முதல்ல வேஷ்டிய ஒழுங்கா கட்டு அப்பறம் தாலி கட்டுவ. 

நாங்க ஒழுங்கா தான் கட்டியிருக்கறோம். நீ போய் வேலையப்பாரு என்றபடி சோபாவில் அமர்ந்து டிவி ரிமோட்டை எடுத்து ஆன் செய்ய கேபிளில் படம் வரவில்லை. அமைதியாக டிவியவே பாத்துக்கொண்டு இருந்தேன். 

எங்க பேச்சு மூச்ச காணோம். 



இங்கத்தான் இருக்கன். சாப்பிடவா என்றதும் போய் அமர்ந்ததும் டியூப்லைட்ட கல்யாணம் பண்ணி என்ன பண்ணப்போறனோ என முனகிக்கொண்டே டேபிளில் இட்லி தட்டை கொண்டு வந்து வைத்துவிட்டு உள்ளே போனவளை இழுத்து பிடித்து கன்னத்தில் ஒரு முத்தமிட்டதும் ஷாக்காகி நின்றாள். 

சடாரென சுதகரித்துக்கொண்டு ச்சீ போ என பிடித்து தள்ளிவிட்டுவிட்டு கிச்சன்குள் சென்றவள் வெளியே வரவேயில்லை. அவசரப்பட்டுட்டோம் போல என எண்ணியபடி என்ன செய்யலாம் என யோசித்தபடி இட்லியிருக்கு. தொட்டுக்க எதயும் காணோம். 

டிபனும்மில்ல, ஒன்னும்மில்ல. இங்கயிருந்து முதல்ல எழுந்துப்போ. 

கோபத்தலயிருக்கா. இவளை எப்படி சமாதானப்படுத்தறது என யோசித்தப்படி நானும் கிச்சன்க்குள் நுழைந்தேன். நான் உள்ளே நுழைவது அவளுக்கு தெரிந்திருந்தாலும் திரும்பாமல் நின்றாள். மெல்ல அவள் அருகே சென்று அவளை பின்பக்கமாக கட்டிப்பிடித்ததும் உதறினால். 

அவளை விடாமல் மேடத்துக்கு எம்மேல என்ன கோபம். 

நீ பண்ணதுக்கு கோபப்படாம என்ன செய்வாங்களாம் என்றபடி கையிலிருந்து நழுவ அவளால் முடிந்தவரை முயற்சித்தால். 

ஏய் காதல்ல முத்தம் கூட இல்லைன்னா எப்படி என்றபடி அவளை இறுக்கி பிடித்து அவள் கழுத்தில் ஒரு முத்தம் தந்ததும் அவள் திமிருவது அதிகமானது. 

விடலன்னா கத்துவன். 

கத்தன உதடு புன்னாகிடும் என்றதும் அமைதியா இருந்தவள். மெல்ல திமிறுவதை நிறுத்தியவல் வீட்ல யாரையும் காணோம் தனியா இருக்கறவள கொஞ்சுவோம், இல்லன்னா சின்னதா ரொமான்ஸ் பண்ணி சின்னதா முத்தம் தருவோம் அப்படிங்கற எண்ணமேயில்லாம டிவி பாக்க உட்கார்ந்தா என்ன அர்த்தம். 

இல்ல நீ திட்டுவியோன்னு தான். 

சரியான லூசுடா நீ. 

ஏய் என்ன டா போட்டு பேசற. 

அப்படித்தான் பேசுவன். 

கொழுப்புடீ. 

உனக்கு இருக்கற விட கம்மி தான். 

எனக்கு எங்கயிருக்கு. 

பின்ன முத்தம் தந்தா கொழுப்புதானே. 

நான் கேட்டதும் நீ ஓ.கே சொல்லியிருந்தா இப்படி நடந்திருக்காது. 

நீ கேட்டதும் ஓ.கே சொல்லிட்டா அதல ஒரு இன்ட்ரஸ்ட்டே இருக்காது. ஒன்னு தெரிஞ்சிக்க, காதலி தனியா இருக்கான்னா உடனே அவளை கொஞ்சம் புகழ்ந்து, கொஞ்சம் கொஞ்சமா நெருங்கி பேசி, தோல் மேல கைபோட்டு ஒன்னே ஒன்னுன்னு கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சினின்னா முடியாதுன்னு அவ பிகு பண்ணுவா. ஓன்னே ஒன்னுதான் அதுக்கப்பறம் கேட்கமாட்டன்னு ஐஸ் வைக்கறப்ப அவ மனசுல சீக்கிரம் தந்து தொலையேன்டான்னு இருக்கும். ஆனா அத சொல்ல மாட்டாங்க. கடைசியில காதலன் கெஞ்சறதப்பாத்து மனசு இறங்கற மாதிரி காட்டிக்கிட்டு ஒன்னே ஒன்னு தான். அதுக்கப்பறம் கேட்ககூடாதுன்னு சொல்லுவாங்க. காதலன் ஓ.கே சொல்லி ஒன்னு தந்தான்னா அதுக்கப்பறம் பொண்ணுங்க அத பத்தாக்கற வழிய காட்டுவாளுங்க. 

நீ என்னடான்னா சடார்ன்னு முத்தம் தந்துட்டு சமாதானம் செய்யறன்னு இப்படி வந்து கட்டிப்புடிச்சா திட்டாம என்ன செய்வாங்க. திடீர்ன்னு முத்தம் தந்தோம்மே. கோவத்தல இருக்காலே என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சி. உள்ள வந்து என் பின்னாடி நின்னுக்கிட்டு என்னை சமாதானம் பண்ணன்னும்போது கொஞ்சம் பிகு பண்ணுவன். அதுக்கப்பறம் ஸாரி கேட்டுக்கிட்டே இன்னோரு முத்தத்துக்கு ட்ரை பண்ணியிருந்தா கிடைச்சியிருக்கும். 

நீ என்னடான்னா உள்ள வந்து அப்படியே கட்டிப்புடிச்சி ஸாரி சொன்னா என்ன அர்த்தம் என கேட்டாள். இல்லப்பா இதுக்கு முன்னாடி பண்ணதில்லையா அதான். 

இதுக்கெல்லாம் ட்ரைனிங்கா தருவாங்க. லூசு. சினிமா ஏதாவது பாத்தாதானே. அதலயிருக்கற ரொமான்ஸ் பத்தி தெரியும். 

விடு இனிமே பாத்து தெரிஞ்சிக்கறன். 

நீ பாத்து தெரிஞ்சிக்கறப்ப நம்ம புள்ளைங்க காதலிக்க ஆரம்பிச்சியிருக்கும். 

ஏய் விட்டா ஒன்னும் தெரியாதவன்னு முத்திரை குத்திடுவ போலயிருக்கு.

வேற என்னவாம். 

கல்யாணத்துக்கு அப்பறம் பாரு. அய்யாவோட திறமைய. 

க்கும். இப்ப என்னை விட்டுட்டு போய் உட்காரு டிபன் எடுத்து வர்றன் என பிடித்து தள்ள வெளியே வந்தபோது அதிர்ந்து போனேன். 

ப்ரியா ஹாலில் அமர்ந்திருந்தாள். ப்ரியாவின் அம்மா நின்றுக்கொண்டுயிருந்தார்கள். வெளியே வந்த கவிதா என் பார்வை போன பக்கம் பார்த்தவளின் கையில் இருந்த சம்பார் கிண்ணம் கீழே விழுந்துயிருந்தது. 

தொடரும்……………

சனி, ஜூலை 07, 2012

சேவைக்கு சினிமாத்துறை எதிர்ப்பு.




ஜீலை 1ந்தேதி முதல் 10 லட்சத்துக்கு மேல் சம்பளம் பெறும் சினிமா, தொலைக்காட்சி நடிகர்-நடிகைகள் அனைவரும் 12.3 சதவிதம் சேவைவரியை கண்டிப்பாக கட்டவேண்டும் என மைய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு தான் இந்தியாவின் சினிமா-சின்னத்திரை உலகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. 

கலைத்துறை மீது சேவை வரி விதிப்பால், தயாரிப்பு செலவு அதிகமாகும், இதனால் சினிமா தொழில் முடங்கும் என்கிறார்கள் தயாரிப்பாளார்கள். நடிகர் – நடிகைகள் வாங்கும் சம்பளங்களுக்கு சேவை வரி விதிப்பதால் அவர்களின் உழைப்பை அரசு உறிஞ்சுகிறது என டுடிவிட்டரில் கருத்து கூறியுள்ளார் நடிகை சோனம்கபூர். 

சினிமாத்துறையில் உள்ளவர்கள் மக்களை காக்க வந்த ரட்சகர்களா என்ன சேவை வரியில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க. 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் கூப்பன் வாங்கும் ஒரு கூலிக்காரனிடமே சேவை வரி வசூலிக்கப்படுகிறது. அப்படியிருக்க பொழுது போக்குக்காக படம் எடுத்து அதனை பார்க்க 100 ரூபாய், 200 ரூபாய்க்கு டிக்கட் விற்கும் சினிமாத்துறையில் உள்ளவர்கள் சேவை வரி கட்டகூடாதா என்ன. 

நடிகர் – நடிகைகளால் இந்தியாவில் ஏதாவது மாற்றம் நடந்துள்ளதா, புரட்சி நடந்துள்ளதா, மக்களின் பிரச்சனைகள் தீர்ந்துள்ளதா, லஞ்ச லாவண்யம் குறைந்துள்ளதா, அரசியல்வாதிகள் திருந்தியுள்ளார்களா? என்ன நடந்துள்ளது இவர்களுக்கு சலுகை காட்ட. 

இன்றைய இந்திய கலாச்சாரமும், பண்பாடும் சீரழிந்ததுக்கு காரணம் இந்த பச்சோந்திகள் தான். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கண்ட கஸ்மாலங்களை நடிப்பு என்ற பெயரில் ஆபாசங்களையும், வன்முறைகளையும் இளைய தலைமுறையினரிடம் விதைத்ததை தவிர இந்த சினிமா உலகம் என்ன செய்துள்ளது. 

அதோடு, படம் எடுத்து ஓசியிலா மக்களுக்கு காட்டுகிறார்கள். 10 ரூபாய்க்கு விற்க வேண்டிய டிக்கட்டை 100 ரூபாய்க்கு விற்பனை செய்து அரசாங்கத்தை, பார்வையாளனை ஏமாற்றி கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். 


திரையில் தான் ஊழல்களுக்கு எதிராக கொடி பிடிப்பார்கள். ஆனால் நிஜத்தில் நடிகர், நடிகைகள், டெக்னிஷியன்கள் அந்த பாடத்துக்கு வாங்கிய சம்பளத்தில் பாதி பணத்தை கறுப்பாக தான் வாங்குகிறார்கள். ஊழலை எதிர்ப்பதாக காட்டிக்கொள்ளும் இவர்கள் நிஜத்தில் அரசாங்கத்துக்கு கட்ட வேண்டிய வரியை கோடிகளில் ஏமாற்றுகிறார்கள். அதோடு, யார் ஆளும்கட்சியாக இருக்கிறார்களோ அவர்களுக்கு ஜால்ரா அடித்து தங்களது பணத்தை பாதுகாத்துக்கொள்ளும் பச்சோந்திகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு வேண்டுமாம். அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை தொடர்ந்து அதிகளவில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் இந்த கலைத்துறையினர் தான். 

ஒரே வார்த்தையில் சினிமா உலகத்தை பற்றி குறிப்பிட வேண்டும் என்றால் மக்களை சுரண்டி பிழைக்கும் பச்சோந்திகள் இவர்கள். இவர்களுக்கு சேவை வரியில் இருந்து மட்டும் விலக்கு தரவேகூடாது. 

வெள்ளி, ஜூலை 06, 2012

இந்தியாவை முதுகில் குத்திய இலங்கை.




இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளுடன் போர் நடத்தி ஈழத்தமிழர்களை கொன்றபோது, அதற்கு உதவியாக, ஆயுதங்களை, தார்மீக ஆதரவை வழங்கிய நாடு இந்திய ஒன்றியத்தை ஆளும் காங்கிரஸ் அரசு. அப்போது, இலங்கை எப்போதும் இந்தியாவை முதுகில் குத்தியே பழக்கம் உடையது. அதனால் இலங்கையை ஆதரிக்காதீர்கள் என தமிழகத்தில் இருந்து எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டது. இந்தியா உதவவில்லை என்றால் சீனா அதிகமாக உதவி செய்யும் அது வருங்காலத்தில் நமக்கு ஆபத்தில் முடியும் என்றார்கள் வெளியுறவுத்துறை அதிகாரிகள். அதனைச்சொல்லி சொல்லியே இலங்கைக்கான உதவிகளை வாரி வழங்கியது, பிற நாடுகள் போர் நிறுத்தத்துக்கு முயன்றபோது இந்தியா தான் தடுப்பனையாக இருந்து அதை தடுத்தது. இவையெல்லாம் புலிகள் மீதான கோபத்தில் செய்தார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் சீனாவின் பிடியில் இலங்கை சிக்கிவிடக்கூடாது என்பதாலே அதிக உதவிகளை செய்தது. 

ஆனால், தமிழக ஈழ ஆதரவாளர்கள் எச்சரித்தது போல தற்போது இலங்கை இந்தியாவின் முதுகில் குத்த தொடங்கிவிட்டது. அதன் வலியை வாய் விட்டு கத்தி சொல்லவும் முடியாமல் தவிக்கிறது. போரின் போது, இந்தியாவுடன் பிண்ணி பினைந்திருந்த இலங்கை அதிபர் இராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்கள் போர் முடிந்ததும் இந்தியாவுக்கு கைமாறு செய்கிறோம் என்ற போர்வையில் இலங்கையில் முதலீடு செய்ய இந்தியாவை அனுமதித்தது. 

அதன்படி 
1. சம்பூர், காங்கேசன் துறை, வடபகுதி இரயில் பாதை புனரமைப்பு. 
2. காங்கேசன் துறை அபிவிருத்தி திட்டம். 
3. மன்னார் கடல் பகுதியில் கடல் எண்ணெய் எடுக்கும் திட்டம்.
4. திருகோணமலையில் உள்ள எண்ணெய் நிறுத்தை மேம்படுத்தும் திட்டம்.
5. பலாலி விமானநிலையம் புனரமைப்பு போன்றவை இந்தியா இலங்கையில் செயல்படுத்த இலங்கை தந்த அனுமதி. 

அதேநேரம் சீனாவுக்கும் முதலீடுகள் செய்ய அனுமதி தந்தது. 

அதன்படி 
1. அம்பாந்தோட்டத்தில் விமான நிலையம்.
2. அம்பாந்தோட்டையில் துறைமுகம் கட்டுமானம்.
3. கொழும்பு துறைமுக விரிவாக்கம்.
4. கொழும்பு இரயில்பாதை அமைப்பு. 
5. நுரைச்சோலையில் அனல்மின்நிலையம் கட்டுதல்.
6. மொறகந்த என்னும்மிடத்தில் டேம் கட்ட அனுமதி என சொல்லிக்கொண்டே போகாலம். இப்படி பல பெரிய அனுமதிகளை சீனாவுக்கு இலங்கை தந்துள்ளது. 


தற்போது இந்தியாவுக்கு தந்த காங்கேசன் துறைமுகம் அபிவிருத்திதிட்டம், மன்னார் கடல் பகுதியில் எண்ணெய் ஆய்வு திட்டம் திட்டம் போன்றவற்றையும் சீனாவுக்கே தர இலங்கை இராஜபக்சே சகோதரர்கள் முடிவு செய்து அதற்கான பணியை தொடங்கியுள்ளார்கள். இதனால் தான் கடந்தவாரம் இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் சிவசங்கர்மேனன் இலங்கை பயணமானார். இந்தியாவை பகைத்துக்கொள்ளாதீர்கள் என பேசிப்பார்த்தார் ஆனால் இராஜபக்சே சகோதரர்கள் எதற்கும் அசைந்துக்கொடுப்பதாக தெரியவில்லை. சீனாவே உற்ற நண்பன் என்றும் இந்தியாவை இலங்கை மண்ணில் இருந்து துரத்த வேண்டும் என எண்ணுகிறது. 


சீனாவை இலங்கையில் அதிகமாக கால் ஊன்றிவிட்டது இது பெரும் ஆபத்து இனி இந்தியா இலங்கையை தன் கைப்பிடிக்குள் வைத்துக்கொள்ள முடியாது என்ற உறுதியான முடிவுக்கு தற்போது வந்துள்ள அமெரிக்கா இலங்கையில் நேரடியாக தன் பொருளாதார ரீதியாக தன் முதலீடுகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளை தொடங்கிய வேகத்தில் அமெரிக்காவிடம் பணிந்து போக தொடங்கியுள்ளது இலங்கை. அமெரிக்காவின் ஆசைப்படியே முன்னால் ராணுவ தளபதி சரத்பொன்சேகாவை விடுதலை செய்தார் இராஜபக்சே. அதோடு இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட சில திட்டங்களை அமெரிக்காவிடம் தாரை வார்த்துள்ளார். அதைப்பெற்றால் இந்தியாவின் நட்பை இழந்துவிடுவோம்மோ என தயங்கிய அமெரிக்க அரசு தற்போது சீனாவை எதிர்க்கும் வல்லமை இந்தியாவிடம் இல்லை என்பதை உணர்ந்து இந்தியாவுக்கு ஒதுக்கிய திட்டங்களை இலங்கை கைமாற்றி விட முடிவு செய்ய அதனை அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டது. 

இலங்கை இந்தியாவை முதுகில் குத்தும் என எச்சரித்ததை கண்டுக்காத இந்திய அரசின் மூகத்தின் மேலேயே இலங்கை ………….. அடித்துள்ளது. இதன் பின்னும் திருந்தவில்லையென்றால் இந்தியாவின் தென் பகுதி பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும். 

புதன், ஜூலை 04, 2012

சிறையும்....... வெறுப்பு சித்திரங்களும்……




திமுக தலைவர் கலைஞரே எதிர்பார்க்காத வெற்றி என்று தான் இதனை சொல்ல வேண்டும். அந்தளவுக்கு சிறை நிரப்பும் போராட்டத்தை வெற்றி பெற வைத்துள்ளார்கள் திமுக தொண்டர்கள். 

போராட்டத்துக்கு வந்தால் கைது செய்து 15 நாள் சிறை வைப்பார்கள் என அரசின் காவல்துறை பத்திரிக்கைகள் மூலம் கிளப்பிவிட்டது. ஜாமீன் கூட கிடையாது என்றார்கள், தமிழக சிறைகளில் இடம்மிள்ளாவிட்டால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநில சிறைகளில் அடைக்கப்படுவார்கள் என்றார்கள். உளவுத்துறையினர் கூட எதிர்பார்க்கும் அளவுக்கு கூட்டம் வராது என்றார்கள். மீடியாக்கள் கூட சம்பாத்தவர்கள் தலைவர்கள், சிறைக்கு போகவேண்டியவர்கள் நாங்களா என தொண்டர்களா விரக்தியில் உள்ளார்கள் என ‘படம்’ காட்டினார்கள். சித்திரம் வரைந்தார்கள், கட்டுரை எழுதினார்கள். அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு மவுனமாக இருந்தார்கள் உடன் பிறப்புகள்.
அந்த மவுனத்துக்கான பதிலை ஜீலை 4ந்தேதி தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் வெளிப்படுத்தினார்கள். 8 மணி போராட்டத்துக்கு காலை 7 மணிக்கே தங்களது சொந்த செலவில் தங்களது ஊர்களில் இருந்து பேருந்து மூலம் போராட்டம் நடத்தும் இடத்துக்கு கட்சி கொடியோடு வந்து சேர்ந்தார்கள். கட்சி கொடி கொண்டு வராதவர்கள் நேராக கட்சியின் அலுவலகங்களுக்கு சென்று கொடிகளை வாங்கிக்கொண்டு வந்து போராட்ட களத்தில் நின்றனர். நிர்வாகிகள் தான் 8 மணிக்கு வந்தார்கள். பலயிடங்களில் 9 மணிக்கு மேல் கூட வந்தார்கள். 

நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவதை போல தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் ஒரு பிரச்சனைக்கூட செய்யாமல் ஆளும் அரசையும், ஜெ வையும் கண்டித்து கோஷமிட்டபடி கைதானார்கள். கைது செய்தவர்களை ஏற்றி போக கொண்டு வரப்பட்ட பேருந்துகள், போலிஸ் வாகனங்கள் தான் பத்தவில்லை. அந்தளவுக்கு முண்டியடித்துக்கொண்டு ஏறினர். அவர்களை மண்டபங்களில் கொண்டு போய் அடைத்தது போலிஸ். 4ந்தேதி மாலை காவல்துறையே 96 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் அத்தனை பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் காவல்துறை தலைவர் ராமானுஜம். 

சில பத்திரிக்கைகள் மட்டும் 1.5 லட்சம் பேர் கைது செய்யப்பட்டார்கள், 3 லட்சம் பேர் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்ற உண்மை விவரத்தை வெளிச்சம்போட்டு காட்டியது. பல டிவிக்கள், செய்தி ஏடுகள் அதிகமானோர், ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டார்கள் என தலைப்பு போட்டு தங்களது வெறுப்பை காட்டியது. 

இருக்காதே பின்னே, கட்சி அழிந்தது, ஒழிந்தது, இனி திமுக அவ்வளவே, கோஷ்டி சண்டை, உலக மகா ஊழல் செய்தவர்கள், குடும்ப கட்சி, தமிழனத்துக்கு துரோகம்  என திமுக ஆட்சிக்கட்டிலில் இருந்து இறங்கியது முதல் முகாரி பாடியவர்கள் இவர்கள். ஜெ அரசின் அடக்கு முறைக்கு பின்னரும் உடன்பிறப்புகள் சுறுசுறுப்பாக உள்ளதை கண்டு இவர்களுக்கு அரிப்பு. அதனாலயே சிறை நிரப்பும் போராட்டம் முடிந்தபின்னும் அதில் குறை, குற்றம் காண்கிறார்கள். 

திமுகவிற்குள் ஆயிரம் சண்டை சச்சரவுகள் இருக்கலாம். அது கணவன்-மனைவிக்குள் இருக்கும் சண்டை போல. வரும் போகும். அடுத்தவனால் பிரச்சனை எனும் போது எந்த தொண்டனும் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டான் என்பதை உணர்த்தியுள்ளார்கள். 

வெற்றிகரமான போராட்டத்துக்கு பின்னும் திமுகவை இணையதளம், செய்திஏடுகள், மீடியாக்களில் நடுநிலை என்ற பெயரில் விமர்சிக்கும் தோழர்களுக்கு ஒரு கேள்வி, இதுபோன்ற ஒரு போராட்டத்தை வேறு எந்த கட்சியாவது எதிர்கட்சியாக இருக்கும் போது நடத்தும் தைரியம் உண்டா என்ற கேள்வியை கேட்கும் தைரியம் உண்டா?, திமுகவை, அதன் தலைவர்களை, அவர்களின் குடும்பத்தை அநாகரிகமாக சித்திரம் வரையும் ஏடுகளின் ஒவியர்களே, வெளியிடுபவர்களே, ஜெவை பற்றியோ, சசிகலா அல்லது அவர்களது குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றி சித்திரம் வரையும் தைரியம் உண்டா?, கைதுக்கு பயந்து வாய்தா மேல் வாய்தா வாங்கும் ஜெவை பற்றி பதுங்கும் முதல்வர் என்ற தலைப்பு போட்டு செய்தி எழுத தில் உண்டா?, முதல்வரை பற்றி வேண்டாம் அவரது தோழி அ அவரது உறவினர்கள் பற்றி சித்திரம் வரைய அ தில்லான தலைப்பில் செய்தி வெளியிட திரணி இருக்கிறதா?. அது இருப்பவர்கள் மட்டும் திமுகவை விமர்சியுங்கள். நடுநிலை என்ற பெயரில் மற்ற கட்சிகளையும் விமர்சியுங்கள். வஞ்சகத்தையும், வெறுப்பையும் வைத்துக்கொண்டு திமுக மேல் பாய்பவர்கள் நாங்கள் அதிமுகவின் விசிறிகள் என அறிவித்து விடுங்கள். ஏன் நடுநிலை என்ற முகமுடி.