ஞாயிறு, ஜூலை 22, 2018

ஊரோடு ஒத்துவாழ்ந்தால் இதுதான்.......


திருவண்ணாமலைக்கு மிக அருகில் உள்ள எங்கள் கிராமம் 3 பகுதியாக பிரிந்துள்ளது. கிராமத்துக்கான இடுகாடு என்கிற சுடுகாடு ஊரில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த சுடுகாட்டுக்கு பாதை கிடையாது. தனி நபர்கள் 5 பேரின் நிலத்தின் மீது எடுத்துச்செல்வது தான் வழக்கம். முழுவதும் விவசாய நிலம். ஆனாலும், யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள். அதில் எங்கள் நிலமும் அடக்கம்.

20 ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தையாருடன் சேர்ந்த சில முக்கியஸ்தர்கள் ஒன்று சேர்ந்து, சுடுக்காட்டுக்கு ரோடு வேணும் என கோரிக்கை மனு தந்து டி.ஆர்.ஓவை அழைத்து வந்தார்கள். அவர் வந்து சுடுக்காடு வரை நடந்துச்சென்று ஆய்வு செய்தவர் இது தனிநபர்களின் இடம், நில உரிமையாளர்கள் சாலை போட இடம் ஒதுக்கி தந்து கிராம பஞ்சாயத்துக்கு எழுதி தந்தால் தான் ரோடு போட முடியும். அதனால் ஊர் முக்கியஸ்தர்கள் சேர்ந்து சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி முடிவு எடுங்கள் எனச்சொல்லிவிட்டு சென்றார். அதன்பின் 10 ஆண்டுகளாக யாரும் எதுவும் செய்யவில்லை. 2006-2011ல் அமைச்சராக இருந்த தற்போது எம்.எல்.ஏவாகவும் உள்ள எ.வ.வேலுவிடம் முறையிட்டார்கள், தனிநபர்களின் நிலத்தின் வழியே ரோடு போடனும்ன்னா அவுங்க எழுதி தரனும். நிலத்தின் உரிமையாளர்களிடம் ஊர்ல உட்கார்ந்து பேசுங்க, நிதி ஒதுக்கி தர்றன் ரோடு போட்டுக்கலாம் எனச்சொல்லி அனுப்பினார். அப்போதும் யாரும் எந்த முயற்சியும் செய்யவில்லை.

என் தந்தை, தாயார் பெயரில் உள்ள 1 ஏக்கர் நிலத்தின் வழியாக சுடுக்காட்டுக்கு செல்கிறார்கள் என்பதால் என்னிடம் வந்து தலைவராக இருந்தவர்கள் கேட்டபோது, நான் இளைஞர் மன்ற தலைவராக இருந்த 2000த்தில் இருந்து இப்போது வரை எல்லோரிடமும் நான் சொல்வது தான். ஊர் வளர்கிறது. ஊரின் ஒரு பகுதியினர் சுடுக்காட்டுக்கு அருகில் உள்ளார்கள், மற்ற இரண்டு பகுதிகள் தூரமாக உள்ளது. அந்த பகுதிகளில் யாராவது இறந்தால் சவத்தை பாடைக்கட்டி 2 கி.மீ தூரம் தூக்கி வரமுடியாது. மக்களும் நடந்து வரமாட்டார்கள். அதனால் சுடுகாட்டுக்கு ரோடு போட முயற்சி செய்யுங்கள், ஊர் பஞ்சாயத்து போடுங்கள், பேசி முடிவு எடுக்கலாம் எனச்சொன்னபோது தலைவர்களாக இருந்தவர்கள் பெரியளவில் முயற்சி எடுக்கவில்லை,

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீண்ட தூரம் தூக்கி வர முடியாது என ஏரிக்கரை ஓரம் புதியதாக ஒரு சுடுகாடு உருவாக்கினார்கள். அதை ஏனோ பயன்படுத்த மறுக்கிறார்கள். அப்பகுதி ஊர் முக்கியஸ்தர்கள் ஒத்தொழைப்பு தரவில்லை.

தற்போது விவகாரம் என்னவென தெரியாத 20, 22 வயதான பல இளைஞர்கள், சுடுக்காட்டு பாதையை விவசாயிகள் ஏதோ ஆக்ரமித்து வைத்திருப்பதாக நினைத்துக்கொண்டு, கடந்த ஓரிரு மாதமாக சவம் வரும்போதுயெல்லாம் ஊருக்குள் வந்து தகராறு செய்வது வாடிக்கையாகவுள்ளது. நான் வண்டியில் தான் சவத்தை எடுத்துச்செல்வேன் என அடம்பிடிக்கின்றனர். இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு சவ ஊர்வலத்தின் போது, ரோடு கிடையாது, நிலத்தில் வண்டி போகாது, தூக்கிக்கிட்டு போங்க எனச்சொன்னபோது, நான்கு சக்கர வாகனத்தின் வழியாகத்தான் சவத்தை கொண்டு செல்வோம் என எங்கள் நிலத்தில் இருந்த வாழை மரங்களை வெட்டிவீசிவிட்டு சென்றனர். 200 மீட்டர்க்கு மேல் வாகனம் செல்ல முடியாமல் தூக்கிக்கொண்டு சென்றனர்.

நேற்று இரவு ஒரு பெண்ணின் சவம் வந்தது. வண்டியில் தான் போவேன் எனச்சொல்ல தூக்கிக்கிட்டு போங்க என நிலத்துக்கு சொந்தக்காரர் ஒருவர் சொல்ல, வழிவிடமாட்டேன்கிறாங்க என விவகாரத்தை திசை திருப்பி சாலை மறியல் செய்தனர். ஆர்.டி.ஓ மற்றும் டி.எஸ்.பி வந்து பேசியபோது, தூக்கி செல்வதை யாரும் தடுக்கவில்லை, வண்டியில் போவதைத்தான் தடுக்கிறோம் என்றார் அந்த விவசாயி. இது தனியார் இடம் அவுங்க இடம் தந்தா தான் பேசி ரோடு போட முடியும் என பிரச்சனை செய்த கிராமத்தாரிடம் விவகாரத்தை முடிக்க இப்போதைக்கு வண்டியோடு போகட்டும் என அனுமதி வாங்கி தந்தபின் விவகாரம் தற்காலிகமாக ஒரு முடிவுக்கு வந்தது.

விவகாரம் இதுதான் என் பத்திரிக்கை நண்பர்களே. பாதிக்கப்படும் 5 விவசாயிகளில் என் தந்தையும் ஒருவர். பிரச்சனை நடக்கிறது வாருங்கள் என உங்களிடம் கூறாததுக்கு காரணம், சக செய்தியாளன் என்கிற முறையில் நான் உங்களை வரவைத்தால் அதையும் தவறாகத்தான் நினைப்பார்கள். அதனால் தான் கூறவில்லை. ( தினகரன் உட்பட சில செய்தித்தாளில் சாலை மறியல் செய்தி வந்துள்ளது, அதில் எழுதப்பட்ட செய்தி 95 சதவிதம் உண்மை)

யாரும் சவத்தை எடுத்துச்செல்ல தடுக்கவில்லை. வாகனத்தில் போவதைத்தான் தடுக்கிறார்கள். ரோடு போடுவதற்கான நிலத்தை வழங்க விவசாயிகள் தயாராகவுள்ளார்கள். அரசோ அல்லது ஊர் நிர்வாகம்மோ கையகப்படுத்தப்படும் நிலத்துக்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றுத்தான் கேட்கிறார்கள். என் தந்தையார் நிலத்தில் இருந்து தோராயமாக 20 சென்ட், மற்றொருவருடைய நிலத்தில் இருந்து 50 சென்ட், இன்னொருவருடையது 10 சென்ட் என போகும் என்பது தோராய கணக்கு. ஏதோ 4 அல்லது 5 சென்ட் என்றாலாவது பணம் வாங்காமலாவது விட்டுவிடலாம்.

பாதிக்கப்படும் விவசாயிக்கு இழப்பீடு வழங்க முயற்சி செய்வோம் என நினைக்காமல் குழுவாக சேர்ந்துவிட்டால் எதையும் சாதித்துவிடலாம் என நினைக்கிறார்கள் ஊரில் குறிப்பிட்ட சிலர். எங்கள் நிலங்களில் அத்துமீறி நுழைகிறார்கள் என நீதிமன்ற தடையாணை வாங்கவோ, போதையில் தகராறு செய்பவர்களிடம் எதிர்த்து சண்டை போடவோ நீண்ட நேரம் ஆகாது. இது ஊருக்குள் ஒருவருக்கொருவரிடம் பகையுணர்வை அதிகப்படுத்தும் என்பதை மறந்துவிடுகிறார்கள். நாளை எங்கள் குடும்பத்தில் யாராவது ஒருவர் இறந்தாலும் அந்த வழியாகத்தான் போகவேண்டும். இதை உணர்ந்துதான் நாங்கள் அமைதியாகவுள்ளோம். இந்த அமைதியை கோழைத்தனம் என நினைக்கிறார்கள் இளைஞர்கள். விவகாரத்தை அறிந்தவர்களும், இளைஞர்களை தவறாக வழி நடத்துவது நீதி, நியாயம் என்பது கிராமங்களிலும் செத்துக்கொண்டு வருகிறது என்பதால் தான்.

வெள்ளி, மார்ச் 30, 2018

குற்றவாளிகளுக்கு குடை பிடிக்காதீர்கள். சமூகவளைத்தள விஞ்ஞானிகளே…


தவறு செய்த அதிகாரியையும் தூக்கி வைத்து கொண்டாடுகிறது சமூக வளைத்தளவாசிகள். உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிந்துக்கொள்ளும் மனப்பாங்கில் நம்மில் யாரும்மில்லை என்பது தெரிகிறது.

தங்களை எழுந்து நின்று வரவேற்காத அதிகாரியை கொச்சைப்படுத்தி கன்னியாகுமரி மாவட்ட எம்.எல்.ஏக்கள் ரகளை, அலுவலக ஊழியரை தாக்கினார்கள் என சில தொலைக்காட்சி மீடியாக்கள் செய்திப்போட அடுத்த கொஞ்ச நேரத்தில் அந்த அதிகாரி சமூக வளைத்தள நாயகனாகிவிட்டார். அடுத்த இரண்டு மணி நேரத்தில் அதே அதிகாரி கைகட்டி பவ்யமாக எம்.எல்.ஏக்கள் முன்பு நிற்க அய்யோ பாவம் என மீண்டும் அரசியல்வாதிகள் மீது பாய்ந்து, பிராண்டிவிட்டார்கள் சமூக வளைத்தளவாசிகள்.  

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆளும்கட்சியான அதிமுகவினர் முறைகேடுகளில் ஈடுப்படுகிறார்கள், அவர்களுக்கு அதிகாரிகள் முழு விசுவாசமாக உள்ளார்கள். திமுக, காங்கிரஸ் கட்சியினரின் வேட்புமனுக்களை அதிகாரிகள் வாங்குவதில்லை என்பது புகார். இந்த பிரச்சனைக்காக கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு சங்க .இணை பதிவாளரும், தேர்தல் சிறப்பு அதிகாரியுமான நடுகாட்டுராஜாவை சந்திக்க திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், முன்னால் அமைச்சர் சுரேஷ்ராஜன் தலைமையில் சென்றுள்ளனர். எம்.எல்.ஏக்கள் அதிகாரியின் அறைக்குள் நுழைந்தபோது எழுந்து நின்று வரவேற்காமல் அலட்சியமாக உட்கார்ந்துக்கொண்டு இருந்ததோடு, தனது அலுவலக ஊழியரை வைத்து எம்.எல்.ஏக்களை மோசமாக பேசவைக்க, இதற்கு பதிலடியாக எம்.எல்.ஏக்களின் ஆதரவாளர்கள் அதிகாரியை கொச்சையாக பேசியுள்ளனர். இரண்டு தரப்புக்கும் வாக்குவாதமாக அங்கிருந்து எஸ்கேப்பான நடுகாட்டுராஜா, பின்னர் கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் அலுவலகம் வந்து எம்.எல்.ஏக்களிடம் மன்னிப்பு கேட்டு கூட்டுறவு சங்க தேர்தலில் தவறு நடந்துள்ளது, வேட்புமனுக்களை ரத்துசெய்து வேறு தேதியில் நடத்த கடிதம் எழுதுகிறேன் எனச்சொல்லி கடிதம் எழுதியவர் அதற்கான நகலையும் எம்.எல்.ஏக்களிடம் தந்துள்ளார்.

அந்த அதிகாரி கைகட்டி பவ்யமாக, பாவமாக நின்றது, அருகில் அந்தபெண் அதிகாரி பாவமாக நின்றது எல்லாம் என்னைப்பொருத்தவரை முற்றிலும் நடிப்பு. இது நடிப்பு என்பது எதிரில் அமர்ந்துயிருந்த எம்.எல்.ஏக்களுக்கு நன்றாக தெரிந்துயிருக்கும். ஆனால், அதை சமூக வளைத்தளத்தில் பார்ப்பவர்கள், இப்படி அரசியல்வாதிகள் அராஜகம் செய்கிறார்களே என நினைத்துவிட்டார்கள்.

அரசியல்வாதிகளை ஏளனமாக பேசுபவர்கள் ஒன்றை நன்றாக புரிந்துக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் அரிச்சந்திரன் வீட்டக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் கிடையாதுதான். அதற்காக அதிகாரிகள் சொக்கதங்கமும் கிடையாது. அரசியல்வாதிகளை விட மிகமோசனவர்கள் மிகபெரும்பான்மை அதிகாரிகளும், அரசு ஊழியர்களும். யார் ஆட்சியில் உள்ளார்களோ அந்த ஆட்சியாளர்களுக்கு ராஜவிசுவாசியாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் கபட வேடதாரிகள்.  

அரசின் உயர் அதிகாரிகள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை தங்களை தேடிவரும் பொதுமக்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்கிற வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் வந்தால் அவர்களை அதிகாரிகள் என்பவர்கள் முறைப்படி எழுந்து நின்று வரவேற்க வேண்டும். அது அந்த நபருக்கு தரப்படும் மரியாதையல்ல. மக்கள் பிரதிநிதிகள் என்கிற முறையில் அது அந்த பதவியில் இருப்பவர்களுக்கு தரப்படும் மரியாதை.



இதோடு வெளியாகியுள்ள இரண்டு படங்களையும் பாருங்கள். சட்டமன்ற உறுப்பினர்களை எதிர்க்கொள்ளும் இருவரும் அதிகாரிகள் தான். ஒருவர் மத்தியரசின் யு.பி.எஸ்.சி தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ்சான அதிகாரி (திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி) மற்றொருவர் தமிழகத்தின் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு எழுதி வெற்றி பெற்ற கூட்டுறவு இணைபதிவாளர் என்கிற பதவியில் உள்ள அதிகாரி (நடுகாட்டுராஜா).

கலெக்டராகவுள்ள கந்தசாமி ஐ.ஏ.எஸ் என்கிற அதிகாரியை சந்தித்து திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ பிச்சாண்டி சந்தித்து, தனது தொகுதி மக்கள் தன்னிடம் தந்த கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் தந்து கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றுங்கள் என்றபோது அந்த கட்டினை எழுந்து நின்று கலெக்டர் பெற்றுக்கொள்கிறார். கலெக்டரை விட அதிகாரம் குறைந்த மாநில அரசு அதிகாரி நடுகாட்டு ராஜா, கூட்டாக எம்.எல்.ஏக்கள் வந்தபோது எழுந்து நின்று வரவேற்காமல், மரியாதை தராமல் உள்ளார். இத்தனைக்கும் அங்கு அத்தனை தொலைக்காட்சி மற்றும் புகைப்படக்காரர்கள் உள்ளனர். அப்படியும் அவர் எழவில்லையென்றால் என்ன அர்த்தம், நீங்கயெல்லாம் ஒரு ஆளேக்கிடையாது என்பதே அவரின் எண்ணம்.  

இப்படி நடந்துக்கொண்டமைக்கு துறை ரீதியில் ஒரு விசாரணை நடத்தி அந்த அதிகாரியை சஸ்பென்ட் செய்ய வேண்டும். அவரை சஸ்பென்ட் செய்ய வேண்டும்னெ அழுத்தமாக குறிப்பிடகாரணம். முதல்வர், தலைமைச்செயலாளர் என மாநிலத்தின் நிர்வாகத்தை நடத்துபவர்களை சர்வசாதாரணமாக சந்திக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கே இந்த அதிகாரி மரியாதை தரவில்லையென்றால், கோரிக்கையோடு இவரைத்தேடி வரும் சாதாரண பொதுமக்களுக்கு இவர் எப்படிப்பட்ட மரியாதை தந்துயிருப்பார் என யோசித்தபோது வேதனையே மிஞ்சுகிறது.

மக்களுக்கானது தான் அரசாங்கம். அந்த அரசாங்கத்தில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை பொதுமக்களிடம் எப்படி நடந்துக்கொள்கிறார்கள் என்பது நம்மில் ஒவ்வொருவருக்கும் தெரியும். கிராமத்தானோ, நகரத்தானோ விவரம் தெரியாதவன் ஒரு கோரிக்கையோடு அரசு ஊழியர்கள் அ அதிகாரிகளை சந்தித்தால் 99 சதவித அதிகாரிகள் தங்களது எதிரில் காலியாக உள்ள நாற்காலியில் உட்கார கூட சொல்லமாட்டார்கள், அலட்சியமாக எதிர்க்கொள்வார்கள். இதுதான் அரசு அலுவலகங்களில் அதிகாரம் செலுத்துபவர்களின் நிலை. இந்த நிலையை இந்த கட்டுரையை வாசிக்கும் ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒருமுறையாவது எதிர்க்கொண்டு இருப்பீர்கள். அப்போது நமக்கு கோபம் வரும். நமக்கே இப்படியென்றால் லட்சகணக்கான மக்களை சந்திக்கும், அதிகாரிகளின் அதிகாரம் தெரிந்த அரசியல்வாதிகளுக்கு கோபம் வருவது இயல்பு.

அதனால் யார் ஒருவரை கொண்டாடும் முன்போ அல்லது தூற்றும் முன்பே கொஞ்சம் யோசியுங்கள்.

செவ்வாய், மார்ச் 06, 2018

டிஜிட்டல் யுகத்தில் வளருமா பிரிண்ட் மீடியா ???


பிரிண்ட் மீடியா அவ்வளவு தான். இன்னும் கொஞ்ச காலத்தில் நியூஸ் பேப்பர், வார, மாதாந்திர பத்திரிக்கைகள் எல்லாம் எதுவும் வராது, எல்லாம்மே எலக்ட்ரானிக் மீடியா ஆதிக்கம் தான். டிவி, இணையதளம், மொபைல் பத்திரிக்கைகள் தான் ஆதிக்கம் செலுத்தும் என்கிற தகவல் தமிழ் பத்திரிக்கையுலகில் வேகவேகமாக பரவி வரும் நிலையில் தி இந்து குழுமத்தில் இருந்து காமதேனு என்கிற வாராரந்தர பத்திரிக்கை வெளிவர துவங்கியுள்ளது.

இதுப்பற்றிய விளம்பரங்களை பார்த்துவிட்டு தான் அறிவு சார்ந்த நண்பர்கள் வட்டாரம் என்ன தோழா பத்திரிக்கைகள் விற்பனை படுபாதாளத்தில் உள்ள நிலையில் புதுசா புத்தகம் வெளியிடறாங்க எனக்கேட்டார்கள். அது ஒரு கலந்துரையாடலாக மாறியது. அவர்கள் மத்தியில் நான் கூறியது இதுதான்.

பிரிண்ட் மீடியாவை எந்த டெக்னாலஜி மீடியாவும் அழிக்க முடியாது. மேம்போக்காக காணும்போது பிரிண்ட் மீடியாவை விட விஷ்வல் மீடியா, இணையதள மீடியாக்கள் பாப்புலராக தெரியும். ஆனால் தெளிவான செய்திகளை, கட்டுரைகளை பிரிண்ட் மீடியாவால் மட்டும்மே தரமுடியும்.

இன்றைய நேரத்தை கைபேசிகளும், சமூகவளைத்தளங்கள் நம்மை ஆக்ரமித்துக்கொண்டதால் அதில் வரும் செய்திகளை பார்த்துவிட்டு அவ்வளவு தான் என கடந்து போகிறோம். அந்த நிலை மாறும் அப்படி மாறும்போது பிரிண்ட் மீடியாக்கள் மீண்டும் ராஜ்ஜியம் செய்வார்கள்.

இல்லை என்பவர்களுக்கு ஒருத்தகவல். நம் நாட்டை விட தொழில்நுட்பத்தில் வளர்ந்தவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரிட்டன் போன்றவை. அங்கும் இந்த பிரச்சனை கடந்த காலங்களில் எழுந்தது. அங்கும் பிரிண்ட் மீடியா, விஷ்வல் மீடியா, இணையதள மீடியாக்கள் மோதல் உண்டு. ஆனால் அங்கு தொய்வில் இருந்த பிரிண்ட் மீடியா மீண்டும் வளர்ச்சிக்கு வந்தது, பிரிண்ட் மீடியாவை அழிக்க முடியவில்லை. அதற்கு காரணம் அவர்கள் தங்களது செய்தி வழங்கும் தன்மையில் மாற்றத்தை கொண்டு வந்தார்கள். வழக்கமான செய்திகளோடு செய்தியின் பின்னணிகளை தந்தார்கள்.

பிரிண்ட் மீடியா தொய்வில் இருந்து தங்களை காத்துக்கொள்ள தங்கள் செய்தி வழங்கும் நிலையை கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும். தினசரி செய்தித்தாள்களை விட வாரம் இருமுறை, வாரம், மாதம்மிருமுறை, பருவ இதழ்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஒரு திரைப்படம் என்றால் பாடல், நகைச்சுவை, கவர்ச்சி, பாடல் அதை விட அதிகமாக ஹீரோ, ஹீரோயின் எப்படி முக்கியம்மோ அதே அளவுக்கு இதழ்களுக்கு செய்திகளின் வகைகள் முக்கியம். அந்த வகையை ஜனரஞ்சக இதழ்கள் கடைப்பிடித்தாலும், அதில் மாற்றத்தை கொண்டு வந்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அரசியல் கட்சிகளின் பேச்சுக்களை, விபத்துக்களில் இரண்டு பேர் இறந்தான், மூன்று பேர் அடிப்பட்டான் என்கிற செய்தியை தாண்டி அது எப்படி நடந்தது, யார் மீது தவறு என எதிர்பார்க்கிறான் வாசகன். ஒரு சார்பாக எதுவும் எழுத முடியாது, தற்போது வாசகனை ஏமாற்ற முடியாது. ஏன் எனில் வாட்ஸ்அப் முகநூலில் பல தகவல்கள் வந்துவிடுகின்றன. அதனால் பிரிண்ட் மீடியாக்கள் ஒரு செய்தியில் அரசியல் பின்புலம், அரசியல் ரகசியங்கள், அரசியல் மோதல்கள், ரவுடி ராஜ்ஜியம், அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்கள், மக்களை பாதிக்கும் சமூக கட்டுரைகள், மனதை உருக்கும் கட்டுரைகள், மனதை ஆர்ப்பரிக்கும் அதிரடியான கட்டுரைகள், தெரியாத தகவல்களை விரும்புகிறார்கள் இளைஞர்கள், நிகழ்கால செய்தியோடு – கடந்த கால வரலாறுகளை தெளிவான கட்டுரைகளை தான் அதிகம் விரும்புகிறார்கள் தமிழகத்தில்.

நான் தருவது தான் செய்தி என பிரிண்ட் மீடியா நினைத்தால் அதற்கு அழிவு காலம்.

ஏன் எனில் செய்திகளை உடனுக்குடனே அறிந்துக்கொள்ள தொலைக்காட்சிகளும், இணையதளங்களும் உள்ளன. ஒரு தொலைக்காட்சியால் நேரலை செய்தியை மட்டும்மே வழங்க முடியும், இணையதளங்களில் எது வேண்டுமானாலும் எழுதலாம், நம்பகத்தன்மை என்பது கிடையாது.

பிரிண்ட் மீடியாவில் வரும் செய்தி மீது பெரும் நம்பிக்கையுள்ளது. அதற்கு தேவையான செய்திகளை வழங்கவில்லையெனில் டெக்னாஜி உலகத்தில் பிரிண்ட் மீடியா தாக்கு பிடிக்க முடியாது.

இந்த வளர்ச்சியால் நன்மையும் உள்ளது, தீமையும் உள்ளது. பிரிண்ட் மீடியாவில் தேவையற்ற செய்திதாள்கள், இதழ்கள் காணாமல் போய் மறையும், விஷிவல் மற்றும் இணையதளத்தில் புற்றீசல் போல் வளரும். அது வளரும்போது மீண்டும் பிரிண்ட் மீடியா ஆதிக்கம் செலுத்தும்.



ஞாயிறு, ஜனவரி 21, 2018

காவி முன்னேற்ற கழகமாக மாறும் திராவிட முன்னேற்ற கழகம்……….



கவிஞர் வைரமுத்துக்குவுக்கு ஆதரவாக இந்துத்துவ ஆட்களுடன் இணையத்தில், பொதுவெளியில் மல்லுக்கட்டிய உடன்பிறப்புகள் திமுகவின் முன்னால் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வெளியிட்ட அறிக்கைக்கு பின் இனி என்ன பேசுவது எனத்தெரியாமல் தவிக்கிறார்கள். திமுக செயல்தலைவரை விளாசிக்கொண்டு இருக்கிறார்கள். துர்காஸ்டாலின் எப்படி கட்சியில் முடிவு எடுக்கலாம் எனக்கேட்கிறார்கள். அதை படித்தபோது எங்கோ ஒரு குக்கிராமத்தில் படிக்காத பாமரனுக்கு உள்ள அறிவுக்கூட இணையத்தில் புழங்கும் அறிவார்ந்த சமூகமாக தன்னை காட்டிக்கொள்பவருக்கு இல்லை என்பது தெரிகிறது.

ஒன்றை இங்கு தெளிவாக உணர்ந்துக்கொள்ள வேண்டும். திராவிட முன்னேற்ற கழகம் என்பது முதலில் குடும்ப கட்சி. கலைஞர் குடும்பத்தின் குற்றச்சாட்டாக வைக்கப்படும் குடும்ப கட்சியல்ல. இயற்கையாகவே அது குடும்ப கட்சி. திமுக தொடங்கிய காலத்தில் இருந்து இப்போது வரை அதன் மாநாடுகள் பற்றிய தகவல்களை எடுத்துப்பாருங்கள். திமுக உடன்பிறப்புகள் மாநாட்டுக்கு குடும்பத்துடன் வருவார்கள். அது தற்காலத்தில் குறைந்தாலும் இன்றளவும் குடும்பத்தோடு வருகிறவர்கள் ஓரளவு இருக்கத்தான் செய்கிறார்கள்.

அதேப்போல் திமுகவில் யார் வேண்டுமானாலும் கருத்துக்களை சொல்லலாம் என்கிற சுதந்திரத்தை கட்சியை உருவாக்கிய அண்ணா உருவாக்கினார். தன்னுடன் இருந்த கட்சியின் தூண்களின் கருத்துக்கு மட்டும்மல்ல கடைக்கோடி தொண்டனின் கருத்துக்கும் அவர் மதிப்பளித்தார். அடுத்ததாக திமுக என்பது திராவிடர் கழகம்மல்ல. அது கட்சி. தேர்தலில் போட்டியிடாத அமைப்புகள் என்ன வேண்டுமானாலும் பேசலாம், செய்யலாம். தேர்தல் களத்தில் மக்களை சந்திக்க போகும் கட்சிகள் நெகிழ்வு தன்மையுடன் தான் இருக்க வேண்டும். அதை உணர்ந்ததால் தான் அண்ணா, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார். அவர் எந்த இடத்திலும் கடவுள் இல்லை என நேரடியாக சொல்லவில்லை. பெரியார் தன் தொண்டர்களிடம் சொன்னதை தன் தம்பிகளிடமும், மக்களிடமும், யார் என்ன சொன்னாலும் நம்பிவிடாதே உன் பகுத்தறிவை கொண்டு அலசி ஆராய்ந்து பார் என்றார்.

அவர் சொன்னதை அவர் இருக்கும் போதே பலரும் கேட்கவில்லை. அவர் காலத்திலேயே இரண்டாம் கட்ட தலைவர்களாக இருந்த பலர் தீவிர பக்திமானாக இருந்தார்கள் என்பது வரலாற்றின் பக்கங்களில் பதிவாகியுள்ளது. அவர்களையும் தான் அண்ணா அரவணைத்தார். கட்சியின் கொள்கையைப்போல் நீ இரு என எவரையும் அவர் வலியுறுத்தவில்லை. கடவுளை கும்பிடாதவன் தான் திமுகவில் இருக்க வேண்டும், ஓட்டுப்போட வேண்டும் எனச்சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் இன்று வரை எதிர்கட்சியாக தான் இருந்திருக்க வேண்டும். சொல்ல முடியாது எதிர்கட்சியாககூட இருந்திருக்க முடியாது.


அண்ணாவைப்போல் இந்துத்துவாவாதிகளின் கருத்து உயரும்போது கலைஞர் கட்சியின் பகுத்தறிவு கருத்துக்களை எதிர்கருத்தாக வெளிப்படுத்தினார். ராமன் என்ன இன்ஜினியரா என்றார், அம்பாள் எப்போதடா பேசினார் எனக்கேட்டார். அவர் அண்ணாவைப்போல் பெரியார் பாசறையில் வளர்ந்தவர். அவர் பகுத்தறிவாதி அதனால் இந்துத்துவ குரல்கள் உயரும் போது தனது நாத்திக குரல்களால் அவற்றை எதிர்ப்பார். அதற்காக அவர் ஆட்சியில் இருக்கும் போது இந்து மதத்துக்கு எதுவும் செய்யாமல் விட்டதில்லை. இந்து சமய அறநிலையத்துறைக்கு அவர் செய்தது போல் வேறு யாரும் செய்துயிருக்க முடியாது. அதேப்போல் தனது தனிப்பட்ட கொள்கைகளை, கட்சி கொள்கைகளை பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையின் மீதோ, ஏன் கட்சியினர் மீதோ அவர் திணித்ததில்லை. அப்படி திணித்திருந்தால் தை மாதம் தான் தமிழ் பிறப்பு என்பதை அதிகாரத்தை கொண்டு ஆணித்தரமாக அவரால் நிலை நிறுத்தியிருக்க முடியும். அப்படி அவர் செய்யவில்லை. அதனால் தான் அவரால் ராமனை திட்டவும் முடிந்தது, ராமனை வணங்குபவனிடம் இருந்து ஓட்டு வாங்கவும் முடிந்தது. தனது கட்சியின் சுயமரியாதையை எவனிடமும் அவர் விட்டுக்கொடுக்கவில்லை. அதனால் தான் நினைவிழந்த நிலையிலும் அவர் நினை கூறப்படுகிறார்.
அண்ணாவைப்போல், கலைஞரைப்போல் திமுக செயல்தலைவராக உள்ள ஸ்டாலின் இருப்பார் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம். முன்னிருவரும் பெரியாரிடம் பாடம் படித்தவர்கள். ஸ்டாலின் கலைஞரிடமும், எம்.ஜி.ஆரை பார்த்தும், ஜெவை பார்த்தும் அரசியல் பாடம் படித்தார். அதனால் அவரால் கலைஞரைப்போல் பகடி செய்து இந்துத்துவாவை பகடி செய்து காயடிக்க முடியாது.

அதற்கு மற்றொரு காரணம் என் பார்வையில் இரண்டு. அவர் வடநாட்டு அரசியலை இங்கு புகுத்த நினைக்கிறார். இரண்டாவது மனைவி போடும் பாதையில் நடக்கிறார்.

வடநாட்டு அரசியல்  

ஸ்டாலின் செயல்தலைவராக ஆகுவதற்க்கு முன்பிருந்தே வடநாட்டு அரசியல் தன்மையை தமிழக அரசியல் களத்தில் புகுத்த நினைக்கிறார். வடக்கே பாராளமன்றத்தில் சட்டமன்றத்தில் அடித்துக்கொள்வார்கள். வெளியே வரும்போது ஜாலியாக பேசிக்கொண்டு வருவார்கள், அனைத்து விழாக்களிலும், நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்வார்கள். இதைத்தான் ஸ்டாலின் செய்ய நினைக்கிறார். அதனால் தான் அவர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவரை சந்தித்து நிதி தந்தார். உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவமனையில் போய் சந்தித்தார், ராமதாஸ்சை தன் இல்ல திருமணத்துக்கு அழைத்தார், மோடி வீட்டுக்கு வந்தபோது அவரை வரவேற்றார். இப்போதும் வை.கோ உட்பட அனைவரையும் அரவணைக்கிறார்.

ரம்ஜானுக்கும், கிருஸ்மஸ்க்கும் மட்டும் தான் வாழ்த்து சொல்லனும்மா விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்கிறேன் என வாழ்த்து சொல்கிறார். அதோடு, இந்துத்துவாவை எதிர்க்க வேண்டாம் என முடிவு செய்துள்ளார். அதன் வெளிப்பாடு தான் ஆண்டாள் குறித்து தவறாக பேசினார் என வைரமுத்து மீது பாப்பான்கள், பாஜக எச்.ராஜா போன்றவர்கள் பாய்ந்தபோது ஸ்டாலின் வெண்டைக்காய் தன்மைப்போல் ஒரு அறிக்கை விட்டார். அதற்கு காரணம் அவர்களை பகைத்துக்கொள்ளகூடாது என்கிற முன்னெச்சரிக்கை தான். இதற்கு முன்பு முன்னால் நடிகரான பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் ஒரு விவகாரத்தில் நான் ஸ்டாலினிடம்மே பேசிவிட்டேன் என இருமாப்பாக பேசவைத்தது. அந்த வெண்டைக்காய் அறிக்கையை பார்த்தபின் தான் பாப்பான்களுக்கு தைரியம் வந்து திருவில்லிப்புத்தூர் ஜீயர் உண்ணாவிரதம் இருப்பேன், வைரமுத்து மன்னிப்பு கேட்கவில்லையெனில் சாகுவேன் என்றார். அவரிடம் சமாதானம் பேசி உண்ணாவிரதத்தை கைவிட வைத்தார் துர்க்காஸ்டாலின் என ஆழ்வார்கள் மையம் வைத்துள்ள திமுக பிரமுகர் ஜெகத்ரட்சகன் அறிக்கை வெளியிட்டதை பார்த்து திமுகவின் பகுத்தறிவாதிகள் அதிர்ந்து போனார்கள். துர்காஸ்டாலின் சமாதானம் செய்தார், அதனால் ஜீயர் அதை கைவிட்டார் சரி. ரகசியமாக நடந்ததை போட்டு உடைத்துள்ளார் ஜெகத். நிச்சயமாக ஸ்டாலின் அனுமதியில்லாமல் அதை சொல்லயிருக்க முடியாது.

அப்படியெதற்கு திமுக செயல்தலைவர் இந்துத்துவாவுடன் பணிந்து போக வேண்டும். அப்படி பணிந்து போவது என முடிவு செய்துவிட்டால் திராவிட முன்னேற்ற கழகம் என்பதற்கு பதில் இந்துத்துவா முன்னேற்ற கழகம் என பெயர் வைத்துக்கொண்டு செய்யலாம்.

மனைவி பேச்சை கேட்டு ஸ்டாலின் செயல்படுகிறார் என்றால் ஏன் கேட்ககூடாது என்றுத்தான் நான் முதலில் கேட்பேன். கலைஞம் தனது துணைவிகளின் பேச்சை கேட்டு கட்சியில் சில முடிவுகள் எடுத்தவர் தான். அரசல் புரசலாக வெளியே வந்துள்ளது. வெளியே வராமல் எவ்வளவு இருக்கும். மனைவி பேச்சை கேட்க வேண்டாம் எனச்சொல்லவில்லை. மனைவி பேச்சை கேட்டு தொண்டனை தலைகுனிய வைக்காதீர்கள், அவன் தான் கட்சியின் உயிர்நாடி. உங்களை சுற்றியுள்ள பணக்காரர்களும், ஜால்ராக்களுமல்ல கட்சி. அண்ணாவோ, கலைஞரோ அதை என்றும் செய்ததில்லை என்பதே யாம் அறிந்த வரலாறு.


தேர்தலில் ஓட்டுப்போட மக்கள் எப்படி வேண்டும்மோ, அப்படித்தான் கட்சி என ஒன்றுயிருக்க தொண்டர்கள் இருக்க வேண்டும். தலைவர் சொல்லிவிட்டார் என்பதற்காக அப்படியே கேட்டுக்கொள்ள திமுக ஒன்றும் அடிமைகளால் நிறைந்த கட்சியல்ல. கட்சியில் பதவிக்காக எதையும் விட்டுக்கொடுக்கும் பச்சோந்திகள் மட்டும்மல்ல, சுயமரியாதையை விட்டுத்தராத தொண்டனும் கட்சியில் உள்ளான் என்பதை மறந்துவிடாதீர்கள். 

இந்துத்துவாவாதிகளின் முட்டாள்தனமாக கருத்துக்கு கலைஞர் பகுத்தறிவு கருத்துக்களை எதிர் கருத்து வைத்தபோதும் புண்பட்ட ஆன்மீக தலைவர்கள் அவர் வீட்டுக்கு வந்தால் வரவேண்டாம் என தடுத்ததில்லை. ஆந்திராவில் இருந்து அந்த சாமியார் வந்தபோது வீட்டுக்கு வரவைத்தார். அவர் துணைவியார் காலில் விழுந்து ஆசி வழங்கியபோது அதை தடுக்கவில்லை. அப்படியொரு சுதந்திரத்தை துணைவிக்கு தாருங்கள். துணைவியார் பேச்சை கேளுங்கள். அதற்காக கட்சியின் சுயமரியாதையும், தொண்டனின் சுயமரியாதையை புடவையில் வைத்து முடித்து வைத்துவிடாதீர்கள். திமுகவின் நிரந்தர தலைவர் என்று யாரும் கிடையாது. நேற்று அண்ணா இருந்தார், இன்று கலைஞர் இருக்கிறார், நாளை நீங்கள் இருக்கபோகிறீர்கள். நாளை மறுநாள் உங்கள் குடும்பத்தில் இருந்தோ அல்லது வேறு யார் வேண்டுமானாலும் அந்த இடத்திற்கு வரலாம். அதற்கு கழகம் இருக்க வேண்டும். அதனால் தொண்டனை சுயமரியாதை இழக்க வைக்காதீர்கள்.
அதையும் மீறி நீங்கள் இந்துத்துவாவாதிகளின் காலில் விழுவேன் என்றால் பிறகு எதற்கு திமுக. கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே தட்டேந்தும் பாப்பான்கள் போல்……


யோசியுங்கள் செயல்தலைவரே…. யோசிக்க வையுங்கள் ஆலோசகர்களே……….