திங்கள், செப்டம்பர் 29, 2014

தவறுக்கு துணை போகும் மீடியாக்கள்.................



மக்கள் நீதித்துறைக்கு அடுத்து ஊடகத்தை தான் அதிகம் நம்புகின்றனர். தங்களது பிரச்சனைகளை, கோரிக்கைகளை அதிகாரிகள், ஆட்சியாளர்கள் கண்டுக்கொள்ளாத போது நம் கோரிக்கையை ஊடகத்திடம் முறையிட்டால் தீர்வு கிடைக்கும் என மக்கள் ஊடகத்தை நம்பி நாடி வருகின்றனர். ஊடகங்கள் தங்களுக்கானது என நம்புகின்றனர். ஊடகங்கள் நமக்கு உண்மையை மட்டுமே சொல்கின்றன என பாமர மக்கள் நம்புகின்றனர்.

இது முற்றிலும் பொய். மக்களின் எதிர்பார்ப்புக்கு நேர் எதிராக ஊடகங்கள் உள்ளது என்பதே நிதர்சன உண்மை. மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வைத்திருக்கவே ஊடகங்கள் விரும்புகின்றன. நேர்மையாக நடக்க வேண்டும் என்ற எண்ணம் 99 சதவித ஊடகங்களுக்கு இப்போது கிடையாது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஊடகத்துக்கும் ஒரு கொள்கையிருக்கிறது. தமிழகம் மட்டும்மல்ல இந்தியா முழுமைக்கும்மே ஒவ்வொரு ஊடக நிறுவனத்துக்கும் ஒரு கொள்கையிருக்கிறது. அந்த கொள்கையின் அடிப்படையில் தான் செய்திகளை மக்களிடம் கொண்டும் போய் சேர்க்கும்.

உதாரணமாக தேசிய அளவிலான ஆங்கில சேனல்கள் எப்போதும்மே இந்துத்துவா மனோநிலையில் தான் எந்த செய்திகளையும் காணும். தேசியம் பேசும், மாநில கொள்கையை எதிர்க்கும். அதோடு உயர்சாதிகளுக்கு முக்கியத்துவம் தரும். தமிழ்நாடு, பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களில் பிற்படுத்தபட்ட சமூகத்தின் அரசியல் இயக்கங்களை, கட்சிகளை காலி செய்யவே சாதாரண செய்தியை ஊதி பெரிதாக்கும். உயர்சாதியினர் என சொல்லிக்கொள்பவர்களின் செய்திகளை அமுக்க செய்யும்.

பிராந்திய ஊடகங்கள் அந்தந்த மாநிலத்துக்கு ஏற்றாற்போல் தன் கொள்கைகளை வைத்துக்கொள்ளும். தமிழகத்தில் ஊடகங்களுக்கு கொள்கை உள்ளது. தமிழகத்தில் பெரும்பான்மையான ஊடகங்கள் கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அவைகள் அரசியல் கொள்கைகளோடு உள்ளன. ஒவ்வொரு கட்சியும் செய்தித்தாள், தொலைக்காட்சி என வைத்துள்ளன. கட்சியின் கொள்கை, கூட்டணி இதனை பார்த்தே செய்திகளை வெளியிடுகின்றன. இதனால் உண்மைகளை அப்படியே போட்டு மறைக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்த போக்கு தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

அரசியல் செய்திகளை தான் இரட்ட்டிப்பு செய்கிறார்கள் என்றால் பொதுவான செய்திகளையும் நேர்மையாக ஒளிப்பரப்புவதில்லை. ஊடகத்தில் பணியாற்றும் நான் மதிக்கும் பல மூத்த செய்தியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் தங்களது நிஜ முகத்தை தொலைத்து வருவது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த துறையில் பல ஆண்டுகளாக பழுத்தவர்கள், நிறைந்த அனுபவ அறிவு பெற்றவர்கள் சறுக்குவது வேதனையாக இருக்கிறது.

தமிழக முதல்வராக இருப்பவர், ( இருந்தவர் ) ஜெயல்லிதா. அவர் மீது கடந்த காலத்தில் 91–96ல் தமிழக முதல்வராக இருந்தபோது அப்பதவியை பயன்படுத்தி ஊழல் செய்து வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளார் என 18 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா அவரது தோழி சசிகலா அன் கோ மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

ஊழல் மூலம் சொத்து குவித்த வழக்கை இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்கிறது சட்டம். ஆனால் இந்த வழக்கை பலப்பல தலைப்புகளில் மனு போட்டு வழக்கை 18 ஆண்டுகளாக இழுத்தடித்த்து. நீதிபதி, அரசு வழக்கறிஞர்களை ஜெ தரப்பு மிரட்டியது என பல தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன. இதையெல்லாம் கண்டுக்கொள்ளவில்லை தமிழகத்தின் எந்த ஊடகமும். அதையெல்லாம் கூட விட்டுவிடலாம். தீர்ப்பு நாளன்று தமிழக மக்களை முட்டாள்கள் என நினைத்துக்கொண்டு அதுப்பற்றிய செய்திகளை 24 மணி நேர செய்தி சேனல்களான தினதந்தி, புதியதலைமுறை, ராஜ் டிவி போன்றவை ஒளிப்பரப்பின.

இந்தியாவே இந்த வழக்கின் தீர்ப்பு என்ன என எதிர்பார்த்தது. மற்ற மாநில, தேசிய ஊடகங்களை விட தமிழக ஊடகத்துக்கு தான் இந்த வழக்கின் செய்தியை மக்களிடம் கொண்டும்போய் சேர்க்க வேண்டிய பொறுப்பு அதிகம். ஆனால் அதை மறந்தனர்.

புதிய தலைமுறை செய்தியாளர்கள், சொத்து குவிப்பு வழக்கு என சொல்வதை கூட தவிர்த்தது. அவர்களை போலவே தினதந்தி தொலைக்காட்சி ஏதோ, குற்றம்மே செய்யாத ஒருவருக்கு தண்டனை தந்துவிட்டதை போல செய்திகளை கூறியது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தான் ஜெ சிறையில் அடைக்கப்பட்டார். ஓராண்டு, இராண்டல்ல சுமார் 18 ஆண்டுகள் ஒரு வழக்கு நடந்துள்ளது. நூற்றுக்கும் அதிகமான முறை வாய்தாக்கள் வாங்கப்பட்டுள்ளது. இதுப்பற்றியெல்லாம் ஒரு சிறு கண்டனமும் செய்திகளில் பேசவில்லை. இவை இரண்டும் நடுநிலை செய்தி சேனல்கள் என தங்களை நிமிடத்துக்கு ஒருமுறை வெளிக்காட்டிக்கொள்பவர்கள். 


10.45க்கு நீதிமன்றத்துக்கு முதல்வர் என்கிற அதிகாரத்துடன், பந்தாவாக சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டுயிருந்த ஸ்பெஷனல் கோர்ட்டுக்கு ஜெ செல்கிறார். தீர்ப்பு ஒத்திவைப்பு, தீர்ப்பு வாசிப்பு, தண்டனை, ஒரு மாநிலத்தின் முதல்வர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பதவி பறிபோகிறது. இதையெல்லாம் ஏதோ ஒரு சாதாரண சாலை விபத்து செய்தியை போல் சொல்லிவிட்டு செல்கின்றனர்.

ஒரு தீர்ப்பை மறைக்க என்ன இருக்கிறது. முதல்வர் பதவி போனபின் பல மணி நேரம் ஒருவரை முதல்வர் முதல்வர் என தமிழக சேனல்கள் சொல்வது எதனால்?, செய்தியாளர்களுக்கு சட்ட நடைமுறை தெரியாத?. செய்தியை மக்களிடம் கொண்டும் போய் சேர்க்கும் செய்தியாளனுக்கு ஒரு தார்மீக கடமை இருக்க வேண்டாமா ?.

குற்றவாளி என அறிவித்த பின்பும், தண்டனை அறிவித்தபின்பும் அதுப்பற்றிய முறையான தகவல்களை கூட மக்களுக்கு சொல்ல தயங்கும் செய்தியாளர்களை, செய்தி சேனல்களை என்னவென்று சொல்வது. அப்படி சொல்ல தயங்குபவர்கள் ஏதாவது அறைகுறை ஆடை நடனத்தை ஒளிப்பரப்பிவிட்டு செய்திக்கு விடுமுறை தந்துவிட வேண்டியதுதானே ?.

தீர்ப்பு நாளன்று தமிழகம் முழுவதும் செய்தி சேனல்கள் எதுவும் தெரியாத வண்ணம் முழுமையாக கட் செய்தன அரசு இயந்திரம். அரசாங்கம் ஊடகத்தை கட்டுப்படுத்துவது எந்த விதத்தில் நியாம். அதிகாரம் கையில் இருப்பதால் அரசாங்கம் அதை திட்டமிட்டே கட் செய்து. கருத்து சுதந்திரத்தை நசுக்கியது. கேபிள் இணைப்பு அரசாங்கத்தின் கைகளில் இருப்பதால் தான் இந்த நிலை. தீர்ப்பை மறைக்க சேனல்களை நிறுத்திட்டாங்க என சாதாரண பொதுமக்கள் வரை பேசினார்கள். ஆனால் சேனல் நிறுவனங்கள் எதுவும் செய்திகளில் இதைப்பற்றி குறிப்பிடவில்லை, கண்டிக்கவில்லை. செய்தியாளர் சங்கங்கள் கூட ஒரு அறிக்கை தரவில்லை.

ஆட்சியாளர்களிடம் மண்டியிட்டு கிடப்பது ஏன் ?. கடந்த திமுக ஆட்சியில் அப்படி கிடையாதே ?.


மத்தியில், மாநிலத்தில் இருந்த திமுகவை துவம்சம் செய்தது ஊடகங்கள் தான். 2ஜீயில் இழப்பு என்பதை ஊடகங்கள் தான் ஊழல் என மக்கள் மத்தியில் பொய்யான தகவலை பரப்பியது. உண்மை தெரிந்தபின்பும் தினமலர், தினமணி போன்றவை இன்றளவும் அப்படியே எழுதி வருகின்றன. அதற்காக மற்ற ஊடகங்கள் மாறிவிட்டன என அர்த்தமல்ல. ஒருசில இதழ்களை தவிர மற்ற எல்லாம்மே அதை ஊழல் என்றே இப்போது வரை பொய்யை மீண்டும் மீண்டும் பரப்புகின்றன. அந்த கட்சி தோற்று அதிகாரத்தில் இல்லாத போதும் பாய்ந்து பிராண்டுகின்றன. விசாரணை தான் நடந்து வருகிறது இன்னும் தீர்ப்பு வரவில்லை. ஆனால் தீர்ப்பு வந்துள்ள சொத்து குவிப்பு வழக்கில் ஏதோ நேற்று வழக்கு போட்டு இன்று தீர்ப்பு வந்தது போல் ஊடகங்கள் செய்திகளை வழங்குகின்றன.

ஊழல் என்பது இந்த சமூகத்தின் இழிவு. ஊழலை ஒழிக்க வேண்டும் என குரல் தருகிறோம். ஆனால் ஊழல் குற்றச்சாட்டில் ஒரு மாநிலத்தின் முதல்வர்க்கு தண்டனை தந்தால் ஊழலுக்கு எதிராக குரல் தரும் ஊடகங்கள் வாய்மூடி மவுனியாக இருக்கின்றன.

இதே தமிழக ஊடகங்கள் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே இயக்கம் தொடங்கியபோது, ஆகா, ஓகோ என முழக்கமிட்டனர்; நாள் முழுவதும், புது தில்லி ஜந்தர் மந்தரில் நடந்த, அனுமதி மறுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை நியாயப்படுத்தி ஒளிபரப்பினர். லாலு பிரசாத் மீது தீர்ப்பு வந்தபோது, ஊழல் செய்தார்; அதனால் அவர் பதவி பறிப்பது சரிதான் என செய்தி வெளியிட்டனர்.
ஆனால்,  இன்று, ஊழல் பணத்தில் சொத்துக்கள் வாங்கப்பட்டது என நீதிபதி கூறி, ஜெயலலிதாவிற்கு தண்டனை அறிவித்தால், இதே ஊடகங்கள், அது பொய் வழக்காமே என்றும், இதைவிட 2ஜி பெரிய வழக்கு அதில் திமுகவிற்கு என்ன பாதகம் வரும் என இன்றே தீர்ப்பு எழுத முற்படுவதும், ஊடகத்தின் யோக்கியதையையும், பார்ப்பன தன்மையையும் தோலுரித்து காட்டுவதாக உள்ளது.

என் கேள்வி ஊடக முதலாளிகளுக்கு வெட்கம் இல்லாமல் இருக்கலாம். வளரும் செய்தியாளர்களுக்கு விவரம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எல்லாம் அறிந்த மூத்த பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர்கள் அமைதியாக இருப்பது எதனால் ?. ஜெ என்ன புனிதமானவரா, குற்றமற்றவறா, ஊழலே செய்யாதவரா ? கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை எத்தனை ஊழல், எத்தனை அலங்கோலமான முட்டாள்தனமான திட்டங்கள். இதைகூட விமர்சிக்க தயங்குகிறீர்கள். அரசாங்கம் மீது, ஆட்சியாளர்கள் (அரசியல்வாதிகள்) மீது மக்கள் நம்பிக்கை இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது அவர்கள் நம்புவது நீதித்துறையையும், ஊடகத்தையும்தான். அதை பாழாக்குகிறீர்களே நியாயம்மா?. ஊடகத்துறையில் வளரும் தலைமுறைக்கு மக்களுக்கு நேர்மையான, உண்மை செய்திகளை வழங்குவது எப்படி என கற்று தந்துவிட்டு செல்வீர்களாக.......

ஞாயிறு, செப்டம்பர் 28, 2014

ஜெ- முதல்வர் முதல் சிறை வரை. வழக்கின் விபரம் முழுமையாக...........





இன்றைய காலக்கட்டத்தில் இளைய சமுதாயத்தினருக்கு இந்த வழக்கு பற்றி ஒன்றும் தெரியாது. ஏன் எனில் அவர்கள் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டபோது அவர்கள் டவுசர் போட்டுக்கொண்டு மண்ணில் விளையாடிக்கொண்டு இருந்திருப்பார்கள். அவர்களுக்காகவே இந்த வழக்கின் வரலாறு.

1991 – 1996 காலக்கட்டம்………….

இராஜிவ்காந்தி தமிழகத்தில் கொல்லப்பட்டபோது, காங்கிரஸ்சோடு கூட்டணியில் இருந்த அதிமுக அனுதாப அலையில் மாபெரும் வெற்றியை பெற்றது. ஜெயலலிதா முதல்வரானார்.

அவர் முதல்வரானபின் தமிழகம் மாபெரும் கோரதாண்டவத்தை சந்தித்தது. கூட்டணியில் இருந்த காங்கிரஸ்சை கழட்டி விட்டார். என்னால் கிடைத்த வெற்றி என அறிவித்தார்.

முதலமைச்சராக மாதம் ஒரு ரூபாய் சம்பளமாக பெறுகிறேன் என அறிவித்தார்.

அதிமுகவின் சீனியர் தலைவர்களை அவமானப்படுத்தினார். நாவலர் நெடுஞ்சியனை, உதிர்ந்த ரோமம் என வர்ணித்தார்.

கவர்னர் என் கையை பிடித்து இழுத்தார் என சட்டமன்றத்தில் அறிவித்தார்.

தனது வளர்ப்பு மகனான சுதாகரன்க்கு நடிகர் சிவாஜிகணேசன் பேத்தியை  மனைவியாக்கி கோடிகளில் திருமணம் செய்து வைத்தார்.

அவரும் அவரது தோழி சசிகலாவும் தங்க, வைர நகைகள் போட்டுக்கொண்டு மாநிலத்தை வலம் வந்தனர்.

மகாமகம் குளத்தில், ஜெ, சசிகலா குளித்துவிட்டு மாலை மாற்றிக்கொண்ட நிகழ்வில் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் பலி. பலர் ஊனம்.

ஜெவின் அதிகார அத்துமீறல், ஊழல் போன்றவற்றை ஆதாரத்தோடு வெளிப்படுத்திய நக்கீரன் இதழ், அதன் ஆசிரியர், பிரிண்டர், நிருபர்கள் மீது அதிகார காவல் நாய்களின் பாய்ச்சல், வழக்கு, கைது. சிலர் காவல்துறையின் கொடுமையால் மரணம்.

சென்னையை சேர்ந்த நகைக்கடை அதிபரிடம் முதல்வர் அதிகாரத்தை காட்டி ஜெ, சசிகலா தங்க, வைர நகைகள் வாங்கிக்கொண்டு பணம் தராததால் குடும்பத்தோடு தற்கொலை.

ஜெவின் ஊழலுக்கு துணை புரியாத சந்திரலேகா ஐ.ஏ.எஸ் முகத்தில் ஆசிட் வீசிய ஜெவின் அடிப்பொடிகள் ஏற்பாடு செய்த வெளிமாநில ரவுடிகள்.

இன்று முதல்வர் ஜெ வின் ஊழலுக்கு துணை புரியாத சகாயம் ஐ.ஏ.எஸ் போல அன்று உமாசங்கர் ஐ.ஏ.எஸ் அலைகழிப்பு, மிரட்டல்.

ஜெவுக்கு எதிர்ப்பாக வழக்குகள் தொடுத்த பிரபல வழக்கறிஞர்கள் விஜயன், சண்முகசுந்தரம் உட்பட பலர் மீது ரவுடிகளை விட்டு தாக்குதல்.

தனக்கு ஒத்தொழைக்காத மத்திய அமைச்சர்களாக இருந்த சிதம்பரம், மணிசங்கர் அய்யர், தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உட்பட பலர் மீது தாக்குதல். பொய் வழக்குகள் என ஜெவின் கோரதாண்டவம் ஆடினார்.

திராட்சை தோட்டம், பங்களாக்கள் என சொத்துக்களாக வாங்கி குவிப்பு என படுமோசமான அலங்கோல ஆட்சியாக திகழ்ந்தது.

இசையமைப்பாளர் கங்கைஅமரனை மிரட்டி நிலத்தை எழுதி வாங்கியது.

இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். முதல் முறையாக ஆட்சி பொறுப்புக்கு வந்தபோதே இத்தனை கோரதாண்டவம் ஆடினார். இதனால் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினர். 1996ல் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது. 

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு முழு பின்னணி:
 
ஜெயலலிதா முதன் முறையாக 1.7.1991 முதல் 30.4.1996 வரை தமிழகத்தின் முதல்வராக இருந்தார். இந்த ஐந்து ஆண்டுகளில் அவர் தன் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைச் சேர்த்துள்ளதாக ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி அப்போதைய தமிழக ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அனுமதி பெற்று, பிறகு 14.6.1996-ல் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 27-6-1996 அன்று  அந்த மனுவை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி ராமமூர்த்தி, தமிழ்நாடு ஊழல் மற்றும் கண்காணிப்பு துறையின் டி.ஐ.ஜி-யாக இருந்த லத்திகா சரணை விசாரணைசெய்ய ஆணையிட்டார். அதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு, தனி நபர் ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமிக்கக் கூடாது. இந்த விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்தார்கள். அதையடுத்து சென்னை அமர்வு நீதிமன்றம் அந்த விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கை துறைரீதியாக தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறையின் ஐ.ஜி-யாக இருந்த வி.சி.பெருமாள் விசாரணை நடத்தி வந்தார். துறை ரீதியாக விசாரித்து வந்த வி.சி.பெருமாள், இந்த வழக்கில் குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாகக் கருதி, ஜெயலலிதா மீது 18.9.1996-ம் தேதி எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரணையை தொடங்கினார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீது அவர் முதல்வர் ஆவதற்கு முன்பாக (1-7-1991-க்கு முன்பு) அவருடைய சொத்து மதிப்பு 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 956.53 ஆகும். ஆனால் வழக்கு காலத்திற்கு பிறகு (1-7-1991 முதல் 30-4-1996 வரை) 66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 ஆக சொத்து அதிகரித்துள்ளது. எனவே ஜெயலலிதா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார். மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்து குவிக்க உடந்தையாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டம் 13(1) ( ஈ) பிரிவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது மற்றும் 13(2) அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்கு உடந்தையாக இருந்தது மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் 120(பி) கூட்டு சதி தீட்டியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை முடிந்ததும் ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநராக இருந்த ராகவனிடம், வேறு ஒருவரைக்கொண்டு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டது.  லத்திகா சரணுக்குப் பதிலாக தமிழ்நாடு ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறையின் ஏ.டி.எஸ்.பி-யாக இருந்த நல்லம நாயுடு தலைமையில் 16 இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டனர்.  ஐ.ஐீ பெருமாள் வழக்கை நல்லம்மநாயுடுவிடம் ஒப்படைத்தார். 

இந்த நிலையில் டான்சி நில வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஜெயலலிதாவை 7.12.1996-ல் கைது செய்து சென்னை புழல் சிறையில் வைத்தனர். அப்போது நல்லமநாயுடு தலைமையிலான ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் சென்னை அமர்வு நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற்று ஜெயலலிதாவின் வங்கிக் கணக்குகளை முடக்கியதோடு அவருக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளை நேரில் சென்று 7.12.96 முதல் 12.12.96 வரை ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், ஐதராபாத் திராட்சை தோட்டம் ஆகிய இடங்களில் சோதனையிட்டார்.

வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அந்த தனி நீதிமன்றத்தில் 4.6.1997-ல்  3வது சிறப்பு நீதிபதி பி.அன்பழகன் முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 21.10.1997-ல் இந்த வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். சசிகலா, சுகாதரன், இளவரசி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. பிறகு 259 சாட்சியங்கள் சேர்க்கப்பட்டனர். 2000 ஆகஸ்ட்டில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஆகஸ்ட் மாதம் துவங்கியது. 250 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

மீண்டும் 2001 மே மாதம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுகவின் ஜெயலலிதா முதல்வரானார். சொத்து வழக்கின் போக்கு மாறியது. மூன்று அரசு வக்கீல்கள் ராஜினாமா, விசாரணை அதிகாரி மாற்றம், சிறப்பு நீதிமன்ற நீதிபதி மாற்றம் என நடந்தது. 

2002 நவம்பர் மாதம் வழக்கு விசாரணை மீண்டும் சூடு பிடித்தது. அதையடுத்து சாட்சிகள் மறு விசாரணை செய்யப்பட்டனர். 76 சாட்சிகள் குறுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டனர். அவருக்கான கேள்விகள், அவரது வீட்டுக்கே அனுப்பப்பட்டன. 2003 பிப்ரவரி மாதம் வரை விசாரணை நடந்தது 76 சாட்சிகளில் 64 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர். இதனை அரசு வழக்கறிஞர் தடுக்கவில்லை என்று தி.மு.க சந்தேகப்பட்டது. தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில், ''வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா முதல்வராக இருப்பதால், இந்த வழக்கை வேறு ஒரு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்'' என்று மனுத் தாக்கல் செய்தார். அதையடுத்து உச்ச நீதிமன்றம் வழக்கை பெங்களூருக்கு மாற்ற 18.11.2003-ல் உத்தரவிட்டது. 10.9.2004-ல் அதிகாரபூர்வமாக வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழில் இருந்த ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், பிறழ் சாட்சிகளின் விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு செய்தல் என நடந்தது. நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், வாதி வழக்கறிஞர்கள் மாற்றம் என நடந்தபடியிருந்தது. 2005ல் அரசு வக்கீலாக ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். வழக்கை மீண்டும் விசாரிக்க அவர் முயற்சித்தபோது, தனக்கான கேள்விகளை வீட்டுக்கு அனுப்பும்படியும், ஆஜராகாமல் இருக்கவும் ஜெயலலிதா நீதிமன்ற உத்தரவை பெற்றார் இதனால், வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. 2011 மே மாதம், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்றார்

ஆகஸ்ட் 12ந்தேதி சொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம், வீடியோ கான்பரன்ஸ் மற்றும் எழுத்து மூலமாக வாக்குமூலத்தை பதிவு செய்ய அனுமதி அளித்தது.

2011 செப்டம்பர் மாதம் அரசு தரப்பில் 259 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பாக விளக்கமளிக்க ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தை நாடினார். ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது. 

2011 அக்டோபர் மாதம், பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்த விசாரணையில், முதல்நாள் 567 கேள்விகளுக்கு பதிலளித்தார். மீதமுள்ள கேள்விகள் நவம்பர் 8ம் தேதி கேட்கப்படும் என்று நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுதாக்கல் செய்ய அது தள்ளுபடி செய்யப்பட்டது. நவம்பர் 9ந்தேதி மீதமிருந்த, 192 கேள்விகளுக்கு என மொத்தம் 1,339 கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஜெ தரப்பு அரசு வக்கீல் ஆச்சார்யாவுக்கு ஆசை காட்டி வளைக்க முயன்றது. அவர் மறுத்ததால் அப்போது மாநிலத்தில் இருந்த பி.ஜே.பி அரசு மூலம் அவரை தொந்தரவு செய்தது ஜெ படை. என் கடைசி காலத்தில் மன நிம்மதி முக்கியம் என 2012 ஆகஸ்ட் மாதம் ஜெ வின் வழக்கில் இருந்து விலகிக்கொண்டார். ஜெ மீதும், பி.ஜே.பி அரசு மீதும் குற்றம்சாட்டிவிட்டே சென்றார். 2013 பிப்ரவரி மாதம், புதிய சிறப்பு வக்கீலாக பவானி சிங் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம், வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றார். புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் டி குன்ஹா நியமிக்கப்பட்டார். பெங்களூரு தனி நீதிமன்றத்தில் வழக்கு கடந்த 10 ஆண்டுகளாகப் பல நீதிபதிகளால் விசாரணை செய்தாலும்  31.10.2013-ல் வழக்கின் புதிய நீதிபதியாகப் பொறுப்பேற்ற ஜான் மைக்கேல் டி.குன்ஹா, அதிரடிகளை காட்டினார். வீணான பெட்டிஷன்கள், காலதாமதம், இழுத்தடிப்பு என குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் குன்ஹாவிடம் “விளையாட“ தொடங்கினார்கள்.

7.3.2014-ல் அரசுத்தரப்பு இறுதிவாதம் தொடங்க உத்தரவிட்டார். அரசு வழக்கறிஞர் பவானி சிங் வராததால் 10.3.2014-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 10-ம் தேதியும் பவானி சிங் வரவில்லை. 14.3.2014-க்கு ஒத்தி வைக்கப்பட்டது. 14-ம் தேதி வந்த பவானி சிங் உடல்நிலை சரியில்லை. 10 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று மெடிக்கல் சர்டிஃபிகேட் கொடுத்தார். அதைகேட்டு கோபம்கொண்ட நீதிபதி, அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் ஒருநாள் சம்பளமான 65,000 ரூபாயை அபராதமாக விதித்தார். அடுத்த நாள் 15-ம் தேதியும் பவானிசிங் வராததால் அன்றும் ஒருநாள் சம்பளமான 65,000 ரூபாயை அபராதமாக விதித்தார். நீதிமன்ற வரலாற்றில் ஒரு அரசு வழக்கறிஞர் மீது நீதிபதி அபராதம் விதித்தது நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அதேபோல் அரசுத் தரப்பு இறுதி வாதம் 19.5.2014-ல் முடித்த உடனே ஜெயலலிதா தரப்பு இறுதிவாதம் செய்ய உத்தரவிட்டார். ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமாரின் தாயார் இறந்துவிட்டார். அதனால் எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்றார்கள் ஜீனியர்கள். விலக்கு அளித்தவர் ஏ2, 3, 4 வழக்கறிஞர்கள் தங்கள் இறுதிவாதத்தைத் தொடங்க வேண்டும் என்றார். ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமாருடைய இறுதிவாதத்தை முடித்த பிறகுதான் எங்கள் வாதத்தை தொடங்குவோம் என்று அடம் பிடித்தனர். அதற்கும் கடிவாளம் போட்டார். 


சொத்து பட்டியல்.........

பெங்களூரு நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக வாங்கிக் குவித்துள்ள சொத்துக்களின் பட்டியலை தாக்கல் செய்துள்ளார். அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாசித்த ஜெயலலிதாவின் 306 சொத்துப் பட்டியல் இதுதான்....

ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ஜே.எஸ்.ப்ராப்பர்ட்டீஸ், லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ், ஜெ ஃபார்ம் ஹவுஸ், ஜெயா கன்ஸ்ட்ரக்ஷன், ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், கிரீன் கார்டன், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், சூப்பர் டூப்பர் பிரைவேட் லிமிடெட் என 32 கம்பெனிகள் பெயரிலும் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன.

போயஸ் கார்டன் நிலம் மற்றும் கட்டடம் 10 கிரவுண்ட் 330 சதுர அடி விலை ரூ.1,32,009.

ஹைதராபாத் சிட்டியில் பிளாட் நம்பர் 36-ல் விரிவாக்கப்பட்ட 651.18 சதுர அடி கட்டடம் ரூ.50,000.

ஹைதராபாத் பஷீராபாத் என்ற கிராமத்தில் திராட்சைத் தோட்டம் மற்றும் இரண்டு பண்ணை வீடுகள், வேலையாட்களுக்கான குவாட்டர்ஸ் உள்ளிட்ட 11.35 ஏக்கர் நிலம் ரூ.1,65,058.

மேலும் அதே பகுதியில் 93/3 சர்வே எண்ணில் 3.15 ஏக்கர் ரூ.13,254 ஆகியவை சந்தியா மற்றும் ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்டுள்ளன.  

தஞ்சாவூர் மானம்புசாவடியில் 2,400 சதுர அடியில் நிலம் மற்றும் வீடு ரூ.1,57,125.

அதே பகுதியில் 51,000 சதுர அடி காலி நிலம் ரூ.1,15,315.

மீண்டும் அதே பகுதியில் காலி நிலம் ரூ.2,02,778 ஆகியவை சசி என்டர்பிரைசஸ் வாங்கியது. 

சசிகலா பெயரில் திருச்சி அபிராமிபுரத்தில் நிலம் மற்றும் வீடு 3,525 சதுர அடி ரூ.5,85,420. 

ஜெயா பப்ளிகேஷன் பெயரில் கிண்டி தொழிற்பேட்டை நிலம் மற்றும் ஷெட் ரூ.5,28,039.

புதுக்கோட்டையில் 1 கிரவுண்ட் 1,407 சதுர அடி நிலம் மற்றும் கட்டடம் ரூ.10,20,371.

டான்சி நிலம் 55 கிரவுண்ட் ரூ.2,13,68,152.

சசிகலா, இளவரசி, சுதாகரன் பெயரில் 900 ஏக்கரில் கொடநாடு டீ எஸ்டேட் மற்றும் ஃபேக்டரி ரூ.7,60,00,000.

வெலகாபுரம் கிராமத்தில் மெடோ ஆக்ரோ ஃபார்ம்ஸுக்கு 210.33 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா பெயரில் வட சென்னையில் சேயார் கிராமத்தில் விவசாய நிலம் வேதாசல முதலியார் மகன் நடேச முதலியாரிடம் 3.43 ஏக்கர் நிலம் ரூ.17,060.

ஜெயலலிதா சசிகலா பெயரில் சென்னை-28, சீனிவாச அவின்யூ நிலம் மற்றும் வீடு 1,897 சதுர அடி வெங்கடசுப்பனிடம் இருந்து ரூ.5,70,039 வாங்கியது. 

சசிகலா பெயரில் சாந்தோம் ஆர்.ஆர். ஃப்ளாட் ரூ.3,13,530.

சசி என்டர்பிரைசஸ் பெயரில் சென்னை 4, அப்பாஸ் அலிகான் ரோட்டில் ரூ.98.904-க்கு ஷாப்பிங் மால்

நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் ரோட்டில் 11 கிரவுண்ட் 736 சதுர அடி நிலம் ரூ.22,10,919

மவுண்ட் ரோடு, மயிலாப்பூரில் ஜெயலலிதா பெயரில் வாங்கிய நிலம் மற்றும் கடை ரூ.1,05409.

திருநெல்வேலி மாவட்டத்தில் 1,200 ஏக்கர்.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், முட்டுக்காடு, வெட்டுவாங்கேணி, பையனூர், சிறுதாவூர், சோழிங்கநல்லூர் செய்யூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, மன்னார்குடி என தமிழகத்தின் பல மாவட்டங்களில் காலி நிலம், கட்டடம், கடைகள் மற்றும் விளைநிலங்களும் வாங்கப்பட்டுள்ளன. 

சென்னையில் கிண்டி, டி.டி.கே ரோடு, மவுண்ட் ரோடு, லஸ் பகுதிகளில் இடங்கள், கட்டடங்கள் வாங்கப்பட்டுள்ளன.

பையனூர் பங்களா ரூ.1,25,90,261.

ஹைதராபாத் திராட்சைத் தோட்டப் பண்ணை வீடு ரூ.6,40,33,901.

போயஸ் கார்டன் வீடு விரிவாக்கம் ரூ.7,24,98,000.

சிறுதாவூர் பங்களா ரூ.5,40,52,298 உட்பட பல இடங்களில் உள்ள பண்ணை வீடுகள், புதிய கட்டடங்களின் மராமத்துப் பணிகளின் செலவுகள் பட்டியலிடப்பட்டன.

இளவரசி அக்கவுன்டில் அபிராமிபுரம் இந்தியன் வங்கியில் ரூ.2,42,211.

ஜெயலலிதா அக்கவுன்டில் மயிலாப்பூர் கனரா வங்கியில் ரூ.19,29,561.

மயிலாப்பூர் ஸ்டேட் பேங்க்கில் ரூ.1,70,570.

சசிகலா பெயரில் கிண்டி கனரா வங்கியில் ரூ.3,17,242

சுதாகரன் அக்கவுன்டில் அபிராமிபுரம் இந்தியன் வங்கியில் ரூ.5,46,577 

என, பல பெயர்களில் பல வங்கிகளில் இருப்பு வைத்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்ட கார்கள் டாடா சியரா - ரூ.4,01,131, மாருதி 800 ரூ.60,435, மாருதி ஜிப்ஸி, ட்ராக்ஸ் ஜீப். 

ஜெயா பப்ளிகேஷன் டாடா எஸ்டேட் கார், டாடா மொபைல் வேன் என பல மாடல்களில் 30-க்கும் மேற்பட்ட கார்கள் வாங்கியிருக்கிறார்கள்.

போயஸ் கார்டனில் கைப்பற்றப்பட்ட 389 ஜோடி செருப்புகள் ரூ.2,00,902, 914

பட்டுப் புடவைகள் ரூ.61,13,700 

மற்ற புடவைகள் ரூ.27,08,720 மற்றும் பழைய புடவைகள் ரூ.4,21,870. 

28 கிலோ தங்க நகைகள் 

குறிப்பாக இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு சொந்தமான சென்னையை அடுத்த ஊரில் 22 ஏக்கர் நிலத்தினை சுதாகரன் மிரட்டி வாங்கியது குறித்து அளிக்கப்பட்ட சாட்சியத்தினை நீதிமன்றத்தில் படித்துக் காண்பித்தார்.
அத்துடன் சனிக்கிழமை வாதம் முடிவுற்றது.   மீண்டும் நேற்றய தினம் அவ்வாதம் தொடங்கியது.  அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராகி, ஏற்கனவே இவ்வழக்கு தொடர்புடைய சாட்சிகள் வழங்கியிருந்து, பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களை படித்துக்காண்பித்தார்.  அதில் குறிப்பாகசசிகலாவும், இளவரசனும் சென்று நீலாங்கரையில் உள்ள ஒரு பங்களாவை சுற்றிப்பார்த்து அதை வாங்கியது சம்பந்தமாக அந்த இடத்தின் உரிமையாளர் வழங்கியிருந்த  சாட்சியத்தை படித்துக் காண்பித்தார். 
அதே போன்று நீலாங்கரையில் நீச்சல் குளம் உள்ளிட்ட ஒரு பங்களா அமைந்த இடத்தினைசுதாகரன் வாங்கியது சம்பந்தமாக அந்த இடத்தின் உரிமையாளர் அளித்திருந்த சாட்சியத்தையும் நீதிமன்றத்தில் பவானிசிங் படித்தார்.
மேலும், ஜெயலலிதா கொடநாட்டில் வாங்கிய 800 ஏக்கர் நிலத்தினை சீரமைக்க வேளாண்மைத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணனை அழைத்தது பற்றி அந்த அதிகாரியே சாட்சியம் அளித்துள்ளதைப் படித்து காண்பித்தார். 

1,000-க்கும் மேற்பட்ட வைரக்கற்கள் என 306 சொத்துகளின் அப்போதைய மதிப்பு ரூ.66,44,73,573 ஆகும்'' என்று விடாமல் வாசித்து முடித்தார்.

இதனை மறுத்து ஜெயலலிதாவின் வருமானத்தை விவரித்து அவரது வழக்கறிஞர் பி.குமார் வாதிட்டார். அதனை மறுத்து அரசு வழக்கறிஞர் பவானிசிங்கும் சுமார் 100 மணி நேரம் வாதிட்டுள்ளனர். இதே போல சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் வழக்கறிஞர்கள், ஜெயலலிதாவிற்கும் இவ்வழக்கிற்கும் தொடர்பில்லை. திமுகவின் அரசியல் பழிவாங்கும் வழக்கு' என சுமார் 90 மணி நேரம் வாதிட்டுள்ளனர். சுமார் 5 ஆயிரம் பக்கத்துக்கு எழுத்துப்பூர்வ அறிக்கையும் தாக்கல் செய்துள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் மூன்றாம் தரப்பான அன்பழகன் தனது வாதமாக 445 பக்கங்களில் எழுத்துப்பூர்வமான ஆதாரங்களை அடுக்கியிருந்தார். கடந்த 28.8.2014-ம் தேதி ஒரே நாளில் ஜெயலலிதா தரப்பு, அரசு தரப்பு என இரு தரப்பு இறுதிவாதத்தின் நிறைவுத் தொகுப்பு வாதத்தை முடித்து எழுத்துபூர்வமான வாதத்தையும் பெற்று அன்றே தீர்ப்பு தேதியை அறிவித்து பரபரப்பை கூட்டினார். 


நீதிபதி மைக்கல் டி குன்ஹா............

கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை நெருங்கியதற்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவே மிக முக்கிய காரணம்.
 
1996-ம் ஆண்டு ஜூலையில் சென்னை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிய சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை சிங்கார வேலர் சிறப்பு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் என கடந்த 18 ஆண்டுகளில் 6 நீதிமன்றங்களின் படிகளை ஏறி இருக்கிறது. 

சென்னை தனி நீதிமன்ற நீதிபதி சம்பந்தம் என்பவரில் ஆரம்பித்து
ஆறுமுக பெருமாள் ஆதித்தன்  சென்னை தனி நீதிமன்றம்
அன்பழகன்  சென்னை தனி நீதிமன்றம்
ராஜமாணிக்கம்  சென்னை தனி நீதிமன்றம்
மதிவாணன் சென்னை தனி நீதிமன்றம்
பச்சப்புரே  பெங்களுரு சிறப்பு நீதிமன்றம்
கிருஷ்ணப்பா பெங்களுரு சிறப்பு நீதிமன்றம்
மனோலி  பெங்களுரு சிறப்பு நீதிமன்றம்
ஆன்டின்  பெங்களுரு சிறப்பு நீதிமன்றம்
மல்லிகார்ஜுனய்யா  பெங்களுரு சிறப்பு நீதிமன்றம்
சோமராஜ்  பெங்களுரு சிறப்பு நீதிமன்றம்
பாலகிருஷ்ணா  பெங்களுரு சிறப்பு நீதிமன்றம்
முடிகவுடர்  பெங்களுரு சிறப்பு நீதிமன்றம்
ஜான் மைக்கேல் டி குன்ஹா  பெங்களுரு சிறப்பு நீதிமன்றம்
வரை 14  நீதிபதிகள் இவ்வழக்கை விசாரித்துள்ளனர். 

ஜான் மைக்கேல் டி'குன்ஹா 14-வது பெங்களுரூ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக கடந்த 31-10-2013 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பெங்களூர் சிபிஐ நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், பெங்களூர் மாவட்ட நீதிமன்ற பதிவாளராகவும் பணியாற்றிய இவர் கடந்த 11 மாதங்களில் வழக்கை தீர்ப்பை நோக்கி நகர்த்தியுள்ளார். அதற்கு காரணம் அவருடைய கடினமான உழைப்பும், கண்டிப்பான அணுகு முறையும் தான் காரணம். மேலும் மனு மேல் மனு போட்டு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த தனியார் நிறுவனங்களின் மனுக்களை மிகச்சரியாக கையாண்டார். முதல் முறையாக அவர்களுக்கு அபராதம் விதித்தார். அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் அவரு டைய இரு நாள் ஊதியம் 1.2 லட்சத்தை அபராதமாக விதித்தார். உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞருக்கு அபராதம் விதித்த‌து அதுவே முதல்முறை.
 
டி குன்ஹா சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க ஆரம்பித்ததும் வாரத்தின் 5 நாட்களும் விசாரணையை தொடர்ந்து நடத்தினார். இதற்காக தினமும் 18 மணி நேரம் ஒதுக்கி வேலை செய்தார். அதுவும் தீர்ப்பு தேதியை குறித்த பிறகு, நீதிமன்றத்தை சுத்தம் செய்பவர்கள் வருவதற்கு முன்பாக தனது இருக்கையில் வந்து அமர்ந்து விடுவார். தினமும் மாலை 6 மணிக்கு தான் வீட்டிற்கு திரும்புவார். வழக்கு குறித்த அனைத்து ஆவணங்களையும் படித்து, அவ்வப்போது குறிப்பெடுத்துக்கொள்வார் என பெங்களூர் சிறப்பு நீதிமன்ற ஊழியர்கள் நீதிபதி டி'குன்ஹாவின் பாணி குறித்து விவரித்தனர்.
 
நீதிபதி டிகுன்ஹாவை பொறுத்தவரை அவர் ஒரு முறை தீர்ப்பு அளித்தால், அந்த வழக்கு அடுத்தடுத்து உயர்நீதி மன்றங்களை அணுகினாலும் தோல்வியே அடையும். அந்த அளவுக்கு தீர்ப்பு வழங்குவதில் கெட்டிக்காரர் என கர்நாடக நீதித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.  தீர்ப்பின் இறுதி வடிவத்தை தனது கைப்படவே கடந்த 4 தினங்களாக திருத்தி, தட்டச்சு செய்துள்ளார்.
 
இதனிடையே இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் ஜெயலலிதா தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரியதால் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள காந்தி பவனுக்கு மாற்றப்பட்டது.  27ந்தேதி காலை 10.45க்கு தமிழக முதல்வராக இருந்த ஜெ, சசிகலா, சுதாகரன், இளவரசி சிறை வளாகத்துக்குள் உள்ள நீதிமன்றத்துக்கு சென்றனர். 

அதுவரை இது ஒரு பொய் வழக்கு என்றே அதிமுகவினர் நம்பினர். 2014 செப்டம்பர் 27ந்தேதி மதியம் 2.25 மணியளவில் அந்த நம்பிக்கையை பொய்யாக்கியது நீதிபதியின் தீர்ப்பு. தமிழக முதல்வரும், அதிமுக பொதுசெயலாளருமான ஜெவுக்கு, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதோடு சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டு 6 மாதங்கள், தலா 10 கோடி மற்றும் 10 ஆயிரம் அபராதம் என தீர்ப்பை வாசித்தார். 

இந்த தீர்ப்பு ஜெவின் அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகிவிட்டது. இந்தியாவில் முதல்வர் பதவியில் இருக்கும்போதே ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற நாட்டின் 'முதல்' முதல்வர் என்ற பெயரை ஜெயலலிதா எடுத்துள்ளார். ( இதே சட்டத்தின் கீழ் பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாத்வ் பதவி பறிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ). 

தீர்ப்புக்கு பின் தமிழகம் முழுவதும் வன்முறை ஆட்டத்தை ஆடினர் ஆளும் அதிமுகவினர். கவர்னர் ரோசய்யா உயர் அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என உத்தரவிட்டார்.