புதன், ஆகஸ்ட் 29, 2012

அவளின் கேள்விக்கு என்ன பதில்.

அவளின் கேள்விக்கு என்ன பதில்....  என்ற தலைப்பில் நான் எழுதிய சிறுகதை வல்லமை இணைய தளத்தில் வந்துள்ளது. நண்பர்கள் படித்து கருத்து கூறவும்.

கதையை படிக்க மேலே உள்ள தலைப்பை க்ளிக் செய்தால் வல்லமை தளத்திற்க்கு அழைத்து செல்லும்.

நன்றி. 

புதன், ஆகஸ்ட் 15, 2012

சுகமான சுமைகள் …………. 30.




சென்னை வந்ததும் ஜானிடம் நடந்ததை சொன்னதும், மச்சான் என்னாச்சி அதுக்கு.  எதுக்காக இப்ப உங்கள பிரிக்கனம்ன்னு நினைக்குது. உங்க காதலை எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க. சொந்தக்காரங்க பலருக்கும் நீ தான் அதை கல்யாணம் செய்துக்க போறன்னு தெரியும் அப்பறம் என்ன திடீர்ன்னு இது குட்டைய குழப்புது. 

தெரியலடா. 

கவிதாவ கேட்டியா 

கேட்டன் தெரியலன்னு சொல்றா. 

சரி நீ நேர அவுங்க அம்மாக்கிட்டயே கேட்க வேண்டியதுதானே. 

அவுங்க முன்னமாதிரியில்லடா சரியா பேசறதில்ல. 

நீ தேவிக்கிட்ட சொல்லி என்னன்னு கேட்டுப்பாறேன். 

இரண்டு நாள் பொருத்து தேவி எதுவும் சொல்லமாட்டேன்னிட்டா என்றதாம். 

கவிதாவுக்கும் தெரியவில்லை. 

ஜான் தான் மச்சான் ஒருவேளை, நாம வசதியான இடத்தல கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதே மாதிரி தங்கச்சியும் வசதியான மாப்பிள்ளையா பாத்து கல்யாணம் செய்து வைக்கனம்ன்னு யோசிச்சியிருக்குமோ. 

ஏய் ச்சீ. நீயா ஏதாவது கற்பனை பண்ணாத. 

அப்பறம் ஏன் திடீர்ன்னு தடுக்கனும்?. நான் சொல்றது தான் காரணமா இருக்குமோன்னு நினைக்கறன் என்றவன் மச்சான் கவிதா ஸ்ட்ராங்கா தானே இருக்கு. 

ம். அப்பறம் என்ன விடு. அது ஒத்துக்கலன்னா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்குங்க. அதுக்கப்பறம் பிரச்சனை வராது. 

விடு. அத அப்பறம் பாத்துக்கலாம் என்றபடி வேலை பார்க்க தொடங்கினோம். 

அடுத்த 6 மாதம் ப்ரியாவிடம் பேச நினைத்தாலும் ஏதோ ஒன்று தடுத்துக்கொண்டே இருந்தது. கவிதாவிடம் மட்டும் பேசிக்கொண்டு இருந்தேன். ஆனால் மெல்ல மெல்ல கவிதாவின் போக்கு மாறத்தொடங்கியது. முன்பு போல் பேசுவதில்லை, வாரந்தோறும் பார்த்துக்கொண்டது இப்போது கட்டாயப்படுத்தினால் மட்டுமே அவளை சந்திக்க முடிந்தது. அதேநேரம் கவிதா என்னைப்பற்றி எதிர்மறையாக பேசுகிறாள் வந்த தகவல் வேப்பங்காயாக கசக்க தொடங்கியது. இருந்தும் கவிதா முடிவு எடுத்தால் பிடிவாதமாக இருப்பால் என்பதால் சைலண்டாகவே இருந்தேன். 

கவிதாவின் கல்லூரி படிப்பு முடிந்து ஒரு ஸ்கூலில் டீச்சராக வேலைக்கு போக தொடங்கியபின் அவளிடம் காதல் இல்லையோ என எண்ணத்தோன்றியது. அந்தளவுக்கு என்னை உதாசினப்படுத்துவதாக தோன்றியது. இது மனப்பிரம்மையாக இருக்கும் என எண்ணி அதில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. ஆனால் நாட்கள் ஆக ஆக தான் புரிந்தது மனப்பிரம்மையல்ல உண்மையென்பது. பல விஷயங்களை கவிதாவின் நண்பர்கள் சொல்லியே அறியவந்தபோது அதிர்ச்சியானது. 

இந்த நேரத்தில் தான் அந்த கல்யாணம் உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. கவிதாவின் உறவினர் ஒருவரின் திருமணம் பெங்களுருவில் நடந்தது. அந்த திருமணத்திற்க்கு எனக்கு தனியாக அழைப்பு வந்திருந்தது. இதை அவர்களிடம் கூறவில்லை. அவர்களும் என்னை அழைக்காமல் சென்றுவிட்டனர். சென்னையில் இருந்து ரயில் மூலமாக நானும், ஜானும் போயிருந்தோம். அங்கே எங்களை கண்ட கவிதாவுக்கு அதிர்ச்சி. அதைவிட அதிர்ச்சிக்குள்ளானவர்கள் அவரது பெற்றோரும், ப்ரியாவும் தான். 

மேடைக்கு சென்று அந்த பெண்ணை வாழ்த்திவிட்டு வந்தபோது ப்ரியாவின் கணவர் தான் என்ன பாஸ் கண்டுக்காம போறிங்க என அழைத்தார். ஸாரி சார் கவனிக்கல என்றதும் அருகில் உட்கார வைத்து பேசியவர், வீட்டுக்கு வாங்க இல்ல சார் லீவுயில்ல உடனே போகனும். அப்ப வாங்க சாப்பிட்டுட்டு போகலாம் என்றார். இருவரும் சென்று சாப்பிட்டபோது ப்ரியா பேசவேயில்லை. கவிதா மட்டும் சைகை காட்டி தனியே அழைத்தாள். மண்டபத்தின் ஓரமாக சென்றபோது எதுக்கு வந்த என கேட்டாள். 

அழைப்பிதழ் அனுப்பி கூப்டாங்க வந்தன். 

உனக்கு எதுக்கு அவுங்க இன்விடேஷன் தந்தாங்க.

உனக்கு எதுக்கு தந்தாங்களோ அதுக்கு தான் எனக்கும் தந்தாங்க. நீ வர்றன்னு சொல்லவேயில்ல. நான் போன் பண்ணா ஏதாவது ஒரு காரணம் சொல்லி அதிகம் பேசறதில்ல. நீயும் பேசறதில்ல அப்படியிருக்க நான் என்னத்த சொல்றது. நீ வந்தியே ஒரு வார்த்தை சொன்னியா எனகேட்டபோது அமைதியாக இருந்தாள். சற்று இடைவெளிவிட்டு வேற ஏதாவது கேட்கனுமா என கேட்டபோதும் அமைதியாக நின்றிருந்தாள். 

நான் கிளம்பறன் என அவளிடம் சொல்லிவிட்டு உட்கார்ந்திருந்த ப்ரியாவின் கணவரிடம் வந்து புறப்படறன் சார் என அவரிடமும் கவிதாவின் அப்பா, அம்மாவிடம் சொல்லிவிட்டு வந்தோம். 

என்னடா கேட்டுச்சி. 

எதுக்கு வந்தன்னு கேட்டா. பதில் சொன்னன். 

மச்சான், ப்ரியா வில்லங்கம் பண்ணுது உஷாராயிரு. 

அது எங்க காதலை நேரடியாவே எதிர்க்குது. பேசியாச்சி புரியோஜனம்மில்ல. இனிமே இதல முடிவு எடுக்க வேண்டியது கவிதா தான். ஆனா இப்ப அவ என்னை விட்டு ஒதுங்கி போறா, அவுங்க வீட்லயும் அப்படித்தான். என்ன காரணம்ன்னு தெரியாம என்னன்னு பேச சொல்ற. எதுவும் சொல்லமாட்டேன்கிறாங்க. என்னைப்போய் கெஞ்ச சொல்றியா. போடா அதுக்கு வேற ஆளைப்பாரு என்றாலும் மனம் தவித்தது. 

நாட்கள் போனது கவிதா காதல் ‘பேசுவதை’ சுத்தமாக விட்டுயிருந்தாள். நேரில் பார்க்கும்போது மட்டும் நல்லாயிருக்கியா, சாப்ட்டியா என்ற சாதாரண வார்த்தைகளே வந்தன. 

அன்று சனிக்கிழமை பஸ்சை விட்டு இறங்கி நான் என் வீட்டுக்கு கிளம்ப முயன்றபோது  தான் தயங்கி தயங்கி மச்சான் என அழைத்தான். 

என்னடா. இல்ல ஒரு முக்கியமான விஷயம் எப்படி சொல்றதுன்னு தெரியல. மனசு கேட்கல மச்சான். நீ மனச தைரியப்படுத்திக்க?. என்னடா பெருசா பீடிகை போடற என்ன விஷயம் சொல்லு. 

காலையில தேவி போன் பண்ணியிருந்தது. கவிதாவுக்கு மாப்பிள்ளை பாத்துயிருக்காங்களாம். அவர் வாத்தியாரா இருக்காறாம் என சொல்லச்சொல்ல அந்த வார்த்தைகள் என் இதயத்தில் யாரோ கொதி நீரை ஊற்றியது போல் இருந்தது. நெஞ்செல்லாம் சுட்டது, வயிற்றுக்குள் கூட அமிலம் பரவியது. 

என் முகம் இருளுவதை கண்டவன் 

சத்தியமா மச்சான் கல்யாணத்துக்கே டேட் குறிச்சிட்டாங்களாம் என அவன் சொல்லும் போது கண்ணீல் நீர் தளும்பியது. எத்தனை பெரிய ஏமாற்றம். எல்லாம் அவளாள வந்தது. அன்னைக்கு அவ்வளவு வீராப்பா பேசனா, இப்ப எப்படி கல்யாணத்துக்கு ஒத்துக்கனா, ஒரு வார்த்தை கூட மன்னிடுச்சிடுன்னு கேட்காம எப்படி கல்யாணம் செய்துக்கு முடியுது இவளாள. பேசனது, பழகனது எல்லாமே மறந்துட்டாலா?. ஆப்படி நான் என்ன தப்பு பண்ணன். கடைசியல அக்காளும் தங்கச்சியும் ஒன்னா சேர்ந்துட்டாளுங்களே. ஏமாந்தது நான் தானா என்ற கேள்வி என் மனதில் வந்தபோது சாலை என்றும் பாராமல் அழுதுயிருந்தேன். என்னடா மச்சான் இதுக்கு போய் அழுதுக்கிட்டு இருக்கற. வா என டாஸ்மாக் அழைத்து சென்றான். என்றும்மில்லாமல் அவ்வளவு அதிகமாக குடித்திருந்தேன். நடக்க முடியாமல் தடுமாறினேன். நீ வீட்டுக்கு போக வேணாம் எங்கவீட்டுக்கு போகலாம் என்றான். 

மறுநாள் கவிதா வீட்டுக்கு போனபோது, எதுவுமே நடக்காததை போல் இருந்தார்கள். சகஜமாக நலம் விசாரித்தனர். அப்போது வீட்டுக்கு வந்த கவிதாவின் அப்பா தம்பி கவிதாவுக்கும் மாப்பிள்ளை பாத்து முடிவாகியிருக்கு. கல்யாணத்தப்ப கூடயிருப்ப என்றபோது எனக்கு அதிர்ச்சியெதுவும் ஏற்படவில்லை. ஆனால் கவிதா, அவரது அம்மா முகத்தில் அதிர்ச்சியின் ரேகை பரவியது. அதை கண்டாலும் கண்டு கொள்ளாததைப்போல் அப்படியா நல்லா விஷயம். மாப்பிள்ளை என்ன பண்றாரு மாப்பிள்ளை என பொதுவாக விசாரித்துவிட்டு கிளம்பும்போது கவிதாவிடம் வாழ்த்துக்கள் என கை நீட்டியபோது அமைதியாகவே தலைகுனிந்து நின்றிருந்தாள். கிளம்பறன் எனச்சொல்லிவிட்டு கிளம்பினேன்.

அடுத்த இரண்டு மாதத்தில் திருமணம். திருமண பத்திரிக்கை வீட்டுக்கு வந்திருந்தது. யாரும் போகவில்லை. போகமாட்டேன் என முரண்டு பண்ண ஜானை மட்டும் கட்டாயப்படுத்தி அனுப்பியிருந்தேன். கல்யாணத்துக்கு போய் வந்தவன் ப்ரியா வ பாத்தன் மச்சான். உன்னைப்பத்தி ஒருவார்த்தை கூட பேசலடா. 

சாப்பாடு நல்லாயிருந்ததா ?.
என்ன மச்சான் நான் ஒன்னு சொல்றன். நீ ஒன்னு கேட்கற?.

வேற என்ன பண்ணச்சொல்ற. கேட்கறது கேட்காதது அவுங்க விருப்பம். அவுங்க மறந்துயிருக்கலாம் நான் மறக்கல. தேவி என்னை சந்திச்சியிருந்தா ப்ரியா எப்படி இருக்காங்கன்னு கேட்டுயிருப்பன். அவுங்க கேட்கலங்கறதப்போய் பெருசா எடுத்துக்கிட்டு. நான் இப்ப தனிமரம். அவுங்க தோப்பு. தோப்புல நிறைய பணியிருக்கும். தனிமரத்துக்கு ஒரு வேளையும் இருக்காது. புரிஞ்சதா ?. அவுங்களுக்கு நிறைய வேலை விடு. 

நீ மட்டும் இத எப்படிடா சாதாரணமா எடுத்துக்கற ?. 

இங்கப்பார் ப்ரியாவப்பத்தி எனக்கு நல்லாத்தெரியும். அவுங்க புடிச்ச முயலுக்கு மூனு காலுன்னு சொன்னா நாம அத வழி மொழியனும். இல்லன்னா விடமாட்டா. அது காதலை எதிர்க்கும் போது என் வாழ்க்கையாச்சே போக போக சரியாகிடும்ன்னு நினைச்சன். ஆனா நினைச்சது ஒன்னு நடக்கறது ஒன்னாயிருந்தப்பவே நான் புரிஞ்சிக்கிட்டன். அப்பவே மனசுல ஓரு ஏமாற்றத்த தாங்கிக்கற மனப்பக்குவத்த ஏற்படுத்திக்கிட்டன். இருந்தும் கல்யாணம் பிக்ஸ்சாகிடுச்சின்னப்ப என்னால தாங்க முடியல. ஆனாலும் எதிர்பார்த்தது தானேங்கற எண்ணம் வந்தப்ப மனசு சாந்தமாகிடுச்சி. அதனால தான் பெருசா துயரப்படல. தூடி வளக்கல. 

நானாயிருந்தா செத்துயிருப்பன். 

போடாங்க. பொண்ணுங்க கல்யாணம் செய்துக்கிட்டு வாழ்வாக காதலிச்சதுக்காக நாம சாகனும்மாயென்ன. சில மாசத்துக்கு நம்மளை ஏமாத்திட்டாளேன்னு மனசு துடிக்கும், சரி நல்லாயிருக்கட்டும் அப்படின்னு நினைக்கும், அப்பறம் நம்ம கல்யாணத்தப்பத்தி யோசிக்க ஆரம்பிச்சிடுவோம். இயந்தரதனமான இந்த உலகத்தல எல்லாமே சீக்கிரம் மறந்து மனதின் ஆழத்துக்கு போயிடும். 

என்னடா தத்துவமா பேசற. 

புத்தகங்களை படி. 

எனக்கு இன்னும் மனசு ஆரல மச்சான். உன்னால தான் கல்யாணத்துக்கே போனன். 

அதிருக்கட்டும் எப்ப உன் கல்யாணம். தேவி என்ன சொல்லுது. 

இப்ப என்ன மச்சான் அவசரம். ஒரு வருஷம் போகட்டும் அப்பறம் பாத்துக்கலாம். 

காலாகாலத்துல கல்யாணத்த பண்ணுடா. உனக்கும், அதுக்கும் வசதிக்கு பிரச்சனையில்ல. அப்பறம் எதப்பத்தி யோசிச்சிக்கிட்டு. கல்யாணத்தப்பண்ணிக்கிட்டு குடும்ப வாழ்க்கைக்கு போற வழிய பாரு. 

நீ ?. 

நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டன்னு யார் சொன்னது. மனசுங்கற கிணத்துல காதல் புதைஞ்சதுக்கப்பறம் நிச்சயமா கல்யாணம் செய்துக்குவன் என அவனிடம் பேசினாலும் அந்த காதல் நினைவுகளை மறக்க கடினமாகவே இருந்தது. 

இந்த இரண்டான்டில் காதலை நினையாத நாட்கள் பல. ஆனால் ப்ரியாவை நினையாத நாளேயில்லை. இந்நிலையில் தான் கம்பெனியில் பணியாற்றுபவர்களை டூர் அனுப்பிவைத்தார்கள். அப்படி போய் வந்தபோது தான் ப்ரியாவிடம் இரயில்வே நிலையத்தில் அடிவாங்க நேர்ந்தது என சொன்னபோது என்ன மச்சான் இவ்ளே நடந்துயிருக்கு சொல்லவேயில்ல என தருண், விநோத், குமார் கேட்டனர். அந்த ஓட்ட வாய் ஜான் கூட சொல்லலையே மச்சான் என ஆளாளுக்கு கேட்டபோது ஒரு சிகரெட் வாய் நுணிக்கு போயிருந்தது. 

எதுக்கு மச்சான் உங்க காதலை அவுங்க பிரிச்சாங்க. 

தோள்பட்டையை குளுக்கியபோது, நீ அவுங்கக்கிட்ட கேட்கலயா. கல்யாணத்துக்கு அப்பறம் அவுங்க இரண்டு பேரை நானும் பார்க்கல. பார்க்க முயற்சிக்கல எனும்போதே ரயில் காட்பாடியை நெருங்கியிருந்தது. மச்சான் நான் இப்படியே ஊருக்கு போய்ட்டு வர்றன்டா. இரண்டு நாள் ஆபிஸ்ல லீவு சொல்லிடுங்கடா எனச்சொல்லிவிட்டு காட்பாடி ஜங்சனில் பெட்டியை விட்டு இறங்கினேன். 

ஆட்டோ பிடித்து ஜான் வீட்டுக்கு போனபோது, டிவி பார்த்துக்கொண்டு உட்கார்ந்துயிருந்தான். என்னடா படுத்த படுக்கையா இருக்கன்னு சொன்ன. பாத்தா அப்படி ஒன்னும் தெரியலயே என கேட்டபோது அமைதியாக இருந்தான். 

மச்சான் லவ் மேட்டர் தேவி வீட்டுக்கு தெரிஞ்சிப்போச்சி, பிரச்சனையாகிடும் போல அதான் உடம்பு சரியில்லன்னு லீவு போட்டு என்ன பண்றத்துன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தன். யோசிச்சி முடிச்சிட்டியா?. 

ஓரு ஐடியாவும் வரலடா. ஆவன் அண்ணன் என்னை எங்க பாத்தாலும் அடிச்சி கை, காலை உடைப்பன்னு வேற சொல்லியிருக்கானான்டா. 

யார் சொன்னது?

தேவி. 

விடு பாத்துக்கலாம். சரி உங்க வீட்ல சொல்லிட்டியா?. 

இன்னும் இல்ல மச்சான். இங்க அதுக்கு மேல பிரச்சனை வரும். அது இந்து, நான் கிருஸ்டியன். இது வேற பிரச்சனையாகும். ஏன்னப்பண்றத்துன்னு தெரியல. ஏதாவது ஐடியா சொல்லுடா. 

ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க. 

விளையாடதடா. 

உங்கப்பா எங்க? ரூம்ல இருக்காரு என்னும் போதே வெளியே வந்தவர் என்னப்பா எப்படி இருக்கற. 

நல்லாயிருக்கன்ப்பா. 

என்ன நீ டூர் போய்ட்டு வர்ற, இவன் வீட்லயே இருக்கான். 

அது ஒன்னும்மில்லப்பா. சார் 5 வருஷமா ஒரு பொண்ண லவ் பண்றாரு. அந்த பொண்ணு வீட்ல தெரிஞ்சிப்போச்சாம். அவுங்கண்ணன் கை, காலை உடைப்பன்னு சொல்லியிருக்கானாம். ஆதான் வீட்ட விட்டு வெளியில போகாம காதல்ல எப்படி ஜெயிக்கறதுன்னு யோசிச்சிக்கிட்டு இருக்காரு என சொல்லியபடியே ஜான் முகத்தை பார்த்தபோது அதிர்ச்சியாகிபோயிருந்தான். 

அவனது அப்பாவோ விளையாடதப்பா இவனை ஒரு பொண்ணு காதலிக்குதுன்னா அந்த பொண்ணு தான் பாவம் என்றார். 

நான் ஜோக்கா சொன்னன் ஆனா அதான் உண்மை என்றதும் அவரது முகம் மாறியது. ஜானின் அம்மா உள்ளேயிருந்து வந்து டேய் என்னடாயிது என அதிர்ந்து போய் கேட்டார். 

நீ சும்மாயிரு என்றவர் முழு தகவலையும் கேட்டவரிடம் விலாவரியாக சொன்னதும் கேட்டவர் பொண்ணு வீட்ல ஒத்துக்கிட்ட நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கறன்ப்பா என்றார். 

அந்த பொண்ணு இந்து மதம்மா நமக்கு ஒத்துவரும்மான்னு யோசிக்காம சரிங்கறங்களே நியாயமா?. 

இங்கப்பாரு. நீ பெத்தது ஒன்னு. நாம என்ன சொன்னாலும் கேட்கமாட்டான். நம்ம மரியாதையை காப்பாத்திக்க நாம கல்யாணம் செய்து வச்சிதான் ஆகனும். இல்லன்னா நான் மேஜர்ன்னு சொல்லி ரிஜிஸ்டர் ஆபிஸ்ல போய் பண்ணிக்குவான். இன்னோன்னு தெரிஞ்சிக்க நம்ம மனச சாந்தப்படுத்திக்கவும், நமக்கு மேல ஒருத்தன் நம்மை கண்காணிச்சிக்கிட்டே இருக்காங்கற பயம் மனிதனோட மனசுல இருக்கனும்கிறதுக்காக கடவுள வணங்கறோம். அந்த கடவைள நாம யோசுபிரான்ங்கறோம், அவுங்க சிவபெருமான்ங்கறங்க இரண்டுமே ஒன்னு தான். எல்லா மதமும் அன்பை தான் போதிக்குது. அதனால அவன் விருப்பப்படி செய்யட்டும். ஆனா அந்த பொண்ணு குடும்பத்தல ஒத்துக்கனும் அப்பத்தான் கல்யாணம் என்றவர் எழுந்து உள்ளே சென்றார் அவனது அம்மாவும் அவரது பின்னாலேயே சென்றார்கள். 

நூன் என்னம்மோன்னு நினைச்சன் சப்புன்னு போயிடுச்சேடா. உங்கப்பா இவ்ளோ நல்லாவரா இருக்காறேடா என்றதும். சிரித்தவன் தேங்ஸ் மச்சான் என்றவன். தேவி வீட்ட எப்படிடா சமாளிக்கறது. 

யோசி அத நாளைக்கு பாக்கலாம். நான் வீட்டுக்கு போய்ட்டு வர்றன் என கிளம்பினேன். வீட்டுக்கு வந்ததும்மே, டேய் புரோக்கர் வந்து பொண்ணுங்க போட்டோ தந்துட்டு போயிருக்காரு. அதல பாத்து ஏதாவது ஒன்ன சொன்னன்னா பேசலாம்டா. 

நீ வேற வந்ததும் வராததும்மா ஏம்மா ?.

இப்ப கல்யாணம் பண்ணாம எப்ப பண்ணபோற. உன் கூட விளையாடனவனுங்களுக்கு கல்யாணமாகி அவன் பசங்க தெருவுல விளையாடுதுங்க தெரிஞ்சிக்க. 

இப்ப வாங்கற சம்பளத்த வச்சி என்ன குடும்பம் நடத்தறது. 

உன்ன யாரு வேலைக்கு போகச்சொன்னது. நமக்கு இருக்கற நிலத்தல பயிர் செய்தாலே யாருக்கும் பதில் சொல்லாம வாழலாம். 

விவசாயம் அதுயிதுன்னு சொல்லாத. கல்யாணம் தானே பண்ணிக்கறன். பொண்ண பாருங்க என சொல்லிவிட்டு கிணத்தடிக்கு சென்றேன். 

மறுநாள் காலையிலேயே தேவிக்கு வீட்டுக்கு போன் செய்தபோது தேவியே எடுத்தது. நலம் விசாரித்துவிட்டு உங்கண்ணன் எங்க என்றதும் இரு தர்றன் என்றது. கொஞ்ச நேரத்தில் ஹாலே என்ற குரல் கேட்டதும், ம் சொல்லுடா. 

உங்கிட்ட கொஞ்சம் நேர்ல பேசனும். எப்ப பாக்கலாம். 

என்னடா விஷயம். 

நேர்ல சொல்றன்னே. 

சரி, 11 மணிக்கா கண்ணா ஹோட்டல் ஜீஸ் கடைக்கா வந்துடேன் என்றான். 

சொன்னது போல் அங்கு போய் காத்திருந்தபோது பைக்கில் வந்தான். இரண்டு ஆரஞ்சி ஜீஸ் ஆர்டர் சொல்லிவிட்டு அங்கிருந்த வேப்பமர நிழலில் நின்றபடி என்னடா பிரச்சனை எதுக்கு ஜானை அடிக்கபோறன்னு சொன்னியாம். 

டேய் உனக்கு தெரியாம அவன் எதையும் பண்ணமாட்டான். அந்த நாயை பாத்தன் அவ்ளோ தான். சொல்லிவை. 

தப்புதாண்டா. இல்லன்னு சொல்லல. நீ நினைக்கற மாதிரி அவன் எங்கிட்ட சொல்லிட்டுயெல்லாம் காதலிக்கல. பைனல் இயர் படிக்கும் போது தான் எனக்கே தெரியும். காலேஜ் சேந்ததுலயிருந்து காதலிக்கறோம்ன்னு சொன்னான். அதுக்கப்பறம் இப்ப 2, 3 வருஷமா காதலிக்கறது தெரியும். அவுங்க இரண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவு. அதனால எம்மேல கோபப்படாத. அவன் நல்ல வேலையில இருக்கான், வசதிக்கு பிரச்சனையில்ல. நல்லா பாத்துக்குவான்டா. அது மேல உயிரையே வச்சியிருக்கான். உங்க வீட்டுக்கு காதல் மேட்டர் தெரிஞ்சி நீங்க தேவிய போட்டு அடிச்சிட்டிங்கன்னு இரண்டு நாளா சாப்பிடாம இருந்திருக்கான். நான் நேத்து தான் டூர் முடிச்சிட்டு வந்தன். அப்பத்தான் எனக்கே விவகாரம் தெரியும். அப்பறம் நைட் அவனை சாப்பிடவச்சிட்டு வீட்டுக்கு போனன். அதான் காலையிலயே வீட்டுக்கு போன் பண்ணன். 

அவளை அடிச்சன்னு யாரு சொன்னது. 

அவன் தான் சொன்னான். 

அடிச்சா கேட்கற ஆளா அவ. 

என்னதான் முடிவு பண்ணியிருக்கிங்க. 

அவன் வேற மதம், நாங்க வேற மதம் அதனால செட்டாகாதுன்னு எங்கப்பா ஃபீல் பண்றாரு. 

நீ சொல்லிப்பாரு. 

நீயும் உடந்தையான்னு செருப்பால அடிப்பாரு. 

என்னடா நீயே இப்படி பேசற. நீ வேன்னா வீட்டுக்கு வா எங்கப்பாக்கிட்ட பேசு. அவர் ஒத்துக்கிட்டா எங்களுக்கும் ஓ.கே. 

நீ ஓ.கே தானே?. 

எங்கப்பாவுக்கு ஓ.கேன்னா எனக்கு ஓ.கே என்றான். ஜீஸ் குடித்துவிட்டு அவன் அப்பா வைத்திருந்த மளிகைகடைக்கு சென்றபோது வியாபாரத்தில் இருந்தார். என்னை அறிமுகப்படுத்தினான். நான் தேவியோட 12வது வரை ஒன்னா படிச்சன். ஒருமுறை வீட்டுக்கு கூட வந்துயிருக்கன். 

சரிப்பா என்ன விஷயம். இவ்ளோ தூரம் வந்துயிருக்க. 

அது வந்து என தயங்கியதும் மதிய சாப்பாட்டுக்கு டைம்மாகிடுச்சி. வீட்டுக்கு வா பேசிக்கலாம் என்றவர் கடை பையனிடம் பாத்துக்கடா வந்துடறன் எனச்சொல்லிவிட்டு அவரது டிவிஎஸ்சில் புறப்பட்டார். 

வீட்டுக்குள் வந்ததும், உனக்கொரு தங்கச்சி இருந்திருந்தா நீ இப்படி தான் நடந்துப்பியா என கேட்டபோது தலைகுனிந்தேன். 

அப்போது தேவியின் அம்மா, தேவி ஆகியோர் ஹாலுக்கு வந்திருந்தனர். 

அவன் நல்ல பையன் சார். 

அவன் நல்ல பையன்னா அவன் எதுக்கு உன்ன அனுப்பறான். அவுங்க அப்பா – அம்மாவை தானே அனுப்பனும்?. 

நீங்க சொல்றது சரிதான் சார். 

நீங்க தேவிய போட்டு அடிச்சி உதைச்சிங்களாம், இவன் வேற அவனை எங்கப்பாத்தாலும் அடிச்சி கை, காலை உடைப்போம்ன்னு சொன்னானாம். பயந்து போய் என்கிட்ட சொன்னான். இப்பக்கூட நான் வந்தது அவனுக்கு தெரியாது வேணும்ன்னா நீங்க போன் பண்ணி கேட்டுப்பாருங்க. நான் வீட்ல இருப்பன்னு தான் சொல்லுவான். 

தம்பீ. நீ அவன் ப்ரண்ட் அதுக்காக வந்துயிருக்கற. ஆனா, இது என் பொண்ணு விஷயம் உன்கிட்டயெல்லாம் பேசமுடியாது. உனக்கெல்லாம் வாழ்க்கையை பத்தி என்ன தெரியும். 


எனக்கு தெரியாதுதாங்க. ஆனா அவன் காதல் தோத்துடக்கூடாதுன்னு தான் வந்தன். உங்களுக்கு எது நல்லது கெட்டதுங்கறது தெரியும். அவன் நல்லவன் யோசிச்சிங்கன்னா நல்லாயிருக்கும். 

வேற ஜாதி, எங்க கடவுளை கும்பிடாத ஒருத்தர் குடும்பத்தல போய் மாப்பிள்ளை எடுத்தா என் பையன்க்கு யார் பொண்ணு தருவாங்க, ஊர்ல கேவலமா பேசமாட்டாங்க. 

சார், நீங்க இருக்கற ஏரியாவுல எத்தனை பேர் எங்கயோ ஒரு நாட்டுல நல்ல வேலையில இருக்கான்னு விசாரிக்காமலே ஜாதி, மதம் பார்க்காம பொண்ணு தர்றாங்க. ஊர்ன்னு இருந்தா ஆளுக்கு ஒன்னு பேசத்தான் செய்வாங்க. அதுக்காக அவுங்க வாழ்க்கையோட பெத்தவங்க நீங்களே விளையாடலாமா சார். யோசிச்சி பாருங்க. சின்னப்பையன் தப்பா பேசியிருந்தா மன்னிச்சிடுங்க சார். 
என்றதும் அமைதியா இருந்தார். மேற்கொண்டு என்ன பேசுவது என தெரியாமல் நிற்க மற்றவர்களும் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தனர். தேவியின் அம்மாதான் எல்லாம் இவளாள வந்தது என முறைத்தார்கள். 

வீட்ல எல்லாம் பேசிட்டு ஒரு நல்ல முடிவா எடுங்க சார். நான் நாளைக்கா வர்றன் என்றதும் அதற்கும் அமைதி. 

போகலாமா, வேண்டாமா என தயங்கி தயங்கி நின்றபோது சாப்ட்டுட்டு போப்பா. 

நீங்க ஒரு நல்ல முடிவு சொல்லுங்க சார் விருந்தே சாப்பிடறன். 

அதுவேற இதுவேறப்பா. 

இப்ப அவனுக்கு என்னை விட்டா வேற யாரும்மில்ல. நான் உங்க வீட்ல சாப்ட்டுட்டு உங்களுக்கு நன்றியுள்ளவனா மாறிட்டா என்றதும் நீ மாறயெல்லாம் வேணாம். 

புதன்கிழமை அந்த பையனோட அப்பா – அம்மாவை வரச்சொல்லு பேசிப்பாக்கலாம். இதுக்கு மேல நான் எதுக்கு சார் உங்கப்பொண்ணு கேட்டுக்கிட்டு தானே இருக்குது அதுவே அவுங்க மாமானார் – மாமியார்க்கிட்ட போன் பண்ணி வரச்சொல்ல போகுது என்றதும் அனைவரும் சிரித்துவிட்டனர். 

தடதடவென நிச்சயதார்த்தம் வரை வந்துவிட்டது. ரங்கா மஹாலில் இரண்டு வீட்டு பெரியவர்கள், உறவினர்கள், நண்பர்கள் அமர்ந்திருக்க ஜானும் - தேவியும் அலங்காரமான நாற்காலியில் அமர்ந்திருந்தனர். 

திருமண தேதி நிச்சயமானபோது கல்யாணம் யார் முறைப்படி என கேட்டபோது தான் இரண்டு குடும்பத்தாரும் முழித்தனர். இந்து முறைப்படியா, கிருஸ்த்துவ முறைப்படியா என்ற விவாதத்தில் தங்கள் முறைப்படியே வைக்கவேண்டும் என இரண்டு குடும்ப உறவினர்களும் தத்தமது கருத்துக்களை தெரிவித்தனர். நாம எதுக்கு பேசிக்கிட்டு வாழ்க்கை நடத்தப்போறவங்க அவுங்க அவுங்களே சொல்லட்டும் என்றதும் அனைவரின் பார்வையும் அவர்கள் பக்கம் போனது. 

ஜானும், தேவியும் சில நிமிடம் பேசினார்கள். உட்கார்ந்தயிடத்தில் இருந்து எழுந்த ஜான், நான் கோயிலுக்கு போயிருக்கன், அவுங்க சர்ச்க்கும் வந்துயிருக்காங்க. ஆனா கல்யாணம் எந்த முறைப்படின்னு இதுவரை பேசனதில்ல. எங்க இரண்டு பேர் வீட்லயும் காதலை ஏத்துக்கிட்டு கல்யாணம் நடத்தி வைக்கறாங்க. அதனால எங்க இரண்டு குடும்பத்தோட மனசும் நோககூடாதுன்னு ஒரு முடிவு எடுத்துயிருக்கறோம். இதல அவுங்களுக்கு விருப்பம் இருக்குமான்னு தெரியல. கல்யாணத்தல தாலி உண்டு, மோதிரம் உண்டு. ஆனா கோயில்லயோ சர்ச்லயோ நடக்காது. இந்த மண்டபத்தலயே மேடை போட்டு நல்லா அலங்காரம் பண்ணி யாராவது பெரியவங்க தாலியும், மோதிரத்தையும் தர்ற நாங்க சுயமரியாதை கல்யாணம் செய்துக்கறோம் இதான் பிரச்சனையில்லாதது என்றதும் கூட்டத்தில் இருந்த பலர் கைதட்ட ஒரு நிமிடம் அமைதியாக இருந்த ஜான் - தேவியின் பெற்றோர்கள் மலைத்துப்போய் பார்த்தனர். 

டேய் இதெல்லாம் நீயா பேசறது என வாய்விட்டே கேட்டுவிட்டார் ஜானின் அப்பா. 

அருகில் இருந்த நான் தேறிட்டடா என கை தந்ததும் சந்தோஷமானான். 

கல்யாண மண்டபம் கலை கட்டியிருந்தது. விநோத், குமார், தருண்னும் சென்னையில் இருந்து வந்திருந்தனர். ஜீவா, ஏழுமலை, முத்து, அகிலன், ரமேஷ் ஆகியோரும் மனைவி, பிள்ளைகளோடு வந்திருந்தான்கள். 

ஜானிடம் மச்சான் சரக்கு?. 

தேவி இனிமே குடிக்ககூடாதுன்னு சொல்லிடுச்சிடா. 

செருப்பால அடிப்போம். குடிக்க போறது நாங்க என்றான் விநோத். 

குடிக்காதிங்கடா. உடம்பு கெட்டுடும். 

டேய் வெறுப்பேத்ததா. ஓழுங்கு மரியாதையா காசு குடு. இல்ல உன் ஏ.டி.எம் கார்ட தா நாங்க எடுத்துக்கறோம். 

கார்டுல காசுயில்லடா. 

ஏய் வாங்கடா காசு தானே வேணும் நான் ஏற்பாடு பண்றன் என ரமேஷ் அழைக்க எங்கடா என்றபடி அனைவரும் அவன் பின்னால் போக நேராக தேவியின் ரூம் முன் சென்று கதவு தட்டினான். 

சில நொடிகளில் கதவு திறந்தபோது அவள் தான். அவளை பார்த்ததும் அனைவரின் பார்வையும் என் பக்கம் திரும்பியது. அவளின் பார்வையும் தான். யாரும் எதுவும் பேசவில்லை. அவளை கண்ட அந்த நிமிடம் என்ன பேசுவது என அறியாமல் அனைவரும் திகைத்து நின்றனர். அப்போது தேவி யார் என கேட்டு எட்டி பார்க்க இதே வந்துடுச்சேடா புதுப்பொண்ணு என சகஜ நிலைக்கு அந்த இடத்தை மாற்றி. இங்கப்பாரு தேவி வாழ்க்கையில இவனுக்கு கல்யாணம் நடக்கறதே பெரிய விஷயம். பார்ட்டி தாடான்னா காசுயில்ல, தேவி திட்டும், குடிக்காதிங்கடா உடம்பு கெட்டுடும்ன்னு என்னன்வோ கதை சொல்றான். இப்ப எங்களுக்கு நீ தான் வழி சொல்லனும். 

என்ன இந்த விவகாரத்தல இழுக்காதிங்க. நீங்களாச்சி அவராச்சி. 

இங்கப்பார்ற உலக தொலைக்காட்சியில் முதல் முறையாகன்னு சொல்றமாதிரி முதல்முறையா அவர்ன்னு சொன்ன தேவிக்கு ஒரு ஓ போடுங்க என்றதும் பசங்கள் ஓவென கத்த மண்டபம்மே எங்களை வேடிக்கை பார்த்து சிரித்தது. 

டேய்யெ;பபா ஆளை விடுங்க. மச்சான் என்ன வேணும்மோ வாங்கித்தாடா. 

அதெப்படிடா படிக்கும் போதும் நானே வாங்கித்தரனும், வேலை போய் சம்பாதிக்கறப்பவும் நானே வாங்கித்தரனும், உன் கல்யாணத்துக்கும் நானே வாங்கித்தரனம்ன்னு கேட்கறயே வெட்கமாயில்ல. 

மச்சான் இதலயெல்லாம் கணக்கு பாக்கலாம்மா. 

மூடு. உன் ஏ.டி.எம் கார்ட இப்ப தந்தா காலையில கல்யாணம் இல்லன்னா மகனே மாப்பிள்ள ஹாண்டா கார் கேட்கறாருன்னு சொன்னன்னு வச்சிக்க அப்பறம் தேவதாஸ் தான் ஓ.கேவா. 

டேய் சாமி. இந்தப்புடி. மச்சான் இதலப்போய் ஒரு 10 ஆயிரம் எடுத்துக்கிட்டு வந்துடு. 

ஏய் அண்ணன் இருக்கு பாத்து என தேவி சொன்னதும் உங்கண்ணன் இப்பவே முணாவது ரவுண்ட்ல மிதக்கறான் போ போய் வேலையப்பாரு என்றப்படி அகிலன் நகர அனைவரும் கலைய முற்பட்டோம். 

ராஜா என தேவி அழைக்க 

திரும்பி என்ன என்பது போல் பார்த்ததும் 

பேசனும்மாம். அருகில் இருந்தவர்களை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர். 

மணமகளின் அறைக்குள் நாங்கள் மூன்று பேர் தான் இருந்தோம். 

எப்படி இருக்க ?. 

உங்க ஆசிர்வாதத்துல நல்லா இருக்கன். 

நீங்க எப்படி இருக்கிங்க, உன் பொண்ணு, வீட்டுக்காரரை எங்க காணோம்?. 

ம் இருக்கன். வீட்லயிருக்காங்க வந்துடுவாங்க. 

என்ன மன்னிச்சிடுப்பா. 

உங்க மேல உரசிக்கிட்டு போனது போய் தப்பு பண்ணது நான் தான். 

நீங்க அடிச்சது சரிதான். அதுக்கு நீங்கப்போய் எதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிட்டு. 

நான் அதுக்கு கேட்கல. 

வேற எதப்பத்தியும் நான் பேச விரும்பல. நான் கிளம்பறன் என சடாரென எழுந்ததும் ப்ளீஸ் தயவு செய்து உட்காரு என்றாள். 

உங்க காதலை எல்லாருமே ஏத்துக்கிட்டாங்க. ஆனா உங்களுக்கான பொருத்தம் பத்தி பலன் பாத்தப்ப பொருத்தம்மே வரல. மீறி கல்யாணம் செய்து வச்சா இரண்டு பேர்ல ஒருத்தர் இறந்துடுவிங்கன்னு சொன்னாங்க. பரிகாரம் ஏதாவது இருந்தா சொல்லுங்கன்னு கேட்டோம். எதுவும் இல்லன்னு சொல்லிட்டாங்க. இரண்டு, மூனுயிடத்தல பாத்தோம். எல்லாரும்மே அப்படியே சொன்னாங்க. உங்கிட்ட சொன்னா நீ அத கண்டுக்கமாட்டா. நீங்க இரண்டு பேருமே எங்களுக்கு முக்கியம் அதனால தான் உங்க காதலை எதிர்த்தன். அவ மனச மாத்தனோம். 

அதனால தான் உங்க சொந்தக்காரங்கக்கிட்ட அவன் ஒரு பொம்பள பொறுக்கி அதனால தான் பொண்ணு தரலன்னு சொன்னியாக்கும். 

அப்படி யார் சொன்னது. 

நீ யார்க்கிட்டயெல்லாம் சொன்னீயோ அதல ஒருத்தங்க. 

வேற வழி தெரியல. எல்லாரும்மே உனக்கு சப்போட் பண்ணாங்க. அதனால தான் அப்படி ஒரு பொய் சொல்ல வேண்டியதாப்போச்சி. 

நீ பொய் சொன்ன அதனால என் மனசு என்ன பாடுபட்டுயிருக்கும்ன்னு நினைச்சி பாக்கலயே. 

எல்லாத்தையும் மன்னிச்சிடு. 

மன்னிப்பு கேட்கறவங்க மனுஷன் மன்னிக்கறவன் பெரிய மனுஷன்னு ஊர்ல சொல்லுவாங்க. நீ மன்னிப்பு கேட்டு மனுஷின்னு நிருபிச்சிட்ட. ஆனா பெரிய மனுஷனா மாற விரும்பல. ஸாரி எனச்சொன்னபோது அவள் கை என் கன்னத்தை பதம் பார்த்தது. 

அமைதியாக நான் அந்த அறையை விட்டு வெளியேற கதவருகே வந்தபோது திரும்பி என்னையே அமைதியாக பார்த்துக்கொண்டுயிருந்த அந்த கண்களை பார்த்தேன். 

நீ அடிச்சப்ப உங்கிட்டயிருந்தது உண்மை. அதுக்கு முன்னாடி உன் உதடுகள் பொய் சொன்னது. நீ உன் கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு தர்றதுக்காக எழுதி கடைசியில வேண்டாம்ன்னு கிழிச்சி போட்ட அந்த லட்டர் எங்கிட்ட இருக்குதுங்கறது உனக்கு தெரியாது. அது உனக்கு தெரியாமலே இருக்கட்டும். ரகசியம் ரகசியமானதாகவே இருக்கட்டும் சந்தோஷமாக இரு என  மனதில் எண்ணியபடி வெளியே வந்து அந்த கதவை இருக்கமாக சாத்திவிட்டு சென்றேன். 

முற்றும். 

வியாழன், ஆகஸ்ட் 09, 2012

தாய்பாலா தயங்கும் தாய்மார்க்கு எச்சரிக்கை.




பெண்கள் 10 மாத கருவை தன் வயிற்றில் சுமப்பது எத்தனை வேதனையானதோ அதனை விட பன்மடங்கு அவர்களுக்கு இன்பத்தை தருவது கருவில் உள்ள குழந்தை பற்றிய அவர்களது நினைவுகள். வயிற்றில் உள்ள அக்குழந்தை இந்த பூமியில் சக மனிதர்களை பார்க்க துவங்கும் முன்பே அத்தாயின் மனம், தனக்கு பிறக்கப்போவது, ஆணா, பெண்ணா என தெரியாமல் அதற்கான பெயர் சூட்டுவது, வளர்ப்பது, என்ன படிக்கவைப்பது என அவர்களின் கனவுகள் கணக்கிலடங்கா. அந்த அன்பை காணும்போது உலகத்தில் தாய்க்கு ஈடான அன்பு வேறில்லை என்பது நிருபனமாகிறது. 

அதேநேரத்தில் குழந்தை பிறந்த பெண்கள் தங்கள் மேனியழகை பராமரிக்கும் போக்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அது தவறில்லை. ஆனால் அதற்கு அவர்கள் கையாலும் முறைகள் தங்களது பிள்ளைகளை தெரிந்தே நோயாளிகளாக்குகிறார்கள். 

குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் தர வேண்டும். கட்டாயம் ஆளு மாதம் வரை தாய்பால் புகட்ட வேண்டும் என்கிறது மருத்துவ உலகம். காரணம், தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது. இது குழந்தையை நோய் பரப்பும் சில வைரஸ், பாக்டிரியாக்களிடம்மிருந்து பாதுகாக்கும்  தடுப்பு மருந்து. தாய்ப்பால் குழந்தைக்கான நல்ல ஊட்டத்து உணவு. குழந்தை பெற்ற ஒரு பெண் உண்ணும் ஒவ்வொரு உணவு பொருளின் சக்தியும் அத்தாய்மாரின் உடலில் சேர்வதோடு தாய்ப்பாலாக மாறி அக்குழந்தைக்கும் போய் சேருகிறது. 

குழந்தை பிறந்த சில மணித்துளிகளில் பெண்களின் மார்பில் சுரக்கும் பால் கொலஸ்ட்ரம் ( சீம்பால் ) எனப்படும். இது வெள்ளை மற்றும் மஞ்சல் இரண்டும் கலந்த நிறத்தில் இருக்கும். இதில் சர்க்கரை மற்றும் லக்கோடஸ் என்ற தாதுப்பொருள் அதிகமாக இருக்கும். இதனை குழந்தைக்கு தரும்போது நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைக்கு அதிகமாக கிடைக்கிறது. இதனால் ஆஸ்த்துமா, கேன்சர் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உள்ளடக்கிய வைரஸ்கள் உடலில் அதிகமாக தாய்ப்பால் மூலம் குழந்தையின் உடல்க்கு கிடைக்கின்றன. 

பிறந்த குழந்தை சில மாதங்கள் வரை பால் குடித்த சிறிது நேரம் பொருத்து அழும். அதற்கு காரணம், மீண்டும் பால் தேவை என்பதே அதன் அர்த்தமாகும். இப்படி ஒரு நாளில் 10 முதல் 15 வரை தாய்ப்பால் புகட்டலாம். ஒரு முறைக்கும் அடுத்த முறைக்கும் இடைப்பட்ட நேரத்தில் அத்தாயின் மார்பகத்தில் மீண்டும் தாய்ப்பால் சுறந்திருக்கும். குழந்தை பால் குடிக்க குடிக்க பிட்;யூட்டரி, ஆக்சிடோசின், புரோலாக்டின் போன்ற தாதுக்கள் தாயின் உடலில் மீண்டும் மீண்டும் தாய்ப்பாலை சுரக்க வைக்கும்.  

தாய்ப்பால் அதிகம் சுறக்கவில்லையென்றால் உணவில் பூண்டு அல்லது பூண்டு சேர்க்கப்பட்ட பாலை இரவில் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகமாக சுறக்கும். பூண்டால் மற்றொரு நன்மை கர்ப்பப்பையில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்படும். எவ்வளவு குடித்தாலும் எளிதில் ஜீரனமாகும் தன்மை கொண்டது தாய்ப்பால். 

தாய்ப்பாலில் உள்ள ஆர்க்கோனிக் ஆசிட் மற்றும் டோகோஷாக்னிக் ஆசிட் என்ற தாது தாய்ப்பாலில் இயற்கையாகவே உள்ளது. இது குழந்தையின் உடலுக்கு செல்லும் போது கண் வளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதன் திறன்களை அதிகப்படுத்துவதோடு பிற்காலங்களில் கண் மற்றும் மூளை சம்மந்தமான நோய்களில் இருந்து அக்குழந்தையை காக்க உதவுகிறது என அமெரிக்காவின் பிரபல மருத்துவர்கள் ஆலன்பீட்டர், லூகாஸ் போன்றோர் தங்களது ஆய்வுகள் மூலம் தெரிவித்துள்ளனர். 
குழந்தை ஒருவேளை பால் குடிக்கவில்லை என்றால் தாயின் மார்பகத்தில் பால் கட்டிக்கொள்ளும். இது தாயின் உயிருக்கே ஆபத்தாக முடியும். இப்படிப்பட்ட காரணங்களால் தான் உலகம் முழுவதும் குழந்தைக்கு தாய்ப்பால் தர வேண்டி மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். 

தாய்மார்களுக்கு ஓர் எச்சரிக்கை, தாய்ப்பாலை நிறுத்துவதன் மூலம் வருங்காலத்தில் தாய்மார்களுக்கு ரத்த புற்றுநோய் வர அதிக வாய்ப்பு உண்டு, நீரழிவு நோய், உடலில் அதிக எடை கூடும் என இந்திய மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவைகளை உலக சுகாதார நிறுவனமும் உறுதி செய்துள்ளது. தாய்ப்பால் தொடர்ந்து தருவதன் விளைவாக கர்பப்பை பழைய நிலைக்கு திரும்ப உதவுகிறது. தொடர்ந்து தாய்ப்பால் தருவதன் விளைவாக செக்ஸ் உணர்வு சில மாதங்கள் மட்டுப்படுத்தப்பட்டு அடுத்த குழந்தை பிறப்பை தள்ளிப்போடுகின்றன. 

2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் தர வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் இன்றைய நவீனயுக தாய்மார்கள் குழந்தை பிறந்த ஒரு மாதம், இரண்டுமாதம் வரை தாய்ப்பால் தருகிறார்கள். அதன்பின் தருவதில்லை. காரணம், தங்களது அழகு குறைந்துவிடும் என்கின்றனர். மேனி பராமரிப்பில் காட்டும் அக்கறையை தங்களது பச்சிளம் குழந்தை நலனில் காட்ட மறுத்துவிடுகிறார்கள். தாய்ப்பாலை மறக்கடித்து புட்டி பால்க்கு பசும்பால், பவடர்பால்க்கு குழந்தையை பழக்கப்படுத்துகிறார்கள். 

குழந்தை குடிக்கவிடாமல் செய்யப்படும் பால் அப்பெண்ணின் மார்பில் கட்டிக்கொள்ளும்போது அதை கரைக்க மாத்திரையை பயன்படுத்துகிறார்கள். பணக்கார பெண்களிடம் தொடங்கிய இந்த பழக்கம் இன்றைய காலக்கட்டத்தில் கிராம பெண்கள் வரை தொற்றிக்கொண்டது. வேலைக்கு செல்லும் பெண்கள் வேலைக்கு சென்றால் தான் உணவு என்ற நிலையால் பாக்கெட் பால், பவடர் பால்க்கு மாறினார்கள். ஆனால் தற்போதைய நிலையில் வீட்டில் இருக்கும் தாய்மார்கள் கூட தாய்பால் தர தயங்குகிறார்கள். உடல் அழகை பராமரிக்கிறேன் என்ற பெயரில் தன் குழந்தையை நோய் எதிர்ப்பு சக்தியில்லாத உடல்களாக வளர்க்கிறார்கள். இதனை கவனத்தில் கொள்ளுங்கள் நோயில்லா குழந்தையை வளர்க்க முயலுங்கள். 

புதன், ஆகஸ்ட் 08, 2012

சுகமான சுமைகள் …………. 29.




நீ இப்படி பண்ணுவன்னு நான் நினைச்சிக்கூட பாக்கலப்பா என்றார் ப்ரியாவின் அம்மா. 

அமைதியாக இருந்தேன். கவிதாவும் அமைதியாக நின்றிருந்தாள்.

இவளை காதலிக்கத்தான் ப்ரியா கூட பழகனியாப்பா என கேட்டபோது சுரீர்ரென்றது. 

இனியும் அமைதியாக இருப்பது நல்லதல்ல என மனதில் எண்ணியபடி, ப்ரியாவோட பழகன ரொம்ப நாளைக்கு அப்பறம் தான் கவிதாவ பாத்தன். அதுக்கப்பறம் ரொம்ப நாளைக்கு பிறகு தான் கவிதா ப்ரியாவோட தங்கச்சின்னு தெரிஞ்சது. இருந்தும் என் மனச மாத்திக்க முடியல. நாங்க காதலிக்கறது தெரிஞ்சி ப்ரியா எங்கிட்ட ரொம்ப நாள் பேசாம இருந்தாங்க. கல்யாணத்தப்ப தான் பேச ஆரம்பிச்சாங்க. ப்ரியா எனக்கு நண்பர். கவிதா காதலி. ஏனக்கு எப்பவும்மே கவிதாவை விட ப்ரியா ரொம்ப முக்கியம். 

நான் சொன்னதை கேட்டுப்படியே ப்ரியா பக்கம் திரும்பி நீ கூட சொல்லலியேம்மா. 

ப்ரியாவும் சைலண்டாக இருக்க அவரது மாமியார் அப்போது உள்ளே வந்தார். 

என்ன ஆளாளுக்கு ஒரு பக்கம் நிக்கறிங்க யார் முகமும் சரியில்லயே என்றவர் கீழே கொட்டியிருந்த சாம்பாரையும், கவிதாவையும் பார்த்துவிட்டு என் பக்கம் திரும்பி என்னப்பா உங்க மாமியார்க்கு உங்க விவகாரம் தெரிஞ்சிப்போச்சா என சிரித்தபடியே கேட்டவர். விடுங்க சம்மந்தியம்மா. ஊர் உலகத்தல நடக்காததா நடந்துப்போச்சி. 

உங்களுக்கு எப்ப தெரியும். 

அவுங்க ஊருக்கு வந்த உடனே என் மருமக, ஏன் வந்தன்னு இந்த தம்பிக்கிட்ட கேட்டு சண்டை போட்டது. அதல தெரிஞ்சது. அப்பவே இரண்டு பேரையும் திட்டிட்டன். இப்ப நீங்க வேற பசங்கள திட்டாதிங்க. பையன் அம்சமா தான் இருக்கான், ஜாதியும் ஒன்னுதான். காலேஜ் முடிச்சிட்டான். கிராமத்தல இருந்தாலும் நிலம் நீர்ன்னு வசதியா தான் இருக்காங்களாம். பையன் வேலைக்கு போக ஆரம்பிச்சதும் கல்யாணம் பண்ணி வைக்கற வேலைய பாருங்க. 

அதுக்கில்ல சம்மந்தியம்மா. அவருக்கு தெரிஞ்சா பிரச்சனையாகும். 

ஓன்னும்மாகாது. பொம்பளைங்க நாம நினைச்சா எந்த பிரச்சனையையும் ஈஸியா தீர்த்துடலாம். அவர்க்கிட்ட பேசற விதத்தல பேசுங்க. என்னதம்பி உங்க வீட்ல ஒத்தக்குவாங்கயில்ல?.

ஓத்துக்குவாங்கன்னு தான் நினைக்கறன். 

என்னப்பா இழுக்கற. 

இல்லம்மா. ஏதாவது வேலைக்கு போனபிறகு தான் கேட்கனும். இப்ப போய் சொன்னா திட்டுவாரு. கவிதா காலேஜ் முடிக்க இன்னும் ஒரு வருஷம்மிருக்கு. அதுக்குள்ள நான் நல்ல வேலையா பாத்து செட்டிலானபிறகு வீட்ல சொல்றனே. 

அதான் தம்பி தெளிவா இருக்கில்ல நீங்க ஏன் மனச போட்டு குழப்பிக்கிட்டு விடுங்க சம்மந்தியம்மா என்றவர் ப்ரியா டிபன் எடுத்து வை எல்லோரும் சாப்படலாம் என்றார். 

ப்ரியா உள்ளே போக வாங்க சம்மந்தியம்மா என கையை பிடித்து இழுத்து சென்றார். எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டு முடித்ததும் நான் மட்டும் மாடிக்கு வந்தேன். வீட்லப்போய் இத எப்படி சொல்றது. அந்தாளு லப லபன்னு கத்துவாரு. சரி அம்மாக்கிட்ட சொல்லி கரெக்ட் பண்ணலாம். லவ் மேட்டரை சொல்றதுக்கு முன்னாடி ஒரு நல்ல வேலையாப்பாக்கனும் என யோசித்தபடி அமர்ந்திருந்தபோது கவிதா வாசற்படியில் நின்றிருந்தாள். 

என்ன வெளியிலயே நிக்கற. 

தனியா மாட்டனா ஏதாவது பண்ற. அப்பறம் மாட்டிக்க வேண்டியதா இருக்கு. 

இப்ப என்ன பண்ணிட்டாங்க. 

ஓன்னும் பண்ணாம தான் மாட்டிக்கிட்டோமா. 

கோயிலுக்கு போனவங்க திரும்பி வருவாங்கன்னு எனக்கென்ன ஜோசியமா தெரியும். 

எவ்ளோ அசிங்கமா இருந்துச்சி தெரியுமா. 

நீ மட்டுமா அசிங்கப்பட்ட. நானும் தான் அசிங்கப்பட்டன். அதுவும் இரண்டாவது முறையா அசிங்கப்பட்டன் என சொல்லும் போது மனதில் கோபம் வந்திருந்தது. 

மூஞ்சப்பாத்தா அசிங்கப்பட்டமாதிரி தெரியலயே. 

இப்ப அதுக்கு என்ன உட்கார்ந்து அழ சொல்றியா ?. 

பண்றத பண்ணிட்டு இப்ப எதுக்கு கோபப்படற. 

நான் கோபப்படல. எதுக்கு வந்தன்னு சொல்லு. 

நீ பேசறதலயே தான் தெரியுதே. 

ஏய் இப்ப என்னங்கற. கோபத்தல தான் இருக்கன். நான் காதலிக்கறவளுக்கு ஒரு முத்தம் தந்தன் அவ்ளோ தானே. உன்னயென்ன ரேப்பா பண்ணிட்டன் ?.

இப்ப எதுக்கு அசிங்கமா பேசற என கேட்டவள் நான் அமைதியாக இருந்ததை பார்த்துவிட்டு கண் கலங்கியபடி ரூம்மை விட்டு வெளியே போனால். சில நிமிடம் பொருத்தபின்பே ச்சே என்ன இப்படி பேசிட்டமே என சங்கடமானது. கீழ போய் அவக்கிட்ட ஸாரியும் கேட்க முடியாது. என்ன பண்ணலாம் என யோசித்தபடியே அமர்ந்திருந்தேன். 

அழுக்கு துணி ஏதாவது இருக்கா என்ற குரல் கேட்டு நிமிர்ந்தபோது ரூம்க்குள் ப்ரியா வந்து நின்றிருந்தது. இரு எடுத்து தர்றன் என சொல்லிவிட்டு பாத்ரூம்மில் ஓரமாக போட்டுவைத்திருந்த 2 செட் துணிகளை கொண்டு வந்து தர வாங்கிக்கொண்டு சென்றுவிட. இதுங்கிட்டயாவது கவிதா என்ன பண்றான்னு கேட்டுயிருக்கலாம். விட்டாச்சி. என்ன பண்ணலாம் என யோசித்தபடியே கீழ போய்தான் பாக்கலாம் தனியா இருந்தா ஸாரி கேட்டுடுவோம் என எண்ணி எழுந்தபோது ப்ரியாவின் மாமியார், தம்பி, தம்பி என அழைக்க இதே வர்றன்ம்மா என அவசர அவசரமாக ரூமில் இருந்து கீழே இறங்கினேன். படிக்கட்டு முன் நின்றிருந்தவர் டூவீலர் ஓட்டுவியாப்பா. 

ம். ஓட்டுவன்ம்மா.



பக்கத்தல ஒரு கோயில் இருக்கு. என்னை கொஞ்சம் அங்க கொண்டும் போய் விடேன். 

சரிம்மா என்றபடி இறங்கிவந்தேன். 

உள்ளேயிருந்து வெளியே வந்த ப்ரியாவின் அம்மா சம்மந்தியம்மா இருங்க நானும் வர்றன். 

சரிப்பா அப்ப நாங்க ஆட்டோவுல போறோம். 

சரிம்மா. 

அதுயென்ன எல்லாரையும் அம்மா அம்மாங்கற. 

புன்னகைத்தபடியே பழகிடுச்சிம்மா என்றதும் காலேஜ் பொண்ணுங்களயும் அம்மான்னு கூப்பிட்டுடாத என்றார் சிரித்தபடியே. நீ வந்த நாள்ளயிருந்து நான் சிரிச்சி பாக்கவேயில்லப்ப. இன்னைக்கு தான் நீ சிரிக்கறதையே பாக்கறன் என்றவர் போய்ட்டு வர்றோம்ப்பா என்றபடி படியில் இறங்கினர்கள். நான் கவிதாவை தேடி ஹாலுக்கு சென்றபோது அங்கேயில்லை. கிச்சனிலும்மில்லை. எங்க போயிருப்பா என எண்ணியபடி ஷோபாவில் அமர்ந்து யோசிக்கும்போதே பாத்ரூம்மில் இருந்து வெளியே வந்தாள். 

என்னைப்பார்த்து நின்றவளிடம், தப்பாதான் பேசிட்டன் ஸாரி. 

………………..

ஸாரி ஸாரின்னு ஆயிரம் முறை கேட்கறன் போதும்மா என சொல்லியும் தலையை குனிந்தபடி அமைதியாக நின்றிருந்தாள், எழுந்து அவளின் அருகே சென்று ஏய் ஏதோ கோபத்தல பேசிட்டன். அதப்போய் பெருசா எடுத்துக்கிட்டு இப்ப நீ மன்னிக்கறதுக்கு நான் என்ன பண்ணட்டும் சொல்லு. 

அப்போதும் அமைதியாக இருந்தாள். 

வேணூம்ன்னா ஒரு முத்தம் தரட்டுமா என மெல்லிய குரலில் கேட்டதும் 

தலையை தூக்கி முறைத்தவள் உள்ளயிருக்கறவ வெளியில வந்து செருப்பால அடிப்பா அதயும் வாங்கிக்க. 

ஓ…… உள்ளத்தான் இருக்கா என கேட்டதும் அமைதியானாள். 

அன்றிரவு பிரியாவின் அப்பாவந்தார். மறுநாள் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு நான், கவிதா, அவளின் அப்பா-அம்மா என நான்கு பேரும் கிளம்பி ஊர் வந்து சேர்ந்தோம். நான் நேராக வீட்டுக்கு வந்ததும் அம்மாதான், எப்படிடா இருக்கு அந்த பொண்ணு என கேட்டார். நல்லாயிருக்காங்கம்மா. 

ஜான் போன் பண்ணியிருந்தான். நீ ஊருக்கு வந்ததும் போன் பண்ண சொன்னான் என்றார். 

அவன் வீட்டுக்கு போன் செய்ததும். அவன் தான் போனை எடுத்தான். என்ன மாச்சான் பெங்களுரூ போயிருந்தியாம். எங்கிட்ட கூட எதுவும் சொல்லல. என்ன உன் ஆளோட ஜாலியா?. 

அதையேன் கேட்கற. அங்கப்போயும் சண்டை தான் வந்தது. 

அதுங்கிட்டயும் சண்டை தானடா என கேட்டவன். மச்சான் சென்னையில ஒரு கம்பெனியில அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்ல நமக்கு வேலை ஓ.கே ஆகியிருக்கு. பேசிக் சேலரி 8 தவுசன். தனியா ரூம் தந்துடறாங்களாம். சாப்பாடு மட்டும் நாம வெளியில சாப்ட்டுக்கனும்மாம். 

சென்னைக்கா?. 

என்ன சென்னைக்கான்னு கேட்கற. சென்னை தான். உங்காளை எவனும் கொத்திக்கிட்டு போகமாட்டான். மூடிக்கிட்டு வா. 2 வருஷத்துல வேலூர்ல ஒரு ஆபிஸ் வைக்க ஐடியா இருக்காம். அப்ப நம்மள அங்க மாத்திடறம்ன்னு சொன்னாங்கன்னு அப்பா சொன்னாரு. உடனே வேலையில ஜாயின் பண்ணிக்க சொல்லியிருக்காங்க.  

சர்டிப்கெட் ஏதாவது தரனும்மா?. 

இல்லடா. ரெஸ்யும் கேட்டாங்க. உனக்கும் சேர்த்து நானே டைப் பண்ணி மெயில் பண்ணிட்டன். அங்கயிருக்கறவர் அப்பா பிரண்ட்டுங்கறதால அவுங்க அதப்பாத்தே ஓ.கே பண்ணிட்டாங்க. வேலையில வந்து ஜாயிண் பண்ணிக்கச்சொல்லிட்டாங்க. 

சரிடா. வர்ற வெள்ளிக்கிழமை போய் ஜாயின் பண்ணிக்கலாமா. 

நீ ஓ.கேன்னா. எனக்கும் ஓ.கே. 

சரி. நான் நாளைக்கு வீட்டுக்கு வர்றன். நீ அப்பாக்கிட்ட ஓ.கேன்னு சொல்லிடு எனச்சொல்லிவிட்டு போனை வைத்தேன். 

மறுநாள் ஜான் வீட்டுக்கு போனபோது வா மச்சான் வெளியில போகலாம் என்றபடி ஃபைக் எடுத்துக்கொண்டு வெளியே அழைத்து வந்தான். அவனிடம் பெங்களுரூவில் நடந்த அத்தனையும் ஒப்பித்தேன். அந்த ரொமான்ஸ் தவிர. 

அப்பறம் என்ன அவுங்கம்மா ஓ.கே சொல்லிட்டாங்கயில்ல. விடு பாத்துக்கலாம் என்றான். 

வீட்டுக்கு வந்து அப்பா அம்மாவிடம் சென்னையில வேலை கிடைச்சியிருக்கு என்றதும் அம்மா தான் என்னடா இவ்ளோ தூரத்தலப்போய் தனியா தங்கியிருக்க போறியாடா என்றார் அக்கறையோடு. 

ஏற்கனவே ஹாஸ்டல்ல இருந்தது தானே அதனால ஒன்னும் பிரச்சனையில்லம்மா. 

ஏய் வெளியில போய் நாலு விஷயம் தெரிஞ்சிக்கிட்டும் விடுடீ என்றார் அப்பா. 

ப்ரியாவுக்கு போன் செய்து சொன்னபோது, ஏய் சந்தோஷம்பா. அங்கபோய் யார்க்கிட்டயும் கோபப்படாத, ஒழுங்கா வேலைய மட்டும் பாரு .

கவிதாவுக்கு போன் செய்து சொன்னபோது அப்பயென்ன அடிக்கடி சந்திக்க முடியாதா?.

வீக் என்ட் வந்துடுவன். ஞாயிற்றுக்கிழமை நாம சந்திக்கலாம். போன் தான் இருக்கே அடிக்கடி பண்றன், இடையில வேணும்ன்னா வந்துட்டு போறான் என்றதும் சமாதானமானால். வீட்ல சொல்லிடு எனச்சொல்லிவிட்டு போனை வைத்தேன். 

சென்னை சென்று நானும், ஜானும் வேலையில் சேர்ந்தோம். வேலை ஒன்றும் பெரியதாக இல்லை என்றாலும், மார்ச் மாதம் வந்தால் ஒரே தலைவலி என்றார்கள் அங்கிருந்த மற்றவர்கள். தேவி ஒருமுறை போன் செய்து அவனை ஒழுங்கா பாத்துக்கு என்றாள். எங்கு இருவருமே வாரத்தில் 2 நாள் சரக்கும், சைட்டிஸ்சுமாக நாட்கள் ஓடியது. வாரம் தோறும் ஊருக்கு வந்து போய்க்கொண்டுயிருந்தோம். அப்பா அம்மாக்கூட ஒருமுறை சென்னை வந்து தங்கி இரண்டு நாள் சென்னையை சுற்றிபார்த்துவிட்டு போனார்கள். ப்ரியாவுக்கும், கவிதாவுக்கும் அடிக்கடி போன் செய்து போசிக்கொண்டு இருந்தோம். நாட்கள் போனதே தெரியவில்லை. ஒருநாள் இது ஒன்பதாவது மாசம் சீமந்தம் என ப்ரியா சொல்ல ஆச்சர்யமானது. ப்ரியாவின் கணவர் வந்துடுங்க பாஸ் என அழைப்பு விடுத்தார். 

லீவு இருக்கான்னு தெரியல பாஸ் முடிஞ்சா வர்றன். சீமந்தத்துக்கு போகமுடியவில்லை. ப்ரியாவை ஊருக்கு அழைத்து வந்திருப்பதாக கவிதா தான் போன் செய்து சொன்னால். ஊருக்கு வரும்போது வீட்டுக்கு வர்றன் என்றேன். அந்த வாரம் ஊருக்கு போனபோது, வேலைக்கு போக ஆரம்பிச்சதும் சார்க்கு எங்கக்கிட்ட பேச நேரமேயில்லயா?.

அப்படியெல்லாம் இல்ல என பதில் தந்து பேசிவிட்டு வந்திருந்தேன். குழந்தை பிறந்த இரண்டாவது மாதம் கவிதா போன் செய்து உன்ன அக்கா வீட்டுக்கு வரச்சொல்லுச்சி. 

எதுக்கு. 

தெரியல. எதுவும் சொல்லல. 

சரி வர்றன். 

அந்த வாரம் வீட்டுக்கு போனபோது, எப்போதும் என்னை கண்டால் ப்ரியா முகத்தில் வரும் அந்த மலர்ச்சியில்லை. கவிதாவின் முகம் கோபத்தில் இருந்தது. ஏதோ நடந்திருக்கு என மனதில் எண்ணியபடி ப்ரியாவிடம் எப்படி மேடம் இருக்கிங்க. என்ன விஷயம் வர்றச்சொன்னியாம். 

இனிமே, கவிதாவோட தனியாவோ, வெளியில சந்திக்கறத விட்டுடு. 

புரியாமல் ஏன். 

பாக்காதன்ன பாக்காதா. 

அதான் எதனாலன்னு கேட்கறன். 

காரணம் சொல்ல வேண்டியதில்ல. 

கவிதாவுக்கு மாப்பிள்ளை பாக்கறாங்க என ப்ரியா சொன்னபோது உச்சகட்ட அதிர்ச்சியானது. 

கவிதா கோபமாகி யாரை கேட்டு மாப்பிள்ளை பாக்கறிங்க. நானும் அவரும். காதலிக்கறது எல்லாருக்கும் தெரியும்மில்ல. அப்பறம் என்ன மாப்பிள்ளை பாக்கறது. 

நீ வாயை மூடூடீ. 

இதுக்கு தான் அவரை வரச்சொன்னியா. இங்கப்பார் எந்த காலத்திலயும் நீங்க நினைக்கறது எதுவும் நடக்காது. நான் அவரைத்தான் கல்யாணம் செய்துக்குவன். 

செருப்பு பிஞ்சிடும் வாயை மூடூடீ. 

நீ மிரட்டறதுக்கு நான் ஒன்னும் உன் வீட்டுக்காரர்யில்ல. என் வாழ்க்கைய எப்படி பாத்துக்கனம்ன்னு எனக்கு தெரியும். இதல நீ தலையிடாத. 

நான் அதிர்ச்சியில் இருந்து மீண்டு நீ ஒரு நிமிஷம் சும்மாயிரு கவி. நாங்க காதலிக்கறது எல்லாருக்கும் தெரியும். உங்க அம்மாவும் ஏத்துக்கிட்டாங்க. அப்பறம் என்ன திடீர்ன்னு வேற மாப்பிள்ளை பாக்கறிங்க. உங்க அம்மாவும் - அப்பாவும் எங்க நான் பேசறன். 

இங்கப்பார், நீ அது சொல்றத கேட்ட நடக்கறதே வேற. யார் எதிர்த்தாலும் நம்ம கல்யாணம் நடந்தே ஆகனும். பிரிக்க நினைச்சாங்க அவ்ளோ தான் என அழுதபடி ரூம்க்குள் போனால் கவிதா. 

ப்ரியா என்னிடம், இவ கல்யாணத்த பொருத்தவரை நான் எடுக்கறது தான் முடிவு. அதனால இனிமே நீ அவளை பாக்க வர்றாத. 

காரணம் தெரியனும். 

உங்கிட்ட காரணம் சொல்ல வேண்டியதில்ல. 

காரணம் தெரியாம நான் அவளை கைவிடப்போறதில்ல. 

நான் சொல்றத நீ கேளு. 

இங்கப்பாரு. இந்த உலகத்தல நீ எனக்கு ரொம்ப முக்கியம். நீ சொல்றத நான் கேட்கறன். உனக்கு என்ன வேணும் கேளு. செய்யறன். அதுக்காக கவிதாவ மறக்கச்சொல்லாத. அது மட்டும் முடியாது.

அமைதியாக இருந்தவளிடம் நான் புறப்படறன்.  

அவளை விட்டு விலகறன்னா மட்டும் என்னை வந்து பாரு, என்கிட்ட பேசு இல்லன்னா பேசாத. 

அதிர்ச்சியாகி ஒரு நிமிடம் அவளை பார்த்தபடியே நின்றிருந்தேன். கடைசியாக இந்த வார்த்தைய நினைச்சி நீ ப்யூச்சர்ல பீல் பண்ணுவ. 

தொடரும்.................