செவ்வாய், ஏப்ரல் 29, 2014

தமிழக தேர்தல்களும் - வாக்கு பதிவு புள்ளி விபரங்களும்.





ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்கு பதிவு உயர்ந்து வருகிறது என்கிறது மீடியா, பத்திரிக்கைகள், தேர்தல் ஆணையம் போன்றவை. வாக்குப்பதிவு உயர்கிறதா எனக்கேட்டால் நிச்சயமாக கிடையாது. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு பதிவு குறைந்து வருகிறது என்பதே உண்மை. மேம்போக்காக சதவித அடிப்படையில் வேண்டுமானால் உயர்ந்தது எனக்குறிப்பிடலாம். மற்றப்படி நுணுக்கமாக ஆராய்ந்தால் வாக்காளர் எண்ணிக்கை உயர்கிறது. அதே நேரத்தில் வாக்களிக்காதவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதை காணலாம்.

1967 முதல் 2011 வரையிலான சட்டமன்ற தேர்தல்கள் பட்டில் தந்துள்ளேன். அதில் வாக்காளர்கள் எண்ணிக்கை, வாக்களித்தோர் எண்ணிக்கையை பாருங்கள்.

தமிழகம் சந்தித்த சட்டமன்ற தேர்தல்கள்....

ஆண்டு
தேர்தல்
வாக்காளர்கள்
வாக்களித்தோர்
சதவிதம்.
1967
சட்டமன்ற தேர்தல்
2,07,99,362
1,59,25,796
76.57
1971
சட்டமன்ற தேர்தல்
2,30,64,983
1,65,65,649
72.10
1977
சட்டமன்ற தேர்தல்
2,81,61,418
1,73,42,799
61.58
1980
சட்டமன்ற தேர்தல்
2,91,97,882
1,91,01,113
65.42
1984
சட்டமன்ற தேர்தல்
3,09,47,873
2,27,35,869
73.47
1989
சட்டமன்ற தேர்தல்
3,52,94,451
2,45,95,016
69.69
1991
சட்டமன்ற தேர்தல்
3,99,08,787
2,54,78,644
63.84
1996
சட்டமன்ற தேர்தல்
4,24,78,965
2,84,39,249
66.95
2001
சட்டமன்ற தேர்தல்
4,74,79,000
2,80,48,077
59.07
2006
சட்டமன்ற தேர்தல்
4,66,03,352
3,28,85,649
70.82
2011
சட்டமன்ற தேர்தல்
4,71,16,687
3,67,53,114
70.82

1998ல் இருந்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தனியாகவும் நாடாளுமன்ற தேர்தல் தனியாகவும் நடைபெறுகின்றன.

நாடாளுமன்ற தேர்தல் விபரம்…….

1998
நாடாளுமன்ற தேர்தல்
4,55,77,788
2,64,10,702
57.95
1999
நாடாளுமன்ற தேர்தல்
4,77,33,644
2,76,76,543
57.98
2004
நாடாளுமன்ற தேர்தல்
4,72,52,271
2,87,32,954
60.81
2009
நாடாளுமன்ற தேர்தல்
4,16,20,460
3,03,83,034
73.03
2014
நாடாளுமன்ற தேர்தல்
5,50,42,876
4,05,54,957
73.68

1967ல் தமிழகத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை 2,07,99,362 கோடி. அந்த தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 1,59,25,796 கோடி. அதாவது சுமார் 48 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. அதாவது நான்கு பேரில் ஒருவர் வாக்களிக்கவில்லை.

அதற்கடுத்து வந்த 1971 சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் எண்ணிக்கை 2,30,64,983 கோடி. 1967விட இந்த தேர்தலில் சுமார் 22.5 லட்சம் வாக்காளர்கள் புதிய வாக்காளர்களாக சேர்ந்துள்ளார்கள். ஆனால் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 1,65,65,649 கோடி. 1967 தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது 6.5 லட்சம் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்துள்ளார்கள். புதிய வாக்காளர்கள் எண்ணிக்கையோ 22.5 லட்சம். புதியதாக இணைக்கப்பட்ட வாக்காளர்களில் 16 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை.

இப்படி ஒவ்வொரு தேர்தல் பற்றியும் நீங்களே மேலே கண்டுள்ள அட்டவணைப்படி கணக்கிட்டு பாருங்கள்.

35 வருடங்களுக்கு முன்பு தேர்தல் விழிப்புணர்வுயில்லை, படிப்பறிவற்றவர்கள் அதிகமாக இருந்தார்கள் வாக்களிப்பது நமது கடமை என்பது தெரியாது என்கிறிர்களா சரி ஒப்புக்கொள்கிறேன். தற்போது இன்டர்நெட், இமெயில், சமூக வலைத்தளம், டிவி, செய்தித்தாள், மொபைல், எப்.எம், துண்டு பிரச்சுரங்கள் வழியாக வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்யப்படுகிறது. படித்தவர்கள் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவின் அளவு அதிகரித்துள்ளதா?.

2001 சட்டமன்ற தேர்தலின் போது தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 4,74,79,000 கோடி. அந்த தேர்தலில் வாக்களித்தோரின் எண்ணிக்கை 2,76,76,543 கோடி. அதாவது சுமார் 2 கோடிப்பேர் வாக்களிக்கவில்லை. 2006 சட்டமன்ற தேர்தலின் போது 1.30 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. ( இந்த தேர்தலில் 2001 சட்டமன்ற தேர்தல் வாக்காளர் எண்ணிக்கையை விட குறைவு.)


சட்டமன்ற தேர்தல்கள் மட்டுமல்ல நாடாளுமன்ற தேர்தல்களிலும் இதே நிலை தான்.

2009 நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 4,16,20,460 கோடி. வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 3,03,83,034 கோடி. வாக்களிக்காதவர்கள் சுமார் 1 கோடியே 13 லட்சம்.

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது வாக்காளர்கள் எண்ணிக்கை 4,71,16,687 கோடி. வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 3,67,53,114 கோடி. வாக்களிக்காதவர்கள் 1 கோடியே 3 லட்சம்.

2014 நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை 5,37,52,682 கோடி. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலுக்கு பின் 3 ஆண்டிற்குள் சுமார் 66 லட்சம் பேர் புதிய வாக்காளராக இணைந்துள்ளார்கள். ஆனால் 2014 நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்காதவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 32 லட்சம் பேர்.

2009 நாடாளுமன்ற தேர்தலில் இருந்த வாக்காளர்க்கும் 2014ல் உள்ள வாக்காளர்க்கும் உள்ள வித்தியாசம் 1 கோடியே 20 லட்சம். அதாவது வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2009ல் வாக்களிக்காதவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 13 லட்சம். 2014ல் வாக்களிக்காதவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 32 லட்சம். வித்தியாசம் 19 லட்சம். அதாவது புதியதாக இணைந்த வாக்காளர்களில் 6 பேர்க்கு ஓருவர் வாக்களிக்க வரவில்லை.

மேற்கண்ட புள்ளிவிபர கணக்குப்படி சட்டமன்ற தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ எதுவாகயிருந்தாலும் வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதேபோல் வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இந்த குறைபாட்டுக்கு காரணம், அரசியல்வாதிகளை பிடிக்கவில்லை அதனால் ஓட்டுப்போட விரும்பவில்லை எனச்சொல்வது ஒருபுறம்மிருந்தாலும் நடுத்தர வர்க்கத்துக்கு மேலிருப்பவர்கள் வாக்களிக்க வருவதில்லை. அதற்கு காரணம் சோம்பேறித்தனம், நான் ஒருத்தன்/ஒருத்தி ஓட்டு போடலன்னா தேர்தல் நின்னுடும்மா என குதர்க்கமாக கேட்பது, தேர்தல் நாளன்று ஊர் சுற்ற சுற்றுலா கிளம்பிடுவது, பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வளைத்தளங்களில் உட்கார்ந்துக்கொண்டு வாய்கிழிய பேசும் அரசியல் பேசும் 'அறிவு கொழுந்துகள்',  ஐ.டி கம்பெனிகளில் வேலை பார்க்கும் 'அதிமேதாவிகள்' வாக்களிக்க வருவதில்லை. இதனால் தான் வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதை மாற்ற வேண்டும். வாக்களித்தே தீர வேண்டும் என சட்டம் கொண்டு வர வேண்டும் அப்போது தான் வாக்குபதிவு உயரும். 


நோட்டா……….

தேர்தல் தோறும் நோட்டாவின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. வேட்பாளர்கள் யாரையும் பிடிக்கவில்லை என்பதே நோட்டா. காங்கிரஸ் ஊழல் கட்சி, பி.ஜே.பி மதவாதகட்சி, கம்யூனிஸ்ட் காலிடாப்பா, திமுக வாரிசு கட்சி, அதிமுக அல்ப கட்சி, மதிமுக மலராத கட்சி, பாமக சாதிக்கட்சி, விசி வில்லங்கமான கட்சி அதனால் அவர்களின் வேட்பாளர்களை பிடிக்கவில்லை எனச்சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். சுயேட்சைகள் தேர்தலில் நிற்கிறார்களே அவர்களுக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள். ஏன் செலுத்துவதில்லை. எதனால் உங்களுக்கு சுயேட்சைகளை பிடிக்காமல் போனது ? சுயேட்சை வேட்பாளர்கள் என்ன தவறு செய்தார்கள் அவர்களை பிடிக்காமல் போவதன் காரணம்மென்ன ?. நோட்டா பட்டனை அழுத்துபவர்களால் பதில் சொல்ல முடியாது.

முடியாது என்பதை நாம் அழுத்தி சொல்லகாரணம், முன்பு 49ஓ, தற்போது நோட்டா இதற்கு வாக்களிப்பது வீண் பந்தாவுக்காக தவிர வேறு ஒன்றுக்கும்மில்லை.

இனி வரும் தேர்தல்களில் பந்தாவை விட்டுவிட்டு வாக்களிக்க வாருங்கள். உங்கள் வாக்கை செல்லாத வாக்காக போடுவதற்கு பதில் தரமான வாக்காக பதிவிடுங்கள்…………

திங்கள், ஏப்ரல் 28, 2014

சாதீயும்.... தேர்தலும்.......



எங்கு நோக்கினும் சாதி. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் முன் சாதியை புகுத்திவிடுவார்களோ என பயமாக உள்ளது. அந்தளவுக்கு நடந்து முடிந்த நாடாளமன்ற தேர்தலில் சாதி பார்த்தார்கள் வாக்காளர்கள். சாதி எத்தனை வீரியமானது என்பதை புரியவைத்தது. வடாற்காடு தென்னாற்காடு மாவட்டங்களில் சாதி தீர்மானிக்கும் சக்தியாக உயர்ந்துள்ளது. சாதியை இரண்டாம் பட்சமாக வைத்துவிட்டு தேர்தலை எதிர் நோக்கிய பகுதிகள் இவை. இன்று சாதி வேட்பாளருக்கு காவடி தூக்குகிறார்கள். என் சாதிக்காரன் என கொண்டாடுகிறார்கள். சாதி பார்க்காத பகுதிகளிலேயே இந்த நிலை என்றால் சாதியை முன்னிறுத்தும் பகுதிகள் இதைவிட மோசமாக உள்ளது.

பெரியவர்களை விட இளைஞர்களை குறிவைத்து தங்களது அரசியலை வளர்க்கின்றன சாதிக்கட்சிகள். பாட்டாளி மக்கள் கட்சி அடிப்படையிலேயே சாதிக்கட்சி. விடுதலை சிறுத்தைகளும் அப்படியே. இந்த இரண்டு கட்சிகளும் வடாற்காடு, தென்னாற்காடு மாவட்டங்களில் பலமாக உள்ள தங்களது சாதி மக்களிடம் அரசியல் பலத்தை உயர்த்திக்கொள்ள எடுக்கப்பட்ட சாதிய ஆதரவுகள், வன்முறைகள், ஊக்குவிப்பு தேர்தலில் எதிரொலிக்கின்றன.

தருமபுரி கலவரம் வன்னியர்களை சாதி வெறியர்களாக சித்தரித்தது. அரசியல் கட்சிகள் உட்பட அனைவரும் பாமக மீது பாய்ந்தனர். மரக்காணம் கலவரத்தில் வன்னியர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். அப்போதும் பாமக (மறைமுகமாக வன்னியர்கள்) வை கண்டித்தனர். கலவரத்தை உருவாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியை யாரும் கண்டிக்கவில்லை. இது வன்னியர்களை ஒன்றிணைத்துவிட்டது என்றே எண்ணத்தோன்றுகிறது. அதை தேர்தல் களத்தில் உணர முடிந்தது. இந்த தேர்தல் வன்னியர்களை ஒற்றுமையாக பாமக பக்கம் திருப்பிவிட்டது என்பதை வன்னிய கிராமங்களில் காண முடிந்தது. 30 வயதுக்குள் உள்ள இளைய சமுதாயத்தினர் தங்களது சாதியை தூக்கி பிடிப்பதில் முன்னணியில் நிற்பதை காண முடிந்தது.

சில இளைஞர்களிடம் இதுப்பற்றி கேட்டபோது, தலித் பாதிக்கப்பட்டா எல்லாரும் குரல் கொடுக்கறாங்க. வன்னியன் பாதிக்கப்பட்டால் யாரும் குரல் கொடுக்கறதில்ல. அதுக்கு காரணம் நாங்க ஒற்றுமையா இல்லாதது தான். அதனால தான் ராமதாஸ் கையை வலுப்படுத்தறோம். இருக்கறதுல அவர் பவர்க்கு வரமுடியும். அவர் மட்டும் தான் வன்னியனை அடிச்சா அடிக்கறவனை வெட்டுன்னு சொல்றாரு. இது வன்முறையா தெரியுது. அதையே தலித் சொன்னா போராட்டம்ன்னு சொல்றாங்க இது என்னங்க நியாயம் என கேட்டார்கள். இந்த கேள்வியையே நாம் சந்தித்த 90 சதவித இளைஞர்கள் கேட்கிறார்கள். இது படித்தவனிடம் அதிகமாக உள்ளது என்பது கூடுதல் அதிர்ச்சி.

இதையா பெரியார் விரும்பினார்?

வர்ணாசிரம் மக்களை சாதிகளால் பிரித்தது. அந்த சாதிகளை மோதவும் வைத்து பிரித்தாளின. அரசியல், அதிகார அமைப்புகள் முதல் எங்கும் சாதி தான். திராவிட மாநிலங்கள் என அழைக்கப்படும் கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் சாதிகளின் பேயாட்டம் தான். தமிழகம் அதில் விதிவிலக்காக இருந்தது. இங்கு யார் ஆள வேண்டும் என்பதை சாதிகள் என்றும் தீர்மானித்ததில்லை. குடும்ப விவகாரத்தில் சாதியை பார்க்கும் மக்கள் அரசியலில் சாதி பார்க்காமல் தான் இருந்துவந்தனர். தமிழகத்தில் தன் பெயருக்கு பின்னால் சாதி பெயரை பட்டப்பெயராக போட்டுக்கொள்வது 80 சதவிதம் இல்லாமல் இருந்தது. இந்திய அரசியல்வாதிகளைப்போல் தமிழக அரசியல்வாதிகள் தன் பெயருக்கு பின்னால் சாதி போட்டுக்கொள்வதில்லை. நிச்சயம் அதற்கு பெரியாரும், திராவிட இயக்கத்தவரும் தான் காரணம்.


தென்மாவட்டங்களில் இமானுவேல்சேகரன், முத்துராமலிங்கதேவர் சாதியை வளர்த்தார்கள் என்றால் வடமாவட்டங்களில் ராமசாமிபடையாச்சி உட்பட பலர் சாதியை வளர்த்தார்கள். தென்மாநிலங்கள் அளவுக்கு அரசியலில் சாதி துவேஷம் வடமாவட்டங்களில் இல்லை. ஒரு காலத்தில் வடமாவட்டங்கள் சாதி கலவர பகுதியாக இருந்த்து காலப்போக்கில் அது மாறியது. வன்னியர் சங்கம் இடஒதுக்கீடு பிரச்சனைக்காக பெரும் போராட்டத்தை முன்னெடுத்தபோது வடமாவட்டங்களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக வன்னியர்கள் இருந்தாலும் ராமதாஸ்க்கு பிரச்சனையின் அடிப்படையில் ஆதரவு தந்தார்களே தவிர அரசியல் ரீதியாக ஆதரவு தரவில்லை. வன்னியர்கள் மட்டுமல்ல முதலியார்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும்மே தங்களது சாதிக்கட்சிகளுக்கு பிரச்சனையின் அடிப்படையில் ஆதரவு தந்தார்களே தவிர அரசியல் ரீதியாக ஆதரவு தந்தனர். இதனாலே அதிகாரம் வேண்டி கூட்டணிகளுக்கு போனார். கூட்டணி மாறியதால் மாபெரும் சரிவுக்கு பின் சாதிய வன்மத்தை மீண்டும் உருவாக்கினார். இதற்கு ராமதாஸ் மட்டும் காரணமல்ல. பிற அரசியல் கட்சிகளும், அதிகாரத்தில் இருப்பவர்களும் ஒரு காரணம்.

கடந்த காலங்களை போல் இப்போது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக அடக்குமுறைகள் பெருமளவு குறைந்துள்ளது. இதற்கு தாழ்த்தப்பட்ட மக்களின் விழிப்புணர்வு, அரசியல் கட்சிகளின் ஆதரவு, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சட்ட பாதுகாப்பு, எழுத்துலகம் மற்றும் அறிவுசார் கருத்தாளர்களின் ஆதரவு போன்றவையே காரணம். ஆனாலும்........


தாழ்த்தப்பட்ட சாதியிலும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் உள்ளனர். பிற சாதியினரின் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை தங்களுக்கு பிடிக்காத பிற சாதியினர் மீது ஏவுவது, சாதியை காட்டி மிரட்டுவது, சாதியை ஒழிக்க மற்ற சாதி பெண்களை கற்பழி எனச்சொல்வது பிற சாதியினரை கொந்தளிக்க வைத்தது. சமூகத்தில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி வந்தன. இதனை கண்டிக்க வேண்டிய அரசியல் கட்சி தலைவர்கள் கண்டிப்பதில்லை. ஓட்டுக்காக அவர்களின் தவறுகளை கண்டும் காணாமல் போனது பிற சாதி மக்களை கோபம் கொள்ள வைத்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பிற சாதியினர் கோபம் கொண்டாலும் எதிர்க்க முடியாமல் இருந்தனர். வடமாவட்டங்களில் பெரும் சாதியாக உள்ள வன்னியர்கள் இதனை எதிர்த்தபோது கலவரங்களாக மாறின. அப்போது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைத்த பாதுகாப்பு, அதிகார வர்கத்தின் கைகள் தங்களுக்காக நீளவில்லை என்பதால் தங்களுக்கான பாதுகாப்பு, தனக்கான அரசியல் அதிகாரம் தேவை என்பதாலே ராமதாஸ் பின்னால் அணி திரண்டுள்ளான். கடந்த காலங்களில் பிரச்சனைகளின் அடிப்படையில் ஆதரவு தந்தவன் தற்போது என் சாதிக்காரன் அதிகாரத்துக்கு வரட்டும் என்னை அவன் காப்பான் என்கிறான். இது ஆபத்தானது.

இது மரமாக வளரும் முன் வெட்டி எறியவேண்டும். சாதி கட்சிகளுக்கு அதிகாரம் போவது என்பது தமிழகத்தை அமைதி மாநிலமாகயில்லாமல் கலவர மாநிலமாக மாற்றிவிடும். அதிகாரத்துக்கு போட்டிப்போடும் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சாதி கட்சிகளை வளர விடாமல் தவறுகளின் அடிப்படையில் மேல்சாதி, கீழ்சாதி என பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குக்காக ஒரு சாதியை தூக்கி விடுவது மற்றொரு சாதியை கைவிடுவது என்பது தொடர்ந்தால் சாதிகளின் ஆதிக்கம் தேர்தல்களில் மட்டுமல்ல சமூகத்திலும் அதிகமாகிவிடும்.

அமைதியை கேள்விக்குறியாக்கிவிடும். சிந்திப்பார்களா?

புதன், ஏப்ரல் 16, 2014

மோடி ஆதரவு ரஜினி முகமுடியை கழட்டிய தேர்தல்.



ரஜினியை சந்திக்க வேண்டும் என மோடி மட்டும் விரும்பவில்லை. மோடியை சந்திக்க ரஜினியும் விரும்பினார் என்பதே உண்மை. சென்னை வந்த மோடி ன் வீட்டில் டீ சாப்பிட விரும்பினார். அது நிறைவேறியது எனக்கு சந்தோஷம். அவர் மனதில் உள்ளது நிறைவேற கடவுளிடம் பிரார்த்திப்பேன் என்றார். (அதுயென்ன மறைமுக வாய்ஸ். நேரடியாகவே சொல்லியிருக்கலாம் மோடி பிரதமராக ஆதரவு என்று). ரஜினியே வாய்ஸ் தந்துட்டாரு தமிழ்நாட்ல மோடி அலையோடு ரஜினி அலையும் சேர்ந்து 40க்கு 60 சீட் ஜெயித்துவிடுவார்கள் என்கிறார்கள் பொருந்தா கூட்டணிக்கு வால்பிடிப்பவர்கள்.

ஆட்சிக்கு வரப்போகிற கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் வரிசையில் சினிமா நடிகர்களில் ரஜினிக்கு எப்போதும் தனி இடம் உண்டு.

91-96 காலக்கட்டம்.........

தமிழகத்தை ஆண்ட ஜெ – சசி வகையறா ஆட்சி மீது மக்களிடம் இயல்பாகவே ஒரு எதிர்ப்பு உருவாகியிருந்தது. மாற்றத்துக்கு மக்கள் தயாராகயிருந்தனர். 96ல் திமுக தனித்து நின்றிருந்தாலும் ஜெயித்துயிருக்கும். அதுதான் அன்றைய மக்கள் மனநிலை.

அடுத்து திமுக ஆட்சி தான் என்பதை உணர்ந்தே, சோ, ரஜினி ஓடிவந்து திமுகவுக்கான வண்டிகளில் ஏறிக்கொண்டு திமுக – தமாக கூட்டணியை உருவாக்கியதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு வெற்றியில் பங்கெடுத்துக்கொண்டார்கள். ரஜினி குரல் கொடுத்ததால் தான் ஜெ தோற்றார். திமுக ஆட்சியை பிடித்தது என பிதற்றுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களை அரசியல் தெரியாத அறிவிளிகள் என ஒதுக்க முடியாது. ஏன் எனில் அவர்கள் திட்டமிட்டே அந்த மாயையை உருவாக்கி அது நிலைத்து நிற்க வைத்தார்கள். அவர்கள் தான் தற்போது ரஜினி மோடிக்கு ஆதரவு என பிரபகாண்டம் செய்கிறார்கள். 



2004 நாடாளமன்ற தேர்தல்...........

தமிழகத்தில் ரஜினியின் செல்வாக்கு என்ன என்பதை 2004 நாடாளமன்ற தேர்தலில் பாமக வெட்ட வெளிச்சமாக்கியது. பாபா படம் ராமதாஸ் மோதலின் போது பாமக போட்டியிடும் 7 தொகுதிகளில் அந்த கட்சியை என் ரசிகர்கள் தோற்கடிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என வாய்ஸ் கொடுத்தார். மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என பேசினார். அந்த குரல் எடுபடாமல் மண்ணை கவ்வினார். 7 இடங்களிலும் திமுக கூட்டணியில் இருந்த பாமக வெற்றி பெற்றது. பின்னர் மத்திய அமைச்சரான அன்புமணிராமதாஸ்சுடன் நட்பு பாராட்டினார்.

2006 சட்டமன்ற தேர்தல்........

திமுகதான் அடுத்து ஆட்சிக்கு வரும் என்பதை யூகித்த ரஜினி, 2004ல் பாமகவுக்கு எதிராக தந்த வாய்ஸ் புஸ்சாகியதால் 2006 சட்டமன்ற தேர்தலின் போது வாயை மூடிக்கொண்டார். திமுக ஆட்சிக்கு வந்தது. 2011 வரை தமிழகத்தை ஆண்ட கலைஞரின் சினிமா, இலக்கிய விழாக்களில் கலந்துக்கொண்டு ஐஸ் மழை பொழிந்தார்.

2009 நாடாளமன்ற தேர்தல்..............

அடுத்தும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி தான் என்பதால் சைலண்டாக வாய்ஸ் தராமல் இருந்தார்.

2011 சட்டமன்ற தேர்தல்..........

2011 சட்டமன்ற தேர்தல், ஈழப்பிரச்சனை, காங்கிரஸ்க்கு வாரி வழங்கிய சீட்களின் எண்ணிக்கை, அமைச்சர்களின் கொள்ளை, ஊழல் பிரச்சனையென திமுக மீது அதிருப்தி மக்கள் மத்தியில் இருந்தது. தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால் அடுத்து அதிமுக ஆட்சி தான் என்பதை மக்கள் நம்பினர்.

இதை உணர்ந்திருந்த ரஜினி, ஓட்டு போடும்போது இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு அதை திட்டமிட்டே மீடியாவில் காட்டவைத்ததோடு வெளியே வந்து இரட்டை இலை சிம்பள் காட்டி என் ஆதரவு அதிமுகவுக்கு என சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றார். அதிமுக வெற்றி பெற்றது. ரஜினி ரசிகர்களின் ஆதரவு தான் ஜெவை மீண்டும் முதல்வராக்கியது என பிதற்றினார்கள். ரஜினி விரல் காட்டவில்லையென்றாலும் அதிமுக ஜெயித்திருக்கும் என்பதே எதார்த்தம். அதனாலே ரஜினியை கண்டுக்கொள்ளவில்லை.

2014 நாடாளமன்ற தேர்தல்......

இப்போது, 2014 நாடாளமன்ற தேர்தல். இந்தியா முழுவதும் மோடி அலை கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக திட்டமிட்டே உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பொய்யை பலமுறை சொன்னால் உண்மையாகிவிடும் என்பது ஹிட்லரின் நம்பிக்கைக்குரிய அமைச்சர் கோயாபல்ஸ் சித்தாந்தம். இந்த சித்தாந்தத்தை வைத்து பலமுறை ஹிட்லர் வெற்றி பெற்றுள்ளார். அதைத்தான் மோடிக்கான விளம்பரத்துக்கு பயன்படுத்துகிறது அமெரிக்காவின் விளம்பர நிறுவனமும், காவி கூடாரமும்.

காங்கிரஸ் மீது பெரும் ஊழல் குற்றச்சாட்டுகள், விலைவாசி உயர்வு, பன்னாட்டு பொருளாதாரத்துக்கான கதவுகள் அகலமாக திறந்தது போன்றவை நாட்டு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வைத்துள்ளது. இந்த நேரத்தில் நாடு முழுவதும் பரவலாக அரியப்பட்ட காங்கிரஸ்க்கு மாற்று என முன்னிறுத்தப்படும் பி.ஜே.பியில் குப்பன், சுப்பனை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி கூட்டணி அமைத்திருந்தால் வலிமையான கூட்டணி இந்தியா முழுமைக்கும் அமைந்திருக்கும். அந்த கூட்டணி பெரும் வெற்றி பெற்றிருக்கும். குஜராத்தில் இஸ்லாமிய மக்களை கொன்று குவித்த மோடி பிரதமர் வேட்பாளர் என்பதால் தான் கூட்டணி அமையவில்லை. இருந்தும் உருவாக்கப்பட்ட மோடி அலையை கொண்டு கரை சேர துடிக்கிறது காவி கூடாரம். மோடி அலை தமிழகத்தில் உதவாது என்பதால் ரஜினி வாய்ஸ் எதிர்பார்த்து நின்றார்கள் பி.ஜே.பியினர். ரஜினி காரிய மன்னன் அடுத்து எப்படியும் மோடி ஆட்சி அமைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் மோடி சந்திப்புக்கு தலையாட்டியதோடு அவர் நினைப்பது நிறைவேற கடவுளை பிரார்த்திக்கிறேன் என வாய்ஸ் தந்துள்ளார். 


வாய்ஸ்க்கு பின்னால் அரசியல் மட்டுமல்ல ரஜினியின் மத, மொழி வெறியும் உண்டு.

சூப்பர் ஸ்டார் ரஜினி சாதாரண சிவாஜிராவ்வாக இருக்கும் போது, கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் வாட்டாள் நாகராஜின் தீவிரமான மொழிவெறி அமைப்பில் ஒரு சிப்பாயாக இருந்தவர். இதை வாட்டாள் நாகராஜ்ஜே கூறியுள்ளார். கர்நாடகாவின் சூப்பர்ஸ்டாராக மக்கள் மனதில் நின்ற நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியபோது ரஜினி துடித்த துடிப்பு பெரியது. தன் மாநிலத்தவர்க்காக துடித்த அதே ரஜினி மதத்துக்காகவும் பலமுறை துடித்துள்ளார். இப்போது நடிகர் ரஜினியின் மதவெறி மத வெறியறான மோடிக்கு ஆதரவு தரவைத்துள்ளது.

மாநில அளவில் இருந்து தேசிய அளவு வரை முற்போக்கு முகத்தில் காட்சியளித்த பலரின் முகமுடிகளை இந்த தேர்தல் கழட்டி வருகிறது.