ஞாயிறு, அக்டோபர் 02, 2016

ஜெ வை பற்றி கேள்வி கேட்காதே……விசுவாசத்தல தீயை வைக்க.






 மாலன் நாராயணன். ஒருக்காலத்தில் பிரபல பத்திரிக்கையாளர். அவரது பத்திரிக்கை அனுபவம் தான் என்னுடைய வயதே. நான் நிருபராக பணிணை தொடங்கிய 14 ஆண்டுகளுக்கு முன்பு சில பிரபல பத்திரிக்கையாளர்களை பிரமிப்பாக பார்த்ததுண்டு. அதில் மாலனும் ஒருவர். 

இன்று?. அதிமுகவின் அடிமைகளில் அவரும் ஒருவர். இதை அழுத்தம் திருத்தமாக சொல்லக்காரணம், சொத்து குவிப்பு வழக்கில் ஜெவுக்கு, தண்டனை தரப்பட்டபோது அதிமுககாரர்களை விட அதிககமாக முகநூலில் துக்கம் அனுசரித்தார், கணக்கு குமாரசாமி, ஜெவை விடுதலை செய்தபோது அதிகம் கொண்டாடியவரும் அவரே. 

அப்படிப்பட்ட பிரபல பத்திரிக்கையாளர் தான் தனது முகநூலில் ஆங்கிலத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். ஜெ உடல் நலம் பற்றி கலைஞர் எழுப்பிய கேள்விக்கு, மாலன் தனது முகநூலில், அவரது (ஜெ) தனிப்பட்ட உடல் சார்ந்த விஷயம், அதை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என கேட்ககூடாது. மத்தியஅமைச்சர் முரசொலிமாறன் மருத்துமனையில் இருந்தபோது, அவர் சிகிச்சை பற்றிய தகவல்களை மக்களுக்கு தந்தீர்களா என கேட்கும் பதிவது.

மாலன் சார் மட்டும்மல்ல, முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேயகட்ஜீவும், பொங்கியுள்ளார். எதையாவுது சொல்லி அடிக்கடி அடிவாங்கற கைப்புள்ள அவர் என்பதால் அவர் பற்றி இங்கு பேசவில்லை. மாலன் அவர்கள் எழுதிய விவகாரத்தை மட்டும் பேசுவோம். 

ஒரு பொறுப்புள்ள பத்திரிக்கையாளர் என்ன கேட்க வேண்டும். கடந்த 10 தினங்களாக முதல்வர் மருத்துவமனையில் உள்ளார். அவருக்கு என்ன நடந்தது என்பதை அவருக்கு ஓட்டுப்போட்ட மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அந்த கடமையை ஏன் தலைமைசெயலாளர் செய்யவில்லை? கவர்னர் ஏன் அவரை சென்று சந்திக்கவில்லை?, வதந்திகளுக்கு ஏன் அரசு சார்பில் மறுப்பு தெரிவிக்கவில்லை?, மத்தியரசு ஏன் இந்த விவகாரத்தில் மவுனம் சாதிக்கிறது என கேட்க வேண்டும். கவர்னர் சந்தித்துவிட்டு வந்தபின்னும் உப்பு சப்பில்லாத அறிக்கை ஒன்றை தந்துள்ளது கவர்னர் இல்லாம். இதுப்பற்றியெல்லாம் கேள்வி எழுப்பி மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும். இதுதான் பத்திரிக்கையாளனுக்கு அழகு, தொழில் நெறியும் கூட. 

இந்த கேள்விகளை கூட ஏன் கேட்கசொல்லப்படுகிறது. ?

 தமிழக முதல்வராகவுள்ள ஜெ கடந்த செப்டம்பர் 22ந்தேதி இரவு மருத்துவமனையில் காய்ச்சல், நீர்சத்து குறைபாடுகளுக்காக அனுமதிக்கப்பட்டார் என அறிவித்தது அப்போல்லோ மருத்துவமனை நிர்வாகம். மறுநாள் வந்துவிடுவார் என்றார்கள், வரவில்லை. வதந்திகள் பரவ பரவ தான் அப்போல்லோ நிர்வாகம், முதல்வர் நன்றாக உள்ளார் இட்லி சாப்பிட்டார், சாம்பார் குடித்தார் என நான்கு வரி அல்லது 8 வரியில் ஒரு விளக்க குறிப்பு செய்தியாக தந்தது அவ்வளவு தான். ஆனால், தொடர்ந்து மருத்துவமனையில் உள்ளார், நுரையீரல் பிரச்சனை, சக்கரை அதிகம் என வெவ்வேறு தகவல் வர வர இல்லையில்லை முதல்வர் காவிரிக்காக கூட்டம் நடத்தினார், உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை நடத்தினார், அமைச்சரை சந்தித்தார் என விதம் விதமாக அரசு செய்திக்குறிப்பு வருகிறதே தவிர. அப்படி ஏதாவது நடந்ததா என்பது பெரும் கேள்விக்குறியே. அதனால் தான் கலைஞர் உட்பட பல தலைவர்கள், ஜெ உடலுக்கு என்ன என கேள்வி எழுப்பினார்கள். கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் முதல்வர் உள்ளார். மரபுப்படி கவர்னர் போய் சந்தித்து விளக்க வேண்டும், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கலைஞர் கேட்டுக்கொண்டார். கேட்டுக்கொண்டார் என்பதை விட மரபை நினைவூட்டினார். இதைக்கூட கேட்ககூடாது என்கிறார்கள் ஜெவின், நடுநிலை பத்திரிக்கை பக்தர்கள்

ஜனநாயக நாட்டில், தங்களை ஆள்பவருக்கு என்ன நேர்ந்தது என அறிந்துக்கொள்ள கூட மக்களுக்கு அதிகாரம்மில்லையா என்ன ?. அப்பறம் என்ன வெங்காயத்துக்கு ஜனநாயகம். 

மற்ற நேரங்களில் தான் கிராபிக்ஸ், மார்பிங் போட்டோக்களை அரசின் சார்பில் தந்தபோது கேள்வி கேட்காமல் பிரச்சுரிக்க வேண்டிய கட்டாயம், பிரச்சுரித்தீர்கள். இப்போது அந்த மூலவருக்கு என்னவானது என்கிற குழப்பம் அதிமுக தொண்டர்கள் மட்டும்மல்ல எதிர்கட்சிகள், பொதுமக்களிடமும் கேள்வி எழுந்துள்ளது. அதனால் தான் போட்டோவை தாங்கள், வீடியோவை, வெளியிடுங்கள் என கேட்கிறார்கள். நியாயமாக இந்த நேரத்தில் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியது அரசின் கடமை, ஆதாரங்களை தரவேண்டியது கட்டாயம். 

மாலன், தினமணி வைத்தி, தந்தி பாண்டே, அதிமுக ஆதரவு பத்திரிக்கை, மீடியாக்கள் கேள்வி கேட்காமல் இருக்கலாம். அவர்கள் கேள்வி கேட்காமல் இருப்பதற்கு பின்னால் பல தேவைகள் உள்ளது. மக்களுக்கு அப்படியல்லவே. 


போயஸ்கார்டன் என்பது மர்மங்கள் நிறைந்த அரசியல் தலைவரின் இல்லம் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஜெயாவை நோக்கி கேள்வி கேட்டால் பிடிக்காது என்பதும் தெரியும். இருந்தும் மக்கள் கேள்வி கேட்க காரணம், தன்னை ஆளும் முதல்வர் உடல் ஆரோக்கியத்துடன் உள்ளாரா என எதிர்பார்க்கிறார்கள். இதை விளக்க மாநில அரசு தான் மறுக்கிறது என்றால் மத்தியரசு என்ன செய்துக்கொண்டு உள்ளது? என்பதே அரசு மரபு அறிந்தவர்கள் கேள்வி. 

மக்களின் மற்றொரு பயம். நேரடியான உறவுகள் என ஜெயாவுக்கு யாரும்மில்லை. அவரது அண்ணன் பிள்ளைகள் உள்ளார்கள், அவர்களை கார்டன் பக்கம் கூட சேர்ப்பதில்லை. ஜெவை சுற்றி இருப்பது மன்னார்குடி சசிகலா கும்பல் தான். இந்த சசிகலா 30 வருடங்களாக ஜெயாவின் நிழலாக தொடர்ந்தாலும், சில நேரங்களில் எனக்கும், அவருக்கும் எந்த சம்மந்தமும்மில்லை என ஜெ வால் துரத்தியடிக்கப்பட்டவர். அவரது உறவினர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள். ஆனால், என்ன காரணம்மோ மீண்டும் அவர்களை திரும்ப அழைத்துக்கொள்கிறார். ஜெவுக்கு பின் கட்சியை கைப்பற்ற சசிகலா துடிக்கிறார் என்பது இலைமறை காயாக அதிமுக நிர்வாகிகள் மத்தியில் உள்ள ஒரு பேச்சு. இதை அதிமுகவின் பல லட்சம் தொண்டர்கள் எதிர்க்கிறார்கள். அதனால் தான் அந்த தொண்டர்கள் தனது தலைவிக்கு என்னவானதோ என பதறுகிறார்கள். என்ன அவர்களால் எங்கள் தலைவிக்கு என்னவானது என வெளிப்படையாக கேட்க முடியாது. அதனால் அமைதியாக மனதுக்குள் குழம்பிக்கொண்டு உள்ளார்கள். அதனால் மற்றவர்கள் கேட்கிறார்கள். இதைத்தான் கேட்ககூடாது என்கிறார்கள் ஜெ பக்தர்கள்.

இவைகளை காணும்போது, ஜெவுக்கு லட்சக்கணக்கான அடிமைகள் காரணத்தோடு இருக்க ஜெவே ‘யாருக்கோ’, எதற்கோ அடிமையாக இருக்கிறார் போல. அதனால் தான் அவர் பற்றிய விவகாரம் வெளியே வரமறுக்கின்றன. அதனால் ஜெவின் நடுநிலை அடிமைகள், அவர் யாருக்கு அடிமையாக உள்ளார் என்பதை கண்டறிந்துவிட்டு பின் எதையும் கேள்வி கேட்காதே என மற்றவர்களுக்கு புத்தி சொல்லட்டும்............