சனி, மார்ச் 31, 2012

சீனாவின் முத்துமாலையை அறுக்க முயலும் அமெரிக்கா.




ஈழத்தில் தமிழினத்தை அழித்த இலங்கை அரசின் போர் குற்றத்தை கண்டித்து ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒருவழியாக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த வெற்றி ஈழ தமிழினத்துக்கோ அல்லது தாய் தமிழர்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என சொன்னால் அது பொய். மாறி வரும் உலக கூ+ழலில் அமெரிக்காவின் இராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி. இந்த தீர்மானத்தை அமெரிக்க கொண்டு வர சிறு ஒரு தூண்டுகோளாக இருந்தவர்கள் மேலை நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள். 

இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டதுக்கு பின்னாலும், இதன் வெற்றிக்கு பின்னாலும் இருப்பது உலக நாடுகளின் அரசியல். 

இரண்டாம் உலக போருக்கு பின் நாட்டாமை நீயா? நானா? என்ற போட்டி அமெரிக்காவுக்கும் - ரஷ்யாவுக்கும் இருந்து வந்தது. 1990ல் ஒருங்கிணைந்த ரஷ்யாவை மற்றொரு கம்யூனிச தேசமான சீனா உதவியுடன் அமெரிக்கா சின்னாபின்னமாக்கியது. அதன்பின் உலகின் நாட்டாமை பதவியை அமெரிக்கா கைப்பற்றியது. அந்த பதவியை விட்டு தராமலும் யாரும் அதற்கு போட்டிக்கு வராமலும் பார்த்துக்கொண்டது. 

இன்றைய காலக்கட்டத்தில் பொருளாதார ரீதியாகவும், இராணவ ரீதியாகவும் பலம் வாய்ந்த நாடு அமெரிக்கா. அவர்களுக்கு ஏற்றாறல்போல் உலகின் மற்ற நாடுகள் இயங்க வேண்டும் என நினைத்து செயல்படுகிறார்கள் அதற்கு ஏற்றாற்போல் பிற நாடுகளும் நடந்தும் வருகிறார்கள். ஆனால் 2000க்கு பின் அதில் மாற்றம். அமெரிக்காவின் நாட்டாமை பதவியை பிடிக்க முயல்கிறது செஞ்சீனா. 

ஆரம்பத்தில் சீனாவின் எண்ணத்தை பெரியதாக கண்டுக்கொள்ளாத அமெரிக்கா கொஞ்சம் தாமதமாகவே அதன் வேகத்தை கண்டு சுதகரித்துக்கொண்டது. பொருளாதாரத்தில் சூப்பர் பவர் ராக்கெட் வேகத்தில் பயணிக்கும் அதேநேரத்தில் இராணுவ ரீதியாகவும் அதன் வேகம் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது எக்ஸ்பிரஸ் வேகத்தில் இருக்கிறது. 

தனது பொருளாதார வளர்ச்சிக்காக ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகளவில் பெரும் முதலீடுகளை செய்துள்ளது சீனா. அங்குள்ள கச்சா பொருட்கள், மூலப்பொருட்கள் சீனாவுக்கு தேவை. அதற்காகவே அங்கு அதிக முதலீடுகளை செய்துள்ளன. முத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் கப்பல்களை பாதுகாப்பாக தன் நாட்டுக்கு கொண்டு வர முத்துமாலை என்ற திட்டத்தை வகுத்தது. அதன்படி எகிப்து, பாகிஸ்தான், பங்களாதேஸ், இலங்கை, நேபாளம், மியான்மார், பூட்டான், தாய்லாந்து, நாடுகளோடு உறவுகளை பலமாக அமைக்க தொடங்கியது. தாமதமாக இதனை உணர்ந்த ( அப்போதும் இந்தியா மங்குணியாக தான் இருந்தது) அமெரிக்கா தனது கழுகு பார்வையை கூர்மையாக்கியபோது, இந்த முத்துமாலை என்ற திட்டம் தனது பொருளாதார வளர்ச்சிக்கு என்றும் தனது முதலீடுகளை பாதுகாக்க என சீனா சொன்னாலும் அதனை அமெரிக்கா நம்பவில்லை. காரணம், சீனாவின் உள் எண்ணம் இராணுவ ரீதியாக கடலை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர துடிக்கிறது என்பதை உணர்ந்ததால் தான். 

முத்துமாலை திட்டம் முழுமை பெற்றால், மேற்கத்திய நாடுகளின் வணிக கப்பல்கள், விமானங்கள் கிழக்கு பகுதிக்கு வருவதை சுலபமாக கண்காணிக்க முடியும், போர்காலங்களில் அவர்களை சுலபமாக வீழ்த்த முடியும் என்பதால் தான் சீனா இந்த முடிவுக்கு வந்தது. இதனைத்தான் தாமதமாக உணர்ந்தது அமெரிக்கா. முத்துமாலை திட்டத்தை உடைக்க திட்டம் தயாரித்தது. 


ஆசியா கண்டத்தில் உள்ள இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளை தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்திருந்தது சீனா. கடைசியில் இந்தியாவின் பிடியில் இருந்த இலங்கையை தன் கைப்பிடிக்குள் கொண்டு வர சீனா விரும்பியது. இதிலும் விட்டுவிட்டால் ஆபத்து என்பதை உணர்ந்து இந்தியாவுக்கு எச்சரிக்கை செய்தது அமெரிக்கா. மங்குணிகளால் ஆளப்படும் இந்தியா தாமதமாகவே தீவிரத்தை உணர்ந்து களத்தில் இறங்கியது. இலங்கை தீவு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அதை இழந்தால் நம்மை சுலபமாக சீனா அழித்து விடும் என கணக்கிட்டது இந்தியா. 

இலங்கையில் தங்களது அதிகாரத்தை பரவலாக்க இந்தியா, அமெரிக்கா, சீனா மற்றும் பிற நாடுகள் போட்டியிட துவங்கின. இதனைத்தான் சரியாக பயன்படுத்திக்கொண்ட இலங்கையின் இராஜபக்சே அரசு, என் நாட்டில் இடம் வேண்டுமா புலிகளை அழிக்க ஆயுதம் தாங்கள் என கேட்டது. சீனா வாரி வாரி தந்தது, இரஷ்யாவும் தந்தன. சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க இந்தியாவும் வாரி வழங்கின. அமெரிக்காவும் வாரி வழங்கின. நாசகார இன அழிப்பு முடிந்ததும் இலங்கை தன் பாசத்தை சீனா மீது மட்டும் காட்ட துவங்கின. 


அமெரிக்கா, இந்தியா போன்றவை மிரட்டி பார்த்தும் இலங்கை அசரவில்லை. முத்துமாலை திட்டத்துக்கு கைகுலுக்கி அம்பன்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு தாரை வார்த்ததே தவிர இவர்களை மதிக்கவில்லை அதனால் தான் அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டு வர அதை இந்தியாவும் ஆதரித்து இலங்கைக்கு தன் கோபத்தை காட்டியுள்ளது. 

ஏற்கனவே முத்துமாலை திட்டத்துக்கு உதவக்கூடாது என மறைமுகமாக பாகிஸ்தானை அமெரிக்கா மிரட்டி வருகிறது. எகிப்திலும் ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்தது, மியான்மாரின் இராணுவ ஆட்சியாளர்களை மிரட்ட தொடங்கியுள்ளது. இந்தியாவும் தன் பங்குக்கு விளையாட தொடங்கியுள்ளது. முத்துமாலை திட்டத்தை உடைக்க, சீனாவின் நாட்டாமை கனவை தகர்க்க மேற்கத்திய நாடுகளோடு இந்தியாவும் போராட தொடங்கியுள்ளன. 

வியாழன், மார்ச் 29, 2012

அனகோன்டா அரசு ஊழியர்களிடம் மாற்றம் தேவை.....



கீழ்நிலை அரசு ஊழியர் ஒருவருடன் 30 நிமிடம் நானும் நண்பர் ஒருவரும் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சின் இடையே, குஜராத்தில் மோடியரசு, நிர்வாகத்தின் மேல் மட்டத்தில் அதாவது செயலாளர் அந்தஸ்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கப்படுவதற்கு பதில் கீழ் மட்டத்தில் இருந்து வந்த அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள் இதனால் அரசின் நிர்வாகத்தில் பெரும்பாலான தவறுகள் கலையப்படுகிறது. ஊழியர்கள் மனநிலை, கஸ்டம் போன்றவற்றையும் மக்கள் விரும்பும் சாதகம் பாதகம் பற்றியும் ஆட்சியாளர்களிடத்தில் தெளிவாக விளக்க முடிவதாக கூறுகிறார்கள் என்றார்.  

அந்த நண்பர் கூறயது போல் குஜராத் மாநிலத்தில் இருந்தால் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது தான். காரணம், கீழ்நிலை அதிகாரிகளுக்கு தான் அடிமட்டத்தில் உள்ள ஊழியர்களின் பிரச்சனையென்ன?, மக்களின் உணர்வுகள் என்ன? என்பதை இலகுவாக உணர்ந்து கொள்ள முடியும். உதாரணத்துக்கு ஒரு தாசில்தாரால் தான் சாதி சான்றிதழ்கு வாங்க ஒரு பயணாளி யாருக்கெல்லாம் சம்திவ் தர வேண்டியுள்ளது என்பதை நன்கறிவார். 

மத்தியரசு, மாநிலரசு பொது பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இதில் விவசாயத்தை முன்னேற்ற சில திட்டங்கள் போட்டுள்ளார்கள். ஏன் கேள்வி, இந்த அதிகாரிகளுக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும். நெல் நாத்து விட்டால் எத்தனை நாளில் முளைக்கும், எப்போது களையெடுக்க வேண்டும், எப்போது மருந்து அடிக்க வேண்டும், எப்போது அறுவடை செய்ய வேண்டும், இவைகளுக்கு எவ்வளவு செலவாகும் என்பது தெரியுமா என்றால் எதுவுமே தெரியாது. ஆனால், கீழ் மட்ட அதிகாரிகள் தரும் புள்ளி விவரத்தை வாங்கி வைத்துக்கொண்டு பென்சிலால் கிறுக்கி ஒரு தொகையை போட்டு ஒரு மூட்டை நெல்லை 500 ரூபாய்க்கு வாங்களாம் என அறிவிக்க மட்டுமே தெரியும். எதுவுமே தெரியாத ஒரு அதிகாரி விவசாயின் பொருளுக்கு விலை நிர்ணயிக்கும் கொடுமை இங்கு தான். 

அதேபோல், மின்சார வாரியத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும்மென்றால் அத்துறையை நன்குணர்ந்த இளநிலை பொறியாளர் இல்லை கீழ் மட்டத்தில் இருந்து மேல் பதவிக்கு உயர்ந்து வந்த ஒரு அதிகாரியை ஊழலை தடுக்க நியமனம் செய்யப்பட்டால் தவறு எந்தந்த மட்டத்தில் எங்கு நடக்கிறது, யார், யார் எல்லாம் அதனால் பலன் அடைகிறார்கள், எப்படி பலன் அடைகிறார்கள் என்பதை அறிந்திருப்பார். அதனை சரிசெய்வது அவருக்கு சுலபம். அதே துறையில் ஊழலை ஒழிக்க ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்தால் அல்லது அவரிடம் ஆலோசனை கேட்டால் அவர் மேல் மட்டத்தில் நடக்கும் ஊழலை பற்றி மட்டும்மே நன்குணர்ந்துயிருப்பார். அதை மட்டுமே குறிப்பிடுவார். அவருக்கு பொதுமக்களுடன் சம்மந்தப்பட்ட கீழ்மட்ட ஊழல்கள், தவறுகள் தெரியாது. அதனால் அத்துறையில் ஊழலை ஒழிக்க முடியாது. 

இதேபோல் தான் மற்ற துறைகளிளும். இது ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியால் அறியமுடியாது. கீழ் மட்ட அதிகாரிகளால் அறியமுடியும். காரணம், ஐ.ஏ.எஸ் தேர்வாகி பயிற்சி பெற்று வருபவர்கள் அரசின் நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதையே கற்று விட்டு வருகிறார்கள் அவர்கள்க்கு தவறு எங்கு நடக்கிறது என்பது தெரியாது. தெரிந்துக்கொள்ளவும் விரும்புவதில்லை. 

தேர்வெழுதி, பயிற்சி முடித்து சீட்டுக்கு வரும்போதே அவர்களுக்கு குளிர்சாதன அறை, குளிர்சாதன கார்கள், குளிர்சாதன வசதிகொண்ட வீடு என தந்து அரசியல் வர்க்கம் அவர்களை தங்களது விசுவாசிகளாக்கிகொள்கிறது. இதனால் அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வந்தோம் என்பதையே மறந்துவிடுகிறார்கள். 

மக்கள் தங்களது பிரச்சனைக்கு ரோட்டில் வந்து உட்கார்ந்தால் அவர்களின் குறைகளை கேட்பதில்லை, அவர்களுடன் பேசுவதில்லை. அந்த மக்களின் பிரச்சனை தீர்ப்பதில்லை. அதற்கு பதில் தங்களுக்கு கீழ் உள்ள காவல்துறையை விட்டு விரட்டுகிறார்கள், அடிக்கிறார்கள் சில நேரங்களில் குருவிகளை சுடுவதைப்போல சுட்டு தள்ள அனுமதிக்கிறார்கள். இது தான் இந்த அதிகாரிகளின் லட்சணம். அரசியல்வாதிகள் தான் மோசமானவர்கள் என்றால் அவர்களுக்கு கீழ் உள்ள அதிகார மட்டமும் அப்படியேத்தான் இருக்கிறது. 

நாம் கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தில் திமுக ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து சென்றார்கள் என விமர்சனம் செய்தோம். இப்போது ஆட்சியாளராக உள்ள அதிமுகவினர் கொள்ளயைடிப்பதாக விமர்சனம் செய்கிறோம். ஆனால் மறந்தும் யாரும் அரசின் மேல்மட்ட கீழ்மட்ட அதிகாரிகளை விமர்சனம் செய்வதில்லை. அதிகாரத்துக்கு வரும் எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரிகள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை தான் கொள்ளையடிக்கிறாhகள். ஆனால் 30 வயதில் பணிக்கு வந்து 58 வயது வரை கொள்ளயைடிக்கும் கூட்டம் தான் அரசு ஊழியார்கள் கூட்டம். மக்கள் பிரதிநிதிகளை விட அதிகமாக கொள்ளையடிப்பது இவர்கள் தான். ஆனால் பெரும்பாலும் இவர்கள் சிக்குவதில்லை. காரணம், அதிகாரிகள் தங்களுக்குள் விட்டுக்கொடுப்பதில்லை. 

மாற்றம் தேவையென்பது அரசியல்வாதிகளிடம்மல்ல………….. அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் சட்டத்தில் தான் தேவை. 

வெள்ளி, மார்ச் 23, 2012

சுகமான சுமைகள் …………. 23.




காலேஜ் வரும்போது சைன்ஸ் குரூப் பசங்களோட ஏதோ பிரச்சனையாம். காலேஜ்க்கு வெளியில சைன்ஸ் குரூப் சக்தியும் அவனோட டீமும் போட்டு அடிச்சிட்டுயிருக்கானுங்க. பசங்க வந்து சொன்னானுங்க. 

அடிச்சானுங்களா என அதிர்ந்து போய் எழுந்ததும் இப்ப ஜான் எங்கடா?. 

தெரியல?. 

அடிச்சது யார், யார்ன்னு தெரியுமா ?

தெரியாது பாத்தவனுங்க இருக்கானுங்க. 

அதல யாராவது ஒருத்தனை அழைச்சிக்கிட்டு வாடா என பல்லை கடிக்க 

மச்சான் அதோப்பார் சக்தி வர்றான் என கைகாட்ட கோபத்தின் உச்சத்தில் அருகில் இருந்த புங்க மரத்தின் கிளை ஒன்றை பிச்சி எடுத்துக்கொண்டு அவனை நோக்கி ஓடினேன்.  நான் அவனை நோக்கி ஒடி வருவதை கண்டு மிரண்டு ஓடியவனை காலேஜ் கேட் க்கு வெளியே மடக்கியிருந்தேன். ஏய் ஏய் எனும்போதே வச்சி விளாச தொடங்கியபோது அவன் என் முகத்தில் ஒரு குத்து குத்தியிருந்தான். அந்த வலியையும் அவனுக்கு திருப்பி தற அவன் கேங்க் பசங்கள் இரண்டு பேர் என்னை தாக்க வந்தனர். அதற்குள் அகிலன் வந்து அவர்களை அடிக்க சண்டை பெருசானது. 

………….. யாரை அடிச்சிங்க என கேட்டபடியே அந்த கொம்பை போட்டுவிட்டு சக்தியின் சட்டையை பிடித்து முகம், நெஞ்சு என குத்த அவன் பதிலுக்கு தாக்க அடி இன்னும் வேகமாக அவன்க்கு தந்தேன். ஓரளவு கோபம் தணிந்து ……………… எவனாவது அவன் மேல கைய வச்சிங்க. இப்ப விழுந்தது இல்ல அடி அடிச்ச கையை உடைச்சிடுவன் ஜாக்கிரதை என சக்தியை பிடித்து தள்ளிவிட்டு மிரட்டும் போது ரமேஷ் வேகமாக வந்தவன் என்ன மச்சான்.

நம்ம ஜானை அடிச்சிட்டானுங்களாம். அவன் பங்குக்கு நாலு சாத்து சாத்திவிட்டு அவனுக்கு காயம் ஏதாவதுயிருந்தா அடிச்ச உங்கள ஒழிச்சிடுவோம் என்ற ரமேஷ் இப்ப அவன் எங்கடா இருக்கான் என கேட்டான். 

அப்போது தான் அவன் நினைவு வந்தது. வீட்டுக்கு தான் போயிருப்பான் வாடா போய் பாக்கலாம் எனச்சொன்ன அகிலன் நடக்க தொடங்க வேகவேகமாக அவன் வீட்டை நோக்கி ஓடினோம். மச்சான் என அழைக்க அவனை திரும்பி பார்த்தபோது பின்னாடி நின்றவன் எதிர்பக்கம்மிருந்த கூல்ட்ரிங்ஸ் கடையை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தான். அவன் பார்வை போன பக்கம் நாங்களும் பார்த்தோம். தலையை குனிந்தபடி அமர்திருந்தான் ஜான். அவன் அருகே ஓடிப்போய் அவன் தோள் மேல் கைவைத்தபோது முகத்தை திருப்பி பார்த்தான்.

என்னடா சண்டை?. 

கூட வந்த பையன் சைன்ஸ் குரூப் எடுத்திருந்தா பொண்ணுங்க பின்னாடியே வந்திருக்கும். பி.காம் எடுத்துட்டு ஒருத்தியும் திரும்பி பாக்கமாட்டேன்கிறாளுங்கன்னு வருத்தப்பட்டான். 

என்னடாச்சின்னு கேட்டன்?.

சைன்ஸ் குரூப் பசங்க தான் நல்லா படிக்கறானுங்களாம். முத்தவங்கயெல்லாம் படிக்கறதேயில்லன்னு யாரோ ஒருத்தி அவன்கிட்ட சொன்னதா சொன்னான். 

அதுக்கு நான் அவன்கிட்ட, சைன்ஸ் குரூப் பசங்க பிராக்டிக்கல் மார்க் பாதி வாங்கி பாஸ் பண்றவனுங்க. நாம தான் முழுசா படிச்சி எக்ஸாம் எழுதி பாஸ் பண்றவனுங்க. அதனால அவனுங்கள விட நாம தான் ஓய்தி. அவனுங்க அட்டை பசங்கடான்னு சொல்லிக்கிட்டு வந்தன். இத பின்னாடி வந்த சக்தி கேட்டுட்டு எங்களயா அட்டை கத்தின்னு சொன்னன்னு சொல்லி அடிச்சிட்டான்டா. 

இதுக்கு போயா அடிச்சான். 

இல்லடா அவன் தேவி இருக்கற தெருவுல இருக்கான். தேவிய லவ் பண்றது தெரியும். அந்த காண்டுல அடிச்சிட்டான். 

அடிச்சது அவன் வேற யார், யார்?. 

கூடயிருந்த இன்னோருத்தன். 

பாக்கறப்ப அடையாளம் காட்டு. ஏதாவது ஒரு பிரச்சனையில அவனுங்கள உள்ள இழுத்து பொலந்து கட்டிடனும் என்றதும். அகிலன் அதை அமோதித்தான். 

எங்கிருந்தோ வந்த ப்ரியா. என்னப்பா அதுக்குள்ள ஒன்னா சேர்ந்துட்டிங்க. 

அதனால உனக்குயென்ன?. 

இல்ல. அவனை அடிச்சிட்டாங்கன்னதும் அடிச்சவனுங்களை அந்த அடி அடிச்சிட்டிங்க. 

வேற எங்கயாவது மாட்டியிருந்தான் அடிச்ச கையை உடைச்சியிருப்பன். 

இங்க பார்றா. இவ்ளோ துடிக்கறவன் அப்பறம் எதுக்கு மூனு மாசமா அவன்கிட்ட பேசாமயிருந்தியாம். 

ஏய். அது வேற இது வேற. எவனோ ஒருத்தன் இவனை அடிப்பான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க சொல்றியா?. அதுக்கு வேற ஆளைப்பாரு. எங்களுக்குள்ள இருக்கற பிரச்சனை வேற. அதுக்காக எங்களுக்குள்ள எதுவும்மில்லன்னு ஆயிடுமா? 

ஏய் இரு இரு என்ன சொல்லிட்டன்னு கோபப்படற. 
ஓன்னும் கோப்படல என்றபடி எதிர்பக்கம் திரும்பியபோது தான் அவளை பார்த்தேன். சைக்கிளில் போய்க்கொண்டிருந்தாள். அது அவளே தான். மச்சான் இது உன் சைக்கிள் தானே இதே வந்துடறன் இருங்கடா என்றபடி சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகவேகமாக அவளை துரத்த தொடங்கினேன். அவளுக்கும் எனக்கும் கொஞ்சம் இடைவெளி விட்டு பின்னாலயே போனேன். ப்ரியா வீடுயிருந்த அதே ஏரியாவுக்குள் தான் அவள் போனால். ஒரு வீட்டின் முன் சைக்கிளை நிறுத்திவிட்டு பூட்டு போட்டுக்கொண்டு உள்ளே போக இதான் அவள் வீடு போல என எண்ணியபடி அட்ரஸ் கிடைச்சாச்சி என விசில் அடித்தபடி மீண்டும் திரும்பினேன். 

திரும்பி வர்ற அரைமணி நேரமானது. அதுவரை எல்லோரும் அந்த கடையிலேயே அமர்ந்திருந்தனர். 

எங்க இவ்ளோ அவசரமா போன என ப்ரியா தான் கேட்டாள். 

ஓன்னும்மில்ல. எங்கப்பாவுக்கு தெரிஞ்சவரு போனாரு. அவரை ரொம்ப நாளா பாக்க முடியல. வுண்டியில போறத பாத்தன். அதான் அவசரமா போய் பாத்து புடிச்சன். பேசி அட்ரஸ் வாங்கிக்கிட்டு வந்தன் என சமாளித்ததும்

அத சொல்லிட்டு போறதுக்கென்ன ஏன்னவோ ஏதோன்னு கவலையாகிடுச்சி என்றாள் ப்ரியா. 

இன்னைக்கு வெள்ளிக்கிழமை தானே கோயிலுக்கு போகலாமா என்றதும் குஷியான ப்ரியா போலாமே. ஈவ்னிங் மீட் பண்ணலாம் என்றபடி கிளம்பினால். 

அந்த பொண்ண பாத்தாச்சி என ஜான் தான் கேட்டான். அமைதியாக இருப்பதை பார்த்து ஒரு ஒயிட் சுடிதாரை பாத்துட்டு பின்னாடியே அவசரமா போகும்போதே நினைச்சன் அந்த பொண்ணா தான் இருக்கும்னு. அட்ரஸ் கண்டுபிடிச்சிட்ட போல என்றதும் மெல்ல புன்னகைத்துவிட்டு போலாம்டா.

எங்க ?. 

க்ளாஸ்க்கு. 

அடிங் கொய்யலா. இப்ப டைம் 12 மணி போறாறாம். வா ரூம்க்கு போலாம் என்றான் ரமேஷ். ரூம்க்கு போயும் அந்த ஒயிட் சுடிதார் புராணமே பாட டேய் பேர் கூட தெரியாது ஆனா ஓவரா நெஞ்ச நக்கற என அகிலன் கடுப்படித்தான். 

அடங்குங்கடா. 

அதவிடு. நீ அந்த பொண்ண பாக்க போனத ப்ரியாக்கிட்ட ஏன் சொல்லல. 

அதையேன்டா கேட்கறிங்க. அந்த ஒயிட் சுடிதார்னு ஆரம்பிக்கும்போதே அவ முகம் போற போக்க பாக்கனும்மே. எரிஞ்சி விழறா. அவளைப்பத்தி பேசாதங்கறா. அதான் சொல்லல. 

அந்த பொண்ணால தான் உங்களுக்குள்ள லடாய் ஆகப்போகுதுன்னு நினைக்கறன் என ரமேஷ் சொல்ல. 

மூடு. அவளைப்பத்தி எனக்கு தெரியும். அவளை சமாதானப்படுத்தற வழியும் எனக்கு தெரியும். அத நான் பாத்துக்கறன் நீ கவலைப்படாத. 

என்ன திடீர்னு அத கோயிலுக்கு கூப்டும்போற. 

சும்மா தான். கோயிலுக்கு நாங்க மட்டும் போறன்னு யார் சொன்னது நாம எல்லாரும் தான் போறோம். 

வேலையிருக்குடா என அகிலன் முரண்டு பண்ண. எந்த வேலையிருந்தாலும் அப்பறம் பாத்துக்கலாம். வர்றன் ஆனா பீர் வாங்கி தரனும் என கண்டிஷன் போட்டான் ரமேஷ். 

எதுக்கு. 

இல்ல மச்சான். நீயும் ஜானும் ஒன்னு சேர்ந்துட்டிங்க அதுக்காக. 

ஆமாம். நானும் அவனும் அம்பானி பிரதர்ஸ் ஒன்னு சேர்ந்துட்டோம். பீர் வாங்கி தர்றதுக்கு. வெள்ளிக்கிழமையானா பீர் குடிக்கனும்கிறது உங்க சட்டம். அதுக்கு காரணம் தேடறிங்க. 

நீ மட்டும் யோக்கியமா என அகிலன் கடுப்படிக்க. 

வாடகை தரனும்டா. 

அத அப்பறம் பாத்துக்கலாம். 

கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு ஆளுக்கு ஒன்னுன்னா வாங்கி தர்றன். 

ஓ.கே என்றான்கள். 

மாலை 6 மணி. கோட்டைக்குள் இருந்த ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு வெளியே நான், ஜான், அகிலன், ரமேஷ் அமர்ந்திருந்தோம். 

மச்சான் அந்த ஆன்ட்டி சூப்பராயிருக்குள்ள என அகிலன் கேட்க. 

டேய் இது கோயில்டா.

கோயில்ல தான் மச்சான் சைட் அடிக்க முடியும். 

நாளைக்கு உங்க லவ்வர்ங்ககிட்ட சொல்றன் அப்ப தெரியும். 

வந்துட்டாங்கடா என ஜான் சொல்ல கோயிலுக்கு வரும் பாதையை திரும்பி பார்த்தபோது ஆனந்தமும் அதிர்ச்சியும் ஒருசேர என்னை தாக்கியது. ப்ரியா, தேவி வர அவள் அருகில் அவளே தான். நிஜமா? கனவா என என்னால் நம்ப முடியவில்லை. என் தேவதை இன்று ஒயிட் சுடிதார்க்கு பதில் லைட் ப்ளு கலர் சுடிதாரில் வந்தாள். இவ எப்படி இதுங்ககூட என மனம் குழம்பியது. 

கூட வர்றது யார்ரா என ஜான் தான் கேட்டான். நாங்களும் உங்கூட தானே இருக்கறோம் என பதில் தந்ததும் அமைதியானான். 

அருகில் வந்தார்கள். ப்ரியா தான் உடன் வந்தவளிடம் இவங்க தான் என் ப்ரண்ட்ஸ் என ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி முடித்தாள். என்னை அறிமுகப்படுத்தும் போது மட்டும் புன்னகையுடன் இருந்த அந்த தேவதையின் முகம் ஒரு செகன்ட் வாடியதுபோல் இருந்தது எனக்கு. 

அது நீங்க தானா. உங்களப்பத்தி தான் தினமும் ஒரே புராணம். இப்ப வழியில கூட உங்களப்பத்தி தான் பேசிக்கிட்டே வந்துச்சி என்றாள். 

உங்களப்பத்தி சொல்லவேயில்லயே. 

இவ என் தங்கச்சி. பேரு கவிதா. டீ.எட் பண்றா என ப்ரியா சொல்லும் போதே நெஞ்சிக்குள் குண்டு வெடித்தது போல்யிருந்தது. ப்ரியாவோட தங்கச்சியா இவ. 

சும்மா சொல்லாத நாங்க உன் வீட்டுக்கு வந்தப்பகூட பாக்கவேயில்லையே என ஜான் தான் கேட்டான். 

நீங்க வந்தன்னைக்கு மார்கெட் போயிருந்தா. அதான் அறிமுகப்படுத்த முடியல. இன்னைக்கு வீட்லயிருந்தா அதான் அழைச்சிவந்தன் எனச்சொல்லும் போதுயெல்லாம் மனம் குழப்பத்தில் தவித்துக்கொண்டுயிருந்தது. 

என்ன சார் ஒரே யோசனை இருக்கிங்க என ப்ரியா தோள் மீது கைவைத்து உலுக்க

ஒன்னும்மில்ல. 

கோயிலுக்குள்ள போகலாம்பா என தேவி கூப்பிட. 

நீங்க போய்க்கிட்டேயிருங்க நான் வந்துடறன்;. 

கோயிலுக்கு தானே வந்த அப்பறம் ஏன் வர்றமாட்டேன்கிற என ப்ரியா தான் சிடுசிடுத்தாள். 

ஏய் நீங்க சாமி முன்னாடி போறதுக்கு முன்ன வந்து சேர்ந்துக்கறன். 

எங்க போறன்னு சொல்லு. 

புரிஞ்சிக்க. 

பாத்ரூம் போறயா என ப்ரியா வெளிப்படையா கேட்க. 

மானத்த வாங்காத போ வர்றன். ஆனால் அவள் போகாமல் அப்படியே நிற்க போன்னு சொல்றன்யில்ல என கோபமாக சொன்னதும் போகலாம் என அனைவரும் நடந்தனர். நான் மட்டும் உட்கார்திருந்த சைக்கிளை விட்டு இறங்காமல் அப்படியே அமர்ந்திருந்தேன். 


உன் தங்கச்சியத்தான் ரூட்டு விடறன்னு ப்ரியாக்கிட்ட சொன்னோம் நம்மை ஒழிச்சிடுவா. என்னப்பண்ணலாம். நாம காலையில இவள பாலோ பண்ணப்ப வேற வீட்டுக்குள்ள போனாலே?. அப்ப அது வேற ஒருத்தர் வீடு போல என எண்ணியபடி கவிதா நல்ல பேர் தான். ஆனா இவக்கிட்ட லவ் பண்றன்னு சொன்னாலும் பிரச்சனை? சொன்னது ப்ரியாக்கு தெரிஞ்சாலும் பிரச்சனை? என்னப்பண்றத்து என யோசித்தபடியே அமர்ந்திருந்தபோது தான் ஹலோ என்ற குரல் கேட்டு மன குழப்பத்தில் இருந்து வெளியே வந்தேன். எதிரே கவிதா நின்றிருந்தாள். 

என்ன இன்னும் அதிர்சியிலயிருந்து மீளலயோ?

என்ன அதிர்ச்சி. 

நான் யாருங்கறது தெரிஞ்சதால தானே இந்த அதிர்ச்சி. 

அது வந்து அப்படியெல்லாம் கிடையாதே. 

நீங்க காலையில பாத்தது எங்க வீடுயில்ல. என் ப்ரண்டோட வீடு அவளை பாத்து நோட்ஸ் வாங்க போனன். 

நான் அதிர்ச்சியாகி பின்னாடி வந்தத பாத்திங்களா ?

அன்னைக்கு கோயில்லயும் என் பின்னாடியே வலம் வந்ததும் தெரியும். 

ஸாரி அன்னைக்கு அழகாயிருந்திங்களா அதான். 

அப்ப இன்னைக்கு அழகாயில்லயா என இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு கேட்டாள். 

இல்ல அந்த டிரஸ்ல அழகா இருந்திங்க. இந்த டிரஸ்சும் சூப்பர் தான் என்னயிருந்தாலும் எனக்கு அந்த ஒயிட் கலர் ரொம்ப புடிச்சியிருந்தது என்றதும் ஸார்க்கு அப்ப என் டிரஸ் மேல தான் விருப்பமோ. 

அப்படியில்ல 

அப்பறம்.

அது வந்து, வந்து நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கறன்னே என்றதும் அவளின் முகத்தில் அதிர்ச்சியோ அதிர்ச்சி. 

இரண்டு நிமிடம் இருவரும் அமைதியாக நின்றோம். நான் கற்பூரம் வாங்கி வர்றன்னு வெளியில வந்தன். நான் போறன் எனச்சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் கோயிலுக்குள் போக படி இறங்கினாள். 

அவள் பின்னாடியே போன நான் கற்புரம் வாங்கலயா?

திரும்பாமலே தன் உள்ளங்கையை திறந்து காட்டினால். மூன்று கற்புரவில்லைகள் இருந்தன. 

கேட்டதுக்கு பதிலே சொல்லாம போறிங்க.

பதிலும் சொல்லவில்லை, திரும்பியும் பார்க்காமல் நடந்தால். 

பிள்ளையார் சந்நதி முன் மற்றவர்கள் காத்திருக்க போய் உடன் கலந்தோம். கோயிலை சுற்றி வரும்போதுயெல்லாம் ப்ரியா தான் ஏன் டல்லா இருக்க என கேட்டு துளைத்தெடுத்தால். 

ஏய் அதெல்லாம் ஒன்னும்மில்ல நல்லா தான் இருக்கன் என சமாளிக்க தொடங்கினேன். கோயிலை வலம் வரும்போது ஜானும், தேவியும் எங்கள் கண்ணில் இருந்து மறைந்துயிருந்தார்கள். அதேபோல் ரமேஷ்சும் அகிலனும் இந்த ரவுண்ட் அடிக்கற வேலையெல்லாம் எங்களுக்கு வேணாம். நீ பேசிட்டு வா நாங்க வெளியில வெயிட் பண்றோம் என காதில் கிசுகிசுத்துவிட்டு எஸ்கேப்பானான்கள். 

ஏய் அவுங்க இரண்டு பேர் தான் லவ் பண்றாங்க. காணாம போனாங்க. இவனுங்க இரண்டு பேரும் எங்க போறான்ங்க?. 

தெரியல. வெளியில இருக்கன்னு சொன்னானுங்க. 

நீ காலையில நல்லா தானே இருந்த அப்பறம் இப்ப என்ன டல்லா இருக்கற. 

நீயும் பலமுறை கேட்டுட்ட உன் ப்ரண்ட் பதில் சொல்ற மாதிரி தெரியல. ஏனக்கு என்ன சந்தேகம்னா உன்கிட்ட எதையோ பெருசா மறைக்கறாரு போல தெரியுது என கவிதா சிண்டு முடிந்தாள். 

நீங்க வேற ஏங்க எரியற நெருப்புல எண்ணெய்ய ஊத்தறிங்க. அதெல்லாம் இல்லடா அவுங்க சொல்றதெல்லாம் காதுல வாங்காத. 

நானும் ஜானும் சேர்ந்ததுக்கு பசங்க சரக்கு வாங்கி தாடான்னு நச்சரிச்சானுங்க. நானும் ஓ.கே சொல்லிட்டன். ரூம் வாடகை தான் இருக்கு. அதான் யோசனையா இருக்கு எனச்சொல்லிவிட்டு கவிதாவை பார்த்ததும் நமட்டு சிரிப்போடு முகத்தை திருப்பிக்கொண்டாள். 

நீங்க குடிக்கறிங்களாடா என ப்ரியா அதிர்ச்சியாகிப்போய் கேட்டாள். 

ஆஹா உளறியாச்சே என மனம் தவித்து என்ன சொல்வது என தெரியாமல் தடுமாறா அது அது என வார்த்தை வராமல் தடுமாறா 

அதை கண்டுக்கொள்ளாமல் நீயும் குடிக்கறியா?

மவுனமாக இருந்தேன். 

கேட்கறன்யில்ல சொல்லு. 

இன்னைக்கு மனசு சரியில்ல குடிக்கலாம்னு இருக்கன் என்றதும் ஓங்கி கன்னத்தில் அடித்தவள். ச்சீ என் முகத்தலயே முழிக்காத என எழுந்து வாடீ என தன் தங்கையின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே நடந்தாள். 

என்னடாயிது இப்படியாகிடுச்சி. நாம குடிக்கறது தெரிஞ்சி கவிதாவும் கோபப்படுவாளோ என எண்ணியபடி அவர்கள் போன பக்கம் திரும்பி பார்த்தபோது, கவிதா ப்ரியாவுக்கு தெரியாமல் டாட்டா காட்டினாள். 

அப்பாடா இவக்கிட்ட பிரச்சனையில்ல. அவளை எப்படி சமாளிக்கறது என யோசிக்கும்போதே ஜானும் தேவியும் அருகே வந்து என்ன இங்கயும் உங்களுக்குள்ள சண்டையா என கேட்ட ஜான். எதுக்குடா சண்டை ?.

ம். எதுக்குன்னு நீயே நாளைக்கு தெரிஞ்சிக்குவ. 

அவளுங்க என்னை விட்டுட்டு போய்டுவாளுங்க நான் கிளம்பறன் எனச்சொல்லிவிட்டு வேகவேகமாக போனால் தேவி. 

நீ வாடா நாம போகலாம் என்றவன் என்ன மச்சான் சொல்லுது உன் ஆளு?. 

ஓன்னும் சொல்லல என்றபடி கோயிலை விட்டு வெளியே வந்து அகிலன், ரமேஷ்சோடு ஒயின்ஷாப்பை நோக்கி நடந்தோம். 

தொடரும்………………

வியாழன், மார்ச் 22, 2012

வெற்றியும்............ எதிர்கட்சிகள் நிலையும்.



சங்கரன்கோயில் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது ஆளும்கட்சியான அதிமுக. எதிர்கட்சிகள் அனைத்தும் டெபாசிட் இழந்துள்ளன. இடைத்தேர்தல் களத்தில் ஆளும்கட்சி வெற்றி பெறும் சூத்திரத்தை 2003லியே அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக கற்று தந்தது. அதன்படி தான் கடந்த திமுக ஆட்சியில் நடந்த எல்லா இடைத்தேர்தலிலும் அதே சூத்திரத்தை பயன்படுத்தி ( அதைத்தான் திருமங்களம் பார்முலா என்றார்கள்) வெற்றி வாகைகளை சூடின.

2011 பொது தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு நடந்த பென்னகரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றன. அதை கண்டு அடுத்தும் திமுக தான் என்றார்கள் அரசியல் கட்சியினர். ஆனால் அடுத்து வந்த பொது தேர்தலில் அதிமுக  மாபெரும் வெற்றி பெற்றன.

முன்பு போல் மக்கள்யில்லை. இடைத்தேர்தலில் ஆளும்கட்சியை வெற்றி பெற வைத்தால் தான் தொகுதிக்கு ஏதாவது கிடைக்கும் என்பதில் தெளிவாக உள்ளார்கள். அதனால் ஆளும்கட்சி மீது எத்தனை வெறுப்புயிருந்தாலும் அதை கண்டுக்கொள்ளாமல் ஆளும்கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைக்கிறார்கள். 

அதிமுக ஆட்சியமைத்து 10 மாதங்கள் ஆகியுள்ளது. மின்வெட்டு, விலைவாசி உயர்வு, கட்டண உயர்வுகள் என ஆட்சி மீது அதிக அதிருப்தியுள்ளது. ஆனால், மக்கள் ஆளும் கட்சி வேட்பாளரை பெரும் வெற்றி பெற வைத்துள்ளார்கள். 

அதோடு, இலவச பொருகளை தந்து முடித்ததோடு, அதிமுக பண மழை பொழிந்துள்ளது அத்தொகுதியில். ஊருக்கு ஒரு அமைச்சர் என களம்மிறக்கி ஓட்டு வேட்டையாடினார்கள் அதனால் வெற்றி பெற்றுள்ளார்கள். 

அதனால் இந்த வெற்றி ஆச்சர்யபடுத்தக வெற்றியல்ல. இந்த வெற்றி ஒரு உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது, எதிர்கட்சியாக சட்டமன்றத்தில் அமர்ந்துள்ள விஜயகாந்த் கட்சி மூன்றாம் தர கட்சி என்பதை இந்த தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது. அக்கட்சி வெற்றியெல்லாம் அதிமுகவின் வெற்றி என்பது இதன் மூலம் நிரூபனமாகியுள்ளது. 

அதேபோல் மதிமுக தேய்பிறை கட்சியாக உள்ளது என்பதும் இதன் மூலம் வெளிப்படையாகியுள்ளது. 

பணமும், அதிகாரமும் தீர்மானித்த இடைத்தேர்தலாக இருந்தாலும் சில உண்மைகள் இதன் மூலம் வெளிப்படையாகிறது.

சனி, மார்ச் 17, 2012

நிர்வாண போஸ்கள். குப்புற படுத்து யோசிப்பாங்களோ?




மேற்கத்திய நாட்டினர் அதிரடியாக புதுவிதமாக ஏதாவது செய்து பரபரப்பாக்குவார்கள்.  அதை மிஞ்சிவிட்டார் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஜீன்பால்ரெய்டு. என்ன செய்தாரா ?. நம்மவூரில் பிளம்பர் தேவை, கால் டாக்ஸி தேவை, கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தேவை, தோட்டக்காரர், சமையல்காரர் தேவையென்றால் வேலைக்கு ஆள் அனுப்பும் கம்பெனிக்கு போன் செய்தால் ஆள் அனுப்பிவைப்பார்கள். 

ஜீன்பால் ஆரம்பித்துள்ளதும் இதேபோன்ற ஆள் அனுப்பும் கம்பெனி தான். தி நேச்சுரல் கிளினிங் கம்பெனிக்கு நாம் போன் செய்தால் நாம் எந்த பணிக்கு ஆள் கேட்கிறோமே அதற்கான ஆளை தாமதிக்காமல் உடனே அனுப்பிவைப்பார்கள். அந்த ஆள் நம்முன் நிர்வாணமாக வந்து நின்று என்ன வேலை செய்ய வேண்டும் என கேட்பார். என்ன அதிர்ச்சியாகி அந்த மாதிரியாளோ என எண்ண வேண்டாம். 

அவர்கள் வந்தது என்னவோ வேலை செய்யத்தான். ஆனால் என்ன நாம் குறிப்பிடும் வேலையை உடலில் ஒட்டு துணியில்லாமல் நிர்வாணமாக இருந்தபடி செய்து தருவர். (ஏய் ஏய்…….. செல்போனை தேடாதிங்கப்பா இது நம்மவூர்ல இல்லை.).

வேலை நேரத்தில் நிர்வாணமாக இருப்பார்கள். வேலை முடிந்ததும் அவர்களுக்கான கூலியை தந்து அனுப்பிவிட வேண்டும். என்ன நம்மவூரில் ஒரு பொருள் வாங்கினால் பில்லில் சேவை வரி வாங்குவதை போல நிர்வாணமாக பணிச்சேவை செய்வதற்க்கு தனியாக ‘நேக்கட் சர்வீஸ் சார்ஜ்’ வசூலிக்கப்படுகிறது. 

இதுப்பற்றி கம்பெனி தொடங்கியுள்ள ஜீன்பால் கூறும்போது, நான் படிச்சிட்டு வேலை தேடனப்ப வேலை கிடைப்பது ரொம்ப கடினமா இருந்தது. அதனால நாமே ஏன் ஒரு கம்பெனி தொடங்ககூடாதுன்னு முடிவு செய்து தொடங்கப்பட்டது தான் இந்தகம்பெனி. 

இதேமாதிரி நிறைய கம்பெனி இருக்கு நாம ஏதாவது புதுமையா செய்யனம்னு யோசிச்சப்ப வந்த ஐடியா தான் நிர்வாண பணியாளர்கள். எல்லா பணிக்கும் முதல்ல ஆட்களை தேர்வு செய்தப்ப போட்ட முதல் கண்டிஷன் நீங்க செய்ய போறயிடத்தல நிர்வாணமா தான் வேலை பாக்கனும், வாடிக்கையாளர்கள் அரை நிர்வாணமா இருந்து வேலை பாருங்கன்னு சொன்னா அதுக்கு ஏத்தமாதிரி வேலை பாக்கனும்னு சொல்லி தான் வேலைக்கு சேர்த்தன். 

வாடிக்கையாளர்கள் போன் செய்தால் உடனடியாக ஆட்கள் அனுப்பி அவர்கள் கூறும் பணியை செய்துவிட்டு வருவார்கள். வாடிக்கையாளரின் விருப்பப்படி பணியாள் முழு நிர்வாணம் மற்றும் அரை நிர்வாணமாக பணியாற்றுவார்கள். விளம்பரங்கள் மூலம் தகவல் கேள்விப்பட்டு நிறைய வாடிக்கையாளர்கள் போன் செய்கிறார்கள். நாங்களும் சேவை செய்து வருகிறோம். முக்கியமாக விபச்சாரம், செக்ஸ் சேவை போன்றவை செய்வதில்லை என்பது குறிப்பிட தக்கது என்கிறார். 

கவர்மெண்டும் நீ செய்றது சேவைடா கண்ணா என அவரது கம்பெனிக்கு அனுமதி தந்துள்ளது. வாடிக்கையாளர்கள் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு போன் செய்கிறார்களாம். (கொடுத்து வச்ச நாட்டுக்காரனுங்கன்னு படிச்சிட்டு புலம்பறது கேட்குது.)

படங்கள் இருக்கு. போடலாம்னு தான் பாத்தன். என் பிளாக்கை தடை செய்துட்டா . அதனால தான் போடலைங்கோ.............  இருந்தும் பய புள்ள ஒருத்தன் படத்த மட்டும் போடறன் பாருங்கோ.........



இன்னோரு மேட்டர். 

ஜேர்மனியில் 60 ஆண்டுகளாக வெளிவரும் செய்தித்தாள் பில்டு. ஞாயிறு மற்றும் அரசின் விடுமுறை நாட்களில் இவ்வலுவலகம் விடுமுறை விட்டுவிடும் மற்ற நாட்களில் இந்த தினசரி செய்திப்பத்திரிக்கை வெளிவந்துவிடும். 
காலையில் பாத்ரூம் போகிறார்களோ இல்லையோ ஜொள் மன்னர்கள் இந்த பத்திரிக்கைக்காக காத்துக்கிடந்து அப்பத்திரிக்கை வாங்கி முதல் பக்கத்தை பார்த்தபின் தான் கக்காவே போவார்கள். அப்படியென்ன முதல் பக்கத்தில் என்று கேட்கிறிர்களா ?. 

1952ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பத்திரிக்கை, 1980ல் விற்பனை குறைந்து சரிவை சந்தித்தது. உடனே ஆசிரியர் இலாகா கூடி விவாதித்தது. விவாதத்தில், முதல் பக்கத்தில் தினமும் ஒரு நிர்வாண படம் போடுவோம் என ஐடியா தந்தார் ஒரு ஐடியா சிகாமணி. ஆஹா செம ஐடியா என அங்கிகரித்த ஆசிரியர் குழு 1984ல் நடைமுறை படுத்த தொடங்கியது. அது முதல் சினிமா, மாடலிங், சின்னத்திரை, உள்நாடு, வெளிநாட்டு அழகிகளின் நிர்வாண படம் தலைப்பு பக்கத்தில் அலங்கரிக்கும். அது முதல் விற்பனை ஏறுமுகம் தான். 

இதற்கு மகளிர் அமைப்புகள் கடும் விமர்சனம் செய்தது, போராட்டங்கள் நடத்தியது. ஆனால் விற்பனை குறையவேயில்லை. (அந்தளவுக்கு ஜொள் மன்னன்கள். நம்ம நாட்லாயா இருந்தா புக்கிங்கள போகும்.) 

28 ஆண்டுகளாக வெளிவந்த முதல் பக்க தரிசனத்துக்கு வேட்டு வைத்துள்ளனர். மார்ச் மாதம் கூடிய ஆசிரியர்கள் குழு, பெண்கள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு மரியாதை (!) செலுத்தும் விதமாக இனி நாம் நிர்வாண படத்தை முதல் பக்கத்தில் வெளியிடுவதை நிறுத்திவிடுவோம் என்றுள்ளனர். விவாதம் பெரிதாக கடைசியில் முதல் பக்கத்தில் இனி தேவையில்லை அதற்கடுத்த பக்கங்களில் வெளியிடுவோம் இல்லையேல் ஆண்களின் சபலத்துக்கு ஸாரி சாபத்துக்கு ஆளாவோம் என ஒரு ஐடியா சிகாமணி சொல்ல அதை ஏற்றுக்கொண்டு இனி முதல் பக்க தரிசனம் கிடையாது அதற்கடுத்த பக்கங்களில் ஏதாவது ஒன்றில் ‘தரிசனம்’ கிட்டும் என முடிவை அறிவித்துள்ளனர். 

எப்படியெல்லாம் யோசிக்கறாங்க………………




சுகமான சுமைகள்………… பாகம் 22.




நில்லுடா என்றதும் ஓங்கிய கத்தியை தூக்கி பிடித்தபடி நின்றான். பாத்தியா இதான் நட்பு. வெட்டுடான்னதும் என்ன ஏதூன்னு கேட்காம ஓடிவந்தான் பாத்தியா. 

அது ஏன் அவன்கிட்டயில்ல. நான் எதுவாயிருந்தாலும் அவன்கிட்ட சொல்லிடுவன். அவன் சில விஷயத்த சொல்றதில்ல. அத நான் பெருசா எடுத்துக்கல. ஆனா எவ்ளோ பெரிய விஷயத்த மறைச்சியிருக்கான். இவன் விஷயத்த இன்னோருத்தர் சொல்லி தெரிஞ்சிக்கற அளவுக்கு இருக்கு. 

என்னதாண்டா பண்ணான். 

அவனையே கேட்க வேண்டியதானே என்றதும் எல்லோரும் அவன் பக்கம் பார்வையை திருப்பினார்கள். 

நானும் தேவியும் ஒரு வருஷமா லவ் பண்றோம். அத அவன்கிட்டயிருந்து மறைச்சிட்டோம். ஒருநாள் நானும் தேவியும் வெளியில போய்ட்டு வந்தோம். அத ப்ரியா அவன்கிட்ட சொல்லிடுச்சி. அதான் பிரச்சனை. 

டேய் இதெல்லாம் அநியாயமாயில்ல. ஒரு வருஷமா லவ் பண்றத மறைச்சியிருக்கிங்க அப்ப கோபப்படாம கொஞ்சவா செய்வாங்க. 

என்ன இதல இழுத்துவிடாதிங்க. நான் அப்பவே சொல்லிடுன்னு சொன்னன். இவன் தான் கேட்கல என தேவி ஜகா வாங்கினாள். 

நான் என் பர்த்டேக்கு சொல்லலாம்னு நினைச்சியிருந்தன் என ஜான் சொல்ல. 

எத கல்யாணம் நடந்துடுச்சிங்கறதயா என கடுப்புடன் கேட்டதும் சைலண்டானான். 

நான் இனிமே அவனோட பேசறமாதிரியில்ல என்றபடியே பம்ப்செட்டை நோக்கி நடக்க தொடங்கினேன். 

என்னாச்சி ஜான் என ஜீவா கேட்க நடந்ததை சொன்ன ஜான் தப்பு பண்ணிட்டன். மன்னிச்சிடுடாங்கறன் கேட்கமாட்டேன்கிறான். நீயாவது அவன்கிட்ட சொல்லு ஜீவா. 

அவனைப்பத்தி தான் தெரியுமே அப்பறம் எதுக்கு மறைச்ச?. சரி விடு பாத்துக்கலாம். 

அதிருக்கட்டும் அவன் வெட்டுடான்னதும் வெட்ட வந்தியே நியாயமா?.

நான் சைலண்டா நின்னா கோபப்படுவான். அதனால தான்……… அவன் ஊருக்கு வந்தப்பவே உன்னால பிரச்சனைன்னு சொன்னான். என்ன பிரச்சனைன்னு சொல்லல. உனக்கும் அவனுக்கும் பெரிய பிரச்சனையா இருந்த வீட்டுக்குள்ள சேத்துயிருக்கமாட்டான். அதனால பெருசா ஒன்னும்மில்லன்னு தெரிஞ்சிக்கட்டன். அதோட வெட்டுடான்னு சொல்லிட்டு பாத்துக்கிட்டு இருக்கமாட்டான். எப்படியும் நிறுத்த சொல்லுவான்னு தெரியும். 

நீ ஓடிவந்ததும் பயந்தே போயிட்டன் தெரியுமா?. 

அவன் அப்படித்தான். கோபத்தல என்ன பேசறோம், சொல்றோம்னு தெரியாம பேசிடுவான். விடு பாத்துக்கலாம் எப்படியும் உங்கிட்ட பேச 3 மாசமாகும். அதனால அவன் போக்குலயே போ. வீணா பிடிவாதம் பண்ணா அதிகமா கோபமாகிடுவான் சொல்றத சொல்லிட்டன் அப்பறம் உன் இஸ்டம். 

ப்ரியாவை பக்கம் திரும்பி எல்லாம் உன்னால வந்தது என்றான் ஜான். 

ஏய், நீ பொய் சொன்ன நீ அவனை ஏமாத்தறியேன்னு சொல்லிட்டன். நீ நல்ல நண்பனாயிருந்தா அவன்கிட்ட ஆரம்பத்தலயே சொல்லியிருக்கனும். இதே இவ என்கிட்ட நீங்க காதலிக்கறத சொன்னாயில்ல. அந்த மாதிரி நீ சொல்லியிருக்கனும் சொல்லாம விட்டது உன் தப்பு. உங்க மேட்டர் எனக்கு தெரிஞ்சி நான் சொல்லாம இருந்ததை கண்டு புடிச்சியிருந்தா என் நிலைமை அவ்ளோ தான் அதனால தான் சொல்லிட்டன்.

இது எத்தனை நாளைக்கு நிலைக்குதுன்னு நான் பாக்கறன்.

பெரிய வெங்காயம் மாதிரி பேசாத மூடிக்கிட்டு போ என பின்னால் இருந்து கோபமாக ராஜா பேச ஜான் தலையை குனிந்துக்கொண்டான். 

ஜீவா மரத்திலேறி இளநீர் காய்களை தள்ளி ஆளுக்கு இரண்டு என வெட்டி தந்தும் குடிக்க தொடங்கியபோது மச்சான் என அழைத்த அகிலன்னை பார்த்தேன். 

என்னடா என கேட்டும் மவுனமாக இருந்ததை பார்த்துவிட்டு ஜான் பக்கம் திரும்பி முறைத்துவிட்டு நான் அவன்கூட பேச விரும்பல. அவன் பண்ணத மனசு ஏத்துக்கமாட்டேன்குது. அவனைப்பாத்தா எனக்கு கோபம் வரும். அதனால நான் காலேஜ் வரல இதான் என் முடிவு எனச்சொல்லிவிட்டு நடக்க தொடங்கினேன். மற்றவர்களும் பின்னாடியே வந்தனர். 

இதுக்கு போய் நீ காலேஜ் வரமாட்டேன்னு சொல்றது நியாயமேயில்லடா என்றான் ரமேஷ். 

அதை காதில் வாங்கியபடியே நின்றேன். என்ன சொல்லப்போகிறேன் என என்னையே பார்த்தார்கள். 

தேவி பக்கம் திரும்பி நீ மஞ்சுவ பாக்கறயா என்றதும் புன்னகையுடன் சரியென்றால். ஜீவாவை அழைத்து நீ இவுங்கள மஞ்சு வீட்டுக்கு அழைச்சிம் போய்ட்டு அப்பறம் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வா என்றேன். 

யாரு அது என தேவியிடம் ப்ரியா கேட்க தேவி என்னைப்பார்த்தாள். 

எங்களோட பன்னிரெண்டாவது வரை படிச்சாங்க. அதுக்கப்பறம் படிக்கல. தேவிக்கு ரொம்ப நெருக்கம். இதே ஊர் தான். என் ப்ரண்ட் ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இப்ப ஒரு குழந்தையிருக்கு. அவுங்கள பாத்தன். தேவிய நலம் விசாரிச்சாங்க. அதான் போய் பாத்துட்டு வரச்சொல்றன்.

அப்ப நானும் போய்ட்டு வர்றன். 

நீ எதுக்கு?

சும்மா தான் என்றவளை ஆழமாக பார்தேன். 

சரி. எல்லாரையும் கூப்டும் போடா. நான் வீட்டுக்கு போறன். சாப்பாடு ரெடியாகியிருக்கும் சீக்கிரம் வந்துடுங்க எனச்சொல்லிவிட்டு நடந்தேன். 

மஞ்சு வீட்டுக்குள் நுழைந்த தேவி, ஜானை கண்டதும் ஆச்சர்யமாகி வாங்க வாங்க என எல்லோரையும் அழைத்த மஞ்சு தேவியை கட்டிப்பிடித்துக்கொண்டாள். 

தரையில் கம்பளியை விரித்து எல்லோரையும் உட்கார சொன்ன மஞ்சுவுக்கு மற்றவர்களை அறிமுகப்படுத்தினாள் தேவி. 

உனக்கு குழந்தையிருக்குன்னு சொன்னாங்க எங்க என ஆர்வமாக தேவி கேட்க குழந்தையை கொண்டு வந்து தந்த மஞ்சு எல்லோருக்கும் தண்ணி கொண்டு வந்து தந்தாள். 

தேவியும், ப்ரியாவும் குழந்தையை கொஞ்ச தொடங்கினார்கள். தேவி மஞ்சுவை பார்த்து என்னடீ எப்படியிருக்கற. ஆள் அடையாளம் தெரியாத மாதிரி மாறிட்ட. கல்யாணம்மான எங்களை மறக்கச்சொல்லுதா என கோவித்துக்கொள்ள.

இங்க வேலை சரியா இருக்கு. அதான் பேச முடியல. 

எங்க உன் வீட்டுக்காரர். 

இப்ப வந்துடுவாரு என மஞ்சு பதில் சொல்லும்போதே மாட்டை ஓட்டிவந்த முத்து தோட்டத்தில் கட்டிவிட்டு கை-கால்களை கழுவிக்கொண்டு வீட்டுக்குள் வந்தவன் வாங்க என புன்னகையுடன் அழைத்தவனிடம் இவுங்கயெல்லாம் ராஜா கூட காலேஜ் படிக்கறவங்க. அவன் வீட்டுக்கு வந்துயிருக்காங்க. ஜானும், தேவியும் மஞ்சுவோட படிச்சவங்களாம் அதான் பாத்துட்டு போக வந்துயிருக்காங்க என்றான் ஜீவா. 

அப்படியா சந்தோஷம்ங்க. உள்ளுர்காரன் அவன்தான் கல்யாணத்துக்கு வரல. நீங்க ஞாபகம் வச்சிக்கிட்டு வந்து பாக்கறிங்களே சந்தோஷமாயிருக்கு. நீங்கயெல்லாம் சாப்டுட்டு தான் போகனும். 

அய்யோ இல்ல பதறி மறுத்த தேவி. அவுங்க வீட்ல சாப்பாடு ரெடி செய்துயிருப்பாங்க. சாப்பாடாம போனா பிரச்சனை இன்னும் பெருசாகிடும் என்றாள். 

என்ன பிரச்சனை என தெரியாததால் முத்துவும் மஞ்சுவும் குழம்பியதை கண்டு ஜீவா தான் நடந்ததை சொன்னதும் 

லூசாடா அவன். எதுக்காக இப்ப முரண்டு புடிக்கறான். அவுங்கப்பன் என் பையன் காலேஜ் படிக்கறான்னு பெருமையா சொல்லிக்கிட்டு கிடக்கறாரு. நம்ம கூட இருக்கறவன் பெருசா படிக்கறான்னு சந்தோஷப்பட்டா அதல மண்ணள்ளி போடறானேடா. இந்த பிரச்சனைக்கெல்லாம் போய் எவனாவது காலேஜ் போகமாட்டன்னு சொல்லுவானாடா?. கேனப்பையன் என திட்டினான் முத்து. 

சும்மா திட்டாதிங்க. இவன் பண்ணது மட்டும் சரியா?  என கோபமாக ப்ரியா கேட்க முத்து அதிர்ந்து போக அவன் காலேஜ் வருவான் நான் பாத்துக்கறன் என்றவள் நாங்க கிளம்பறோம் என சடாரென எழுந்தாள். 

அவனை திட்டனா இவளுக்கு ஏன் தான் இப்படி கோபம் வருதுன்னு தெரியல என மனதுக்குள் எண்ணியபடி ஏய் உட்காருடீ என ப்ரியாவை இழுத்து உட்கார வைத்த தேவி. பிரச்சனைய முடிச்சி வைக்க வழி சொல்லுடீன்னா நீயும் கோபப்படற?. 

நீங்க மட்டும் திட்டளாமா?. 

ஏம்ம இனிமே யாரும் அவனை திட்டல போதும்மா என மஞ்சு கெஞ்ச முகத்தை அப்போதும் உர்ரென வைத்துக்கொண்டிருந்தவளையே பார்த்துக்கொண்டிருந்தாள் மஞ்சு.

அப்போது வீட்டுக்குள் ஓடி வந்த ஒருப்பெண் ராஜாண்ணன் அம்மா உங்களை வரச்சொன்னாங்க எனச்சொல்லிவிட்டு ஓடினாள். 

சரிங்க நாங்க கிளம்பறோம் என அனைவரும் எழ அடுத்த முறை வரும்போது அவசியம் எங்க வீட்ல சாப்பிடற மாதிரி வரனும் என்றான் முத்து. 

வெளியே வரும்போது தேவியிடம் கலகலப்பாக பேசிக்கொண்டு வந்த மஞ்சுவிடம் அடிக்கடி போன் பண்ணுடீ என போன் நம்பரை தந்தாள். வாங்கியபடியே ப்ரியாவிடம் பெஸ்ட் ஆப் லக் என கைதந்தவள் புன்னகையோடு வழி அனுப்பிவைத்தாள். 

வீட்டுக்கு வந்தவர்களுக்கு சாப்பாடு பறிமாறப்பட ப்ரியா உதவி செய்ததோடு கடைசியாக சாப்பிட்டாள். சாப்பிட்டு முடித்தபின் முடிவச்சொல்லுடா என ரமேஷ் தான் ஆரம்பித்தான். 

நான் வர்றன் ஆனா அவன்கிட்ட பேசமாட்டன். அவனும் என்கிட்ட பேசக்கூடாது. அவனுக்கும் எனக்கும் இனி எந்த தொடர்பும் கிடையாது இதுக்கு சம்மதம்னா வர்றன் இல்லன்னா வரமாட்டன். 

எல்லோரும் அதிர்ச்சியாகி என்னடா இப்படி சொல்ற. 

அவன் மேல வச்சியிருந்த நம்பிக்கை போய்டுச்சி அதனால இந்த முடிவு. 

ஜான் கண் கலங்கியபடியே அவன் சொல்றத நான் ஒத்துக்கறன் எனச்சொல்லிவிட்டு எழுந்தான். மற்றவர்கள் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் முழித்தனர். 

நீ பண்றது ரொம்ப ஓவர்ன்னு நினைக்கறன் என்றான் அகிலன். 

உங்க எல்லாரையும் விட அதிகமான நம்பிக்கை அவன் மேல வச்சியிருந்தன். அது பொய்யாகிடுச்சி. உனக்கு ரொம்ப நம்பகமான நண்பர்கள் அந்த மாதிரி பண்ணா அப்பத்தெரியும்டா அந்த வலி. என் வலிய உங்களாள உணர முடியாது. 

நான் பேசுவதை கேட்டு அமைதியாக இருக்க நான் நாளைக்கு காலேஜ்க்கு நிச்சயமா வர்றன் இப்ப கிளம்புங்க. இருட்டிட போகுது என்றேன். கிளம்பினார்கள். ஜான் தான் கண்ணீல் நீரோடு போனான். 

இந்த மூன்று மாதத்தில் வகுப்பில், காலேஜ் புங்கமரம், நண்பர்கள் இருக்கும் இடத்தில் அவன் என்னிடம் பேச முயற்சி செய்யும் போதுயெல்லாம் தவிர்த்துக்கொண்டே வந்தேன். காலேஜ் முழுவதும்மே இவனுங்களா பேசிக்கமாட்டேன்கிறானுங்க என ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். தேவி மட்டும் பேசுவாள். ப்ரியா கூட ஒருமுறை நீ அவனை ரொம்ப தண்டிக்கறன்னு நினைக்கறன் என பரிந்து பேச இதல நீ தலையிடாத என சடரென சொல்ல அவள் கூட இரண்டு நாள் பேசாமள் இருந்தாள். 

இப்பயெல்லாம் சரியாவே பேசறதில்ல, எப்ப பாத்தாலும் உம்முன்னு இருக்கான். படத்துக்கு கூப்டும் போலான்னாலும் வர்ற மாட்டேன்கிறான் நீ அவன்கிட்ட பேசிடேன் என தேவியும் பாவமாக தூது வர ஆரம்பித்தாள். ஆனால் மனம்மோ வேண்டாம் என்றது. 

புங்கமரத்தடியில் உட்கார்ந்து ப்ரியாவிடம் பேசும்போது தான் ஏய் சொல்ல மறந்துட்டன் இன்னைக்கு அவளை பாத்தன் தெரியுமா?. என்னமா சைக்கிள் ஓட்டறா, எப்ப பாத்தாலும் அந்த ஒத்த சடையே போடறா, முடி குட்டையா இருந்தாலும் அவளுக்கு எவ்ளோ அழகு தெரியுமா? 

யாரு ?. 

அதாம்ப்பா அந்த ஒயிட் சுடிதார். 

ப்ரியா முறைத்தபடியே அவ பேர் தெரியாது, ஊர் தெரியாது, பேசனது கிடையாது எப்ப பாத்தாலும் அவளைப்பத்தியே பேசிக்கிட்டு இருக்கியே வெட்கமாயில்ல. 

இதலயென்ன வெட்கம். இன்னோன்னு தெரியுமா அவ பேர் வேண்ணா தெரியாம இருக்கலாம், பேசாமயிருக்கலாம். ஆனா எங்களுக்குள்ள ஏதோ ஒன்னு ஓடுது அதனால தான் அவ அடிக்கடி என் கண்ணுல படறா. 

அப்படியா பிச்சைக்காரியக்கூட தான் தினமும் பாக்கற அப்ப உங்களுக்குள்ள ஏதாவது ஓடுதா?. 

ஏன்னடா உன்னைப்போய் பிச்சைக்காரி அதுயிதுன்னு என்றதும் நான் உனக்கு பிச்சைக்காரி மாதிரி தெரியறனா என ஒங்கி தோல் பட்டையில் சிணுங்கியபடியே குத்த மச்சான் என அழைத்தபடி ஓடிவந்தான் அகிலன். 

என்ன இப்ப தலைபோற அவசரம் எதுக்கு கத்திக்கிட்டு ஓடி வர்ற என கேட்டதும் 

ஜான், ஜான் என மூச்சுவாங்கினான்.

தொடரும்……………

வியாழன், மார்ச் 15, 2012

வரலாறுகள் மாறும். நிச்சயம் தண்டனையுண்டு.



நெஞ்சம் இன்னமும் துடிக்கிறது அய்யோ இருக்கக்கூடாதே என்று. பாலகன். நீண்ட காலத்திற்கு பின் பிறந்த கடைக்குட்டி. கடைக்குட்டி என்றால் குடும்பத்தில் மட்டுமல்ல வெளியிலும் அவ்வளவு பாசம் கிட்டும். 

அமுல் பேபியாய் தந்தையின் பாசம் அவ்வளவாக கிடைக்காமல் தாயின் அரவணைப்பில் பிறந்த மண்ணை விட்டு நாடு நாடாக சுற்றி கடைசியில் தன் தாய் மண்ணில் வந்திருந்தபோது தான் அந்த பாலகன் ஈவு இறக்கமற்ற கொடூரமான இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டதாக காட்டப்படும் அந்த புகைப்படத்தையும், வீடியோவையும் காணும் போது நெஞ்சம் பதறுகிறது. அவன் மட்டுமல்ல, அவனைப்போல எத்தனை எத்தனை சிறுவர்கள், மக்கள் மீது ஏவுகனையையும், கொத்து குண்டுகளையும் வீசி கொன்றுள்ளனர். 

ஈழப்போரின் வரலாறு தெரியாத பாலகன் பாலசந்திரன். தன் மக்கள் படும் துன்பங்கள் அவ்வளவாக அறியாதவன். துப்பாக்கிக்கும் அவனுக்கும் அவனைப்போன்ற சிறார்களுக்கும் என்ன சம்மந்தம்?. இந்த உலகில் அவன் விடுதலைப்புலிகள் தலைவரின் மகன் என்ற ஒன்றே அவனை கொன்றுள்ளது. இவனைப்போல் எத்தனை எத்தனை பிள்ளைகள் கொல்லப்பட்டுயிருந்தாலும் இவன் கொல்லப்பட்டது கொடூரத்திலும் கொடூரம். கோடூரத்தின் உச்சம். 

அவனுடன் இருந்த பாதுகாவலர்களை அவன் கண் முன்னால் நிர்வாணமாக்கி, கைகள் பின்னால் கட்டப்பட்டு அதன்பின்பே சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்கள். அவன் கண் முன் நடந்த இந்த கொடூரத்தை செய்வர்கள் நிச்சயமாக மனிதர்களாக இருக்கமாட்டார்கள். மனித தன்மையே அற்ற மிருகமாக தான் இருப்பார்கள். இவர்கள் மட்டுமல்ல இதற்கான உத்தரவை போட்ட தலைமைகள் அது இராஜபக்சேவாகட்டும், இந்தியவின் சோனியாகாந்தியாகட்டும் நினைவில் கொள்ளுங்கள் உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கின்றன. 

மரணத்தை சில மணி நேரத்திற்க்கு முன்பே தன் கண் முன்னால் அந்த பாலகனுக்கு கொடூரமான முறையில் மரண பயத்தை காட்டி துடிக்க துடிக்க கொன்றுள்ளீர்கள். மரணம் வரப்போகிறது என அறிந்துள்ளான். இருந்தும் அவன் முகத்தில் சிறு சலனமும் இல்லை. உறங்குவது போலவே இருக்கிறான். அந்த பாலகன் உடலில் ஐந்துக்கும் மேற்பட்ட தோட்டாக்களின் வடுக்கள். எறும்பு கடித்தாலே தாங்காத பாலகனை துப்பாக்கி தோட்டா மூலம் கொன்றுள்ளனர். 

வாழ உரிமை கேட்ட மக்கள் மீது இராணுவம் வீசிய கொத்து குண்டுகள், ஏவுகணைகள் விழுந்து சொரணையும், விலியும் கொண்ட உடலை சின்னாபின்னமாக்கி உயிருக்கு போராடவைத்துள்ளார்கள். சிக்கிய தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து நிர்வாணமாக்கி கொலை செய்து இறந்த அந்த உடல்களை காட்சி பொருளாக்கி ரசித்த ஜென்மங்கள் மனித தன்மைக்கு அப்பார்பட்டவர்கள். 


வரலாறுகள் மாறும், எழுதி வைத்துக்கொள்ளுங்கள் வரலாறு மாறும். இன்று உன் கையில் உள்ள அதிகாரம் நாளை மாறும் அன்று இந்த படுபாதகத்துக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் நம்புகிறோம். நிச்சயம் தண்டனை கிடைக்கும். 

திங்கள், மார்ச் 12, 2012

போலிஸ் ஜெராக்ஸ் போடும் கதைகள்.



குனிய வச்சி குத்தனாலும் திருந்த மாட்டாங்க போல இந்த காவல்துறையினர். சென்னையில் 5 பேரை சுட்டுக்கொன்று ரத்த சுவடுக்கூட கண்ணை விட்டு மறையவில்லை. அதற்குள் திண்டுக்கல் விடுதி ஒன்றில் பிரபல ரவுடி வரிச்சூர்செல்வத்தை பிடிக்க போனயிடத்தில் அவனது கூட்டாளியை சுட்டுக்கொன்றுள்ளது. 

தாக்கிவிட்டு தப்பி ஓட பார்த்தான்களாம் அதனால் சுட்டுக்கொன்றோம் என கதை சொல்கிறார்கள். என்னய்யா கதையிது?. தமிழ் சினிமாவுலயே ஒரே மாதிரி கதை கொண்ட படம் வந்தா தூக்கி கடாசப்படுது. நீங்க பல வருஷமா ஒரே கதையை ஜெராக்ஸ் போட்டு பெயரை மட்டும் மாத்தி மாத்தி சொன்னா எப்படியா நம்புவாங்க. 

கதையை மாத்துங்க இல்ல. படம் எடுக்கறதயே அதாவது சுட்டுக்கொல்றதுங்கறதையே விட்டு தள்ளுங்க. சும்மா அரைச்ச மாவையே திரும்ப திரும்ப அரைச்சி பேஜார் பண்ணாதிங்க. ரத்தம் கொதிக்குது. 

இப்படியே போனால் சட்டத்தை மக்கள் கையில் எடுக்கும் நாள் வந்துவிடும். பின் தற்போது சட்டத்தை காரணம் காட்டி சுடுபவர்கள் அவர்களால் சுட்டுதள்ளப்படும் நிலை வந்துவிடும். ஜாக்கிரதை. 


வெள்ளி, மார்ச் 09, 2012

சுகமான சுமைகள்………… பாகம் 21.




க்ளாஸ்குள் நுழைந்ததும் நேத்து நீ எங்கடா போயிருந்த என ஜானை பாத்து கேட்டதும். 

அதான் சொன்னேனே. 

பொய் சொல்லாத. 

என்னத்த பொய் சொல்றாங்க என சிடுசிடுத்தான். 

உங்கப்பா என்ன வேலை வச்சாரு?.

எங்க மாமா பணம் தரனும் அதப்போய் வாங்கிவான்னாரு. அதுக்காக ஊருக்கு போனன். 

ஒழுங்கா உண்மையை சொல்லு. 

ஏய். அதான் உண்மை.  

நேத்து நீ அமிர்திக்கு காலையில போய் சாயந்தரம் தான் வந்துயிருக்க என்றதும் அதிர்ந்து போனவனை பார்த்து நீ யார்கூட போனன்னு சொல்லட்டுமா?. நம்பிக்கை துரோகி என கத்தியதும் ரமேஷ், அகிலன், தயா உட்பட வகுப்பை அமைதியாக எங்களை கேள்விக்குறியோடு பார்த்தது. விருட்டென வகுப்பை விட்டு எழுந்து வந்துவிட்டேன். 

ரூம்கு வந்தும் மனம் ஆறவில்லை. அவன்மேல எவ்ளோ நம்பிக்கை வச்சியிருந்தன். நாய் எல்லாத்தையும் சுக்கு நூறா உடைச்சிட்டான். என்னை நல்லா புரிஞ்சவன்னு நினைச்சன். என்கிட்டயே எவ்ளோ பெரிய விஷயத்தை மறைச்சியிருக்கான். இது எனக்கு தெரியாதுன்னு சொன்னா எவனாவது நம்புவானா?. அவன் சொல்லலன்னு சொன்னா எங்க நட்ப பத்தி என்ன நினைப்பாங்க. அவன் தான் பெஸ்ட் ப்ரண்ட்னு சொன்ன அவனே இப்படி பண்ணியிருக்கானேன்னு கேள்வி கேட்டா என்னச்சொல்றது. எல்லாமே நம்ம தப்பு. எல்லாரையும் நாம தான் நம்பறோம் போல. எவ்ளோ முட்டாளாக்கியிருக்கான். 

நாம அவனுக்கு நம்பகமான நண்பனா இல்லைங்கறதால தானே இத சொல்லல. அவனுக்கு நாம நம்பிக்கையான நண்பன் கிடையாது. தப்பு பண்ணிட்டன்டா. பக்கபலமா இருப்பான்னு நம்பறவனே இப்படி இருக்கான்னா மத்தவங்க. நண்பர்களுக்கு எதுவுமே தெரியாம இருக்காதுன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி நினைச்சியிருந்தா நம்மக்கிட்ட மறைச்சியிருப்பானா?. மனம் கொதிக்க ஆரம்பித்தது. 

ரூமில் இருந்த பேக்கை எடுத்து துணியை எடுத்து வைத்துக்கொண்டு ஊருக்கு கிளம்பிவிட்டேன். வீட்டுக்குள் நுழையும்போதே என்னடா திடீர்ன்னு வந்துட்ட என அம்மா கேட்க. ஸ்ட்ரைக்மா அதான் என சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திருக்கறன் என ரூமில் போய் படுத்தேன். தூக்கம் வரவில்லை. இப்படி மறைச்சி துரோகம் பண்ணுவான்னு நினைக்கவேயில்லை. என் புத்திய செருப்பால அடிக்கனும். நம்பனது உன் தப்பு. நண்பர்கள்ள ஒளிவு மறைவு இருக்ககூடாதுன்னு தானே சொல்றாங்க. அப்படியிருக்க இவன் மட்டும் மறைக்கறான்னா நாம அவனுக்கு உண்மையா இல்லைன்னு தானே அர்த்தம். நாம அவனுக்கு உண்மையா இல்லாதப்ப நாம விளகி நிக்கறது தான் நல்லது. இனிமே நல்லது கெட்டத அவனே பாத்துக்கட்டும். அவன் தொடர்பே இனிமே கிடையாது. இன்னையோட இரண்டு பேருக்கும் இடையில எதுவுமேயில்ல, எல்லாமே முறிஞ்சிடுச்சி. இனிமே அவன் யாரோ நான் யாரோ என முடிவெடுத்தபடி ரூமை விட்டு வெளியே வந்தேன். 

அக்கறையாக விசாரித்த அம்மாவிடமும், அப்பாவிடமும் பேசிவிட்டு ஊருக்குள் நடக்க தொடங்கினேன். அவன் ஏற்படுத்திய காயம் மனதில் வலிக்க ஆரம்பித்துயிருந்தது. 

அப்போது தான் மஞ்சுவை கண்டேன். தண்ணி குடத்துடன் நடந்து வந்துக்கொண்டிருந்தாள். இரண்டு ஆண்டுக்கு பின் அவளை பார்க்கிறேன். ஊருக்கு லீவுக்கு வந்தபோது கூட அவள் கண்ணில் தட்டுப்படவில்லை. இப்போது தான் காண முடிந்தது. கொஞ்சம் சதை போட்டுயிருந்தாள். குழந்தை பக்குவம் போய் தாய்மை பக்குத்தில் இருந்தாள். 

என்னை கண்டதும் ஒரு நிமிடம் அவள் முகத்தில் ஒரு சந்தோஷத்தை பார்க்க முடிந்தது. பின் தலையை குனிந்துக்கொண்டு வந்தவளை அருகே வந்ததும் எப்படி இருக்க என நான் கேட்க பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடினாள். 

நல்லா இருக்கன். 

நீ ?.

ம். எங்க உன் வீட்டுக்காரன். 

வீட்ல. 

வேப்பமரத்தாண்ட நான் வரச்சொன்னன்னு சொல்லு. 

ம் என சொல்லிவிட்டு நடந்தாள். 

வேப்பமரத்தின் கீழ் யாரும்மில்லை. ஜான் விவகாரமே மனதில் ஓடியது. 

என்னடா படிச்சவனே. திடீர்னு ஊருக்கு வந்துயிருக்கற. 

ஒன்னும்மில்லடா. சும்மா தான் வந்தன். நீ எப்படிடா இருக்கற ?. எங்க பசங்கள காணோம்.

வேலைக்கு போனாதாண்டா சோறு. பசங்க வேலைக்கு போயிருக்கானுங்க. 3 மணியாகிடுச்சி வந்துடுவானுங்க. 

நீ போகலயா?.

மஞ்சுவோட அக்காவை பக்கத்தல திமிறியில இருக்கு. அதப்போய் பாத்துட்டு கொஞ்ச நேரத்துக்கு முன்னதான் வந்தோம். நீ வரச்சொன்னன்னு மஞ்சு வந்து சொல்லுச்சி அப்படியே வந்தன். 

குடும்பஸ்தனாயிட்ட வாழ்க்கை எப்படிடா போகுது. 

பிரச்சனையில்ல மச்சான். குடும்பம் நல்லா நடக்குது. 

எத்தனை பசங்க?

ஒரு பையன். ராசுன்னு பேரு. கல்யாணத்துக்கு தான் வரல. இப்பவாவுது வீட்டுக்கு வாயேண்டா?. 

பசங்க வரட்டும். எல்லாரும் போலாம். அவனுங்க என்ன துபாய்ல இருந்தா வர்றானுங்க. வாடா என்றான். 

கொஞ்சம் யோசித்துவிட்டு சரி வா போலாம் என கிளம்பினோம். முத்துவின் பெரிய ஓட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் தோட்டத்து பக்கம்மிருந்து வீட்டுக்குள் வந்த என்னை ஆச்சர்யமாக பார்த்துவிட்டு வாங்க என மரியாதையாக அழைத்துவிட்டு தண்ணி கொண்டு வந்து தந்தது.  தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை முத்து தூக்கி வர குழந்தை முழித்துக்கொண்டு சினுங்கியது. அழுவாதடா கண்ணா இங்க பாரு ஒரு புது மாமா வீட்டுக்கு வந்திருக்காரு பாரு, ஏன் என்னை வந்து பாக்கலன்னு கேளு என்றபடி என் கையில் தந்தான். 

கையில் வாங்கி டேய் குட்டி இங்கப்பாரு, இங்கப்பாரு அங்கிள பாரு என்றதும் பொக்கை வாய் கொண்டு சிரிக்க தொடங்கியது. 

சாப்பிடறியாடா?

வீட்ல சாப்டுட்டு தான் வந்தன். இன்னோரு நாள் சாப்பிடறன் என குழந்தையுடன் விளையாடியபடி பார்மாலிட்டிக்காக மஞ்சுவிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு வா பசங்க வந்துயிருப்பானுங்க போலாம் என கிளம்பினேன். உனக்கு அடுத்த முறை வரும்போது மாமா கார் பொம்மை வாங்கி வர்றன் எனச்சொல்லிவிட்டு குழந்தையை மஞ்சுவிடம் தந்துவிட்டு கிளம்பறேங்க எனச்சொல்லிவிட்டு கிளம்பினோம். 

வரும்போது உன் முகமே சரியில்ல. என்ன நடந்தாலும் நல்லதுக்குன்னு நினைச்சிக்க. மனச போட்டு குழப்பிக்காத. ஏதோ எனக்கு தெரிஞ்சத சொல்றன் என்றவனை உத்து பாத்துவிட்டு கல்யாணம் ஆனதும் ரொம்ப மாறிட்டடா. 

கல்யாணம் ஆன எல்லாரும் மாறுவான்டா நடடா. ஜீவாவும், ஏழுமலையும் வேப்பமரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தனர். எங்களை கண்டதும் வாடா நீ எப்ப ஊருக்கு வந்த. இவன் கூட எங்க சுத்திக்கிட்டுயிருக்கற. 

மதியமே வந்துட்டன். இவனை வரச்சொன்னன். வந்தான். நீங்க ஆள்யில்ல. இவன் வீட்டுக்கு வாடான்னான். கல்யாணத்துக்கே வரல. இப்பவும் போகலன்னா நல்லாயிருக்காதுன்னு தான் போய் குழந்தைய பாத்துட்டு வந்தன். சரி நீங்க எப்படிடா இருக்கிங்க?. 

நல்லாயிருக்கறோம். அதிருக்கட்டும் நீ என்ன நல்லது, கெட்டதுக்கே ஊர் பக்கம் வர்றமாட்டேன்கிற. என்ன ஏதாவது குட்டிய மடக்கிட்டியா என ஜீவா கொக்கி போட்டான். 

அதெல்லாம் ஒன்னும்மில்லாடா. வந்தா தங்க முடியாது அதான் வர்றதில்ல என்றபடி ஊர் கதைகளை பேச தொடங்கினோம். இருட்ட தொடங்கியதும் வீட்டுக்கு கிளம்பறன்டா என்றதும். 

மாப்ள இன்னும் இரண்டு மாசத்தல ஏழுமலைக்கு கல்யாணம். ஞாபக படுத்துறோம் வந்துடு என்றான் ஜீவா. 

எந்த ஊர்டா பொண்ணு. 

அதையேன் கேட்க. பக்கத்து ஊர் தான். சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போனயிடத்தல நைட் ஒரு பொண்ண பாத்து ஜாடையா பேசியிருக்கான். அது அவுங்க அண்ணன்கிட்ட போட்டு கொடுத்துடுச்சி. அவன் வந்து இவனை கல்யாண வீட்டுக்கு பின்னாடி கூப்டும் போய் செம மாத்து மாத்தியிருக்கான். இதப்பாத்த அந்த பொண்ணு அய்யோ பாவம்னு பரிதாபப்பட்டு மன்னிச்சிடுங்க இப்படியெல்லாம் நடக்கும்னு எனக்கு தெரியாதுன்னு ஐஸ் வச்சியிருக்கு. இவுரு உடனே உனக்காக இன்னும் எவ்ளோ வேணும்னாலும் அடிவாங்குவன்னு பில்டப் தந்ததுல இரண்டு பேரும் செட்டாகிட்டாங்க. இப்ப கல்யாணத்தல வந்து நிக்குது என ஜீவா கூற அதைக்கேட்டு அசடு வழிந்தான். 

தேதி சொல்லு வந்துடறன். 

அப்படியே ஜான்கிட்ட சொல்லி கூப்டுவாடா என்றான் ஏழுமலை. அப்போது என் முகம் இறுகுவதை கண்டு என்னடாச்சி. 

அவன்கிட்ட பேச புடிக்காம தான் ஊருக்கே வந்தன். 

என்னடா பண்ணான். 

அப்பறம் சொல்றன் என வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு படுத்தேன். இரவும் ஜான் மீதான கோபம் குறையவில்லை. அவன் பண்ணியதை நினைத்தபோது எரிச்சலாக இருந்தது. 

காலை எழுந்திருக்கும்போதே போன் மணியடித்தது. அம்மா தான் எடுத்து இங்கதான் இருக்கான்பா என்றார். நல்லாயிருக்கியாப்பா என கேட்டுவிட்டு போனை வைத்தவர் என்னடா பிரச்சனை. 

போன்ல யாரு?

ஜான் பேசனான். 

அதற்கு மேல் எதையும் கேட்காமல் அமைதியாக எழுந்து ஏரிக்கரையை நோக்கி நடந்தேன். இப்படியே ஒருவாரம் போனது. ஒருநாள் நிலத்தில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த என்னை ஓடிவந்த ஒரு சிறுமி உன்ன பாக்க நிறைய பசங்க வந்துயிருக்காங்க. அத்தை உன்னை சீக்கிரம் வரச்சொல்லுச்சி எனச்சொல்லிவிட்டு திரும்பி ஓடினாள். 

யாராயிருக்கும் என யோசித்தபடி வீட்டிக்கு வந்தபோது ஜான், ரமேஷ், அகிலன், தேவி பாயில் உட்கார்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர். என்னை பார்ததும் சைலண்டானவர்களை எல்லாருக்கும் வந்தனம். வாங்க. எப்படி இருக்கிங்க என புன்னகையுடன் கேட்டுவிட்டு கழனியில் இருந்து பறித்து வந்த கத்தரிக்காயை வைப்பதற்காக சமையல் கட்டுக்குள் போனபோது ப்ரியா அம்மாவிடம் பேசிக்கொண்டே காபி போட்டுக்கொண்டிருந்தாள். 

வாடா உன்ன விட உன் கூட படிக்கறவங்க நல்லவங்களா இருக்காங்க. பாரு இந்த பொண்ண வீட்டுக்கு வந்ததும் நான் தனியா காபி போடறன்னு எழுந்துவந்து உதவி பண்ணுது நீயும் இருக்கியே. எப்பவாவுது இந்தமாதிரி செய்துயிருப்பியா என கேட்கும்போது லுங்கியில் கட்டி எடுத்து வந்த கத்தரிக்காயை கொட்டியதும். 

அதை பாத்துவிட்டு இத பாத்து ஏமாந்தடாதம்மா. அவனுக்கு கத்திரிக்கா கொழம்பு காரமா செய்தா புடிக்கும். அதனால தான் அக்கறையா பறிச்சி எடுத்து வந்துயிருக்கான். 

என்ன குத்தம் சொல்லலனா உனக்கு தூக்கம் வராதே. 

உங்கப்பா எங்க?.

மோட்டர் போட்டுட்டு வர்றன்னாரு எனச்சொல்லி சமையல் கட்டில் இருந்து வெளியே வர ப்ரியா காபி தட்டுடன் பின்னால் வந்தாள். நீ எதுக்கு இதெல்லாம் செய்துக்கிட்டு.

வாயை மூடிக்கிட்டு இரு. 

காபி சாப்பிட ஆரம்பிக்கவும் யாருப்பா இவுங்கயெல்லாம் என்றபடி உள்ளே வந்தார். காலேஜ்ல எல்லாரும் ஒன்னா படிக்கறோம் என அறிமுகப்படுத்தியதும் ஜானை பாத்து எப்படிப்பா இருக்கற?. 

நல்லாயிருக்கறன்பா. 

நல்லா படிக்கறாப்பளயா என கேட்கும் போதே கரண்ட் கட்டானது. 

இவனுங்க தொல்லை எப்ப தீரும்னே தெரியல என சலித்துக்கொண்டவர் நம்ம கண்ணயனை ஆஸ்பத்திரியில சேர்த்துயிருக்காங்க நான் போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடறன். ஒரு மணிக்கு கரண்ட் வந்துடும். நீ போய் மோட்டர் மட்டும் போட்டுட்டு வந்துடு. போறியா?. 

ம் என்றதும். 

தண்ணீ ஆறுது பாருங்க வந்து குளிங்க என அம்மா உள்ளிருந்து குரல் கொடுத்ததும். 

இவன்கிட்ட வேலை வச்சா அவளுக்கு வேக்குது முனகியபடியே இதே வர்றன் என்றபடியே உள்ளே சென்றார். 

எதுக்கு காலேஜ்கு வராம ஊருக்கு வந்த என அகிலன் தான் ஆரம்பித்தான். 

புடிக்கல வரல. 

படிக்கறது புடிக்கலயா இல்ல எங்களையே புடிக்கலயா என்றான் ரமேஷ். 

மவுனமாக இருந்ததும். 

நீ வந்தது பிரச்சனையில்ல. யார்கிட்டயும் சொல்லாம எதுக்காக வந்த, என்ன பிரச்சனை?.

அம்மா பாக்கனும்னாங்க வந்துட்டன். 

அதுக்கு எதுக்கு சொல்லிக்காம கொள்ளிக்காம ஓடி வந்த என அகிலன் கேள்வி எழுப்ப. 

நான் போய் மோட்டர் போட்டுட்டு வர்றன். நீங்க பேசிக்கிட்டு இருங்கடா என்றதும். இரு நாங்களும் வர்றோம் என்றபடி எழுந்தார்கள். 

தூரமா போகனும். 

பரவாயில்ல என்றவர்களை ஒருமுறை பார்த்துவிட்டு சமையல்கட்டுக்கு சென்று எல்லாரையும் நிலத்துக்கு அழைச்சி போய்டு வர்றன். நீ எல்லாருக்கும் மதியம் சாப்பாடு செய்மா?. நான் ஜீவாவ அனுப்பறன். உளுந்துவடையும், சிக்கனும் செய்மா எனச்சொல்லிவிட்டு வெளியே வந்து அவர்களை அழைத்துக்கொண்டு கிளம்பினேன். 


வழியில் தெண்பட்டவர்கள் சிலர் யாருப்பா இவுங்க என கேட்க பதில் சொல்லிக்கொண்டு நடந்தேன். ஜீவா வீட்டருகே வந்ததும் குரல் கொடுத்ததும் ஏண்டா கத்தற என்றபடி வெளியே வந்தான். என்னுடன் இருந்தவர்களை பார்த்தும் முழித்தவன் ஜானை பார்த்து புன்னகைத்தவனிடம் வீட்டுக்கு போ அம்மா ஏதாவது சொன்னாங்கன்னா செய்துட்டு சீக்கிரம் எங்க பம்பு செட்டாண்ட வந்துடு. சீக்கிரம் வாடா என்றதும் சரிடா என்றவன் கதவை சாத்திவிட்டு கிளம்பினான். 

வரப்பில் நடந்தபோது, அந்த தென்னந்தோப்பு, நெல் வயல் எல்லாம் எங்கள்துதான். கரண்ட் பிரச்சனையால பாதி நிலத்துக்கு மேல பயிர் வைக்கல என்றபடியே நடக்க பலயிடங்களில் ப்ரியா தடுமாற ஆரம்பித்தாள். அவள் கையை பிடித்துக்கொண்டு வரப்பில் நடப்பது எப்படி என கத்து தந்தேன். 

தென்னந்தோப்புக்கு வந்ததும் நிழலாக பார்த்து உட்காரச்சொல்லி அமர்ந்தேன். 

இப்பவாவுது சொல்லுடா எதுக்கு சொல்லிக்காம வந்த என ரமேஷ் ஆரம்பித்தான். 

நம்பிக்கை துரோகத்த ஏத்துக்க முடியல அதனாலதான் வந்தன். 

உங்களுக்குள்ள என்ன பிரச்சனைடா என கேட்டான் அகிலன்.

எங்கிட்ட என்ன மயிருக்கு கேட்கறிங்க. அதே உட்காந்துயிருக்கானே ஜானை கைகாட்டி அவன்கிட்ட கேளுங்க. தப்பு பண்ணது அவன். என்கிட்ட வந்து கேள்வி கேட்கறிங்க. 

அவன் எதுவும் சொல்லலடா ?. 

சொல்லலயில்ல. அப்ப அப்படியே விடு. விளையாட்டுக்கு பொய் சொல்றது, ஏமாத்தறது வேற. நிஜ வாழ்கைங்கறது வேற. நாம நம்பறவங்க நம்பளை ஏமாத்தும் போது ஏற்படற வலி அனுபவிச்சா தான் தெரியும். நட்புக்கு இல்லக்கணமே நம்பிக்கை தான். அவனை நண்பன்னு நினைச்சி ஏமாந்தது போதும். நான் இனிமே காலேஜ் வரல. இதான் என் முடிவு என கோபத்தில் கத்தியபோது தலையை தொங்க போட்டபடி நின்றிருந்தான் ஜான். 

தப்பு பண்ணியிருந்தா அவனை ரெண்டு அடி அடிச்சிடு. காலேஜ் வரலன்னு சொன்னா என்னடா அர்தம் என ரமேஷ் கேட்க. 

அவனைப்பத்தி பேசி வீணா கோபத்த கிளப்பாத எனும்போதே என்ன பிரச்சனையா இருந்தாலும் காலேஜ் வாடா பேசிக்கலாம் என அகிலன் என் தோள் மேல் கை போட்டதும் விடுடா என அவன் கையை தள்ள தோள் பட்டியை இறுக்கி பிடிக்க ஜீவா இளநீர் வெட்டும் கத்தியுடன் 50 அடி தூரத்தில் வந்தவனை பார்த்து அவனை வெட்டுடா என ஜீவாவை நோக்கி சொன்னதும் அறுவாளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு முகத்தில் வெறியுடன் ஓடிவந்தான். 

தொடரும்………..

செவ்வாய், மார்ச் 06, 2012

சுகமான சுமைகள்………… பாகம் 20.




காலேஜ் முடிந்து ரூம்மை நோக்கி நடந்து போய்கொண்டிருந்த போது தான் அவளை பார்தேன். வெள்ளை கலர் லைட் புளு பூ டிசைன் போட்ட சுடிதாரில் அழகான தலை பின்னலுடன் பந்தமாக நடந்து வந்துக்கொண்டிருந்தாள். பேரழகி என சொல்ல முடியாவிட்டாலும் மாநிறத்தில் மினுமினுத்தால். அவள் என்னை கடந்து போனபோது திரும்பி பார்கும் விதத்தில் இருந்தது அவளின் உருவம். பார்ததும் மனதில் பந்தமாய் இதயத்தில் அமர்ந்துகொண்டாள். அவள் சென்ற திசையை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் வந்ததோடு நம்மை அவள் திரும்பி பார்க்கமாட்டாளா என மனம் ஏங்கியது. 

சார் என்ன ஒரே யோசனையா இருக்காரு என ப்ரியா உலுக்கியபோது தான் நினைவுக்கு வந்தேன்.

எந்த உலகத்தல இருக்கா ?. 

கனவு லோகத்தல?.

யாருடா அவ?. 

3 மாசத்துக்கு முன்ன ஒரு சூப்பரா ஒரு பொண்ண பாத்தன்னு சொன்னன்யில்ல. அதேமாதிரி சுடிதார் போட்டுக்கிட்டு ஒரு பொண்ணு போனா அவளா இருக்குமோன்னு பாத்து ஏமாந்துட்டன். அவளை திரும்ப பாக்கமாட்டோமான்னு ஒரு எண்ணம். இப்ப என்ன பண்ணிக்கிட்டுயிருப்பான்னு நினைச்சிக்கிட்டு இருந்தன். 

ச்சீ எப்பபாரு அவளையே நினைச்சிக்கிட்டு. அவள விடு என கோபத்தில் பேசியவள் நானும் 6 மாசமா கேட்கறன் பதிலே சொல்லமாட்டேன்கிற. அன்னைக்கு பேசிக்கிட்டு இருந்தியே அது யாரு? எதுக்காக அந்த பையன்களை அடிச்சாரு? 

எதுக்குன்னு மறந்துட்டன் லூசு. 

3 மாசத்துக்கு பாத்தவ எந்த ட்ரெஸ் போட்டுயிருந்தான்னு ஞாபகம் வச்சியிருக்கற இத மறந்துட்டியா?. எங்கிட்ட பொய் சொல்றியா?. இப்ப நீ சொல்லல நான் உன்கூட பேசமாட்டன்.

தயக்கத்துடன் நடந்தை கூறியதும். 

உனக்கு ரவுடிங்களோட தொடர்புயிருக்கா?  

ஏய் அவர் எங்க ஊர்க்காரர் அவ்ளோ தான்.

அந்தாளை பாத்தாலே பயமாயிருக்கு. அந்தாளுக்கூட சேந்து நீ கெட்டு போகாத.

ம் எனும்போதே மனம் குழம்பியது. இந்த ஆறு மாசத்தல அவரோட கேங்கே என் பேச்சை கேட்க ஆரம்பித்துயிருந்தது. கட்டப்பஞ்சாயத்து செய்யும் குட்டி லீடர்கள் முதல் சாராயம் கடத்தும் தம்மாந்துண்டு பொடிசுகள் வரை பழக்கமாகியிருந்தார்கள். எங்கு பாத்தாலும் வணக்கம்ண்ணே என்ற குரல் வந்து உடலில் ஒரு புல்லரிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதை ப்ரியாவிடம் கூறலாமா வேண்டாமா என தயங்கியபோது, 

என்ன திரும்ப யோசனை?. திரும்ப அவளா?.

ம் என்றதும். நான் போறன் என எழுந்து புத்தகத்தால் அடித்துவிட்டு போனால். 

காலேஜ் முடிந்து வீட்டுக்கு கிளம்பும்போது ஏய் இன்னிக்கு வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போறன் வர்றியா?. 

ம்.

7 மணிக்கு வந்துடு வெளியிலயே நில்லு நான் வந்ததும் ஒன்னா போலாம்.

ம். என்றதும் கிளம்பிவிட்டாள். 

ஷார்ப்பாக 7 மணிக்கு கோட்டைக்குள் உள்ள கோயில் வாசலில் கோயிலுக்குள் போகும் ஃபிகர்களை சைட் அடித்துக்கொண்டுயிருந்தபோது தான் அவளை பார்த்தேன். அவள்தானா என்ற குழப்பத்தில் அவளே தான் என முடிவுக்கு வந்தபோது கையில் நோட்டுடன் யாருக்காவே காத்திருந்தாள். யாருக்காக காத்திருக்கறா ஒருவேளை காதலிக்கறாளோ சீச்சீ இருக்காது என என் மனம் எனக்காகவே யோசித்தது. 

அந்த நேரத்தில் ப்ரியாவை மறந்தேபோனேன். ரோட்டை பார்பதும், வாட்சை பார்ப்பதுமாக இருந்தாள். எனக்கே அவளை பார்த்துக்கொண்டே இருந்ததில் நேரம் போனதுப்பற்றி கவலைப்படவில்லை. காத்திருந்தவள் ஒருவழியாக அவள் மட்டும் தனியாக கோயிலுக்குள் போனாள். நானும் அவள் பின்னாடியே கோயிலுக்குள் போனேன்.


அவள் சாமியை தரிசிக்க நான் இன்னும் அதிக நேரம் அவ கோயில்ல இருக்கனும் என சாமியிடம் வேண்டினேன். ஆனால் அவள் கோயிலை விட்டு வெளியே வந்தவள் சர்ரென சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். 

ச்சே. சைக்கிள் எடுத்துவந்துயிருந்தா அவ பின்னாடியே போய் அட்ரஸ்ச கண்டுபிடிச்சியிருக்கலாம் என நொந்துக்கொண்டபோது தான் ப்ரியா நினைவுக்கு வந்தாள். இவ ஏன் வரல என என் மீதான வெறுப்பு அவள் மீதான கோபம்மாக மாறியது. 

கோட்டைக்குள் உள்ள அந்த பி.சி.ஓ பூத்தில் இருந்து ப்ரியா வீட்டுக்கு ஃபோன் செய்தபோது, போனை எடுத்தவள் என் குரலை கேட்டதும் வர முடியலடா. 

ஏன்

வர முடியலன்னு சொன்னா விடேன். 

என்ன விடறது. உனக்காக நான் எவ்ளோ நேரம் காத்திருந்தன் தெரியுமா?. வர முடியாதவ அப்பறம் எதுக்கு என்ன வரச்சொன்ன?. 

புரிஞ்சிக்க. 

ஓன்னும் புரியவேணாம் என படாரென போனை வைத்து விட்டு கிளம்பி ரூமை நோக்கி நடந்தபோது அவளுக்கு என்ன அவசரமோ வீணா கோபப்பட்டாச்சே என எண்ணியபடி ரூம்மில் வந்து சாப்பிட்டுவிட்டு படுத்தேன். ரமேஷ் எதையோ படித்துக்கொண்டிருந்தான். 

காலையில் காலேஜ்க்குள் நுழையும்போதே பார்த்தேன். வழக்கமாக நாங்கள் உட்காரும் பெஞ்சில் ப்ரியா உட்கார்திருந்தாள். அவள் முகத்தில் கோபம் இருப்பதை தூரத்தில் இருந்து பார்கும்போதே தெரிந்து உடன் வந்த ரமேஷ்சிடம் மச்சான் நீ க்ளாஸ்கு போ 

ப்ரியா உக்காந்திருக்கு ஒரு ஹலோ சொல்லிட்டு போறன்டா. 

அது கோபத்துல இருக்கு. கிளம்பு. 

கதைவிடாத. நீ கைகாட்டு பதிலுக்கு கை காட்டமாட்டா பாரு. 

அதையும் தான் பாக்கலாம் என்றபடி கைகாட்டினான். அவள் அதை கண்டுக்கொள்ளவேயில்லை. 

பாத்தியா.

போதும் கதைவிடாத. அது கவனிக்கல. வேணாம்ன்னு சொன்னா கேளு அங்க வந்து அசிங்கப்படாத. 

அடங்கு நான் பாத்துக்கறன். 

அதுக்கப்பறம் உன் இஸ்டம் என்றபடியே அவள் அருகில் வந்ததும். 

அவன்தான் உன்ன அப்படியே போகச்சொன்னான்யில்ல. அப்பறம் எதுக்கு வந்த என ரமேஷ்சிடம் கேட்டதும் அதிர்ந்து போனவன் இல்ல ப்ரியா ஒரு ஹலோ சொல்லலாம்னு வந்தன். சொல்லிட்டயில்ல கிளம்பு. 

மச்சான் நீ போகாத. 

எப்பா உங்க விளையாட்டுக்கு நான் வரல. என்ன விடுங்க என்றபடி இடத்தை காலி  செய்தான். 

என்னை முறைத்தவள் பேசிக்கிட்டு இருக்குதம்போதே எதுக்கு படார்னு போனை வச்ச?.

கோபம் தான். 

வர முடியலன்னா என்ன ஏதுன்னு யோசிக்கமாட்டியா?. 

யோசிக்கல. சரி நான் தான் போன் பண்ணன்யில்ல. காரணம் சொல்ல வேண்டியதானே. 

லூசா நீ போன்ல சொல்றமாதிரியிருந்தா சொல்லியிருப்பன்யில்ல. 

அப்ப இப்பச்சொல்லு.

தயங்கியவள். கோயிலுக்கு வரக்கூடாது அதான் வரல.  

அதான் எதுக்கு. 

லூசுங்கறத நிருபிக்கற. 

ஏய்…..

வீட்டுக்கு போனதும் வயித்துவலி. 

ஏய் என்ன சொல்ற ஆஸ்பிட்டல்கு போனியா என பதறிப்போய் அவள் அருகே அமர்ந்து என்னாச்சி என கேட்டதும். சில நொடிகள் அமைதியாக முகத்தை பார்த்தவள். 

பின் மெல்ல மென்சஸ் பீரியட் நேத்து சாயந்தரம் ஸ்டார்ட்டாகிடுச்சி அதானால தான். 

ஸாரிடா என்றதும் ஸாரி கேட்காதன்னு எத்தனை முறை சொல்றது என தலையில் குட்டினாள். ஏன்னடா எப்ப பாத்தாலும் அதுங்கிட்ட அடிவாங்கிக்கிட்டே இருக்க என ஜான் கேட்டுக்கொண்டே வந்தான். 

ஓன்னும்மில்ல. நேத்து கோயிலுக்கு வரச்சொல்லிட்டு மேடம் வரல. அதான் சண்டை. அதவிடு நேத்து நீ ஏன் வரல?. 

அப்பா வேலை வச்சிட்டு போயிருந்தாரு அதான் வரல.

ம். சரி கிளம்பலாம்.

எழுந்திருக்க நினைக்கும்போது ப்ரியா விரலை சுரண்டடினாள். 

தொடரும்……………..