தொலைக்காட்சிகளில் சுட்டிகள் நிகழ்ச்சி என்கிற பெயரில் குழந்தைகளிடம் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் குறித்து கேட்பார்கள். இமான் அண்ணாச்சி உட்பட இந்நிகழ்ச்சியை நடத்தினார்கள். மழலைகள் வீட்டில் அம்மா கோபப்படுவது, அப்பா மிரட்டுவது, தாத்தா பாட்டி குறித்தும், பள்ளியில் நடப்பது குறித்தெல்லாம் சொல்வார்கள். இப்போது அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நிகழ்த்துகிறார்களா எனத்தெரியவில்லை?.
இந்தவாரத்தில் அப்படியொரு நிகழ்ச்சியை அமெரிக்கா தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நடந்ததை இன்ஸ்டா ரீல்ஸில் பார்த்தேன். நீங்களும் பார்த்துயிருக்கலாம் அல்லது பார்க்கும் சூழ்நிலை வரும். நான்கு அல்லது ஐந்து வயது குட்டி குழந்தையிடம் தொகுப்பாளினி பேசும்போது, என்னை என் அறையில் விட்டுவிட்டு அம்மாவும் – அப்பாவும் தங்களது அறைக்குள் போய் கதவை சாத்திக்கொள்வார்கள். கொஞ்ச நேரத்தில் ஓ மை காட் என மம்மி முனகும் சத்தம் வரும் எனச்சொல்வார். அதைக்கேட்டு அந்த நிகழ்ச்சி நடத்திய தொகுப்பாளி மற்றும் பார்வையாளர்கள் வரை ஜாலியாக சிரிப்பார்கள். பெற்றோர் வெட்கப்படுவர்.
இதுப்போன்ற பதிலை நம் இந்திய சமூக குழந்தைகள் சொல்லியிருந்தால் அக்குழந்தையை அப்பெற்றோர் பொளந்துக்கட்டியிருப்பார்கள். முதலில் தொலைக்காட்சிகள் அக்குழந்தை சொன்னதை ஒளிப்பரப்பியும் இருக்கமாட்டார்கள். காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான் இங்கு காமத்தை புனிதமாக்கி வைத்துள்ளோம். அதுக்குறித்து பொதுவெளியில் பேசவேகூடாது, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் அதுக்குறித்து விவாதம்மல்ல சின்ன சின்ன கேள்விக்குகூட பதில் சொல்வது கிடையாது. இதெல்லாம் நம்ம பிள்ளையிடம் நாம் எப்படி பேசுவது என தயங்குகின்றனர். பள்ளி – கல்லூரிகளில் பாடத்திட்டமாக கலவியல் கல்வியும் இருக்ககூடாது என எதிர்த்துவருகிறார்கள் கலாச்சார புண்ணாக்குகள். பின் எங்கிருந்து அவர்களுக்கு பாலியல் சார்ந்த கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும்?
பாலியல் தேவை என்பது ஒவ்வொரு உயிரினத்துக்கும் தேவை. பாலியல் உறவுதான் அடுத்தடுத்த சந்ததிகளை உருவாக்கும். நம் இந்திய சமூகம் அதனை கலச்சாரம், பண்பாடு, கற்பு என பேசவோ அல்லது சொல்லித்தரவோ மறுத்துவருகிறது. அதனால்தான் அதன்மீது பெரும் ஈர்ப்பு இருந்துவருகிறது.
கடந்த ஒருவாரம் இந்த செய்தி இணையத்தில் பரவியது, இன்று அது பிரபல செய்தித்தாளிலும் வந்துள்ளது. இதை இவ்வளவு டீப்பாக செய்தியாக்கவேண்டியதன் அவசியம் எங்கிருந்துவருகிறது என்றால் காமத்தை புனிதமாக்கி வைத்திருப்பதால்தான் திருமணத்துக்கு பிந்தைய பாலியல் உறவுக்கான பிரபலமான மொபைல் ஆப் பாம் அது. அதில் 40 லட்சம் இந்தியர்கள் இணைந்துள்ளார்களாம். பெங்களுரூ முதலிடம், ஐதராபாத், டெல்லி, மும்பை போன்றவை அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாக கூறுகிறது அச்செய்தி. அந்த செய்தியில் நுணுக்கமாக ஒன்றை பதிவு செய்துள்ளார்கள். அதாவது, இந்த ஆப் பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெண்கள் அதிகமாக இணைந்துள்ளார்கள் என்பதாகும். அதுயென்ன பெண்கள் அதிகமாகிறார்கள்? ஆண்களுக்கு மட்டும்தான் முட்டிக்கிட்டு பாலியல் உணர்வு வரும், பெண்களுக்கு பாலியல் உணர்வு எழாதா? அவர்கள் என்ன மரக்கட்டையா? பொம்மையா? ஜடமா?
ஆணுக்கு எப்படி பாலியல் உணர்வு எழுமோ, அதேபோல் பெண்ணுக்கும் வரும். மூன்றாம் பாலினத்தவருக்கும் பாலியல் உணர்வு எழும். அது மனிதனின் உடல் ஹார்மோன் செய்யும் செயல். குறிப்பிட்ட வயது வந்ததும் பாலியல் உணர்ச்சி தானாகவே எல்லா உயிரினங்களுக்கும் வரும். மனிதர்கள் அந்த உணர்ச்சியை சட்டப்படி அல்லது உரிமைப்படி போக்கிக்கொள்ளத்தான் திருமணம் செய்துவைப்பது. இந்த திருமணம் வழியாக பாலியல் தேவை தீர்வு ஏற்படுவதோடு தங்கள் சந்ததியை உருவாக்கவும் முடிகிறது.
கள்ள உறவுகளில் ஆண்கள் அதிகரித்தால் தப்பில்லை? பெண்கள் அதிகரித்தால் தப்பா என்ன? திருமணத்துக்கு பிந்தைய உறவுகளை ஏன் நாடுகிறார்கள்?
தங்களது இணையர் தனக்கான பாலியல் தேவையை பூர்த்தி செய்யாதபோது இப்படிப்பட்ட கள்ளஉறவுகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். அதற்கும் வாய்ப்பில்லாதவர்கள் இதுப்போன்ற ஆப்களை தங்களுக்கான வடிகால்களாக பயன்படுத்துகிறார்கள். அதன்மூலம் நடக்கும் குற்றசம்பவங்கள், மோசடிகள் தனி.
இப்படியொரு இக்கட்டான நிலையை வைத்திருப்பது நமது சமூக கட்டமைப்பும், கல்வியும் தான். கோவில்களில் பாலியல் சிற்பங்கள் இருக்கலாம். கல்வி நிலையங்களில் கூடாது என்பது என்ன லாஜிக் எனத்தெரியவில்லை. பாலியல் கல்வி பாடம் பள்ளி – கல்லூரியில் இருந்தால் அதுக்குறித்து தெரிந்துக்கொள்வார்கள், வீட்டில் பெற்றோர் தங்களது பிள்ளைகளிடம் அதுக்குறித்து பேசி, விளக்கினால் இப்படியொரு நிலை வராது.
கலவியில் தனக்கு என்ன தேவை என்பதை இணையர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொள்வது இல்லை, புரிந்துக்கொள்வதும் இல்லை. காரணம் நாம் கேட்டால் கணவர் என்ன நினைத்துக்கொள்வாரோ என பெண்களும், எனக்கு எல்லாம் தெரியும், உனக்கு என்ன தேவை என்பது எனக்கு தெரியும் என்கிற ஏகாம்பரமாக ஆணாதிக்கவாதியாக இருக்கிறார்கள். கணவன் – மனைவியே வெளிப்படையாக பாலியல் குறித்து பேசிக்கொள்ள முடியாத அளவுக்கே இச்சமூகம் அதனை கட்டமைத்துவைத்துள்ளது. கட்டிலறை என்பது இணையர்களின் மனசாட்சி பேசும் இடம். இணையர்களின் மனசாட்சி அங்கே பேசவில்லை என்றால் இதுப்போன்ற ஆப் வழிதான் பேசவேண்டி வரும்.
மேற்கத்திய நாடுகளில் பாலியல்
உணர்வுகளை, உறவுகளை குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே பெற்றோர்கள்
புரியவைக்கிறார்கள், அதனால் அவர்கள் வளர்ந்தபின்பும் அதனை சாதாரணமாக
கடந்துப்போகிறார்கள். மேற்கத்திய நாடுகளில் அரைநிர்வாண போராட்டம், முழுநிர்வாண
போராட்டம் என நூற்றுக்கணக்கான பெண்கள் நடத்துவர். ஆயிரக்கணக்கான மக்கள் அதனை
பார்த்துக்கொண்டு கடந்துப்போவார்கள். கடற்கரைகளில் குளியலறை உடையுடன்
குவிந்துக்கிடப்பார்கள், யாரும் அதனைப்பார்த்து உணர்ச்சி வசப்படுவதில்லை. ஆசிய
நாடுகளில் நாம் நம் பிள்ளைகளுக்கு எதுவும் சொல்லித்தருவதில்லை, கல்வியும்
கற்றுத்தருவதில்லை. அதனால் இங்கே லேசாக பெண்களின் இடுப்பு தெரியுமா? கிளிவேட்ச் தெரியுமா?
என அலையவைக்கிறது. அவையெல்லாம் உடலின் பாகங்கள் என உணராமல் அதைப்பார்த்து
கிளர்ச்சி அடையவைக்கிறது. அதனால்தான் இதுப்போன்ற உறவுகள் அதிகரிக்கிறது. இன்று
தன்னிடம் 40 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளதாக கூறுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் அது
அதிகரிக்கவே செய்யும். ஏன் எனில் 90s, 2K, GenZ புதுமையை நோக்கி நகர்ந்துக்கொண்டு
இருக்கிறார்கள். 

