திங்கள், மே 18, 2026

கை நழுவும் கட்சி. என்ன செய்யப்போகிறார் திருமா?

 



விடுதலை சிறுத்தைகள் கட்சி தலித் சாதிக்கான கட்சியாக பார்க்கப்பட்டாலும் அதன் தலைவர் திருமாவளவன் தமிழ்நாட்டின் பொதுவான தலைவராகவே முன்னிறுத்தப்படுகிறார். விசிகவில் பிறசாதியினருக்கு, இஸ்லாமிய, கிருஸ்த்துவ மதத்தினக்கு முக்கியத்துவம் தந்து கட்சியின் பொறுப்புகள் தந்துள்ளார். தேர்தல் களத்தில் தனி தொகுதிகளோடு பொதுத்தொகுதிகளையும் வாங்கி விசிக சார்பில் மற்ற சாதியினரையும் வேட்பாளராக்க வெற்றியும் பெற்றுள்ளார்கள். பட்டியல் சமூகத்தவர் மீதான அடக்குமுறையை பொதுசமூகத்தில் மாற்றியதற்கு பெரும்பங்கு திருமாவை சாரும். ஆனாலும் அவர் பட்டியலின குறிப்பாக பறையர் சமுதாய தலைவராகவே அவர் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறார்.

திருமாவளவின் அரசியல், சமூக செயல்பாடுகளால் தலித் சமூகத்தினர் அவர் பின்னால் அணி திரள துவங்கினர். குறிப்பாக இளைஞர்களை தன் பக்கம் இழுப்பதில் பெரும் வெற்றி பெற்றுயிருந்தார். திருமா பின்னால் இருந்த இளைஞர் பட்டாளத்தை பார்த்து திமுக, அதிமுக போன்ற கட்சிகள் அச்சமடைந்தன, அதனாலயே கூட்டணியில் அவருக்கான முக்கியத்துவத்தை தந்துவந்தது.

நடிகர் விஜய் கட்சி தொடங்கியபின் திருமா தன் சமுதாய மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தோல்வி அடைந்துவிட்டார். விசிகவினர் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அதுதான் உண்மை. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை அதிகளவு திமுக எப்படி பெறவில்லையோ அதேபோல் தன் கட்சி மற்றும் பட்டியல் சமூக மக்களின் வாக்குகளை அதிலும் இளைஞர்களின் வாக்குகளை திருமா இழந்துவிட்டார் என்பதே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பட்டியல் சமூக வாக்குகள் மொத்தமாக விஜய் கட்சிக்கு போய்விட்டன. திமுக கூட்டணியில் விசிக இருந்தாலும் தேர்தல் களத்தில் பெரும்பான்மையாக விஜய்க்கு மறைமுகமாக விசில் ஊதினார்கள் விசிகவினர். இப்போதும் ஊதிக்கொண்டே இருக்கிறார்கள்.

தோல்விக்கான காரணத்தை இதுவரை திருமா ஆய்வு செய்ததாக தெரியவில்லை. திமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் இந்த தோல்வி என விசிக கடக்கமுயன்றால் ஏமாற்றம் அவர்களுக்கு தான். தன்பின்னால் திரண்ட இளைஞர்களை திருமா அரசியல்படுத்தவில்லை என்பது இந்த தோல்வி மூலம் தெரிகிறது. விஜய் கட்சி தொடங்கியபோது, காலணி பகுதிகளில் விஜய்க்கு பெரும் செல்வாக்கு உள்ளது என பலரும் சொன்னார்கள் அதனை யாரும் கவனிக்கவில்லை.

2004ல் நடிகர் விஜயகாந்த் கட்சி தொடங்கியபோது வடமாவட்டங்களை குறிவைத்து களம்மிறங்கி பாமக, விசிக வாக்குகளை பிரித்தார். அதுவரை பாமக – விசிக அரசியல் களத்தில் இணைந்திருந்தது. விஜய்காந்த் வருகை வடமாவட்டங்களில் பெரும் ஆதிக்கம் செலுத்தியது. தங்களது சமூக இளைஞர்களை தக்கவைத்துக்கொள்ள வேண்டும், தங்கள் கட்சி வளர்ச்சிக்காக இரண்டு கட்சிகளும் தனித்தனி ரூட் எடுத்தது. பாமக வெற்றி பெறவில்லை என்றாலும் தனது செயல்பாடுகளால் கட்சியின் வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொண்டது.

20 வருடத்துக்கு பின்னர் நடிகர் விஜய் வருகையால், தலித் சமூக வாக்குகளை மட்டும்மல்ல விசிகவில் உள்ள இளைஞர்களையும் இழந்துள்ளது. ஆதவ்அர்ஜினா சொன்னதுப்போல விசிகவில் தலைவர்கள் இருக்கிறார்கள், தொண்டர்கள் இல்லை என்பது உண்மையாகியுள்ளது. பட்டியல் சமூக இளைஞர்களை மீண்டும் தன் பக்கம் இழுப்பதில் திருமாவுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.

தமிழ்நாட்டு ஆட்சிக்கட்டிலில் பாஜக அமர்ந்துவிடக்கூடாது என்பதால் விஜய் முதலமைச்சராக ஆதரவு தருகிறேன் எனச்சொன்னார் திருமா. அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. அடுத்தடுத்து விஜய்க்கு முட்டுக்கொடுத்து பேச தொடங்கியபின்புதான் திருமா மீது சந்தேக நிழல்கள் படிய தொடங்கின. விசிக அலுவலகத்துக்கு விஜய் வரும் முன்பு சோபா வந்தது. அது பொதுசமூகத்தில் திருமா மீதான மொத்த நம்பிக்கையையும் இழக்கச்செய்தது. சோபா கடையில் ஆர்டர் தந்து எங்களுக்காக வாங்கினோம் என திருமா சொன்னது இன்னும் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. கொள்கை அரசியல்வாதியான திருமாவே சினிமா பிம்ப அரசியலைப்பார்த்து மயங்குகிறாரென்றால் அவரின் தொண்டர்களும், இக்கால இளைஞர்களும் மயங்கியதில் ஆச்சர்யம்மில்லை.

அதேபோல் திருமா பிம்பத்தை தொடர்ந்து நீலசங்கிகள் உடைத்துவந்தார்கள். அதன்பின்பு பல காரணங்கள் இருந்தாலும் அதனை திருமா கண்டும் காணாமல் இருந்ததோடு வாய்ப்பு கிடைக்கும்போதுயெல்லாம் அவர்களை ஆரத்தழுவினார். இப்போது விஜய் வாரியர்ஸ்சும் சேர்ந்து திருமா பிம்பத்தை உடைக்கிறார்கள். அதை திருமா உணர்ந்ததாக தெரியவில்லை. தற்போது காலி பெருங்காய டப்பாவாக எப்படி கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கிறதோ அந்த பட்டியலில் வருங்காலத்தில் விசிகவும் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. திருமா விழித்துக்கொண்டால் கட்சியை காப்பாற்றலாம். இல்லையேல் அவரையே ட்ரோல் சமூகத்தில் அவரின் பிம்பத்தை இழக்கவேண்டிவரும்.

திங்கள், மே 11, 2026

முதலமைச்சர் விஜய்யின் பொறுப்பற்ற தன்மையும் நியாயப்படுத்தும் பொறுக்கிகளும்.

 

சில இடங்களில் கடுமையான சொற்கள் இருக்கும்…….

எழுத்தாளர் புளுத்தி என்றால் என்னவேண்டுமானாலும் எழுதலாம் என்கிற நினைப்பு சில இணைய எழுத்தாளர்களுக்கு எங்கிருந்து வருகிறது எனத்தெரியவில்லை.

நடிகர் விஜய் முதலமைச்சராக பதவியேற்கிறார், அந்த நிகழ்வுக்கு நடிகை த்ரிஷா வருகிறார். அவர் சக தொழில்முறை நண்பராக வந்துயிருக்கலாம், நெருங்கிய தோழியாக வந்துயிருக்கலாம் அல்லது விஜய் மனைவி விவாகரத்து வழக்கில் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதைப்போல விஜய்யின் இல்லீகல் காதலியாக வந்துயிருக்கலாம். செய்தி தொலைக்காட்சிகளின் நேரலையில், த்ரிஷா கண் கலங்கினார், பூரித்துப்போனார் எனச்சொல்லியபடி இருந்தனர். கங்கா முழு சந்திரமுகியாக மாறியிருப்பவரை பார் என்பதுப்போல் செய்திகள் இருந்ததால் பொதுத்தளத்தில் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. நடிகர் விஜய் செய்வதையே சரி, தவறு எனச்சொல்லவேண்டிய நிலையில் இருக்கும்போது, தமிழ்நாடு முதலமைச்சர் இப்படித்தான் இருக்கவேண்டும் என மக்கள் எதிர்ப்பார்ப்பது தவறாயென்ன?

நடிகர் விஜய் – நடிகை த்ரிஷா குறித்து சமூகவளைத்தளங்களில் கிசுகிசுக்கள் எழுந்தபோது, நடிகனுக்கு இதெல்லாம் சகஜம் என நீட்டி முழங்கி நார்மலைஸ் செய்தார்கள் பலர். அதே விஜய் இப்போது தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராகிவிட்டார். அவர் என்ன செய்கிறார் என்பதை மக்கள் அனைவரும் உற்றுநோக்குவார்கள், அவரின் ஒவ்வொரு செயலும் அனைத்து மட்டங்களிலும் எதிரொலிக்கும்.

தனது மனைவியிடம்மிருந்து சட்டப்படி விவாகரத்து பெறாதநிலையில் இன்னொரு பெண்ணுடன் பகிரங்காமா வலம் வரும் விஜய்யை நோக்கி கேள்வி எழுப்பாமல், கலைஞருக்கே இரண்டு பொண்டாட்டி அது தப்பில்லையா எனக்கேட்கிறான் ஒரு எழுத்தாளன். எழுத்தாளர் என்கிற போர்வையில் என்ன மயித்த வேண்டுமானாலும் கேட்டுவிடலாமா? அறிவுள்ள எவனும் அப்படியொரு கேள்வி எழுப்பமாட்டான். காரணம் கலைஞர் சட்டப்படி இருதிருமணங்களை செய்துக்கொண்டு நிகழ்ச்சிகளுக்கு என் மனைவி, துணைவி என பொதுவெளிக்கு உரிமையோடு அழைத்துவந்தார். நடிகர் விஜய்யை போல் கலைஞர் செயல்படவில்லை. இப்போதுகூட நடிகை த்ரிஷாவை இரண்டாவதாக  திருமணம் செய்துக்கொள்ளச்சொல்லுங்கள், யார் கேள்வி கேட்கப்போகிறார்கள்? விமர்சனமே வரப்போவதில்லை. முறையற்ற உறவை தமிழ்நாட்டை ஆளும் முதலமைச்சர் விஜய் உருவாக்கி வைத்துக்கொண்டுள்ளார், அதனை அவரும், அவரது ஆட்களும் நார்மலைஸ் செய்கிறார்கள், அதனை எழுத்தாளர் போர்வையில் இருந்துக்கொண்டு நியாயப்படுத்துவது எழுத்தாளர்களுக்கு அவமானம்மில்லையா?

தமிழ்நாட்டிலுள்ள ஏதோ ஒரு காவல்நிலையத்துக்கு கணவன் – மனைவி கள்ளக்காதல் தொடர்பாக புகார் வருகிறது என வைத்துக்கொள்வோம். காவலர்கள் விசாரணையில் முதலமைச்சர் விஜய்யே பொண்டாட்டிய துரத்திவிட்டுட்டு இன்னொருத்தியோட வாழும்போது நான் வாழறது தப்பா என கேள்வி எழுப்பினால் என்ன பதில் தரும் காவல்துறை? சட்டப்படி தவறு என்றுதானே சொல்லும், அதைத்தான் நாமும் சொல்கிறோம். சமூகத்தின் மீது அக்கறை கொண்ட எழுத்தாளன் என்றால் அதைத்தான் சொல்வான்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெ குற்றவாளி என குன்ஹா தீர்ப்பு எழுதும்போது ஒரு விஷயத்தை கோடிட்டுகாட்டினார். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தவறு செய்யும்போது அவர்களுக்கு கீழே பணியாற்றுபவர்கள் தவறு செய்தால் அதனை எப்படி கேள்வி கேட்கமுடியும்? தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு அதிக பொறுப்பு இருக்கவேண்டும், சமூகம் அதனால் தான் அவர்களை உயர்ந்த பதவியில் உட்காரவைக்கிறது, முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்கிற ரீதியில் தீர்ப்பில் குறிப்பிட்டுயிருந்தார்.

கலைஞருக்கு இரண்டு மனைவிகள் என்பது லீகலானது, அதனை அவர் நியாயப்படுத்தி என்னைப்போல் இரண்டு மனைவிகள் வைத்துக்கொள்ளுங்கள் அவர் மறைமுகமாக, நேரடியாக எங்கும் சொல்லவில்லை. நடிகர் விஜய் சமூகத்துக்கு என்ன சொல்கிறார் முதல்மனைவியோடு சட்டரீதியான விவாகரத்துக்கு பெறவில்லை. பிள்ளைகள் எதிர்காலம் குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை. முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தபின் அவரின் செயல்பாட்டைதான் கேள்வி எழுப்புகிறது. நடிகர் விஜய்யை பல லட்சம் ரசிகர்கள் வெறிக்கொண்டு அவரை கொண்டாடினார்கள். இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர். அந்த பொறுப்புணர்ந்து செயல்படவேண்டாமா?

இதெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது, இதெல்லாம் மக்களை பாதிக்காது, மக்களுக்கு இதெல்லாம் தேவையில்லாதது என கம்பு சுற்றும் எழுத்தாள பொறுக்கிகள் சிலர், விஜய்யின் செயலை நார்மலைஸ் செய்து பதிவு எழுதுகிறார்கள்.

கள்ளக்காதல் தப்பில்லை, மனைவிக்கு துரோகம் செய்யலாம், பிள்ளைகளை நடுத்தெருவில் விடலாம், தன்னுடைய அரிப்புக்கு யாரும் யாருடனும் படுக்கலாம், மெட்ரோ நகரங்களில் பாருங்கள் இதெல்லாம் சாதாரணம் என யாரோ சிலர் செய்யும் தவறுகளை பொதுமைப்படுத்தி எழுதி நியாயப்படுத்துவதுப்போல் இதையும் நியாயப்படுத்துகிறார்கள். அப்படி நியாயப்படுத்துபவர்கள் யாரென உன்னிப்பாக கவனித்துப்பாருங்கள், தங்களது முறையற்ற பாலியல் இச்சையை நியாயப்படுத்த முடியாது என்பதால் முதலமைச்சர் விஜய் – த்ரிஷா விவகாரத்தை நியாயப்படுத்துவதன் மூலம் தங்கள் தவறுகளை நியாயப்படுத்துகிறார்கள். மனதளவில், உடலளவில், மூளை, ரத்தம் என உறைந்துப்போன ஆணாதிக்கவாதிகள் மட்டுமே இதுப்போன்ற பாலியல் அயோக்கியத்தனக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். அதில் சில கார்ப்பரேட் எழுத்தாள பொறுக்கிகளும் இருக்கிறார்கள்.

தனிமனித உரிமை என்பது வேறு, தனிமனித வாழ்க்கை என்பது வேறு என்பதை மக்களுக்கு சொல்லுங்கள். அது யாராக இருந்தாலும் தவறுகளை தவறு என சுட்டிக்காட்டுபவனே மனிதன். அவன் மட்டுமே சமூகத்தின் மீது அக்கறை கொண்டவன்.

வெள்ளி, மே 08, 2026

பக்கா கமர்ஷியல் சினிமாவான முதலமைச்சர் பதவி.

 

பெயர் – சக்திமுருகன், 9ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளான், படிப்பு வரவில்லை என அவனது அப்பா அவனை கடையில் சேர்த்துவிட்டாராம். இப்போது அவனது வயது 21. திருவண்ணாமலை அருகிலுள்ள ஒரு கிராமம். (ஊர் பெயர், தொகுதி பெயர் சொன்னான் இங்கே பதிவிட விரும்பவில்லை) ஒருக்கடையில் முடிவெட்டும் வேலை செய்கிறான். முகச்சவரம் செய்துக்கொள்ள புதியதாக அந்த கடைக்கு சென்றேன். வேலை செய்தபடியே பேசினான். அவன் சொன்ன அரசியல், சமூக – இளைஞர்கள் மனநிலையை கேட்டு ஆச்சர்யமாகி அவனுடன் பேசுவதை நீட்டிக்க சவரம் செய்தபின் முடியும் வெட்டுடா என்றேன். அவனும் வழுக்கை தலையில் உள்ள முடியை எண்ணியெண்ணி வெட்டியபடி சுமார் ஒன்னரை மணி நேரம் பேசினான், அவன் பேசுவதை கேட்டு ஆச்சயர்யமாக இருந்தது.

யாருக்குடா தம்பி ஓட்டு போட்ட?

ரெட்டையிலைக்கு

உன் வயசு பசங்கயெல்லாம் விஜய்க்கு போட்டுயிருக்காங்க, நீ ஏன்டா போடல?

என் ஓனர் அதிமுக ஆட்சிக்கு வந்துடும், அதுக்கு போடுடான்னு சொன்னாரு போட்டுட்டன்.

என் மனதில் என்ன இப்படியொரு அப்பாவியா இருக்கான் என நினைத்துக்கொண்டியிருந்தபோது, நான் மட்டும் தான் இரட்டை இலைக்கு. எங்கப்பாவெல்லாம் கழுத்து நெறிச்சிப்போட்டால்கூட சூரியன் தான் போடுவாரு.  எங்கப்பாட்டிக்கூட சூரியனுக்கு தான் போடும், இப்பவும் அதுக்குதான் போட்டாங்க.

அப்போ நீ மட்டும் இரட்டை இலைக்கு போடற?

என் ஓனர் நல்லவர், அவர் சொன்னாரு போட்டன். அந்த பதில் சுவாரஸ்யத்தை தர தொடர்ந்து பேசத்தொடங்கியபின் அவன் மட்டுமே அடுத்த ஒரு மணிநேரத்துக்குமேல் இன்றைய அரசியல் பேசினான்.  

சோசியல் மீடியா வீடியோக்கள் எந்தளவுக்கு நடிகர் விஜய்யை தூக்கிப்பிடித்தது, அது ஒவ்வொருவரின் மனதை எந்தளவுக்கு மாற்றியது என்பதை அவன் சிம்பளாக ஒவ்வொரு விஷயமாக சொன்னது ஆச்சர்யமாக இருந்தது.

நடிகர் விஜய்க்கான வெற்றி என்பது சினிமா மோகத்தில் வந்தது என்பதில் நான் உறுதியாக இருப்பதற்கு காரணம் நாம் அவர்களை கவனித்ததாலே. அதை அந்த இளைஞனின் பேச்சில் தெரியவந்தது. சினிமா ஹீரோ போலவே அரசியல் களத்தில் விஜய் செயல்படுவார், அவர் முதலமைச்சரானால் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என இளைஞர்கள் அப்படியே நம்பவைக்கப்பட்டுள்ளார்கள். குறைந்தப்பட்ச சுய அறிவும், பகுத்தறிவும் இல்லாமல் இளையோர்கள் உட்பட பலரும் நம்பியுள்ளார்கள், இப்போதும் நம்புகிறார்கள் என்பது தெரிந்து அதிர்ச்சியாக இருந்தது.

விஜய் கட்சியினரின் செயல்பாடுகளை சமூக ஊடகங்களில் வருவதைப்பார்த்து சிரிக்கிறோம், கேள்வி எழுப்புகிறோம். அதை நம்ப பெரும் பெரும் இளைஞர் கூட்டமும், அடித்தட்டு மக்கள் கூட்டமும் இருக்கிறது. அது சோசியல் மீடியாக்களில் வரும் வீடியோக்கள், இன்ப்ளுயஸியர்சின் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து எதார்த்தத்தை பேசுகிறோம், பெரும்பான்மை மக்கள் அப்படியல்ல.

வாப்பாவின் இந்த பதிவை படித்துவிட்டு இதை படியுங்கள் புரியும்.

நாம் அரசியல் குறித்து முகநூல், எக்ஸ் தளத்தில் உரையாடிக்கொண்டு இருக்கிறோம். ஸ்நாப்ஷாட், இன்ஸ்டா வீடியோக்கள் இளைஞர்கள், சிறுபிள்ளைகளின் வாழ்வியலில் கலந்து அவர்களின் ஒவ்வொரு விஷயத்திலும் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அவன் சொன்னபோது அதிர்ச்சியாகயிருந்தது. வளவளவென எழுதுவதை படிக்க ஜென் ஸி, ஆல்பா தலைமுறைக்கு நேரம்மில்லை. யாரே வெளியிடும் ஒரு நிமிட வீடியோவை பார்த்துவிட்டு சமூகத்தை புரிந்துக்கொண்டதாக நினைக்கிறார்கள். அந்த தம்பி உட்பட. இந்த டிஜிட்டல் பிரச்சாரத்தை சத்தம்மில்லாமல் பக்காவாக செய்துள்ளது விஜய் டீம்.

மாஸ் சினிமா கதை, திரைக்கதையை சமூகத்தில் டிஜிட்டல் தளம் வழியாக உருவாக்கியிருக்கிறது விஜய் டீம்.

கதையின் ஹீரோ விஜய். வில்லன் – திமுக (ஸ்டாலின்) தமிழ்நாடு அரசு.

முதலில் தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் விவகாரங்கள், ஊழல், காவல்துறை அராஜகம் இவைகளை அதிகமாக மக்கள் மன்றத்திடம், குறிப்பாக இளைஞர்களிடம் வீடியோ வழியாக கொண்டு சென்றுள்ளார்கள். திமுகவை கண்டு மக்கள் பயப்படுகிறார்கள். நாட்டில் நடக்கும் எல்லா தப்புக்கும் கீழ்மட்ட திமுக நிர்வாகிகளே காரணம். அவர்களிடம் பெரும் பணம் இருப்பதால் அவர்களின் தவறை யாரும் தட்டுக்கேட்கவில்லை. திமுக என்கிற வில்லனை அழிக்க ஹீரோ வருவான். அதுதான் உங்கள் விஜய். அவருக்கு ஓட்டுப்போட்டு முதலமைச்சர் பதவியை தந்தால் அவர் தவறுகளை தடுத்துவிடுவார், மக்கள் நன்றாக வாழ்வார்கள். இந்த திரைக்கதையில் மோடியை எல்லாம் அவர்கள் தொடவேயில்லை. அவர்களின் டார்கெட் முழுக்க திமுக, ஸ்டாலின் மட்டுமே. அது அவர்களே எதிர்பாராத வகையில் பெரியதாக எடுப்பட்டுவிட்டது என அவன் சொன்னது ஆச்சர்யமாக இருந்தது.

நகர்புறத்தில் வேலை செய்யும் அந்த கிராமப்புற இளைஞனின் மனநிலையே இப்படியென்றால் நகர்புற இளைஞர்களின் மனநிலை எப்படியிருக்கும். வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி, யூடியூப் கதைகளை நம்பும் எல்லா வயதுடைய தற்குறிகள் அனைத்தையும் நம்பியுள்ளார்கள். விஜய் மனைவி சங்கீதா, நடிகை த்ரிஷா குறித்தெல்லாம் கூட சொன்னான்.

அந்த இளைஞன் சொன்னது, சமூக ஆய்வுக்குறியதாக இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போதுயெல்லாம் இனி இதுப்போன்றவர்களிடம் அதிகமாக உரையாடவேண்டும் என முடிவு செய்துள்ளேன். அதிலும் இந்த 2கே கிட்ஸ், ஜென் ஸி, ஆல்ஃபா தலைமுறையோடு அரசியல், சமூகம், வாழ்க்கை, சினிமா என அனைத்து குறித்தும் நெருக்கமாக ஒரு நண்பனைப்போல் பேசி தெரிந்துக்கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.