திங்கள், மே 11, 2026

முதலமைச்சர் விஜய்யின் பொறுப்பற்ற தன்மையும் நியாயப்படுத்தும் பொறுக்கிகளும்.

 

சில இடங்களில் கடுமையான சொற்கள் இருக்கும்…….

எழுத்தாளர் புளுத்தி என்றால் என்னவேண்டுமானாலும் எழுதலாம் என்கிற நினைப்பு சில இணைய எழுத்தாளர்களுக்கு எங்கிருந்து வருகிறது எனத்தெரியவில்லை.

நடிகர் விஜய் முதலமைச்சராக பதவியேற்கிறார், அந்த நிகழ்வுக்கு நடிகை த்ரிஷா வருகிறார். அவர் சக தொழில்முறை நண்பராக வந்துயிருக்கலாம், நெருங்கிய தோழியாக வந்துயிருக்கலாம் அல்லது விஜய் மனைவி விவாகரத்து வழக்கில் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதைப்போல விஜய்யின் இல்லீகல் காதலியாக வந்துயிருக்கலாம். செய்தி தொலைக்காட்சிகளின் நேரலையில், த்ரிஷா கண் கலங்கினார், பூரித்துப்போனார் எனச்சொல்லியபடி இருந்தனர். கங்கா முழு சந்திரமுகியாக மாறியிருப்பவரை பார் என்பதுப்போல் செய்திகள் இருந்ததால் பொதுத்தளத்தில் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. நடிகர் விஜய் செய்வதையே சரி, தவறு எனச்சொல்லவேண்டிய நிலையில் இருக்கும்போது, தமிழ்நாடு முதலமைச்சர் இப்படித்தான் இருக்கவேண்டும் என மக்கள் எதிர்ப்பார்ப்பது தவறாயென்ன?

நடிகர் விஜய் – நடிகை த்ரிஷா குறித்து சமூகவளைத்தளங்களில் கிசுகிசுக்கள் எழுந்தபோது, நடிகனுக்கு இதெல்லாம் சகஜம் என நீட்டி முழங்கி நார்மலைஸ் செய்தார்கள் பலர். அதே விஜய் இப்போது தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராகிவிட்டார். அவர் என்ன செய்கிறார் என்பதை மக்கள் அனைவரும் உற்றுநோக்குவார்கள், அவரின் ஒவ்வொரு செயலும் அனைத்து மட்டங்களிலும் எதிரொலிக்கும்.

தனது மனைவியிடம்மிருந்து சட்டப்படி விவாகரத்து பெறாதநிலையில் இன்னொரு பெண்ணுடன் பகிரங்காமா வலம் வரும் விஜய்யை நோக்கி கேள்வி எழுப்பாமல், கலைஞருக்கே இரண்டு பொண்டாட்டி அது தப்பில்லையா எனக்கேட்கிறான் ஒரு எழுத்தாளன். எழுத்தாளர் என்கிற போர்வையில் என்ன மயித்த வேண்டுமானாலும் கேட்டுவிடலாமா? அறிவுள்ள எவனும் அப்படியொரு கேள்வி எழுப்பமாட்டான். காரணம் கலைஞர் சட்டப்படி இருதிருமணங்களை செய்துக்கொண்டு நிகழ்ச்சிகளுக்கு என் மனைவி, துணைவி என பொதுவெளிக்கு உரிமையோடு அழைத்துவந்தார். நடிகர் விஜய்யை போல் கலைஞர் செயல்படவில்லை. இப்போதுகூட நடிகை த்ரிஷாவை இரண்டாவதாக  திருமணம் செய்துக்கொள்ளச்சொல்லுங்கள், யார் கேள்வி கேட்கப்போகிறார்கள்? விமர்சனமே வரப்போவதில்லை. முறையற்ற உறவை தமிழ்நாட்டை ஆளும் முதலமைச்சர் விஜய் உருவாக்கி வைத்துக்கொண்டுள்ளார், அதனை அவரும், அவரது ஆட்களும் நார்மலைஸ் செய்கிறார்கள், அதனை எழுத்தாளர் போர்வையில் இருந்துக்கொண்டு நியாயப்படுத்துவது எழுத்தாளர்களுக்கு அவமானம்மில்லையா?

தமிழ்நாட்டிலுள்ள ஏதோ ஒரு காவல்நிலையத்துக்கு கணவன் – மனைவி கள்ளக்காதல் தொடர்பாக புகார் வருகிறது என வைத்துக்கொள்வோம். காவலர்கள் விசாரணையில் முதலமைச்சர் விஜய்யே பொண்டாட்டிய துரத்திவிட்டுட்டு இன்னொருத்தியோட வாழும்போது நான் வாழறது தப்பா என கேள்வி எழுப்பினால் என்ன பதில் தரும் காவல்துறை? சட்டப்படி தவறு என்றுதானே சொல்லும், அதைத்தான் நாமும் சொல்கிறோம். சமூகத்தின் மீது அக்கறை கொண்ட எழுத்தாளன் என்றால் அதைத்தான் சொல்வான்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெ குற்றவாளி என குன்ஹா தீர்ப்பு எழுதும்போது ஒரு விஷயத்தை கோடிட்டுகாட்டினார். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தவறு செய்யும்போது அவர்களுக்கு கீழே பணியாற்றுபவர்கள் தவறு செய்தால் அதனை எப்படி கேள்வி கேட்கமுடியும்? தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு அதிக பொறுப்பு இருக்கவேண்டும், சமூகம் அதனால் தான் அவர்களை உயர்ந்த பதவியில் உட்காரவைக்கிறது, முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்கிற ரீதியில் தீர்ப்பில் குறிப்பிட்டுயிருந்தார்.

கலைஞருக்கு இரண்டு மனைவிகள் என்பது லீகலானது, அதனை அவர் நியாயப்படுத்தி என்னைப்போல் இரண்டு மனைவிகள் வைத்துக்கொள்ளுங்கள் அவர் மறைமுகமாக, நேரடியாக எங்கும் சொல்லவில்லை. நடிகர் விஜய் சமூகத்துக்கு என்ன சொல்கிறார் முதல்மனைவியோடு சட்டரீதியான விவாகரத்துக்கு பெறவில்லை. பிள்ளைகள் எதிர்காலம் குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை. முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தபின் அவரின் செயல்பாட்டைதான் கேள்வி எழுப்புகிறது. நடிகர் விஜய்யை பல லட்சம் ரசிகர்கள் வெறிக்கொண்டு அவரை கொண்டாடினார்கள். இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர். அந்த பொறுப்புணர்ந்து செயல்படவேண்டாமா?

இதெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது, இதெல்லாம் மக்களை பாதிக்காது, மக்களுக்கு இதெல்லாம் தேவையில்லாதது என கம்பு சுற்றும் எழுத்தாள பொறுக்கிகள் சிலர், விஜய்யின் செயலை நார்மலைஸ் செய்து பதிவு எழுதுகிறார்கள்.

கள்ளக்காதல் தப்பில்லை, மனைவிக்கு துரோகம் செய்யலாம், பிள்ளைகளை நடுத்தெருவில் விடலாம், தன்னுடைய அரிப்புக்கு யாரும் யாருடனும் படுக்கலாம், மெட்ரோ நகரங்களில் பாருங்கள் இதெல்லாம் சாதாரணம் என யாரோ சிலர் செய்யும் தவறுகளை பொதுமைப்படுத்தி எழுதி நியாயப்படுத்துவதுப்போல் இதையும் நியாயப்படுத்துகிறார்கள். அப்படி நியாயப்படுத்துபவர்கள் யாரென உன்னிப்பாக கவனித்துப்பாருங்கள், தங்களது முறையற்ற பாலியல் இச்சையை நியாயப்படுத்த முடியாது என்பதால் முதலமைச்சர் விஜய் – த்ரிஷா விவகாரத்தை நியாயப்படுத்துவதன் மூலம் தங்கள் தவறுகளை நியாயப்படுத்துகிறார்கள். மனதளவில், உடலளவில், மூளை, ரத்தம் என உறைந்துப்போன ஆணாதிக்கவாதிகள் மட்டுமே இதுப்போன்ற பாலியல் அயோக்கியத்தனக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். அதில் சில கார்ப்பரேட் எழுத்தாள பொறுக்கிகளும் இருக்கிறார்கள்.

தனிமனித உரிமை என்பது வேறு, தனிமனித வாழ்க்கை என்பது வேறு என்பதை மக்களுக்கு சொல்லுங்கள். அது யாராக இருந்தாலும் தவறுகளை தவறு என சுட்டிக்காட்டுபவனே மனிதன். அவன் மட்டுமே சமூகத்தின் மீது அக்கறை கொண்டவன்.

வெள்ளி, மே 08, 2026

பக்கா கமர்ஷியல் சினிமாவான முதலமைச்சர் பதவி.

 

பெயர் – சக்திமுருகன், 9ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளான், படிப்பு வரவில்லை என அவனது அப்பா அவனை கடையில் சேர்த்துவிட்டாராம். இப்போது அவனது வயது 21. திருவண்ணாமலை அருகிலுள்ள ஒரு கிராமம். (ஊர் பெயர், தொகுதி பெயர் சொன்னான் இங்கே பதிவிட விரும்பவில்லை) ஒருக்கடையில் முடிவெட்டும் வேலை செய்கிறான். முகச்சவரம் செய்துக்கொள்ள புதியதாக அந்த கடைக்கு சென்றேன். வேலை செய்தபடியே பேசினான். அவன் சொன்ன அரசியல், சமூக – இளைஞர்கள் மனநிலையை கேட்டு ஆச்சர்யமாகி அவனுடன் பேசுவதை நீட்டிக்க சவரம் செய்தபின் முடியும் வெட்டுடா என்றேன். அவனும் வழுக்கை தலையில் உள்ள முடியை எண்ணியெண்ணி வெட்டியபடி சுமார் ஒன்னரை மணி நேரம் பேசினான், அவன் பேசுவதை கேட்டு ஆச்சயர்யமாக இருந்தது.

யாருக்குடா தம்பி ஓட்டு போட்ட?

ரெட்டையிலைக்கு

உன் வயசு பசங்கயெல்லாம் விஜய்க்கு போட்டுயிருக்காங்க, நீ ஏன்டா போடல?

என் ஓனர் அதிமுக ஆட்சிக்கு வந்துடும், அதுக்கு போடுடான்னு சொன்னாரு போட்டுட்டன்.

என் மனதில் என்ன இப்படியொரு அப்பாவியா இருக்கான் என நினைத்துக்கொண்டியிருந்தபோது, நான் மட்டும் தான் இரட்டை இலைக்கு. எங்கப்பாவெல்லாம் கழுத்து நெறிச்சிப்போட்டால்கூட சூரியன் தான் போடுவாரு.  எங்கப்பாட்டிக்கூட சூரியனுக்கு தான் போடும், இப்பவும் அதுக்குதான் போட்டாங்க.

அப்போ நீ மட்டும் இரட்டை இலைக்கு போடற?

என் ஓனர் நல்லவர், அவர் சொன்னாரு போட்டன். அந்த பதில் சுவாரஸ்யத்தை தர தொடர்ந்து பேசத்தொடங்கியபின் அவன் மட்டுமே அடுத்த ஒரு மணிநேரத்துக்குமேல் இன்றைய அரசியல் பேசினான்.  

சோசியல் மீடியா வீடியோக்கள் எந்தளவுக்கு நடிகர் விஜய்யை தூக்கிப்பிடித்தது, அது ஒவ்வொருவரின் மனதை எந்தளவுக்கு மாற்றியது என்பதை அவன் சிம்பளாக ஒவ்வொரு விஷயமாக சொன்னது ஆச்சர்யமாக இருந்தது.

நடிகர் விஜய்க்கான வெற்றி என்பது சினிமா மோகத்தில் வந்தது என்பதில் நான் உறுதியாக இருப்பதற்கு காரணம் நாம் அவர்களை கவனித்ததாலே. அதை அந்த இளைஞனின் பேச்சில் தெரியவந்தது. சினிமா ஹீரோ போலவே அரசியல் களத்தில் விஜய் செயல்படுவார், அவர் முதலமைச்சரானால் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என இளைஞர்கள் அப்படியே நம்பவைக்கப்பட்டுள்ளார்கள். குறைந்தப்பட்ச சுய அறிவும், பகுத்தறிவும் இல்லாமல் இளையோர்கள் உட்பட பலரும் நம்பியுள்ளார்கள், இப்போதும் நம்புகிறார்கள் என்பது தெரிந்து அதிர்ச்சியாக இருந்தது.

விஜய் கட்சியினரின் செயல்பாடுகளை சமூக ஊடகங்களில் வருவதைப்பார்த்து சிரிக்கிறோம், கேள்வி எழுப்புகிறோம். அதை நம்ப பெரும் பெரும் இளைஞர் கூட்டமும், அடித்தட்டு மக்கள் கூட்டமும் இருக்கிறது. அது சோசியல் மீடியாக்களில் வரும் வீடியோக்கள், இன்ப்ளுயஸியர்சின் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து எதார்த்தத்தை பேசுகிறோம், பெரும்பான்மை மக்கள் அப்படியல்ல.

வாப்பாவின் இந்த பதிவை படித்துவிட்டு இதை படியுங்கள் புரியும்.

நாம் அரசியல் குறித்து முகநூல், எக்ஸ் தளத்தில் உரையாடிக்கொண்டு இருக்கிறோம். ஸ்நாப்ஷாட், இன்ஸ்டா வீடியோக்கள் இளைஞர்கள், சிறுபிள்ளைகளின் வாழ்வியலில் கலந்து அவர்களின் ஒவ்வொரு விஷயத்திலும் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அவன் சொன்னபோது அதிர்ச்சியாகயிருந்தது. வளவளவென எழுதுவதை படிக்க ஜென் ஸி, ஆல்பா தலைமுறைக்கு நேரம்மில்லை. யாரே வெளியிடும் ஒரு நிமிட வீடியோவை பார்த்துவிட்டு சமூகத்தை புரிந்துக்கொண்டதாக நினைக்கிறார்கள். அந்த தம்பி உட்பட. இந்த டிஜிட்டல் பிரச்சாரத்தை சத்தம்மில்லாமல் பக்காவாக செய்துள்ளது விஜய் டீம்.

மாஸ் சினிமா கதை, திரைக்கதையை சமூகத்தில் டிஜிட்டல் தளம் வழியாக உருவாக்கியிருக்கிறது விஜய் டீம்.

கதையின் ஹீரோ விஜய். வில்லன் – திமுக (ஸ்டாலின்) தமிழ்நாடு அரசு.

முதலில் தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் விவகாரங்கள், ஊழல், காவல்துறை அராஜகம் இவைகளை அதிகமாக மக்கள் மன்றத்திடம், குறிப்பாக இளைஞர்களிடம் வீடியோ வழியாக கொண்டு சென்றுள்ளார்கள். திமுகவை கண்டு மக்கள் பயப்படுகிறார்கள். நாட்டில் நடக்கும் எல்லா தப்புக்கும் கீழ்மட்ட திமுக நிர்வாகிகளே காரணம். அவர்களிடம் பெரும் பணம் இருப்பதால் அவர்களின் தவறை யாரும் தட்டுக்கேட்கவில்லை. திமுக என்கிற வில்லனை அழிக்க ஹீரோ வருவான். அதுதான் உங்கள் விஜய். அவருக்கு ஓட்டுப்போட்டு முதலமைச்சர் பதவியை தந்தால் அவர் தவறுகளை தடுத்துவிடுவார், மக்கள் நன்றாக வாழ்வார்கள். இந்த திரைக்கதையில் மோடியை எல்லாம் அவர்கள் தொடவேயில்லை. அவர்களின் டார்கெட் முழுக்க திமுக, ஸ்டாலின் மட்டுமே. அது அவர்களே எதிர்பாராத வகையில் பெரியதாக எடுப்பட்டுவிட்டது என அவன் சொன்னது ஆச்சர்யமாக இருந்தது.

நகர்புறத்தில் வேலை செய்யும் அந்த கிராமப்புற இளைஞனின் மனநிலையே இப்படியென்றால் நகர்புற இளைஞர்களின் மனநிலை எப்படியிருக்கும். வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி, யூடியூப் கதைகளை நம்பும் எல்லா வயதுடைய தற்குறிகள் அனைத்தையும் நம்பியுள்ளார்கள். விஜய் மனைவி சங்கீதா, நடிகை த்ரிஷா குறித்தெல்லாம் கூட சொன்னான்.

அந்த இளைஞன் சொன்னது, சமூக ஆய்வுக்குறியதாக இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போதுயெல்லாம் இனி இதுப்போன்றவர்களிடம் அதிகமாக உரையாடவேண்டும் என முடிவு செய்துள்ளேன். அதிலும் இந்த 2கே கிட்ஸ், ஜென் ஸி, ஆல்ஃபா தலைமுறையோடு அரசியல், சமூகம், வாழ்க்கை, சினிமா என அனைத்து குறித்தும் நெருக்கமாக ஒரு நண்பனைப்போல் பேசி தெரிந்துக்கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.

வியாழன், மே 07, 2026

பாசிசம்னா என்னன்னு இப்போ தெரியுதா விஜய் அங்கிள்.

 

காங்கிரஸ் இல்லா இந்தியா என்பது பாஜகவின் நீண்டகால திட்டம். 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தபின் அந்த திட்டத்தை தீவிரமாக செயலாற்றுகிறது ஆர்.எஸ்.எஸ் – பாஜக. வடமாநிலங்களில் காங்கிரஸ் துடைத்து எரியப்பட்டுவிட்டது. தனித்து அக்கட்சியால் ஒருமாநிலத்திலும் ஆட்சியை பிடிக்கமுடியாது. தெலுங்கானா, கர்நாடகா, கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது என்றால் அக்கட்சியை தென்மாநில மக்கள் ஓரளவு நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் அவ்வளவே. அதிலும் காங்கிரஸ் பாரம்பரிய வழக்கப்படி தொடர்ந்து துரோகங்கள் செய்வதை நிறுத்தவில்லை.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் நடந்தபோதே காங்கிரஸ்சை கழட்டிவிடுங்கள் என திமுகவுக்கு நெருக்கடி தந்துவந்தது ஒன்றியத்தை ஆளும் பாஜக. ஜெ இறந்தபின் எதிர்கட்சியாக வலிமையாக இருந்த திமுகவிடம் எங்களோடு கூட்டணி கூட வேண்டாம், காங்கிரஸ்சை கழட்டிவிடுங்கள், அதிமுக உடைத்துதருகிறோம் நீங்கள் ஆட்சியமையுங்கள் என ஸ்டாலினுக்கு தகவல் அனுப்பியது பாஜகவும் பாஜக அதிமுக அணியும். திமுக அதனை செய்யாது என மறுத்துவிட்டார்.

2021ல் திமுக ஆட்சிக்கு வந்தபின்பும் காங்கிரஸ்சை கழட்டிவிட்டால் நிதிகளை தருகிறோம் எனச்சொன்னது பாஜக. முதலமைச்சர் ஸ்டாலின் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஆளுநர் வழியாக தமிழ்நாடு அரசுக்கு தரப்பட்ட பெரிய பெரிய நெருக்கடிகளை தமிழகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. அத்தனை நெருக்கடிகளை சட்டத்தின் உதவியோடும், அரசியல் ரீதியாகவும் அடித்து நொருக்கி களத்தில் செயல்பட்டு தமிழ்நாட்டை பொருளாதாரத்தில், கல்வியில், சுகாதாரத்தில், தொழில்வளர்ச்சியில், பெண்கள் முன்னேற்றத்தில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக்கி காட்டினார். பாஜகவை எதிர்த்து நின்ற ஸ்டாலினை தான் மக்கள் தோற்கடித்துள்ளனர்.

தேர்தல் களத்தில் வெற்றி – தோல்வி என்பது இயல்பானது. இதனை புதியதாக அதிகாரத்துக்கு வரும் தற்குறிகள் புரிந்துக்கொள்ளவில்லை, அவர்கள் புரிந்துக்கொள்ளவும்மாட்டார்கள். அதெல்லாம் ஒருபுறம்மிருக்கட்டும்.

அரசியல் சாசனப்படி நாடாளுமன்றமோ – சட்டமன்றமோ – உள்ளாட்சி அமைப்புகளோ எதுவாக இருந்தாலும் ஆட்சியமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை இருந்தால் மட்டுமே அதிகார நாற்காலியில் அமரப்பார்கள். ஒருவேலை தொங்கு சட்டசபை அமைந்தால் அதிக சீட் வாங்கி வெற்றி பெற்றுள்ள கட்சியை ஆளுநர் என்பவர் ஆட்சியமைக்க அழைக்கவேண்டும். பதவியேற்றபின் ஆளுநர் குறிப்பிடும் நாளில் தங்களுக்கு ஆதரவு இருப்பதை சட்டமன்றத்தில் வெளிப்படுத்தவேண்டும், இதுதான் நடைமுறை.

இந்த தேர்தலில் நடிகர் விஜய் கட்சியிடம் 108 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். ஆட்சியமைக்க இன்னும் 11 எம்.எல்.ஏக்கள் தேவை.  இரண்டாவது அதிக எம்.எல்.ஏக்களை வைத்துள்ள திமுக எதிர்கட்சியாக செயல்படுகிறோம் என அறிவித்துவிட்டது. மூன்றாவதாக அதிக எம்.எல்.ஏக்களை வைத்துள்ள அதிமுக, விஜய் கட்சிக்கு ஆதரவில்லை எனச்சொல்லிவிட்டது. திமுகவுடனான கூட்டணியை உடைத்துக்கொண்டு 5 எம்.எல்.ஏக்களுடன் ஓடிப்போய் தவெகவுடன் துண்டுப்போட்டு உட்கார்ந்துக்கொண்டது காங்கிரஸ், விஜய்யும் ஏற்றுக்கொண்டார். அடுத்ததாக விசிக, இடதுசாரிகள், பாமக போன்றவை விஜய்யுடன் கைகோர்க்க பின்வாசல் வழியாக பேசுகிறார்கள், கூட்டணி ஆட்சிக்கு அடிப்போடுகிறார்கள். தொங்கு சட்டசபை அமைந்தால் இதுயெல்லாம் நடக்கும்தான். குதிரை பேரங்களும் நடக்கச்செய்யும்.

தவெக நிர்வாகிகள் அதிமுகவுடன் கூட்டணி ஆட்சிக்கு பேச பேரங்கள் ஒத்துவராததால் அதுவும் பாதியில் நிற்கிறது.

காங்கிரஸ்சுடன் எந்த கட்சி கூட்டணி வைத்தாலும் பாஜக தனது கோபத்தைக்காட்டும் என்பது அரசியல் புரிந்தோர் அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ்சை தனித்துவிடச்செய்வதோடு அந்தகட்சியை காலி பெருங்காய டப்பாவாக மாற்றிக்கொண்டு வருவதை பாஜகவின் சமகால அரசியல் ஆட்டத்தில் நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகிறோம். நிலைமை அப்படியிருக்க பெரிய பலமே இல்லாத காங்கிரஸ் ஆதரவை தவெக ஏற்றுக்கொண்டது அரசியல் முதிர்ச்சியற்ற தன்மை. இன்னும் அவருக்கு அரசியலே தெரியவில்லை.

முதல்முறையாக முதலமைச்சராக வந்த வாய்ப்பை சினிமா தனமாகவே இன்னும் அனுகுகிறார் நடிகர் விஜய். அவர் மீதான அதிருப்தியை ஒதுக்கிவிட்டு இதனைப்பாருங்கள். ஆட்சியமைக்க அழைக்கவேண்டும் என்கிற கடிதத்தை தருவதற்காக ஆளுநரை சந்திக்க ராஜ்பவன் செல்லும் நடிகர் விஜய்யின் வீடியோவை பாருங்கள் நான் சொல்வது புரியும்.

 

11 இடங்களை நான்கு, ஐந்து கட்சிகளிடம்மிருந்து ஆதரவு வாங்கி ஆட்சியமைப்பது என்பது தலைமேல் தொங்கும் கத்திப்போன்றது. தேர்ந்த கட்சியாலே அதனை சிறப்பாக செய்யமுடியாது. அப்படியிருக்க அரசியல் அரிச்சுவடி தெரியாத, அரசு நிர்வாகம் செய்யத்தெரியாத, ஒருமாநிலத்தை ஆட்சிச்செய்ய தனது அதிகாரம் குறித்து தெரியாத   விஜய்க்கு தனக்கு பக்கபலமாக ஒருபெரிய கட்சி இருக்கவேண்டும் என்பதை நோக்கி காய்களை நகர்த்தி சில விட்டுக்கொடுத்தல்களை செய்திருக்கவேண்டும். காரணம், விஜய் அறிவித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற அல்லது கடந்தகாலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய அரசின் ஆதரவு பலமாக தேவை. இவர் ஸ்டாலினல்ல அதிகாரத்திலுள்ள பாஜகவை எதிர்த்து நின்று ஆட்சி செய்ய.

பதவியேற்கவிடாமல் கவர்னரை வைத்து சத்தம்மில்லாமல் ஆட்டமாடிக்கொண்டு இருக்கிறத ஒன்றியத்தை ஆளும் பாஜக. அதுக்குறித்து தற்குறிகள் தவிர அனைவருக்கும் தெரிகிறது. அதுக்குறித்து வாய்திறக்கவில்லை. இப்போதுவரை நாங்கள் அதிக எம்.எல்.ஏ சீட்களை பெற்றுள்ளோம், சட்டப்படி எங்களை ஆட்சியமைக்க அழையுங்கள் என இப்போதுவரை விஜய்யால் அல்லது அந்த கட்சியால் வாய் திறந்து பேசமுடியவில்லை. இதிலேயே அவரின் வீரம், அவருக்கு ஓட்டுப்போட்ட தற்குறிகளுக்கு தெரிந்துயிருக்கும். புரியாததுப்போல் நடிப்பார்கள்.

புதிய கல்வி (மும்மொழி) கொள்கையை அமல்படுத்தச்சொல்லி மத்தியரசு, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தவரை அதை எதிர்த்து 5 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தவில்லை. விஜய் ஆட்சியமைக்கப்போகிறார் என்றதும் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. 20 நாட்களில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது, ஆனால் அதுக்குறித்து எதுவும் சொல்லவில்லையே என அச்சத்தில் இருக்கிறார்கள் மக்கள், விஜய் மீது வெறுப்பு உருவாகியுள்ளது. பதவியேற்கும் முன்பே விஜய்யின் தைரியம் ஏலனமாக பார்க்கப்படுகிறது. இவனெல்லாம் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்துட்டால் பாஜக குட்டிக்கரணம் போடச்சொன்னாலும் போடுவான் போலயே என நினைக்கிறார்கள்.

விஜய்யின் காக்கும் கடவுளாக கட்டமைக்கப்பட்ட நாயக பிம்பம் சரிகிறதே என நேற்று நள்ளிரவு முதல் ஒருதகவலை பரப்பிக்கொண்டு இருக்கிறது ஒரு கும்பல். அதாவது திமுக – அதிமுக இணைந்து ஆட்சியமைக்கப்போகிறார்கள், விஜய்யை பார்த்து பயந்து நடுங்குகிறார்கள், அப்படியாயின் அவரின் பலத்தை பாருங்கள் என பரப்புகிறது. வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான் என நினைப்பதுப்போல ஆங்கில ஊடங்களில்தான் இப்படியொரு செய்தி வெளியாக செய்தார்கள். இதன்பின்னால் இருப்பது யார்? விஜய்யை இயக்கிக்கொண்டு இருப்பவர்கள்.

பாஜகவை விடுங்கள், ஆளுநர் தன்னை ஆட்சியமைக்க அழைக்காதது குறித்து முனுமுனுப்பு கூட விஜய்யிடம்மிருந்தோ அவரது கட்சியிடம்மிருந்தோ இதுவரை வரவில்லை. இதுதான் பாசிசம் விஜய்.

இப்போது நீங்கள் முதலமைச்சராக வேண்டும் என்றாலும் நீங்கள் தீயசக்தி எனச்சொன்ன திமுகவும், ஜனநாயக சக்திகளும் தான் குரல் கொடுக்கவேண்டும். உங்களுக்காக ஸ்டாலின் குரல் கொடுப்பாரா என பயப்படவேண்டாம், உங்களுக்காக இல்லையென்றாலும் பாசிசத்துக்கு எதிராக அவர் குரல் கொடுப்பார்.

ஏன் எனில் அவர் ஸ்டாலின், திமுகவின் தலைவர்.