ஞாயிறு, ஏப்ரல் 26, 2026

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்...

 

பெங்களுருவை சேர்ந்த கிரண் என்கிற சப்ட்வேர் இன்ஜினியரை அவனது காதலி பிரேமா, நாற்காலியில் கட்டிப்போட்டு அவன்மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் புகை வருவதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் காப்பாற்ற முயற்சி செய்து முடியாமல்போய்வுள்ளது. பிரேமாவை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தியபோது, பி.டி.எஸ்.எம் செய்தோம், அப்படி நடந்துவிட்டது எனச்சொன்னதை காவல்துறை நம்பவில்லை. திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையாக பார்க்கிறது பெங்களுரூ காவல்துறை.

இப்படி தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. (தமிழ்நாடா என அதிர்ச்சியடைய வேண்டாம் ஒசூர் சம்மந்தமான புகார் ஒன்று இணையத்திலேயே உள்ளது.) அதனை குற்றம்சாட்டப்பட்டவர் பி.டி.எஸ்.எம் எனச்சொல்ல காவல்துறை அதனை திட்டமிட்ட கொலையாகவே வழக்கு பதிவு செய்துள்ளது.

அதுயென்ன BDSM?

இது கலவியில் ஒருவகை சிற்றின்ப விளையாட்டு.

B - Bondage : Use of physical restraints (ropes, handcuffs) to limit movement.

D - Discipline : Rules-based interaction involving a dominant partner and a submissive partner.

S - Sadism : Deriving pleasure from inflicting

M - Masochism : masochism pain or intense sensation.

நீங்கள் தமிழ்படுத்தி படித்துக்கொள்ளுங்கள். இதுக்குறித்து எளிமையாக சொல்லவேண்டும் என்றால் உணவில் ஒருவருக்கு இட்லி பிடிக்கும், இன்னொருவருக்கு தோசை, மற்றவருக்கு பூரி, சிலருக்கு பரோட்டா, மிகச்சிலருக்கு உப்புமா பிடிக்கும். இப்படித்தான் கலவியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதம் பிடிக்கும். தம்பதிகளில் ஒருவருக்கு பிடித்தது மற்றவருக்கு பிடிக்காது. டுபாகூர் செக்ஸாலஜிஸ்ட் மருத்துவர்களை தாண்டி உண்மையான செக்ஸாலஜிஸ்ட் மருத்துவர்களின் விளக்கங்கள் மூலம் அதுக்குறித்து தெளிவாக தெரிந்துக்கொள்ளமுடியும்.

இந்த பி.டி.எஸ்.எம் குறித்த பயிற்சி வகுப்புகள் சென்னை, பெங்களுரூவில் நடப்பதாக இணைய நட்பு பட்டியலில் உள்ள ஒருவர் ஆச்சர்யத்துடன் வெளியிட்ட விளம்பரத்தை கண்டேன். அந்த விளம்பரத்தில் பி.டி.எஸ்.எம் பாதுகாப்பாக செய்வது குறித்த பயிற்சி எனச்சொல்லியிருந்தார்கள். எனக்கு பி.டி.எஸ்.எம் குறித்தெல்லாம் அதிர்ச்சியெல்லாம் இல்லை. பலஆண்டுகளுக்கு முன்பே நாராயணரெட்டி போன்ற மருத்துவர்களின்  கட்டுரைகள் வழியாக இதுப்பற்றி கேள்விப்பட்டுள்ளேன். அதன்பின் கோவில் சிற்பங்கள், தண்டராம்பட்டு, தானிப்பாடியில் உள்ள கலவி குளத்தின் சிற்பங்களில் பார்த்துள்ளேன். நிஜத்திலும் அப்படிப்பட்ட ஒன்றிரண்டு பேரை நேரிலும் பார்த்துள்ளேன். இப்போது பி.டி.எஸ்.எம் க்கு பயிற்சி வழங்குகிறார்கள் என்பதுதான் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதுமட்டும்மல்ல மாஸ்ட்ரூபேட் செய்யவும் பயிற்சி தருகிறார்கள் என்கிற விளம்பரத்தையும் பார்த்தபோது எனக்கு சிரிப்பாக இருந்தது. இந்த 2கே தலைமுறை எல்லாவற்றிலும் தெளிவு என நினைக்கிறோம். ஆனால் அதிலும் 100க்கு 10 பேராவது அம்மாஞ்சியாக அதாவது இணையருக்கு முத்தம் தந்தால்போதும் குழந்தை பிறந்துவிடும் கேட்டகிரியாகவே இருக்கிறார்கள் எனத்தெரிகிறது.

மரணித்த அந்த இளைஞனின் அப்பா தன் மகன் குறித்து சொன்னதாக எழுதியிருந்தார்கள்.தன் மகன் நல்லவன், அவனுக்கு பெண்களிடம் பேசுவதே தெரியாது எனச்சொல்லியிருந்தார். உலகத்தில் 90 சதவித பெற்றோர்கள் என் பிள்ளைகள் அப்பாவி என நினைக்கிறார்கள், நம்புகிறார்கள், வாதாடுவார்கள். தன் பிள்ளைகளின் தவறுகள் தெரியாதவரை.

உலகம் முழுவதும்மே பி.டி.எஸ்.எம் விரும்பும் கேட்டகிரி மனிதர்கள் குறிப்பிட்ட சதவிதம் இருக்கிறார்கள். உணவே ஆளுக்கு ஆள் மாறுப்படும்போது கலவி மாறுப்படாதா என்ன? மறுப்படும். சட்டத்திற்கு உட்பட்டு, யாருக்கும் பாதிப்பு இல்லாமல் இணையருக்குள் நடக்கும் கலவி தவறில்லை. அதிலும் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். அப்படி நஞ்சாகி ரத்த காவு வாங்கியபின்பே விவகாரம் வெளியே வருகிறது.

வெள்ளி, ஏப்ரல் 17, 2026

கார்ப்பரேட் கம்பெனிகளும்........ இளசுகளை சீரழிக்கும் அதன் உளவியல் விதிகளும்.

 

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் செயல்படும் டி.சி.எஸ் நிறுவனத்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு தந்தார்கள், மதமாற்றம் செய்ய முயன்றார்கள் என தரப்பட்ட புகாரின் அடிப்படையில் 7 டீம் லீடர்களையும், ஊழியர்களின் புகார்களை விசாரிக்காத எச்.ஆர் என்கிற மனிதவள மேம்பாட்டு அதிகாரியான ஒரு பெண்மணியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை.

இதில் கவனிக்கவேண்டியது சம்மந்தப்பட்ட 6 பேரும் குறிப்பிட்ட ஒரு மதத்தை சேர்ந்தவர்கள். இங்குதான் சந்தேகம் வருகிறது. காரணம், கார்ப்பரேட் அலுவலகத்தில் மதப்பிரச்சாரம் என்பதெல்லாம் காமெடிக்கானது. இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களை நடத்துபவர்களின் பின்னணியை பார்த்தாலே தெரிந்துவிடும். சங்கிகளை விட மோசமான சங்கிகள் அவர்கள். இந்தியாவில் 90 சதவித நிறுவனங்கள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுடையது. அந்த நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் தான் கோலோச்சுகிறார்கள். இந்த சங்கிகள் திறமையான பிறமதத்தவரை வேலைக்கு எடுத்தாலும் முதலாளிகள் என்ன வழியோ அந்த வழியவே இவர்கள் கடைப்பிடிப்பார்கள். அதாவது முதலாளிகளின் விருப்பத்தின்படியே உணவு, உடை கூட இருக்கும். கார்ப்பரேட் நிறுவனங்களின் கேன்டினில் அசைவ உணவு வெளியில் இருந்துக்கூட எடுத்துவந்து சாப்பிடகூடாது என சிலநிறுவனங்கள் பாலிஸியாகவே வைத்துள்ளன. இப்படி யார் செய்வார்கள் என யோசித்துப்பாருங்கள்? அப்படியிருக்க மதப்பிரச்சாரம் செய்தார்கள் என்பதை ஏற்கமுடியாது.

அதேநேரத்தில் பாலியல் குற்றத்தை புறந்தள்ளமுடியாது. ஊழியர்களின் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் நிறுவன தலைமை பீடங்கள் இப்போதுயெல்லாம் கண் மூடிக்கொள்கிறார்கள். பல நிறுவனங்களில் எச்.ஆர்கள், சாதாரண ஊழியர்களுக்கு பதில் டிப்பார்ட்மென்ட் ஹெட்களுக்கு சாதகமாகவே செயல்படுகிறார்கள், புகார்களை நியாயமாக விசாரிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு.

கார்ப்பரேட் பணி என்பது எவ்வளவுக்கு எவ்வளவு நெருக்கடியானதோ அதே அளவுக்கு கட்டற்ற சுதந்திரத்தை வாரி வழங்குகிறது. அது இன்று நேற்றல்ல ஐ.டி நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி பெறத்துவங்கியபோதிலிருந்தே அதைச்சார்ந்து பாலியல் பிரச்சனைகள் எழத்துவங்கியுள்ளன, அது கடந்தகாலத்தில் உயிர்களையும் பலி வாங்கியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு அதுக்குறித்து பலசெய்திகள் வெளியாகும், இப்போது அதுக்குறித்து யாரும் எங்கும் எந்த தளத்திலும் பேசுவதில்லை. தற்போதைய சூழலில் பார்ட்டி, ட்ரக்ஸ், செக்ஸ் போன்றவற்றை சமூகம் நார்மலைஸ் செய்துவருகிறது, கார்ப்பரேட், மெட்ரோ சிட்டிகளில் இது சர்வே சாதாரணம் என இதுக்குறித்து பெரும்பாலும் எந்த ஊடகமும் பேசுவதில்லை. புகாராகி வெளிவந்தபின்பும் பத்தோடு ஒன்றாக பேசுகிறது.

கார்ப்பரேட் நிறுவனம் மட்டும்மல்ல பெரும்பாலும் எந்த இடத்திலும் சக ஊழியர்கள் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு தருகிறார்கள் என எந்த பெண் ஊழியரும் எச்.ஆர் உட்பட எங்கும் புகார் தந்துவிடமுடியாத சூழ்நிலையே பெரும்பாலும் உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களில் திறமைக்குதான் மரியாதை என்பார்கள், சமத்துவம் பேசுகிறார்கள். உண்மையில் அது ஆணாதிக்க உலகமாகவே உள்ளது. டீம் லீடர்கள், எச்.ஆர்கள் என வேலை வாங்கும் இடத்திலுள்ள உயரதிகாரிகள் டீம் சேர்ந்துக்கொண்டு பெண் ஊழியர்களை பாலியல் தொந்தரவு தருவது என்பது தொடர்கதையாகவே இருக்கிறது. சில பெண்கள் நேரடியாகவே அதனை எதிர்த்து கேட்டுவிட்டு போங்கடா நீங்களும் உங்க வேலையும் என உதறியவர்கள் உண்டு. பலர் தங்களுடைய குடும்ப சூழ்நிலையால் சகித்துக்கொண்டு வேலை செய்பவர்களும் உண்டு, சிலர் இதனையே அட்வான்டேஜ்ஜாக எடுத்துக்கொண்டு அட்ஜஸ் செய்துக்கொண்டு உயர்கிறவர்களும் உண்டு. இதில் புகார் தெரிவிப்பவர்களை, மசியாதவர்களை டார்கெட் செய்து வெளியேற்றுவதை வழக்கமாக வைத்துள்ளது ஐடி உலகம்.

15 ஆண்டுகளுக்கு முன்பு வார இறுதி நாட்களில் வாரவிடுமுறை, மாதவிடுமுறை, ஆண்டு விடுமுறை என விதவிதமாக சம்பளத்தோடு விடுமுறை தந்து சுற்றுலா அனுப்புவார்கள். இதெல்லாம் தப்பில்லை என மூளைச்சலவை செய்யப்பட்டு ட்ரக்ஸ்க்கு, பார்ட்டிகளுக்கு அடிமையாக்கினார்கள். இதன்பின்னால் பெரிய உளவியல் பாடம் இருக்கிறது. காலப்போக்கில் நிறுவனத்தின் லாபம் பாதிக்கிறதே என ஐடி நிறுவனங்கள் உட்பட பெரிய நிறுவனங்கள் ஊழியர்களை ட்ரிப் அனுப்புவதை மெல்லமெல்ல குறைத்தது. ஆனால் அதனை பார்த்து, கேள்விப்பட்ட பெரும்பாலான இளசுகள் அதனை விடத்தாயாரில்லை, நீங்கள் இன்ஸ்டாவில் பாருங்கள் என்னடா இப்படியெல்லாமா பார்ட்டிக்கு பெயர் வைப்பிங்க என இருக்கிறது. பலபல ஆஃபர்கள் தந்து பார்ட்டிக்கு அழைக்கிறார்கள். அந்த விளம்பரத்தில் ஒன்றுமட்டும் நீக்கமறவுள்ளது. அதாவது, பெண்களுக்கு என்ட்ரீ ப்ரீ அல்லது மிகமிக குறைந்த கட்டணம். யுவாதிகளுக்கு சரக்கு ப்ரீயாக தருவதாகவும் விளம்பரம் செய்கிறார்கள்.

நகரம் விட்டு நகரம், மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு சென்று விடுதியில் தங்கி வேலை செய்யும் இளைஞனுக்கும் – இளைஞிக்கு பெரிய சுதந்திரம் கிடைத்ததாக நினைக்கிறார்கள். தங்களை இனி கட்டுப்படுத்த குடும்பத்தார் இல்லை, என்ன செய்கிறாய் எனக்கேட்க கண்காணிக்க யாரும்மில்லை. கையில் மாதாமாதம் தேவைக்கு அதிகமான சம்பளம் வருகிறது நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்து செய்பவர்களே அதிகமாக உள்ளார்கள். இந்த மிடில் க்ளாஸில் இருந்துவருபவர்களைத்தான் அனைவரும் டார்க்கெட் செய்கிறார்கள்.

குட்டி கோவா என கொண்டாடப்பட்டும் பாண்டிச்சேரிக்கு கல்லூரி, ஐடி இளசுகள் என படையெடுத்து வந்து வாராவாரம் குவிகிறார்கள். பார்ட்டி, டான்ஸ் என விதவிதமாக நடக்கிறது. எல்லாமே கிடைக்கிறது, எல்லாமுமே. சில மாதங்களுக்கு முன்பு பப் ஒன்றில் தகராறு நடந்து மரணம் நடக்கிறது. அதன் விசாரணையின்போது, பிரபல கல்லூரி விடுதியில் இருந்தும், பெங்களுரு ஐ.டியில் பணியாற்றும் பையன்கள் பாண்டிச்சேரிக்கு வந்து பார்ட்டி செய்து புகாரில் சிக்கியபின்பே குடும்பத்தாருக்கே தெரிந்தது. ஏலகிரியில் ஒரு ஐ.டி பெண் விடுதி அறையில் இறந்து கிடந்தபின்பே குடும்பத்தாருக்கு தெரிந்தது. வேலூரில் ஒரு கார் விபத்தில் சிக்கியபோதே தன் மகள் நண்பர்களோடு சென்னையில் இருந்து ஏலகிரி ட்ரிப் போனது ஐதராபாத்தில் இருந்த பெற்றோர்களுக்கு தெரிந்தது. இப்படி பலவற்றை சொல்லமுடியும்.

நாம் வீட்டுக்கு தெரியாமல் செய்கிறோம்………… செல்கிறோம். இங்கே நம்மை யாருக்கு தெரியும், நாம் செய்வதை யாரும் கண்டுபிடிக்க முடியாது என நினைக்கும் 2கே கிட்ஸ், ஜென் ஸி தலைமுறையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. அவர்கள் முதலில் தங்களேயே ஏமாற்றிக்கொள்கிறார்கள். குடும்பத்தார், நண்பர்கள் அவர்கள் மீது வைக்கும் அதீத நம்பிக்கையை, அவநம்பிக்கையாக்கும்போது அதன்பின் அவர்கள் மீது யாருக்கும் எக்காலகத்திலும் நம்பிக்கை வராது. அதை அவர்கள் உணரும்போது அவர்கள் எடுக்கும் முடிவு என்பது விபரீதமாகவே இருக்கிறது. நான் சமீபத்தில் அப்படி இரண்டு இளைஞர்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்ததை பார்த்து வேதனை மட்டுமே படமுடிந்தது.

தங்களின் லாப வெறிக்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்படி இளசுகளின் வாழ்க்கையை சீரழிக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களில் விசாரணை கமிட்டியில் வெளிநபர்கள், நிறுவனத்தில் சங்கம் அமைக்கும் உரிமை, அரசின் சட்டவிதிகள் கடைப்பிடிக்காதவரை இதுப்போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகவே இருக்கும்.

சனி, ஏப்ரல் 04, 2026

ஆணென்ன? பெண்ணெண்ண?


 


தொலைக்காட்சிகளில் சுட்டிகள் நிகழ்ச்சி என்கிற பெயரில் குழந்தைகளிடம் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் குறித்து கேட்பார்கள். இமான் அண்ணாச்சி உட்பட இந்நிகழ்ச்சியை நடத்தினார்கள். மழலைகள் வீட்டில் அம்மா கோபப்படுவது, அப்பா மிரட்டுவது, தாத்தா பாட்டி குறித்தும், பள்ளியில் நடப்பது குறித்தெல்லாம் சொல்வார்கள். இப்போது அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நிகழ்த்துகிறார்களா எனத்தெரியவில்லை?.

 

இந்தவாரத்தில் அப்படியொரு நிகழ்ச்சியை அமெரிக்கா தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நடந்ததை இன்ஸ்டா ரீல்ஸில் பார்த்தேன். நீங்களும் பார்த்துயிருக்கலாம் அல்லது பார்க்கும் சூழ்நிலை வரும். நான்கு அல்லது ஐந்து வயது குட்டி குழந்தையிடம் தொகுப்பாளினி பேசும்போது, என்னை என் அறையில் விட்டுவிட்டு அம்மாவும் – அப்பாவும் தங்களது அறைக்குள் போய் கதவை சாத்திக்கொள்வார்கள். கொஞ்ச நேரத்தில் ஓ மை காட் என மம்மி முனகும் சத்தம் வரும் எனச்சொல்வார். அதைக்கேட்டு அந்த நிகழ்ச்சி நடத்திய தொகுப்பாளி மற்றும் பார்வையாளர்கள் வரை ஜாலியாக சிரிப்பார்கள். பெற்றோர் வெட்கப்படுவர்.

 

இதுப்போன்ற பதிலை நம் இந்திய சமூக குழந்தைகள் சொல்லியிருந்தால் அக்குழந்தையை அப்பெற்றோர் பொளந்துக்கட்டியிருப்பார்கள். முதலில் தொலைக்காட்சிகள் அக்குழந்தை சொன்னதை ஒளிப்பரப்பியும் இருக்கமாட்டார்கள். காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான் இங்கு காமத்தை புனிதமாக்கி வைத்துள்ளோம். அதுக்குறித்து பொதுவெளியில் பேசவேகூடாது, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் அதுக்குறித்து விவாதம்மல்ல சின்ன சின்ன கேள்விக்குகூட பதில் சொல்வது கிடையாது. இதெல்லாம் நம்ம பிள்ளையிடம் நாம் எப்படி பேசுவது என தயங்குகின்றனர். பள்ளி – கல்லூரிகளில் பாடத்திட்டமாக கலவியல் கல்வியும் இருக்ககூடாது என எதிர்த்துவருகிறார்கள் கலாச்சார புண்ணாக்குகள். பின் எங்கிருந்து அவர்களுக்கு பாலியல் சார்ந்த கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும்?

 

பாலியல் தேவை என்பது ஒவ்வொரு உயிரினத்துக்கும் தேவை. பாலியல் உறவுதான் அடுத்தடுத்த சந்ததிகளை உருவாக்கும். நம் இந்திய சமூகம் அதனை கலச்சாரம், பண்பாடு, கற்பு என பேசவோ அல்லது சொல்லித்தரவோ மறுத்துவருகிறது. அதனால்தான் அதன்மீது பெரும் ஈர்ப்பு இருந்துவருகிறது.

 

கடந்த ஒருவாரம் இந்த செய்தி இணையத்தில் பரவியது, இன்று அது பிரபல செய்தித்தாளிலும் வந்துள்ளது. இதை இவ்வளவு டீப்பாக செய்தியாக்கவேண்டியதன் அவசியம் எங்கிருந்துவருகிறது என்றால் காமத்தை புனிதமாக்கி வைத்திருப்பதால்தான் திருமணத்துக்கு பிந்தைய பாலியல் உறவுக்கான பிரபலமான மொபைல் ஆப் பாம் அது. அதில் 40 லட்சம் இந்தியர்கள் இணைந்துள்ளார்களாம். பெங்களுரூ முதலிடம், ஐதராபாத், டெல்லி, மும்பை போன்றவை அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாக கூறுகிறது அச்செய்தி. அந்த செய்தியில் நுணுக்கமாக ஒன்றை பதிவு செய்துள்ளார்கள். அதாவது, இந்த ஆப் பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெண்கள் அதிகமாக இணைந்துள்ளார்கள் என்பதாகும். அதுயென்ன பெண்கள் அதிகமாகிறார்கள்? ஆண்களுக்கு மட்டும்தான் முட்டிக்கிட்டு பாலியல் உணர்வு வரும், பெண்களுக்கு பாலியல் உணர்வு எழாதா? அவர்கள் என்ன மரக்கட்டையா? பொம்மையா? ஜடமா?

 

ஆணுக்கு எப்படி பாலியல் உணர்வு எழுமோ, அதேபோல் பெண்ணுக்கும் வரும். மூன்றாம் பாலினத்தவருக்கும் பாலியல் உணர்வு எழும். அது மனிதனின் உடல் ஹார்மோன் செய்யும் செயல். குறிப்பிட்ட வயது வந்ததும் பாலியல் உணர்ச்சி தானாகவே எல்லா உயிரினங்களுக்கும் வரும். மனிதர்கள் அந்த உணர்ச்சியை சட்டப்படி அல்லது உரிமைப்படி போக்கிக்கொள்ளத்தான் திருமணம் செய்துவைப்பது. இந்த திருமணம் வழியாக பாலியல் தேவை தீர்வு ஏற்படுவதோடு தங்கள் சந்ததியை உருவாக்கவும் முடிகிறது.

 

கள்ள உறவுகளில் ஆண்கள் அதிகரித்தால் தப்பில்லை? பெண்கள் அதிகரித்தால் தப்பா என்ன? திருமணத்துக்கு பிந்தைய உறவுகளை ஏன் நாடுகிறார்கள்?  

 

தங்களது இணையர் தனக்கான பாலியல் தேவையை பூர்த்தி செய்யாதபோது இப்படிப்பட்ட கள்ளஉறவுகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். அதற்கும் வாய்ப்பில்லாதவர்கள் இதுப்போன்ற ஆப்களை தங்களுக்கான வடிகால்களாக பயன்படுத்துகிறார்கள். அதன்மூலம் நடக்கும் குற்றசம்பவங்கள், மோசடிகள் தனி.

 

இப்படியொரு இக்கட்டான நிலையை வைத்திருப்பது நமது சமூக கட்டமைப்பும், கல்வியும் தான். கோவில்களில் பாலியல் சிற்பங்கள் இருக்கலாம். கல்வி நிலையங்களில் கூடாது என்பது என்ன லாஜிக் எனத்தெரியவில்லை. பாலியல் கல்வி பாடம் பள்ளி – கல்லூரியில் இருந்தால் அதுக்குறித்து தெரிந்துக்கொள்வார்கள், வீட்டில் பெற்றோர் தங்களது பிள்ளைகளிடம் அதுக்குறித்து பேசி, விளக்கினால் இப்படியொரு நிலை வராது.  

 

கலவியில் தனக்கு என்ன தேவை என்பதை இணையர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொள்வது இல்லை, புரிந்துக்கொள்வதும் இல்லை. காரணம் நாம் கேட்டால் கணவர் என்ன நினைத்துக்கொள்வாரோ என பெண்களும், எனக்கு எல்லாம் தெரியும், உனக்கு என்ன தேவை என்பது எனக்கு தெரியும் என்கிற ஏகாம்பரமாக ஆணாதிக்கவாதியாக இருக்கிறார்கள். கணவன் – மனைவியே வெளிப்படையாக பாலியல் குறித்து பேசிக்கொள்ள முடியாத அளவுக்கே இச்சமூகம் அதனை கட்டமைத்துவைத்துள்ளது. கட்டிலறை என்பது இணையர்களின் மனசாட்சி பேசும் இடம். இணையர்களின் மனசாட்சி அங்கே பேசவில்லை என்றால் இதுப்போன்ற ஆப் வழிதான் பேசவேண்டி வரும்.


 

 

மேற்கத்திய நாடுகளில் பாலியல் உணர்வுகளை, உறவுகளை குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே பெற்றோர்கள் புரியவைக்கிறார்கள், அதனால் அவர்கள் வளர்ந்தபின்பும் அதனை சாதாரணமாக கடந்துப்போகிறார்கள். மேற்கத்திய நாடுகளில் அரைநிர்வாண போராட்டம், முழுநிர்வாண போராட்டம் என நூற்றுக்கணக்கான பெண்கள் நடத்துவர். ஆயிரக்கணக்கான மக்கள் அதனை பார்த்துக்கொண்டு கடந்துப்போவார்கள். கடற்கரைகளில் குளியலறை உடையுடன் குவிந்துக்கிடப்பார்கள், யாரும் அதனைப்பார்த்து உணர்ச்சி வசப்படுவதில்லை. ஆசிய நாடுகளில் நாம் நம் பிள்ளைகளுக்கு எதுவும் சொல்லித்தருவதில்லை, கல்வியும் கற்றுத்தருவதில்லை. அதனால் இங்கே லேசாக பெண்களின் இடுப்பு தெரியுமா? கிளிவேட்ச் தெரியுமா? என அலையவைக்கிறது. அவையெல்லாம் உடலின் பாகங்கள் என உணராமல் அதைப்பார்த்து கிளர்ச்சி அடையவைக்கிறது. அதனால்தான் இதுப்போன்ற உறவுகள் அதிகரிக்கிறது. இன்று தன்னிடம் 40 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளதாக கூறுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் அது அதிகரிக்கவே செய்யும். ஏன் எனில் 90s, 2K, GenZ புதுமையை நோக்கி நகர்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்.