சனி, ஏப்ரல் 04, 2026

ஆணென்ன? பெண்ணெண்ண?


 


தொலைக்காட்சிகளில் சுட்டிகள் நிகழ்ச்சி என்கிற பெயரில் குழந்தைகளிடம் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் குறித்து கேட்பார்கள். இமான் அண்ணாச்சி உட்பட இந்நிகழ்ச்சியை நடத்தினார்கள். மழலைகள் வீட்டில் அம்மா கோபப்படுவது, அப்பா மிரட்டுவது, தாத்தா பாட்டி குறித்தும், பள்ளியில் நடப்பது குறித்தெல்லாம் சொல்வார்கள். இப்போது அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நிகழ்த்துகிறார்களா எனத்தெரியவில்லை?.

 

இந்தவாரத்தில் அப்படியொரு நிகழ்ச்சியை அமெரிக்கா தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நடந்ததை இன்ஸ்டா ரீல்ஸில் பார்த்தேன். நீங்களும் பார்த்துயிருக்கலாம் அல்லது பார்க்கும் சூழ்நிலை வரும். நான்கு அல்லது ஐந்து வயது குட்டி குழந்தையிடம் தொகுப்பாளினி பேசும்போது, என்னை என் அறையில் விட்டுவிட்டு அம்மாவும் – அப்பாவும் தங்களது அறைக்குள் போய் கதவை சாத்திக்கொள்வார்கள். கொஞ்ச நேரத்தில் ஓ மை காட் என மம்மி முனகும் சத்தம் வரும் எனச்சொல்வார். அதைக்கேட்டு அந்த நிகழ்ச்சி நடத்திய தொகுப்பாளி மற்றும் பார்வையாளர்கள் வரை ஜாலியாக சிரிப்பார்கள். பெற்றோர் வெட்கப்படுவர்.

 

இதுப்போன்ற பதிலை நம் இந்திய சமூக குழந்தைகள் சொல்லியிருந்தால் அக்குழந்தையை அப்பெற்றோர் பொளந்துக்கட்டியிருப்பார்கள். முதலில் தொலைக்காட்சிகள் அக்குழந்தை சொன்னதை ஒளிப்பரப்பியும் இருக்கமாட்டார்கள். காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான் இங்கு காமத்தை புனிதமாக்கி வைத்துள்ளோம். அதுக்குறித்து பொதுவெளியில் பேசவேகூடாது, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் அதுக்குறித்து விவாதம்மல்ல சின்ன சின்ன கேள்விக்குகூட பதில் சொல்வது கிடையாது. இதெல்லாம் நம்ம பிள்ளையிடம் நாம் எப்படி பேசுவது என தயங்குகின்றனர். பள்ளி – கல்லூரிகளில் பாடத்திட்டமாக கலவியல் கல்வியும் இருக்ககூடாது என எதிர்த்துவருகிறார்கள் கலாச்சார புண்ணாக்குகள். பின் எங்கிருந்து அவர்களுக்கு பாலியல் சார்ந்த கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும்?

 

பாலியல் தேவை என்பது ஒவ்வொரு உயிரினத்துக்கும் தேவை. பாலியல் உறவுதான் அடுத்தடுத்த சந்ததிகளை உருவாக்கும். நம் இந்திய சமூகம் அதனை கலச்சாரம், பண்பாடு, கற்பு என பேசவோ அல்லது சொல்லித்தரவோ மறுத்துவருகிறது. அதனால்தான் அதன்மீது பெரும் ஈர்ப்பு இருந்துவருகிறது.

 

கடந்த ஒருவாரம் இந்த செய்தி இணையத்தில் பரவியது, இன்று அது பிரபல செய்தித்தாளிலும் வந்துள்ளது. இதை இவ்வளவு டீப்பாக செய்தியாக்கவேண்டியதன் அவசியம் எங்கிருந்துவருகிறது என்றால் காமத்தை புனிதமாக்கி வைத்திருப்பதால்தான் திருமணத்துக்கு பிந்தைய பாலியல் உறவுக்கான பிரபலமான மொபைல் ஆப் பாம் அது. அதில் 40 லட்சம் இந்தியர்கள் இணைந்துள்ளார்களாம். பெங்களுரூ முதலிடம், ஐதராபாத், டெல்லி, மும்பை போன்றவை அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாக கூறுகிறது அச்செய்தி. அந்த செய்தியில் நுணுக்கமாக ஒன்றை பதிவு செய்துள்ளார்கள். அதாவது, இந்த ஆப் பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெண்கள் அதிகமாக இணைந்துள்ளார்கள் என்பதாகும். அதுயென்ன பெண்கள் அதிகமாகிறார்கள்? ஆண்களுக்கு மட்டும்தான் முட்டிக்கிட்டு பாலியல் உணர்வு வரும், பெண்களுக்கு பாலியல் உணர்வு எழாதா? அவர்கள் என்ன மரக்கட்டையா? பொம்மையா? ஜடமா?

 

ஆணுக்கு எப்படி பாலியல் உணர்வு எழுமோ, அதேபோல் பெண்ணுக்கும் வரும். மூன்றாம் பாலினத்தவருக்கும் பாலியல் உணர்வு எழும். அது மனிதனின் உடல் ஹார்மோன் செய்யும் செயல். குறிப்பிட்ட வயது வந்ததும் பாலியல் உணர்ச்சி தானாகவே எல்லா உயிரினங்களுக்கும் வரும். மனிதர்கள் அந்த உணர்ச்சியை சட்டப்படி அல்லது உரிமைப்படி போக்கிக்கொள்ளத்தான் திருமணம் செய்துவைப்பது. இந்த திருமணம் வழியாக பாலியல் தேவை தீர்வு ஏற்படுவதோடு தங்கள் சந்ததியை உருவாக்கவும் முடிகிறது.

 

கள்ள உறவுகளில் ஆண்கள் அதிகரித்தால் தப்பில்லை? பெண்கள் அதிகரித்தால் தப்பா என்ன? திருமணத்துக்கு பிந்தைய உறவுகளை ஏன் நாடுகிறார்கள்?  

 

தங்களது இணையர் தனக்கான பாலியல் தேவையை பூர்த்தி செய்யாதபோது இப்படிப்பட்ட கள்ளஉறவுகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். அதற்கும் வாய்ப்பில்லாதவர்கள் இதுப்போன்ற ஆப்களை தங்களுக்கான வடிகால்களாக பயன்படுத்துகிறார்கள். அதன்மூலம் நடக்கும் குற்றசம்பவங்கள், மோசடிகள் தனி.

 

இப்படியொரு இக்கட்டான நிலையை வைத்திருப்பது நமது சமூக கட்டமைப்பும், கல்வியும் தான். கோவில்களில் பாலியல் சிற்பங்கள் இருக்கலாம். கல்வி நிலையங்களில் கூடாது என்பது என்ன லாஜிக் எனத்தெரியவில்லை. பாலியல் கல்வி பாடம் பள்ளி – கல்லூரியில் இருந்தால் அதுக்குறித்து தெரிந்துக்கொள்வார்கள், வீட்டில் பெற்றோர் தங்களது பிள்ளைகளிடம் அதுக்குறித்து பேசி, விளக்கினால் இப்படியொரு நிலை வராது.  

 

கலவியில் தனக்கு என்ன தேவை என்பதை இணையர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொள்வது இல்லை, புரிந்துக்கொள்வதும் இல்லை. காரணம் நாம் கேட்டால் கணவர் என்ன நினைத்துக்கொள்வாரோ என பெண்களும், எனக்கு எல்லாம் தெரியும், உனக்கு என்ன தேவை என்பது எனக்கு தெரியும் என்கிற ஏகாம்பரமாக ஆணாதிக்கவாதியாக இருக்கிறார்கள். கணவன் – மனைவியே வெளிப்படையாக பாலியல் குறித்து பேசிக்கொள்ள முடியாத அளவுக்கே இச்சமூகம் அதனை கட்டமைத்துவைத்துள்ளது. கட்டிலறை என்பது இணையர்களின் மனசாட்சி பேசும் இடம். இணையர்களின் மனசாட்சி அங்கே பேசவில்லை என்றால் இதுப்போன்ற ஆப் வழிதான் பேசவேண்டி வரும்.


 

 

மேற்கத்திய நாடுகளில் பாலியல் உணர்வுகளை, உறவுகளை குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே பெற்றோர்கள் புரியவைக்கிறார்கள், அதனால் அவர்கள் வளர்ந்தபின்பும் அதனை சாதாரணமாக கடந்துப்போகிறார்கள். மேற்கத்திய நாடுகளில் அரைநிர்வாண போராட்டம், முழுநிர்வாண போராட்டம் என நூற்றுக்கணக்கான பெண்கள் நடத்துவர். ஆயிரக்கணக்கான மக்கள் அதனை பார்த்துக்கொண்டு கடந்துப்போவார்கள். கடற்கரைகளில் குளியலறை உடையுடன் குவிந்துக்கிடப்பார்கள், யாரும் அதனைப்பார்த்து உணர்ச்சி வசப்படுவதில்லை. ஆசிய நாடுகளில் நாம் நம் பிள்ளைகளுக்கு எதுவும் சொல்லித்தருவதில்லை, கல்வியும் கற்றுத்தருவதில்லை. அதனால் இங்கே லேசாக பெண்களின் இடுப்பு தெரியுமா? கிளிவேட்ச் தெரியுமா? என அலையவைக்கிறது. அவையெல்லாம் உடலின் பாகங்கள் என உணராமல் அதைப்பார்த்து கிளர்ச்சி அடையவைக்கிறது. அதனால்தான் இதுப்போன்ற உறவுகள் அதிகரிக்கிறது. இன்று தன்னிடம் 40 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளதாக கூறுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் அது அதிகரிக்கவே செய்யும். ஏன் எனில் 90s, 2K, GenZ புதுமையை நோக்கி நகர்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

வெள்ளி, பிப்ரவரி 20, 2026

ஹீக்அப் கலாச்சாரம்.


நாம் கல்லூரியில் படிக்கும்போது நமக்கு பிடித்த பெண் நம்மை ஒருமுறை திரும்பி பார்க்கமாட்டாளா என மனம் ஏங்கும் தலைமுறை இருந்தது.

காதல் கடிதம் தந்துவிட்டு பதில் வருமா? அண்ணன்களை அழைத்துவருவாளா எனத்தெரியாமல் தவித்த தலைமுறை உண்டு.

அவள் வீட்டு தொலைபேசி எண்ணை கண்டுபிடித்தவன், போன் செய்து ஹலோ சொல்ல வாரக்கணக்கில் பயந்த தலைமுறை உண்டு.

புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து அட்டையில் காதலை வெளிப்படுத்திவிட்டு பதில் வருமா என காத்திருந்தவர்கள் உண்டு.

காதல் வந்தாலும் பார்த்து பேசிக்கொள்வது என்பது கனவாகவே இருந்த தலைமுறையும் உண்டு.

அந்த தலைமுறையெல்லாம் பூமராகிவிட்டார்கள். இன்றைய தலைமுறை வாழ்வியல் முறை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. காதலுக்காக காத்திருப்பதும், கத்தி குத்துகளும், அடிதடிகளும், வீட்டை விட்டு ஓடிப்போவதும், திருட்டு கல்யாணம் செய்துக்கொள்வதுயெல்லாம் கடந்துப்போய் மாமங்கமாகிவிட்டன.

காதல் என்பதற்கு புது அகராதியை உருவாக்கியிருக்கிறது இன்றைய Gen Z தலைமுறை. புதுப்புது ரிலேசன்ஷப்களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது புதியதாக ஹீக்கப் கலாச்சாரம் என ஏதோ ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள் போல. அது லிவிங் டூ கெதர் போன்றது என்கிறார்கள். லிவிங்கில் ஒரு கமிட்மென்ட் இருக்கிறது. இந்த ஹீக்அப் கலாச்சாரத்தில் அப்படியொரு கமிட்மென்ட் கூட கிடையாதாம். அதாவது கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல், உடலுறவு இதனை சாதாரணமாக செய்துக்கொள்வதுதான் ஹீக்அப் கலாச்சாரமாம்.

மச்சி வா போய் டீ சாப்பிட்டுட்டு வருவோம், டார்லிங் வா டின்னர் போகலாம் என அழைப்பதுப்போல் டீல் செய்கிறார்களாம் இந்த ஹீக்அப் கலாச்சாரத்தில். மெட்ரோ சிட்டிகளில், கார்ப்பரேட் பணிகளில் அதாவது ஐடி செக்டாரில் பணியாற்றும் இடங்களில் வாரஇறுதியில் பப் களுக்கு போகும்போது, வெளியே ப்ரண்ட்ஸ் டூர் போகும் இடத்தில் நடக்கிறது என்கிற தகவல்கள் பூமர் அங்கிள்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

2008, 2009 காலக்கட்டத்தில் பிரபலமான இந்தியா டுடே இதழில் பாலியல் சார்ந்த கருத்து கணிப்பு கட்டுரைகள் ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும். திருமணத்துக்கு முன்பு, திருமணத்துக்கு பின்பு பாலியல் உறவுகள், பாலியல் நட்புகள், உறவு பொஷி***சன்ஸ், லெஸ்பி என பல்வேறு விதமான கேள்விகளை முன்வைத்து இந்தியா முழுவதும் சர்வே எடுத்து வெளியிடுவார்கள், ஒவ்வொரு ஆண்டும் அது பரபரப்பாக பேசப்படும். (அந்த சர்வே வெளியீட்டின் பின்னால் வேறு வர்த்தக காரணங்கள் உண்டு) ஆண்டு நினைவில் இல்லை இந்தியா டுடே தமிழ் பதிப்பில் வெளியான பாலியல் உறவு குறித்து நடிகை குஷ்பு சொல்லியிருந்த கருத்து தமிழ்நாட்டில் புயலை உருவாக்கியது. ( தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு என்னவாவது என சிலகட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. ஊருக்கு ஊர் அவர் மீது வழக்கு பதிவு செய்தார்கள். அதன்பின்தான் குஷ்பு அரசியலுக்குள் நுழைந்தார்.)

அப்போது மேற்கத்திய கலாச்சாரம் என நாம் சொல்லிக்கொண்டுயிருந்த கலாச்சாரங்கள் தமிழ்நாட்டின் மெட்ரோநகரங்கள் வரை டேட்டிங் கலாச்சாரம், லிவிங் டூ கெதர், மைக்ரோ ஷிப்ட், Situationships, Open Relationships, ஒன் நைட் செக்****ஸ், ஹீக்அப் என்கிற பெயரில் பரவி அது உலக கலாச்சாரமாக மாறிக்கொண்டு இருக்கிறது. எனக்கு தெரிந்ததே இவ்வளவு என்றால் இன்னமும் என்னன்ன மாதிரி இருக்கும் எனத்தெரியவில்லை.

GenZ தலைமுறையே இப்படியென்றால் ஆல்பா தலைமுறை வேறு உருவாகி இருக்கிறது, 15 வயதிலேயே GenZ யை தூக்கி சாப்பிடும் இடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் வரும் காலங்களில் இன்னும் என்னன்ன செய்யப்போகிறார்கள் எனத்தெரியவில்லை.


திங்கள், பிப்ரவரி 02, 2026

உலக தலைவர்களை மிரட்டும் பாலியல் புரோக்கரின் ஆவணம்.

 

அமெரிக்கா நீதித்துறை வெளியிட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்கள், இளவரசர் ஆண்ட்ரூ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பில்கேட்ஸ், பிரதமர் மோடி, கிளிண்டன் என பல உலகமே அதிர்ச்சியாகிறது. அதிகாரத்தில் இருப்பவர் இதனை கடந்துப்போவார்கள். அவர்கள் கவலைப்படுவது, அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற மக்களிடம் நல்லவர் என்கிற பிம்பம் தேவை. அது உடைவதால்தான் பதறுகிறார்கள்.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் போல் பாலியல் தரகர்கள் உலகம் முழுவதும்மே கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை உண்டு. சாதாரண மக்களுக்கு தெரியாது, ஆட்சி அதிகாரத்திலுள்ள பிரமுகர்கள், பெரும் தொழிலதிபர்கள், கார்ப்பரேட் முதலாளிகள், சமூகத்தின் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு தெரியும். இந்த பிரபலங்களின் பாலியல் தேவையை வெளியுலகத்துக்கு தெரியாமல் பூர்த்தி செய்துதரும் புரோக்கர்கள் தேவை. தங்களுக்கு தேவையானதை கச்சிதமாக செய்துதந்துவிட்டால் அந்த புரோர்க்கர்களுக்கு என்ன தேவையோ அதை இவர்கள் தங்களது அதிகாரத்தை வைத்து செய்துதருவார்கள். இது ஆதிகாலம் முதல் இப்போதுவரை நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.

 நம்ம தமிழ்நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.

 எம்.ஜி.ஆர் உயிரை காப்பாற்ற வெளிநாட்டில் இருந்து வந்த மருத்துவருக்கு தரப்பட்ட சன்மானம் என்ன?

 1991 – 1996 ஜெயலலிதா ஆட்சியில் கவர்னருக்கு தரப்பட்ட விருந்து என்ன?

 ஆட்டோ சங்கர் எழுதிய மரணவாக்குமூலம் நக்கீரன் இதழில் தொடராக வெளிவந்தபோது, சமூகம் மதித்த அரசியல் பிரபலங்களின் கறுப்பு பக்கம் தெரிந்து மக்கள் அதிர்ச்சியாகவில்லையா?

 2005 காலக்கட்டததில் ஆந்திராவை சேர்ந்த பாலியல் புரோக்கர் ஒருவர் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டாரே நினைவில் இருக்கிறதா? அவரின் வாக்குமூலம் எத்தனை அரசியல்வாதிகள், அதிகாரிகளின் பிம்பத்தை உடைத்தது.

 

அதற்கு முன்பு பிரபல மருத்துவர் பிரகாஷ் என ஒருவர் இருந்து, இளம்பெண்கள், குடும்ப பெண்களை பிரபலங்களுக்கு பாலியல் சேவை செய்து அதனை வீடியோ எடுத்து இணையத்தில் விற்று தண்டனை பெற்றாறே அவரின் வாக்குமூலம் நினைவில் இருக்கிறதா?

 தமிழ்நாட்டில் பாலியல் புரோக்கராக இருந்தவர்கள் கடந்தக்காலத்தில் எம்.எல்.ஏக்களாக அமைச்சர்களாகி நம் கண்முன் இப்போதும் நடமாடிக்கொண்டுதானே இருக்கிறார்கள்.

 நமது இந்தியாவின் உச்ச அதிகாரத்தில் உள்ளவர் உத்தரவில் நடத்தப்பட்ட சொரபுதின் என்கௌண்டர் வழக்கு எதற்கானது?

 இது எல்லாமே அதிகாரத்தில் இருப்பவர்களின் பாலியல் வேட்கைக்காகத்தான். புரோக்கர்களை அதிகாரவர்க்கம் பாதுகாக்கும். தங்கள் கைமீறி செல்லும்போது பலி தந்துவிடும். அப்படி பலி தந்தவர் தான் ஜெஃப்ரி எப்ஸ்டீன்………. ஜீன் லூக் புருனெல் போன்றவர்கள்.

 இது அமெரிக்கா அதிபர் முதல் உள்ளுர் கவுன்சிலர் வரை யாராக இருந்தாலும் இதுதான் எழுதப்படாதவிதி.