சனி, டிசம்பர் 19, 2015

இளையராஜாவுக்காக “பொங்கும்” ரசிகர்களே..........






அனிரூத் இசையமைப்பில், சிம்பு எழுதி பாடிய அந்த பீப் பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. சிம்புவுக்கு எதிராக கடும் விமர்சனமும், போராட்டமும் நடத்தப்படுகிறது.

பெண்களை போகபொருளாக பார்ப்பது என்பது சினிமாவில் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. பெண்களை காக்க வந்த நாயகனாக பொதுவெளியில் தன்னை காட்டிக்கொண்ட அதே எம்.ஜி.ஆர் தான் சினிமாவில் அரைகுறை ஆடைகளுடன் ஆடி, பாடி மகிழ்ந்தார். இப்போது அரசியலுக்கு வா தலைவா என அழைக்கும் ரஜினி கூட பெண்களை பெரும்பாலும் எல்லா படத்திலும் வசனங்கள் வழியாக மட்டம் தட்டும் வேலையை செய்கிறார். இன்றைய குட்டி நாயகர்கள் பற்றி சொல்லவே வேண்டாம், வில்லன்களிடம் பெண்கள் என் கண்கள் ஆபத்துன்னா பார்த்துக்கிட்டு இருக்கமாட்டன் என  வசனம் பேசுபவர்கள் கதாநாயகியை டூ பீஸ் ஆடையுடன் ஆடவும், ஓடவும் வைக்கிறார்கள் திரையில்.

அந்த வகையில் தான் நடிகர் சிம்பு அனிரூத் ஜோடி. புரியாத வார்த்தைகளை போட்டு பாட்டு எழுதி குவிக்கின்றனர் தனுஷ்சும், அவரது போட்டியாளரான சிம்புவும். அதற்கு இசையமைக்கிறேன் பேர்வழி என இம்சை செய்கிறார் அனிரூத். இதையும் கைதட்டி ரசித்து அவர்களை உச்சானி கொம்பில் சினிமா உலகம் மட்டும்மல்ல இளைஞர்கள் உலகம் உட்கார வைப்பதால் நாம் என்ன எழுதினாலும் அது இலக்கியம், எப்படி இசையத்தாலும் அது காவியம் என நினைக்கிறார்கள். அப்படி அவர்கள் நினைத்து எழுதி, வெளியானது தான் சிம்புவின் பீப் சாங். கேட்டால் நான் பாத்ரூம்மில் பாடுவேன் அது என் உரிமை என்கிறார். எனக்கு தெரியாது என நழுவுகிறார் அனிரூத்.

இதற்கு பெண்கள் மட்டும்மல்ல பல தரப்பில் இருந்து கண்டனங்கள் வருகின்றன. இதுப்பற்றி ஒரு இசையமைப்பாளராக உங்கள் கருத்து என்ன என இசைஞானியிடம் ஒரு செய்தியாளர் கேட்க, உனக்கு அறிவிருக்கா என செய்தியாளரிடம் கேட்டு தன் இசைஞானத்தை காட்டியுள்ளார் இசைஞானி.

இசையை பாமர மக்களிடம் கொண்டு சேர்த்தவர் இளையராஜா. அவர் இசையமைத்த பாடல்களை முனுமுனுக்காத வாய்கள் இல்லை எனலாம். இசைக்காக பிறந்தவர் எனச்சொல்லும் அளவுக்கு அதோடு ஒன்றிப்போய்வுள்ளார். அதனால் தான் அவரை இசைஞானி என்கிறோம். அப்படிப்பட்ட இசைஞானியிடம் சமூகத்தில் எதிர்ப்பு சம்பாதித்துள்ள ஒரு பாடல் பற்றி கேள்வி கேட்ட செய்தியாளரிடம், உனக்கு அறிவிருக்கா என கேட்பது எந்த விதத்தில் சரி?.

இந்த விவகாரத்தை செய்தி சேனல்களில் பார்த்த இசைஞானி ரசிகர்கள் செய்தியாளரை சமூக தளங்களில் பாய்ந்து பிராண்டுகிறார்கள். அவர் எவ்வளவு பெரிய ஆள், அவரிடம் போய் போயும், போயும் பீப் பாடல் பற்றி கருத்து கேட்கலாமா என்றும், எந்த இடத்தில் எப்படிப்பட்ட கேள்வி கேட்கிறிர்கள் இது திசை திருப்பும் செயல் என்றும், மீடியாக்காரன்களே உங்களால் ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்க முடியுமா என பொங்குகிறார்கள்.

தமிழகத்தில் பீப் பாடல்க்கு எதிராக போராட்டம், சில தலைவர்களின் கண்டன அறிக்கை என வெளியாகிறது. அந்த நேரத்தில், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழாவுக்கு வந்த இளையராஜா விழா முடிந்தபின் அதுப்பற்றி காத்திருந்த செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்துவிட்டு கிளம்பும்போது, பீப்சாங் பற்றி கருத்துகேட்கிறார். உடனே கோபத்தில் அனலாக உனக்கு அறிவிருக்கா?, எங்க வந்து என்ன கேட்கிற?, உனக்கு அறிவிருக்குன்னு எந்த அறிவ வச்சி கண்டுபிடிச்ச?, எங்கிட்ட கேள்வி கேட்க உனக்கு என்ன..........( அதாவது அறிவு அல்லது தகுதியிருக்குன்னு சொல்ல வந்திருக்கலாம் என்பது என் யூகம் ) என கோபத்தை காட்டுகிறார்கள். இதை இளையராஜாவின் ரசிகர்கள், கலைஞனுக்கேயுள்ள கர்வத்தில் அப்படி கோபத்தை காட்டினார் என்கிறார்கள். இசைஞானி பேசியது கர்வம்மல்ல என்பதே என் பார்வை.

அந்த செய்தியாளர் கேட்ககூடாதா இடத்தில் அந்த கேள்வி கேட்கவில்லை. அதோடு, ஒரு பாடல் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை பற்றி அந்த துறையின் மேதையிடம் கருத்து கேட்கிறார். அவர் கருத்து கூறலாம், கூறாமல் போகலாம். அது அவருடைய உரிமை. கருத்து கேட்பவர் மீது கோபத்தை காட்டுவது ஜனநாயகம்மா?. கேள்வி கேட்ட செய்தியாளரை பார்த்து, தூக்கி அடிச்சிருவன் பார்த்துக்க என சொன்ன விஜயகாந்த்தை காய்ச்சி எடுத்தவர்கள் இளையராஜா என்றதும் இளையராஜா பேசியது சரி என்கிறார்கள்.

இளையராஜா புனிதமானவராக அவரது ரசிக பக்தர்கள் சிலும்புகிறார்கள். இளையராஜா பீப் பாடலை விட கொஞ்சம் குறைவாக பல கொச்சையான பாடல்களுக்கு இசையமைத்தவர் தான். அதை நீங்கள் கேட்டவர்கள் தான் அதனால் அவரிடம் கருத்து கேட்பது தவறில்லை.

ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்க முடியாதவர்கள் இசைஞானியிடம் கேள்வி கேட்கிறார்கள் என கொச்சையாக மீடியாவை, செய்தியாளர்களை ஏசுகிறார்கள். அதிகாரவர்க்கத்தை பார்த்து மீடியா மட்டும்மல்ல சமூகத்துக்காக பேசும் சமூகத்தில் ஒருவரான நீங்களும் தான் பதுங்குகிறீர்கள். வாட்ஸ்அப்பில் ஜெ பேசியது பற்றி பொங்கியது உண்டா?, எங்களை ஏன் வந்து சந்திக்கவில்லை என போராட்டம் நடத்தியது உண்டா?, என் அடிப்படை பிரச்சனைகளை ஏன் தீர்க்கவில்லையென ஒரு எம்.எல்.ஏவை முற்றுகையிட முடிந்துள்ளதா?, எம்.எல்.ஏ வேண்டாம் கவுன்சிலரை நிற்க வைத்து கேள்வி கேட்க முடியாதவர்கள் தான் இப்போது செய்தியாளர்களை பார்த்து பொங்குகிறார்கள்.


நீங்கள் தான் அரசாங்கத்தை பற்றி கேள்வி கேட்க வேண்டும் என ஊடகத்தை, செய்தியாளரை பார்த்து சொல்பவர்கள் எத்தனை பேர் அந்த நிறுவனம் அரசாங்கத்தின் அதிகார கோர கரங்களால் பாதிக்கப்பட்டால் ஓடிவந்து உதவுகிறீர்கள் என உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் பார்க்கலாம். சாதாரண பொதுமக்கள் நீங்கள் அதிகாரத்தை கண்டு பயப்படும் போது, ஒரு நிறுவனத்தை நடத்துபவர்கள், அதிகார குவியலை வைத்துள்ள, அரசின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்களை கண்டு பயப்படத்தான் செய்வார்கள். பயம்மில்லாத ஒரு சதவித பத்திரிக்கை குறிப்பாக நக்கீரன் அதிகாரவர்க்கத்தை கேள்வி கேட்கிறது. அதனால் பலப்பல துன்பங்களை இன்றுவரை அனுபவித்து வருகிறார்கள்.

அதற்காக அதிகாரவர்க்கத்திடம் பற்றி கேள்வி கேட்ககூடாதுயென்பதல்ல என் வாதம்.  கேள்வி கேட்க வேண்டும். கேள்வி கேட்கும் முன் செய்தியாளர் தம்மை தகுதி படுத்திக்கொள்ள வேண்டும். அதை பல செய்தியாளர்கள் செய்வதேயில்லை என்பதே என் கருத்து. ஒரு பிரபலத்தை சந்திக்க செல்லும்போது அவர்களை பற்றி அறிந்திருக்க வேண்டும், அவர்களது முந்தைய பேட்டிகளை படித்திருக்க வேண்டும், அவர்களிடம் என்ன மாதிரியான கேள்விகளை கேட்டால் சரியாக இருக்கும் என்ற அடிப்படை கொஞ்சம் கூடயில்லாமல் தான் பெரும்பான்மை செய்தியாளர்கள் இருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரியது. தொலைக்காட்சிகளில் நேர்காணல் நடத்துபவர்கள் கூட அப்படித்தான் இருக்கிறார்கள்.

இன்று ஊடகம் பெருத்துவிட்டது. கட்சிகள், பெரு நிறுவனங்கள், அமைப்புகள் எல்லாம் தொலைக்காட்சி தொடங்கி நடத்துகின்றன. அவர்களுக்கு செய்திப்பற்றி அக்கறையில்லை. தங்களது ஊடகங்கள் வழியாக தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். இதனால் செய்தியாளரின் தகுதியை பார்ப்பதில்லை. வேலைக்கு ஆள் வேண்டும் அவ்வளவே.

இன்றைய செய்தியாளர்களுக்கு மூத்தவர்கள் வழிக்காட்டல் தேவையாகவுள்ளது. ஆனால், வழிகாட்டும் மூத்தவர்களை மதியாத தன்மை அதிகம் உள்ள துறையும் ஊடகம் தான். ஒருவர் புதியதாக வந்து பேனா பிடித்ததும், மைக் கையில் வாங்கியதும் ஒவ்வொருவருக்கும் நாம் தான் உலகத்தில் பெரிய ஆள் என்கிற எண்ணம் வந்துவிடுகிறது. இதனால் கற்க மறந்துவிடுகின்றனர். கற்றது கை அளவு, கல்லாதது உலகளவு என்பதை மறந்துவிடுகின்றனர்.

ஜெயலலிதாவிடம் இப்படி கேள்வி கேட்கமுடியும்மா? என பலர் சமூக வலைத்தளத்தில் பொங்கல் வைக்கிறார்கள். எடக்குமடக்கான கேள்வி கேட்பதிலும் செய்தியாளர்களுக்கு பெரும் சங்கடங்கள் உள்ளன. ஒரு செய்தியாளரின் சந்திப்பில் மருத்துவர் ராமதாஸ்சிடம், அவர் மகன் பற்றிய ஊழல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. கோபத்தோடு எழுந்து போனார். அதன்பின் நடக்கும் செய்தியாளர் சந்திப்புக்கு அந்த செய்தியாளரை அழைப்பதேயில்லை. இப்படி ஏதாவது கேள்வி கேட்பார்கள், ( கேட்க போறதில்ல அது வேற விஷயம் ) தம்மால் சரியாக பதில் சொல்ல முடியாது என்பதால் தான் அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் செய்தியாளர்களை சந்திப்பதில்லை ஜெ. அதோடு, தன்னை, தன் உடன்பிறவா சகோதரியை, அவரது தலைமையிலான ஆட்சி அவலங்களை எழுதும் நக்கீரன் படும் பாட்டை தமிழக ஊடகங்கள் காணாததல்ல, தேசிய ஆங்கில சேனல் நெறியாளர் கரன்தப்பர் கடந்த கால அதிமுக ஆட்சியின்போது, ஜெவிடம் பல சிக்கலான கேள்விகளை கேட்க, அதன்பின் அந்த சேனல் தமிழகத்தில் பட்டபாடு பெரியது. இதனால் தான் செய்தியாளர்களும், தொலைக்காட்சிகளும் ஜெ என்றால் பம்முவது. அதிகார பலம்மில்லாதவர்களிடம் எடக்கு மடக்கு கேள்விகள் எகிறும்.

இளையராஜா பக்தர்கள் மட்டும்மல்ல சமூகத்தில் பலரும் சொல்வது மீடியாவின் போக்கு மாற வேண்டும் என கூறுவதில் மாற்று கருத்துயில்லை. அதற்காக இளையராஜா பேசசியது சரியென ஆகிவிடாது.


செவ்வாய், டிசம்பர் 08, 2015

காப்பாற்ற வராத அரசாங்கத்தை மறக்காதீர்கள் மக்களே...............






நூற்றுக்கணக்கான உயிர்கள், ஆயிரக்கணக்கான வீடுகள், பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் செய்யப்பட்ட பயிர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் அனைத்தும் அடித்துக்கொண்டு போய்விட்டது. தமிழகத்தின் தலைநகரம் சென்னை, அதன் அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளுவர், கொஞ்சம் தொலைவில் உள்ள கடலூர் மாவட்டங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. இங்கு வாழும் லட்ச கணக்கான மக்கள் நிர்கதியாய் நிற்கிறார்கள்.

அதிகமான மழை பெய்ததால் இந்த பேரிழப்பு என ஒற்றை வார்த்தையில் விவகாரத்தை முடிக்க பார்க்கிறார் சென்னையில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கும் தமிழக முதல்வராகவுள்ள ஜெ.

இந்த இழப்பை நாம் தடுத்திருக்க முடியும் ஆனால் தமிழகரசு இதனை கண்டுக்கொள்ளவில்லை என குற்றம்சாட்டுகிறார்கள் தென்னிந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் இஸ்ரோ போன்ற மையங்களின் உயர் அதிகாரிகள். கடந்த அக்டோபர் மாதம்மே, டிசம்பர் முதல்வாரத்தில் மழை கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை செய்ததாக கூறுகிறார்கள். அதற்கான கடிதங்களும் வெளியாகியுள்ளது. இதற்கு எந்த பதிலையும் இதுவரை தமிழகரசின் சார்பில் வெளியிடப்படவில்லை. ஆனால், என் வரிப்பணம் எங்கே சென்றது என கேள்வி எழுப்பிய நடிகர் கமல்ஹாசனுக்கு, மறுநாளே 6 பக்க அளவுக்கு மறுப்பு தெரிவிக்கிறார் ( மறுப்பு என்பதை விட மிரட்டுகிறார் ) முன்னால் முதல்வரும், ஜெ அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் உள்ள ஓ.பி.எஸ்.


மழை காலத்தில் தான் மீட்பு பணிகளில் ஈடுபட முடியவில்லை, நிவாரணப்பணிகளில் ஈடுபடமுடியாது என்றால் மழை விட்டபின் எந்தளவுக்கு அரசின் சார்பில் மீட்புப்பணி, நிவாரணப்பணி நடைபெற்றது என்றால் தன்னார்வலர்கள் செய்த பணிகளில் 30 சதவித பணியை கூட அரசாங்கம் செய்யவில்லை. தன்னார்வலர்கள் செய்ய முடியாத பணியான மின்சாரம் சீரமைப்பபை அரசாங்கம் செய்துள்ளது அதை தாண்டி ஒன்றும் பெரியதாக செய்யவில்லை. ஏதாவது செய்துள்ளதா என அறிய முயன்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதை குற்றம் சொல்ல வேண்டும்மே என சொல்லவில்லை. அரசின் துறைகள் தங்களை தேடி வரவில்லை உதவவில்லை என்பதால் தான் மூத்த அமைச்சர் நத்தம் விஸ்வாதன், சென்னை மேயர் சைதை.துரைசாமி, அதிமுக மா.செ வெற்றிவேலை அடித்து உதைத்து மக்கள் அனுப்பினர். வசைபேச்சுக்கு சொந்தக்கார அமைச்சரான வளர்மதியை விரட்டி அடிக்கிறார்கள் மக்கள். அப்படியும் நாங்கள் அதை செய்கிறோம், இதை செய்கிறோம் என அறிக்கை தருகிறார் ஜெயலலிதா.

அவரின் அடிமை கூட்டங்கள், தன்னார்வலர்கள் செய்து வரும் உதவி பொருட்களில் தங்கள் தலைவியான ஜெவின் புகைப்படத்தை அச்சடித்து கொண்டு வந்து ஒட்டுகிறார்கள், சென்னையில் உள்ள அதிமுக கவுன்சிலர்கள் தங்களுக்கு பங்கு வேண்டும் என கேட்டு மிரட்டுகிறார்கள். கடலூரில் உதவி செய்ய போன வண்டிகளை மடக்கி தங்களிடம் பொருட்களை ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும் என ஆளும்கட்சியான அதிமுக, பாமக, அதிமுக கூட்டணியில் உள்ள வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியின் குண்டர்கள் மிரட்டுகிறார்கள், அடிக்கிறார்கள் என காவல்நிலையம் போய் புகார் கூறி பாதுகாப்புக்கு வாங்கள் என சில தன்னார்வலர்கள் கேட்டபோது, பல காவல்நிலையங்களில் தலைக்கு ஆயிரம் தந்தால் வந்து பாதுகாப்பு தருகிறோம் எனச்சொல்லியுள்ளார்கள். இதுதான் அரசு இயந்திரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உதவி செய்ய வரும் தன்னார்வலர்கள், குழுக்களுக்கு தரும் பாதுகாப்பு.

இந்த நிகழ்வின் மூலம் அறியமுடிந்தது, ஜெயலலிதா அரசாங்கத்திடம் ஒருங்கிணைப்பு கிடையாது, அரசு ஊழியர்களை வேலை வாங்க தெரியாதவர் ஜெயலலிதா என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதனை தென்மண்டல இராணுவ அதிகாரியே வேதனையும் வெளிப்படையாக பேசியுள்ளார். இராணுவம், பேரிடர் மீட்புக்குழு சென்னை வந்து காத்திருக்கிறது. எங்கு செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் எனச்சொல்ல, வழிக்காட்டக்கூட மாநில அரசின் அதிகாரிகள் வரவில்லை. 10 மணி நேரம் காக்க வைக்கப்பட்டோம் என்றார்.

இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டபின்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை தரும் வார்த்தைகள் ஒரு முதல்வரிடம் இருந்து வரவேண்டும். வரவில்லை. ஆனால் மியாட் மருத்துவமனையில் அந்த மருத்துவமனையின் அலட்சியத்தால் மருத்துவமனையின் உயர் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுயிருந்த 18 பேர் இறந்த விவகாரத்தில், அமைச்சர்கள், தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், அந்த மருத்துவமனைக்கு சாதகமாக பேசிய பேச்சு இன்னமும் ஜீரணித்துக்கொள்ள முடியாத பேச்சு.

செயலற்ற ஆட்சியை கேள்விக்கேட்டால், அதிமுகவினரின் அராஜகத்தை எதிர்த்து சமூகவளைத்தளங்களில் எழுதினால், பாய்ந்தோடி போய் ஆளைபிடித்து வழக்கு போட்டு சிறையில் தள்ளுகிறது ஜெயலலிதாவின் செல்லப்பிள்கைளான காக்கி அடிமைகள்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் கூட, மக்கள் கதறலை பொருட்படுத்தாமல் இந்த அவலத்துக்கு காரணம் ஆட்சியில் உள்ள ஜெயலலிதா தான் காரணம் என்பதை மறுத்து, ஆட்சியில் உள்ள ஜெவை மயிர் அளவுக்கு கூட விமர்சிக்க மறுத்து, நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும், ஆட்சியில் உள்ள மம்மி டம்மியாக்க கூடாது என நடுநிலை வேடம் போட்டுக்கொண்டு கண்ணும் கருத்துமாக வேலை செய்கிறார்கள்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு செய்யவேண்டிய அடிப்படை உதவிகள் செய்யக்கூட தாமதம் செய்யும் ஜெயலலிதா அரசாங்கத்தின் இந்த செயல்பாடு அதிர்ச்சியை தருகிறது. வரும் உதவிகளை பெறவும் மறுக்கிறது. கர்நாடகா அரசாங்கம், 5 கோடி ரூபாய் தமிழகத்துக்கு நிவாரண நிதியாக அறிவித்தார். அந்த தொகையை தமிழகரசிடம் தர, தமிழகரசின் வங்கி கணக்கு எண் கேட்டு கர்நாடகா நிதித்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது, யாரும்மே எண் தரவில்லை என வெளிப்படையாக பேட்டி தந்தார்கள். ஏன் இத்தனை பாரபட்சம். இது எல்லாருக்கும் தெரிந்தது தான். 


கடந்த 1991-96 காலக்கட்டத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில், கடந்த 2014ல் கீழ்நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து, முதல்வர் பதவியை பறித்து கர்நாடகா சிறையில் அடைத்து வைத்தது. அதன்பின் உயர்நீதிமன்றத்தில் வாங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் மீண்டும் முதல்வரானார் ஜெ. அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா நடத்திவருகிறது. அதனாலே தனது தனிப்பட்ட ஈகோவால் கர்நாடகா அரசு தரும் நிதியை வாங்க மறுக்கிறார் முதல்வராகவுள்ள ஜெ.

தனிப்பட்ட ஈகோவை ஆட்சி நிர்வாகத்தில் காட்டும் முதல்வர் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதன்படி ஜெ தண்டிக்கப்பட வேண்டியவர். சட்டம் தண்டிக்காமல் விடலாம். மக்கள் மன்றத்தில் நிச்சயம் தண்டிக்கப்படுவார். ஏன் எனில் ஓட்டு என்கிற ஆயுதம் பாதிக்கப்பட்ட, நிர்கதியாய் நிற்கும் மக்களிடம் தான் உள்ளது.  

ஞாயிறு, நவம்பர் 15, 2015

தமிழகம் தத்தளிக்க நீ தான் காரணம்.






தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக கடந்த 10 நாட்களாக மழை பெய்கிறது. இன்னும் சில தினங்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் தலைநகரம் சென்னை மழை நீரால் மிதக்கின்றன. சென்னை மட்டும்மல்ல தமிழகத்தின் பல மாநகரங்கள், நகரங்கள் தத்தளிக்கின்றன. பேய் மழை பெழிகிறது என்கிறார்கள் இணையத்தில் பொழுதை கழிப்பவர்களும், நகரவாசிகளும். அது உண்மையா என்பது கிராமத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும்மே தெரியும் பெய்வது பேய் மழையல்ல குறைவான மழையென்பது.

தமிழகத்தில் தோராயமாக 20 ஆயிரம் ஏரிகள் உள்ளன. இப்போது பெய்த மழையில் 10 சதவித ஏரிகள் கூட நிரம்பவில்லை. இதிலேயே தெரிந்துக்கொள்ளலாம் மழை எந்தளவுக்கு பெய்துள்ளது என்பதை. குறைந்த மழை பெய்கிறது பின் ஏன் மழை நீர் வீடுகளுக்குள் வருகிறது, சாலைகளில் தேங்குகிறதே என கேட்கலாம். பதில் நமக்கே தெரியும்.

முன்பெல்லாம் இயற்கையை ஆராய்ந்தே நகரங்கள், கிராமங்கள் உருவாக்கப்பட்டன. மழை பெய்தாலும் அந்த நீர் குளம், ஏரி, ஆறு, கால்வாயில் போய் கலக்கும் வகையில் திட்டமிடப்பட்டு குடியிருப்புகள் உருவாக்கப்பட்டது ஒருக்காலத்தில். அந்த திட்டமிடலை கடந்த 20 ஆண்டுகளாக பணம்மே குறிக்கோளாய் கொண்டுள்ள ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் அவர்களோடு சேர்ந்த மக்கள் உடைத்துவிட்டார்கள் என்பதே உண்மை.

புதியதாக ஒரு குடியிருப்பு உருவாக்கப்படும் போது நீர் கால்வாய் ரொம்ப முக்கியம். மழைக்காலங்களில் தெருக்களில் வரும் நீர் கால்வாய் வழியாக ஏரிக்கோ, குளத்துக்கோ நீர் போய் சேரும் வகையில் குடியிருப்புகள் அமைக்கப்பட வேண்டும். அதை இப்போது புற்றீசல் போல் உருவாகியுள்ள ரியல்எஸ்டேட் அதிபர்களும் செய்வதில்லை. குடியிருப்புக்கு அனுமதி தரும் அரசு இயந்திரம் அதை கண்டுக்கொள்வதில்லை.

அரசாங்கம்மே ஏரிகளுக்குள் மருத்துவகல்லூரிகளை, பேருந்து நிலையங்களை கட்டி நீர் வராமல் செய்துவிட்டது. மழை காலங்களில் அந்த நீர் எங்கு செல்லும் என்ற யோசனை அரசியல்வாதிகளுக்கு தான் வரவில்லை. அதிகாரிகளுக்கு கூட வராமல் போனது எப்படி என்பது தான் பெரும் கேள்விக்குறி.

அரசியல்வாதிகள் அப்படி செய்வதை கண்டு ரியல் எஸ்டேட் அதிபர்களும் நீராதரங்களை ஆக்ரமித்தார்கள். ரியல்எஸ்டேட் அதிபர்கள் பெரும்பாலும் அரசியல்வாதியாக, அரசியல்வாதி ஆதரவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்து ஏரிகள், குளங்களை நிரவி பிளாட் போட்டார்கள். அந்த மனைக்கு செல்ல நீர்கால்வாய்கள் மீது மண் கொட்டி நிரவி பாதையமைத்தார்கள்.

ரியல்எஸ்டேட் அதிபர்களின் பேராசை, அரச இயந்திரத்தின் பணத்தாசை, மக்களின் அலட்சியம் போன்றவற்றால் கடந்த 20 ஆண்டுகளாக நீர் செல்லும் கால்வாய்கள் படிப்படியாக இப்படித்தான் ஆக்ரமிக்கப்பட்டுவிட்டன.

அப்படி ஆக்ரமிக்கப்பட்ட இடங்களில் மனை வாங்குகிறார்கள். உழைத்த பணத்தில் வீட்டு மனை வாங்கும் மக்கள், அது சரியான இடம் தானா?, வீடு கட்டினால் மழை நீர், கழிவு நீர் எங்கு போகும் என பார்த்து வாங்குவதில்லை. விளம்பரங்களை கண்டு மயங்கி ஏமாந்து இடம் வாங்கி, வீடு கட்டி குடிபோகிறார்கள். மழைக்காலங்களில் நீர் அப்படியே தேங்குகிறது. இதனால் புதிய குடியிருப்புகளில் வீடு கட்டியவனுக்கும் பிரச்சனை. பழைய குடியிருப்புகளில் வீடு கட்டி வாழ்பவனுக்கும் பிரச்சனை.




இப்படியாகிவிட்டதே, இது எனக்கு தெரியாது அரசாங்கம் தான் செய்ய வேண்டும், கண்காணிக்க வேண்டும் என சொல்வது முட்டாள் தனமானது. பணம் போடும் நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அதைவிட முக்கியம் நாம் நமக்காக மட்டும் வாழாமல் சமூகத்துக்காக வாழ வேண்டும். ஒரு சமூக பிரச்சனையின் போது வேடிக்கை பார்த்தால் நமும் அந்த பிரச்சனையின் மற்றொரு வடிவில் வந்து சிக்குவோம் என்பதை மக்கள் உணரவேண்டும். 


ஒரு கிராமத்தில் அல்லது நகரத்தில் ஏரிகள், குளங்கள், வழிப்பாதைகள் அதிகாரம்மிக்கவர்கள் ஆக்ரமிக்கும் போது நமக்கேன் வம்பு என பயந்துக்கொண்டு ஒதுங்கி சென்று வேடிக்கை பார்க்கும் மக்களாக இல்லாமல் கேள்வி கேட்க முன்வர வேண்டும். ஆனால் அதை பெரும்பான்மை மக்கள் செய்வதில்லை. அதிலும் இந்த நடுத்தர மக்கள் சுத்த மோசம். ஒரு கிராமத்திலோ, நகரத்திலோ ஏரி, குளம் ஆக்ரமிக்கப்படுவது அனைவருக்கும் தெரியும். வெகு சிலரை தவிர மற்றவர்கள் கேட்பதேயில்லை. ஆக்ரமிக்கப்பட்ட ஏரி, குளம் எதற்கு வெட்டப்படுகிறது. மழைகாலங்களில் நீரை சேமித்து குடிநீராக, விவசாயத்திற்காக பயன்படுத்த தான். அது ஆக்ரமிக்கப்படும்போது அந்த நீர் நம் வீட்டுக்குள் தான் வரும்.

நமது வாழ்க்கைமுறை மற்றும் இயற்கை என்பது சங்கிலி தொடர். அது அறுந்தால் எல்லா விதமான தொல்லைகளையும் எதிர்க்கொண்டு தான் ஆக வேண்டும். அந்த சங்கிலி தொடரை அறுப்பது மழையோ, காற்றோ, பூமியோ கிடையாது. மனித சமூகமான நாம் தான்.

கோடைக்காலத்தில் ஏரி, குளம், நீர்கால்வாய்களை அரசாங்கம் தூர் வார வேண்டும்மே ஏன் செய்யவில்லை?, செய்திருந்தால் மழை நீர் அங்கு போயிருக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் வந்திருக்காது, ரோடு சரியாக இருந்திருக்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்கிறார்கள்.

நீர் கால்வாய் ஆக்ரமித்து கட்டிடம் கட்டியது நமது தவறு. கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க அரசு இயந்திரம் வந்தால் கட்டிட உரிமையாளருக்கு சாதகமாக நூறு பேர் சாலை மறியல் செய்வது யார்?, பாதிக்கப்படுவது அவர்கள் அவர்களுக்கே இல்லாத அக்கறை நமக்கு எதற்கு என சம்திங் வாங்கிக்கொண்டு அதிகாரிகள் போய்விடுகிறார்கள்.

இல்லாதவன் பொறம்போக்கில், கிடைக்கும் இடத்தில் வீடு கட்டுகிறான் என்கிறார்கள். இல்லாதவர்கள் வீடு குடிசை போட்டுக்கொள்கிறார்கள் நிச்சயம் இதனை வரவேற்க்கிறேன். குடிசை வீட்டை ஓட்டு வீடாக, மாடி வீடாக மாற்றி அதே இடத்தில் கட்டுவது எதனால்?,  வீடு கட்டும் அளவுக்கு பணம் வரும்போது அந்தப்பணத்தில் குறைந்த விலையில் ஒரு நல்ல இடத்தில் வீட்டு மனை வாங்கி கட்டலாம்மே கட்டுவதில்லை. பணம் கொடுத்தால் அதிகாரி பட்டா தருவான், அரசியல்வாதி செய்து தருவான் என கட்டுவது, பட்டா வாங்குவது. இயற்கை தன் இயல்பை காட்டும்போது குய்யோ, முய்யோ என கத்துவது எந்த விதத்தில் நியாயம்.

அரசியல்வாதி மாறமாட்டான், அதிகாரிகள் மாறமாட்டார்கள், அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது. நாங்கள் மட்டும் மாற வேண்டும்மா என கேட்பது ?.

அவர்கள் மாறமாட்டார்கள். நாம் நம்மில்ல் இருந்து மாற்றத்தை துவங்க வேண்டும். நாம் மாறினால் அந்த பயம்மே அதிகாரிகளை, ஆட்சியாளர்களை, அரசியல்வாதிகளை மாற்றும், இல்லையேல் நம்மால் அவர்களை மாற்ற முடியும்.


இங்கு எல்லாம்மே தவறு நம்மிடம்மிருந்து தான் துவங்குகிறது. இதைச்சொன்னால் யாரும் ஒப்புக்கொள்ளமாட்டீர்கள் என்பது தெரியும். இருந்தும் மனதில் இருப்பதை சொல்வது என் உரிமை.

அரசியல்வாதியாகிவிட்ட பாண்டே. ( நீ எம்.பியாகிடுவ தல......)





தந்தி தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் ரங்கராஜ்பாண்டே. அந்த தொலைக்காட்சியில் வரும் கேள்விக்கென்ன பதில்?, ஆயுத எழுத்து என்ற நிகழ்ச்சிகளில் நேர்காணல், விவாதம் நடத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளில் ரங்கராஜ்பாண்டே நெறியாளராக கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை நடத்துவது பற்றி அவர் மீது பலவிதமான விமர்சனங்கள் எழுகின்றன, கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. சமீபகாலங்களில் தமிழகத்தில் ஒரு ஊடகவியாளர் இவ்வளவு தொடர் விமர்சனத்துக்கு ஆளாகியிருப்பாரா என்பது பெரும் கேள்விக்குறியே.

ஒரு ஊடகவியாளன் என்பவன் நான் அறிந்தவரை எப்படி இருக்க வேண்டும் என்றால். ஊடகவியாளனுக்கு ஒரு சார்புயிருக்கலாம். அந்த சார்பை தன் தொழிலில் காட்டக்கூடாது. மோடியை பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் மோடியிடம் கேள்வி கேட்கும் போது அவரை எதிரியாக நினைத்து கேள்விகள் கேட்ககூடாது. மக்கள் என்ன நினைக்கிறார்கள், அவரது எதிர்ப்பாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தான் கேள்வியாக உருவாக்க வேண்டும். நாம் நம் மனதில் உள்ள குரோதத்தை, வெறுப்பை கேள்வியாக்ககூடாது. எழுதுகோலை கையில் எடுக்கும்போது நமக்கு அவன் நண்பன், எதிரி என்ற கண்ணோட்டத்தை விட்டுவிட்டு உண்மையென்ன என்பதையே செய்தியாக்க வேண்டும் என்பதே நான் அறிந்தது. இதை பாண்டேவுக்கு யாரும் கற்றுதரவில்லை என்பதே அவரது பல நேர்காணல்களை கண்ட வரை நான் கண்டது. அதனால் தான் பல விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். இதை உணர்ந்தே விமர்சனங்கள் எல்லை மீறி போவதால் அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக பாண்டேவிடம் கேள்வி கேளுங்கள் என ஒரு தலைப்பை உருவாக்கி அதனை திராவிடத்தின் போர்வாள் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களிடம் கேள்வி கேட்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.

நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தவது, பணியாற்றியது எல்லாம்மே தமிழகம் தான். பாண்டே என்பது சுதந்திரபோராட்டத்துக்கு வித்திட்ட பாண்டே என்பவரின் நினைவாக அவரது பெயரை தன் பெயருடன் வைத்துக்கொண்டதாக கூறுகிறார். பாண்டே என்பது சாதிப்பெயர் என்பதை ஏனோ லாவகமாக மறைக்கிறார். இதனை கண்டபோது அரசியல்வாதியாக போல் தான் ரங்கராஜ்பாண்டே இனி கேள்விகளுக்கு பதில் சொல்வார் என்பதை யூகிக்கமுடிந்தது. அந்த யூகம் சரி என்பதை அடுத்தடுத்த கேள்வி பதில்கள் நிரூபித்தன.

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ஊடகத்துறையில் எனக்கு முன்னோடி என யாரும்மில்லை, எல்லாம்மே நானே கற்றுக்கொண்டது என்கிறார். ஒருவேளை இருந்திருந்தால் அவர்கள் பாண்டேவுக்கு கற்று தந்திருப்பார்கள் என நம்பலாம்.

கேள்வி கேட்கும் போது அறம் சார்ந்துயில்லையே என பேரா.சுப.வீ அவர்கள் பாண்டே விடம் கேள்வி எழுப்பியது, என் முன் இருப்பவர் திமுகவாக இருந்தால் நான் அதிமுகவாக இருக்கிறேன் என்கிறார். பல விவாதங்களில் நான் கண்டவரை, அதிமுகவினரிடம் கேள்வி எழுப்பும்போது பாண்டே அதிமுகவினராக மாறுவது எதனால்?, இந்துத்துவா பற்றி கேள்வி எழுப்பும்போது அவர் இந்துத்துவாவாதியாக மாறி கேள்வி எழுப்புவது எதனால் ?, இது ஒரு சாதாரண பார்வையாளனாக பார்க்கும் நேயர்க்கு தெரியாது. அரசியல் கற்றவர்களுக்கு இது நன்றாகவே தெரியும், நுணக்கமாக ஆராயும்போது தெரிகிறது.

ஒரு கேள்விக்கான பதிலில், ஒருவன் தவறு செய்வது இயல்பு, அந்த தவறை திருத்திக்கொள்வது சிறந்தது என்கிறார் சுப.வீ. தவறு செய்திருப்பதாக குறிப்பிட்டால் திருத்திக்கொள்வேன் என்கிறார். பாராட்ட வேண்டிய ஒன்று இனி தன்னை திருத்திக்கொள்வார் என நினைத்துக்கொண்டு நிகழ்ச்சியை காண்டபோது ஜெ மற்றும் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு பற்றி செய்தி வாசிக்கும்போதும், விவாதம் நடத்தும் போது நீங்கள் சொத்து வழக்கு என குறிப்பிட்டு தவறு செய்கிறீர்கள் இது நியாயமா என கேள்வி கேட்டதோடு, நீங்கள் சொல்வதில் பொருள் தவறு இருக்கிறதே என ஆதாரத்தோடு குறிப்பிடுகிறார். ஆங்கில பத்திரிக்கை செய்கிறது, அதனால் நான் செய்கிறேன், அவனை யாரும் கேள்வி எழுப்புவதில்லை, என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என கேட்கிறார். தவறு என சுட்டிக்காட்டியதை ஏற்றுக்கொள்ளாமல் இனிமேல் அந்த தவறை தொடர்ந்து செய்வேன் என வெளிப்படையாக சொல்லி பெரியதாக சறுக்குகிறார் பாண்டே.
திராவிடர் கழகம் வீரமணி, இந்து முன்னணி ராமகோபாலனிடம் கேள்வி கேட்கும்போது நடந்துக்கொண்ட விதம் பற்றியும், நேர்காணலின்போது மற்றவர்களை பேசவிடாமல் நீங்களே பேசுவது தவறுயில்லையா என கேள்வி எழுப்பியபோது, வீரமணியின் விளக்கத்தை ஒளிபரப்பினோம்மே என விடப்பிடியாக நின்றதும், ராமகோபாலினிடம் அவரது சீடர் போல் கேள்வி கேட்டது சரியா என்ற கேள்விக்கு, அறியா வயசு என சமாளித்தது இருக்கிறதே அப்பப்பா ஒரு அரசியல்வாதியாக உயர்ந்து நிற்கிறார். 


இதுவரை ஆராய்ந்தது போதும். இந்த நிகழ்ச்சி முடிந்தபின் மனதில் தோன்றியது நேர்காணல், விவாதம் எப்படி நடத்த வேண்டும் என்பதை தந்தி தொலைக்காட்சி ஆசிரியர் ரங்கராஜ்பாண்டேவுக்கு பேரா.சுப.வீ அவர்கள் கற்று தந்துள்ளார்.

நெறியாளர் கேள்வி கேட்டுவிட்டு, கேள்விக்கு விருந்தினர் முழுமையாக பதில் சொல்லி முடிக்கும்முன் குறுக்கிடக்கூடாது என்ற தத்துவத்தின் அடிப்படையில் சுப.வீ  சிறந்த நெறியாளராக நடந்துக்கொண்டார். அதை பாண்டே உணர்ந்திருப்பார் என நம்பலாம்.

ஒரு அரசியல்வாதி தான் தன் மீதான தவறை பொதுத்தளத்தில் ஏற்றுக்கொள்வதில்லை. அதே நிலையை தான் பாண்டே இந்த நேர்காணலில் வெளிப்படுத்தி தானும் ஒரு அரசியல்வாதி என்பதை நிறுபித்தார்.

சமீபத்தில் மறைந்த ஆதித்தனார்க்கு கவர்னர் ஆசை இருந்தது எனச்சொல்வார்கள். அவருக்கு மட்டும்மல்ல அவரது தொலைக்காட்சி ஆசிரியருக்கு எம்.பி ஆசை இருக்கும் போல. நீ இப்படியே நிகழ்ச்சியை நடத்து தல. ஒரு நாளைக்கு எம்.பியாகிடுவ.

சனி, அக்டோபர் 24, 2015

கணிப்பொறி, கைபேசியில் நடக்கும் கழகபணி. களத்தில் ?????????????????







தமிழகத்தில் அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகள் முதல் நேற்று முளைத்த லட்டர் பேட் கட்சி வரை இணையத்தில், சமூக வளைத்தளங்களில் இயங்குகிறார்கள். தங்களது கட்சியின் ஒவ்வொரு நடவடிக்கை மற்றும் கட்சி தலைவர் முதல் ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் வரை என்ன செய்கிறோம் செல்பி படம்மெடுத்து வாட்ஸ்அப்பில் பரப்புகிறார்கள். தமிழகத்தில் உள்ள கட்சிகளில் இணையத்தில் இப்போது தீவிரமாக இருப்பது திமுகவின் இணைய தள அணி என்றால் மிகையில்லை. ஒருகாலத்தில் சோம்பிபோயிருந்த இந்த அணி இன்று இணையத்தில் வேகமாக இயங்குகிறது. திமுகவை தாக்குபவர்களை எதிர்தாக்குதல் நடத்திவருகிறது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு 2ஜி ஊழல்யில்லை என விளக்கமாக பதிவிட்டார்கள், பிற கட்சியினர் திமுகவின் குடும்ப அரசியல் பற்றி பேச முடியாத படி செய்தார்கள் எந்த பிரதிபலனும் பாராமல் உழைத்தார்கள். ( அப்படி உழைத்த பலர் இன்று அமைதியாக வேறு வேலைகளை செய்துக்கொண்டு உள்ளார்கள். காரணம், இணைய தள திமுகவை தங்களது ஆதிக்கத்தில் கொண்டு வர சிலர் செய்த வேலைகளால் அவர்கள் ஒதுங்கிக்கொண்டார்கள். )

ஸ்டாலின், கலைஞர் போன்ற கட்சியின் தலைவர்கள் பேஸ்புக், டுவிட்டர் தளத்துக்குள் வந்தபின் கட்சியின் பெரும்பாலான மேல்மட்ட, கீழ்மட்ட, மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் முகநூல் மற்றும் டுவிட்டர் தளத்துக்கு வந்து கணக்கு தொடங்கினார்கள். கட்சி தலைமையை கவர வேண்டும் என்பதற்காக போராட்டங்கள், கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொள்ளும் நிகழ்சிகளை புகைப்படங்களாக எடுத்து முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப்பில் போட்டு நாங்கள் வேகமாக கட்சி பணியாற்றுகிறோம் என காட்ட முயல்கிறார்கள். உண்மையில் இவர்கள் கட்சி பணியை கணிப்பொறி முன்பும், கைபேசி வைத்துக்கொண்டு செய்கிறார்களே தவிர களத்தில் செய்கிறார்களா என கேட்டால் இல்லையென உறுதியாக சொல்லலாம்.


முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப்பில் செயல்படும் இணைய தள புலிகளுக்கு கிடைக்கும் மரியாதை களத்தில் கில்லியாக செயல்படும் நிர்வாகிகளுக்கோ, தொண்டர்களுக்கோ கிடைக்காததால் நொந்துப்போய்வுள்ளார்கள். முகநூலில் செயல்படுபவர்களுக்கு கிடைக்கும் மரியாதையில் பாதிக்கூட களத்தில் வேலை செய்யும் நிர்வாகிக்கோ, தொண்டனுக்கோ கிடைப்பதில்லை, அதை மாவட்ட நிர்வாகிகள் தருவதில்லை என பலயிடங்களில் குறைப்பட்டுக்கொள்கிறார்கள். முகநூலில் செயல்படுவதன் மூலம் கட்சி மீதான கறைகளை துடைக்க முடியும்மே தவிர ஓட்டுக்களை வாங்க முடியாது. நான் சொல்வதை நம்ப முடியவில்லையென்றால் மதிமுகவினரிடம் கேட்டுப்பாருங்கள்.

இணையத்தில் வை.கோவுக்கு அதிகமான ஆதரவாளர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்கள் செயல்பாட்டை காணும்போது அவர் தான் அடுத்த முதல்வராக வருவார் என நம்பும் படியிருக்கும். ஆனால் கள நிலவரம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். போற்றி பாட இணையத்தில் ஏகப்பட்ட பேர் வை.கோவுக்கு உண்டு ஆனால் ஓட்டுப்போட அவர்களில் ஒருவரும் வரப்போவதில்லை. அந்த உண்மையை எல்லா கட்சியினரும் உணர்ந்துக்கொள்ள வேண்டும். 

இளைய தலைமுறையை ஈர்க்க இணையத்தில் செயல்படுவது ஒரு புறம்மிருந்தாலும் களத்தில் தீவிரமாக செயல்பட வேண்டும். நான் அறிந்த வரையில் வடமாவட்டங்களில் அந்த பணியை கச்சிதமாக செய்வது பாமக தான். இணையத்தில் ஆண்டசாதி என சொல்லிக்கொண்டு திமிர் பேசினாலும் களத்தில் கிராமந்தோறும் பிரச்சாரம், திண்ணை பிரச்சாரம், சாதிக்காரர்களை ஒன்று திரட்டல் பணிகளை கச்சிதமாக செய்கிறார்கள். இந்த சாதி கட்சிக்கு உள்ள திட்டமிடல் தேர்தல் பணியில் கரைகண்ட திமுகவுக்குயில்லை.

மோடி வளைத்தளத்தை பயன்படுத்தி தான் ஆட்சி பொறுப்புக்கு வந்தார் அதனால் அந்த வழியை நாங்களும் பயன்படுத்துகிறோம் என்பவர்கள் கவனத்துக்கு. மோடி இணைய தளங்களை மட்டும் பயன்படுத்திக்கொள்ளவில்லை. பத்திரிக்கை, தொலைக்காட்சி என ஊடகங்களை செமையாக கவனித்து பயன்படுத்திக்கொண்டார். மக்கள் மத்தியில் ஒரு பெரும் கதாநாயாகனாக தன்னை உருவாக்க வைத்தார். அந்த பிம்பம் தான் அவருக்கு பிரதமர் நாற்காலியை மக்களால் தரவைத்தது. 


ஒரு கட்சி இன்றைய காலக்கட்டத்தில் இணையத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் அந்த கட்சி தலைமை ஊடகங்களிலும் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். அதை கட்சி தலைமை செய்கிறது என்றால் கட்சி நிர்வாகிகள் கார்களை விட்டு இறங்கி தொண்டர்களிடம், மக்களிடம் நெருங்கி செல்ல வேண்டும். பத்தாண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு திமுக கரை வேட்டி கட்டிய தொண்டர் தெருவில் லைட் எரியவில்லையா பஞ்சாயத்து அலுவலகத்துக்கு போய் கேள்வி கேட்பார், ரேஷன் கார்டுயில்லையா வாங்கி தருவார், வாக்காளர் அடையாள அட்டையில்லையா வாங்கி தருவார், சர்டிப்கெட் வேண்டுமா வாங்கி தருவார். அந்த நபர் சொல்வதை அவரால் பலன் பெற்றவர்கள் செய்வார்கள். இப்படித்தான் ஓட்டுக்களை தக்க வைத்துக்கொண்டு இருந்தனர் திமுகவினர். கட்சியினரை கண்டால் இறங்கி நலம் விசாரித்த நிர்வாகிகள் இருந்தார்கள். இன்று அப்படியா இருக்கிறார்கள் திமுகவினர்?.

திமுகவினரின் அந்தயிடத்தை அதிமுகவினர் பிடித்துக்கொண்டனர். இன்று ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு, மூன்று அதிமுக தொண்டர் அந்த பணியை செய்கிறார் அதிலிருந்து தனக்கான கூலியை சம்பாதித்துக்கொள்கிறார். திமுக தொண்டர்கள் ஏன் அதை கைவிட்டார்கள் என்பதை அந்தந்த பகுதி நிர்வாகிகள் ஆராய வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் தொண்டர்களை மதிப்பதில்லை. அதிலும் பணவசதியில்லாத கழகத்தினரை சுத்தமாக மதிப்பதில்லை. இன்றைய நிர்வாகிகளுக்கு யார் தேவைப்படுகிறார்கள் என்றால் செல்போன், முகநூலில் கணக்கு, வாட்ஸ்அப்பில் குழு உருவாக்கி வைத்துள்ள தொண்டன் தேவை என நினைக்கிறார்கள். முகநூல் கணக்கு எந்த காலத்திலும் வந்து ஓட்டு போடப்போவதில்லை, முகநூல், வாட்ஸ் அப் பற்றி தெரியாத லட்ச கணக்கான ஏன் கோடிக்கணக்கான வாக்காளர்கள் தமிழகத்தில் உள்ளார்கள் என்பதை திமுகவினர் நினைவில் கொள்ள வேண்டும். அந்த வாக்காளர்களை அழைத்து வந்து ஓட்டுப்போட வைக்க போகிறவன் கிராம தெருக்களிலும், நகர தெருக்களிலும் உள்ளான். அவனை மதிக்காமல் முகநூல், வாட்ஸ் அப்பை மட்டும் மதிக்ககூடாது. 

அந்த கோடிக்கணக்கான வாக்காளர்களையும் மனதில் வைத்து களத்தில் வேலை செய்ய வேண்டும், வாக்குசாவடியில் நின்றுக்கொண்டு படம் எடுத்து போடுவதை விட, வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும். ஆளும்கட்சி செய்துள்ள தவறுகளை, ஊழல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும், கடந்த காலத்தில் திமுக நிர்வாகிகள் செய்த தவறுகளை கலைய வேண்டும், மக்களிடம் நம்பிக்கை வரும் அளவுக்கு நடந்துக்கொள்ள வேண்டும். இதை செய்யாமல் மாற்றம் வராது. களப்பணி மட்டும்மே வெற்றியை தரும் என்பதை திமுக நிர்வாகிகள் உணர வேண்டும். உணர்ந்தால் நல்லது.

புதன், அக்டோபர் 14, 2015

நெல்சன் மண்டேலாவை அவமானப்படுத்திய மோடி. சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு.





தென்னாப்பிரிக்காவின் தந்தை நெல்சன் மண்டேலா சிறை வாழ்க்கையோடு ஊழல் புகார் கூறப்பட்டு சிறையில் இருந்த பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங்பாதலை ஒப்பிட்டு அரசியல் காரணங்களுக்காக இருவரும் சிறையில் இருந்தார்கள் என தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட சர்வதேச நீதிமன்றதில் வழக்கு தாக்கல் செய்துள்ளது தென் ஆப்பிரிக்க அரசு.

டெல்லியில் கடந்த 11ந்தேதி ஜெயபிரகாஷ் நாராயணனின் 113வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் பிரதமர் மோடி, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங்பாதல் போன்றோர் கலந்துக்கொண்டனர். ( பி.ஜே.பியுடன் பஞ்சாப் அகாலி தளம் கூட்டணியாக உள்ளது. இரு கட்சியின் சார்பில் தான் நாடாளமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் எதிர்கொள்ளப்பட்டன. ) அங்கு பேசிய நமது பிரதமர் மோடி அரசியல் காரணங்களுக்கான தென்னப்பிரிக்கா அதிபர் நெல்சன் மண்டேலாவும், பஞ்சாப் அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பதலும் சிறையில் இருந்தவர்கள், நெருக்கடி நிலையின் போது சிறையில் பாதல் இருந்தார் என பேசியவர் அதை தனது டுவிட்டர் தளத்திலும் பதிவு செய்திருந்தார்.

உடனே பஞ்சாப் காங்கிரஸ்சின் பாராளமன்ற எதிர்கட்சி துணை தலைவருமான கேப்டன் அமரிந்தர்சிங், இது நெல்சன் மண்டேலாவை அவமதிக்கும் செயல் என கடுமையாக தனது கண்டனத்தை பதிவு செய்தார். பலரும் பதிவு செய்துள்ளார்கள்.

பிற நாட்டு அதிபர்கள், பிரதமர்களின் பேச்சுகளை மற்ற நாடுகள் உன்னிப்பாக கவனிக்கும். இந்திய பிரதமர் மோடியின் பேச்சை தென்னாப்பிரிக்கா தூதரகமும் கவனித்து உடனடியாக இதுப்பற்றி தன் நாட்டுக்கு தெரியப்படுத்தியது. இதில் அதிருப்தியான தென்னாப்பிரிக்கா தன் தேச தந்தையை அவமானப்படுத்திய மோடி மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் வெள்ளை நிற தோல் தொண்டவர்கள் கறுப்பின மக்களை அடிமையை விட மிக மோசமாக நடத்தினார்கள். ஏறக்குறைய இந்தியாவில் ஆரியர்கள் திராவிடர்களை நடத்தியதை போல. இப்போதும் மேல் சாதியென சொல்லிக்கொண்டு கீழ்சாதியினர் என வரைமுறைப்படுத்தி அடிமைப்படுத்தியதை போல. வெள்ளை நிற தோல் கொண்டவர்கள் செயல்பட்டார்கள். தன் கறுப்பின மக்களின் விடுதலைக்காக, உரிமைக்காக நீண்ட போராட்டம் நடத்திய மாமனிதர் நெல்சன் மண்டேலா. இந்த அறவழி போராட்டத்துக்காக தனது வாழ்நாளில் தொடர்ச்சியாக 27 ஆண்டுகள் சிறையில் கிடந்தவர். ஆர்.எஸ்.எஸ் பிதாமகர் போல ஆங்கிலேய அரசாங்கத்திடம் மன்னிப்பு கடிதம் எழுதி தந்து காலில் விழுந்தவரல்ல, காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவி கும்பல்கள் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி சிறையில் இருந்து வெளிவந்தவரல்ல மண்டேலா. இரும்பு மனிதராக மக்களின் போராட்டத்துக்காக உள்ளே இருந்தபடியே 27 ஆண்டுகள் போராடினார். அந்த மக்களுக்கு நிறவெறியில் இருந்து விடுதலை வாங்கி தந்தார், அரசியல் உரிமைகள் பெற்று தந்தார். அதனால் தான் அவரை தென்னாப்பிரிக்காவின் தந்தை என அந்த மக்கள் அன்புடன் அழைக்கிறார்கள்.


பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் யார் என்பது இந்தியாவே அறியும். அவரது ஆட்சி எப்படி என்பதை அந்த மாநில எதிர்கட்சிகள் விமர்சனமாக அடிக்கடி வைக்கின்றன. விவசாயிகள் தற்கொலை, இளைஞர்கள் போதைபொருட்களுக்கு அடிமையாகி உள்ளது போன்றவற்றோடு, சர்வதேச அரங்கில் சிக்கும் போதை பொருள் கடத்தல்காரர்கள் 30 சதவிதம் பேர் போதை பொருளை பஞ்சாப்பில் தான் வாங்கினோம் என ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மாநில முதல்வருடன் தென்னாப்பிரிக்காவின் தேச தந்தையுடன் ஒப்பீட்டு பேச எப்படி மோடியால் முடிந்தது என தெரியவில்லை. மோடி வரலாறு தெரியாமல் இருக்கறார் என்பது அனைவரும் அறிந்தது தான். அதற்காக ஒரு நாட்டின், கோடிக்கணக்கான மக்களின் நாயகனை அவமானப்படுத்துவது தேவைதானா?.

தேர்தலின்போது எப்படி வேண்டுமானாலும் மோடி பேசியிருக்கலாம். அது நம்மோடு போய்விட்டது. இப்போது இந்தியாவின் பிரதமர், நீங்கள் பேசும் பேச்சு 130 கோடி மக்களின் குரல். அப்படிப்பட்டவர் எவ்வளவு தெளிவாக, உண்மையாக பேச வேண்டும். அனைத்தும் அறிந்த அதிமேதவி என்கிற கணக்கில் பிரதமரானபின்பும் உளற உலக அரங்கில் வெட்கி தலைகுனிய வேண்டிய விதமாக இந்தியாவின் மானத்தை சர்வதேச கூண்டில் ஏற்றியுள்ளது தென்னாப்பிரிக்கா அரசாங்கம்.


மோடி என்கிற நபர் மீது மட்டுமே வழக்கு தாக்கல் செய்துள்ளோம். இந்தியா மீதல்ல என்கிறது தென்னாப்பிரிக்காவின் அதிகாரபூர்வமற்ற ஒரு செய்தி. மோடி இப்போது தனி மனிதரல்ல இந்தியாவின் பிரதமர். பிரைம் மினிஸ்டர் ஆப் இந்தியா என்கிற பெயரில் தான் பதிவு செய்கிறார். ஆக அவர்கள் மோடி என்கிற தனி நபர் எனச்சொன்னலும் அது இந்தியாவை சர்வதேச அரங்கில் தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மை.

வியாழன், அக்டோபர் 08, 2015

நடிகர் சங்க தேர்தல். காரசாரமாக மாறுது – கட்டிப்புடி வைத்தியம் வராதா ?.


தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் தேர்தலே நடக்ககூடாது என்கிறார்கள் இப்போது பதவியில் உள்ள சரத்-ராதாரவி தரப்பினர். சிவாஜி காலத்தில் உருவாக்கப்பட்டது தென்னிந்திய நடிகர் சங்கம். அவர் காலத்தில் இடம் வாங்கி கட்டிடமும் கட்டப்பட்டது. பல தலைவர்களை கண்ட சங்கம் கோடிகளில் சம்பளம் வாங்கும் உறுப்பினர்கள் இருந்தும் கடன்கார சங்கமாக இருந்தது. விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது நட்சத்திர கலை இரவு நடத்தி நடிகர் சங்கத்துக்கு என இருந்த கடன்களை அடைத்தவர் லாபகரமான சங்கமாக விட்டுவிட்டு சென்றார். அடுத்து தலைவர் பதவிக்கு வந்தவர் நடிகர் சரத்குமார். அதன் செயலாளராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர் நடிகர் ராதாரவி. இந்த டீம் பொறுப்புக்கு வந்த பின் நடிகர் சங்க இடத்தை சத்யம் சினிமாஸ் நிறுவனத்துக்கு 99 வருட குத்தகைக்கு பெரும் தொகையை வாங்கிக்கொண்டு விட்டவர்கள், அதில் ஒரு பகுதியை மட்டும் கணக்கு காட்டினார்கள். அப்போது நிர்வாக குழுவில் இருந்த நடிகர் குமரிமுத்து, கேள்வி எழுப்ப அவரை ஒருமையில் திட்டி அவரது பதவியை பறித்துக்கொண்டு அனுப்பினார் செயலாளர் ராதாரவி. அடுத்து நாடக நடிகரான பூச்சிமுருகன் என்பவர் பிரச்சனையை கிளப்பி உயர்நீதிமன்றம் சென்றபின் விவகாரம் பெரியதாக வெடித்தது.

இதே பிரச்சனையை நடிகர் நாசர் எழுப்பியபோது, அவரையும் சரத்-ராதாரவி டீம் அசிங்கப்படுத்தியது. நாசர் இந்த பிரச்சனையை பெரும் நடிகர்களான ரஜினி, கமலிடம் கொண்டு சென்றார். பிரச்சனையை கேட்டுக்கொண்டவர்கள் இதில் அமைதி காத்தனர். இந்த விவகாரம் பற்றி அடிக்கடி சின்ன சின்னதாக கேள்வி கேட்டு வந்தார் இளம் நடிகர் விஷால். ஒருக்கட்டத்தில் நாசர் – விஷால் இணைந்த பின் பெரும் பிரச்சனையாக உருவானது. நடிகர், நடிகைகளை சந்தித்து விவகாரத்தை விளக்கினர். அதோடு, குமரிமுத்து, பூச்சிமுருகன் விவகாரம் பற்றி நடிகர் சங்க கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு தெரியும் என்பதாலும், சரத்- ராதாரவி கூட்டணி செய்வது அயோக்கியத்தனம் என்பதை அறிந்துக்கொண்டு விஷால் –நாசர் உருவாக்கிய பஞ்ச பாண்டவர் அணி பக்கம் சாய ஆரம்பித்தார்கள். இதுவரை எத்தனை உறுப்பினர்கள் நடிகர் சங்கத்தில் என தெரியாத நிலையில், அதை பஞ்சபாண்டவர் அணி நீதிமன்ற அறிவிறுத்தல் பெயரில் தேர்தலை நடத்தும் ஒய்வு பெற்ற நீதிபதி மூலம் அறிவிக்க வைத்தது. இருதரப்பும் தேர்தலில் குதித்து வேட்புமனுதாக்கல் செய்துவிட்டார்கள்.

இருதரப்பும் மீடியாவை சந்தித்து வந்த நிலையில், திடீரென நடிகை ராதிகாசரத்குமார் தன்னுடன் சிலரை உட்காரவைத்துக்கொண்டு மீடியாவை சந்தித்தார். நடிகர் சங்கத்தை உடைக்க பார்க்கிறார்கள். இது ஒரு குடும்பம். இந்த குடும்ப விவகாரம் எதுக்கு பொதுமக்களுக்கு தெரியவேண்டும், விஷால்ரெட்டிக்கு என்ன தெரியும் என சோகத்தை புழிந்து ஒரு நடிப்பு நடித்தார். இதே கூட்டணியில் உள்ள நடிகர் சிம்பு, விஷால்ன்னா பெரிய இவனா, அவனுக்கெல்லாம் நாங்க எதுக்கு பதில் சொல்லனும் என எகிறினார்.

தயாரிப்பாளர் சங்கம், ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பவர்கள் இங்கு கூத்தாடி இரண்டு பட்டதால் ஊர் பார்க்கிறது. அதனால் சமாதானம் செய்ய முயற்சிக்கிறோம் என கலைப்புலிதாணு அறிக்கை வெளியிட்டார்.

பஞ்சபாண்டவர் அணி, சினிமா துறையில் உள்ள தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம் உட்பட 23 சங்கத்தில் முறையாக 3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது. அப்படியிருக்க 10 ஆண்டுகளாக தேர்தலே நடைபெறாத நடிகர் சங்கத்தில் ஏன் தேர்தல் நடைபெற ஒத்தொழைப்பு அளிக்கமறுக்கிறீர்கள். வெற்றி, தோல்வி எது வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள தயார். நாங்கள் குடும்பத்தை உடைக்கவில்லை என அறிவித்துவிட்டு பிரச்சாரத்துக்கு போய்விட்டார்கள்.

நீ ஏன் இந்த பிரச்சனையை மக்களிடம் கொண்டு செல்கிறீர்கள் என ராதிகா மீடியாக்கள் முன் போட்டி குழுவிடம் கேள்வி எழுப்பி நியாயம் கேட்டார். நமக்கு இங்கு சில கேள்விகள் எழுகின்றன. தென்னிந்திய நடிகர் சங்கம் நடிகர்களுக்கானது மாற்று கருத்துயில்லை. அவர்களின் நலனுக்காக உருவானது சரி. எத்தனை நடிகர்-நடிகைகளுக்கு நல்லது செய்துள்ளது சங்கம். லட்சங்களில், கோடிகளில் சம்பாதிக்கும் அந்த ஆயிரம் பேரை விட்டு விடுங்கள் மீதியுள்ள இரண்டாயிரம் சொச்சம் பேருக்கு என்ன செய்துள்ளது நடிகர் சங்கம் ?.


சக நடிகர்கள் சங்கத்தில் நடந்துள்ள, நடந்து வரும் ஊழல் பற்றி கேள்வி கேட்கிறார்கள் எதுவும் நடைபெறவில்லையென்றால் விளக்கமாக எல்லா உறுப்பினர்களுக்கும் அதுப்பற்றி வெள்ளை அறிக்கை தரலாம்மே ?. அவர்கள் வரமறுக்கிறார்கள் என நீங்கள் சொல்கிறீர்கள். அவர்கள் தான் வரவில்லையே நீங்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க இப்போது சங்கத்தை உடைக்க பார்க்கிறார்கள் என கதறுவதை விட்டுவிட்டு வெள்ளை அறிக்கையாக மீடியாக்களிடம் அதை தரலாம்மே ?.

விஷால்ரெட்டி என சாதி பெயரை உள் புகுத்துகிறீர்கள். நீங்கள் சொன்னதுக்கு பின் தான் அவர் ரெட்டி என தெரிகிறது. நல்லது. நீங்கள் என்ன சாதி என வெளிப்படையாக அறிவித்தால் நன்றாக இருக்கும். சாதி, மதம் கடந்தது தான் நடிகர் சங்கம். இங்கு சாதியை இழுப்பது ஏன் ?. 1980 நடிகர் – நடிகைகள் அமைப்பை உருவாக்கி ஆண்டுதோறும் பார்ட்டி வைத்து கொண்டாடுகிறிர்கள். அதில் எத்தனை பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என பட்டியல் தர தயாரா ?.

தமிழர்கள் தான் சங்க பதவிக்கு வரவேண்டும், தேர்தலில் போட்டிபோட வேண்டும் என விரும்புகிறிர்களா நல்லது சங்க பெயரை நீங்கள் ஏன் தமிழக நடிகர்கள் சங்கம் என பெயர் மாற்றம் செய்யக்கூடாது ?.

நடிகர் சங்க பிரச்சனை பற்றி எதுக்கு பொதுமக்களிடம் சொல்லனும் என ராதிகா மீடியா முன் கேட்டார். நாங்கள் காசு கொடுத்து டிக்கட் வாங்கி படம் பார்ப்பதால் தான் நிங்கள் படம் எடுக்கிறீர்கள், அந்த படத்தின் விற்பனையால் தான் உங்களுக்கு சம்பளம் கிடைக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் இருந்து வரிவிலக்கு பெறுகிறீர்கள், அப்படியிருக்க உங்கள் சங்கம் பற்றி பொதுமக்கள் தெரிந்துக்கொள்ளவதில் உங்களுக்கு என்ன தயக்கம் ?.

தேர்தலில் தோற்ககூடாது என சரத்-ராதாரவி தரப்பினர் களத்தில் குதித்துள்ளனர். கணவர் சரத், அண்ணன் ராதாரவிக்கு ஆதரவாக நடிகை ராதிகா இப்போது படை திரட்டுகிறார். சரத்-ராதாரவி டீம் சாதி பலம், பண பலம், அதிகார பலம் காட்டுவதன் நோக்கம் இதில் வரும் வருமானம், அதோடு ஊழல் வெளிப்பட்டுவிடும்மோ என்ற பயம் தான் காரணம்.

பஞ்சபாண்டவர் அணி வெற்றி பெறுகிறதோ? தோற்கிறதோ அது அக்டோபர் 18ந்தேதிக்கு மேல் தெரியப்போகிறது. சரத்-ராதாரவி வெற்றி பெற்றாலும் அவர்களை எதிர்க்க ஒரு குழு உள்ளது என்பதை காட்டியுள்ளார் விஷால்.


நடிகர் சங்கம் உடைந்து விடும் என காதில் ஜிகினா சுத்த வேண்டாம். ஒரு இரவு நேர பார்ட்டி வைத்தால் இவர்கள் அனைவரும் கட்டிப்பிடித்துக்கொள்வார்கள். கமல் படத்தின் கட்டிப்பிடி வைத்தியம் போல. 

செவ்வாய், செப்டம்பர் 29, 2015

ஈழ துரோகிகள் யார் ?. வெளிச்சமாக்கும் அமெரிக்க தீர்மானம்.



2009 போர் இலங்கையில் நடந்த மனித இனப்படுகொலையை யாரும் மறந்திருக்க முடியாது. இலங்கை அரசாங்கத்துக்கும் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே நடந்த யுத்த்த்தில் ஈழ தமிழர்களை கொன்று குவித்த்து இலங்கையை ஆண்ட இராஜபக்சே அரசாங்கம்.

இலங்கையில் போர் நடப்பதற்க்கு காரணம்மே அன்று இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசாங்கமும், அதற்கு முட்டுக்கொடுக்கும் அன்று தமிழகத்தை ஆண்ட திமுக அரசாங்கமும் தான் என எதிர்கட்சிகள் பலப்பல விதங்களில் பலப்பல போராட்டங்களை முன்னெடுத்தார்கள் தமிழ்தேசியம் பேசும் நெடுமாறன், மணியரசன், பல தமிழ்தேசிய அமைப்புகள், வை.கோ, சீமான் போன்றவர்கள் நாக்கு தண்ணீர் வற்ற, நரம்பு புடைக்க கர்ஜித்தார்கள்.

போர் நிறுத்தும் அளவுக்கு மாநில அரசுக்கு அதிகாரம்மில்லை என தமிழகத்தை ஆண்ட திமுக அராசங்கம் பலமுறை எடுத்துக்கூறியும் அரசியல் செய்த தலைவர்கள் அதை அறிந்தும் தெரிந்திருந்தும் மக்களிடம் பொய்யான பிரச்சாரத்தை செய்தார்கள். 2011 தேர்தல் பிரச்சாரத்தின் போது இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார் சீமான், காங்கிரஸ் உள்ள அணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்றார்கள் நெடுமாறன், வை.கோ போன்ற ஈழத்துக்காக உருகும் தலைவர்களும், தமிழ்தேசியம் பேசுபவர்களும். திமுக ஆட்சி போய் அதிமுக ஆட்சி வந்துவிட்டது.

அந்த ஆட்சி வந்து 5 ஆண்டுகள் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் இன்னமும் ஈழம் மலரவில்லை. ஈழம் என்ற வார்த்தையே மறக்கடிக்கப்பட்டுவிட்டது. தமிழ்தேசியவாதிகளால் ஈழத்தாய் என அழைக்கப்பட்ட தமிழக முதல்வராகவுள்ள ஜெ, தமிழக சட்டமன்றத்தில் ஈழப்படுகொலை பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற ரீதியில் இரண்டு, மூன்று முறை தீர்மானம் இயற்றியதும் ஈழம் உருவானது போல் பாராட்டு கூட்டமும், அறிக்கையும் தந்தனர் தலைவர்கள்.


இலங்கையில் நடந்த மனித படுக்கொலைப்பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும்மென ஐ.நாவின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் நவநீதம் பிள்ளை அறிவித்தார். அவருக்கு பின் பல தலைவர்களும் அறிவித்தார்கள்.

இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கம் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவந்தது. இந்தியாவில் பி.ஜே.பி மலர்ந்தால் வந்தால் ராஜபக்சேவை சர்வதேச கூண்டில் மோடி நிறுத்துவார் என வை.கோ, தமிழருவி மணியன் போன்றவர்கள் பேசினார்கள். வை.கா கூட்டணியே வைத்தார். 2014ல் இந்தியாவில் தாமரையின் ஆட்சி உருவானது மோடியும் பிரதமரானர். வை.கோவை எட்டி உதைக்கும் விதமாக ராஜபக்சேவை பதவியேற்பு விழாவுக்கு அழைத்து கவுரவித்தார்.

மாநிலத்தில் இவர்கள் விரும்பிய இலை ஆட்சி, மத்தியில் இவர்கள் நினைத்த தாமரை ஆட்சி தான் உள்ளது. ஆனால், தமிழகத்து மோடி மட்டும்மல்ல, இந்தியாவின் மோடியாலும் ராஜபக்சேவை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆட்சி அதிகாரம் போனாலும் அவர் மாளிகையில் ஜாலியாகவுள்ளார். ராஜபக்சேவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து ஆட்சிக்கு வந்த சிறிசேனாவும் ராஜபக்சேவை அவரது குடும்பத்தை விட்டுதர தயாராகயில்லை.


ஈழத்தில் நடந்த மனித படுகொலையை இலங்கை அரசாங்கம்மே நீதி விசாரணை நடத்தலாம். அதில் சர்வதேச நீதிமான்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இடம் பெற வைத்துக்கொள்ளலாம் என்ற தீர்மானத்தை ஐ.நாவில் நிறைவேற்ற அமெரிக்கா முயல்கிறது. இந்தியாவின் மோடி அரசாங்கம் அதற்கு உதவுகிறது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும்மென்றால் மோடி அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை திட்டமிடல் படி உருவானதே அமெரிக்காவின் அந்த தீர்மானம்.

இப்படியொரு தீர்மானம் வரப்போகிறது என்பது முன்பே திமுக ஆட்சியின் போது கோயாபல்ஸ் பிரச்சாரம் செய்த நெடுமாறன், வை.கோ, சீமான், மணியரசன் மற்றும் பல தமிழ்தேசியவாதிகளுக்கு தெரியும். தெரியவில்லை என அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வோம். இந்த அக்டோபர் மாதம் ஐ.நா அவை கூடியதும் அந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதோடுஈ சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை நீர்த்து போக வைக்கும் வகையிலான சரத்துகள் இன்னும் சேர்க்கப்பட்டு 30ந்தேதி அந்த தீர்மானம் ஐ.நா அவையில் நிறைவேற்றப்படவுள்ளன என்ற தகவல்களும் வந்தன.


28ந்தேதி இரவு வரை நெடுமாறன், வை.கோ, சீமான், மணியரசன், புதியதாக உருவாகியுள்ள வேல்முருகன் மற்றும் தொல்.திருமா போன்ற யாரும் வாய் திறக்கவில்லை. அனைத்து துவாரங்களையும் அடைத்துக்கொண்டு இருந்தனர். விமர்சனம் வருகிறது என்றதும் 29ந்தேதி காலை வை.கோ மட்டும் சென்னையில் போராட்டம் நடத்தி கைதானார்.

இவர்கள் போராட்டம் நடத்தாதற்கு காரணம் ஈழத்தாயின் ஆட்சியில் ஈழத்தில் மக்கள் நிம்மதியாக அனைத்து உரிமைகள் பெற்று வாழ்கிறார்கள் என சொல்ல வருகிறார்களா ? அல்லது ஈழத்தில் தமிழ் மக்களே இல்லை என சொல்ல வருகிறார்களா ? அமைதியாக இருந்து என்ன சொல்ல வருகிறார்கள்.

2009 நாடாளமன்ற தேர்தல் நடந்த போது, ஈழத்தில் இருந்து விடுதலைப்புலிகள் ஆதரவு தலைவர்களிடம், போரை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்க சொல்கிறார்கள் என்ன செய்யலாம் என விடுதலைப்புலிகள் தலைவர்கள் கேட்டபோது அடுத்து பி.ஜே.பி ஆட்சிதான் போரை தொடர்ந்து நடத்துங்கள் என ஆலோசனை சொன்னதாக தகவல் வெளியானது. அதை நம்புவது கடினமாக இருந்தது.

மத்தியஸ்த நாடாகயிருந்த நார்வே வெளியிட்ட போர் முடிவுக்கு பின் விசாரணை அறிக்கையில் விடுதலைப்புலிகளை நம்பவைத்து கழுத்தறுத்த்து தமிழக அரசியல் தலைவர்கள் என குறிப்பிட்டுயிருந்தது.

அவைகளை அப்போது நம்புவது கடினமாக இருந்தது இப்போது முழுதாக நம்புகிறேன். ஈழ துரோகிகள் காங்கிரஸ்சோ, திமுகவோ கிடையாது. நெடுமாறன், வை.கோ, சீமான், தமிழ்தேசியவாதிகள் தான். காங்கிரஸ், திமுக போன்றவை நெஞ்சில் குத்தினார்கள் என்றால் நெடுமாறன், வை.கோ, சீமான், தமிழ்தேசியவாதிகள் உங்கள் நண்பன் என சொல்லிக்கொண்டு தோளில் கைபோட்டுக்கொண்டு விடுதலைப்புலிகள் மற்றும் ஈழ மக்கள் முதுகில் குத்திய துரோகிகள் என்பதை உங்களது கொண்டைகளே காட்டி தருகின்றன.

வாழ்க உங்கள் புரட்சி.  

பயணத்தில் கிழிக்கப்படும் மோடி முகமுடி. – உள்நாட்டு மீடியாவுக்கு கண் தெரியவில்லை.



அமெரிக்காவின் சிலிக்கான் வேலி பகுதிக்கு நம் நாட்டு பிரதமர் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு பேஸ்புக் தலைமையகத்தில் அதன் நிறுவனரை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டார் என கதை எழுதிய நம்நாட்டு பத்திரிக்கைகள், மீடியாக்கள் சிலிக்கான் வேலியில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தை ஒரு பாக்ஸ் அளவுக்கு கூட செய்தியாக்கவில்லை. அவர் தலைமையிலான பி.ஜே.பி ஆட்சிக்கு வந்து ஒன்னரை ஆண்டுகள் ஆகிறது. இன்னமும் அவரது ஆட்சியை பற்றி விமர்சனமே, குறைகளோ சுட்டிக்காட்டாமல் அவர் நடந்தால் நடையழகு, சிரித்தால் பல்லழகு என்றே எழுதிக்கொண்டும், ஒளிப்பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இது என்னவகையான ஜர்னலிசம் என தெரியவில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம். சிலிக்கான் வேலியில் மோடிக்கு எதிர்ப்பாக என்ன போராட்டம்?. மோடி தலைமையிலான இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் செயல்படும் மோடி அரசை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டங்களை செய்தியாக பதிவு செய்து மோடி அரசை கிழிகிழியென கிழிக்கின்றன நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், பி.பி.சி போன்ற பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும்.

இதுயேதோ அமெரிக்காவில் மட்டும் நடைபெறும் போராட்டமல்ல மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கும் நாடுகளில் மோடி பயணம் செய்தால் ஜனநாயக ரீதியில் தங்களது எதிர்ப்புகளை காட்ட அந்நாடுகள் அனுமதியளிக்கின்றன. இதனால் போராட்டங்களும் நடைபெறுகின்றன.

மோடி பிரதமராக பதவியேற்றதும் முதன் முதலாக மோடி பயணம் செய்த நாடு இந்தியா அடிமையாக நடத்தும் பூடான் நாட்டுக்கு. அங்கு நம்மவூர் கட்சிகள் போல் பிளக்ஸ், கட்அவுட், கொடி, தோரணம் என கட்ட வைக்கப்பட்டு வரவேற்ப்பு தரப்பட்டது. அந்த நாட்டின் நாடாளமன்றத்தில் மோடி உரையாற்றி முடித்தபோது மோடிக்கு எம்.பிகள் கைதட்டி அதிர்ச்சியை தந்தனர். கைதட்டினால் ஏன் அதிர்ச்சியாக வேண்டும். பூடான் வழக்கப்படி கைதட்டுவது என்பது துர்நாசம் செய்யும் ஆவிகளை விரட்டவே கைதட்டுவார்கள். மோடியை அவர்கள் துர் ஆவியாக நினைத்துவிட்டார்கள் போல.

அடுத்த்தாக பல நாடுகளுக்கு அவர் பயணம் செய்தார்.

2014 ஜீன் மாதம் பூட்டான்.
2014 ஜீலை நான்கு நாள் பயணமாக பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக்கொள்ள பிரேசில்.
2014 ஆகஸ்ட் மாதம் இரண்டு நாள் பயணமாக நேபாளம். அதேமோதம் 30ந்தேதி முதல் செப்டம்பர் 3ந்தேதி வரை ஜப்பான் பயணம்.
2014 செப்டம்பர் 5 நாள் பயணமாக அமெரிக்கா.
2014 நவம்பர் மாதம் மியான்மர், அதேமாதம் 14 முதல் 18 வரை ஆஸ்திரேலியா, அதேமாதம் ஒருநாள் பயணமாக பிஜி தீவுக்கும், 25ந்தேதி மூன்று நாள் பயணமாக மீண்டும் நேபாளம் பயணமானார்.

2015 மார்ச் 10ந்தேதி இரண்டு நாள் பயணமாக ஐஸ்லாந்து, அப்படியே 11ந்தேதி 3 நாள் பயணமாக மொரிசியஸ், மார்ச் 13ந்தேதி இலங்கை, மார்ச் 29ந்தேதி சிங்கப்பூர் பயணமானார்.

2015 ஏப்ரல் மாதம் பிரான்ஸ்க்கும், ஏப்ரல் 12ந்தேதி ஜெர்மனி, 14ந்தேதி கனடாவுக்கு பயணம்.

2015 மே மாதம் 3 நாள் பயணமாக சீனாவுக்கு ஓடினார். 16ந்தேதி மங்கோலியாவுக்கு போனார். 18ந்தேதி தென்கொரியாவுக்கு போனார். இதோ இப்போது அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளார்.

கடந்த ஜீன் 2014 முதல் 2015 ஜீன் வரை 20 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். அதற்கான செலவு மட்டும் 37.22 கோடியென ஆர்.டி.ஐ தகவல் தெரிவிக்கிறது. இதில் ஆஸ்திரேலியா பயணம் தான் அதிக செலவு வைத்துள்ளது மோடிக்கு. அதிக செலவு வைத்த இந்த பயணம் யாருக்காக நடத்தப்பட்டது என துழவினால் அவரது நம்பிக்கைக்குரியவரும், அவரை பிரதமராக்க பாடுப்பட்ட அதானி குழுமத்துக்காக தான் ஆஸ்திரேலியா பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதோடு அந்த அதானி குழுமத்துக்கு மக்களின் சேமிப்பாக இந்திய பாரத வங்கியில் உள்ள பணம் 2 ஆயிரம் கோடி அளவுக்கு அதானிக்கு கடன் தர உத்தரவிட்டுள்ளார் மோடி.

முதல்முறை அமெரிக்கா பயணம் சென்றபோது, பெரும் வரவேற்ப்பு தந்த அமெரிக்கா வாழ் இந்தியர்களில் இந்த முறை குறிப்பிட்ட சதவிதம் பேர் எதிர்த்து நின்கின்றனர். அதைத்தான் மேலே குறிப்பிட்ட முதல் பத்திகளில் சுட்டிக்காட்டியது. அதோடு, மோடிபெயில் என்ற இணைய பக்கம் தொடங்கப்பட்டு அவரை எதிர்ப்பதற்கான காரணங்கள், எதிர்ப்பு பற்றி பதிவு செய்துள்ளது மோடி விசுவாசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மோடியின் வெளிநாட்டு பயணங்கள் பெரும் வெற்றியென ஒரு பக்கம் கொண்டாடப்பட்டாலும் அது எந்தளவுக்கு தோல்வியென விளக்கமாக வெளிவந்துள்ளது. ஆனால் அதனை வெளிப்படுத்ததான் பலரும் தயங்குகிறார்கள். லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இதழில் கடந்தவாரம் அமெரிக்காவுக்கு போப் பிரான்சிஸ் மற்றும் மோடி பயணம் வந்தது பற்றி இருவரின் பயண ஓப்பிட்டு ஒரு நேர்த்தியான கட்டுரை வந்துள்ளது வாய்ப்பிருந்தால் படித்து பார்க்கவும்.


மோடி வெளிநாடுகளுக்கு போனதும் அங்கு அவர்க்கு வரும் எதிர்ப்புகள் பற்றியோ, பயணத்தின் வழியாக அவர் பெற்ற வெற்றி பற்றி எழுதுவதில்லை. அவர் மக்கள் முன் கை ஆட்டுவது, வரலாறு என்ற பெயரில் உளறுவதை மட்டுமே இங்கு பதிவு செய்து அவரை நாயகனாக காட்ட முயல்கிறார்கள். இதுப்பற்றி விமர்சனம் செய்து எத்தனை வெளிநாட்டு மீடியாக்கள் மோடி மீது கரி பூசி அனுப்பினாலும் அதை கலர் சாயம் என வக்காலத்து வாங்க தயாராகவே உள்ளனர் காவிகளும், காவியாகும் நான்காம் தூணும்.

ஞாயிறு, செப்டம்பர் 27, 2015

ஸ்டாலின் பயணம் வெற்றி பெறுமா ?.



தனது ஐடி டீம் ஐடியாப்படி நமக்கு நாமே என மக்களுடன் நேரடியாக கலந்துரையாடி வருகிறார் ஸ்டாலின். தமிழகத்துக்கு இது புதியது.

மேற்கத்திய நாடுகளில் இது பழைய பார்மூலா. எம்.பியாக, அதிபராக விரும்புகிறவர்கள் சுமார் ஓராண்டுக்கு முன்பாகவே பிரச்சார பயணத்தை தொடங்கிவிடுவார்கள். மக்களோடு பேசுவார்கள், கருத்துக்களை கேட்பார்கள். எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களுடன் ஒரே மேடையில் மக்கள் முன் தோன்றி கேள்விக்கு பதில் சொல்வது சர்வசாதாரணம். வளர்ந்து வரும் டெக்னாலஜிகளை பயன்படுத்தி குறிப்பாக இணையத்தை பிரச்சார வாகனமாக பயன்டுத்தி, வெற்றி பெற முடியும் என்பதை செய்து காட்டியவர் அமெரிக்க அதிபர் ஓபாமா. அதை அப்படியே காப்பியடித்து இந்தியாவில் நடைமுறைப்படுத்தி பிரதமர் பதவியை பிடித்தவர் மோடி. அதைத்தான் இன்று தமிழக அரசியல் கட்சிகள் காப்பியடிக்கின்றன. பாமக போஸ்டர் ஒட்டுகிறது. இருந்தும் அதன் பணிகள் வன்னியர் என்ற சமுதாயத்தின் வட்டத்ததை தாண்டி செல்லவில்லை.

ஓபாமா, மோடி ஸ்டைலில் ஸ்டாலின் முழு மூச்சாக களம்மிறங்கி இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பல தரப்பினருடன் கருத்துக்களை கேட்கிறார், ஆட்டோ பயணம், ஸ்கூட்டி ஓட்டுதல், சைக்கிள் ஓட்டுதல் என சாமானியனாக தன்னை காட்டிக்கொள்வதை ஒரு பக்கம் கிண்டல் அடிக்கப்பட்டாலும் மற்றொரு புறம் மக்களை ஆச்சர்யத்தோடு பார்க்க வைக்கிறது.


துணை முதல்வராக இருக்கும் போதே சுய உதவிக்குழு பெண்களின் மனதில் சிம்மாசனம் போட முயன்றவர் அது ஓரளவு தான் ஓர்க் அவுட் ஆனது. சட்டமன்ற, நாடாளமன்ற தேர்தல் தோல்விக்கு பின் கட்சியின் அடிமட்டத்தினருடன் நெருக்கம் காட்டிய ஸ்டாலின். இப்போது அனைத்து தர மக்களுடன் நெருக்கம் காட்ட துவங்கியுள்ளார்.

இதனை சில அரசியல் தலைவர்கள், நடுநிலையா பேசறோம் என்பவர்கள் அரசியலுக்காக ஸ்டாலின் இதை செய்கிறார் என கிண்டலடிக்கிறார்கள். அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள், தங்களால் முடியாததை, ஜெவால் செய்ய முடியாததை ஸ்டாலின் செய்கிறார் அதனால் கிண்டல் செய்கிறார்கள். ஸ்டாலின் செய்வது முழுக்க முழுக்க அரசியல் தான். அதில் மாற்றுக்கருத்துயில்லை.

இதில் இன்னொன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். இனி மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும். கடந்த காலங்களைப்போல ஏசி போட்ட கார்க்குள் அமர்ந்தபடி சென்றால் மக்கள் துரத்திவிடுவார்கள். நடுத்தர, படித்த மக்கள் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். தங்கள் மனதில் பட்டதை வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர், பிளாக் போன்றவற்றில் எழுதி தங்களது கருத்தை வெறிப்படுத்தி விடுவார்கள். இதனால் அரசியல்வாதிகள் தங்களை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். மாறவில்லையென்றால் மாற்றம் தருபவர் என நம்புவர் பக்கம் போய்விடுவார்கள்.

மாற்றத்தை நோக்கி போகும் ஸ்டாலினின் இந்த பயணம் வெற்றி பெறுமா?.

திமுகவை தாண்டி பல தரப்பினரின் கேள்வி, எதிர்பார்ப்பு இதுதான். வெற்றியா, தோல்வியா என்பது ஒருபுறம்மிருக்கட்டும். ஸ்டாலின் கட்சியில் மட்டும்மல்ல மக்கள் மத்தியிலும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளார். இனி கலைஞரே கூட ஸ்டாலினை தலைமை பதவிக்கு கொண்டு வரவில்லையென்றால் மக்கள் ஏச்சுக்கு ஆளாகும் அளவுக்கு பல தரப்பட்ட மக்களுடன் தன்னை இணைத்துக்கொண்டு முதல்வருக்கு தகுதியானவர் என்ற பெயரை பெறுகிறார். அந்த விதத்தில் இது வெற்றி.

மக்களிடம் இந்த பயணம் நம்பிக்கையை தந்துள்ளதா ?.

மக்களுடன் பேசும்போது, அவர்களின் கோரிக்கைகள், குறைகளை கேட்கிறார். இந்த குறைகள் எல்லா அரசியல் தலைவர்களும் கேட்பது தான். ஆனால், இதனை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். மக்களின் அடிப்படை தேவை, பிரச்சனைகளை புரிந்துக்கொள்ள வேண்டும். 30 ரூபாய் இருந்தால் இந்தியாவில் ஒரு மனிதன் நிம்மதியாக உண்டு உறங்கிவிடலாம் என கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு அறிக்கை மத்தியரசால் வெளியிடப்பட்டது. அது எந்தளவுக்கு அபத்தம் என்பதை இந்த பயணம் புரிந்துக்கொள்ள உதவியிருக்கும். தம்மிடம் கேட்ட கோரிக்கைகளை, பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்திவிட்டால் போதும். நம்பிக்கையை தந்துள்ளதா என கேட்டால் தேர்தல் முடிவுகள் தான் அதை காட்டும்.


இது ஸ்டாலின்க்கு தேர்தலில் வெற்றி கிட்டுமா ?.

இது அதிபர் தேர்தல் கிடையாது. மக்கள் முதல்வரை நேரடியாக ஓட்டுப்போட்டு தேர்வு செய்து வைக்க. எம்.எல்.ஏ என்ற பிரதிநிதிகள் மூலம் தேர்வு செய்வது. தன் பயணத்தின் மூலம் மக்களின் நம்பிக்கையை போல மக்களின் நம்பிக்கை பெற்ற வேட்பாளரை நிறுத்த வேண்டும். தொகுதியில் சீனியர், ஜீனியர் என பார்க்காமல் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவரை தேர்வு செய்ய வேண்டும். பணம் உள்ள வேட்பாளர் வேண்டும்மென பார்க்காமல், பிரச்சனையில்லாத ஆளா?, மக்கள் நம்பிக்கை பெற்றவரா?, இளைஞரா? எம்.எல்.ஏ பதவிக்கு தகுதியானவரா? என பார்த்து சீட் தந்தால் வெற்றிக்கு மிக அருகில் செல்லலாம்.