செவ்வாய், ஜூலை 27, 2010

நாளைய அரசியல் ………….





கோடிகளில் கொள்ளையடித்த அமைச்சரையோ, அதிகாரியையோ சி.பி.ஐ, வருமான வரித்துறை பிடித்தால் அடுத்த ஒரிரு மாத்தில் வெளியே வந்து நாங்கள்ளாம் யாரு தெரியம்மில்ல என சவடால் பேசுகிறார்கள். ரேய்டு போகிறவர்கள் வீட்டில் ரெய்டு நடத்தினால் அதற்க்கு மேல் மோசமாகவுள்ளது. உயர் பீடத்தில் உள்ள தலைகளும் ஊழல் செய்கின்றன. அரசியல்வாதி முதல் அடிமட்ட அரசு ஊழியன் வரை தன்னால் முடிந்த அளவுக்கு கொள்ளையடிக்கிறார்கள். இதை தடுக்க முடியாதா என கேட்டால் சட்டத்தல ஓட்டையிருக்குங்க அதனால தான் தப்பிக்கறாங்க என்ற ரெடிமேட் பதில் வந்து விழுகிறது.

ஓட்டைய அடைங்கய்யா என்றால் அது அரசாங்கம் தான் செய்யனும் என்கிறார்கள். அரசங்கம் யாரு, நம்ம கால்ல வந்து விழுந்து ஓட்டு வாங்கனாரே அந்த எம்.எல்.ஏ, எம்.பிங்க தான் அரசாங்கமாம். அவுங்கள போய் நாம கேள்வி கேட்கலாம்ன்னு வீட்டாண்ட போனா (எந்த வீடுன்னு கேட்ககூடாது) கூர்க்கா துரத்தறான், நம்ம பணத்த போட்டு கட்டன ஆபிஸ்க்கு போனா சரக்கு வாடையும், மாட்டு சான வாடையும் திரும்பி ஓட வைக்குது. கூடி கும்மியடிக்கற (சட்டமன்றம், பாராளமன்றம்) இடத்துக்கு போனா டோக்கன் வாங்குங்கறான் அதயும் வாங்கிக்கிட்டு போனா, வெடிகுண்டு இருக்கறதா தகவல் வந்துயிருக்கு உள்ள அனுப்ப முடியாதுங்கறான்.

யோ நான் ஓட்டு போட்டு ஜெயிச்சதால தான் அவரு பொறுப்புலயிருக்காரு என சற்று குரல் உயர்த்தி சவுண்ட் விட்டால், யோ நீ ஓட்டு போட்டு தான் எங்காளு பொறுப்புக்கு வந்தாரா அடிங் கொய்யால போட்டு தள்ளிடுவோம் என மிரட்டி துரத்துக்கிறார்கள். கூடவே கவுருமெண்ட் இலவசமா டிவி தந்தது மானாட மயிலாடா பாக்க மட்டும்மில்ல உன் தொகுதி திமுககாரங்கள பாக்கனுமா கலைஞர் பாரு, அதிமுகவ சேர்ந்தவங்கள பாக்கனும்ன்னா ஜெயா, தேமுதிகவா கேப்டன், பாமகவா மக்கள், விசியா – தமிழன், காங்கிரஸ்க்கு கோஷ்டிக்கு ஒரு சேனல்ன்னுயிருக்கு கூட கட்சிக்கு ஒரு பத்திரிக்கைன்னு வேற வருது அதல பாத்துக்க, படிச்சிக்க உன் கோரிக்கைய லட்டர்ல எழுது போ, போ என மிரட்டி துரத்துகிறார்கள் அடிப்பொடிகள்.

நம்மாளு, நம்ம புள்ள, நம்ம சாதிக்காரன் என ஓட்டு போட்டவன் அதன் பின் அவர்களை பார்க்க முடியாமல் திண்டாடும் போது அடுத்த முறை வரட்டும் ஒட்டு போட்ட கோமணத்தோடு கோபத்தோடு காத்திருக்கறான் அடுத்த தேர்தல் வரை.

அடுத்த தேர்தல் வந்தால் அப்ப நம்ம பய புள்ள திருந்த மாட்டேன்கிறான். கேள்வி கேட்கமாட்டேன்கிறான். குhரணம் அவன் சாதிக்காரனை நிக்க வச்சி மாமா, மச்சான், அத்தை, பெரியப்பா என பங்காளி உறவு முறை பேசிவிட்டு ஓட்டு போட்டுடுங்க மண்ணி எனச்சொல்லிவிட்டு எஸ்கேப்பாகிவிடுகிறான். நம்ம புள்ள என ஓட்டு போட்டு விட்டு தெருவில் நிற்கிறான் வாக்காளன். இது தொடர் கதையாகிவிட்டது. அரசியல் கட்சிகள் ஏமாற்றும் கூ+ட்சுமத்தை புதுசு புதுசாக கண்டு பிடிக்கிறது. ஏமாந்த இளிச்சவாயன்களாக நம் பொது ஜனம் ஏமாந்துக்கொண்டேயிருக்கிறது.



இதன் வளர்ச்சி வருங்காலத்தில் எப்படியிருக்கும் தெரியுமா………………?

தேர்தல் தேதி கட்சிகளுடன் பேசி அறிவிக்கப்பட்டுள்ளது. – தேர்தல் ஆணையம்.

கட்சி அலுவலங்களில் சீட் கேட்டு படையெடுப்பார்கள் வள்ளல்கள். சீட் கேட்டு படிவத்தை வாங்கி பூர்த்தி செய்வார்கள்,

பெயர் : கடா குமார்.

தொழில் : கொலை செய்வது, ஆள் கடத்துவது, பெண்களை வைத்து

தொழில் செய்வது. அடியாட்கள் சப்ளை.

சொத்து : சும்மா 1500 கோடி இருக்குங்க.

அரசியல் பின்புலம் : எங்க தாத்தா எம்,பியா, எங்கப்பா அமைச்சராயிருந்தாங்க.

ஜெயிக்கலன்னா : எனக்கு ஓட்டு போடாதவன் பொண்டாட்டிய கற்பழிப்பன்,

பொண்ண தொழிலுக்கு, பையன் கிட்னியா புடுங்குவன்.

கட்சி தலைவர் நேர்காணல் நடத்துவார், ஓட்டுக்கு எவ்வளவுய்யா தருவ 5 ஆயிரம் தருவன் தலைவரே. சீட் தந்தா எனக்கு எவ்வளவுய்யா தருவ 100 கோடி தர்றன்யா, எப்படிய்யா சம்பாதிப்ப? ரோடே போடாம போட்டன்னு பில் எடுப்பன், பள்ளிக்கூடம் கட்டறன்னு பீர் பேக்டரி கட்டுவன், அடிச்சி மிரட்டி கொலை பண்ணி அடுத்தவன் சொத்த அபகரிப்பன், பொழுது போகலன்னா மீட்டிங் போட்டு மார்க்கெட் போன நயன்தாரா, ஸ்ரேயாவ ஸ்டேஜ்ல பாட்டு போட்டு டான்ஸ் ஆட வைப்பன்.

உனக்கு தான் சீட் போ போய் வேலைய பாரு. பணத்த வீட்ல தந்து. சிலிப் வாங்கிம் போய்டு.

தொகுதியில்……….

அண்ணே, புது வீடு கட்டியிருக்கானே கோவிந்தசாமி பையன் முனுசாமி அவன் தன்னோட வீட்ல போஸ்டர் ஒட்ட விடமாட்டன்னு சொன்னான். அவன் கைய வெட்டிட்டு இன்ஸ்பெக்டர்க்கு போன் பண்ணி விஷயத்த சொன்னன். அவரு மாடு குத்திடுச்சின்னு கேஸ் பதிவு பண்ணி டாக்டர்க்கிட்ட சர்டிப்கெட் வாங்கிக்கறன்னு சொன்னாருன்னே.

சரிடா அந்தாளு வரட்டும் கறிசோறு போட்டு அனுப்பலாம் அந்த பேனர்கள எடுத்தும் போய் கட்டு. நாளைக்கு பிரச்சாரத்துக்கு போகலாம்.

மறுநாள், ஐஸ்வர்யாபச்சான், ஷில்பாஷெட்டி, சினேகா போன்றோர் கரகத்தை தலையில் வைத்தபடி கிராமத்து சிமெண்ட் சாலையில் விஜய் மேளம் அடிக்க, அஜித் பீப்பீ ஊத, விக்ரம் ஜால்ரா தட்ட, சுருதிகமலஹாசனும், தனுஷ்சும் வாயில் வந்ததை பாட, ஏ.ஆர்.ரகுமான் காக்கா ரக்கையை அடித்துக்கொள்வது போல கையாட்ட இவர்கள் எழுப்பும் சத்தத்துக்கு ஏத்தப்படி தொப்புள் தெரிய, தொடை பளிச்சிட டான்ஸ் ஆடிக்கொண்டுயிருப்பார்கள். பின்னால் வாக்காள பெருமக்களே வாங்கி திண்ண.…………. மக்களே, போடுங்கடா(டீ), ஒட்டு ……….. பாத்து என மைக் அலற………. ஓட்டுக்கேட்டுக்கொண்டு போவார்கள்.

இப்படித்தான் வருங்கால அரசியல் களம், நாட்டின் நிலவரம்மிருக்கும். ஆனால் அதிலும் மாறாமல் ஒன்றே ஒன்றுயிருக்கும். அது எது தெரியுமா?

வாக்காளர்களுக்கு கிப்ட் தந்தால், வன்முறையில் ஈடுபட்டால், வாக்காளர்களை மிரட்டினால், அனுமதியில்லாமல் விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கை. – தேர்தல் ஆணையம். அறிக்கை தந்து சிரிப்பு காட்டுவது மட்டும் மாறவே மாறாது.

ஏ.டி.எம் மிஷின்களிடம் அடகு வைக்கப்படும் இந்தியா.





காங்கிரஸ் அரசு நாட்டு மக்களை பணத்துக்கு அடிமையாக்கி வருகிறது. வடநாட்டை சேர்ந்த ஒரு பைஜாமா கூறிய குற்றச்சாட்டு. இதை தினசரிகளில் படித்தவர்கள் நம்ம வடிவேலு பயலைவிட கூ+ப்பரா ஜோக் அடிக்கறான்யா என டீ கடை பெஞ்ச்சில் அமர்ந்து நக்கல் அடித்துவிட்டு போய்யிருப்பார்கள். இப்படி யோசிக்காம பேசி பேசியே தான் நாம் வீணாபோனது. சரி அதிருக்கட்டும்.

அந்த பைஜாமா சொன்னது உண்மையா என கேட்டால் உண்மை தான். பணத்தால், அதிகாரத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணத்துக்கு எப்போதே வந்துவிட்டது காங்கிரஸ். ஓட்டுக்கு காசு தரும் கலாச்சாரத்தை ஏதோ திமுக தான் ஆரம்பித்து வைத்தது. அதுவும் அழகிரி தான் ஆரம்பித்து வைத்தார். அதற்க்கு முன் பணம்மென்றால் என்னவென்றே தெரியாது என்பது போல பலரும் பேசியும், எழுதியும் வருகிறார்கள். திட்டமிட்டே சில விவகாரத்தை மறைக்கிறார்கள்.

முதன் முறையாக தமிழகத்தில் காங்கிரஸ்க்கு போட்டியாக திமுக தேர்தல் களத்தில் குதித்தபோது சிறு பிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது என காங்கிரஸ் தலைகள் கிண்டல் செய்தார்கள். ஆனால் முதல் தேர்தலிலேயே ஒரளவு எம்.எல்.ஏ சீட்களை பிடித்ததும் பயத்தோடு பார்த்தார்கள். இரண்டாவது முறையாக பொது தேர்தலில் மோதியபோது, திமுகவை கண்டு பயந்து வாக்காளர்களுக்கு காலணா, அரைணா என தந்து படோபரமாக விளம்பரம் செய்தார்கள் காங்கிரஸ் வேட்பாளர்களாகயிருந்த முதலாளிகள். திமுக பேச்சாற்றளை நம்பி களம் கண்டு-வென்றது. காசுக்கு வேட்பாளர்களை அடிமையாக்கியது யாரென்று இப்போது தெரிகிறதா?.(இதற்க்கு ஆதராம் உள்ளது)

இதை அப்படியே மறைக்கிறார்கள் வரலாற்று எழுத்தாளர்கள். பின் வந்த தேர்தல்களில் சட்டமன்ற தேர்தல் என்றால் 5ரூபாய், பாராளமன்ற தேர்தல் என்றால் 3 ரூபாய் என பணம் தரப்பட்டது. எதிலும்மே திராவிட கட்சிகள் தீவிரம் காட்டுவார்கள். அப்படித்தான் காங்கிரஸ் சில்லறையாக வாக்காளர்களுக்கு தந்து பிச்சைகாரன்டா நீங்க என சொல்லாமல் சொன்னதை திராவிட கட்சிகள் மாற்றி நோட்டுகளாக தந்து பணக்கார பிச்சைக்காரர்களாக்கினார்கள்.

காலப்போக்கில் நிலைமை மாறி இன்றைய ஆளும்கட்சி திருமங்களம் பார்முலா என ஒரு பார்முலாவை உருவாக்கி இடைத்தேர்தல் என்றால் பணமும், பிரியாணியும்மே முக்கியம் என களத்தை மாற்றிவிட்டார்கள். தற்போது திராவிட கட்சிகளின் புண்ணியத்தில் கவர்களாக, டிவிகளாக, மிக்சிகளாக, கிரைண்டர்களாக வாங்குகிறார்கள் வாக்காள பெருமக்கள். நாளை கம்பியூட்டராக உருமாறும் சாத்தியம்முள்ளதாக திராவிட பெரு இயக்கங்கள் பக்கம்மிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை கண்டு அரண்டு போன காங்கிரஸ்சின் விசுவாசிகளான ஒற்றர்கள் ( ஐ.பி ) சோனியாவிடம் திமுக இடைத்தேர்தல்ல சூறாவளியாயிருக்கு அவுங்க போடற திட்டம் இதுதான் திருமங்களம் பார்முலாவை சொன்னார்கள். காங்கிரஸ்சின் வரலாறுகளை எழுத்து கூட்டி படித்து வரும் சோனியா ஆஹா வடை போச்சே என புலம்பியபடி. நம்ம கட்சியோட பழைய பண திட்டத்துக்கு மெருகேத்தியிருக்காங்க அவுங்கள விட நாம அதிகமா மெருகேத்துவோம் என கூடி கும்மியடிக்கும் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையின் போது, சுதந்திர பேராட்ட காலத்தில் டாட்டா, பிர்லா குடும்பங்கள் தான் காங்கிரஸ்சை ஏன் காந்தியையே வழி நடத்தின. அவர்களோடு தற்போது அம்பானி அன் கோ, வெளிநாட்டு முதலாளிகள் இப்ப நம்மை வழி நடத்துகிறார்கள். இவர்கள் தான் தற்போது நமது ஏ.டி.எம் மிஷின்கள். பாராளமன்ற தேர்தலில் அந்த ஏ.டி.எம் மிஷினால் தான் நாம் ஜெயித்தது.

தொடர்ந்து இவர்களை வைத்து இனி பழைய கள்ளை புது மொத்தையில அதிகமா ஊத்தி தரனும், சின்னகவுண்டர் ராகுல்காந்தி அடுத்து பிரதமரா வறனும் அவருகு;கு எந்த பிரச்சனையும் இருக்க கூடாது, கஸ்டப்படகூடாது என பேசி முடிவு செய்தனர். அதற்ககாக ஏ.டி.எம் மிஷின்களிடம், நீங்க வங்காள விரிகுடாவ வாரி சுருட்டிக்க, இந்தியாவ வேலி போட்டு வளைச்சிக்க, எங்க வேண்டுமானாலும் குந்திக்க, என்ன வேண்ணா பண்ணிக்க, பாராளமன்றத்த லீசுக்கு எடுத்துக்க, எம்.பிங்கள வேலைக்கு வச்சிக்க. அதுக்கு பதிலா எங்களுக்கு பணம் தா என பணத்தை வாங்கி அதன் மூலம் சுவிஸ் வங்கிகளிலும், மொரிசியஷ் வங்கிகளிலும் பணத்தை போட்டு பத்திரப்படுத்தி வருகிறதாம்.

ஆட்சி, அதிகாரம், பணத்தை இனி நாமே அனுபவிக்கனும்ன்னா எதிர்கட்சிகூடாரத்தை காலி பண்ணனும் என எதிர்கட்சிகளின் கூடாரத்துக்குள் புகுந்து மகுடி வித்தைகளை ஒற்றர்கள் மூலம் செய்து எதிர்கட்சிகளை வெற்று அறிக்கைகளோடு நிற்க வைத்து வருகிறது காங்கிரஸ் அன்ட் கம்பெனி.

இப்ப இருக்கற மாதிரியே பொதுமக்கள் இருக்கனும், அதுக்கு அவனை கடன்காரனாக்கனும், வறுமையில வச்சிக்கனும், தினமும் வாழ மட்டும் பணம் தரனும் என திட்டம் தீட்டி எதிர்காலத்தில் எதற்க்கும் நம்மை கேள்வி கேட்க கூடாது என்பதற்க்காக கொண்டு வரப்பட்டது தான் இந்த புது திட்டங்கள். நம்மிடம் வரிப்பணத்தை வாங்கி அதை நம்மிடமே, வட்டிக்கு கல்வி கடனாகவும்;, கந்து வட்டிக்கு விவசாய கடனும், 100 நாள் கட்டாய வேலையென சோம்பேறி திட்டத்தை போட்டு மக்களை கடன்காரன்களாக, வறுமைக்கு திண்டாடுபவனாக, எதைப்பற்றி யோசிக்காமல் சொகுசாக வாழ வழி ஏற்படுத்தி தந்துள்ளது காங்கிரஸ் கம்பெனி.

இதையெல்லாம் யோசித்து தான் பணத்துக்கு மக்களை அடிமையாக்குகிறது காங்கிரஸ் என ஜிப்பா சொன்னது.

ஞாயிறு, ஜூலை 18, 2010

குடியும் நட்பும்.

குடியும் நட்பும்.

டாஸ்மாக்கில் பணியாற்றும் நண்பர் ஒருவருடன் அவரது கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அடிக்கடி எனக்கு தகவல்களை தந்துக்கொண்டிருப்பவர். அந்த கடையில் பணியாற்றிய சேல்ஸ்மேன். எனது நண்பரிடம் அண்ணே அடிக்கடி வர்றாரு. உங்கள பாக்க வர்றவங்க ஓசியில எல்லாத்தையும் குடிக்கறாங்க. இவர் உங்கள பாக்க வர்ற இந்த ஒரு வருஷமா பாக்கறன் இவர் மட்டும் எதுவும் குடிக்க மாட்டேன்கிறாரு ஏதாவது குடிக்க சொல்லுங்கன்னே என எனக்கு எப்படியாவது சரக்கு ஊத்தி தந்து விட வேண்டும் என்பதில் குறியாகயிருந்தார். நண்பரோ, அவர் குடிக்க மாட்டாருய்யா என சாத்தியம் செய்யாத குறையாக அவரிடம் சொல்லி அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். நான் அவர்களின் உரையாடல்க்கு மெல்ல புன்னகைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

என் இரண்டு சக்கர வாகனம் தான் முன்னேக்கி போய்க்;கொண்டிருந்தது. எண்ணமோ சில ஆண்டுகள் பின்னோக்கி பயணமாகிக்கொண்டிருந்தது. தற்போது காபி, டீ சாப்பிடுவதையே அறவே விட்ட நான் சில ஆண்டுகளுக்கு முன் குடிகாரன். இன்றைய பணி முடிந்தது என மனதில் தோன்றிவிட்டாள் நண்பர்களோடு யாரும் காணாதயிடத்தில் பீர், ரம், பிரியாணி, முறுக்கு, சிப்ஸ் பாக்கெட்களோடு பொட்டல் காட்டில் ஆஜராகிவிடும் நாட்கள் ஞாபத்தில் வந்து வேகமாக மோதியது.

2001 ஆம் ஆண்டு தற்போது வழக்கறிஞராக உள்ள அந்த நண்பன் தான் குடிக்க கற்று தந்தான். மச்சான் எங்க தாத்தா-பாட்டிக்கு சதாபிஷேகம் வந்துடுங்கடா என அழைப்பு விடுத்தான். சாகபோற காலத்தல அவுங்களுக்கு விசேஷம் பண்றிங்க. அங்க நாங்க வந்து என்னடா பண்றத்து. சும்மா வாங்கடா ஜாலியாயிருக்கும் என்றான். நான், பிரபு, கோபி, முகைதின் என எங்களது பட்டாளம் கிளம்பியது. இரவு 7 மணி சதாபிஷேகத்துக்கு 8 மணிக்கு தான் போனோம். மச்சான் யார், யார் என்ன சாப்பிடறிங்க என்றான். இருக்கறத சாப்பிடலாம்டா என நான் உணவை மனதில் நினைத்துக்கொண்டு சொன்னேன். வாடா என கிளம்பியபோது தான் தெரிந்தது அவன் கேட்டது சரக்கு என்பது.

மச்சான் எனக்கு பழக்கமில்லடா என்றேன். அப்பறம் எப்ப கத்துக்கறது. காலேஜ் போறோம். இதுகூட கத்துக்காம போனா மத்த பசங்க காறி துப்புவானுங்கடா என்றான். பேருந்து நிலையம் எதிரேயிருந்த அந்த ஒயின் ஷாப்புக்கு அழைத்து போனான். தனியார் கடைகள் தான் அப்போது. பார்க்கு போகலாம் என்றவனிடம் யாராவது பாத்துட்டா அசிங்கம்டா என்றேன்.

சரி என்ன வேணும் என கேட்டவன். அவனே மச்சான் நீ முதல் முறையா சாப்பிடற பீர் சாப்பிடு என்றவன். என்ன கம்பெனி வேணும் என கேட்டான். டேய் இப்ப தான் முதல் முறையா குடிக்கவே போறன். ஏதோ பரம்பரை குடிக்காறன் ரேஞ்ச்க்கு கம்பெனி பேர்யெல்லாம் கேட்கறியேடா என்றேன். ஏன்னை கேவலமாக பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து விட்டு 10வது படிக்கும் போதே நாங்கயெல்லாம் ஆரம்பிச்சிட்டும்டா என பந்தா பண்ணான்.

ஏதோ ஒரு கம்பெனி பீர் வாங்கி கையில் திணித்தான். புல் பீர் பாட்டிலை பாத்ததும் இவ்வளவு எப்படிடா குடிக்கறது என்றேன். பிரபுவும் இதையே சொன்னான். எங்க இரண்டு பேர்க்கு ஒன்னு போதும் எனச்சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த ஒரு மூத்திர சந்தில் நின்று நீ ஓரு மடக்கு, நான் ஒரு மடக்கு என ஒரு புல் பீர் பாட்டிலை மூன்று பேராக பங்கு போட்டு குடித்து காலி செய்தோம். அதன் பின் நண்பர்களிடம், நீண்ட நாள் அதையே பெருமையாக வடிவேல் போல பாரு பாரு நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான் என அலப்பறை தருவதை போல நாங்களும் குடிச்சோம்மில்ல என அலப்பறை தந்துக்கொண்டிருந்தோம்.



1 ஆண்டுக்கு பின் நிலை தலை கீழாக மாறியது. 2002 ஆம் ஆண்டு. பத்திரிக்கை துறையில் சேர்ந்து செய்தியே எடுக்க தெரியாமல் நிருபராக சுத்திக்கொண்டிருந்த போது எனக்கு நண்பரானார் இளம் பத்திரிக்கையாளர் ஒருவர். அந்த பத்திரிக்கை நண்பர் ஒருநாள் குடிப்பியாடா என்றார். இல்………..ல என இழுத்தேன். இழுப்பை கண்டு சரி வா என ஒயின் ஷாப்புக்கு அழைத்து சென்றவர். என்ன வேணும் என்றார். நான் குடிக்க போவது இது இரண்டாவது தடவை என்பதால் மினி பீர் என்றேன். பயப்படாதடா காசுயிருக்கு என்றார். இல்லைன்னே நான் இதான் இரண்டாவதா குடிக்க போறது என்றேன்.

சரியென வாங்கிக்கொண்டு டவுனை விட்டு 5 கிமீ தூரம் வெளியே அழைத்துச்சென்று ஒரு ஏரியில் உட்கார வைத்து மூடியை எப்படி ஒப்பன் செய்வது என கற்று தந்தார். கூடவே நீ கிராமத்தலயிருந்து வர்றவன். பெரிய நிறுவனம். உஷாராயிரு. உனக்கு தெரியாம உன்ன வச்சி வியாபாரம் பண்ணிடுவானுங்க. யாரையும் ஏன் என்னைக்கூட நம்பாத, உன்னை மட்டுமே நீ நம்பி வேலையப்பாரு, ஒழுங்காயிருந்தா நீ நிலைச்சி நிக்கலாம், தைரியாமா போராடு, பணத்துக்கு அடிமையாகிடாத என்றார். அது எனக்கு வேத வாக்கானது. அப்பறம் இதயும் மனசுல வச்சிக்க. எப்ப குடிச்சாலும் உடனே சாப்பிட்டுடனும் உடம்பு நல்லாயிருந்தா தான் வேலை பாக்க முடியும் என்றார்.

அதன் பின் மாதத்திற்க்கு 3 முறை நான் அவருடன் குடிக்க ஆரம்பித்தேன். அரை பீர், ஒரு பீரானது, ஒன்னு இரண்டானது, இரண்டு முணானது. நண்பர் அரண்டு விட்டார். ( என் தங்கச்சி, அண்ணன் காலேஜ் போகுது, வேலை பாக்குது அதுங்கிட்ட எப்பவும் காசுயிருக்கனும் என படிப்பை விட்டு விட்டு சித்தாள் வேலை செய்து அது தரும் பணத்தில் தான் குடித்தேன். ஓசியில் குடிப்பது எனக்கு எப்போதும் பிடிக்காது.) குடித்துவிட்டு டவுனிலிருந்து வீட்டுக்கு 7கிமீ தூரம் சைக்கிள்ளில் தான் செல்வேன் என்பதால் நண்பர் பயப்படுவார். கவலைப்பாடாதிங்க என சொல்லிவிட்டு போவேன். நான் குடிப்பது வீட்டிற்க்கு தெரியக்கூடாது என்பதில் உஷாராயிருந்தேன். தெரிந்தால் கை அல்லது கால் நிச்சயம் உடைக்கப்படும் என்கிற பயம்.



2005க்கு பின் அந்த நண்பருடன் மட்டுமல்லாமல் போலிஸ் நண்பர், புகைப்பட நண்பர், பள்ளி ஆசிரியர், மீடியா நண்பர் கேங்கில் சேர்ந்து தினமும் இரவு நேரத்தில் குடிப்பது வாடிக்கையானது. தொடர்புகள் அதிகமாக தகவல்கள் கொட்ட ஆரம்பித்தது. பணிக்கு பணி, குடிக்கு குடி என பொழுது போனது. பணப்பிரச்சனை கழுத்தை நெறித்தது. இருக்கவே இருக்கார் தங்கை என கஸ்டத்திம் கஸ்டமாக ஏதோ ஒரு காரணத்தை சொல்லி பணம் வாங்கி எல்லா வேலையும் அதில் பார்த்துவிடுவேன். நிரந்தர சம்பளம் வாங்க ஆரம்பித்த பின் கொஞ்ச பணப்பிரச்சனை குறைந்தது. ஆனால் வேலையில் கவனம் குறைந்தது இ.ஆ அடிக்கடி திட்டு வாங்குவது அதிகமானது.

ஒரு விதத்தில் நான் உஷாராகயிருந்தேன். என்ன தான் குடித்தாலும் மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டேன். அதனால் தான் இன்றளவும் நான் ஒரு காலத்தில் குடித்தவன் என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரை தவிர வேறு யாருக்கும் ஏன் என்னுடன் நெருக்கமாகயிருந்த நண்பர்கள் உட்பட பலருக்கும் தெரியாது.

ஒரு காலத்தில் என்றால் இப்போது குடிப்பதில்லையா என கேட்பது புரிகிறது. ஆம் குடிப்பதை சுத்தமாக நிறுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.

2007 ஆம் வருடம் மறக்க முடியாத ஆண்டு. காதல் தோல்வி. ஒருநாள் இரவு தொடங்கிய நேரம் தொலைபேசியில் என் காதல் அஸ்தமனம் ஆன போது, இரண்டு பீர் வாங்கிகுடித்து விட்டு வீட்டிற்க்கு செல்ல பேருந்திற்க்காக காத்திருந்தேன். எனது நண்பி ஒருத்தி அவரது அம்மாவுடன் அங்கு ஊருக்கு செல்ல காத்திருந்தார். நான் நிற்பதை பார்த்துவிட்டு அவரது அம்மா என்னிடம் பேச வர. நான் குடித்தது தெரியக்கூடாது என ஒதுங்க சங்கடம் ஆரம்பமானது.

அன்று முதல் இரவு பகல் என குடிக்க ஆரம்பித்தேன். நண்பன் பிரபு மட்டும் தினமும் போன் செய்து குடிக்காதடா என சொல்லிக்கொண்டேயிருந்தான். என் நெருங்கிய தோழி ஒருத்தி அதிகமாகவே அமைதி காத்தார். அமைதிக்கு பின் இருந்த அந்த ................. எனக்கு தெரியவில்லை. காதல் தோல்விக்கு பின் பீரிலிருந்து மெல்ல ஹாட் டிரிங்ஸ்க்கு மாற ஆரம்பித்தேன்.

2007 தீபாவளி. எனது தோழியின் கணவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் ராஜா எப்படியிருக்காரு. பாக்கனும் என கேட்டுக்கொண்டேயிருந்துள்ளார். என்னை தொடர்பு கொண்டு அவரது குடும்பத்தார் கூறிக்கொண்டேயிருந்தார்கள். தீபாவளியன்று செல்பேசியில் தொடர்பு கொண்டபோது, அவருடன் பேசிவிட்டு எனது தோழியிடம் பேச தொடங்கினேன். எங்கயிருக்க. தீபாவளியன்னைக்கி எங்கயிருப்பாங்கன்னு உன் வீட்டுக்காரர்க்கிட்ட கேளு சொல்லுவாரு. அவரிடம் கேட்க என்ன ஜாலியா சரக்கு அடிச்சிக்கிட்டுயிருப்பாங்க என்றார். சடாரென எங்க ராஜா அப்படிப்பட்ட ஆள்யில்ல என நான் குடிப்பது தெரிந்தும் நான் அப்படிப்பட்டவன் அல்ல என வாதிட்டார். இதை செல் வழியாக கேட்டபோது, செருப்பால் அடித்தது போல் உணர்ந்தேன். மெதுவான குரலில் கொஞ்சமா குடிச்சிட்டு வீட்டுக்கு போ என்றாள். ச்சே குடிக்கறத முதல்ல நிறுத்தனும் என எண்ணினேன். கிங்பிஷர் பீரை பாத்ததும் வேகமா போய் வாங்க சொன்னது மனது.

2008 தை பொங்கள் இரவு நண்பன் பிரபுவோடு கடைசியாக குடித்தேன். அடுத்த சில தினங்களில் மருத்துவமனை ஒன்றில் தனது குழந்தையுடன் வந்திருந்த எனது தோழி ஆஸ்பிட்டல் வரை வா என்றாள். போனேன். குடிக்கறத நிறுத்தவே மாட்டியா என சண்டை போட ஆரம்பித்தாள். அவ உன்ன விட்டு விலகனாயென்ன, அவளுக்கு கல்யாணமாயிடுச்சி, ஏன் குடிச்சி உடம்ப கெடுத்துக்கற என திட்ட ஆரம்பித்தாள். எனக்கு கடவுள் மீது நம்பிக்கையில்லை. இருந்தும் இனி குடிக்க மாட்டேன் என குழந்தை தலையில் கை வைத்து சத்தியம் செய்தேன். கடவுள் மீது தான் நமக்கு நம்பிக்கையில்லையே நாம குடிக்கலாம் என எண்ணம் வரும்போது எதையும் எதிர் பாராத கணவரிடம் கூட என்னை விட்டுக்கொடுக்காத அந்த நட்பு தான் என் கண் முன்னால் வந்தது. நட்பு மீது வைத்த மரியாதையால் அன்று முதல் இன்று வரை குடிக்காமல் இருக்கிறேன்.

சில சமயம் அவசர பட்டுட்டமோ என எண்ண தோன்றுகிறது. ஆனாலும் நட்பு தானே முக்கியம். அதனால் இனி குடிப்பதில்லை என்பதில் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக உறுதியாகயிருக்கிறேன்.