செவ்வாய், செப்டம்பர் 29, 2015

ஈழ துரோகிகள் யார் ?. வெளிச்சமாக்கும் அமெரிக்க தீர்மானம்.



2009 போர் இலங்கையில் நடந்த மனித இனப்படுகொலையை யாரும் மறந்திருக்க முடியாது. இலங்கை அரசாங்கத்துக்கும் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே நடந்த யுத்த்த்தில் ஈழ தமிழர்களை கொன்று குவித்த்து இலங்கையை ஆண்ட இராஜபக்சே அரசாங்கம்.

இலங்கையில் போர் நடப்பதற்க்கு காரணம்மே அன்று இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசாங்கமும், அதற்கு முட்டுக்கொடுக்கும் அன்று தமிழகத்தை ஆண்ட திமுக அரசாங்கமும் தான் என எதிர்கட்சிகள் பலப்பல விதங்களில் பலப்பல போராட்டங்களை முன்னெடுத்தார்கள் தமிழ்தேசியம் பேசும் நெடுமாறன், மணியரசன், பல தமிழ்தேசிய அமைப்புகள், வை.கோ, சீமான் போன்றவர்கள் நாக்கு தண்ணீர் வற்ற, நரம்பு புடைக்க கர்ஜித்தார்கள்.

போர் நிறுத்தும் அளவுக்கு மாநில அரசுக்கு அதிகாரம்மில்லை என தமிழகத்தை ஆண்ட திமுக அராசங்கம் பலமுறை எடுத்துக்கூறியும் அரசியல் செய்த தலைவர்கள் அதை அறிந்தும் தெரிந்திருந்தும் மக்களிடம் பொய்யான பிரச்சாரத்தை செய்தார்கள். 2011 தேர்தல் பிரச்சாரத்தின் போது இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார் சீமான், காங்கிரஸ் உள்ள அணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்றார்கள் நெடுமாறன், வை.கோ போன்ற ஈழத்துக்காக உருகும் தலைவர்களும், தமிழ்தேசியம் பேசுபவர்களும். திமுக ஆட்சி போய் அதிமுக ஆட்சி வந்துவிட்டது.

அந்த ஆட்சி வந்து 5 ஆண்டுகள் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் இன்னமும் ஈழம் மலரவில்லை. ஈழம் என்ற வார்த்தையே மறக்கடிக்கப்பட்டுவிட்டது. தமிழ்தேசியவாதிகளால் ஈழத்தாய் என அழைக்கப்பட்ட தமிழக முதல்வராகவுள்ள ஜெ, தமிழக சட்டமன்றத்தில் ஈழப்படுகொலை பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற ரீதியில் இரண்டு, மூன்று முறை தீர்மானம் இயற்றியதும் ஈழம் உருவானது போல் பாராட்டு கூட்டமும், அறிக்கையும் தந்தனர் தலைவர்கள்.


இலங்கையில் நடந்த மனித படுக்கொலைப்பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும்மென ஐ.நாவின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் நவநீதம் பிள்ளை அறிவித்தார். அவருக்கு பின் பல தலைவர்களும் அறிவித்தார்கள்.

இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கம் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவந்தது. இந்தியாவில் பி.ஜே.பி மலர்ந்தால் வந்தால் ராஜபக்சேவை சர்வதேச கூண்டில் மோடி நிறுத்துவார் என வை.கோ, தமிழருவி மணியன் போன்றவர்கள் பேசினார்கள். வை.கா கூட்டணியே வைத்தார். 2014ல் இந்தியாவில் தாமரையின் ஆட்சி உருவானது மோடியும் பிரதமரானர். வை.கோவை எட்டி உதைக்கும் விதமாக ராஜபக்சேவை பதவியேற்பு விழாவுக்கு அழைத்து கவுரவித்தார்.

மாநிலத்தில் இவர்கள் விரும்பிய இலை ஆட்சி, மத்தியில் இவர்கள் நினைத்த தாமரை ஆட்சி தான் உள்ளது. ஆனால், தமிழகத்து மோடி மட்டும்மல்ல, இந்தியாவின் மோடியாலும் ராஜபக்சேவை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆட்சி அதிகாரம் போனாலும் அவர் மாளிகையில் ஜாலியாகவுள்ளார். ராஜபக்சேவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து ஆட்சிக்கு வந்த சிறிசேனாவும் ராஜபக்சேவை அவரது குடும்பத்தை விட்டுதர தயாராகயில்லை.


ஈழத்தில் நடந்த மனித படுகொலையை இலங்கை அரசாங்கம்மே நீதி விசாரணை நடத்தலாம். அதில் சர்வதேச நீதிமான்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இடம் பெற வைத்துக்கொள்ளலாம் என்ற தீர்மானத்தை ஐ.நாவில் நிறைவேற்ற அமெரிக்கா முயல்கிறது. இந்தியாவின் மோடி அரசாங்கம் அதற்கு உதவுகிறது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும்மென்றால் மோடி அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை திட்டமிடல் படி உருவானதே அமெரிக்காவின் அந்த தீர்மானம்.

இப்படியொரு தீர்மானம் வரப்போகிறது என்பது முன்பே திமுக ஆட்சியின் போது கோயாபல்ஸ் பிரச்சாரம் செய்த நெடுமாறன், வை.கோ, சீமான், மணியரசன் மற்றும் பல தமிழ்தேசியவாதிகளுக்கு தெரியும். தெரியவில்லை என அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வோம். இந்த அக்டோபர் மாதம் ஐ.நா அவை கூடியதும் அந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதோடுஈ சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை நீர்த்து போக வைக்கும் வகையிலான சரத்துகள் இன்னும் சேர்க்கப்பட்டு 30ந்தேதி அந்த தீர்மானம் ஐ.நா அவையில் நிறைவேற்றப்படவுள்ளன என்ற தகவல்களும் வந்தன.


28ந்தேதி இரவு வரை நெடுமாறன், வை.கோ, சீமான், மணியரசன், புதியதாக உருவாகியுள்ள வேல்முருகன் மற்றும் தொல்.திருமா போன்ற யாரும் வாய் திறக்கவில்லை. அனைத்து துவாரங்களையும் அடைத்துக்கொண்டு இருந்தனர். விமர்சனம் வருகிறது என்றதும் 29ந்தேதி காலை வை.கோ மட்டும் சென்னையில் போராட்டம் நடத்தி கைதானார்.

இவர்கள் போராட்டம் நடத்தாதற்கு காரணம் ஈழத்தாயின் ஆட்சியில் ஈழத்தில் மக்கள் நிம்மதியாக அனைத்து உரிமைகள் பெற்று வாழ்கிறார்கள் என சொல்ல வருகிறார்களா ? அல்லது ஈழத்தில் தமிழ் மக்களே இல்லை என சொல்ல வருகிறார்களா ? அமைதியாக இருந்து என்ன சொல்ல வருகிறார்கள்.

2009 நாடாளமன்ற தேர்தல் நடந்த போது, ஈழத்தில் இருந்து விடுதலைப்புலிகள் ஆதரவு தலைவர்களிடம், போரை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்க சொல்கிறார்கள் என்ன செய்யலாம் என விடுதலைப்புலிகள் தலைவர்கள் கேட்டபோது அடுத்து பி.ஜே.பி ஆட்சிதான் போரை தொடர்ந்து நடத்துங்கள் என ஆலோசனை சொன்னதாக தகவல் வெளியானது. அதை நம்புவது கடினமாக இருந்தது.

மத்தியஸ்த நாடாகயிருந்த நார்வே வெளியிட்ட போர் முடிவுக்கு பின் விசாரணை அறிக்கையில் விடுதலைப்புலிகளை நம்பவைத்து கழுத்தறுத்த்து தமிழக அரசியல் தலைவர்கள் என குறிப்பிட்டுயிருந்தது.

அவைகளை அப்போது நம்புவது கடினமாக இருந்தது இப்போது முழுதாக நம்புகிறேன். ஈழ துரோகிகள் காங்கிரஸ்சோ, திமுகவோ கிடையாது. நெடுமாறன், வை.கோ, சீமான், தமிழ்தேசியவாதிகள் தான். காங்கிரஸ், திமுக போன்றவை நெஞ்சில் குத்தினார்கள் என்றால் நெடுமாறன், வை.கோ, சீமான், தமிழ்தேசியவாதிகள் உங்கள் நண்பன் என சொல்லிக்கொண்டு தோளில் கைபோட்டுக்கொண்டு விடுதலைப்புலிகள் மற்றும் ஈழ மக்கள் முதுகில் குத்திய துரோகிகள் என்பதை உங்களது கொண்டைகளே காட்டி தருகின்றன.

வாழ்க உங்கள் புரட்சி.  

பயணத்தில் கிழிக்கப்படும் மோடி முகமுடி. – உள்நாட்டு மீடியாவுக்கு கண் தெரியவில்லை.



அமெரிக்காவின் சிலிக்கான் வேலி பகுதிக்கு நம் நாட்டு பிரதமர் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு பேஸ்புக் தலைமையகத்தில் அதன் நிறுவனரை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டார் என கதை எழுதிய நம்நாட்டு பத்திரிக்கைகள், மீடியாக்கள் சிலிக்கான் வேலியில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தை ஒரு பாக்ஸ் அளவுக்கு கூட செய்தியாக்கவில்லை. அவர் தலைமையிலான பி.ஜே.பி ஆட்சிக்கு வந்து ஒன்னரை ஆண்டுகள் ஆகிறது. இன்னமும் அவரது ஆட்சியை பற்றி விமர்சனமே, குறைகளோ சுட்டிக்காட்டாமல் அவர் நடந்தால் நடையழகு, சிரித்தால் பல்லழகு என்றே எழுதிக்கொண்டும், ஒளிப்பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இது என்னவகையான ஜர்னலிசம் என தெரியவில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம். சிலிக்கான் வேலியில் மோடிக்கு எதிர்ப்பாக என்ன போராட்டம்?. மோடி தலைமையிலான இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் செயல்படும் மோடி அரசை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டங்களை செய்தியாக பதிவு செய்து மோடி அரசை கிழிகிழியென கிழிக்கின்றன நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், பி.பி.சி போன்ற பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும்.

இதுயேதோ அமெரிக்காவில் மட்டும் நடைபெறும் போராட்டமல்ல மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கும் நாடுகளில் மோடி பயணம் செய்தால் ஜனநாயக ரீதியில் தங்களது எதிர்ப்புகளை காட்ட அந்நாடுகள் அனுமதியளிக்கின்றன. இதனால் போராட்டங்களும் நடைபெறுகின்றன.

மோடி பிரதமராக பதவியேற்றதும் முதன் முதலாக மோடி பயணம் செய்த நாடு இந்தியா அடிமையாக நடத்தும் பூடான் நாட்டுக்கு. அங்கு நம்மவூர் கட்சிகள் போல் பிளக்ஸ், கட்அவுட், கொடி, தோரணம் என கட்ட வைக்கப்பட்டு வரவேற்ப்பு தரப்பட்டது. அந்த நாட்டின் நாடாளமன்றத்தில் மோடி உரையாற்றி முடித்தபோது மோடிக்கு எம்.பிகள் கைதட்டி அதிர்ச்சியை தந்தனர். கைதட்டினால் ஏன் அதிர்ச்சியாக வேண்டும். பூடான் வழக்கப்படி கைதட்டுவது என்பது துர்நாசம் செய்யும் ஆவிகளை விரட்டவே கைதட்டுவார்கள். மோடியை அவர்கள் துர் ஆவியாக நினைத்துவிட்டார்கள் போல.

அடுத்த்தாக பல நாடுகளுக்கு அவர் பயணம் செய்தார்.

2014 ஜீன் மாதம் பூட்டான்.
2014 ஜீலை நான்கு நாள் பயணமாக பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக்கொள்ள பிரேசில்.
2014 ஆகஸ்ட் மாதம் இரண்டு நாள் பயணமாக நேபாளம். அதேமோதம் 30ந்தேதி முதல் செப்டம்பர் 3ந்தேதி வரை ஜப்பான் பயணம்.
2014 செப்டம்பர் 5 நாள் பயணமாக அமெரிக்கா.
2014 நவம்பர் மாதம் மியான்மர், அதேமாதம் 14 முதல் 18 வரை ஆஸ்திரேலியா, அதேமாதம் ஒருநாள் பயணமாக பிஜி தீவுக்கும், 25ந்தேதி மூன்று நாள் பயணமாக மீண்டும் நேபாளம் பயணமானார்.

2015 மார்ச் 10ந்தேதி இரண்டு நாள் பயணமாக ஐஸ்லாந்து, அப்படியே 11ந்தேதி 3 நாள் பயணமாக மொரிசியஸ், மார்ச் 13ந்தேதி இலங்கை, மார்ச் 29ந்தேதி சிங்கப்பூர் பயணமானார்.

2015 ஏப்ரல் மாதம் பிரான்ஸ்க்கும், ஏப்ரல் 12ந்தேதி ஜெர்மனி, 14ந்தேதி கனடாவுக்கு பயணம்.

2015 மே மாதம் 3 நாள் பயணமாக சீனாவுக்கு ஓடினார். 16ந்தேதி மங்கோலியாவுக்கு போனார். 18ந்தேதி தென்கொரியாவுக்கு போனார். இதோ இப்போது அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளார்.

கடந்த ஜீன் 2014 முதல் 2015 ஜீன் வரை 20 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். அதற்கான செலவு மட்டும் 37.22 கோடியென ஆர்.டி.ஐ தகவல் தெரிவிக்கிறது. இதில் ஆஸ்திரேலியா பயணம் தான் அதிக செலவு வைத்துள்ளது மோடிக்கு. அதிக செலவு வைத்த இந்த பயணம் யாருக்காக நடத்தப்பட்டது என துழவினால் அவரது நம்பிக்கைக்குரியவரும், அவரை பிரதமராக்க பாடுப்பட்ட அதானி குழுமத்துக்காக தான் ஆஸ்திரேலியா பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதோடு அந்த அதானி குழுமத்துக்கு மக்களின் சேமிப்பாக இந்திய பாரத வங்கியில் உள்ள பணம் 2 ஆயிரம் கோடி அளவுக்கு அதானிக்கு கடன் தர உத்தரவிட்டுள்ளார் மோடி.

முதல்முறை அமெரிக்கா பயணம் சென்றபோது, பெரும் வரவேற்ப்பு தந்த அமெரிக்கா வாழ் இந்தியர்களில் இந்த முறை குறிப்பிட்ட சதவிதம் பேர் எதிர்த்து நின்கின்றனர். அதைத்தான் மேலே குறிப்பிட்ட முதல் பத்திகளில் சுட்டிக்காட்டியது. அதோடு, மோடிபெயில் என்ற இணைய பக்கம் தொடங்கப்பட்டு அவரை எதிர்ப்பதற்கான காரணங்கள், எதிர்ப்பு பற்றி பதிவு செய்துள்ளது மோடி விசுவாசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மோடியின் வெளிநாட்டு பயணங்கள் பெரும் வெற்றியென ஒரு பக்கம் கொண்டாடப்பட்டாலும் அது எந்தளவுக்கு தோல்வியென விளக்கமாக வெளிவந்துள்ளது. ஆனால் அதனை வெளிப்படுத்ததான் பலரும் தயங்குகிறார்கள். லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இதழில் கடந்தவாரம் அமெரிக்காவுக்கு போப் பிரான்சிஸ் மற்றும் மோடி பயணம் வந்தது பற்றி இருவரின் பயண ஓப்பிட்டு ஒரு நேர்த்தியான கட்டுரை வந்துள்ளது வாய்ப்பிருந்தால் படித்து பார்க்கவும்.


மோடி வெளிநாடுகளுக்கு போனதும் அங்கு அவர்க்கு வரும் எதிர்ப்புகள் பற்றியோ, பயணத்தின் வழியாக அவர் பெற்ற வெற்றி பற்றி எழுதுவதில்லை. அவர் மக்கள் முன் கை ஆட்டுவது, வரலாறு என்ற பெயரில் உளறுவதை மட்டுமே இங்கு பதிவு செய்து அவரை நாயகனாக காட்ட முயல்கிறார்கள். இதுப்பற்றி விமர்சனம் செய்து எத்தனை வெளிநாட்டு மீடியாக்கள் மோடி மீது கரி பூசி அனுப்பினாலும் அதை கலர் சாயம் என வக்காலத்து வாங்க தயாராகவே உள்ளனர் காவிகளும், காவியாகும் நான்காம் தூணும்.

ஞாயிறு, செப்டம்பர் 27, 2015

ஸ்டாலின் பயணம் வெற்றி பெறுமா ?.



தனது ஐடி டீம் ஐடியாப்படி நமக்கு நாமே என மக்களுடன் நேரடியாக கலந்துரையாடி வருகிறார் ஸ்டாலின். தமிழகத்துக்கு இது புதியது.

மேற்கத்திய நாடுகளில் இது பழைய பார்மூலா. எம்.பியாக, அதிபராக விரும்புகிறவர்கள் சுமார் ஓராண்டுக்கு முன்பாகவே பிரச்சார பயணத்தை தொடங்கிவிடுவார்கள். மக்களோடு பேசுவார்கள், கருத்துக்களை கேட்பார்கள். எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களுடன் ஒரே மேடையில் மக்கள் முன் தோன்றி கேள்விக்கு பதில் சொல்வது சர்வசாதாரணம். வளர்ந்து வரும் டெக்னாலஜிகளை பயன்படுத்தி குறிப்பாக இணையத்தை பிரச்சார வாகனமாக பயன்டுத்தி, வெற்றி பெற முடியும் என்பதை செய்து காட்டியவர் அமெரிக்க அதிபர் ஓபாமா. அதை அப்படியே காப்பியடித்து இந்தியாவில் நடைமுறைப்படுத்தி பிரதமர் பதவியை பிடித்தவர் மோடி. அதைத்தான் இன்று தமிழக அரசியல் கட்சிகள் காப்பியடிக்கின்றன. பாமக போஸ்டர் ஒட்டுகிறது. இருந்தும் அதன் பணிகள் வன்னியர் என்ற சமுதாயத்தின் வட்டத்ததை தாண்டி செல்லவில்லை.

ஓபாமா, மோடி ஸ்டைலில் ஸ்டாலின் முழு மூச்சாக களம்மிறங்கி இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பல தரப்பினருடன் கருத்துக்களை கேட்கிறார், ஆட்டோ பயணம், ஸ்கூட்டி ஓட்டுதல், சைக்கிள் ஓட்டுதல் என சாமானியனாக தன்னை காட்டிக்கொள்வதை ஒரு பக்கம் கிண்டல் அடிக்கப்பட்டாலும் மற்றொரு புறம் மக்களை ஆச்சர்யத்தோடு பார்க்க வைக்கிறது.


துணை முதல்வராக இருக்கும் போதே சுய உதவிக்குழு பெண்களின் மனதில் சிம்மாசனம் போட முயன்றவர் அது ஓரளவு தான் ஓர்க் அவுட் ஆனது. சட்டமன்ற, நாடாளமன்ற தேர்தல் தோல்விக்கு பின் கட்சியின் அடிமட்டத்தினருடன் நெருக்கம் காட்டிய ஸ்டாலின். இப்போது அனைத்து தர மக்களுடன் நெருக்கம் காட்ட துவங்கியுள்ளார்.

இதனை சில அரசியல் தலைவர்கள், நடுநிலையா பேசறோம் என்பவர்கள் அரசியலுக்காக ஸ்டாலின் இதை செய்கிறார் என கிண்டலடிக்கிறார்கள். அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள், தங்களால் முடியாததை, ஜெவால் செய்ய முடியாததை ஸ்டாலின் செய்கிறார் அதனால் கிண்டல் செய்கிறார்கள். ஸ்டாலின் செய்வது முழுக்க முழுக்க அரசியல் தான். அதில் மாற்றுக்கருத்துயில்லை.

இதில் இன்னொன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். இனி மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும். கடந்த காலங்களைப்போல ஏசி போட்ட கார்க்குள் அமர்ந்தபடி சென்றால் மக்கள் துரத்திவிடுவார்கள். நடுத்தர, படித்த மக்கள் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். தங்கள் மனதில் பட்டதை வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர், பிளாக் போன்றவற்றில் எழுதி தங்களது கருத்தை வெறிப்படுத்தி விடுவார்கள். இதனால் அரசியல்வாதிகள் தங்களை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். மாறவில்லையென்றால் மாற்றம் தருபவர் என நம்புவர் பக்கம் போய்விடுவார்கள்.

மாற்றத்தை நோக்கி போகும் ஸ்டாலினின் இந்த பயணம் வெற்றி பெறுமா?.

திமுகவை தாண்டி பல தரப்பினரின் கேள்வி, எதிர்பார்ப்பு இதுதான். வெற்றியா, தோல்வியா என்பது ஒருபுறம்மிருக்கட்டும். ஸ்டாலின் கட்சியில் மட்டும்மல்ல மக்கள் மத்தியிலும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளார். இனி கலைஞரே கூட ஸ்டாலினை தலைமை பதவிக்கு கொண்டு வரவில்லையென்றால் மக்கள் ஏச்சுக்கு ஆளாகும் அளவுக்கு பல தரப்பட்ட மக்களுடன் தன்னை இணைத்துக்கொண்டு முதல்வருக்கு தகுதியானவர் என்ற பெயரை பெறுகிறார். அந்த விதத்தில் இது வெற்றி.

மக்களிடம் இந்த பயணம் நம்பிக்கையை தந்துள்ளதா ?.

மக்களுடன் பேசும்போது, அவர்களின் கோரிக்கைகள், குறைகளை கேட்கிறார். இந்த குறைகள் எல்லா அரசியல் தலைவர்களும் கேட்பது தான். ஆனால், இதனை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். மக்களின் அடிப்படை தேவை, பிரச்சனைகளை புரிந்துக்கொள்ள வேண்டும். 30 ரூபாய் இருந்தால் இந்தியாவில் ஒரு மனிதன் நிம்மதியாக உண்டு உறங்கிவிடலாம் என கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு அறிக்கை மத்தியரசால் வெளியிடப்பட்டது. அது எந்தளவுக்கு அபத்தம் என்பதை இந்த பயணம் புரிந்துக்கொள்ள உதவியிருக்கும். தம்மிடம் கேட்ட கோரிக்கைகளை, பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்திவிட்டால் போதும். நம்பிக்கையை தந்துள்ளதா என கேட்டால் தேர்தல் முடிவுகள் தான் அதை காட்டும்.


இது ஸ்டாலின்க்கு தேர்தலில் வெற்றி கிட்டுமா ?.

இது அதிபர் தேர்தல் கிடையாது. மக்கள் முதல்வரை நேரடியாக ஓட்டுப்போட்டு தேர்வு செய்து வைக்க. எம்.எல்.ஏ என்ற பிரதிநிதிகள் மூலம் தேர்வு செய்வது. தன் பயணத்தின் மூலம் மக்களின் நம்பிக்கையை போல மக்களின் நம்பிக்கை பெற்ற வேட்பாளரை நிறுத்த வேண்டும். தொகுதியில் சீனியர், ஜீனியர் என பார்க்காமல் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவரை தேர்வு செய்ய வேண்டும். பணம் உள்ள வேட்பாளர் வேண்டும்மென பார்க்காமல், பிரச்சனையில்லாத ஆளா?, மக்கள் நம்பிக்கை பெற்றவரா?, இளைஞரா? எம்.எல்.ஏ பதவிக்கு தகுதியானவரா? என பார்த்து சீட் தந்தால் வெற்றிக்கு மிக அருகில் செல்லலாம்.

சனி, செப்டம்பர் 19, 2015

அரசியல் அகதி வை.கோ.





ஈழப்போர் முடிந்தபின் ஈழப்பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான அகதிகள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள படகு முதலாளிகளை பிடித்து தங்கள் உயிரை காப்பாற்றச்சொல்லி கேட்டார்கள். பணம் வேண்டும் என படகு முதலாளிகள் கேட்க ஆயிரக்கணக்கான ரூபாய்களை கொட்டி தரதயாராக இருந்தனர். 

உயிரை காப்பாற்றுவாரா, சொன்னயிடத்தில் கொண்டும்போய் சேர்ப்பாரா என ஆராயவில்லை. காரணம், படகோட்டியின் வாய் வார்த்தைகள் அவர்களை கட்டிப்போட்டது. அவர் சொல்வதை அப்படியே அந்த அகதிகளை நம்பவைத்தது. படகோட்டியின் வார்த்தைகளை நம்பி பலர் போட்டி போட்டுக்கொண்டு அந்த படகில் ஏறினர். கடல் பயணம் மேற்க்கொள்ளும்போது தான் தெரிந்தது அந்த படகின் முதலாளிக்கு படகை செலுத்த தெரியவில்லை என்பது. அதுமட்டும்மல்ல கப்பலில் பெரிய ஓட்டை விழவும் படகோட்டியே காரணமாகம் என்பதும் தெரியவந்தது. இருந்தும் தன் வாய்வார்த்தையால் உங்களை நான் கொண்டும்போய் சேர்ப்பேன் என்றார். லட்சக்கணக்கில் பணம் தந்தும் தம் உயிரை இந்த படகின் முதலாளி பறித்துவிடுவான் போல் உள்ளதே என பயந்த பலர் படகின் அருகில் பயணம் செய்துக்கொண்டுயிருந்த கப்பல் முதலாளியிடம் பேசி அதில் தொத்திக்கொண்டு உயிர் பிழைத்தார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் ஓட்டையை அடைத்துவிடுவார், கொஞ்ச தூரம் போனால் படகை சரியாக ஓட்டிவிடுவார் என நம்பிக்கையில் சிலர் படகிலேயே இருந்தனர். அப்படி இருந்தவர்களும் நம்பிக்கை மெல்ல மெல்ல குறைய இதை உணர்ந்த படகு முதலாளி, அந்த கப்பல் பழைய கப்பல், நம் படகு நல்ல தரமான படகு, நியாயமான கூலி வாங்குகிறேன், அதோடு, படகில் பெட்ரோல் உள்ளது என நம்பிக்கை குறையாமல் பேசினார். அதுபோன்ற பேச்சை நம்பிதான் படகில் ஏறினோம். இப்போதும் அப்படியே பேசுகிறாறே என சிலருக்கும் பயம் வந்து என்ன செய்வது என தெரியாமல் தவித்தனர். 

இந்த கதையை அப்படியே ஈழ ஆதரவு கட்சியான மதிமுகவிற்கு பொருத்தி பார்த்துக்கொள்ளுங்கள். 

( படகு மதிமுக, படகோட்டி வை.கோ, அகதிகள் மதிமுக தொண்டர்கள். ) 

வை.கோபால்சாமி என்கிற வை.கோ திமுகவில் இருந்து நீக்கப்பட்டதும், 93ல் தமிழகத்தை ஆண்ட அதிமுக ஆதரவுடன் பெரும் ஆராவரத்துடன் துவங்கிய கட்சி மதிமுக. திமுகவில் இருந்த பல பலம்மிருக்க மா.செக்கள் வை.கோ பின்னால் சென்றார்கள். போன வேகத்தில் பலர் திரும்பி ஓடிவந்தார்கள். அப்போதே வை.கோ உஷாராகியிருக்க வேண்டும். ஆனால் அதை அவர் செய்யவில்லை.

96 தேர்தலில் ஒரு கட்சியுடன் கூட்டணி, 98 நாடாளமன்ற தேர்தலில் ஒரு கூட்டணி, 99 நாடாளமன்ற தேர்தலில் ஒரு கூட்டணி, 2001 சட்டமன்ற தேர்தலில் ஒரு கட்சியுடன் கூட்டணி, 2004 நாடாளமன்ற தேர்தலில் ஒரு கூட்டணி, 2006 சட்டமன்ற தேர்தலில் ஒரு கூட்டணி, 2009 நாடளாமன்ற தேர்தலில் ஒரு கூட்டணி, 2011 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை, 2014 நாடாளமன்ற தேர்தலில் ஒரு கூட்டணி. அழைக்கிறார்கள் என இப்படி மாறி மாறி கூட்டணி வைத்த வை.கோவை யாரும் குற்றம்சொல்லவில்லை. தேர்தல் அரசியலாக பார்த்தார்கள். ஆனால், 2006 சட்டமன்ற தேர்தலின் போது, திமுக கூட்டணியில் இருந்த வை.கோ யாரும் எதிர்பாராத நிலையில் (அவரது தாயர் கூட எதிர்பார்க்கவில்லை ) அதிமுகவுடன் கூட்டணி வைத்தபோது, அவரது செல்வாக்கு சுத்தமாக மக்கள் மத்தியில் சரிந்து சராசரி அரசியல்வாதியை விட மிக மோசமானவராக பார்க்கப்பட்டார். 

அந்த கரையை துடைக்க வை.கோவின் அடிப்பொடிகள் ஊடகம் மூலமாகவும், இணையதளம் மூலமாக எத்தனை பிரச்சாரம் செய்தும் எடுபடவில்லை என்பதே எதார்த்தம். ஆனாலும் இன்றளவும் அதை புரிந்துக்கொள்ளாமல் இருக்கிறார் வை.கோ.

 ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி என்ன செய்வார். நிறுவனத்துக்கு லாபம் வரும் வழிகளை ஆராய்வார். அப்படித்தான் ஒரு அரசியல் கட்சி தலைவரும் இருக்கவேண்டும். அரசியல் கட்சி தேர்தலில் பங்குகொண்டு சேர்மன், எம்.எல்.ஏ, எம்.பி, வாரியம் என ஏதாவது ஒரு பதவியில் கட்சியினரை உட்காரவைக்க வேண்டும். உட்கார்ந்தால் தான் அவன் சம்பாதிப்பான், சம்பாதித்தால் தான் அவன் போஸ்டர் ஓட்டுவான், கொடிபிடிப்பான், பேனர் வைப்பான், ஆட்களை அழைத்து வருவான். தொண்டனுக்கு பதவியே கிடைக்காமல் கட்சியை நடத்த செய்தால் இப்போது நடப்பது போன்று தான் தொண்டன் தாவி குதித்து தப்பி ஓடிவிடுவான்.

 
ஒரு கட்சிக்கு கொள்கை என்பது இருக்க வேண்டும். ஆனால் தேர்தல்களம் என வரும்போது, கொள்கைகளோடு முரண்டுபட்டுதான் ஆக வேண்டும். இல்லையேல் யாருடனும் கூட்டணி வைக்கமுடியாது, வெற்றி பெற முடியாது, கட்சியை நடத்த முடியாது. இது தெரிந்தவர் தான் வை.கோ. ஆனால் அவரால் செயல்பட முடியவில்லை. காரணம் கட்சியை நடத்த தெரியவில்லை என்பதை விட வெகுவாக உணர்ச்சி வசப்படுகிறார். உணர்ச்சி வசத்தால் எடுக்கப்படும் எந்த முடிவும் சரியாகயிருக்காது.

முக்கியமாக அரசியல் தலைவர்கள் உணர்ச்சி படுவது கூடாது. கட்சி தலைவருக்கு என்றும்மே அழகல்ல, கூடவேகூடாது. ஆனால் வை.கோ மிக அதிகமான உணர்சிவசப்படும் தலைவர். அரசியலில் உணர்ச்சி வசப்படுபவர்கள் காணாமலே போவார்கள் தமிழகத்தில் அப்படி காணாமல் போனவர்களை உதாரணமாக காட்ட பல அரசியல் பிரபலங்கள் உள்ளார்கள். அந்த பட்டியலில் வை.கோ சேர்ந்துவிட்டார் என்பது அதிர்ச்சியாகவுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் அரசியலில் ஒரு அகதியாக வலம் வருகிறார் வை.கோ. 

காலம் கடந்துவிடவில்லை. சரியான முடிவு எடுப்பதற்கான நேரம் உள்ளது. அதை வை.கோ தற்கால அரசியலோடு பொருத்தி முடிவு எடுக்க வேண்டும்.