திங்கள், அக்டோபர் 20, 2014

தீவிரவாதத்தை தொடர்ந்து ஊழலுக்கும் ரஜினி ஆதரவு.



தீபாவளிக்கு இன்னும் 3 தினங்கள் உள்ள நிலையில் இப்போதே ஜெவுக்கு வாழ்த்து மெசேஜ் அனுப்பிவிட்டார் நடிகர் ரஜினிகாந்த். அது தீபாவளி வாழ்த்து மெசேஜ் என சொல்லப்பட்டாலும் உண்மையில் அது தீபாவளிக்கான வாழ்த்து மெசேஜ் அல்ல.

அதில் கூடுதலாக உள்ள வரிகளை கண்டால் புரியும். அந்த வாழ்த்தில், நீங்கள் போயஸ்கார்டன் திரும்பியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது நல்ல நேரத்துக்காக நான் பிரார்தனை செய்கிறேன். நீங்கள் எப்போதும் உடல் நலத்துடனும், மன அமைதியுடனும் இருக்க வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். ஊழல் வழக்கில் சிறையில் இருந்து பெயிலில் இருந்து வந்ததுக்குக்கான வாழ்த்து. அதை சுற்றி வளைத்து தீபாவளி வாழ்த்தாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பல நடிகர் நடிகைகள் பந்தல் போட்டு உண்ணாவிரதம்மிருந்து தமிழக தாயை விடுதலை செய்யுங்கள் என குரல் கொடுத்தார்கள். அதில் ரஜினி கலந்துக்கொள்ளவில்லை. ஜெ வெளியே வந்ததும் வாழ்த்து தெரிவித்து நான் உங்கள் அடிமைகளில் ஒருவர் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார்.

ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்று சிறையில் இருந்தவருக்கு உச்சநீதிமன்றத்தால் பெயில் தரப்பட்டுள்ளது. அதில் வெளிவந்தவருக்கு ஏதோ பொய் வழக்கில் சிறை சென்று விடுதலையாகி வந்த தியாகிக்கு வாழ்த்து தெரிவிப்பது போல் தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார்.


சூப்பர் ஸ்டார் அவர்களே, உங்களை வாழ வைப்பது தமிழக மக்கள். அந்த மக்கள் கடந்த 20 நாட்களுக்கு முன் ஜெ குற்றவாளி என தீர்பளிக்கப்பட்டு தண்டனை தந்த அன்று பட்ட துயரங்கள் தெரியும்மா. அதிமுகவினர் மாநிலம் முழுவதும் வன்முறையில் ஈடுபட்டு பொதுமக்களை துயரத்துக்கு ஆளாக்கினார்கள், பொது சொத்துக்களை சூரையாடினார்கள். 20 நாட்கள் அரசாங்கம் செயல்படவில்லை. எதிர்கட்சிகள் கண்டித்தன. ஏன் இப்போது உச்சநீதிமன்றம் கூட கண்டித்துள்ளது. உங்களை வாழ வைத்த வைக்கும் தமிழக மக்கள் துயரத்தில் இருக்கும் போது குரல் கொடுக்காத உங்கள் மனம் இப்போது குரல் கொடுப்பது எதனால்???????????

இப்போது மட்டுமல்ல, மும்பையில் தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டு மற்றும் ஆயுதம் பாதுகாப்பாக வைத்திருந்து சப்ளை செய்து நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாக காரணமாக இருந்த பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவருக்கு ஆதரவாக அவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்தீர்கள்.

காவிரி நதிநீர் பிரச்சனையில் சட்டப்படி நடந்துக்கொள்ளாமல் தமிழகத்துக்கு துரோகம் செய்யும் கர்நாடகாவை கண்டித்து தமிழக மக்கள் கொதித்தெழுந்தனர். தமிழ் திரையுலகம் கர்நாடகாவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தது. உங்களை சூப்பர் ஸ்டாராக்கி அழகு பார்க்கும் தமிழக மக்களுக்கான போராட்டத்தில் கலந்துக்கொள்ளாத நீங்கள் தனியாக பந்தல் போட்டு நதிநீர் இணைப்புக்கு ஒருகோடி ரூபாய் தருகிறேன் என ஸ்டன்ட் அடித்து கர்நாடகாவின் தவறை கண்டிக்காமல் பிரச்சனையை நீர்த்து போக செய்து மறைமுகமாக நான் ஒரு கன்னடியன் என்பதை காட்டினீர்கள்.


இப்போது நீங்கள் நடிக்கும், பெரும்பகுதி கர்நாடகாவில் தயாராகும் படம் லிங்கா. கர்நாடகா அரசியலை ஆட்டி வைக்கும் லிங்காயத்துக்கு சாதியின் பெயரில் படம் எடுக்கிறீர்கள். மறைமுகமாக அந்த சாதியை தூக்கி பிடிக்கிறீர்கள்.

தீவிரவாதத்துக்கும், ஊழலுக்கும், சாதி வெறிக்கும், மொழிவெறிக்கும் துணை போகும் நீங்கள் மக்களை மட்டுமல்ல உங்களது ரசிகர்களை கூட பல ஆண்டுகாலாமாக ஏமாற்றி வருகிறீர்கள்.

சுமார் 15 ஆண்டுகாலமாக நான் அரசியலுக்கு வருவேன்......... வருவேன் என செய்திகளை கிளப்பி விடுகிறீர்கள். உங்களது முட்டாள் ரசிகனும் தலைவா என பாலபிஷேகம் செய்கிறான். அவனுக்கு நம் தலைவன் இந்த முறை அரசியலுக்கு வந்துவிடுவான் நாட்டை திருத்திவிடுவான், அரசியலில் நமக்கும் பதவிகள் கிடைக்கும் என நம்புகிறான். அரசியல் வருகை செய்திகள் எப்போது பரப்பப்படுகிறது என்றால் உங்கள் புதுப்படம் வரும் ஒவ்வொரு முறையும் பரப்பப்படுகிறது. உங்கள் படம் ஓடவேண்டும் கோடி கோடியாய் பணம் கொட்ட வேண்டும் என்பதற்காக செய்யும் விளம்பர யுக்தி என தெரியாமல் கிடக்கிறான். படம் வந்தபின் கல்லா கட்டியபின் உங்கள் கட்அவுட்க்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்களை செருப்பால் அடிக்காத குறையாக துரத்துகிறீர்கள். நீங்கள் மட்டும்மா உங்கள் குடும்பம்மே அதைத்தான் செய்கிறது.

30 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதியில் நடந்த உங்கள் திருமணத்துக்கு வர நினைத்த உங்கள் ரசிகர்கள் வரக்கூடாது வந்தால் அடிப்பேன் என்றீர்கள். அதன்பின் உங்கள் மகள்கள் திருமணத்துக்கு ரசிகர்கள் யாரும் வரக்கூடாது. கல்யாணத்துக்கு பின் விருந்து வைப்பேன் என்றீர்கள். அதை வாகாக மறந்துவிட்டீர்கள். எப்போதவது மீடியாவுக்கு பேட்டி தந்தால், இரண்டு பெண்களுக்கு திருமணம் செய்ததில் கடனாளியாகிவிட்டேன் அதனால் விருந்து வைக்க முடியாமல் போய்விட்டது எனச்சொல்லிவிடுங்கள் அதன் பின் எவனும் அதைப்பற்றி கேட்கபோவதில்லை. 


உங்கள் படங்களை கொண்டாடிய, பாபா படத்தின் போது பாமகவினரிடம் அடி உதை வாங்கிய உங்கள் ரசிகர்கள் உங்கள் படத்தை பயன்படுத்த கூட உங்கள் மனைவி சட்டப்படியான தடை விதித்து பணமாக்கி வருகிறார். ரசிகனை பணம் காய்க்கும் மரமாகவும், மக்களை முட்டாளாகவும் நீங்களும் உங்கள் குடும்பமும் நினைக்கிறீர்கள்.

ஏதோ ஒரு படத்தில் என் வழி தனி வழி என்றீர்கள். உண்மை தான் உங்கள் வழி தனி வழி தான். அந்த வழி குறுக்கு வழியாக இருக்கிறது. அதனால் தான் ஊழலுக்கும், மதவாதத்துக்கும், சாதிவெறிக்கும், மொழி வெறிக்கும் வெளிப்படையாக சப்போட் செய்கிறீர்கள்.  

செவ்வாய், அக்டோபர் 07, 2014

கற்பழிக்கப்பட்ட சமுதாயம்..........




காமூகர்களால் பாலியல் வல்லுறுவுக்கு உல்லாக்கப்படும் பெண் பிறரால் அனுதாபத்துடன் பார்க்கப்படுவார்கள். ஆனால் அந்த குற்றவாளிகள் கேவலமாக பார்க்கப்படுவார்கள். இங்கும் அப்படித்தான் ஜெயல்லிதா பரிதாபமாக பார்க்கப்படுகிறார். தமிழக மக்கள் கேவலமாக பார்க்கப்படுகிறார்கள். 

அதிமுக பொது செயலாளரும், முன்னால் முதல்வருமான ஜெயலலிதா ஊழல் வழக்கில் குற்றவாளியாக சிறை தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் ஊழல் வழக்கில் முதல்வர் பதவியில் இருக்கும் போது தண்டனை பெற்ற முதல் முதல்வர் என்ற பெருமையை ஜெ பெற்றுள்ளார். தண்டனை பெற்றதால் முதல்வர் பதவியை இழந்தார். அடுத்த முதல்வராக அதிமுகவுக்கு சட்டசபையில் தனி பலம் உள்ளதால் நிதி அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப்பட்டுள்ளார். 

அரசின் பெறும் பொறுப்பில் இருப்பவர் நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரை சந்திக்ககூடாது என்கிறது சட்டம். ஆனால் பதவி ஏற்றுக்கொண்டதும் சிறையில் உள்ள தன் கட்சி தலைவியை சந்திக்க பறந்து சென்றார் தமிழக முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம்.

இதை வடஇந்திய மீடியாக்கள், தேசிய தொலைக்காட்சிகள் இந்த செயலை விமர்சித்துக்கொண்டுயிருந்த நேரத்தில் ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள், அதிகாரிகள் வாய்மொழி உத்தரவாக தொழிலாளர், பேருந்து முதலாளிகள், லாரிகள், கடைக்காரர்கள், என தொழிலாளிகள் முதல் முதலாளிகள் வரை வரிசையாக போராட்ட களத்துக்கு வந்து உண்ணாவிரம் இருக்க வேண்டும் என மிரட்டின. அவர்களும் அதை சிறு முனுமுனுப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு உண்ணாவிரத பந்தலில் அமர்ந்தார்கள். ( மதியம் பிரியாணி சாப்பிட்டார்கள் என்பது வேறு விஷயம் ). 

அந்த வரிசையில் உச்சமாக கல்லூரி மாணவ – மாணவிகளை ஊழல் வழக்கில் தண்டனை பெற்துள்ள ஜெ வை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டு போராட்டம் செய்ய வைத்தார்கள். பின் தனியார் பள்ளி – கல்லூரிகளை மூடிவிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தார்கள் ( பல தரப்பின் எதிர்ப்பால் பின் வாங்கப்பட்டது ). ஆனாலும் அதன் முதலாளிகள் உண்ணாவிரதம் இருந்தார்கள். 


இவைகளை அரசியல் கட்சிகளில் பாமக ராமதாஸ் தவிர வேறு யாரும் எதிர்க்கவில்லை. திமுக சட்டம் ஒழுங்கால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதோடு நிறுத்திக்கொண்டது. 

ஆளும் அதிமுகவினர் ஊழலுக்கு வக்காலத்து வாங்குவதே தவறு. அப்படியிருக்க அவர்கள் பொதுமக்களை தங்களது ஆளும்கட்சி என்கிற அதிகாரத்தை காட்டி மிரட்டி உண்ணாவிரதம், கடையடைப்பு செய்ய வைப்பது எந்த விதத்தில் நியாயம் ?. 

நான் அறிந்த வரையில் இப்படி ஊழல் செய்தது உறுதி செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக எங்கும் போராட்டம் நடத்தியதில்லை. ஆனால், தமிழகத்தில் நடக்கிறது. இதனை சமூக ஆர்வலர்கள், சில அரசியல் கட்சிகள், குறிப்பாக பெரும்பான்மை மீடியாக்கள் ஏற்றுக்கொள்வது வித்தியாசமாக இருக்கிறது.

சில இடங்களில் மட்டும் தான் ஜெவுக்கு தரப்பட்ட தண்டனை சரியானது என போஸ்டர் வழியாக தங்களது கருத்தை பதிவு செய்தார்கள். மற்றப்படி யாரும் எங்கும் பேசவில்லை.
இதை இந்தியா மட்டுமல்ல இந்தியாவை தாண்டி பல நாடுகளின் பிரபலமான செய்தித்தாள்கள் ஊழலுக்கு ஆதரவாக ஒரு மாநிலம், மக்கள் இருப்பதை செய்தியாக வெளியிட்டுள்ளன. 

ஊழலுக்கு ஆதரவாக போராட்ட களத்துக்கு வா என அதிகாரம் கையில் இருப்பதால் அழைக்கும் ஆளும்கட்சியான அதிமுகவை எதிர்க்க துணிவில்லாமல் வீட்டுக்குள்ளும், பூட்டிய கதவுகளுக்கு பின்னால் இருந்துக்கொண்டும் எதிர்க்கிறார்கள். இதுவே ஒரு வகையில் குற்றம் தான். குற்றத்துக்கு துணை போனால் மட்டும் குற்றவாளியல்ல. குற்றம் செய்ய துண்டுவதை எதிர்க்காமல் இருப்பவர்களும் குற்றவாளிகள் தான். 

வியாழன், அக்டோபர் 02, 2014

ஜெ சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு முழு விபரம்.












நமது நாட்டில் பல்வேறு அரசியல் தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றுள்ளனர். கர்நாடகாவில் முதல்வராக இருந்த எடியூரப்பா ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஊழல் புரிந்ததாக சிறை தண்டனை பெற்றுள்ள அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் தந்தையுமான சிபுசோரன், டெலிகாம் ஊழலில் தண்டனை பெற்ற சுக்ராம், திரிபுரா முதல்வர் வீரபத்திர சிங், ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, மாட்டு தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னால் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் ஆகியோர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பிணையில் வெளியே வந்து மேல் முறையீடு செய்துள்ளனர். அந்த வரிசையில் தமிழகத்தின் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவும் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று முதல்வர் பதவி, எம்.எல்.ஏ பதவியை இழந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அந்த மாநிலத்தில் ஊழல் பிரச்னையை தனிப்பட்ட பிரச்னையாகவே மக்கள் பார்த்தனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் தனிப்பட்டவர்கள் செய்த ஊழல் வழக்கை தண்டனை பெற்றவர்கள் தரப்பு வேறு விதமாக மக்கள் மத்தியில் சித்தரிக்கிறது. தீர்ப்பு தங்களுக்கு அளிக்கப்பட்ட துரோகமாக பார்க்கிறது. அவர்கள் நாம் பேசும் நியாயம் என்பது வேறு, சட்டம் என்பது வேறு என்பதை புரிந்துக்கொள்ள மறுக்கின்றனர்.

இந்த வழக்கை பொறுத்தவரை அரசு தரப்பில் ஆவணங்கள் அத்தனையும் வலுவாக உள்ளன. எதிர் தரப்பில் பல ஆவணங்கள் போலியாக உருவாக்கப்பட்டவை என நீதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். நேர்மையான எந்த நீதிபதி விசாரித்திருந்தாலும் இப்படித்தான் தீர்ப்பளித்திருப்பார் என்பது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விவரங்களை காணும்போது தெளிவாக தெரிகிறது.

கடந்த பதிவில் வழக்கு பற்றி குறிப்பிட்டுயிருந்தோம். படிக்காதவர்கள் ஜெ - முதல்வர் முதல் சிறை வரை. வழக்கின் முழு விபரம் இங்கு சென்று படித்துவிட்டு தீர்ப்பு பற்றிய இக்கட்டுரையை படித்தால் சந்தேகம் ஏற்படாது.

தீப்பின் முக்கிய பகுதிகள்...........

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா அளித்த தீர்ப்பின் பக்கம் 1136. அதில், 3வது பக்கத்தில் தீர்ப்பு ஆரம்பமாகி 910 பக்கத்தில் முடிக்கிறார். 911ல் இருந்து 922 வரை அரசு மற்றும் எதிர்தரப்பு சாட்சிகள் பட்டியல். 923ல் இருந்து 1136 வரை இரு தரப்பிலும் தரப்பட்ட ஆதாரங்கள், ஆவணங்கள் பட்டியல். தீர்ப்பின் சுருக்கம்.....

ஜெயலலிதா தனது முதல்அமைச்சர் பதவி காலத்தை (1991–1996) தொடங்கும்போது, அவரது சொத்து மதிப்பு 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 965 ஆக இருந்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில், அவர் பங்குதாரராக இருந்த ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களின் சொத்துகளும் அடங்கும். அவரது பதவி காலத்தில், அவரது சட்டப்பூர்வ வருமானம் 9 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 94 ஆகும். ஆனால், பதவி காலத்தின் முடிவில், அவரது சொத்து மதிப்பு 53 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 954 ஆக உயர்ந்துள்ளது. இந்த மதிப்பு, தற்போதைய சந்தை மதிப்பு அல்ல. இந்த வழக்கில், சொத்துகளின் மதிப்புகள், 1991–1996–ம் ஆண்டு காலகட்டத்தில், குற்றவாளிகள் என்ன விலைக்கு வாங்கினார்களோ, அதே மதிப்புக்குத்தான் கணக்கிடப்பட்டுள்ளன.

அந்த சமயத்தில், 900 ஏக்கர் தேயிலை தோட்டத்தை அவர்கள் 7 கோடியே 50 லட்சத்துக்கு அவர்களால் வாங்க முடிந்தது. ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை 10 ஆயிரத்துக்கு வாங்க முடிந்தது. இந்த விலையில் 53 கோடிக்கு ஒட்டுமொத்த கிராமத்தையே வாங்கி விடலாம். இந்த பின்னணியில்தான், அவர்கள் வாங்கிய சொத்துகளின் வீரியத்தை பார்க்க வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை அளவை தீர்மானிக்கும்போது, அவர்கள் எந்த முறையில் சொத்து வாங்கினார்கள் என்று பார்க்கவேண்டி உள்ளது.

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தங்கள் பெயரிலும், தாங்கள் தொடங்கிய நிறுவனங்களின் பெயர்களிலும் சொத்துகளின் ஒரு பகுதியை வைத்துக்கொண்டு, ஊழல் புரிய தூண்டுகோலாக இருந்தது ஆதாரத்துடன நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஜெயலலிதா குவித்த சட்டவிரோத சொத்துகளை போடுவதற்காகவே இந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்டன என்ற முடிவுக்கு நான் வருகிறேன். 4 குற்றவாளிகளில் யாருமே இந்த நிறுவனங்களின் முதலீட்டுக்கு எந்த பங்கும் போடவில்லை. அந்நிறுவனங்களின் பெயரில் எந்த வர்த்தகமும் செய்யவில்லை. அந்த நிறுவனங்கள் செய்த ஒரே பணி, வங்கி கணக்கு தொடங்குவதும், பிற வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை மாற்றுவதும், ஜெயலலிதா சார்பில் சொத்துகளை வாங்க முதலீடு செய்வதுமே ஆகும். செயல்பாட்டில் இல்லாத நிறுவனங்களைக் கூட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வாங்கி, அவற்றின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, ஜெயலலிதா கொடுத்த பணத்தை வைத்து, அந்த நிறுவனங்களின் பெயரில் பெரிய சொத்துகளை வாங்கி உள்ளனர்.

இந்த சொத்துகளுக்கான நிதி ஆதாரம் முழுவதும் ஜெயலலிதாவால் தரப்பட்டது, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜெயலலிதாவால் கணக்கு காட்ட முடியவில்லை.

நமது எம்.ஜீ.ஆர் பத்திரிக்கை சந்தா தொகை போலியானவை.

1990ம் ஆண்டு முதல் ஜெயா பப்ளிகேஷன்ஸ் கூட்டாளிகளாக ஜெயலலிதாவும், சசிகலாவும் இருந்தனர். அதே ஆண்டு கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்ஜிஆர் சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்கீழ் நமது எம்ஜிஆர் நாளேட்டுக்கு 14 கோடி ஆயுள் சந்தாவாக வசூலிக்கப்பட்டது. இந்த சந்தா தொகை தான் மற்ற நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது. மேலும் இவ்வாறு பெறப்பட்ட தொகையை வருமானவரி கணக்கிலும் ஜெயலலிதாவும், சசிகலாவும் தெரிவித்துள்ளனர். அவர்களும் அதை ஏற்று சான்றிதழ் அளித்துள்ளனர். எனவே இந்த 14 கோடியை சொத்துக் குவிப்பு வழக்கில் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன் இந்த சந்தா திட்டம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை. 9 ஆயிரம் அதிமுக நிர்வாகிகளிடம் சந்தா பெற்றதுபோல போலி ரசீதுகளை தயாரித்துள்ளனர். வழக்கமாக பத்திரிகைகளில் காலாண்டு, அரையாண்டு, ஆண்டு சந்தா வசூலிப்பது வழக்கம். இவர்கள் 1998ம் ஆண்டு சந்தா பெற்றது போல் போலியான பில்களை தயாரித்துள்ளனர். தற்போது பத்திரிகையின் விலை 4 முதல் 5 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அவசர கோலத்தில் போலி பில் தயாரித்ததில், 1991&96ம் ஆண்டு கால கட்டத்தில் ஒரு நாளைக்கு ஒரு பத்திரிகையின் விலை 3 ஆயிரம் என்ற வீதத்தில் 9 ஆயிரம் பேரிடம் ஆயுள் சந்தா என்று 14 கோடியை வசூலித்ததாக கணக்கு காட்டியுள்ளனர். மேலும் 1998ம் ஆண்டு தான் சந்தா தொகை பெற்றதை வருமானவரித்துறையிடம் முதன்முதலாக தாக்கல் செய்துள்ளனர். ஆனால் ஊழல் நடைபெற்றதாக கூறப்பட்ட ஆண்டுகளில் அவர்கள் அதை தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர்களின் கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 9000 சந்தாதாரர்கள் விவரம் அனைத்தும் 2001ம் ஆண்டுக்கு பிந்தைய தேதியிட்டவை என்று தெளிவாகத் தெரிகிறது. அந்த சந்தாவுக்கான விண்ணப்பம், பணம் கட்டிய சிலிப் காட்டப்படவில்லை. அவை காரில் கொண்டு வரப்பட்டபோது ஒரு ஓட்டல் அருகே காணாமல் போய்விட்டது என்றும் அது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த புகார் மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இதை வருமான வரித்துறையும் தெளிவுபடுத்தியுள்ளது. அனைத்து விண்ணப்பங்களும் பின்னர் எப்படி 2012ல் வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே, சந்தா தொகை தொடர்பான வாதத்தை ஏற்க முடியாது. சொத்துக் குவிப்பு வழக்கில் 14 கோடிக்கு கணக்கு காட்டிய நமது எம்ஜிஆர் பத்திரிகையின் சந்தா தொகை ரசீதுகள் போலியானவை.

இந்த சந்தா தொகையை ஜெயலலிதா பங்குதாரராக உள்ள ஜெயா பப்ளிகேஷனுக்கு மாற்றம் செய்துள்ளார். அதற்காக சசிகலாவுக்கு பவர் ஆப் அட்டர்னி கொடுத்துள்ளார். இதன் மூலம் ஜெயலலிதா சட்டத்திலிருந்து தப்பிக்க முனைந்துள்ளது தெரிய வருகிறது. மேலும், இந்த தொகை வேறு நிறுவனங்களுக்கும் மாற்றப்பட்டதுடன் அதன் மூலம் பல சொத்துக்களையும் வாங்கியுள்ளனர்.

வளர்ப்பு மகன் திருமண செலவு....

வளர்ப்பு மகன் என்று அறிவிக்கப்பட்ட 3வது குற்றவாளியான சுதாகரனின் திருமணத்துக்கு மொத்தம் செலவிடப்பட்ட தொகை 3 கோடி என அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தான் எந்த செலவையும் செய்யவில்லை. மணமகளின் குடும்பத்தினரும் அதிமுக கட்சியினருமே திருமணச் செலவை செய்தனர் என்று ஜெயலலிதா தரப்பில் கூறப்பட்டுள்ளது. மணமகளின் தந்தை மட்டும் 14 லட்சம் செலவு செய்ததாக ஜெயலலிதா தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், சுதாகரன் திருமணத்துக்கு 29.92 லட்சம் தான் செலவு செய்ததாக 1996&1997 ஆண்டுக்காக அவர் தாக்கல் செய்த வருமானவரி தாக்கல் கணக்கில் கூறப்பட்டுள்ளது. இதில் எது சரியானது. ஜெயலலிதா எந்த செலவையும் வளர்ப்பு மகன் திருமணத்துக்கு செய்யவில்லையா?. எந்த செக்கையும் கொடுக்கவில்லையா?. இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஜெயலலிதாவின் ஆடிட்டர் அலுவலகத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

அதிமுக தொண்டர்கள் 60 லட்சம் வரை செலவு செய்தனர் என்றால் நிச்சயம் இந்த தொகை 3 மடங்காக இருக்க வாய்ப்புள்ளது. திருமண வரவேற்பு மற்றும் காலை உணவுக்காக 40 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் கணக்கிட்டுப் பார்த்தால் திருமணச் செலவு 3 கோடியைத் தாண்டியிருக்கும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.

3000 ஏக்கர் நிலம்.......

குற்றம்சாட்டப்பட்டவர்கள் கொடநாடு எஸ்டேட் நிலம் உள்ளிட்ட 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களை விதிமுறைகளுக்கு முரணாக அதிகாரத்தைப் பயன்படுத்தி வாங்கியுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. கொடநாட்டில் 900 ஏக்கர் நிலம் 7.5 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. அதேபோல் இதர விவசாய நிலங்கள் ஒரு ஏக்கர் 10 ஆயிரம் விலையில் வாங்கப்பட்டுள்ளது. ஒரு கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் அனைத்தையும் வாங்கியுள்ளனர்.

53 கோடிக்கு இந்த நிலங்களை வாங்கியுள்ளனர். வாங்கப்பட்ட நிலங்கள் ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் லிமிடெட், சிக்னோரா பிஸ்னஸ் என்டர்பிரைசஸ், லெக்ஸ் பிராப்பர்டிஸ் டெவலப்மென்ட் பிரைவேட் லிமிடெட், ரிவர்வே அக்ரோ புராடக்ட்ஸ் லிமிடெட், மெடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், இண்டோ டோகா கெமிக்கல்ஸ் அன்ட் பார்மாசுடீகல்ஸ் ஆகிய நிறுவனங்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வளவு பெரிய அளவில் நிலங்களை வாங்கிக் குவித்துள்ளதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதுபோன்ற செயல்களைச் செய்ததற்காக கடுமையான தண்டனைதான் தரப்பட வேண்டும். ஆட்சி அதிகாரமும், சொத்துக்களும்தான் இந்த வழக்கின் அடித்தளமாக உள்ளது. ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் 5 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய அளவுக்கு சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்ததற்கு அதிகாரம்தான் முக்கிய காரணம் எனத் தெரியவருகிறது.

உயர் பதவியில் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை........

தமிழக அரசின் மிக உயர்ந்த பதவியில் ஜெயலலிதா இருந்து கொண்டு இதில் ஈடுபட்டதுதான், குற்றத்தின் தன்மையை அதிகரிக்கிறது. பொது ஊழியர் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தொடர்பான ஒரு வழக்கில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் வழங்கிய தீர்ப்பில் பொது ஊழியர் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து விளக்கியுள்ளார். பெற்றோர் நல்லவராக இருந்தால் தான் பிள்ளை நல்லவனாக இருப்பான், ஆசிரியர் நேர்மையாக இருந்தால் தான் மாணவர் நல்லவனாக சிறந்தவனாக திகழ்வான், தொழிற்சங்க தலைவர் கடமை தவறாமல் செயல்பட்டால், தொழிலாளர்கள் சிறப்பாக இருப்பார்கள். அதுபோல் நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரத்தில் இருப்பவர்கள் நீதிக்கு பயந்தும், நேர்மையாகவும், கடமை உணர்வுடனும், விருப்பு, வெறுப்பு இல்லாமல், உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கையில் தான் மக்கள் ஆட்சி அதிகாரத்தை கொடுக்கிறார்கள். ஆனால், ஐபிசி 109 பிரிவு படி நீங்கள் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளீர்கள்.

மன்னன் எவ்வழியோ, குடிமக்களும் அவ்வழி என்று ஒரு பழமொழி உள்ளது. உயர் பதவியில் இருப்போரின் தவறுகள் மீது கனிவோ, இரக்கமோ காட்டினால், அது ஒட்டுமொத்த சமூக வாழ்க்கைக்கும் கேடாக முடியும் என்று கர்நாடக ஐகோர்ட்டு ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது. அதனால், இந்த வழக்கில் கனிவுக்கோ, அனுதாபத்துக்கோ இடம் இல்லை. இந்த வழக்கு, தனது அரசியல் எதிரிகளால் புனையப்பட்டது என்றும், 18 ஆண்டுகள் கடந்து விட்டது என்றும், இந்த காலகட்டத்தில் பதற்றமும், மனவேதனையும் அடைந்திருப்பதாகவும் குற்றவாளிகள் கூறியுள்ளனர். இந்த வழக்கு தொடரப்பட்ட பிறகு, ஜெயலலிதா 11 ஆண்டுகளாக முதல்அமைச்சராக இருந்து வருவதாகவும், இப்போது அவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும் கூறியுள்ளனர். மேலும், உடல்நலக்குறைவு அடிப்படையிலும் கருணை காட்டுமாறு கேட்டுள்ளனர். ஆனால் இந்த காரணங்கள் எல்லாம், கருணை காட்டுவதற்கு ஏற்றவை அல்ல என்பது எனது கருத்து. இந்த வழக்கு 18 ஆண்டுகள் நிலுவையில் இருந்ததில் சந்தேகமே இல்லை. இந்த தாமதத்துக்கு யார் காரணம் என்று இப்போது ஆராய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நீதியை குழி தோண்டி புதைக்கும் முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததால்தான், இந்த வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு வழக்குக்கு தடை இருந்ததிலும் சந்தேகமே இல்லை. ஆனால், அதன்பிறகும் குற்றவாளிகள் சட்ட நடைமுறைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, கணிசமான நேரத்தை வீணடித்தனர்.

குற்றவாளிகள், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நேரத்தையும், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நேரத்தையும் தவிர, பிற நாட்களில் கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனவே, வழக்கு நிலுவையில் இருந்ததால், தாங்கள் மனவேதனை அடைந்ததாக அவர்கள் கூறுவதை ஏற்க முடியாது. இந்த காரணங்கள், தண்டனையின் அளவை தீர்மானிப்பதற்கு ஏற்கத்தக்கவை அல்ல. குற்றத்தின் தீவிரத்தன்மை, சொத்துகளின் அளவு, அவை குவிக்கப்பட்ட முறை ஆகியவற்றின் அடிப்படையில்தான் தண்டனையின் அளவை தீர்மானிக்க முடியும். அப்படி பார்க்கும்போது, இது கடுமையான தண்டனை விதிக்கத்தக்கது.

தீர்ப்பில் பாதி தண்டனை.............

குற்றவாளிகள் மீதான குற்றத்தை உறுதி செய்து கூறியுள்ளதில், அரசு தரப்பில் உங்கள் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளை பார்க்கும்போது, அனைத்தும் உண்மை என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் உள்ளன. உங்கள் மீது 66 கோடியே 44 லட்சத்து, 73 ஆயிரத்து 573 ரூபாய் வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு அதற்கான ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தகுந்த சாட்சியங்கள் அடிப்படையில் குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டன. அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து நிரபராதி என்று நிரூபிக்க அதற்கான ஆவணங்களையும், சாட்சிகளையும் சமர்ப்பிக்கவில்லை. உங்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 66.44 கோடி வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் 9 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 094 மட்டும் உங்கள் வருமானம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனடிப்டையில் பார்த்தால் ஒட்டு மொத்த தொகையில் உங்கள் வருமான தொகை போக மீதமுள்ள 56 கோடியே 53 லட்சத்து 68 ஆயிரத்து 479 தொகைக்கான ஆவணங்களையும், சாட்சிகளையும் காட்டவில்லை. இது தொடர்பாக உங்கள் சார்பில் கொடுக்கப்பட்ட விளக்கம் நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே உங்களை குற்றவாளி என்று இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது.


66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கில் 53,60,49,954 கோடி ரூபாய் வருமானம் முறைகேடான வழிகளில் சம்பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு உள்ளவர் பொது ஊழியராகப் பொறுப்பில் இருந்த காலத்தில், இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது. அவருடைய இந்தச் செயல் ஊழல் தடுப்புச் சட்டம் 13 (i)(e)-ன் படி தண்டனைக்குரிய குற்றம். முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளவர், இரண்டாவது (சசிகலா),  மூன்றாவது (சுதாகரன்), நான்காவது (இளவரசி) குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்களுடன் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டு குற்றம் புரிந்துள்ளதும் நிரூபணமாகி உள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு 120 (b)-ன் படி 'கூட்டுச்சதி செய்தல் குற்றமாகும். இரண்டாவது, மூன்றாவது, நான்காவது குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு உள்ளவர்கள், முதல் குற்றவாளி செய்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இதை மறுத்து உங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ள வாதங்கள் திருப்திகரமாக இல்லை.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவும் அதற்காக அவர்களைப் பயமுறுத்தும் வகையில் தண்டனை தரவேண்டும் என்பற்காகவும் உருவாக்கப்பட்ட சட்டத்துக்கு முழு சக்தியை வழங்க வேண்டியது இந்த நீதிமன்றத்தின் கடமை. உயர் பதவியில் உள்ள அரசு ஊழியர் ஊழல் செய்தால் அது கீழ் பதவிகளில் உள்ளவர்களையும் ஊழல் செய்யத் தூண்டும். இதனால் ஊழல் செய்யும் அதிகாரிகளால் எப்படி கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதனால்தான் இதுபோன்ற தண்டனைகள் தரப்படவேண்டும். இந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும்.

இதுபோன்ற குற்றங்களைச் செய்தவர்களுக்கு ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 13(1) (இ) மற்றும் 13(டி)ன் கீழ் அதிகபட்சமாக தரப்படவேண்டிய 7 ஆண்டுகளில் பாதிக்கு மேல் தண்டனை தரப்படவேண்டும். ஆனால் பாதியளவே தண்டனை தரப்படுகிறது. உங்களுக்கு 4 ஆண்டுகள் சாதாரண சிறை தண்டனையும், 100 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி) பிரிவு 120 (பி)ன் கீழ் உங்கள் மீது கூறியுள்ள கூட்டு சதி தொடர்பான குற்றச்சாட்டுக்கும் உரிய ஆதாரங்கள் அரசு தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

எனவே ஐபிசி 120 (பி) பிரிவின் கீழ் உங்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. உங்களுடன் சேர்ந்து 2வது குற்றவாளியான சசிகலா, 3வது குற்றவாளியான சுதாகரன், 4வது குற்றவாளியான இளவரசி ஆகியோரும் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளதால், அவர்களுக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், 10 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது.

அதுபோல, முதல் குற்றவாளிக்கு அபராதத் தொகையாக 100 கோடி ரூபாய் விதிக்க காரணம், வழக்குத் தொடரப்பட்டபோது வழக்கில் தவறான வழிகளில் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தோடு இணைக்கப்பட்ட சொத்து மதிப்பு 66 கோடி ரூபாய். அது அரசாங்க மதிப்பீட்டின்படி கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது அதன் மதிப்பு 5 மடங்காக அதிகரித்துள்ளது. எனவே, அபராதத் தொகை அதற்கேற்றவாறு கணக்கிடப்பட்டு நூறு கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் குற்றவாளி, இந்த அபராதத்தைக் கட்டாத நிலையில் கூடுதலாக ஒரு வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். அதுபோல, மற்ற குற்றவாளிகள் தங்களது அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறுமாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

சொத்துக்கள் முடக்க உத்தரவு.................

தீர்ப்பின் இறுதியில் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள 211 சொத்துகளை முடக்கி வைக்க பெங்களூரு தனிநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 211 அசையும், அசையா சொத்துக்கள் விபரம்:

1 . போயஸ் கார்டன், பிளாட் எண் 50, தேனாம்பேட்டை ரூ.1,32,009
2 . ஸ்ரீநகர், ஆபீசர் காலனி, ஐதராபாத், ஆந்திரா ரூ.50,000
3 . இரண்டு பார்ம் ஹவுஸ்கள், ரங்காரெட்டி தாலுகா, பஷீராபாத் கிராமம் மற்றும் ஜெட்டிமெட்லா, ஹைதராபாத் ரூ.1,65,058.50
4 . ஆந்திர மாநிலம், மெகால் தாலுகா, பஷீராபாத் கிராமத்தில் 3.15 ஏக்கர் நிலம் ரூ.13,254.50
5 . தமிழகத்தின் செய்யூர் கிராமத்தில் ஜெயலலிதா பெயரில் வேளாண் நிலம் ரூ.17,060  பிளாட்கள், கட்டிடங்கள்.
6 . சென்னை பட்டம்மாள் சாலையில் ஜெயலலிதா, சசிகலா பெயரில் கட்டிடம் ரூ.5,70,039
7 . சென்னை சாந்தோமில் சசிகலா பெயரில் ஆர்.ஆர்.பிளாட்ஸ் ரூ.3,13,530
8. சென்னை அண்ணா சாலையில் சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வாங்கிய கட்டிடம் ரூ.98,904 தங்க, வைர நகைகள்
9 . சென்னை நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலையில் 11 கிரவுண்டு நிலம் வாங்கியது ரூ.22,10,919
10 . சென்னை செயின்ட் மேரிஸ் சாலையில் ஜெயலலிதா பெயரில் 1,206 ச.அடி நிலம் ரூ.1,05,409
11 . சென்னை மவுன்ட் ரோட்டில் 1,856 சதுர அடி நிலம் ஜெயலலிதா பெயரில் பதிவு ரூ.1,05,409
12 . தஞ்சாவூர் மனம்புசாவடியில் 2,400 சதுர அடி நிலம் வாங்கி பதிவு ரூ. 1,57,125
13 . தஞ்சாவூர் நகரில் எச்.டி.சாலையில் 51 ஆயிரம் சதுர அடி நிலம் வாங்கி பதிவு ரூ.1,15,315
14 . தஞ்சாவூர், எச்.டி. சாலையில் காலி நிலம் வாங்கி பதிவு ரூ.2,02,778
15. திருச்சி பொன்னகரம், அபிஷேகபுரம் கிராமத்தில் 3,525 சதுர அடி நிலம் ரூ.5,85,420
16 . தஞ்சாவூர் மாவட்டம், சுந்தரகோட்டையில் 3.23 ஏக்கர் தரிசு நிலம் வாங்கி பதிவு ரூ.75,210
17 . சென்னை கிண்டியில் உள்ள திரு.வி.க. தொழிற்பேட்டையில் 5,658 சதுரஅடி நிலம் ரூ.5,28,039
18 . சென்னை மயிலாப்பூரில் ஜெயலலிதா பெயரில் 1,407 சதுர அடி நிலம் பதிவு ரூ.10,20,371
19 சென்னை கிண்டியில் உள்ள திரு.வி.க. தொழிற்பேட்டை புனிததாமஸ் கிராமத்தில் 4,664.60 சதுர அடி நிலம் பதிவு ரூ.15,05,428
20. சென்னை நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலையில் 11 கிரவுண்டு நிலம் வாங்கியது. ரூ.2,98,144.
21. தஞ்சை மன்னார்குடியில் உள்ள ஹரிதரநதி மேற்கில் 25,035 சதுரஅடி நிலம் வாங்கி சசிகலா பெயரில் பதிவு ரூ.6,78,000
22 ஆந்திர மாநிலம் செகந்திராபாத் ராதிகா நகரில் 222.92 சதுர அடி மற்றும் நிலம் டெல்லி திவான்ஹால் பகிரத்பேலஸ் ரூ.5,57,761
23 சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் டான்சி (பவுண்ட்ரி) நிலம் ரூ.2,13,68,152
24 தமிழக வீட்டுவசதி கழகம் சார்பில் இளவரசிக்கு வீட்டுமனை ஒதுக்கீடு ரூ 2,35,813
25 சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் டான்சி (ஒயர்) நிலம் ரூ.90,17,089
26 சென்னை அபிராமபுரத்தில் நிலம், கட்டிடம் ரூ.49,02,105
27 சென்னை அடுத்த செய்யூர் கிராமத்தில் 11.07 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு ரூ.3,18,712
 28 சென்னையில் உள்ள மகாசுப்புலட்சுமி திருமண மண்டபம் சுதாகரன் பெயரில் வாங்கி பதிவு செய்யப்பட்டது ரூ.38,51,000
29 சென்னை நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலையில் ஜம்ஸ்கோர்ட் 1,736 சதுர அடி நிலம் வாங்கியது ரூ.1,60,572
30 சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்கு சசிகலா, சுதாகரன் பங்கு வாங்கிய தொகை ரூ.84,21,000
31 வெலகாபுரம் கிராமத்தில் 45.22 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு செய்யப்பட்டது ரூ.40,25,023.70
32 சென்னை அடுத்த நீலாங்கரையில் 4,802 சதுர அடி நிலம் பதிவு ரூ.9,60,520
33 சென்னை தி.நகர் பத்மநாப தெருவில் 5,430 சதுர அடி நிலம் பதிவு ரூ.15,96,150
34 சென்னை அடுத்த சிறுதாவூர் கிராமத்தில் இளவரசி பெயரில் 63.94 ஏக்கர் நிலம் பதிவு ரூ.14,01,600
35 சென்னை அடுத்த செய்யூர் கிராமத்தில் 2.56 ஏக்கர் நிலம் பதிவு ரூ. 1,23,910
36 வடசென்னையில் 10.7 ஏக்கர் நிலம் பதிவு ரூ.4,65,000
37 சென்னை டி.டி.கே.சாலையில் 2,150 சதுரஅடி நிலம் வாங்கி பதிவு 57,00,000
38 சென்னை டிடிகே சாலை ஸ்ரீராம்நகர் மற்றும் ஈஞ்சம்பாக்கத்தில் 1.29 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு ரூ.6,49,770
39 சென்னை சோழிங்கநல்லூரில் நிலம் ரூ.3,75,000
40 சென்னை அடையாறில் கட்டிடம் வீடு ரூ.5,70,200
41 சென்னை பசுல்லா சாலையில் ரூ.9,30,600
42 சென்னை நுங்கம்பாக்கத்தில் 4,348 சதுரஅடி நிலம் வாங்கிபதிவு ரூ11,36,024
43 சென்னை அடுத்த சிறுதாவூரில் 3.30 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு ரூ.93,475
44 சென்னை வெட்டுவாங்கேணியில் 1 ஏக்கர் நிலம் பதிவு ரூ.3,63,120
45 சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் 640 சதுர அடி நிலம் ரூ.2,26,130
46 சென்னை தி.நகர், முருகேஷ் சாலையில் 4,800 சதுர அடி நிலம் ரூ.33,44,040
47 சென்னை அடுத்த சோழிங்கநல்லூரில் 900 சதுர அடி நிலம் ரூ.9,95,670
48 சேரகுளம் மற்றும் வள்ளாகுளம் கிராமத்தில் 53.66 ஏக்கர் நிலம் பதிவு ரூ.1,21,389
49 கருங்குழிபள்ளம் கிராமத்தில் 16.33 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு ரூ.6,89,202
50 திருவேங்கடநகர் காலனியில் 520 சதுர அடி வீடு ரூ.5,75,000
51 வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கத்தில் 37 சென்ட் நிலம் பதிவு ரூ.1,24,540
52 சென்னை டிடிகே சாலையில் 733 ச.அடி நிலம் ரூ.59,28,050
53 சென்னை அடுத்த பையனூர் கிராமத்தில் 22.90 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு ரூ.16,17,688
54 சென்னை அரும்பாக்கத்தில் 3,197 சதுர அடி நிலம் ரூ.8,55,150
55 பரமேஸ்வரி நகரில் 4,564 சதுர அடி நிலம் ரூ.34,20,160
56 சேரகுளம் கிராமத்தில் 144.28 ஏக்கர் நிலம் ரூ.4,52,844
57 மீராகுளம் கிராமத்தில் 42.31 ஏக்கர் நிலம் ரூ.95,740
58 வள்ளாகுளம் கிராமத்தில் 34 ஏக்கர் நிலம் ரூ.78,801
59 சோழிங்கநல்லூர் கிராமத்தில் 50 சென்ட் நிலம் ரூ.2,86,441
60 ஊத்துக்காடு கிராமத்தில் 27.98 ஏக்கர் நிலம் ரூ.4,51,980
61 கலவை கிராமத்தில் 6.98 ஏக்கர் நிலம் ரூ.25,833
62 வள்ளாகுளம் கிராமத்தில் 286 ஏக்கர் நிலம் ரூ.6,57,169
63 சேரகுளம் கிராமத்தில் 122 ஏக்கர் நிலம் பதிவு ரூ.4,64,997
64 மீராகுளம் கிராமத்தில் 326.15 ஏக்கர் நிலம் ரூ.5,61,935
65 சென்னை அபிபுல்லா சாலையில் 4,293 சதுர அடி கட்டிடம் ரூ.43,56,142
66 சென்னை அபிபுல்லா சாலையில் 3,472 சதுர அடி கட்டிடம் ரூ.59,96,346
67 சென்னை அடுத்த ஊத்துக்கோட்டையில் 106.69 ஏக்கர் நிலம் பதிவு ரூ.7,47,698
68 வண்டம்பள்ளியில் 27.57 ஏக்கர் நிலம் பதிவு ரூ.7,88,076
69 வண்டம்பள்ளியில் ராமராஜ் ஆக்ரோ மில் நிறுவனம் கட்டப்பட்டதின் செலவு ரூ.14,00,806
70 ராம்ராஜ் ஆக்ரோ மில்ஸ் கட்டுமான பணி ரூ.57,19,800
71 ராம்ராஜ் ஆக்ரோ நிறுவன எம்.டி. பங்களா மதிப்பு ரூ.83,41,000
72 சென்னை லஸ் அவென்யூவில் 6,798 சதுர அடி கட்டிடம் ரூ.65,23,176
73 ராம்ராஜ் ஆக்ரோ நிறுவன பங்கு வாங்கியது ரூ.18,42,000
74 சென்னை அபிராமபுரத்தில் கட்டிடம் எழுப்பியதற்கு செலவிட்ட தொகை ரூ.76,00,000
75 கோடநாடு தேயிலை தோட்டம் வாங்கியது ரூ.7,60,00,000
76 நீலாங்கரையில் 11 சென்ட் நிலம் பதிவு ரூ.7,98,945
77 நீலாங்கரையில் 13 சென்ட் நிலம் பதிவு ரூ.9,49,995
78 அரும்பாக்கம் கிராமத்தில் 3,197 சதுர அடி நிலம் ரூ.8,55,150
79 தஞ்சாவூர் வ.உ.சி. நகரில் 26,540 சதுர அடி கட்டிடம் வாங்கியது ரூ.19,03,088
80 ஊத்துக்கோட்டையில் 21.82 ஏக்கர் நிலம் ரூ.3,13,553
81 வெலகாபுரம் கிராமத்தில் 41.10 ஏக்கர் ரூ.80,394
82 பையனூர் கிராமத்தில் 4.27 ஏக்கர் நிலம் ரூ.10,56,880
83 கடலூரில் உள்ள இண்டி-தோஹா கெமிக்கல் நிறுவன கட்டுமான பணிக்கு ரூ.86,91,000
84 நீலாங்கரையில் உள்ள நிலத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.80,75,000
85 நீலாங்கரையில் சசிகலா பெயரில் 11,197 சதுர அடி நிலம் வாங்கப்பட்டது ரூ.5,72,910
86 பையனூரில் வாங்கிய பங்களா புதுப்பிக்க செலவு செய்தது ரூ.1,25,90,261
87 ஈக்காட்டுதாங்கலில் கட்டிடம் ரூ.2,13,63,457
88 வெட்டுவாங்கேணியில் உள்ள கட்டிட புதுப்பிப்பு பணிக்கு ரூ.1,52,59,076
89 ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்ட பண்ணை வீட்டில் புதிய கட்டிடம் எழுப்ப ரூ.6,40,33,901
90 சிறுதாவூர் பங்களா புதுப்பிக்கும் பணிக்கு ரூ.5,40,52,298
91 சென்னை போயஸ் கார்டன் வீடு புதுப்பிக்க ரூ.7,24,98,000
92 சென்னை ஸ்ரீராம்நகரில் உள்ள நிலத்தில் புதிய கட்டிடம் கட்ட ரூ.29,59,000
93 சோழிங்கநல்லூரில் உள்ள கட்டிடம் புதுப்பிக்க ரூ.80,36,868
94 சென்னை பட்டம்மாள் சாலையில் உள்ள கட்டிடம் அருகில் புதிய கட்டிடம் கட்டியதற்கு ரூ.8,00,000
95 சென்னை தி.நகர், பத்மநாப சாலையில் உள்ள நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கு ரூ.20,43,000
96 சென்னை அண்ணாநகரில் உள்ள நிலத்தில் புதிய கட்டிடம் அமைக்க ரூ.24,83,759
97 சென்னை தி.நகர் முருகேசன் சாலையில் உள்ள நிலத்தில் புதிய கட்டிடம் ரூ.10,92,828
98 சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் புதிய கட்டிடம் கட்ட ரூ.53,11,000
99 சென்னை அக்கரையில் புதிய கட்டிடம் அமைக்க ரூ.20,38,959
100 சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் புதிய கட்டிடம் எழுப்ப ரூ.39,34,000
101 சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் புதிய கட்டிடம் எழுப்ப ரூ.14,17,538
102 சேரகுளம் கிராமத்தில் உள்ள ரிவர்வே அக்ரோ பார்ம் கம்பெனி கட்டிடம், மின் இணைப்பு உள்பட கட்டுமான பணிக்கு ரூ.7,58,160.50
103 சென்னை அபிராமபுரம், இந்தியன் வங்கியில் இளவரசி, விவேக் பெயரில் உள்ள வங்கி கணக்கில் 30.4.1996 அன்று பேலன்ஸ் தொகை ரூ.2,42,211.50
104 இளவரசி இயக்குனராக இருக்கும் சிக்னோரா பிஸ்னஸ் கம்பெனியின் வங்கி கணக்கில் பேலன்ஸ் 30.4.1996 ரூ.167.20
105 சசிகலா இயக்குனராகவுள்ள பிரஸ் மஸ்ரூம்ஸ் வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.771.26
106 இளவரசி இயக்குனராக உள்ள லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் கம்பெனி வங்கி பேலன்ஸ் 30.4.1996 அன்று ரூ.85,342.25
107 வி.என்.சுதாகரன் வங்கி பேலன்ஸ் 30.4.1996 அன்று ரூ.1,32,221
108 ஜெயலலிதா வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.19,29,561.58
109 இளவரசி வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.3.40,527.95
110 சென்னை மயிலாப்பூரில் உள்ள வங்கியில் ஜெயலலிதா பேலன்ஸ் ரூ.1,70,570.13
111 சசிகலா இயக்குனராக உள்ள மெடல் கிங் கம்பெனி வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.2,900.28
112 சசிகலா பெயரில் சென்னை மயிலாப்பூரில் உள்ள வங்கியில் பேலன்ஸ் 30.4.1996 ரூ.1,889.28
 113 மயிலாப்பூர் கனரா வங்கியில் ஜெயலலிதா, சசிகலா வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.20,79,885.12
114 சென்னை மயிலாப்பூர் கனரா வங்கியில் சசிகலா கணக்கு பேலன்ஸ் 30.4.1996 ரூ.1,095.60
115 சசிகலா இயக்குனராக உள்ள மெடல்கிங் கம்பெனிக்கு கிண்டி கனரா வங்கியில் பேலன்ஸ் 30.4.1996 ரூ.3,17,242.21
116 சென்னை மயிலாப்பூர் கனரா வங்கியில் சுதாகரன் வங்கி பேலன்ஸ் 30.4.1996. ரூ.47,453.64
117 சென்னை அண்ணாநகர் சுப்பு லட்சுமி திருமண மண்டபம் வங்கி பேலன்ஸ் ரூ.3,17,457.64
118 சென்னை மயிலாப்பூர் கனரா வங்கியில் சுதாகரன் வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.61,430
119 ஜெயா பைனான்ஸ் வங்கி பேலன்ஸ் ரூ.1,760
120 மயிலாப்பூர் கனரா வங்கியில் இளவரசி வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.1,18,198
121 மயிலாப்பூர் கனரா வங்கியில் இளவரசி வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.894.00
122 மயிலாப்பூர் கனரா வங்கியில் சசிகலா வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.560.55
123 மயிலாப்பூர் கனரா வங்கியில் சசிகலா, இளவரசி ஆகியோர் இயக்குனராக உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.10,75,335.64
124 மயிலாப்பூர் கனரா வங்கியில் ஜெயலலிதா சசிகலா ஆகியோர் இயக்குனராக உள்ள சசி என்டர்பிரைசஸ் வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.4,59,976.22
125 ஜெ ரியல் எஸ்டேட் கம்பெனிக்கு அபிராமபுரத்தில் உள்ள இந்தியன் வங்கியில் உள்ள பேலன்ஸ் 30.4.1906 ரூ.167.55
126 சூப்பர்-டூப்பர் டி.வி கம்பெனி இயக்குனராக உள்ள சசிகலா, சுதாகரன் இந்தியன் வங்கி கணக்கில் பேலன்ஸ் 30.4.1996 ரூ.5,46,577.50
127 ஜெ.ஜெ. லீசிங் கம்பெனி வங்கி கணக்கு பேலன்ஸ் 30.4.1996 ரூ.1,838.00
128 ஜெ.எஸ்.ஹவுசிங் வங்கி கணக்கு பேலன்ஸ் 30.4.1996 ரூ.13,671.80
129 கிரீன் பார்ம் ஹவுஸ் வங்கி பேலன்ஸ் ரூ.146.70
130 ஜெயா கான்ட்ராக்டர் அண்டு பில்டர்ஸ் வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.10,891
131 சசி என்டர்பிரைசசின் அபிராமபுரம் இந்தியன் வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.1,02,490
132 சக்தி கன்ட்ரக்ஷன் கம்பெனியின் இந்தியன் வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.1,02,490
133 கோபால் புரமோட்டர்ஸ் வங்கி பேலன்ஸ் ரூ.1,02,490.10
134 லட்சுமி கன்ட்ரக்ஷன் வங்கி பேலன்ஸ் ரூ.1,02,490.18
135 மெடோ அக்ரோ பார்ம் வங்கி பேலன்ஸ் ரூ.358.70
136 ரிவர்வே அக்ரோ பார்ம் வங்கி பேலன்ஸ் ரூ.2,916.61
137 அண்ணாநகர் பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் ஜெயலலிதா வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.2,05,151.06
138 ஜெயலலிதா பேரில் செகந்திராபாத் வங்கியில் பேலன்ஸ் ரூ.3,84,760.67
139 சசிகலா பெயரில் செகந்திராபாத் வங்கியில் பேலன்ஸ் ரூ.2,43,000
140 ஜெயலலிதாவுக்கு சொந்தமான டாடா சீரா கார் மதிப்பு ரூ.4,01,131
141 ஜெயலலிதாவுக்கு சொந்தமான மாருதி-800 கார் மதிப்பு ரூ.60,435
142 ஜெயலலிதாவுக்கு சொந்தமான மாருதி ஜிஸ்பி கார் மதிப்பு ரூ.2,03,424.54
143 ஜெயலலிதாவுக்கு சொந்தமான டிரக்ஸ் ரூ.1,04,000
144 ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான டாடா எஸ்டேட் கார் மதிப்பு ரூ.4,06,106
145 ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஸ்சுவராஜ் மஸ்தா வாகனம் மதிப்பு ரூ.1,76,172.60
146 ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு ரூ.3,85,520
147 ஜெயலலிதாவுக்கு சொந்தமான கண்டசா கார் மதிப்பு ரூ.2,56,238
148 ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான டாடா மொபைல் வேன் ரூ.2,81,169
149 ஜெயலலிதா பெயரில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்கு வாங்கப்பட்ட டிரக்ஸ் ஜீப் ரூ.1,04,000
150 சசிகலாவுக்கு சொந்தமான டாடா சீரா கார் ரூ.3,80,376
151 சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்காக ஜெயலலிதா பெயரில் வாங்கியுள்ள ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு ரூ.2,99,845
152 சசிகலா பெயரில் வாங்கியுள்ள டாடா சீரா கார் மதிப்பு ரூ.5,11,118
153 சசிகலா பெயரில் வாங்கியுள்ள டாடா சீரா கார் மதிப்பு ரூ.5,11,118
154 சசி என்டர்பிரைசஸ் பெயரில் வாங்கியுள்ள டாடா சுமோ கார் மதிப்பு ரூ.3,15,537
155 சசி என்டர்பிரைசஸ் பெயரில் வாங்கியுள்ள மாருதி எஸ்டிம் கார் மதிப்பு ரூ.5,25,132
156 வி.என்.சுதாகரன் பெயரில் வாங்கியுள்ள கார்கோ வாகனம் ரூ.5,05,009
157 வி.என்.சுதாகரன் பெயரில் வாங்கியுள்ள டிரக்ஸ் ஜீப் மதிப்பு ரூ.2,96,191.28
158 நமது எம்.ஜி.ஆர். பெயரில் வாங்கியுள்ள பஜாஜ் டெலிவரி வேன் மதிப்பு ரூ.52,271
159 ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் பெயரில் வாங்கியுள்ள ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு ரூ.5,56,999.99
160 ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் பெயரில் வாங்கியுள்ள ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு ரூ.5,56,999.99
161 மெடல்சிங் நிறுவனம் பெயரில் வாங்கியுள்ள மாருதி கார் ரூ.2,22,485.19
162 அதிமுக தலைமை கழகம் பெயரில் வாங்கியுள்ள பஜாஜ் டெம்போ ஆம்னி பஸ் மதிப்பு ரூ.2,03,979
163 ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் பெயரில் வாங்கியுள்ள ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு ரூ.5,56,999.99
164 ஜெயா பப்ளிகேஷன் நிறுவன பெயரில் வாங்கியுள்ள மெர்சிடெஸ் பென்ஸ் கார் மதிப்பு ரூ.9,15,000
165 அதிமுக தலைமை கழகம் பெயரில் வாங்கியுள்ள பஜாஜ் டெம்போ வேன் மதிப்பு ரூ.2,03,979
166 ஜெயலலிதா பெயரில் கனரா வங்கியில் செய்துள்ள எப்.டி. தொகை ரூ.16,03,545
167 ஜெயா பப்ளிகேஷன் பெயரில் எப்.டி. தொகை ரூ.1,49,544
168 ஜெயா பப்ளிகேஷன் பெயரில் எப்.டி தொகை ரூ.5,00.000
169 சூப்பர்-டூப்பர் டிவி பெயரில் அபிராமபுரம் இந்தியன் வங்கியில் எப்.டி. தொகை ரூ.5,00.000
170 சூப்பர்-டூப்பர் டிவி பெயரில் அபிராமபுரம் இந்தியன் வங்கியில் எப்.டி. தொகை ரூ.5,00.000
171 சூப்பர்-டூப்பர் டிவி பெயரில் அபிராமபுரம் இந்தியன் வங்கியில் எப்.டி. தொகை ரூ.5,00.000
172 கோத்தரி ஓரியண்டல் பைனான்சில் ஜெயலலிதா பெயரில் எப்.டி. தொகை ரூ.1,00,000
173 அதே தொகை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது ரூ.1,00,000
174 அதே தொகை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது ரூ.1,00,000
175 ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை ரூ.3,00,000
176 ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை ரூ.30,00,000
177 ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை ரூ.15,00,000
178 ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை 29.1.98 ரூ.5,00,000
179 ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை 22.4.1998 ரூ.15,00,000
180 ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை 22.4.1998 ரூ.10,00,000
181 ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை 19,10.1993 ரூ.2,00,000
182 மெட்ராஸ் ஆக்சிஜன் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்களில ஜெயலலிதா எப்.டி. தொகை ரூ.1,00,00,000
183 ஜெயலலிதாவுக்கு சொந்தமான 389 காலணிகளின் மதிப்பு ரூ.2,00,902.45
184 ஜெயலலிதாவுக்கு சொந்தமான 914 பட்டு சேலைகளின் மதிப்பு ரூ.61,13,700
185 ஜெயலலிதாவுக்கு சொந்தமான 6,195 பிற சேலைகள் மதிப்பு ரூ.27,08,720
186 ஜெயலலிதாவுக்கு சொந்தமான 2,140 பழைய சேலைகளின் மதிப்பு ரூ.4,21,870
187 ஜெயலலிதாவுக்கு சொந்தமான 7 ரிஸ்ட் வாட்ச்கள் மதிப்பு ரூ.9,03,000
188 ஜெயலலிதாவுக்கு சொந்தமான 91 ரிஸ்ட் வாட்ச்கள் மதிப்பு ரூ.6,87,350
189 ஜெயலலிதாவுக்கு சொந்தமான 86 தங்க ஆபரணங்களின் மதிப்பு ரூ.17,50,031
190 சசிகலாவுக்கு சொந்தமான 62 தங்க ஆபரணங்களின் மதிப்பு ரூ.9,38,460
191 ஜெயலலிதாவுக்கு சொந்தமான 26 தங்க ஆபரணங்களின் மதிப்பு ரூ.19,30,852.10
192 சசிகலாவுக்கு சொந்தமான 34 தங்க ஆபரணங்களின் மதிப்பு ரூ.17,54,868.90
193 ஜெயலலிதாவுக்கு சொந்தமான 41 தங்க ஆபரணங்களின் மதிப்பு ரூ.23,90,058.25
194 ஜெயலலிதாவுக்கு சொந்தமான 228 தங்க ஆபரணங்களின் மதிப்பு ரூ.1,40,75,958
195 ஜெயலலிதாவுக்கு சொந்தமான 394 தங்க ஆபரணங்களின் மதிப்பு ரூ.3,12,67,725
196 ஜெயலலிதாவுக்கு சொந்தமான 1,116 கிலோ வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ,48,80,000
197 சூப்பர்-டூப்பர் டி.வி. நிறுவனத்தின் எலக்ட்ரானிக் காம்ப்ளக்ஸ் மதிப்பு ரூ.15,75,800
198 மெடல்கிங் நிறுவனத்தின் இயந்திர மதிப்பு ரூ.7,69,000
199 ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் இயந்திரம் கொள்முதல் செய்தது ரூ.2,16,42,000
200 வி.என்.சுதாகரன், சத்யலட்சுமி நிச்சயதார்த்தத்தின்போது ஜெயலலிதா சார்பில் ரூ.2,95,061.50 மதிப்பு தங்கம் ரூ.8,99,320.50 மதிப்பு வைர நகைகள் பரிசாக வழங்கப்பட்டது அதன் மொத்த மதிப்பு ரூ.11,94,381.50
201 சென்னை தி.நகர் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 30.4.1996 அன்று ஜெயலலிதாவின் பேலன்ஸ் தொகை ரூ.21,380
202 ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் வளர்ச்சிக்கு செலவிட்ட தொகை ரூ.8,60,950
203 சென்னையில் உள்ள ஆர்பிஐயில் ஜெயலலிதா பெயரில் எப்.டி. தொகை ரூ.1,00,00,000
204 ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்காக வாங்கிய புதிய வாகனம் ரூ.32,40,278
205 சசிகலா பெயரில் 30.4.1996ல் சென்ட்ரல் வங்கியில் பேலன்ஸ் ரூ.17,502.98
206 திருச்சியில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான பொன்நகர் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டதற்கான செலவு ரூ.6,83,235
207 சென்னை வேலி கார்ட்ன் சாலையில் உள்ள கட்டிடம் புதுப்பிக்க ரூ.34,46,032
208 செகந்திராபாத்தில் உள்ள கட்டிடம் புதுப்பிக்க ஏற்பட்ட செலவு ரூ.3,00,000
209 30.4.1996 அன்று நமது எம்.ஜி.ஆர். நிறுவன வங்கி பேலன்ஸ் தொகை ரூ.5,10,968.16
210 சேரகுளம் கிராமத்தில் வசித்த நாச்சியம்மாளிடம் வாங்கிய நிலம் ரூ.21,830
211 1993 அக்டோபர் மாதம் இளவரசி, மாஸ்டர் விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோர் பெயரில் இந்தியன் வங்கியின் ஜெயராமன் பணிகொடை மூலம் கொடுத்த தொகை டெபாசிட் செய்யப்பட்டதின் மதிப்பு ரூ.38,421.00 மொத்தம் 66,44,73,573.27 சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. இவை பறிமுதல் செய்யப்படுமா என்பது சில நாட்களில் தெரியும்.

கருத்து................

எந்த அரசியல்வாதிக்கும் இதுவரை 100 கோடி ரூபாய் அபராதம் என்று விதிக்கப்பட்டது இல்லை. இத்தனை பெரிய தொகையை அபராதமாகச் செலுத்த அறிவுறுத்தப்பட்ட முதல் அரசியல்வாதி, முதல் முதலமைச்சர் ஜெயலலிதாதான். இந்த அபராதம் பற்றி தவறான தகவல்கள் வருகின்றன. அதாவது, ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட 66 கோடி ரூபாய் சொத்துகள் போக, மீதம் 34 கோடி ரூபாய் மட்டும் அபராதமாக செலுத்தினால் போதும் என்று சொல்கின்றனர். ஆனால், தீர்ப்பில் நீதிபதி அப்படி குறிப்பிடவில்லை. 100 கோடி ரூபாய் அபராதம் என்பது தனி. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் அனைத்தும் அரசாங்கத்தினுடையது. ஒருவர் முதலமைச்சராக இருக்கும்போது அவருடைய வருமானத்தைத் தாண்டி அவருக்குக் கொடுக்கப்படும் அன்பளிப்புகள் மற்றும் வருவாய்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கருவூலத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்டு இருந்த சொத்துகள் அனைத்தும் அரசாங்கக் கருவூலத்தில் சேர்க்கப்படும். அது தவிர்த்து, தனியாக 100 கோடி ரூபாயை அபராதமாக ஜெயலலிதா கட்ட வேண்டும். அதுவும் முறையான கணக்கு வழக்கு காட்டப்பட்ட பணத்தில் கட்ட வேண்டும். அந்த அபராதத்தைச் செலுத்தி அதற்கான ரசீதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே அவர் மேல்முறையீட்டுக்கோ அல்லது ஜாமீன் கேட்டோ விண்ணப்பிக்க முடியும் என கூறப்படுகிறது.