வெள்ளி, டிசம்பர் 24, 2010

நாம் சுரணையற்ற தமிழர்கள்.


 
ஈழத்தில் நம் தொப்புள் கொடி உறவுகளை சிங்கள அரசு கொத்து குண்டுகளை போட்டு ஆயிரக்கணக்கில் அழித்தபோது வேடிக்கை மட்டுமே நம்மால் பார்க்க முடிந்தது. தெரிந்தும் தெரியாதமாதிரி நாம் கண் மூடிக்கொண்டிருந்தோம். கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் செய்த பின் தான் வரிசையாக பா.ம.க, மதிமுக, தமிழ் அமைப்புகள் கொடி பிடித்தன. முத்துக்குமார் தீக்கு அகுதியானபோது எழுந்த எழுச்சி அலையை அரசியல்வாதிகள் திட்டமிட்டு மழுங்கடித்தனர். அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஈழ போரை பெரிய பிரச்சாரமாக கொண்டும் சென்றார்கள். ஈழ மக்களின் எதிரியான ஜெயலலிதாவே ஈழத்துக்கு ஆதரவு அறிக்கை விட்டார்.
 
தொப்புள் கொடி உறவை அழித்த மத்திய காங்கிரஸ் அரசுக்கு திமுக துணை போனதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. திமுக செய்தது துரோகம் என எண்ணினர். ஆனால் அவர்களுக்கு மாற்று வழியில்லை. திமுகவை எதிர்த்து நின்றவர்கள் ஈழ பிரச்சனையை மக்கள் பிரச்சனையாக்காமல் அரசியல் பிரச்சனையாக்கியதை மக்கள் உணர்ந்தேயிருந்தார்கள் அதனால் வந்த விளைவு. திமுக கூட்டணி வென்றது. இதை யோசிக்காமல், திமுக நினைத்திருந்தால் இலங்கையில் நடந்த போரை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் அதை செய்யாமல் கருணாநிதி விட்டு விட்டார் தமிழர்களின் விரோதி கருணாநிதி என ஈழ உணர்வாளர்கள் குற்றச்சாட்டினர். இந்த குற்றச்சாட்டு அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் ஜெ மீது கூட வந்திருக்கும்.
 
திமுகயில்லை போரை நடத்திய காங்கிரஸ்சே நினைத்திருந்தாலும் ஈழத்தில் நடந்த போரை தடுத்து நிறுத்தியிருக்க முடியாது. காரணம், ஆசிய கண்டத்தில் நடக்கும் மறைமுக யுத்தம் அப்படி. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நடக்கும் பொருளாதார, பாதுகாப்பு விவகாரங்களில் நடக்கும் மறைமுக யுத்தத்தில் சீனா குதிரை பாய்ச்சலில் முன்னேறி போய்க்கொண்டிருக்கிறது. இந்தியா ஆமை வேகத்தில் நகர்கிறது. அதோடு பாதுகாப்பு ரீதியாக சீனா இந்தியாவை சுத்தி வலைத்துள்ளது. (சீனாவின் முத்துமாலை திட்டத்தை இணையத்தில் தேடி படியுங்கள் புரியும்) சீனா சொன்னால், பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா, வங்கதேசம், நேபாளம் போன்றவை கை கட்டி சீனாவுக்கு சேவகனாக நிற்க்கும். இந்தியா மிரட்டினால் கூட கேட்பதற்க்கு ஒரு நாடும் தயாரில்லை.
 
சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்தியா முழித்துக்கொண்டது. அது முழித்தபோது இந்தியாவுக்கு இலங்கை மட்டுமே பிரகாசமாக தெரிந்தது. அதேநேரம் சீனா இலங்கையை வலைக்க பேசிக்கொண்டுயிருந்தது. கடல், ஆகாயம் மார்க்கத்தில் மிக முக்கியமான நாடு இலங்கை அதை கோட்டை விட்டால் நம் கதி அதோகதி தான் என பயந்து சிங்கள தேசத்தை மிரட்ட தொடங்கியது இந்தியா.
 
இதை பயன்படுத்திக்கொண்ட இலங்கை, எனக்கு தேவை பணம், ஆயுதம், நான் செய்யறத மத்த நாடுகள் கண்டுக்கொள்ளாத அளவுக்கு நீ எனக்கு பாதுகாப்பு தந்தன்னா நான் சீனா பக்கம் போகல என சொல்லி இந்தியாவிடம்மிருந்து எல்லாவற்றையும் வாங்கி ஈழத்தமிழர்களை, விடுதலைப்புலிகளை அழிக்க அதை பயன்படுத்திக்கொண்டது. வாலை நமக்கு காட்டிவிட்டு தலையை சீனாவிடம் தந்து துரோகம் செய்தது இலங்கை. இதைக்கண்டு அதிர்ந்து தலையை மீட்க இலங்கை கேட்டதை விட அதிகமாகவே தந்தது. மேற்க்குலக நாடுகளுக்கு இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் தெரிந்து அவர்கள் பங்குக்கு கேட்காமலே உதவிகளை வாரி வழங்கினார்கள். போட்டி போட்டுக்கொன்டு உதவிகள் தேடி வந்ததால் விடுதலை புலிகளை அழிக்க தைரியமாக வறைமுறை, விதிகளை மீறி ராணுவத்தை ஏவியது. இதில் விடுதலை புலிகளுக்கு ஆதராவக தோள் கொடுத்து நின்ற மக்களையும் கொன்று குவித்தது சிங்கள ராணுவம்.
 
போர் உச்சகட்டத்தை நெருங்கிய போது தான் தமிழகத்தில் நாம் தெருவில் இறங்கி போராடினோம். அப்போது காலம் கடந்து போய்யிருந்தது. உணர்வாளர்கள் மத்தியரசுக்கு முட்டு தருவது திமுக தான். நாங்கள் ஆதரவை வாபஸ் வாங்கிவிடுவோம் என காங்கிரஸ்சை திமுக மிரட்டினால் காங்கிரஸ் பணிந்து போரை நிறுத்தியிருக்கும் என பேசினார்கள். இப்போதும் அதையே பேசி வருகிறார்கள். திமுக ஆதரவை வாபஸ் வாங்கியிருந்தாலும், மத்தியில் காங்கிரஸ்சின் ஆட்சி கவிழ்ந்துயிருந்தாலும் இலங்கையில் போர் நடந்திருக்கும். இந்தியாவின் ஆதரவு இல்லாமல் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, ஜப்பான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளின் ஆதரவோடு இலங்கை போரை நடத்தியிருக்கும்.
 
இதை அறிந்தே இலங்கையை நம் வசம்மில்லாவிட்டால் இந்தியாவின் கதி அதோகதி தான்  என பயந்து அப்போது பாதுகாப்பு துறை செயலாளராகயிருந்த நாராயணன், வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர்மேனன், மத்தியமைச்சர் பிரணாப்முகர்ஜி அடிக்கடி தமிழகம் வந்து இந்தியாவின் இக்கட்டான நிலையை தெளிவுப்படுத்தி கருணாநிதியை கூல் செய்துவிட்டு போனார்கள். ஆனாலும் ஒட்டு வங்கியில் குறை வந்துவிடுமோ என பயந்து மனிதசங்கிலி, உண்ணாவிரதம் என நாடகம் நடத்தினார் முதல்வாரன கருணாநிதி.

 
பாராளமன்ற தேர்தலில் ஈழ பிரச்சனை மக்களிடம் எடுபடவில்லை என நினைத்து தேவையில்லாத விமர்சனங்களை புலிகள் மீது முதல்வர் கருணாநிதி வைக்க மக்கள் மனதில் அது காயத்தை ஏற்படுத்தியது. இதை அதிகமாக பிடித்துக்கொண்ட ஈழ ஆதரவாளர்கள், எதிர்கட்சிகள் போரை என்னவோ திமுகவே நடத்தியது போல தமிழகத்தில், இணைய தளங்களில் பிரச்சாரம் செய்து திமுகவை துரோகி என சொல்லி வருகிறார்கள்.
 
தமிழினம் என்றால் காங்கிரஸ்க்கு பிடிக்காது துரோகத்தின் வெளிப்பாடு என்கிறார்கள். காங்கிரஸ் மட்டுமல்ல பி.ஜே.பி உள்ளிட்ட தேசிய கட்சிகள், திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் தமிழனை ஏமாளியாக நடத்தி வருகிறது.
அதற்க்கு காரணம் யார்?
 
மனசாட்சியில் கை வைத்து யோசித்து பார்ப்போம். தெருவில் ஒருவனை யாராவது அடித்தால் கேள்வி கேட்க பயந்து ஓடிப்போய் பதுங்கி விடுகிறோம், நமக்கு வந்த பிரச்சனையில்ல இது என பாதுகாப்பாக மறைந்துக்கொண்டு போலிஸ் என்ன செய்கிறது ஒட்டு வாங்கிம் போனவர்கள் என்ன செய்கிறார்கள், நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என பேசுவது வாடிக்கையாகிவிட்டது. வடமாநிலங்களை பாருங்கள், அங்குள்ள மக்கள் தன் இனத்தை, சாதியை, மதத்தை சார்ந்தவர்களுக்கு எங்கே ஒரு பிரச்சனை என்றாலும் ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறை கவனித்துக்கொள்ளும் எனயில்லாமல் யாருக்கும் பயப்படாமல் தெருவில் இறங்கி மக்கள் போராடுகிறார்கள். வெற்றி கிட்டும் வரை ஓயாமல் போராடுகிறார்கள் வெற்றி பெருகிறார்கள். அந்த மக்களின் உறுதியை உணர்ந்தே அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் பயந்து மக்கள் பக்கம் நிற்க்கிறார்கள்.
 
இங்கு அவன் பாத்துக்குவான், இவன் பாத்துக்குவான் நமக்கு எதுக்கு வம்பு என ஒதுங்கி பயந்து ஒளிந்துக்கொள்கிறோம். இதனால் தான் நம்மை கிள்ளு கீறையாக நடத்துகிறார்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள். இது யார் தவறு?. நாம் செய்த தவறு. அரசியல்வாதியே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என எதிர் பார்த்தோம். ஆதை அறிந்துக்கொண்ட நம் முதுகில் சவாரி செய்கிறார்கள். நாம் மானம் கெட்டவர்கள், சொரணையற்றவர்கள் என அறிந்து நம் குணிய வைத்து குத்துகிறார்கள். தெரிந்தும் நாம் அவர்களை தண்டிப்பதில்லை. காரணம், தேர்தலில் 500, 1000த்திற்க்கு எப்படியும் ஓட்டு போடுபவர்களாக மாறிவிட்டதால் தான் இந்தநிலை. ஈழ பிரச்சனையின் போதும் அதை உணர்த்தி காட்டினார்கள்.

 
எல்லாவற்றையும் அரசியலாக்கினார்கள். உன் இனத்தை அழிக்கும் போது இங்கு நீ போராடியிருந்தால் அரசாங்கம் பயந்துயிருக்கும். போராட போகும் முன்பே கைது, சிறை என பயந்து பதுங்கினால் ஆள்பவர்களுக்கு தைரியம் வரத்தான் செய்யும். நீ எதிர்த்து நின்றிருந்தால் உன்னை நெருங்க அச்சப்பட்டிருப்பார்கள். ஒரு அரசாங்கம் மக்களை என்ன செய்துயிருக்க முடியும், கைது செய்யும். அவ்வளவு தானே இனத்திற்க்கா சிறையில் இருக்க கஷ்டம் என்றால் நீ உரிமையை பற்றி பேச தகுதியில்லாதவன். மக்களுக்காக, இனத்திற்காக உயிரை கொடுக்க விடுதலைப்புலிகள் பயந்திருந்தால் ஈழப்பிரச்சனை உலகம் பேசும் அளவுக்கு வந்திருக்காது.
 
நம் பிரச்சனைக்கு அரசியல்வாதிகள் தான் கேள்வி கேட்க வேண்டும் என எண்ணுவது நமக்கு வாடிக்கையாகிவிட்டது. நீ கேள்வி கேட்டால் தானே தப்பு செய்பவன், செய்ய துணிபவன் பயப்படுவான். கேள்வியே கேட்காத நாம் மற்றவர்களை குறை சொல்ல என்ன தகுதியிருக்கிறது. தவறுகளை நம் மீது வைத்துக்கொண்டு மற்றவர்களை குறை சொல்வது நியாயம்மில்லை.

அவன் துரோகி, இவன் துரோகி என குறைசொல்வதை விட்டுவிட்டு நாம் என்ன செய்தோம், என்ன செய்யலாம் என யோசிப்போம். அதன் பிறகு மற்றவர்களைபற்றியும், துரோகம் செய்தவர்கள், ஏமாற்றியவர்கள் பற்றியும் பேசுவோம்.

வியாழன், டிசம்பர் 23, 2010

ஸ்பெக்ட்ராம் நடந்தது-நடப்பது-நடக்க வேண்டியது என்ன?


2ஜீ ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் ஏட்டிக்கு போட்டியாக தகவல்களை அரசியல்வாதிகளும், மீடியாக்களும் ஊழல், ஊழல் என பேசியும், எழுதியும் வருகிறார்கள். ஊழல்க்கும் நட்டத்துக்கும் உள்ள வித்தியாசம் இவர்களுக்கு தெரியும். ஆனால் திட்டமிட்டே 2ஜீ ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் நட்டம் ஏற்பட்டதை ஊழல் என பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
1.70ஆயிரம் கோடியை கொள்யைடித்தோ, லஞ்சம் வாங்கினலோ ஊழல். அரசாங்கத்துக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது இழப்பு. இழப்பை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல்வாதிகள், ஆளும் பிரமுகர்கள் லாபம் அடைந்துள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது. அந்த லாபத்தை லஞ்சம் என சொல்லலாம். ஆனால் இழப்பு முழுவதையும் ஊழல் என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இழப்பு ஏற்படுத்தி அதன் பின் பெற்ற பங்கு எவ்வளவு என்பதை ஆராய்ந்து அதை ஊழல் அ லஞ்சம் என குற்றம்சாட்டலாம். அப்படி செய்யாமல் மொத்த தொகையும் ஊழல் என விளிப்பதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அரசியல்வாதிகள் அப்படி தான் சொல்வார்கள் ஆனால் ஊடகத்துறையும் அப்படி சொல்வதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் நட்டம் என குறிப்பிடப்படும் தொகையும் ஏற்றுக்கொள்ளும் படியாகயில்லை. ஏலம் விட்டுயிருந்தால் மட்டுமே அதை கணக்கிட்டுயிருக்க முடியும். 99 பி.ஜே.பி ஆட்சி காலம் முதலே ஏலம் நடத்தாமல் முதலில் வரும் கம்பெனிக்கு முன்னுரிமை என பெரு முதலாளிகளுக்கு ஏற்ப கொள்கை வகுத்து அதன்படி செயல்பட்டு வந்துள்ளார்கள் நம்மை ஆண்ட ஆளும் அரசியல்வாதிகள். 2000த்திற்க்கு முன்பு வரை மொபைல் போன்களை அவ்வளவாக யாரும் பயன்படுத்தாததால் அலைக்கற்றைகள் பெற்ற கம்பெனிகள் நட்டம் என காரணம் சொல்லிவந்தது. அதன் பின் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி, டெக்னாலஜி வளச்சியால் மொபைல் போன் பயன்பாடு நாட்டில் அதிகமானதால் அலைக்கற்று மீதான ஏக்கம் பெருமுதலாளிகளுக்கு அதிகமானது.

2ஜி அலைக்கற்றை பெற பல முக்கிய கம்பெனிகள் போட்டி போட்டன. ஆனால் ரிலையன்ஸ், ஏர்டெல் போன்ற சில கம்பெனிகள் மட்டும் ஏகபோக ஆதிக்கம் செலுத்தி மற்றவர்களுக்கு சரியாக கிடைக்க விடாமல் செய்தன. இதற்க்கு மத்திய அமைச்சர்களாக இருந்த பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, தயாநிதிமாறன் போன்றவர்கள் ஒத்து ஊதினார்கள்.
2007ல் தொலைதொடர்பு துறை அமைச்சரான ராசாவுக்கும் முக்கிய கம்பெனிகளின் ஆதிக்கம் பற்றி தெரியும். ஆனால் அதில் அரசுக்கு வரும் வருமானம், தனக்கு வரும் தனிப்பட்ட வருமானத்தை கவனத்தில் கொண்டு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வேகவேகமாக 2ஜீ அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்தார். மொபைல் கம்பெனிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதில் முக்கிய கம்பெனிகளை தவிர பல முகம் தெரியாத கம்பெனிகள் கூட லாபமடைந்தன. இதன்பின் தான் பிரச்சனை ஆரம்பமானது. இந்த ஒதுக்கீட்டில் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தி சிலர் லாபம்மடைந்துள்ளனர் என குற்றம்சாட்டப்பட்டது.

இப்படி கிளப்பி விட்டவர்கள் யார் என்றால் ஏற்கனவே அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்திய பெருமுதலாளிகள் தான் அவர்கள். அவர்கள் ராசா மட்டுமே குற்றவாளி என குற்றம் சாட்ட வைத்தார்கள் 3 ஆண்டு போராட்டத்தில் ராசாவிடம் இருந்த அமைச்சர் பதவியை காவு வாங்கினார்கள். சி.பி.ஐ விசாரணை தொடங்கி தற்போது ராசா கைதாவாரா என்பதில் வந்து நிற்க்கிறது பிரச்சனை.
அரசியல்வாதிகள், ஊடகங்கள் சொல்வது போல 1.70 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்குமா என்றால் வாய்ப்பு குறைவு. ஏன் என்றால் மத்திய தணிக்கை துறை 3ஜீ ஏலம் போன தொகையை வைத்து 2ஜீயை கணக்கிட்டுள்ளது. 2ஜீ அலைக்கற்று ஒதுக்கும் போதே அடுத்து 1 ஆண்டில் 3ஜீ அலைக்கற்றுக்கு ஏலம் விடப்படவுள்ளது என தொலைத்தொடர்புத்துறை அறிவித்தது. 2ஜீயை விட 3ஜீ டெக்னாலஜி வாயிலாகவும், வருமானம் அளவிலும் அதிக லாபம் கிடைக்ககூடியது. லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் புதியதாக ஏதாவது அறிமுகப்படுத்தி பணம் பறிக்கவே முயற்ச்சி செய்வார்களே ஒழிய அதைவிட லாபம் குறைந்ததை அதிக விலை கொடுத்து வாங்கியிருக்க மாட்டார்கள். அதனால் அவர்கள் 2ஜீயை குறைந்த விலைக்கு தான் வாங்கியிருப்பார்கள்.

அதேபோல், 126 கம்பெனிகள் 2ஜீயில் அலைக்கற்றைகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மிக குறைந்த விலையில் அதாவது ஆயிரம் கோடி, 2 ஆயிரம் கோடி என குறைந்த அளவிலேயே பணம் தந்து அலைக்கற்றை பெற்ற பெயர் தெரியாத, முகவரியில்லாத, தொலைத்தொடர்புக்கு சம்மந்தமில்லாத கம்பெனிகள் அதை வேறு கம்பெனிகளுக்கு 3 ஆயிரம், 4 ஆயிரம் கோடிக்கு விற்று லாபம்மடைந்துள்ளது. லாபம் பெற்ற கம்பெனிகளின் பணம்மெல்லாம் தொலைதொடர்பு துறை அமைச்சராகயிருந்த ராசாவுக்கே வந்தது என சொல்வதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதோடு, 100 ரூபாய் முதலீடு வைத்தாலே லாபத்தில் 75 சதவிதம் லாபத்தில் பங்கு வேண்டும் என கேட்கும் மனிதர்கள் வாழும் காலத்தில் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழும் பெரு முதலாளிகள் 1000 கோடி, 2000 கோடி முதலீடு செய்துவிட்டு அதனை கைமாற்றி விட்டு அதன் மூலம் வரும் லாபத்தை வேறு ஒருவருக்கு முழுவதுமாக தருவார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வந்த லாபத்தில் 50 சதவிதம் பெரு முதலாளிகள் ராசாவுக்கு தந்துள்ளார்கள் என வைத்துக்கொண்டாலும் அந்த 50 சதவித பணம் ராசாவுக்கு மட்டுமே போய்யிருக்க வாய்ப்பில்லை.

ராசாவை அமைச்சாராக்கியது திமுக. அது மாநில கட்சி. அவர் அமைச்சராகயிருப்பது காங்கிரஸ் கட்சியின் கீழ், அமைச்சர்களுக்கு மேல் பிரதமர் என ஒருவர் இருக்கிறார். டம்மி பிரதமரை ஆட்டி வைக்கும் அம்மையார் ஒருவர் உள்ளார். பலாயிரம் கோடிகள் வருமானம் கேட்காமலே கமிஷனாக வரும் துறையில் மேல்யிருப்பவர்களுக்கு தெரியாமல் ஒன்றும் செய்துயிருக்க முடியாது. அவர்கள் லாபம் பெறாமலும் இருந்திருக்க முடியாது.
இப்படிப்பட்ட நிலையில் ராசாவை மட்டும் குற்றவாளியாக்குவது எந்த விதத்தில் நியாயம்?. நியாயமான விசாரணை என்றால் பிரதமரையும் விசாரிக்க வேண்டும், ஊழலின் ஊற்றுக்கண் தெரியவேண்டும்மென்றால் தொலைத்தொடர்பு துறையின் ஆதி முதல் அந்தம் வரை விசாரிக்க வேண்டும்?, லாபம் அடைந்தவர்கள் யார், யார் என்பது அறிய வேண்டும், இத்துறையில் பெருமுதலாளிகளின் விளையாட்டை விசாரிக்க வேண்டும்?, கம்பெனிகளின் ஜாதகங்களை அலச வேண்டும்?, அலைக்கற்றை பெற்ற கம்பெனிகளின் உரிமையை ஒட்டு மொத்தமாக ரத்து செய்ய வேண்டும்? உண்மையான விசாரணை என்றால் இதுதான் வழி. இவைகளை செய்தால் மட்டுமே நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு அதனால் பெற்ற பலன் ஆகியவற்றை முழுமையாக கண்டுபிடிக்க முடியும்.

இல்லையேல் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை என்றாலும் உண்மை நிச்சயம் வெளிவராது. ஏன் எனில் நாம் வசிப்பது அரசியல்வாதிகளின் நாட்டில். ஜனநாயக நாட்டில் அல்ல. ஜனநாயகம் எனச்சொல்வது பித்தலாட்டம்.

திங்கள், டிசம்பர் 20, 2010

ஸ்பெக்ட்ராமில் கூட்டு விளையாட்டு. திமுகவின் எதிர்காலம்?


மனம் போன போக்கில் 2ஜி ஸ்பெக்ட்ராம் விவகாரம் இந்திய அரசியல் விளையாடிக்கொண்டிருக்கிறது. 3 ஆண்டுக்கு முன் 30 ஆயிரம் கோடி ஊழல் என தவழ்ந்த பிரச்சனை தற்போது 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி என வளர்ந்துள்ளது. இது இன்னும் எந்த அளவுக்கு வளரும் என்பது தெரியவில்லை. இந்த ஊழலில் ஆ.ராசா பலி கடாவானார். விசாரணை ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கிறது. தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான் என்ற கிராம பழமொழி ஒன்று உண்டு. அதனால் அரசியல்வாதியான ராசா கோடி கோடியாய் வருமானம் வரும் துறையில் சட்டத்திற்க்கு புறம்பாக வருமானம் பாhக்காமல் இருந்திருக்க மாட்டார். அவருக்கு முன் இருந்தவர்களும் பார்க்காமல் இருந்திருக்க மாட்டார்கள். அதை விடுங்கள். அது எந்தளவுக்கு ஊழல் என்பது விசாரணையின் முடிவில் தெரிந்துக்கொள்வோம்.
மற்ற ஊழல்களை விட இந்த 2ஜீ மட்டும் மீடியா, கட்சிகள் என பரவலாக பரபரப்பாக மக்களிடம் இருக்க காரணம் இந்த பிரச்சனையின் பின்னால் உள்ள பெரு முதலாளிகளின் விளையாட்டு.
யாரும் அவ்வளவாக விவாதிக்காத விவகாரம்மிது.
பெருமுதலாளிகள் லாபத்தை பெருக்கவும், எதிரியை அழிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். குறிப்பாக அரசியல்வாதிகளை விட மிக மிக மோசமானவர்கள் இந்த பெரு முதலாளிகள். தங்களை எதிர்ப்பவர்கள் யாராகயிருந்தாலும் கொலைகள் கூட செய்ய தயங்காதவர்கள். பணத்திற்காக கொலை செய்யும் ரவுடிகளிடம் கூட மனிதாபிமானம், இரக்கம் உண்டு. ஆனால் இந்த ஒயிட் காலர் பெரு முதலாளிகள் முற்றிலும் மாறுபட்டவர்கள்.
வியாபார பெரு முதலாளிகள் எப்படி என்பதை உதாரணத்திற்க்கு நம்மவூர் சன் நெட் ஒர்க் கம்பெனியை எடுத்துக்கொள்ளலாம்.
திமுக தலைவர், முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மச்சான் மறைந்த முன்னால் மத்தியமைச்சர் முரசொலி மாறனின் மூத்த மகன் கலாநிதிமாறன், சென்னையில் பூமாலை என்ற வீடியோ லைப்ரரியை தான் முதன் முதலாக 89களில் ஆரம்பித்தார். அப்போது திமுக ஆட்சிக்கட்டிலில் இருந்ததால், தாத்தாவின் அரசியல், அதிகார செல்வாக்கை பயன்படுத்தியதன் விளைவு பூமாலை என்ற வீடியோ கடை சன் என்ற சேட்டிலைட் சேனலாக மாறியது.
தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் தனியார் தொலைக்காட்சி என்ற பெயர், அரசியல் செல்வாக்கு சட்டத்தை மட்டுமல்ல எல்லாவற்றையும் வளைத்தது. 1996 – 2000த்தில் திமுக ஆட்சியில் திமுக என்ற ஆலமரத்தை வைத்து சன் நிறுவனத்தை மிகப்பெரிய அளவில் வளர்த்துக்கொண்டார்கள். 10 ஆண்டுகளில் தென்னிந்தியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
முரசொலி மாறன் மாமனுக்கு ஏற்ற மச்சானாக விசுவாசத்துடன் இருந்தார். அவர் மறையும் வரை வியாபாரத்தை குடும்பத்திற்க்குள் காட்டவில்லை. முரசொலி மாறன் மறைந்ததும் அதுவரை திமுக தொண்டர்களுக்கு கூட பரவலாக தெரியாத குங்குமம் பத்திரிக்கையின் பொறுப்பில் இருந்த கலாநிதியின் தம்பி தயாநிதிமாறனை 2004ல் அரசியலுக்குள் இழுத்து எம்.பியாக்கி அதே வேகத்தில் தொலைதொடர்பு துறை அமைச்சராக்கி அழகு பார்த்தார் தாத்தா கலைஞர். தயாநிதிமாறன் பதவிக்கு பின் அண்ணன் கலாநிதி மாறனின் சன் குரூப்பின் வேகம், வளர்ச்சி, வருமானம் பலமடங்கானது. முரசொலி மாறன் இருந்தவரை அமைதியாக இருந்த பிள்ளைகள் வருமானம் அதிகமாவதை கணக்கில் கொண்டு சன் பங்கை பிரித்தார்கள். அதில் கலைஞர் – மாறன் குடும்பத்திற்க்குள் கருத்து வேறுபாடு. மாறன் தரப்பு தங்களை ஏமாற்றிவிட்டதாக அழகிரி குமுறியதாக தகவல்கள் வெளியே வந்தன.

பங்கு பிரிப்புக்கு பின் மாறன் பிரதர்ஸ் வேகம் பலமடங்கானது. தினகரன் நாளிதழ், சினிமா, விமான சேவை என பறந்தது. மாநிலத்திலும் திமுகவின் ஆட்சி கட்டிலில் ஏறியது. ஸ்டாலினா – அழகிரியா என தினகரன் கருத்துகணிப்பு நடத்தி அழகிரியின் கோபத்தால் மதுரை தினரகரனில் 3 உயிர்கள் எரிக்கப்பட்டது. அழகிரியை ரவுடி என சன் குரூப் சேனல்கள் அலறின, திமுகவை சேர்ந்த  மத்தியமைச்சரான தயாநிதி, கலைஞருக்கு நெருக்கமாகயிருந்த தமிழக மின் அமைச்சர் ஆற்காட்டாரை செல்போனில் தொடர்பு கொண்டு, அழகிரிய கைது பண்றிங்களா இல்ல உங்க ஆட்சியை டிஸ்மிஸ் பண்ண வைக்கட்டுமா என கேட்க அரண்டு போன அவர் இதுப்பற்றி கலைஞரிடம் அப்படியே சொல்லியுள்ளார். நொந்து போன கலைஞர் தயாநிதியின் அமைச்சர் பதவியை பறித்ததோடு, எம்.பி பதவியை மட்டும் விட்டு வைத்து கட்சியை விட்டு ஓரம் கட்டினார்.
அரசியல் விளையாட்டை கரைத்து குடித்த கலைஞருக்கு தங்களது உலக பணக்கார விளையாட்டை காட்ட ஆரம்பித்தார்கள் பெரு முதலாளிகளான மாறன் பிரதர்ஸ். மீடியா பலத்தை வைத்து தென்னிந்தியாவில் திமுக எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடங்கியவர்கள், நேஷ்னல் அளவில் தங்களது மீடியா நண்பர்களை வைத்து திமுக இமேஜ்ஜை டேமேஜ் ஆக்கினார்கள். தமிழகத்தில் திமுகவை அழிக்க நினைக்கும் மற்ற அரசியல் கட்சிகளை வளர்த்தார்கள். திமுகவின் பரம விரோதியான ஜெ விழாக்கள் சன்னில் லைவ்வாக ஒளிப்பரப்பானது. சன் நிர்வாகத்தை எதிர்த்த வை.கோ சன்க்கு நண்பரானார். திமுகவும் சன் எதிராக சேனல்கள் தொடங்கின. சன் சரிய தொடங்கியது. இதில் அதிக கோபமாகி திமுகவின் இமேஜ்ஜை சன் உடைக்க ஆரம்பித்ததால் இரண்டு தரப்புமே நொந்து போனது. இரண்டு தரப்புக்கும் மீடியேட்டர்களாக இருந்தவர்கள் இரண்டு குடும்பத்தையும் ஒன்று சேர்க்க முயன்று வென்றனர். மீண்டும் பங்கு பிரிக்கப்பட்டது. பிரச்சனைகள் முடிந்தன என கலைஞர் குடும்பம் மட்டுமல்ல தமிழகமும் எண்ணியது.
ஆனால் நடந்ததோ, நடப்பதோ வேறு ………………….
மாறன் பிரதர்ஸ் கலைஞர் குடும்பம் ஒன்றிணைந்தாலும் பெரு முதலாளிகளுக்கே உண்டான குரோதம் இவர்களிடம் அப்படியே உள்ளது. தங்களை எதிர்த்தவர்களை அழிக்க களத்தில் வேகத்துடனே இன்றளவும் மறைமுகமாக உள்ளார்கள்.
கலைஞர் டிவி ஆரம்பிக்க ஐடியா தந்த ஜாம்பவான் அமைச்சர் ஆற்காட்டார் இன்று சீண்ட ஆள்யில்லாமல் இருக்கிறார். கலைஞர் டிவியை பிரபலமாக்கி, தமிழகத்தின் இரண்டாவது இடத்தில் சன்னுக்கு போட்டியாக கொண்டு வந்தவரின் கால் எலும்பை உடைத்தார்கள் மாறன் சகோதரர்கள். திமுகவின் இமேஜ்ஜை உடைக்க ஸ்பெக்ட்ராம் விவகாரத்தை தமிழகத்தில் ஊதி ஊதி பெரியதாக்கியது மாறன் குரூப். நேஷ்னல் அளவில் மீடியாவில் அதன் தாக்கம் குறையாமல் பார்த்துக்கொண்ட பெரு முதலாளிகளில் மாறன் குரூப்பும் அடக்கம். இதனால் திமுகவின் இமேஜ் மட்டுமல்ல ஆட்சியே போனால் கூட பரவாயில்லை என்ற எண்ணம் மாறன் குரூப்க்கு. பழைய கணக்கை தீர்த்து திமுக தலைமை தன்னை நம்பியே இருக்க வேண்டும் என்ற எண்ணம்.
இதனால் மாறன் குரூப் நடத்தும், ஸ்பெக்ட்ராம் விவகாரத்தை மட்டும் பார்ப்போம். முதல் முறை எம்.பியானவுடன் தொலைதொடர்புத்துறை அமைச்சராக்கப்பட்டார் தயாநிதிமாறன், அவர் பதவியேற்ற 6வது மாதம் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு பிரச்சனையை கிளப்பியது. அதாவது தயாநிதிமாறன் 6 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளார் என ஆதாரத்தோடு அலறியது. அந்த விவகாரம் அப்படியே அமுக்கப்பட்டது.
அதன்பின் ரிலையன்ஸ் டெலிகாம் சர்வீஸ் தயாநிதி மாறன் அமைச்சராகயிருந்த போது அலைவரிசை ஒதுக்கீடு பெற்றது. அதற்கான கமிஷனை பணமாக வாங்காமல் தமிழ்நாடு முழுக்க தங்களும் கேபிள் புதைத்து தர வேண்டும் என டீல் பேசி ஒ.கே செய்ததாக கிசுகிசுக்கப்பட்டது. அதோடு ரிலையன்ஸ்க்கும் டாடா குரூப்புக்கும் ஆகாது. தயாநிதி அமைச்சராகயிருந்தவரை டாடாவை மேலே வர விடாமல் பார்த்துக்கொண்டார். அதேபோல் மிட்டலின் பாரதிடெல்க்கும் சலுகை காட்டியது அதற்கு உண்டான கமிஷனை சேர்களாக வாங்கியது. இப்படி பட்டியல் நீளம். இந்த பதவி பறிக்கப்பட்டு ராசா அமைச்சராக்கப்பட்டதும் ரிலையன்ஸ், ஏர்டெல் என ஒரு சில கம்பெனிகள் கொள்ளையடித்ததை முகாம் தெரியாத, பிரபலமாகாத கம்பெனிகள் கொள்ளையடிக்க வழி ஏற்படுத்தி தந்தார். இதில் டாடாவும் லாபம்மடைந்தன. இதனால் அதிகமான லாபத்தை இழந்த தயாநிதிமாறனால் லாபம்மடைந்த கம்பெனிகள் ராசாவை ஒழிக்க வழி தேடின. முடியவில்லை. குடும்பம் ஒன்று சேர்ந்ததும் தொலை தொடர்பு பதவி தன்னை தேடி வரும் என எண்ணினார். அதுவும் வரவில்லை. இதனால் சன் கம்பெனிக்கு மனதில் வெறுப்பு.

டாடாவை ஒழிக்க நினைத்த அம்பானி சகோதரர்கள், திமுகவை அழிக்க நினைக்கும் மாறன் சகோதரர்கள், லாபத்தை மட்டுமே பார்த்த மிட்டல் குரூப் போன்ற பெரு முதலாளிகள் ஒன்றினைந்தார்கள். ராசாவை ஒழிப்போம் என திட்டம் தீட்டினார்கள். அது தான் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்க்கு காங்கிரஸ்சின் மறைமுக ஆசியுண்டு.
காங்கிரஸ் இதில் இணைய காரணம், இரண்டு தமிழகத்தில் தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது காளான் ராகுல்காந்தியின் கனவு. அதற்கான களத்தை அமைக்க முயற்சி செய்கிறார். தமிழக அரசியல் வரலாற்றை பொருத்தவரை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் இருக்கும் வரை காங்கிரஸ் என்கிற அகில இந்திய பேரியக்கம் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது. இதை உணர்ந்தே திமுக என்ற ஆலமரத்தை அசைக்க முயற்சி செய்கிறது காங்கிரஸ். ராகுல் பார்முலா என்ற ஒன்றை வைத்துக்கொண்டு களம்மிறங்குகிறார்கள். பீகாரில் தோற்ற பார்முலா தான் இருந்தும் தமிழகத்தில் இம்பிலிமென்ட் செய்து பார்க்க முயல்கிறது. இரண்டு உலக அளவில் காங்கிரஸ் கட்சியின் மானத்தை கப்பலேற்றிய ஊழல்களில் இருந்து தன் பெயரை காப்பாற்றிக்கொண்டது. அது, காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் காங்கிரஸ் பிரமுகர் நடத்திய ஊழல், ஆதர்ஷ் என்கிற கார்கில் வீரர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் நடந்த ஊழல். அதிலிருந்து தப்பிக்க ஸ்பெக்ட்ராம் ஊழலை பூதகராமக்கியது காங்கிரஸ்.

இவ்வளவு உறுதியாக கூற காரணம், ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் அடுத்தடுத்து வெளிவரும் ஆடியோ டேப்கள். கனிமொழி, ஆ.ராசா, நீராராடியா, டாடா என பெரிய பெரிய பெரு முதலாளிகள், அரசியல் வி.ஐ.பிகள் என ஜாம்பவான்களின் மொபைல் பேச்சுகள் ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. இதை செய்தது நிச்சயமாக மத்திய அரசின் புலனாய்வு துறைகளாக்கதான் இருக்கும். பதிவு செய்யப்பட்ட ரெக்கார்ட்டுகள் பாதுகாப்பாக இருந்திருக்கும். அதி உயர் பாதுகாப்பில் இருந்த ரெக்கார்டுகள் மீடியாவிடம் வருகிறது என்றால் அரசின் ஆதரவில்லாமல் வெளியே வருவதற்கான சாத்தியம்மில்லை.
இந்த ஆடியோக்கள் திமுகாவை டேமேஜ் செய்யும் விதத்தில் தான் உள்ளது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைப்பற்றியோ, அதன் தலைவர்களைப்பற்றியோ, குறிப்பாக சோனியா காந்தி பற்றிய பேச்சுகள் எதையும் காணோம். அப்படியென்றால் என்ன அர்த்தம் திமுகவை அழிக்க வேண்டும் என ஒரு பெரிய மெகா ப்ளான் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்று தானே அர்த்தம்.
 ஈழ தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு யுத்தம் நடத்தி லட்ச கணக்கான மக்களை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு ஆதரவாக போரை நடத்தியது இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு. துமிழகத்தில் காங்கிரஸ்க்கு எதிராக தமிழ் உணர்வாளர்கள், மக்கள் கொதித்து எழுந்தபோது அதை அடக்க தமிழகத்தை ஆண்ட திமுக அரசை பயன்படுத்திக்கொண்டது. முதல்வர் கருணாநிதியும் போராட்டத்தை பிசுபிசுக்க வைத்தார். மக்களின், உணர்வாளர்களின் கோபம் திமுக மீது மையம் கொண்டது. தன் மேல் மையம் கொண்ட கோபத்தை தந்திரத்தோடு திமுக மீது திருப்பி வெற்றி பெற்றது காங்கிரஸ். தற்போது தனக்கும் அதற்க்கும் எந்த சம்மந்தமும்மில்லை என்பதை போல நடந்து கொள்கிறது காங்கிரஸ். 



ஆக காரியம் முடிந்ததும் கை கழுவும் பழக்கம் காங்கிரஸ்க்கு பல காலமாகவே உண்டு. அது சோனியா காலத்திலும் தொடர்கிறது. தற்போது நடக்கும் யுத்தத்தில் காங்கிரஸ், மத்தியரசு, பெரு முதலாளிகள், மீடியாக்கள் ஒருபக்கமும் - திமுக ஒரு பக்கமும்மாக நிற்கிறது.
வெற்றி யாருக்கு என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

புதன், டிசம்பர் 15, 2010

அரசியலுக்கு அடுத்த கோமாளி தயார்.


ஒருவன், படுத்துக்கொண்டோ, உட்கார்ந்துக்கொண்டோ, நடந்துக்கொண்டோ, கனவு கான்பதையும், கற்பனை செய்வதையும் யாரும் தடுக்க முடியாது. ஆனால் நாம் காணும் கனவுக்கு ஒரு அர்த்தம் வேண்டும். அர்த்தமேயில்லாமல் கனவு கண்டு கொண்டுயிருப்பவர்கள் தற்போது அதிகமாகிவிட்டார்கள். மருத்துவர் ராமதாஸ் சொல்வது போல கோமளிகளுக்கும் நாடாளும் ஆசை வந்துவிட்டது. தற்போது அந்த ஆசை நடிகர் விஜய்க்கு வந்துள்ளது. யார் வேண்டுமானாலும் அரசியல்வாதியாகலாம், முதல்வர் ஆகலாம் என்பது என்ன நியாயம். அதற்க்கு ஒரு தகுதி, தராதரம் வேண்டாமா?. முதல்வர் பதவி என்பது என்ன வீட்டுக்கு வெளியில் போடும் கோலமா சரியில்லை என்றால் அழித்து விட்டு திருப்பி போட.
விஜய்க்கு எதனால் இந்த ஆசை?. இந்த சமுகத்திற்க்கு விஜய் என்ன செய்துவிட்டார்?, விஜய்க்கு தமிழனின் வரலாறு தெரியுமா?, ஈழ தமிழனின் பிரச்சனை தெரியுமா?, சமுக பிரச்சனை தெரியுமா?, இந்த சமுகத்தில் எத்தனை சாதியிருக்கிறது என்று தெரியுமா?, சமூகநீதி பற்றி தெரியுமா?, பெரியார் பற்றி தெரியுமா?, திராவிட அரசியல் பற்றி தெரியுமா?, படித்து வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை தெரியுமா?, மக்களுக்காக இவரால் 2 நாள் சிறையில் இருக்க முடியுமா?,
மைக் தந்தால் இன்றைய மக்கள் நிலை பற்றி சொந்தமாக பேச தெரியாத கத்துக்குட்டி தான் நடிகர் விஜய். இயக்குநர் சந்திரசேகர் மகன் என்ற தகுதியுடன் 25 வயதில் சினிமாவுக்குள் வந்தவர் நடிகைகளுடன் குத்தாட்டம் போடுவது, மாமியாருக்கு சோப்பு போடுவது என 8 ஆண்டுகள் குஜிலி சினிமாக்களில் நடித்துவிட்டு மற்ற நடிகர்களை விட அதிகமாக இளைஞர்களுக்கு வன்முறையையும், தண்ணி, தம்மு என கற்று தந்த விஜய் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார். புதவிக்கு வந்தால் இன்னும் என்னன்ன கற்று தருவாரோ?.

சில ஆண்டுகளுக்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கம் என ஆரம்பித்தவர் தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சியாக மாற்ற முடிவு செய்து அதற்கான காரியத்தில் இறங்கியுள்ளார். அரசியல் ஆசை வரலாம். இந்த சமுகத்தில் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம் ஆனால் அதற்கென்று ஒரு தகுதி வேண்டாமா?.

அவர் மக்கள் இயக்கத்தின் மூலம் ஏழை மக்களுக்கு பலப்பல உதவிகள் செய்துள்ளார் இந்த தகுதி போதாதா என காரணம் சொல்லலாம். நடிகர்-நடிகைகள் பொதுவாக சம்பளத்தில் பாதியை கறுப்பு பணமாக வாங்குவார்கள். விஜய்யும் இதற்க்கு விதிவிலக்கல்ல. வந்த பணத்தை அரசின் கணக்கிலிருந்து மறைக்க பொய் கணக்கு காட்ட நலத்திட்ட உதவி அதுயிது என சிலவற்றை செய்தார். அதனால் அந்த உதவிகள் மட்டுமே காரணமாகிவிட முடியாது. தமிழக முதல்வர் கருணநிதி குடும்பம் தான் விஜய் சினிமாவுக்கு வர காரணம் என்கிறார்கள் வேறுசிலர். எப்படி? என கேட்டால், சினிமா உலகை ஆட்டிப்படைக்கும் முதல்வரின் பேரன்கள் விஜய்க்கு தொந்தரவு தருகிறாhகள் அதனால் தான் அரசியலில் இறங்குகிறார் என்கிறார்கள்.

இது சொத்தையான காரணம். விஜய்க்கு அரசியல் ஆசை இப்போது வரவில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் ஒருயிடத்தை வாங்குகிறார். அந்தயிடம் சர்ச்சையில் சிக்குகிறது. தான் தமிழின் பிரபலமான நடிகர் அதனால் அதிகாரிகள் தனக்கு சாதகமாக இருப்பார்கள் என எண்ணினார். ஆனால் அவரின் எண்ணத்தில் மண் விழுந்தது. அரசியல் தலைகள் தலையிட அரசியல்வாதிகளுக்கு சாதகமாகவே விவகாரம் போனது. முதல்வர் கலைஞர் வரை போய் உதவி கேட்டார். அதன்பின் அவருக்கு சாதகமாக விவகாரங்கள் நடந்தன. அப்போது தான் அவருக்கு அந்த அரசியல் ஆசை விதையாக மனதில் விழுந்தது. ஏற்கனவே அரசியல் வாசனை அறிந்த சந்திரசேகர் மகன் ஆசைக்கு உரம் போட்டார்.
சினிமா பட விழாக்களில் ரஜினியை விட விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் குவிந்தார்கள். இதை கண்டு மதி மயங்கிய விஜய் தான் தான் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தி என எண்ணினார். விஜய் போகும்மிடங்களில் எல்லாம் மக்கள் ஓடிவந்து முண்டியடித்து பார்த்தார்கள். தமிழக மக்களை பொருத்தவரை சினிமாவில் துணை நடிகர்கள் பொதுயிடங்களுக்க வந்தால் ஆசையாக பார்க்க கூடிவிடுவார்கள். அதுவொரு ஈர்ப்பு அவை ஓட்டாக மாறிவிடாது.
நடிப்பு திலகம் என அழைக்கப்படும் சிவாஜிகணேசனுக்கு எம்.ஜீ.ஆர்ரைவிட ரசிகர்கள் அதிகம். ஆனால் அவரால் கூட அரசியல்வாதியாக ஜெலிக்க முடியவில்லை. அதன் பின் கடந்த தேர்தலின் போது அடுத்த முதல்வர் நான் தான் என கர்ஜித்து கட்சி ஆரம்பித்த நடிகர் விஜயகாந்த்க்கு கூடாத கூட்டம்மில்லை. இதனால் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். 1 இடத்தில் அவர் மட்டுமே ஜெயித்தார். விஜயகாந்த் ஏதோ 50 படம் நடித்து முடித்தவுடன் சினிமாவுக்கு வரவில்லை. 125 படங்களுக்க மேல் நடித்து முடித்தபின்பே அரசியலுக்கு வந்தார். அவரே மின் மினி பூச்சியாய் தமிழக அரசியலில் இருக்கிறார்.

நான் எம்.ஜீ.ஆர் போல் அரசியலில் ஜெயிப்பேன் என விஜய் சொன்னால் இதை விட காமெடி இருக்க முடியாது. ஏம்.ஜீ.ஆர் அரசியலுக்கு வந்தது விபத்து. 50 வயதுக்கும் மேல் நடித்துக்கொண்டு மட்மேயிருந்தார். அறிஞர் அண்ணாவால் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது அவருக்கு திமுக தொண்டர்களிடையே மக்களிடத்தில் ஒரு பெரிய ஆதரவு வட்டமேயிருந்தது. திமுக தலைவருடன் ஏற்பட்ட மோதலில் திமுகவை உடைத்துக்கொண்டு வெளியே வந்தார். அடிமட்ட மக்களின் செல்வாக்கை  கொண்டு கட்சி ஆரம்பித்து ஜெயித்தார்.

இதுயெல்லாம் தெரியாமல் தமிழ்நாடே என் பக்கம்மிருக்கிறது என கட்சி ஆரம்பிக்கும் விஜய்யை முட்டாள் என்பதை தமிழக மக்கள் உணர வைக்க வேண்டும்.