சனி, செப்டம்பர் 24, 2022

நிர்வாணம். காமம் அறிய நாம் கடக்கவேண்டியது வெகு தூரம்.


 

அருவி குளியல் என சில புகைப்படங்களை பெண்ணியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் கவிதாயினி ஒருவர் வெளியிட்டு முகநூல் பக்கத்தில் அதகளம் செய்துள்ளார். இதற்கு வழக்கம்போல் ஆதரவு – எதிர்ப்பு என கடந்த மூன்று, நான்கு நாட்களாக முகநூல் பொங்கல் வைத்துக்கொண்டு இருக்கிறது. இப்போதுதான் அந்தப்பதிவை பார்க்க நேர்ந்தது. அந்தபதிவிலுள்ள புகைப்படங்களை ஆ………வென வாயை பிளந்து பார்ப்பவர்கள், கிராமங்களுக்கு போகாதவர்கள் என்பது தெரிகிறது. கிணறு, ஏரி, குளம், கண்மாய்களில் வெறும் உள்பாவாடை மட்டும் கட்டிக்கொண்டு குளிக்கும் பெண்களை சாதாரணமாக காணலாம். விவசாய நிலங்களில், பொதுக்குழாய் இடத்தில் பெண்கள் உள்பாவாடையுடன் புடவையை முட்டிக்குமேல் தூக்கி இடுப்பில் சொருகிக்கொண்டு தண்ணீர் பிடிப்பதும், நாற்று நடுவது ரொம்ப, ரொம்ப சர்வசாதாரணம். அங்குயெல்லாம் ஆண்கள் சர்வசாதாரணமாக நடமாடுவார்கள். நிலத்தில் வேலை செய்யும் இடத்திலும் இரட்டை அர்த்த வார்த்தைகள் எல்லாம் தூள் பறக்கும். இதையெல்லாம் பார்த்தால், கேட்டால் சமூகவளைத்தளங்களில் குந்தவைத்து உட்கார்ந்துள்ளவர்கள் அந்த பெண்களுக்கு என்னப்பெயர் வைப்பார்கள் எனத்தெரியவில்லை.

இங்கு ஆணோ, பெண்ணோ யார் நிர்வாணத்தை பற்றி, காமம் பற்றி சும்மா பேசினாலே பேசுபவர்களை காமவெறியர்களாக இந்த சமூகம் பார்க்கிறது. தங்கள் மகன், மகளிடம் கூட தந்தை, தாய் இருவரும் பாலியல் குறித்து பேசாமல் விலகிப்போகும் முட்டாள்தனம் இந்தியாவில் மட்டும்தான் என நினைக்கிறேன். கூட்டு குடும்பமாக இருக்கும்போது தாத்தா, மாமன், மச்சான் என ஏதாவது ஒரு உறவு இளைஞனுக்கும், பாட்டி, அத்தை, அண்ணி போன்றவர்கள் திருமண வயதில் உள்ள பெண்ணுக்கு காமம், உடல்உறவு குறித்து லேசுபாசாக சொல்லித்தருவார்கள்.

2000ஆம் ஆண்டு வரை இளைஞர்களாக இருந்தவர்களுக்கு காமக்கதைகள் படிக்கவேண்டும் என்றால் செக்ஸ் புத்தகங்கள்தான் ஒரேவழி. இன்று எல்லாம்மே மொபைலுக்குள் வந்துவிட்டது. ஃபோர்ன் வெப்சைட்கள், ஃலைவ் ஷோ வரை வந்துவிட்டது. அப்படிப்பட்ட யுகத்தில் ஒருபெண், தனது மார்பை காட்டிவிட்டாரே என பொங்குகிறார்கள். ஆடையை கழட்டுவதுதான் பெண்ணியம்மா? புரட்சியா என களமாடிக்கொண்டு இருக்கிறார்கள். அது புரட்சியா அல்லது பப்பாளியா என்கிற ஆராய்ச்சியை பிறகு செய்யுங்கள். அவர் கேட்கும் கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கள். நீ ஜட்டியை மட்டும் போட்டுக்கிட்டு தொந்தியுடன் அருவியில் குளிக்கலாம், பெண்கள் மேலாடை இல்லாமல் குளிக்ககூடாதா? உனக்கொரு நியாயம், எனக்கொரு நியாயம்மா எனக்கேட்கிறார்கள்.

அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் இங்கே ஓப்பாரி வைப்பவர்களின் நோக்கம், அய்யோ என் பொண்டாட்டி எனக்கு மட்டும்மே. அவள் உடம்பை எனக்கு மட்டுமே காட்டவேண்டும், வேறு ஒருவர் எப்படி பார்க்கலாம் என்கிற ஆதிக்க மனோபாவமே. அதே ஆண் என்கிற மனோபாவம்தான் பொதுயிடத்தில் தன்னை ஜட்டியுடன் குளிக்கச்சொல்கிறது. என் கணவன் இப்படித்தான் இருக்கவேண்டும் என ஒருபெண் நினைத்தால் அதை தவறு என்கிறோம். அந்த மனோபாவத்தை உடைக்கவேண்டும்மென, என்னை முடிக்கிட்டு குளிக்கனும்னு சொல்லிட்டு, நீ அவுத்துப்போட்டுட்டு குளிக்கறமாதிரி நானும் அவுத்துப்போட்டுட்டு குளிக்கறன், இதேப்பார் எனக்காட்டியுள்ளார் அந்த பெண். அந்த பெண் அப்படி காட்டிவிட்டாரே என்பதல்ல இவர்களது கோபம். தங்கள் வீட்டு பெண்களும் இப்படி செய்துவிட்டால் என்ன செய்வது என்றே வெதும்பி விஷத்தை கக்குகிறார்கள்.

காமம் குறித்த உரையாடல் சமூகத்தில் வெளிப்படையாக நடக்காதவரை இப்படி வெதும்புகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். மேற்கத்திய நாடுகளில் காமம் குறித்தும், பெண், ஆண் உடல் அமைப்புகள் குறித்த புரிதல் அங்கு உண்டு. வெளிப்படையாக பள்ளிகளிலேயே அங்கே அதுக்குறித்து பேசுகிறார்கள், பாலியல் கல்வி அங்கு உண்டு. நம்மைப்போல் பெண்களின் கற்பு, மானம், மரியாதையை அவர்கள் யோனியில் வைக்கவில்லை.

நம்நாட்டில் பாலியல் கல்வி இல்லாதது, கூட்டு குடும்பம் என்கிற சிஸ்டம் உடைந்து தனிக்குடும்பங்கள் என்கிற நிலைவந்தபிறகு, இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு காமம் குறித்த புரிதலுக்கு ஃபோர்ன் வெப்சைட்கள், செல்போனில் வரும் காம வீடியோக்களை தவிர்த்தால் வேறு வழியில்லை. கற்றுதருவதா காமக்கலை என பழைய சொற்றொடரை இப்போதும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். டெக்னாலஜி உலகத்தில் சொல்லித்தரவேண்டிய நிலையிலேயே இளைய சமூகம் இருக்கிறது. எனக்கு தெரிந்து, நன்றாக படித்த சிட்டியில் வாழும் ஒருஜோடிக்கு, திருமணமாகி 5 வருடங்களை கடந்துவிட்டது, இன்னமும் குழந்தை இல்லை. தங்களது கட்டில் அறை வாழ்க்கை குறித்து மருத்துவரிடம் வெளிப்படையாக பேசவே தயங்குகிறார்கள். உடல்கூடல் எப்படி என்பது தெரியாமலே வளர்ந்து சிட்டியில் வளர்ந்து, வாழ்கிறார்கள்.

இன்னொருவன் 10 நிமிஷத்துக்குமேல் முடியலடா என்கிறான். ஃபோர்ன் வெப்சைட்களில் மணிக்கணக்காக செய்யும் வீடியோக்களை பார்த்துவிட்டு நம்மால் அவ்வளவு நேரம் முடியவில்லையே என்றும், ஒருநாளைக்கு பத்துமுறை செய்வேன் என காமகதை படித்துவிட்டு அதை உண்மை என நினைத்துக்கொண்டு குற்றவுணர்ச்சியில் தவிக்கிறார்கள்.

பாலியல் குறித்து விவாதிக்க முடியாத நிலையிலேயே நம்முடைய சமூக கட்டமைப்பு உள்ளது. அந்த கட்டமைப்பு உடையாதவரை சாலையில் இடுப்பு தெரியும் ஆன்டிகளை பார்த்தும், லெக்கின்ஸ், டீசர்ட் அணிந்த யுவாதிகளை பார்த்து இப்படியொல்லாம் ட்ரஸ் போடுவதால்தான் நாடு கெட்டுவிட்டது, நாட்டில் ரேப் நடக்கிறது என்பார்கள். இவர்களிடம் சமூகத்தை திருத்துகிறேன் என்கிற பெயரில் ஒருப்பெண் நிர்வாணத்தை வெளிப்படுத்தினால் எதிர்க்கத்தான் செய்வார்கள்.

கலவி விவகாரத்தில் இந்தியர்கள் கடக்க வேண்டிய தூரம் பல்லாயிரம் கிலோ மீட்டர். அதை நோக்கி நடைபோடும்போது பலப்பல தடைகள் வரத்தான் செய்யும். அவற்றை சமூகம் நெருங்கும்போது நிர்வாண படங்களை மட்டும்மல்ல நிர்வாணமாக பெண்களை பார்த்தாலும் இவ்ளோதானா என நாம் கடக்க துவங்கியிருப்போம்.

திங்கள், மே 09, 2022

சங்கரமடம் போல் அரசியல் செய்ய ஆசைப்படும் ஆதினங்கள்.

 

ஆதினங்கள் சைவ சித்தாந்தத்தையும், தமிழை வளர்க்கவும் உருவானது. சைவ சிந்தாந்தம் என்பது சாதி மறுப்புக்கொண்டது, சைவ கடவுள்களை வணங்குவது, தமிழ் மொழியை, தமிழ் மரபை வளர்ப்பது. காலப்போக்கில் சில ஆதினங்கள் சமஸ்கிருதத்தை ஏற்றன, சாதி வளையத்துக்குள் சிக்கிக்கொண்டன.

தமிழ்நாட்டில் திருவாவடுதுறை ஆதினம், மதுரை ஆதினம், தருமபுர ஆதினம், போரூர் ஆதினம், குன்றக்குடி ஆதினம், திருப்பாள் ஆதினம், வேளாக்குறிச்சி ஆதினம் என சைவ, வைணவ, சக்தி என்கிற பெயரில் 45 ஆதினங்கள் உள்ளன என்கிறது இந்து சமய அறநிலையத்துறை.

ஆதினங்களின் தலைமை பதவியான குருசந்நிதானம் எனப்படும் ஆதினக்கர்த்தாக்கள் எனப்படுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பட்டினபிரவேசம் என்கிற நிகழ்வை நடத்துவார்கள்.

பட்டின பிரவேசம் என்றால் என்ன?

ஆதினகர்தாவாக பதவியில் அமர்ந்துயிருக்கும் குருசந்நிதானம் என்பவர் பிறந்த நட்சத்திர நாளில், ஆதினத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நகர்வலம் வருவார். வெளிப்படையாக சொல்வதுயென்றால் நானே கடவுள் என்பதே அது. ஆதின மடத்துக்கும், கோயிலுக்குள் வரமுடியாத மக்களுக்கு குருசந்நிதானம் வீதிகளில் வலம் வரும்போது தரிசனம் செய்துக்கொள்ளலாம், பூஜை செய்யலாம். அதேபோல் ஆதின சொத்துக்களை பராமரிப்பவர்கள், குத்தகையாளர்கள், ஆதினத்துக்கு சொந்தமான நிலங்களில் பயிர் செய்பவர்கள் கட்டணத்தை இந்நாளில் வழங்குவார்கள் இதுதான் பட்டிணபிரவேசம் என்பது. சைவ ஆதினங்களில் ஆண்டுதோறும் இந்த நிகழ்வு நடந்துவருகிறது.

தமிழ்நாட்டில் திருவாவடுதுறை ஆதினத்தில் மனிதர்கள் சுமக்கும் பட்டிணபிரவேசம் நிகழ்வு நடந்துவருகிறது. மதுரை ஆதினம், குன்றக்குடி ஆதினம் பட்டிணபிரவேசம் நடத்துவதில்லை. கோவை பேரூர் ஆதினம் வாகனம் வழியாக பட்டிணபிரவேசம் நடத்துகிறார். தருமபுர ஆதினத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே பட்டிணபிரவேசம் என்கிற நிகழ்வு நிறுத்தப்பட்டுவிட்டது. ஆதினகர்த்தாவாக மாசிலாமணி தம்பிரான் சில ஆண்டுகளுக்கு முன்பு பதவிக்கு வந்ததும் 2019ல் பட்டிணபிரவேசம் நடத்த முடிவு செய்தார். திராவிடர் கழகத்தின் எதிர்ப்பால் பல்லக்கை மனிதர்கள் சுமப்பதை நிறுத்திக்கொண்டார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அவரேதான் பட்டிணபிரவேசம் 2022 மே மாதம் மீண்டும் நடக்கும் என அறிவித்தார்.

 

எதிர்ப்பு ஏன்?

பட்டிணபிரவேசம் நடப்பதை யாரும் தடுக்கவில்லை. குருசந்நிதானம் எனப்படுபவர் அமர்ந்துக்கொள்ளும் பல்லக்கை பக்தர்கள் என்கிற பெயரில் தோளில் அந்த பல்லக்கை தூக்கிச்செல்வர். அந்தக்காலத்தில் ஆதினங்களின் கட்டுப்பாட்டிலிருந்த விவசாய கூலி அடிமைகள் பல்லக்கை தூக்கி சுமந்தனர். குருசந்நிதானம் என்பவர் பல்லக்கில் கால்நீட்டி படுத்துக்கொள்ள ஆதினங்களின் அடிமைகள் பலப்பல கிலோ மீட்டர்கள் சுமந்து செல்வார்கள்.

பட்டிணபிரவேசம் என்கிற பெயரில் பல்லக்கில் ஒருமனிதன் அமர்ந்துக்கொள்ள வேறு சிலமனிதர்கள் சுமந்து செல்வதைத்தான் திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவு இயக்கங்கள் எதிர்கின்றன.

பட்டினபிரவேசம் என்பது காலம்காலமாக கடைபிடித்துவரும் மரபு என்கிறார்கள் ஆதினங்களும், அவர்களை சார்ந்தவர்களும். அந்தக்காலத்தில் நீண்ட தூர பயணத்துக்கு மாட்டுவண்டிகள், குதிரை வண்டிகளை அரசர்கள், அமைச்சர்கள், ஆதினங்கள் பயன்படுத்தினார்கள், குறைந்த தூரத்துக்கு மனிதர்கள் தூக்கும் பல்லக்குகளை பயன்படுத்தினார்கள். காலப்போக்கில் வாகனங்கள் வரவுக்கு பின்னர் பல்லக்கு பயணம் என்பது மாறி, லக்ஸரி வாகனமான ஆடி கார், விமான பயணம் என வலம் வலம்வருகிறார்கள். கணக்குகள் எழுத கம்யூட்டரையும், பேசுவதற்கு ஐபோன்களை பயன்படுத்துகிறார்கள். மரபுகளை உடைத்து ஆதினகர்த்தாக்களே  மாற்றங்களை ஏற்றுக்கொண்டனர். ஆனால் மனிதர்களை மனிதர்கள் சுமக்கும் பல்லக்கை மரபு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும், பக்தர்கள் விருப்பப்பட்டு சுமக்கிறார்கள், பல்லக்கில் நகர்வலம் வருவோம் அதை கைவிடமாட்டோம் பாரம்பரியமானது எனச்சொல்வது எப்படி சரியாகும்?

காஞ்சி சங்கரமட பீடாதிபதியாக சந்திரசேகர் இருந்தபோது, சானாதான ஆச்சாரத்தை தீவிரமாக கடைப்பிடிப்பார். பிரதமர் இந்திராகாந்தியை நேருக்கு நேராக சந்திக்க மறுத்தவர் சந்திரசேகரர். அதற்கு காரணம் அவர் விதவை என்பதால் பார்த்தால் தீட்டு என இருவருக்கு இடையில் சேலையையும், பசுமாட்டையும் கட்டிவைத்து சந்தித்தார். கார்கள் புழக்கத்துக்கு வந்தபின்பும் ஆச்சாரம் என பல்லக்கிலே செல்வதை வழக்கமாக கொண்டுயிருந்தார். தந்தைபெரியார் அவர்கள் ஒரு பகுத்தறிவு பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது, சந்திரசேகர் அமர்ந்துயிருந்த பல்லக்கை மனிதன் சுமந்து செல்வதைப்பார்த்த பெரியார், இந்த அவலம் இன்னும் எத்தனை காலத்துக்கு என அதேமேடையில் கோபமாக கேள்வி எழுப்பிகார். அதைக்கேட்ட சங்கராச்சாரி சந்திரசேகர் பல்லக்கை உடனே கைவிட்டு வாகனத்தை பயன்படுத்த துவங்கினார்.

குன்றக்குடி ஆதினத்தின் குருசந்நிதானமாக வருபவர்கள் பல்லக்கை கைவிட்டுள்ளனர், பல ஆதினங்கள் அப்படி செய்துள்ளனர். சில ஆதினங்கள் மட்டும் தொடர்ந்து பட்டினபிரவேசம் என்கிற பெயரில் மனிதன் தூக்கும் பல்லக்கை பயன்படுத்திவருவதைத்தான் எதிர்க்கிறார்கள். அரசாங்கம் தடை விதிக்கப்பட்டதை கண்டித்து பாஜக, அதிமுக, பாமக உட்பட இந்துத்துவா சக்திகள் அதை வைத்து அரசியல் செய்தன.

 

அரசின் உத்தரவு மாறியது ஏன் ?

தருமபுர ஆதினத்தின் பட்டிண பிரவேசம் நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி நீக்கியுள்ளது மாவட்ட நிர்வாகம். இது திராவிட பற்றாளர்கள், பகுத்தறிவாதிகள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது அதிருப்தியை உருவாக்கியுள்ளது. திமுக பற்றாளர்கள், ஆதரவாளர்கள் ஏன் திமுக உறுப்பினர்களை கூட அதிர்ச்சியடைய செய்துள்ளது. பொதுமக்கள் மத்தியிலும் அரசின் பின்வாங்கல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவுக்கு என கொள்கைகள் உள்ளன. அந்த கொள்கைகளை மக்கள் மத்தியில் பேசுகின்றனர், மக்களும் அதை ஏற்றுதான் அவர்களுக்கு வாக்களிக்கிறார்கள், அந்த கொள்கையை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள், ஆனால் திமுகவுக்கு வாக்களித்தவர்களும் இருக்கிறார்கள். ஆட்சி நிர்வாகம் என்பது அனைவருக்குமானது. சட்டம்மே மதசார்பற்ற அரசு என்றே சொல்கிறது. வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என பாகுபாடு பார்க்காமல் அனைவரின் கருத்துக்கு ஏற்பத்தான் அரசாங்கம் செயல்படமுடியும்.

மனிதனை மனிதன் சுமப்பது என்பது மனித உரிமைகள் சட்டம் தவறு என்கிறது. அதனை சுட்டிக்காட்டித்தான் பகுத்தறிவு இயக்கங்கள் பல்லக்கு தூக்குவதை  தடுக்கவேண்டும் என போராடுகின்றன. மனித உரிமையை ஆன்மீக மரபு எனச்சொல்லி அது அரசியலாக்கப்பட்டு, திசை திருப்பப்பட்டுள்ளன. ஆதினங்கள் அந்த அரசியலுக்கு பலியாகியுள்ளனர் அல்லது அவர்களே அரசியல் செய்கிறார்கள்.

இந்த அரசியலை தணிக்கவே அரசின் உத்தரவு மாறியுள்ளது, தடையை நீக்கியுள்ளது. இல்லையேல் இந்த பிரச்சனையை வைத்து தமிழ்நாட்டில் மத அரசியலை செய்ய பாரதிய ஜனதா உட்பட இந்துத்துவா சக்திகள் தயாராகவுள்ளன. இந்துத்துவா கொள்கைவாதியான கவர்னர் ரவி, சிறுபான்மை இயக்கங்கள் மீது வேட்டைநாய் போல் பாய்கிறார்.  

ஆதினங்கள் கவனிக்க வேண்டியது.

தமிழ்நாட்டில் கடவுளை வணங்கும மக்களுக்கு பகுத்தறிவு அதிகம். வடநாட்டைப்போல் கோமியத்தை பிடித்து தீர்த்தம் குடியென்றால் இங்கே யாரும் குடிக்கமாட்டார்கள். பிணங்கள் மிதக்கும் ஆற்றில் குளித்தால் பாவம் போகும் எனச்சொன்னால் சொல்பவனை எட்டி உதைப்பார்கள். ரமலான் பண்டிகையன்று இஸ்லாமிய நண்பனோடு சேர்ந்து பிரியாணி சாப்பிடும் இந்து சகோதரனும், பொங்கல் பண்டிகையன்று கிருஸ்த்துவ நண்பனோடு சேர்ந்த கேக் வெட்டி கொண்டாடும் சமத்துவம் இங்கே அதிகம் என்பது ஆதினங்களுக்கு நன்றாக தெரியும். வடஇந்தியாவைப்போல் மாற்று மதத்தினருக்கு எதிராக வெட்டு குத்து என இறங்கும் இந்துத்துவா வெறிக்கொண்ட சமூகம் தமிழ் சமூகம்மல்ல.  

சாமியார்களை ஓடஓட விரட்டும் ஆட்சியாளர்களும், இயக்கங்களும் இங்கில்லை. ராமன் எங்கே இன்ஜினியரிங் படித்தார்? ராமன் ஒரு திருடன் என கடவுளை பகிரங்கமாக விமர்சித்த நாத்திகர், பெரியாரின் தொண்டர் கலைஞர் ஆட்சியில் இருந்தபோதுக்கூட ஆதினங்களை அடக்கவோ, அப்புறப்படுத்தவோ நினைக்கவில்லை. ஆதினங்களின் வளர்ச்சிக்கே துணை நின்றார். இதையெல்லாம் மறந்து தருமபுர ஆதினம், பாஜகவுக்கு ஆதரவாக தமிழகத்தில் வேலை செய்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது. எப்போதே நிறுத்தப்பட்ட பட்டிணபிரவேசத்தை மீண்டும் தொடங்க முயல்வதும், கவர்னர் ரவியை மடத்துக்கு அழைத்துவந்து அரசியல் பேசுவதும், மதுரை ஆதினம் என் உயிருக்கு ஆபத்து நான் உள்துறை அமைச்சரிடம் முறையிடுவேன் எனச்சொல்வதின் பின்னால் ஆன்மீக அரசியல் உள்ளதோ எனத்தோன்றுகிறது.

ஆதினங்கள் அரசியலில் ஈடுப்படுவதையும், அரசியல் செய்வதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர்களுக்கான சைவ சமய பணியையும், தமிழ் வளர்ச்சி பணியையும் செய்ய வேண்டும். சங்கரமடம் பிராமணீயம் போல் அரசியல் செய்ய நினைத்தால், தமிழ் மக்களின் கோபம் இளையராஜாவை தாக்கியதுப்போல், நேரடியாகவே உங்களை தாக்கும். உங்களுக்காக இன்று குரல் கொடுக்கும் சோடாபாட்டில் ஜீயர், பாஜக யாரும் அப்போது வரமாட்டார்கள் என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள்.

அரசு செய்ய வேண்டியது?

குழந்தை விவாகம், பெண்கள் உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை போன்றவற்றை ஒழிக்க மதவெறிக்கொண்ட பிற்போக்குவாதிகளை எதிர்த்து பல தலைவர்கள் போராடியே வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பிடித்தார்கள்.

கடவுளின் பெயரால், ஆன்மீக நம்பிக்கை, சமய மரபு, பாரம்பரியம் என்கிற பெயரில் மனிதனை மனிதன் சுமக்கும் மக்களுக்கு விரோதமான சமய விவகாரங்களில் பின்வாங்காமல் பக்குவமாக செயல்பட்டு காலத்துக்கு ஏற்றாற்போல் ஆன்மீகவாதிகளின் பழக்கவழக்களை மாற்றிக்கொள்ள செய்யவேண்டும், இல்லையேல் கடுமையான முறையில் அவர்களை வழிக்கு கொண்டுவரவேண்டும்.

அதுவே பெரியாரின், அண்ணாவின், கலைஞரின் கொள்கை வாரிசுகள் செய்ய வேண்டியது.  


திங்கள், ஏப்ரல் 18, 2022

நெற்றியில் நாமத்தை போடு ஐ.ஏ.எஸ்ஸாக வாய்ப்புண்டு.

 


பாப்பா படிச்சிட்டு என்னவாகப்போற?

கலெக்டர்.

தம்பி உனக்கு என்னவாக ஆசை?

போலிஸ் அதிகாரி.

தமிழ்நாடு மட்டும்மல்ல இந்தியாவின் எந்த பகுதியில் உள்ள அரசுப்பள்ளியோ, தனியார் பள்ளியில் 12வது தேர்வு எழுதிவிட்டு வெளியே வரும் பிள்ளைகளிடம் கேட்டால் மேற்கண்டதைத்தான் சொல்வார்கள். இப்படி சொல்லிய பிள்ளைகள் இனி கடினமாக படித்து தேர்வு எழுதினாலும் அவர்கள் கனவு கானும் அதிகாரியாக வரமுடியுமா என்பது கேள்வி குறியாகியுள்ளது.

ஒன்றியரசின் சிவில் சர்விஸ் அதாவது நிர்வாக பணிகளுக்கு செல்லவேண்டும்மென்றால் குரூப் 1 தேர்வுகளை எழுதவேண்டும். இந்த தேர்வை UPSC ( Union Public Service Commission ) என்கிற அமைப்புதான் அதற்கான தேர்வுகளை நடத்துகிறது. இந்த அமைப்பு தன்னிச்சையான அமைப்பு, அதாவது தேர்தல் ஆணையம் போல் என வைத்துக்கொள்ளுங்கள். இதற்கான தலைவரை ஒன்றியரசின் பரிந்துரைப்படி குடியரசுத்தலைவர் நியமிப்பார்.

இந்தியாவை ஆள்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எனச்சொல்லிக்கொண்டாலும் உண்மையில் அதிகாரம் கொண்டவர்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் இவர்கள்தான். இந்தியாவை ஆட்சி செய்பவர்கள் என்பதால் சிவில் சர்விஸ் தேர்வு என்பது மிககடுமையான தேர்வாக இருக்கும். ஆண்டுதோறும் பலலட்சம் இளைஞர்கள் கனவுகளோடு இந்ததேர்வை எழுதுகின்றனர். இதற்காக பலஆண்டுகளாக தேர்வு எழுதி தோற்றவர்களும் உண்டு, முதல் தேர்விலேயே தேர்ச்சி பெற்றவர்களும் உண்டு.

கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி யூ.பி.எஸ்.சி சேர்மனாக மனோஜ்சோனி என்பவரை நியமித்துள்ளது ஒன்றியத்தை ஆளும் மோடி அரசு. இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த மனோஜ்சோனி?

மும்பையில் சுவாமி நாராயணன் என்கிற சாமியாரின் அனுபாம் மிஷன் என்கிற அமைப்பில் மனோஜ் தந்தை இணைந்து சேவை செய்துவந்துள்ளார். இவருக்கு 5 வயதாகும்போதே அவர் தந்தை இறந்துவிட்டதால் மனோஜ்கான கல்வி உதவியை அந்த அமைப்பே ஏற்றுக்கொண்டது, அதன் சேவகராக இணைந்துள்ளார். பட்டப்படிப்பு அரசியல் அறிவியல் படித்துள்ளார். படித்து முடித்தும் பேராசிரியராக பணியில் சேர்ந்துள்ளார். வதோராவில் உள்ள மகாராஜா சயாஜீரோ பல்கலைக்கழகத்தில் 40 வயதில் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு பணியாற்றி ஓய்வு பெற்றவர். சர்ச்சை அதுவல்ல.

ஆர்.எஸ்.எஸ் ஊழியர், சிறுவயது முதலே அந்த இயக்கத்தில் இணைந்து மதப்பணிகள் செய்துவந்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு மருத்துவராக இருந்துக்கொண்டு பாஜகவின் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்தாரே, எதிர்வீட்டு வாசலில் மூத்திரம் பெய்த வழக்கில் கைது செய்யப்பட்டாரே டாக்டர் சுப்பையா அவரைப்போலவே இவரும் பேராசிரியாக இருந்துக்கொண்டு பாஜகவுக்கு வெளிப்படையாக வேலை செய்துவந்துள்ளார். மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அவர் என்ன பேசவேண்டும், எதைப்பேசவேண்டும் எனச்சொல்லி தந்தவர், எழுதி தந்தவர் சாட்சாத் மனோஜ்சோனி.

குஜராத் கலவரத்துக்கு ஆதரவாக பேசியும், எழுதியும் வந்தவர். குஜராத் கலவரத்தில் முதலமைச்சர் மோடியின் செயலை புகழ்ந்து புத்தகம் எழுதியுள்ளாராம். 2020 ஆம் ஆண்டு நிஷ்கர்ம கர்மயோகி அதாவது துறவி என அறிவித்துக்கொண்டுள்ளார். அவரைத்தான் யூ.பி.எஸ்.சி அமைப்பின் தலைவராக நியமித்துள்ளனர். 2023 ஜீன் வரை அவரது பதவிக்காலம் உள்ளது.

பெரும்பாலும் அந்த பதவியில் சிவில் சர்விஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களையே நியமிப்பது வழக்கம். இந்நிலையில் இந்தியாவை வழிநடத்தப்போகும் சிவிஸ் சர்விஸ் அதிகாரிகளை உருவாக்கும் அமைப்புக்கு துறவி என அறிவித்துக்கொண்டவரை தலைவராக்கியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்சின் மறைமுக துணையுடன் சங்கல்ப் என்கிற அமைப்பு நாடு முழுவதும் குறிப்பாக வடமாநிலங்களின் முக்கிய நகரங்களில் சிவில் சர்விஸ்க்கான பயிற்சி மையங்களை நடத்திவருகிறது. இந்த பயிற்சி மையத்தில் படித்து சிவில் சர்விஸ் தேர்வு எழுதுபவர்கள், எழுத்து தேர்வில் தேவையான மதிப்பெண் எடுக்கவில்லையென்றாலும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்ச்சி பெற்றதாக தேர்வு செய்யப்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு உண்டு. கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது தொண்டர்களுக்கு பயிற்சியளித்து அரசு துறைகளில் அவர்களை ஊடுருவச் செய்துள்ளது. இதுவரை 4000 தொண்டர்கள் அரசு அதிகாரியாக நாடு முழுவதும் பணியாற்றி வருகின்றனர். அரசு நிர்வாகத்தின் மீது வெளிப்படையாக முன்னாள் முதல்வர் வைத்த குற்றச்சாட்டை இதுவரை விசாரிக்கப்படவேயில்லை. அந்த சங்கல்ப் பயிற்சி மையத்தில் படித்து தேர்வு எழுதி ஐ.பி.எஸ் அதிகாரியாக கர்நாடகாவில் பணியாற்றியவர், ஆடு வளர்க்கப்போகிறேன் எனச்சொல்லிவிட்டு வந்தவர்தான் தற்போதைய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை.

பல்கலைக்கழகங்களில் மதவாதிகளை துணைவேந்தராக நியமித்தார்கள் இப்போது அரசு பணிகளுக்கான துறையில் வெளிப்படையாக நுழைந்துள்ளார்கள். இனி கண் விழித்து படிக்க தேவையில்லை, ஆண்டுக்கணக்கில் செலவு செய்து பயிற்சி வகுப்புகளுக்கு போகதேவையில்லை. 10 சதவித பொருளாதார இடஒதுக்கீடு பெற்ற சாதியாகவோ, அவாக்களின் அனுக்கிரகம் பெற்றவர்களாகவோ, நெற்றியில் திருநீறு பட்டை அல்லது நாமம், கழுத்தில் உத்திராட்சக்கொட்டை, கண்டிப்பாக காவி உடை அணிந்துக்கொண்டுபோய் நேர்முகத்தேர்வில், பாரத் மாதாகீ ஜே, ஜெய் அனுமான், ராமர் நமது கடவுள், மனுசாஸ்திரம்மே நமது சட்டப்புத்தகம் என சொன்னால் நேர்முகத்தேர்வில் 100 மதிப்பெண் தந்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஸாக்கிவிடுவார்கள்.


டீ தான் குடிச்சிங்களா சார்? ஏன் இப்படி பேசறிங்க?

 

மக்களாள் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களால் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் உட்பட 19 மசோதாக்களில் கையெழுத்திடாமலும், ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டிய மசோதாக்களை அனுப்பாமலும் தன்னிடம்மே வைத்துக்கொண்டு சட்டவிதிகளை மீறிக்கொண்டு இருக்கிறார் தமிழ்நாட்டின் கவர்னரான ரவி.

கவர்னர் மாளிகையில் வழங்கப்பட்ட டீ பார்டிக்கு தமிழக முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், திமுக உட்பட அனைத்து கட்சியினருக்கும் கவர்னர் அழைப்பு விடுத்துயிருந்தார். முதல்வர், திமுக, இடதுசாரிகள், விசிக, மமக போன்ற கட்சிகள் மக்களாச்சியை மதிக்காத கவர்னரின் டீ பார்டியை புறக்கணிக்கிறோம் எனச்சொல்லி புறக்கணித்துவிட்டார்கள்.

கவர்னர் வீட்டு காவல்காரர்களான ஓசியில் சோறு போடுகிறார்கள் என்றதும் ஓடிப்போய் முதல் பந்தியில் அமரும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உட்பட அதன் தலைவர்கள், பாஜகவின் கொத்தடிமைகளான அதிமுக, பாமக நிர்வாகிகளும் கலந்துக்கொண்டு டீ குடித்துவிட்டு கும்மாளம்மிட்டுவிட்டு வந்துள்ளார்கள்.

டீ குடிச்சாரோ அல்லது வேறு ஏதாவது குடிச்சாரா எனத்தெரியவில்லை. அண்ணாமலை. டீ செலவு மிச்சம் என உளறியுள்ளார். நாடுயிருக்கும் நிலைக்கு சுயமரியாதையுடன் டீ பார்டியில் கலந்துக்கொள்ளாமல் செலவை குறைத்துள்ளனர் ஆளும்கட்சியினரும், அதன் கூட்டணி கட்சியினரும். ஆனால் பாஜக அண்ணாமலை வாரம் இரண்டுமுறை கவர்னர் மாளிகைக்கு சென்று விருந்து சாப்பிட்டுவிட்டு வருகிறார்.

அண்ணாமலைக்கு தெரியாததில்லை. கவர்னர் அவர் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து டீ க்கோ, உங்கள் விருந்துக்கோ பணம் தரவில்லை. தமிழ்நாட்டு மக்களின் பணம். அவன் கட்டிய வரியில் இருந்து சம்பளம் வாங்குபவரே கவர்னர். தமிழ்நாட்டு மக்களின் பணத்தில் ஓசியில் டீ குடித்தும், விருந்து சாப்பிட்டுவிட்டு நக்கல் பேச்சு பேசியுள்ளார் அண்ணாமலை.

டீ பார்டியை முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணித்ததும், கவர்னர் தரவேண்டிய மரியாதையை தரவில்லை என கூச்சல் போடுகிறார்கள் பாஜக சங்கிகளும், அதன் எடுபிடிகளும்.

கவர்னர் பதவிக்கான மரியாதை தமிழ்நாட்டில் போய் பல ஆண்டுகளாகிவிட்டது.

தள்ளாடும் வயதில் பதவி வெறிக்கொண்ட அரசியல்வாதிகளுக்கும், உட்கட்சி போட்டியால் அரசியலில் இருந்து ஒதுக்கவேண்டியவர்களுக்கும், நீதித்துறையில், காவல்துறையில் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருந்தவர்களுக்கு தரப்படுவதாக கவர்னர் பதவி மாறிவிட்டது.  

கேரளா ஐ.பி.எஸ் கேடர் அதிகாரி மத்தியரசு பணியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ரவி க்கு கவர்னர் பதவி பாஜகவால் தரப்பட்டது என்றால் அவர் கடந்தகாலத்தில் அந்த கட்சிக்கு எவ்வளவு விசுவாசமாக இருந்துயிருப்பார் என்பதை யூகித்துக்கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த சுந்தர்லால் குரானா, பீஷ்மநாராயணன்சிங், சென்னாரெட்டி, பாத்திமாபீவி, வித்தியாசாகர் ராவ், புரோகித் போன்றவர்கள் அந்த பதவிக்கான மாண்மை நாசமாக்கிவிட்டு போய்விட்டார்கள். ஒன்றிய அரசின் ஏஜென்ட்டுக்கு எதற்கு இவ்வளவு மரியாதை தரவேண்டும் என்கிற கேள்வியை ஏறத்தாழ இப்போது எல்லா மாநிலத்தை ஆளும் மாநிலகட்சிகளும் கேட்கத்துவங்கிவிட்டன.

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, வெளிநாட்டு சிகிச்சைக்கு அனுமதி பெற நடிகைகளை அனுப்பி அனுமதி பெற்றார்கள் என்கிற விமர்சனம் உண்டு. அதேவழியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பக்கத்துக்கு மாநில நடிகை கம் அரசியல்வாதியை அனுப்பி குறிப்பிட்டவருக்கு அனுப்பி சந்தோஷப்படுத்தினார்கள் என்பவர்களும் உண்டு.

2002ல் முதல்வர் பதவி ஏற்க முடியாத ஜெயலலிதாவை சட்டவிதிகளை மீறி முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைத்தார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த கவர்னர் பாத்திமாபீவி.

2011ல் ஆந்திரா அரசியல்வாதியான காங்கிரஸ்காரர் ரோசய்யா கவர்னராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா முதல்வரானதும் அவரின் அடிமையாகவே மாறினார். 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தபின்பு பலமாநில கவர்னர்கள் மாற்றப்பட்டபோதும் தமிழ்நாடு கவர்னர் ரோசய்யாவை 2016 வரை மாற்றவில்லை.

2016ல் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா படுத்தபடுக்கையாக இருந்தபோது கவர்னர் வித்தியாசாகர்ராவ், முதலமைச்சர் மர்மமான முறையில் தனியார் மருத்துவமனையில் அட்மிட்டாகிறார். கவர்னர் சட்டவிதிகளின்படி பணிகளை செய்யாமல் சட்டவிதிகளை காற்றில் பறக்கவிட்டதால்தான் இப்போதும் ஜெயலலிதா மரணத்தின் மர்மம் வெளிவராமலே உள்ளது. அதேநபர் அதிமுக உடைந்து எடப்பாடி அணி – ஓ.பி.எஸ் அணி இரண்டாக செயல்பட்டபோது, இருவரையும் பொதுமேடையிலேயே இருவரும் ஒன்றாக இருங்கள் என ஆலமரத்தடி பஞ்சாயத்து செய்தவர்தான் கவர்னர்.

அதன்பின் கவர்னராக வந்த பன்வாரிலால், பாஜகவின் அடிமைகளாக இருந்த அதிமுக மற்றும் எடப்பாடியை நம்பாமல் கவர்னர் மாளிகை ஆட்சி செய்ய துவங்கியதையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். அதிமுகவின் உட்கட்சி சண்டையில் பஞ்சாயத்து செய்தபடி இருந்தார்கள்.

கவர்னருக்கான மாண்பை மறந்துவிட்டு, அரசியல் செய்து தமிழ்நாட்டில் விமர்சனத்துக்கு ஆளான கவர்னர்கள் இவர்கள்.

திமுக ஆட்சி அமைந்து ஸ்டாலின் முதல்வரானதும், தமிழகத்தில் தங்களது ஆட்சியை நடத்த பாஜக முடிவு செய்தே ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான ஆர்.எஸ்.எஸ் அடிமையும், சாதிய பாசம் அதிகம் கொண்ட ரவியை தமிழ்நாடு கவர்னராக்கியது. போலிஸ் மூளை தமிழக முதலமைச்சரை அடக்கி ஆளும் என்கிற பாஜக, ஆர்.எஸ்.எஸ் நம்பிக்கையில் அனுப்பிவைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் என அவர்மீது நாம் குற்றச்சாட்டு வைக்ககாரணம் அவரின் செயல்பாடுகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தப்படியே உள்ளன.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, ஊழல் ராணியாக வலம்வந்தவர் மீது சு.சாமி தந்த புகார்களின் அடிப்படையில் ஊழல் வழக்கு தொடுக்க அனுமதியளிக்க முயன்றார் கவர்னர் சென்னாரெட்டி. அடுத்த சிலநாட்களில் கவர்னர் என்னிடம் தவறாக நடந்துக்கொள்ள முயன்றார் என அப்போதே மீ டூ புகாரை எழுப்பி அவரது இமேஜ்ஜை காலி செய்தார். தமிழகத்தில் போகும்மிடங்களில் எல்லாம் அதிமுகவினரால் கவர்னர் அவமானப்படுத்தப்பட்டார்.

2018களில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பதவியில் இருந்த எடப்பாடிக்கு போட்டியாக தனிஆட்சி நடத்த முயன்று தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது நிர்மலாதேவி என்கிற பேராசிரியரை கொண்டு அவரை முடக்கினார்கள்.

அப்படிப்பட்ட முதல்வராக ஸ்டாலின் இல்லாமல் கவர்னருக்கு உரிய மரியாதையை தருபவராக, சட்டவிதிகளை மதிப்பவரால் இருப்பதால் முதலமைச்சரும், திமுகவினரும், தமிழ்நாட்டு மக்களும் மொக்கை என நினைத்துக்கொண்டு இருக்கிறார்போல.

ஒன்றியத்தில் பிரதமர் மோடியின் அதிகாரம் இருக்கும்வரைதான் இவர்களின் ஆட்டம்மெல்லாம். அதிகாரத்திலிருந்து பாஜக என்கிற கட்சி விரட்டப்படும்போது, பதவியின் மாண்பை மறந்து சவார்கர் பரம்பரையாக மாறிவிடுவார்கள்.

வெள்ளி, ஏப்ரல் 15, 2022

புயலுக்கு எதிராக சங்கிகளுக்காக களம்மிறங்கியுள்ள ஞானி.


 

இளையராஜா இசைஞானியாக இருக்கலாம், அவர் அங்கீகாரத்துக்காகவே சங்கியாக மாறியவர். இந்திய அரசாங்கத்தின் அதாவது இந்தியாவை மறைமுகமாக இயக்கும் அவாக்களின் அங்கீகாரம் வேண்டும் என விரும்பி சங்கி அவதாரம் எடுத்தவர், பின்பு ஆன்மீகவாதியாகிப்போனார். உலக அழகிகள் நிகழ்வுக்காக இசை அமைத்த இதே இளையராஜாதான், நாத்திகவாதி குறித்த படத்துக்கு திசையமைக்கமாட்டேன் எனச்சொல்லி தந்தைபெரியார் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படத்துக்கு இசையமைக்க மறுத்தார்.

ஒரு கலைஞன் தான் செய்யும் தொழிலில் சாதி, மதம் பார்க்கமாட்டான். திரைப்படத்துறை என்பது கூட்டு முயற்சியே. இளையராஜா, பெரியார் படத்திற்கு இசையமைக்க மறுத்ததற்கு காரணம், பெரியார் வெறுப்பாளர்களான, அந்த பெயரை கேட்டாலே உடல் முழுக்க எரியும் பார்ப்பனர்களுக்கு, பார்ப்பீனியத்துக்கு பிடிக்காது என்பதற்காகவே இசையமைக்க மறுத்தார்.

ரமணரின் தீவிர பக்தரான இளையராஜா, எனக்கு தெரிந்து கடந்த 30 ஆண்டுகளாக மாதம்தோறும் திருவண்ணாமலை வருபவர் ரமனாஸ்ரமத்தில் தான் தங்குகிறார். ரமணமாலை என்கிற பெயரில் தனி இசைஆல்பம் தயாரித்து, இசையமைத்து  வெளியிட்டவர், தமிழர்கள், திராவிடர்கள் மத்தியில் பெரும் புகழ்பெற்றவர் இங்கு கூஜாவாகவே நடத்தப்படுகிறார். இதை உலகம் முழுவதும்முள்ள ராஜாவின் பக்தர்கள் நம்பமாட்டார்கள், ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், ஆனால் அதுதான் நிஜம்.

காரணம் அவரின் சாதி.

ரமணர் ஆரிய பார்ப்பனர். ரமணாஸ்ரமத்தை ரமணரால் வாரிசாக நியமிக்கப்பட்ட அவரது குடும்ப உறவுதான் நடத்துகிறார். ரமணாஸ்ரமத்தை எல்லோரும் சாதாரண ஆஸ்ரமம் எனநினைக்கிறார்கள். இல்லை, அது பிறசாதி சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சாதிய மையம். இங்கு அங்கீகரம் பெற்றாள் உலகம் முழுவதும் அவாக்கள் ஏற்றுக்கொண்டு அங்கீகரிப்பார்கள். காஞ்சி சங்கரமடத்தின் வேலையை வெளியே தெரியாமல் நீண்ட ஆண்டுகளாக செய்துவருகிறது ரமணர் ஆஸ்ரமம்.

அந்த ரமணாஸ்ரமம் தான் ஓடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட பஞ்ஜமான் என ஆரியர்களால் முத்திரை குத்தப்பட்ட சாதியில் பிறந்தவர் என்பதாலே இளையராஜாவை இன்னும் முழுவதுமாக அங்கீகரிக்கவில்லை. இந்த ஆரியக்கூட்டத்தின் முழுஅங்கீகாரத்துக்காக யார் காலையும் பிடிப்பேன் என்பது போலவே நடந்துக்கொள்கிறார். இளையராஜா.

உலகம் முழுவதும் அறிந்த ஆஸ்கார் விருது பெற்ற இசைப்புயல் என கொண்டாடப்படும் ஏ.ஆர்.ரஹ்மான், தன் செயல்கள் வழியாக, கருத்துக்கள் வழியாக சங்கி கும்பலை கதறவிடுகிறார். மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழர்கள் பக்கம் நிற்கிறார். இதை பொருத்துக்கொள்ள முடியாத சங்கி கும்பல் இசைஞாணி இளையராஜாவை பேசவைக்கிறது.

தனது தொழில் போட்டியாளரான, எங்கிட்ட கிடார் வாசிச்ச பையன் என நக்கலடித்த ஏ.ஆர்.ரஹ்மானை வெறுக்கும் இளையராஜா, ரஹ்மானின் சமூகநிலைக்கு எதிர்நிலை எடுத்துள்ளார். தான் விரும்பியது நடக்க தனக்கான அங்கீகாரம் அவாக்களிடம் வேண்டும் என்பதற்காக தமிழக, தென்னிந்திய மக்களால் வெறுக்கப்படும் பிரதமர் மோடியை போற்றி புகழ்கிறார். அதுவும் எப்படி புகழ்கிறார், பெருந்தலைவரான அம்பேத்காருடன் ஒப்பிட்டு புகழ்ந்துள்ளார். மோடி பிரதமர் என்பதற்காக யாரை யாருடன் ஒப்பிடுவது?.

குழந்தைகளுக்காக, இஸ்லாமிய பெண்களுகளின் உரிமைக்காக மோடி செயல்பட்டுள்ளார் என பேசியுள்ளார் இளையராஜா.

அந்த குழந்தைகளை பாதுகாத்து என்ன செய்யப்போகிறார்? 5 ஆம் வகுப்பு படித்து முடிக்கும் முன்பே நுழைவு தேர்வு, பின்பு 8 ஆம் வகுப்பில் நுழைவு தேர்வு, 12 ஆம் வகுப்பு முடித்ததும் கல்லூரியில் சேர நுழைவுத்தேர்வு. இதுதான் மோடியின் குழந்தைகளை காக்கும் லட்சணம்.

இஸ்லாமிய பெண்களை காத்துள்ளாறாம் மோடி?

குஜராத் முதலமைச்சராக இருந்தபோது இஸ்லாமியர்களுக்கு எதிரான மோடியின்  மதக்கொலைகளை செலக்டிவ்அம்னிஷீயாவால் நீங்கள் மறந்துயிருக்கலாம். இந்தவாரம் ராமநவமி ஊர்வலம் என்கிற பெயரில் வடஇந்தியாவில் ஊர்வலம் நடத்திய ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி போன்ற சங் பரிவார கும்பல், இஸ்லாமியர்களின் வியாபார கடைகள், தொழில் நிறுவனங்களை குறிவைத்து அடித்து நொறுக்கி எரித்துள்ளார்கள். இஸ்லாமியர்கள் இந்து பண்டிகை நடக்கும் இடங்களில் வியாபாரம் செய்யக்கூடாது என வெளிப்படையாக கர்நாடகாவில் மிரட்டுகிறது பாஜகவும், இந்துத்துவா அமைப்புகளும். இதற்கு பிரதமர் என்கிற முறையில் நீங்கள் புகழ்ந்த மோடி என்ன சொல்லியுள்ளார்?

இந்தியா குறித்து இருவரும் பெரிய கனவு கண்டார் என்கிறார் இளையராஜா.

அம்பேத்கர் கண்ட கனவு, இந்திய மக்கள் நல்வாழ்க்கை குறித்தும், சமஉரிமை குறித்தும், சாதி, மத ஏற்றத்தாழ்வு இல்லாத இந்தியா குறித்தும், சட்டம் அனைவருக்கும் சமம் என்பது குறித்து கனவு கண்டார்.

மோடி, மதவெறியராக தன்னைக்காட்டிக்கொண்டு முதல்வராக, பிரதமரானவர். 2014ல் இன்று மோடியை வசைப்படும் இந்தியர்களில் பெரும்பான்மையினர் மோடி பிரதமரானால் இந்தியாவில் பெரிய மாற்றம் வரும் என நம்பி வாக்களித்து பதவிக்கு வரவைத்தவர்கள்.

இன்றைய நிலைமையென்ன?

லட்சகணக்கான கோடிகளை பொதுத்துறை வங்கிகள் வழியாக அம்பானி, அதானி, மிட்டல், டாட்டா கும்பல்களுக்கு வாரி வழங்கவைத்து அதனை வராக்கடன் என தள்ளுபடி செய்த அதே மோடி, ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான், சில ஆயிரம் வங்கி கடன்களை ஏழை தொழிலாளி, விவசாயி கட்டவில்லை என்பதற்காக தற்கொலைக்கு தூண்டி தற்கொலை செய்ய வைத்தவர்கள்.

கார்ப்பரேட் வரியை குறைத்தவர்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை தறுமாறாக உயர்த்தி மக்களின் வயிற்றில் அடிக்கிறார். மத ரீதியாக மக்களை பிளக்கிறார், சிறுபான்மையின மக்களை வாழவிடாமல் பயமுறுத்துகிறார்.

அப்படிப்பட்ட மோடியை எப்படி அம்பேத்காருடன் ஒப்பிட முடிந்தது இளையராஜா? பேசியது மட்டும்மல்ல, மோடியும், அம்பேத்கரும் என்கிற தலைப்பு கொண்ட புத்தகத்திற்கு முன்னுரை எழுதியுள்ளாறாம் இளையராஜா. அதன் வெளியிட்டு விழாவில்தான் அம்பேத்காரோடு மோடியை சமப்படுத்தி பேசியுள்ளார். அவரது தம்பி கங்கைஅமரனைப்போல் பாஜகவில் இணைந்துவிட்டு இதனை பேசியிருந்தால் யாரும் இளையராஜாவை விமர்சிக்கபோவதில்லை. இசைஞானி என தமிழகத்தில், தென்னிந்தியாவில் கொண்டாடப்படுபவர், மக்கள் மனநிலைக்கு எதிராக பேசியதால்தான் இந்த விமர்சனம்மே.

வயதானால் …………… புத்தி வந்துவிடும் என கிராமத்தில் சொல்வார்கள், அது அப்படியே இளையராஜாவுக்கு பொருந்துகிறது.