புதன், ஜனவரி 30, 2013

விஸ்வரூபம் - ஜெவின் நரி மூளை.



விஸ்வரூபம் பிரச்சனை நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டு செல்கிறதே தவிர அடங்கியப்பாடில்லை. அதற்கு காரணம், சில இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஜெ அரசு என வெளிப்படையாக குற்றம்சாட்டலாம். விஸ்வரூபத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் உள்ளது என சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து படத்தை தடுப்போம், பிரச்சனை செய்வோம் என்றன. தமிழக உள்துறை செயலாளரிடம் தடை மனு தந்தார்கள். அரசும் தடை விதித்தது. இஸ்லாமிய இயக்கங்கள் மாபெரும் வெற்றி என குதித்தார்கள். தமிழகம் தவிர்த்து பிறயிடங்களில் படம் வெளியானது. 

இஸ்லாமிய இயக்க தலைவர்கள் குறைபட்டுக்கொண்டது போல் இஸ்லாத்தை தாக்கும் காட்சிகள் படத்தில் கிடையாது என தமிழகத்துக்கு வெளியே இருந்து கருத்துகள் வந்தன. ஆனாலும் சில இஸ்லாமிய இயக்கங்கள் இஸ்லாம் பற்றி எப்படி படம் எடுக்கலாம் என பேசப்பேச கருத்தாளர்கள், நடுநிலைவாதிகள், இஸ்லாத்தை சகோதரத்துவத்தோடு பார்த்த பொதுமக்கள் ‘அவர்களை’ வெறுப்பாக பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். 

உயர்நீதிமன்ற தனி நீதிபதி படம் பார்த்து ஆட்சேபகரமான கருத்துக்கள் இல்லை என 29ந்தேதி இரவு 10 மணிக்கு படம் வெளியிடலாம் என தீர்ப்பு தருகிறார். மறுநாள் காலை படம் தமிழகத்தின் சிலயிடங்களில் திரையிடப்பட்டது. காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தியேட்டர் அதிபர்களை மிரட்டி படத்தை நிறுத்தினார்கள். டிவிஷன் பெஞ்ச் முன் தமிழகரசின் தலைமை வழக்கறிஞர் தடைக்கேட்கிறார். தலைமை நீதிபதியும் வழங்;குகிறார். 

சில இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜெ அரசு விஸ்வரூபத்துக்கு எதிராக கிளம்ப வேண்டிய அவசியம்மென்ன ?. பின்னணியென்ன ?. 

சில இஸ்லாமிய இயக்கங்கள் இஸ்லாத்தை பற்றி பத்திரிக்கைகள், மீடியாக்கள், எழுதினாலோ, பேசினாலோ, கருத்து சொன்னாலே அவர்களை மிரட்டுவது, கும்பலாக சென்று போராட்டம் செய்வது, அவர்களை அநாகரிகமாக விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இது சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. மறுக்கப்பட முடியாத உண்மை. 

கமல் ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளான தாலிபான்கள் - அமெரிக்க படை மீதான மோதல் பற்றி 100 கோடி செலவில் படம் எடுக்கிறார். அதில் அந்த தீவிரவாதிகள் தொழுவது, குரான் ஓதுவது போன்ற காட்சிகள் வருகின்றன. இதனை பிடித்துக்கொண்டு எதிர்ப்பு என்ற கோஷத்தை கையில் எடுத்துள்ளார்கள். தற்போது பிரச்சனையை கையில் எடுத்துள்ள இயக்கங்களின் நோக்கம் மதம்மல்ல, படத்தை எதிர்க்க வேண்டும் தங்களை பிரபலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே தவிர இதன்பின்னால் வேறு ஒன்றும்மில்லை. 

ஜெ கமலுக்கு எதிராக களம்மிறங்க காரணம் ?. 

100 கோடி ரூபாய் செலவில் தீவிரவாதிகள் பற்றி எடுக்கப்பட்ட படத்துக்கு எப்படியும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என துப்பாக்கி படத்துக்கு நேர்ந்த நிலையை கண்ட கமல் முதல்வர் ஜெ வின் ஜெயா டிவிக்கு டிவி ஒளிப்பரப்பு உரிமையை விற்க முடிவு செய்தார். அதன்படி பேச்சுவார்த்தைகளும் நடந்தன. ஜெ டிவி நிர்வாகம் படத்தை அடிமாட்டு விலைக்கு கேட்க தொடங்கினார். விலை பேச்சுவார்த்தை நடந்த போது, இரு தரப்பு பிரச்சனைகள் கமல் முன் நின்றன.

ஆவை இஸ்லாமிய இயக்கங்களின் எதிர்ப்பு, அடுத்து தியேட்டர் பிரச்சனை. விஸ்வரூபம் முதலில் டி.டி.எச்சிலா?, தியேட்டரிலா? என்ற பிரச்சனை நடந்து வந்தது. தியேட்டர் அதிபர்கள் ஓன்றுகூடி கமலை எதிர்த்தபோது கமல் சட்ட போராட்டத்துக்கு தயாரானார். ஜெ அரசாங்கம் கமல்க்கு ஆதரவு என்பது போல் காட்டியது. தியேட்டரில் தான் முதலில் என்ற முடிவுக்கு வந்தபோது ஜெவுடனான சாட்டிலைட் உரிமை பேச்சுவார்த்தையும் முறிந்திருந்தது. அடிமாட்டு விலைக்கு கேட்டதால் படத்தை ஸ்டார் விஜய்க்கு விற்றுவிட்டார் கமல். இதில் ஜெவுக்கு கமல் மேல் ஆத்திரம். 


இந்தநிலையில் தான் சில இஸ்லாமிய இயக்கங்கள் விஸ்வரூபத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கின. படத்தை தடை செய்ய வேண்டும்மென குதித்தன. உள்துறை செயலாளரிடம் மனு தந்ததும் இதற்காகவே காத்திருந்த ஜெயா அரசின் அதிகாரிகள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி விஸ்வரூபத்துக்கு தடை போட்டனர். ஒரே நேரத்தில் 32 மாவட்ட கலெக்டர்களும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என இரண்டு வாரம் தடை போடப்பட்டது.

நீதிமன்ற விவாதத்தில் தமிழகரசின் தலைமை வழக்கறிஞர் படத்தை தடை செய்ய வேண்டும் என எடுத்து வைக்கப்பட்ட வாதங்களே எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல எனச்சொல்லாமல் சொன்னது. சில இஸ்லாமிய இயக்கங்கள் மட்;டுமே இந்தப்படத்தை தடுக்கிறார்கள் என இருந்ததை இல்லையில்லை நாங்களும் தடுக்கிறோம் என்பதை வெட்டவெளிச்சமாக்கியது தமிழகரசின் செயல்பாடுகள். 

ஆட்சேபகரமான காட்சிகள் நீக்கப்படும் என கமலை சில இஸ்லாமிய அமைப்புகள் சந்தித்து பேசியபின் அறிவித்தார். இருந்தும் தமிழ்நாடு தவ்ஹ{த்ஜமாத், மனிதநேய மக்கள் கட்சி போன்ற சில அமைப்புகள் மீண்டும் தலைமை செயலகம் சென்று மனு தந்தள்ளார்கள். 

விஸ்வரூபம் படத்தின் மூலம் ஜெ சாதித்துக்கொண்டது. 

விஸ்வரூபம் படத்தை தடை செய்து நான் இஸ்லாமியர்களுக்கு நண்பன் என்ற முகமுடி போட்டுக்கொண்டார். இதனால் அதிமுக ஆதரவு இஸ்லாமிய அமைப்புகள், சில தீவிர பிற்போக்குவாத இஸ்லாமிய அமைப்புகள் சந்தோஷப்படுத்தி வரும் நாடாளமன்ற தேர்தல் கூட்டணியில் ஒரு கட்சியை இணைத்துக்கொண்டார். 

தன் சேனலுக்கு சாட்டிலைட் உரிமையை தராத கமல்ஹாசனை தன்னிடம்முள்ள முதல்வர் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி நடுத்தெருவில் நிற்கவைத்துவிட்டார். எந்த படமாகயிருந்தாலும் நான் கேட்ட விலைக்கு கிடைக்கனும் என திரைத்துரைக்கு விஸ்வரூபம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

விஸ்வரூபம் படத்துக்கு எதிராக சில இஸ்லாமிய இயக்கங்கள் குரல் கொடுத்தன. அவர்களை தன் நடவடிக்கையால் ஒன்றிணைத்த ஜெயலலிதா அவர்களுக்கு ஆதரவு தந்ததன் விளைவாக வாய்க்கு வந்தப்படி பேசிவிட்டார்கள். இது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனைத்தான் ரத்தவெறி பிடித்த மோடியின் நண்பர் ஜெ விரும்பினார். இஸ்லாமிய இயக்க தலைவர்கள் தங்கள் மோசமான பேச்சுகளின் வாயிலான இஸ்லாமியர்கள் ‘மோசமானவர்கள்‘ என்ற பிம்பத்தை மாற்று மதக்காரர்களிடம் பதியவைத்துவிட்டார்கள். 

இந்த உண்மைகளை உணராமல் ஜெ தங்கள் மதத்தை காக்க வந்த இறை தூதராக போற்றி புகழ்கின்றனர் இஸ்லாமிய இயக்கத்தினர். 

இதனை பார்க்கும் போது யார் ஒப்புக்கொள்கிறார்களோ இல்லையோ நான் ஒப்புக்கொள்கிறேன் ஜெவின் மூளை நரி மூளை. 

சனி, ஜனவரி 26, 2013

இஸ்லாமியர்களை குற்றவாளியாக்கும் இஸ்லாமிய இயக்கங்கள்.



விஸ்வரூபம் படத்துக்கு எதிர்ப்பாக நின்றதன் மூலம் ஒரு மாபெரும் வரலாற்று தவறை செய்துவிட்டார்கள் சில இஸ்லாமிய இயக்கத்தினர். பமலின் விஸ்வரூபம் படத்தின் கரு ஆப்கானிஸ்தான் - அமெரிக்கா இடையிலான மோதல் பற்றியது. அதாவது ஏகாத்தியபத்தியத்துக்கும் - தீவிரவாதத்துக்கும் நடக்கும் மோதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். ஆனால் இஸ்லாமிய இயக்கங்கள் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரித்து கமல் படம் எடுத்துள்ளார் என எதிர்ப்பு குரல் கொடுத்தனர். பெரும் செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை வியாபாரம் செய்ய வேண்டும் என்பதற்காக எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய இயக்கங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை அழைத்து படத்தை திரையிட்டு காட்டினார்.

கதைக்கரு மட்டுமல்ல படமும் இந்தியாவில் எடுத்ததல்ல. அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், ஏதோ கொஞ்சம் இந்தியாவில் எடுத்துள்ளதாக படத்தை பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இது ஏற்கனவே படம் பார்த்தவர்களுக்கும் தெரிந்திருக்கும். அப்படியிருந்தும் விஸ்வரூபத்துக்கு எதிராக களம்மிறங்கினர். தமிழக உள்துறை செயலாளரிடம் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என புகார் மனு தந்தனர். அரசாங்கமும் 15 நாட்கள் தடை விதித்துள்ளது. வரும் பாராளமன்ற தேர்தலை மனதில் கொண்டு முதல்வராக சிறுபான்மை இனத்தவர்களின் வாக்கை ஒட்டுமொத்தமாக பெற ஜெ இப்படி செய்துயிருப்பதாக சிலர் கூறி வருகின்றனர்.


ஆனால் இந்த தடை என்னை வேறு மாதிரியாக யோசிக்க வைக்கிறது. ஜெ தீவிரமான இந்துத்துவாவாதி. குஜராத்தில் இஸ்லாமியர்களின் ரத்தத்தை குடித்த அம்மாநில முதல்வர் நரேந்திரமோடியின் நண்பர். அவரை பிரதமராக்க துடிக்கும் நபர்களில் இவரும் ஒருவர். அப்படிப்பட்டவர் இஸ்லாமிய அமைப்பினர் தடை கேட்டு மனு தந்ததும் தடை விதித்துள்ளார்.

இந்தப்படத்தை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு சீர் கெடும் என தடைக்கான காரணத்தை கூறியுள்ளது தமிழகரசு. இதன் உள்ளர்த்தம் படத்தை வெளியிட்டால் முஸ்லிம்கள் தாக்குவார்கள் இதனால் மாநிலத்தில் மக்களின் அமைதி கெடும் என்பதே. ஆக இந்த சொற்றொடர் மூலம் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்பதை மறைமுகமாக மக்கள் மனதில் அதிமுக அரசு விதைத்துள்ளது. அது வெற்றியும் பெற்றுவிட்டது.

தற்போது கமல் ரசிகர்கள் இஸ்லாமியர்கள் மீது வருத்தத்தில் உள்ளார்கள். அவர்கள் மட்டுமல்ல சாதாரண பொது ஜனமும், படம்மே வெளியில வரல அதுக்குள்ள என்னப்பத்தி தான் சொல்றான்னு எதுக்குய்யா இவனுங்க தடுக்கனும்?, மைனாரிட்டின்னு சொல்லிக்கிட்டு இப்படி பண்ணா என்ன நியாயம் என பேச தொடங்கிவிட்டார்கள். இதனால் பிற சமூக மக்களிடம் இவனுங்களை ஒடுக்கனும்ப்பா என்ற கோபம் எழுகிறது. இந்த கோபம் எதிர்ப்பு காட்டிய சில இஸ்லாமிய இயக்கங்களை நோக்கிய கோபம்மல்ல. ஓட்டு மொத்த இஸ்லாமிய மக்களை நோக்கிய கோபம்.


இந்த கோபத்தை இந்துத்துவா வாதிகளும் பயன்படுத்திக்கொள்ள முயல்கின்றனர். இஸ்லாமியனை ஒடுக்க வேண்டும் எனச்சொல்வது இதனால். தீவிரவாதம் பற்றி படம் எடுத்தால் இவர்களுக்கு என்ன யார் குண்டு வைக்கிறார்களோ அவர்களைப்பற்றி தானே படத்தில் காட்டப்படுகிறது அதில் என்ன தப்பு?, குண்டு வைக்கிறவன பத்தி சினிமா எடுக்றத தடுக்கிறான்னா முஸ்லிம்ங்க தீவிரவாதிகளை ஆதரிக்கிறான்னு தானே அர்த்தம்? அப்ப இவனுங்களும் தீவிரவாதிங்க தானே என்ற  நச்சு கருத்துக்களை இஸ்லாமியர் அல்லாத மக்களிடம் விதைக்க தொடங்கியுள்ளார்கள். இது எவ்வளவு ஆபத்தானது.

இஸ்லாமிய இயக்கங்கள் அடுத்தடுத்து இப்படியே செயல்படும் போது பிரச்சனை மக்களின் கோபம் இன்னும் தீவிரமாகும். இதனால் இஸ்லாமியர்களை ஒரு விதமான வெறுப்பு பார்வையுடன் பார்க்க தொடங்குவார்கள், அவர்களை விட்டு விலக தொடங்கிவிடுவார்கள். காவி பயங்கரவாதிகளால் நெய் ஊற்றி வளர்க்கப்படும் எதிர்ப்புகள் மக்கள் மனதில் தேங்கிவிட்டால் நாளை ஒருநாள் காவி பயங்கரவாதிகள்  இஸ்லாமியர்களுக்கு எதிராக கிளம்பும் போது மற்ற சமூக மக்களின் பாதுகாப்பும், கருத்தாளர்களின் ஆதரவும் கிடைக்காமல் போய்விடும்.


இதனால் எதிர்ப்பு கோஷம் போடும் இயக்கங்கள் பாதிக்கப்பட போவதில்லை. பிற மத மக்களோடு நெருக்கமாக துவேஷம் இல்லாமல் வாழும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் தான் பாதிக்கப்படபோகிறார்கள்.

இன்று நீங்கள் நடந்துக்கொள்ளும் முறை தான் நாளை இஸ்லாமிய சமூகத்துக்கான ஆதரவும் - எதிர்ப்பும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள் தோழர்களே. இல்லையேல் மாபெரும் இழப்பு நிச்சயம் இஸ்லாமிய சமூகத்துக்கும் மக்களுக்கும் தான்.

வெள்ளி, ஜனவரி 25, 2013

விஸ்வரூபத்துக்கு அரசு தடை. தேவையா சென்ஸார் போர்டு?.



இந்திய மைய அரசாங்க துறையான தகவல் - தொழில் நுட்பத்துறையால் அமைக்கப்பட்ட துறை இந்திய திரைப்பட தணிக்கை துறை செயல்படுகிறது. இந்தியாவில் சென்னை, திருவனந்தபுரம், கொல்கத்தா, ஹதராபாத் என 9 இடங்களில் இந்த துறையின் அலுவலகங்கள் உள்ளன. ஒரு தலைவர், 19 உறுப்பினர்கள் மைய திரைப்பட தணிக்கை துறையில் உள்ளனர். 

கலாச்சாரம், கலை, மத துவேஷம், சாதி துவேஷம் காட்சியமைப்புகள் இல்லாத வகையில், அதிக வன்முறை, பாலியல் காட்சிகள் இருந்தால் கட் செய்து அரசாங்க விதிமுறைகளுக்கு உட்பட்டு 1952 இந்திய திரைப்பட தணிக்கை சட்ட திட்டத்தின்டி நான்கு வகையில் ஏதாவது ஒரு வகையில் அனுமதி சான்றிதழ் தந்து படத்தை திரையரங்குகளில் ஒளிபரப்ப அனுமதியளிக்கும். இந்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே படம் திரைக்கு வரும். 

ஒரு படத்தை மண்டல அளவில் உள்ள தணிக்கை அலுவலகங்கள் தடை செய்தால் மும்பையில் உள்ள தலைமை அலுவலகம் சென்று முறையிட்டு வெளியிட அனுமதி வாங்கலாம். படத்தை பார்த்து அனுமதி தரும் உறுப்பினர்கள் குழு சாதாரணமானதல்ல. அவர்கள் கற்றறிந்தவர்கள், சமூக பார்வை உடையவர்கள், திரைப்படத்துறையில் உள்ளவர்கள், அரசு அலுவலர்கள். இவர்கள் விதிமுறைக்குட்பட்டு அனுமதி தந்தபின் உச்சநீதிமன்றம் ஒரு படத்தை தடை செய்ய அதிகம் யோசிக்கும். தணிக்கை சான்றிதழ் பெற்ற திரைப்படத்தை திரையிட யாரும் தடை போடக்கூடாது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

சட்டம் இப்படியிருக்க. கமல்ஹாசன் நடிப்பில், இயக்கத்தில், தயாரிப்பில் உருவாகியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை முடக்க பல தரப்பில் இருந்து எடுக்கப்பட்ட முயற்சிகளை கண்டு வேறு யாராக இருந்தாலும் முடங்கியிருப்பார்கள். கமல்ஹாசனாக இருப்பதால் தாக்கு பிடிக்கிறார். 

உலகில் முதல்முறையாக திரையரங்குகளில் வெளியிடுவதற்க்கு முன்பே டி.டி.எச் வழியாக டிவியில் ஒளிப்பரப்ப முயற்சி செய்தார். இதில் தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கினர். கடைசியில் படம் வெளிவந்த ஒரு வாரம் கடந்து டி.டி.எச்சில் ஒளிப்பரப்ப ஒப்புதல் தரப்பட்டு படம் வெளிவரும் தேதியாக ஜனவரி 25ந்தேதியாக குறிக்கப்பட்டது. 

இப்போது இதிலும் சிக்கலை கொண்டு வந்துள்ளது சில இஸ்லாமிய இயக்கங்கள். அவர்கள், விஸ்வரூபத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளார் கமல். படம் வெளிவர இரண்டு மாதம் இருக்கும்போதே விஸ்வரூபத்துக்கு இப்படி கூறி எதிர்ப்பு காட்டினர். படத்தின் கதை என்னவென்று தெரியாது, படம் வெளிவரவில்லை அப்படியிருக்க இவர்களாக கற்பனை செய்துக்கொண்டு எதிர்ப்பு காட்டுகிறார்கள். கமல் எத்தனையோ விளக்கங்கள் தந்தார். அவர்களை அழைத்தும் பேசினார். ஆனாலும் பயனில்லை. 

இந்தப்படம் இஸ்லாமிய தீவிரவாதம் பேசுகிறது என போர்க்கொடி தூக்கிய சில இஸ்லாமிய இயக்கங்கள் உச்சமாக விஸ்வரூபம் திரைப்படத்தை எங்கும் ஓடவிடமாட்டோம் என அறிவித்துள்ளது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு. சில அமைப்புகள் தமிழக உள்துறை செயலாளரை சந்தித்து படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்க அதன்படி படம் வெளிவர இரண்டு நாட்கள் இருக்கும்போது அரசாங்கமும் 15 நாட்களுக்கு படம் வெளியிட தடை விதித்துள்ளது. 

அரசாங்கத்தின் அமைப்பான இந்திய தணிக்கை துறை குழு படத்தை பார்த்துவிட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு படத்தை வெளியிட அனுமதி தந்துள்ளது.  படத்தில் உள்ள காட்சியால் பிரச்சனை வரும் என்ற நிலையிருந்தால் குழுவே அந்தகாட்சியை கட் செய்துயிருப்பார்கள். அவர்கள் பார்த்து ஒப்புதல் தந்தப்பின் படத்தை பார்க்காத சில அமைப்பினர் தடை கேட்டால் அரசாங்கம் தந்துவிடும் என்றால் பின் அந்த குழு எதற்கு. கலைத்துவிடலாமே. 


தணிக்கை துறை மட்டுமல்ல நீதிமன்றத்தையும் இதில் குற்றம் சாட்ட வேண்டியுள்ளது. 
சட்டமறிந்தவர்கள் கூட ஒரு திரைப்படத்தை பார்க்காமலே தடை விதித்து விடுகிறார்கள். அல்லது விசாரணை செய்யும் நீதிபதிகள் குழு படத்தை நாங்கள் பார்க்க வேண்டும் என கேட்கிறார்கள். அதான் தணிக்கை துறை பார்த்துவிட்டதே. சந்தேகம்மிருந்தால் அவர்களை அழைத்து உடனடியாக விசாரணை செய்து படத்தை வெளியிட அனுமதிக்கலாம்மே. அதைவிட்டுவிட்டு தடை கேட்டால் உடனே தந்துவிடுவது எந்த விதத்தில் நியாயம். அரசாங்கத்தை அவர்கள் கண்டித்தால் மட்டுமே இந்தநிலை மாறும். 

இங்கே கவனிக்கப்பட வேண்டிய மற்றொன்று இஸ்லாமிய நாடான மலேசியாவில் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் படம் வெளிவரும் நிலையில் தமிழகம் போன்ற மாநிலங்களில் தடை செய்வதால் ஒரு தயாரிப்பாளராக அவருக்கு எத்தனை இழப்பு. 

படத்தை ஓடவிட மறுக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் தந்தது. இவர்கள் என்ன மத காவலர்களா?. இந்தியாவில் தீவிரவாதம் இல்லாமல் நாங்கள் பார்த்துக்கொள்வோம் என இவர்கள் ஒப்புதல் தர முடியுமா?. தர முடியாதவர்கள் தீவிரவாதம் பற்றி படம் எடுத்தால் இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும். 

இஸ்லாமிய இயக்கங்கள் மட்டுமல்ல இந்து அமைப்பினை சார்ந்தவர்கள், கிருஸ்த்துவ அமைப்பை சார்ந்தவர்கள், சாதி அமைப்புகளை சார்ந்தவர்கள் கூட எதிர்ப்பு காட்டுகிறார்கள். எங்கள் மதத்தை, மத நூல்களை, சாதி பற்றி பேசுகிறார்கள் அதனால் படத்தை வெளியிடக்கூடாது என தடை கேட்கிறார்கள். இப்படி இவர்கள் கேட்கும்போது அரசாங்கமும், நீதிமன்றமும் தலையாட்டுவதால் தான் இவர்கள் துளிர்கிறார்கள். 

இதனை மாற்ற வேண்டும். இல்லையேல் வருங்காலத்தில் திரைப்படம் எடுப்பது, வெளிவருவது என்பது சர்ச்கைக்குரியதாகிவிடும். 

வியாழன், ஜனவரி 24, 2013

விலையேற்றம். டீசலல்ல…… செல்போன் கட்டணம்



மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக ராசா இருந்தபோது செல்போன் சேவை தர முயன்ற பல புதிய நிறுவனங்களுக்கு அனுமதி தந்தார். இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றைகளை ஒதுக்கினார். அதனை ஏர்டெல், ரிலையன்ஸ், டாடா போன்ற பெரு நிறுவன முதலாளிகள் ஏற்றுக்கொள்ளாமல் புதிய நிறுவனங்களுக்கு அனுமதி தரக்கூடாது என லாபி செய்து மிரட்டினர்.

நிறைய கம்பெனிகள் இருந்தால் போட்டி வியாபாரத்தில் பேசும் கட்டணம் குறையும் என முடிவு செய்து பெரு முதலாளிகளின் மிரட்டல்களை மீறி புதிய நிறுவனங்களுக்கு அனுமதிகளை தந்தார். அப்படி தந்ததன் மூலம் மற்றொரு புறம் காங்கிரஸ் கட்சி உட்பட பலரும் லாபமடைந்தனர். மறுப்பதற்கில்லை. தேன் எடுத்தவர்கள் புறங்கையை நக்காமல் இருக்க முடியாது. ஆனாலும் 2ஜீ ஏலம் மூலம் அரசாங்கத்துக்கு நிரந்தரமாக வருவாய் வருவதைப்போல ஏற்பாடு செய்தார் ராசா.

அதையெல்லாம் திட்டமிட்டு மறைத்து 20 ஆயிரம் கோடி நட்டம் என பேச ஆரம்பித்து கடைசியில் ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி நஷ்டம் என பி.ஜே.பி தலைவர்கள் மறைமுகமாக ‘எழுதி’ தந்ததை தணிக்கை துறை அறிவித்தது. இதன் பின்னணியில் காங்கிரஸ்சும் இருந்தது என்பது மறுப்பதற்கில்லை. இந்தியாவின் மாபெரும் ஊழல் என எதிர்கட்சிகள் பிரச்சாரம் செய்தன. திராவிடத்தை பிடிக்காத தேசிய மற்றும் உள்ளுர் மீடியாக்கள் பெருமுதலாளிகள், அதிகாரவர்க்கம் சொன்னதை நம்பி மாபெரும் ஊழல் என எம்பி எம்பி குதித்தன.

ராசா அமைச்சர் பதவியை துறந்தார். மீடியா, பத்திரிக்கைள் எழுதிய தீர்ப்பை காப்பி எடுத்து வைத்துக்கொண்டு விசாரணையை நடத்துகிறார்கள். உச்சநீதிமன்றமும் ‘சிலரை’ மட்டுமே குறிவைத்து 2ஜீ வழக்கை விசாரணை செய்தன - செய்கின்றன.

சிறைக்குள் இருந்தபோதும், சிறையில் இருந்து வெளியே வந்தபோதும். நான் மக்கள் நலனுக்காக செயல்படுத்தியதை விமர்சனம் செய்கிறார்கள். எனக்கு கவலையில்லை நான் குற்றமற்றவன் என்பதை நிருபிப்பேன் உண்மை ஒருநாள் நிச்சயம் வெளிவரும் என்றார் ராசா.

உச்சநீதிமன்றம் ராசா தந்தா நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்தது. புதிய ஏலம் விடச்சொன்னது. டேப்பாசிட் மற்றும் அலைவரிசை கட்டணத்தை உயர்த்த சொன்னது. விலையை உயர்த்தி ஏலம் விடப்பட்டது. ஏலமும் எடுத்துள்ளார்கள். எடுத்தவர்கள் பெரு நிறுவனங்களை சார்ந்தவர்கள். அப்படி எடுத்தவர்கள் தற்போது தங்களது விளையாட்டை தொடங்கியுள்ளார்கள்.

பாரதி மிட்டலின் ஏர்டெல், வோடாபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் செல்போன் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஒரு நிமிட கட்டணம் 2 ரூபாய் வரை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. சில நிறுவனங்கள் 1.40 உயர்த்தியுள்ளதாக தெரிகிறது. இதுவே எங்களுக்கு நட்டம் தான் எனச்சொல்லி வருகிறது. அவர்கள் சொல்வதை பார்க்கும்போது கட்டணம் இன்னும் உயரும் வாய்ப்பு உள்ளதாக அறிய முடிகிறது.

இப்போது ஊழல், நஷ்டம் என கூப்பாடு போட்ட மீடியாக்கள் எல்லா ஓட்டைகளையும் முடிக்கொண்டனவே எதனால். அன்று ராசா சொன்னது இன்று நடக்கிறதே இதையேன் கேட்க யாரும்மில்லை. கேட்கமாட்டார்கள். காரணம் அவர்கள் அறிந்தோ அறியாமலோ பெரு முதலாளிகளுக்கு சேவகம் செய்ய தொடங்கிவிட்டார்கள். 

செல்போன் வாடிக்கையாளர்களே கவலைப்படாதீர்கள். இனி டீசல் விலையை உயர்த்தினால் காய்கறி விலை உயர்வதைப்போல இனி செல்போன் கட்டணமும் உயரும்.

புதன், ஜனவரி 23, 2013

தென்னிந்தியாவில் சினிமா வளர்ச்சி.



தமிழகத்தின் முதன் தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் நடராசமுதலியார். 1916ல் கீசகவதம் என்ற மௌன படத்தை வெளியிட்டார். தென்னிந்தியாவில் வெளியான முதல் மௌன படமாகும்.

தென்னிந்தியாவில் முதன்முதலில் திரையரங்கு கட்டியவர் ரகுபதிவெங்கய்யநாயுடு. இவர் தான் தெலுங்கு சினிமாவின் தந்தை.

தென்னிந்தியாவில் முதல் பேசும் படம் பக்தபிரகலாதா. இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் எச்.எம்.ரெட்டி தான். 1931 செப்டம்பர் 15ந்தேதி பக்தபிரகலாதா வெளியிடப்பட்டது.

ஒன்னரை மாதம் கழித்து அதாவது 1931 அக்டோபர் 31ந்தேதி காளிதாஸ் என்ற பேசும்படம் தமிழகத்தில் திரையிடப்பட்டது. இயக்கியவர் எச்.எம்.ரெட்டி. சென்னையில் பிரபலமாக இருந்த லிபர்ட்டி திரையரங்கில் இந்தப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தின் மொத்த செலவு 30 ஆயிரம் ரூபாய். காளிதாஸ் படத்தில் பாதிக்கு மேல் தெலுங்கு மொழியே பேசினார்கள் நடிகர்கள்.

1933ல் பி.பி.ரங்காச்சாரி என்பவர் கலபா என்ற படத்தை எடுத்தார். இந்த படத்தில் தான் நடித்தவர்கள் அனைவரும் திரையில் தமிழில் பேசினார்கள்.

1934ல் சீதா கல்யாணம் என்ற படம் வெளிவந்தது. அந்தப்படத்தில் ராஜம் என்பவர் ராமனாக நடித்தார். ராமனின் மனைவி சீதையாக ராஜத்தின் தங்கை ஜெயலட்சுமி அந்த காதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்கியவர் பாபுரேவ் பிந்தர்கர்.

சூப்பர் ஸ்டார்.

1934ல் எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்த முதல் திரைப்படம் பவளக்கொடி வெளியானது. இதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சுப்புலட்சுமி. படத்தை கே. சுப்பிரமணி இயக்கினார். அப்போது இந்தப்படம் மாபெரும் வெற்றி படமாம். தொடர் வெற்றிகள் தந்த எம்.கே.டி தான் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்.

மேற்குறிப்பிட்ட படங்கள் எல்லாம் தமிழில் வெளிவந்தாலும் தயாராது கல்கத்தா, மும்பை போன்ற இடங்களில் தான்.

தமிழகத்தில் எடுக்கப்பட்ட முதல் படம்.

தமிழகத்தில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் ஸ்ரீநிவாசகல்யாணம்.

முதல் பெரும் சம்பளம்.


1935ல் வெளியான நந்தனார் படத்தில் நடித்த கே.பி.சுந்தராம்பாள் ஒரு லட்சம் சம்பளம் பெற்றுக்கொண்டு நடித்துள்ளார். இந்தியாவே அதை பரபரப்பாக பேசியது. இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என நான்கு மொழிகளில் அந்தந்த மொழிகளில் வெளியிடப்பட்டது.

முதல் இரட்டை வேடம்.


1935 தமிழ் சினிமாவில் முக்கியத்துவமான ஆண்டு. இந்த ஆண்டு தான் துருவா என்ற படத்தில் தான் ஒருவரே இரட்டை வேடத்தில் நடிக்கும் காட்சி வைக்கப்பட்டது.

சமூக புரட்சியவாதி, நகைச்சுவை மன்னர் கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்து வெளிவந்த முதல் படம் மேனகா. அதோடு இந்தப்படம் தான் தமிழின் முதல் சமூக படம் என்ற பெயரை பெற்றது. அதோடு, ஏ.வி.மெய்யப்பசெட்டியார் சினிமா தயாரிக்க தொடங்கிய ஆண்டு இதுவே.

எம்.ஜீ.ஆர் அறிமுகமான சதிலீலாவதி என்ற படம் 1936ல் வெளிவந்தது. டி.எஸ்.பாலைய்யா இந்தப்படத்தில் தான் அறிமுகமானார். இந்தப்படத்தில் கலைவானர் கதாநாயகராக நடித்தார்.

தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குநர் - டி.பி.ராஜலட்சுமி. அவர் இயக்கிய படம் மிஸ் கமலா. வெளியான ஆண்டு 1936.

தமிழ் சினிமாவின் முதல் கனவு கன்னி.


1944 தீபாவளியன்று சுந்தர் ரா நட்கர்னி இயக்கத்தில், எம்.கே.டி நடிப்பில் வெளியான ஹரிதாஸ் படம் மூன்று தீபாவளியை தாண்டி தியேட்டர் ஹவுஸ்புல்லாக ஓடி சாதனை புரிந்த படம். இந்த படத்தில் மன்மதலீலையை வென்றோர் உண்டோ என்ற பாடல் இன்றளவும் ஹிட் பாடல். அதோடு அன்றைய இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த முதல் கனவுக்கன்னி டி.ஆர். ராஜகுமாரி இந்த படத்தில் நடனம் ஆடியுள்ளார்.

1948ல் எஸ்.எஸ். வாசன் தயாரிப்பில் 30 லட்ச ரூபாய் செலவில் உருவான படம் சந்திரலேகா. இந்தியாவின் பல மொழிகளில் வெளியான படம்மிது.

1949ல் வெளியான நல்லதம்பி படத்துக்கு அறிஞர் அண்ணா வசனம் எழுதினார்.

1950ல் வெளியான மந்திரகுமாரி படத்துக்கு கலைஞர் கருணாநிதி கதை வசனம். 1952ல் சிவாஜி அறிமுகமான பராசக்தி வெளிவந்தது.

1954ல் பாடல்களே இல்லாமல் வந்த முதல் படம் அந்தநாள். சிவாஜி நடித்தது. இயக்கம் சுந்தரம் பாலசந்தர்.

தமிழில் முதல் வண்ணப்படம்.

1956ல் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படம் தான் முதல் வண்ண திரைகாவியம். இதனை இயக்கியவர் சேலம் மாடர்ன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரம்.

1964ல் சிவாஜியின் 9 மாறுப்பட்ட நடிப்பில் வெளியான படம் நவராத்திரி. படத்தை இயக்கியவர் ஏ.பி.நாகராஜன். 

( இவைகள் அனைத்தும் வேறு பதிவவர்களின் பதிவுகளில் இருந்து சுட்டதன் தொகுப்பு).

வீடியோ உருவானது எப்படி ?.

உலகின் முதல் திரைப்பட நிறுவனம்.

பாண்டிய மன்னனுக்கு பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மனம் உண்டா என்ற ஐயத்துக்கு விடை தேடியது போல கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராக இருந்த லீலண்ட் ஸ்டான்போர்ட்க்கு ஒரு சந்தேகம் வந்தது. அதாவது குதிரை ஓடும்போது அதன் நான்கு கால்களும் ஒரே சமயத்தில் அந்தரத்தில் இருக்குமா என்பதே சந்தேகம். அதை அப்போது பிரபலமாக இருந்த புகைப்பட கலைஞர் எட்வர்ட் மெய்பிரிட்ஜ் ஜிடம் கேட்டு விடை தாருங்கள் என்றார்.

அவரும் உடனே களத்தில் இறங்கினார். ஐந்து அடிக்கு ஒரு மேகரா என 24 கேமராக்களை லைனாக தயாராக வைத்தார். ஒவ்வொரு கேமராவுக்கும் ஒவ்வொரு போட்டோகிராபரை நியமித்தார். குதிரையை ஓடவிட்டு படங்களை எடுத்து அந்த நெகட்டிவ்வை அவர் கண்டறிந்த சூப்பிராசிஸ்கோப் என்ற பிரஜக்டர் மூலம் இணைத்து நெகட்டிவ்வை ஓட்டினார்.

திரையில் குதிரை ஓடியது. குதிரை ஓடும்போது நொடி நேரங்களில் குதிரையின் கால்கள் பூமியில் இருக்காது என திரையில் பார்த்ததை கவர்னரிடம் கூறினார். அதோடு, 1878 ஜீன் 15ந்தேதி முதல் ஓடும் படம் பத்திரிக்கையாளர்களுக்கு காட்டப்பட்டது.

அந்த படத்தை திரையிட்டு காட்டியதால் உலகின் முதல் திரைப்பட நிறுவனமாக மோஷன் பிச்சர்ஸ் வரலாற்றில் இடம் பிடித்தது.

வீடியோ துறையின் தந்தை - லூயிஸ் லீ பிரின்ஸ். இவர் இயக்கி 1888 அக்டோபர் மாதம் வெளியிட்ட சுழரனொயல புயசனநn ளுஉநநெ என்ற குறும்படம் தான் முதல் படமாக அங்கீகரிக்கப்பட்டது. 1890ல் இவர் காணாமல் போனதால் இவர் நகரும் படத்தை கண்டறிந்த பெருமை இவருக்கு கிடைக்கவில்லை.

இதனால் தாமஸ் ஆல்வா எடிசன் அதிகாரபூர்வமாக கேமராவை கண்டறிந்தவர் என வரலாற்றில் பதியப்பட்டார். இவர் கண்டறிந்த வீடியோ கேமராவின் பெயர் முiநெவழபசயிh.

அதன் பின் ஆகஸ்ட் - லூயிஸ் லூமிரி சகோதரர்கள். 1895ல் சினிமாமோட்டோகிராபி என்ற கேமராவை கண்டறிந்தனர். அதனை கொண்டு அவர்களின் தொழிற்சாலைக்கு வெளியே நின்று தொழிலாளர்கள் வெளியே வருவதை படம் எடுத்தனர். 50 விநாடிகள் படம் எடுக்கப்பட்டது.

ஜார்ஜ் மெல்லியஸ்.


கறுப்பு வெள்ளையில் படம்பிடிக்கப்பட்ட நாட்களில் நெகட்டிவ்வில் கலர் பூசி கலர் படமாக காட்டியவா இவர்.

முதல் விளம்பர பட இயக்குநர். 

ஷிராலால்சென் என்பவர் ஏ டான்சிங் சீன்ஸ் என்ற குறும்படத்தை இயக்கினார். முதல் விளம்பர பட இயக்குநரும் அவரே.


இந்தியாவில் வீடியோ.

1895ல் இந்தியாவின் பெரும் நகரங்களில் ஒன்றான மும்பையில் முதல்முறையாக திரைப்படம் காட்டப்பட்டது. அந்தப்படம் லூமிரி சகோதரர்கள் எடுத்த முதல் படம்.

இந்திய சினிமாவின் தந்தை யார் ?.

இந்தியாவில் வெளியான முதல் இந்தியப்படம் ஸ்ரீபுன்தலிக். இது 1912ல் வெளிவந்தது. அதை இயக்கியவர் இந்திய சினிமாவின் தந்தை தாதாசாகேப் டோர்ன். ஆனால் வரலாற்றில் இவர் இருட்டடிப்பு செய்யப்பட்டு இவருக்கு பின் படமெடுத்த தாதாசாகேப் பலிக் பெயர் பிரபலமாக்கப்பட்டது. இந்தியாவில் இரண்டாவது மௌன படமான ராஜா அரிச்சந்திரா எடுத்த தாதாசாகேப் பலிக் 1913ல் எடுத்தார்.

இந்தியாவின் முதல் படத்தயாரிப்பாளர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்
Jamshedji Framji Madan. 

1931ல் இந்தியாவில் முதல் பேசும்படம் ஆலம் அரா. இதனை இயக்கியவர் அர்தர்சிர் இரானி.

அடுத்து தென்னிந்திய சினிமா பற்றி கொஞ்சம்..........

புதன், ஜனவரி 16, 2013

புகைப்படத்தின் வளர்ச்சியும் - வரலாறும்.

போட்டோகிராபி.

போட்டோகிராபி என்ற சொல் கிரேக்க மொழியில் இருந்து உருவானது. போட்டோ என்பது கிரேக்க மொழியில் ஒளி என பொருளாகும். அதோடு கிராபி என்ற சொல்லுக்கு வரைதல் என்பது பொருளாகும். இந்த இரு சொல்லும் இணைந்தே ஒளியில் வரைதல் என அர்த்தம் கொள்ளப்பட்டது. கிரேக்க சொல்லான இதுவே உலகம் முழுவதும் போட்டோகிராபி என அழைக்கப்படுகிறது.

முதல் புகைப்பட கேமரா - உலகின் முதல் ஒளிப்பட கலைஞர். 

லூயிஸ் டாக்குரே. பிரான்ஸ் நாட்டை சேர்ந்தயிவர் தான் போட்டோ கேமராவை கண்டறிந்தவர். 1787 நவம்பர் 18ந்தேதி பிறந்தார். தனது 63வது வயதில் இறந்தார். இவர் இயல்பில் ஒரு சிறந்த ஓவியர். ஓவிய பள்ளியும் நடத்தி வந்தார். நாடக மேடைகளின் துணிகளுக்கு ஓவியங்கள் வரைந்து தந்துவந்தார். அவர் ஒளி மூலம் வரைந்த ஓவியங்களை காப்பி எடுக்க விரும்பி ஆய்வு செய்ய தொடங்கினார். அவரைப்போலவே, நைஸ் ஃபோர் நிப்ஸ் என்பவரும் இதே ஆய்வில் ஈடுபட்டுயிருந்தார். 

முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கேமராவை டாக்குரே வகை கேமராக்கள் கண்டுபிடித்தவரின் பெயரை கொண்டே அழைத்தனர். அதே பெயரில் பதிவும் செய்யப்பட்டது.
டாக்குரே


170 ஆண்டுகளுக்கு பின் ஒரு டாக்குரே கேமரா வடக்கு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரத்தால் செய்யப்பட்ட இந்த கேமரா இன்னும் இயங்கும் நிலையில் உள்ளதாம். இதை ஒரு ஏல நிறுவம் ஏலம் விட்டுள்ளது. 47 கோடிக்கு இந்த கேமரா விலை போய்வுள்ளது. இந்த கேமரா தான் தற்போது விலை அதிகம்முள்ள கேமராவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெகட்டிவ் கேமரா.

ஜார்ஜ் ஈஸ்ட்மென் என்பவர் தான் நெகட்டிவ் கேமராவை கண்டறிந்தார். 1854ல் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் யூட்டிக்கா என்னும் ஊரில் பிறந்தவர். 1885ல் கேமராவில் நெகட்டிவ் மூலம் படம் எடுக்கும் முறையை கண்டறிந்தார். 1888ல் அது விற்பனைக்கு வந்தது. 1892ல் அவருக்கு பிடித்தமான கே என்ற எழுத்தில் கோடக் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதன் மூலம் நெகட்டிவ் கேமராக்களை விற்பனை செய்ய தொடங்கினார். இவரை கவுரவிக்கும் விதமாக அமெரிக்க அரசாங்கம் தபால் தலை வெளியிட்டு கவுரவப்படுத்தியது. இவரின் கோடாக் நிறுவனம் தான் முதன் முதலில் டிஜிட்டல் கேமராவை உலகுக்கு அறிமுகப்படுத்தியது.
ஜார்ஜ் ஈஸ்ட்மென்


உலகின் முதல் புகைப்படம்.

உலகின் முதல் புகைப்படம் ஒரு சிறுவன் ஒரு குதிரையை அழைத்து செல்வது போன்ற புகைப்படம்மது. 1825ல் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படத்தை ஏலம் மூலம் பிரெஞ்ச் நாட்டில் விற்கப்பட்டது. 4 லட்சத்து 50 ஆயிரம் யூரோக்கு விற்பனையானது அந்தப்படம்.

ஆகஸ்ட் 19 உலக ஒளிப்பட தினம்.

1839 ஆகஸ்ட் 19ந்தேதி முதல் அங்கீகரிக்கப்பட்ட வணிக போட்டோ எடுக்கப்பட்டது. அந்த நாளே போட்டோகிராபர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் முதல் பெண் புகைப்பட கலைஞர்.


ஹோமை வியாரவாலா. 1913ல் குஜராத் மாநிலம் வதோராவில் பிறந்தவர். முதல் பத்திரிக்கை பெண் புகைப்பட கலைஞரும் இவரே. சைக்களில் தான் இவரது பயணம். 1939 முதல் 1970 வரை இந்திய, உலக வரலாற்றில் இடம்பெற்ற பல புகைப்படங்களை எடுத்த பெருமைக்குரியவர். நீண்ட காலம் இவரை கவுரவிக்காமல் இருந்தது மத்தியரசு.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் முயற்சியால் 2010ல் பத்ம விபூஷன் விருதை அப்போதைய ஜனாதிபதி பிரதீபாபட்டேலிடம் பெற்றார்.
இந்தியாவின் முதல் புகைப்பட கலைஞர்


ரகுராய்.

சிறந்த புகைப்பட நிபுணர். 1984ல் போபால் விஷவாயுவால் மக்கள் பாதிக்கப்பட்டுவர்கள், இறந்தவர்களை இவர் எடுத்த படங்கள் பிரபலம். மண்ணில் புதையுண்டு தலை மட்டும் தெரிந்த ஒரு குழந்தையை இவர் எடுத்த படம் உலகத்தை அதிரவைத்தது. இவரது புகைப்படங்கள் பல மேலை நாடுகளில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. பல பிரபலமான இதழ்களில் இவரது கட்டுரைகள், புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

1992ல் இந்த இந்தியரை அமெரிக்க அரசு சிறந்த புகைப்பட கலைஞர் என கவுரவித்துள்ளது. 1971ல் பத்மஸ்ரீ விருதை பெற்றார்.

பன்ளாஸ்.


பிளாஸ் கண்டு பிடிப்பதற்க்கு முன்பு மாக்னிசியம் பவுடரை கொட்டி அதை பற்றி வைப்பார்கள். பற்ற வைத்த சில நொடிகள் வரை அதன் வெளிச்சம் பிரகாசமாக இருக்கும் அந்த வெளிச்சத்தில் தான் ஆரம்பகாலத்தில் புகைப்படம் எடுத்தார்கள். அது தான் கேமராவின் ப்ளாஸ்சாக இருந்தது. அதனை பன்ளாஸ் என அழைப்பார்கள்.

அரசவை புகைப்பட கலைஞர் - லாலா ராஜா தீன்தயாள்.


1844ல் இந்தியாவில் பிறந்தவர். சிறந்த ஓவியர். மேற்கத்திய நாடுகளில் போட்டோகிராபி இடம் பெற்றதும் அதை கற்க மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் சென்று கற்றுக்கொண்டு வந்தார்.

ஐதராபத்தின் ஆறாம் நிஜாமான மீர் மஹபூப் அலி பாஷா அரசின் அரசு புகைப்படக்காரராக இருந்தார். 1880களிலேயே இந்தூர், மும்பை, செகந்திராபாத் போன்ற இடங்களில் போட்டோ ஸ்டூடியோ வைத்திருந்தவர். வெளிநாட்டு ஒளி கலைஞர்களை விட சிறந்த புகைப்படங்களை எடுத்தவர்.

இந்தியாவில் புகைப்பட கலைஞர் ஒருவருக்கு தபால் தலை வெளியிடப்பட்டது என்றால் அது இவருக்கு மட்டும் தான். 125வது ஆண்டு விழாவில் அது வெளியிடப்பட்டது.

கின்னஸ்சில் இடம்பிடித்த போட்டோகிராபர்.

நியூயார்க் நகரில் வசிக்கும் பிரபல புகைப்பட கலைஞர் ஜோசன் கூப், 300 பிளாஸ்களை மின்ன வைத்து தனது கேமரா மூலம் ஒரே ஒரு புகைப்படத்தை எடுத்தள்ளார். இது சாதனை என புகழ்ந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

ஓலிம்பிக் போட்டிகளை படம்மெடுக்கும் தமிழர்.


ஓலிம்பிக் விளையாட்டு போட்டிகளை போட்டோ எடுக்க ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒருவரை தேர்வு செய்து போட்டி நடக்கும் இடத்துக்கு மத்தியரசு அனுப்பி வைக்கும். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த சுகுமார் என்ற புகைப்பட கலைஞர் இலண்டன் சென்று புகைப்படங்களை எடுத்துள்ளார். இவர் இதற்கு முன்பு சீனாவில் நடந்த போதும் சென்றுள்ளார்.

ஞாயிறு, ஜனவரி 06, 2013

ஸ்டாலின்க்கு வந்தது வாரிசு பதவியல்ல.


திமுகவில் கலைஞர்க்கு பின் மு.க.ஸ்டாலின் தான் திமுகவின் அடுத்த தலைவர் என்பது 15 ஆண்டுகளாவே மக்கள் மனதில் பதிந்துவிட்ட தகவல். அதற்கு காரணம் கலைஞரின் மகன் என்பது மட்டுமல்ல திமுகவிற்காக அவர் உழைத்த உழைப்பு அதிகம் என்பதாலே. அதோடு, அவர் தலைவராக உருவாக்கப்பட்டார் என தற்போது பேசுகிறார்கள். அது விதாண்டவாதம். நிச்சயம் ஸ்டாலின் தலைவராக உருவாக்கப்படவில்லை. தலைவர் தகுதிக்கு தன்னை உருவாக்கிக்கொள்ள உழைத்தார். அதற்கு கலைஞரின் மகன் என்ற நிலை உதவிகரமாக இருந்தது.

மிசா சட்டத்தில் சிறைக்கு போனது முதல் திமுகவின் போராட்டங்களில் முன்னணி தளபதியாக களத்தில் நின்றது கலைஞரின் மகன் என்ற ஸ்தானத்தில் இல்லை. கட்சி தொண்டன் என்ற ஸ்தானத்திலேயே கலந்துக்கொண்டார். இதனால் தான் அவர் தொண்டர்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமர முடிந்தது. கட்சியில் ஸ்டாலின் பொறுமையின் சிகரமாக விளங்குகிறார். படிப்படியாக தான் சிம்மாசனத்தின் அருகே வந்துள்ளார். 

1967ல் கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை 14 வயதில் தொடங்கி முடிவெட்டும் கடையில் இருந்து சமூக பணியை தொடங்கினார் ஸ்டாலின். 1980ல் தான் இளைஞரணி அமைப்பை திமுக தலைமை அங்கீகரித்தது. 1984 தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர் ஸ்டாலின். முதல் முறை போட்டி அதிலேயே தோல்வியை சந்தித்தார்.

1988 தேர்தலில் அதே ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஸ்டாலின். 1991 தேர்தலில் தோல்வி. 1996ல் தேர்தலில் அதே தொகுதியில் போட்டி வெற்றி பெற்றார். அதோடு சென்னை மாநகராட்சிக்கு நடைபெற்ற மேயர் தேர்தலில் முதல் முறையாக பொதுமக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட மேயர் ஸ்டாலின் தான். இரண்டு பதவி வகித்தார்.

2001ல் தேர்தலில் எம்.எல்.ஏவாக வெற்றி, உள்ளாட்சி தேர்தலில் இரண்டாவது முறையாக மேயராக வெற்றி. இரண்டு பதவி வகிக்ககூடாது என்றபோது மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.எல்.ஏவாக தொடர்ந்தார். 2006ல் எம்.எல்.ஏவாக தேர்வானபின் திமுக ஆட்சியில் நீண்ட விவாதத்துக்கு பின் உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின் துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. 2011ல் தேர்தலில் போட்டி வெற்றி.

இளைஞரணி அமைப்பாளர்களில் ஒருவராக, பின் மாநில இளைஞரணி செயலாளராக, அதன்பின் கட்சியின் துணை செயலாளர்களில் ஒருவராக, தற்போது கட்சியின் பொருளாளராக பதவிக்கு வந்தார்.

தேர்தலில் சீட் பெற 18 வயது பூர்த்தியான பின்பு 14 ஆண்டுகள் கழக பணியாற்றியுள்ளார். அதன்பின்பே எம்.எல்.ஏ சீட், 98, 1996 கழக ஆட்சியின் போது ஸ்டாலின் எம்.எல்.ஏவாக இருந்தார். அப்போது கூட அவருக்கு அமைச்சர் பதவி தரவில்லை. 2006 ஆட்சியின் போதுதான் அமைச்சர் பதவி தரப்பட்டது. இப்படி பொறுமைசாலியாக பதவிக்காக காத்திருந்து வந்தார்.

நிலைமை இப்படியிருக்க பேஸ்புக்கில் தோழர் ஒருவர் காங்கிரஸ்சில் வாரிசு உருவாகுவதற்க்கு முன்பே திமுகவில் வாரிசை உருவாக்கியவர் கருணாநிதி என்றார். அரசியல் அறிந்த அவரே திமுக மீது குற்றம் சாட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த பழியை போடுகிறார். மோதிலால் நேரு தீவிர காங்கிரஸ் ஆதரவாளர். அவரது மகன் காங்கிரஸ்சில் இணைந்து பதவிக்கு வந்தார். பிரதமராகவும் மாறினார். அவர் பிரதமராக இருக்கும் போதே இந்திராகாந்தியை அரசியல் வாரிசாக உருவாக்கினார். இந்திராகாந்தி சஞ்ஜய்காந்தியை உருவாக்கினார். சஞ்ஜய்காந்தியின் மரணம் ராஜிவ்காந்தியை அந்த இடத்துக்கு வரவைத்தது. அதன்பின் சோனியாகாந்தி, தற்போது ராகுல்காந்தியில் வந்து நிற்கிறது.

தமிழகத்தில் ஈ.வி.கே சம்பத், அவரது மகன் இளங்கோவன் என வாரிசு அரசியல் உள்ளது, அங்கு மட்டுமல்ல மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் என சொல்லிக்கொண்டே போகலாம். பல அரசியல் தலைவர்கள் தங்களது வாரிசுகளை களத்தில் இறக்கி வைத்துள்ளார்கள். இப்படி தேசிய – மாநில அரசியலில் பலரை சுட்டிக்காட்டலாம். இதைப்பற்றி பேச இங்கு யாரும்மேயில்லை. ஆனால், கலைஞர் மீது மட்டும் குற்றம் சாட்டுவது திராவிடத்தின் மீதும், கலைஞர் மீதும்முள்ள பகையே காரணம்.


மு.க.முத்துவை எம்.ஜீ.ஆர்க்கு எதிராக உருவாக்கினார் கருணாநிதி என குறிப்பிடுகின்றனர். எம்.ஜீ.ஆர் என்ற துரோகி திமுகவை உள்ளிருந்தே அழிக்க முற்பட்டவர். தன் கள்ள பணத்தை காப்பாற்றிக்கொள்ள தனிகட்சி ஆரம்பித்தவர். எம்.ஜீ.ஆர் எண்ணத்தை புரிந்துக்கொண்டே முத்துவை சினிமாவுக்கு கொண்டு வந்தார். சினிமாவில் மட்டுமல்ல நிஜவாழ்க்கையிலும் நடித்து, அரசியலிலும் நடித்து நாட்டை ஆண்டுவிட்டு போய்விட்டார் எம்.ஜீ.ஆர்.

வை.கோபால்சாமி, எனக்கு எதிராக தன் மகன் ஸ்டாலினை கலைஞர் வளர்க்கிறார் என்ற குற்றச்சாட்டை வைத்தார். வை.கோ கட்சியை, நிர்வாகத்தை நடத்தும் பக்குவம்மற்றவர் பொறுமைசாலியல்ல, என்பதை உணர்ந்தே வை.கோபால்சாமி ஒதுக்கி வைக்கப்பட்டார். வை.கோவை விட ஸ்டாலின் மேல் என புரிந்துக்கொண்டே கட்சியினர் பலர் அவர் பின்னால் திரண்டார்கள். அதை உணராமல் வை.கோ திமுகவை உடைத்துக்கொண்டு வெளியே பெரும் இளைஞர் பட்டாளத்துடன் வெளியே சென்றார். அவருடன் சென்றவர்கள் சென்ற வேகத்திலேயே திரும்பி திமுகவை நோக்கியே வந்தார்கள். அதற்கு காரணம் அவரிடம் பக்கவம்மில்லாததே. இன்றும் அதே நிலைதான்.


வை.கோ போனபின் திமுகவுக்கு இளைஞர் சக்தியை இழுத்தவர் ஸ்டாலின். இளவு காத்த கிளியாக தமிழக மக்களால் அடுத்த திமுகவின் தலைவர் என அறியப்பட்ட ஸ்டாலின் காத்திருக்க கலைஞரின் மற்றொரு மகன் மத்தியமைச்சர் அழகிரி தலைவர் பதவி போட்டியில் குதிப்பதால் தான் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளார் ஸ்டாலின். கட்சியில் ஸ்டாலினுக்கு பெரும் ஆதரவு உள்ளது. கழக தேர்தலில் தலைவர் பதவிக்கு நின்றால் ஸ்டாலின் நிச்சயம் வெற்றி பெறுவார். ஆனால் கலைஞர் இருக்கும் போது அந்தயிடத்துக்கு அவர் வரவிரும்பவில்லை. ஆனால் தனக்காக ‘ரூட்டை’ கிளியர் செய்துக்கொள்ள விரும்புகிறார். அதனை தான் நீண்ட ‘போராட்டத்துக்கு’ பின் தனக்கு பின் ஸ்டாலின் என கலைஞர் அறிவித்துள்ளார்.

இப்படி அறிவித்தால் பிரச்சனை வரும் என எதிர்பார்த்தவர்கள் வேண்டுமானால் பிரச்சனை வரவில்லையே என எண்ணலாம். எதிர்பார்த்த ஒன்று தற்போது அறிவிப்பாக வந்துள்ளது. இதை விமர்சனம் செய்ய ஒன்றும்மேயில்லை. உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதை எண்ண வேண்டும்.

வெள்ளி, ஜனவரி 04, 2013

உலகை ஆள்வாரா ஹிலாரி கிளிண்டன்?.



உலக பெண் அரசியல்வாதிகளில் எனக்கு ரொம்ப பிடித்தவர் ஹிலாரிகிளிண்டன்.

மக்களை கவரும் முகம் அவருடையது. அரசியல்வாதி, குடும்ப தலைவி இரண்டிலும் எனக்கு அவரை நிரம்ப பிடிக்கும். அமெரிக்காவின் ஜனாதிபதியாக கிளிண்டன் இருந்தபோது மோனிகாவுடன் செக்ஸ் வைத்துக்கொண்டார் என பரபரப்பு கிளம்பியபோது, ஆமாம் நான் என் மனைவிக்கு துரோகம் இழைத்துவிட்டேன் என பகிரங்கமாக அறிவித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டவர் கிளிண்டன். அவர் உலகத்துக்கு பயந்ததை விட அவரது மனைவிக்கு தந்த மரியாதையே அதிகம். அந்த குற்றச்சாட்டின் போது தன் கணவருக்கு பக்கபலமாக இருந்தவர் ஹிலாரி. கிளிண்டன் அரசியல் ஓய்வுக்கு பிறகு அரசியலில் அதிகமாக முகம் காட்டினாhர் ஹிலாரி. 

சிக்காக்கோ மாநிலத்தில் 1947ல் பிறந்தவர் ஹிலாரி. படிக்கும் காலத்திலேயே மாணவ தலைவியாக இருந்தவர். 1975ல் கிளிண்டனை மணந்துக்கொண்டார். ஐக்கிய அமெரிக்காவில் மிக மிக பிரபலமான 100 வழக்கறிஞர்களில் ஹிலாரியும் ஒருவர். சமூக சேவைகளில் அதிகம் ஆர்வம் காட்டி சேவையாற்றி வந்தார்.

உலகின் பல நாடுகளில் கோலோச்சும் வால்மார்ட் நிறுவனத்தின் இயக்குநராக 1990ல் நியமிக்கப்படுகிறார் ஹிலாரி. அந்நிறுவனத்தின் 15 இயக்குநர்களில் ஹிலாரி மட்டுமே பெண் இயக்குநர். பல மாபெரும் நிறுவனங்களின் ஆலோசகர்.

2000த்தில் நியூயார்க் மாநிலத்தின் செனட் சபை உறுப்பினராக ஜனநாயக கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டார். ஜனநாயக கட்சியின் சார்பில் முதன்முறையாக நியூயார்க் செனட் சபை தேர்தலில் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் ரிக் லாஸியோவை சுமார் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதே ஹிலாரி 2006 தேர்தலில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் எதிரியை தோற்கடித்தார்.

ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பளராக யார் நிற்பது என ஓபாமாவுக்கும் - ஹிலாரிக்கும் இடையே போட்டி நடந்தது. அதில் குறைந்த வித்தியாசத்தில் ஓபாமா முதல் இடத்துக்கு வந்தார். இரண்டாம் இடத்துக்கு வந்த ஹிலாரியை ஓபாமா விரும்பி அழைத்து வெளிவிவகாரத்துறை அமைச்சராக்கினார்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மியான்மர், ஈராக் உட்பட உலகின் அத்தனை நாடுகளுக்கும் பயணம் மேற்க்கொண்டுள்ளார் ஹிலாரி. அமெரிக்காகாரன் தொட்டதெல்லாம் வெற்றி என்றால் ஹிலாரி போனயிடங்களில் எல்லாம் இரட்டை வெற்றியோடு தான் திரும்புவார். ஒரு வெற்றி நாட்டுக்காக மற்றொரு வெற்றி பெரும் முதலாளிகளுக்காக. ஓராண்டுக்கு முன் தமிழக முதல்வர் ஜெவையும், மேற்கு வங்க முதல்வர் மம்தாவையும் சந்தித்தார். அந்த சந்திப்புக்கு பின்னால் இருந்தது வால்மார்ட் நலன். இந்தியாவில் வால்மார்ட் தன் நிறுவன கிளைகளை இந்திய நகரங்களில் திறக்க முயல அனுமதி கேட்டபோது இந்திய ஒன்றியத்தை ஆளும் மைய அரசு ஜெ, மம்தா இருவரும் எதிர்ப்பார்கள். அவர்களை சரிகட்ட வேண்டியது உங்கள் பணி என்றது.
வால்மார்ட் நிர்வாக இயக்குநர்களில் ஒருவராக.


ஹிலாரி வந்தார் இருவரையும் அடுத்தடுத்து சந்தித்தார்………… பேசினார்………….. வென்றார். வெற்றியுடனே தன் நாட்டுக்கு திரும்பி சென்றார். அந்தளவுக்கு ராஜதந்திரத்தில்  கில்லாடி. உலக நாடுகளின் தலைவர்களோடு பேசும்போதும் சரி, அவர்களோடு ஒன்றாக நிற்கும் போதும் சரி அவரிடம் ஒரு கம்பீரம் தெரியும்.

அரசுப்பயணமாக இதுவரை 120 நாடுகளுக்கு மேல் சுற்றுப்பயணம் சென்றதோடு, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்களில் அதிக தூரம் அதாவது சுமார் 9 லட்சம் மைல்கள் சுற்றுப்பயணம் செய்த அமைச்சர் என்ற பெயரையும் தட்டி சென்றுள்ளார்.

உலக போராளி இயக்கங்கள் பலவற்றுக்கு ஆதரவளிக்கும் கொள்கையுடையவர். இலங்கையின் ஈழத்தமிழர்கள், விடுதலைப்புலிகள் மீது கரிசணையோடு இருந்தவர். நான்காம் கட்ட ஈழப்போர் கொடூரத்தை உலகின் பார்வைக்கு கொண்டு சென்றதில் இவரின் பங்கும் உண்டு.

தற்போது 65 வயதாகும் ஹிலாரி வைரஸ் தாக்கி பாதிப்புக்குள்ளாகி உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வந்தார். நோய் தாக்கத்தில் மயங்கி விழுந்ததன் விளைவு மூளையில் ரத்தம் உறைந்து ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல் சீரடைந்து வருகிறது என அறிவித்துள்ளது அமெரிக்க அரசு.

அமைச்சர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துவிட ஒபாமாவும் வேறு வெளியுறவுத்துறை அமைச்சரை நியமித்துவிட்டார். அமைச்சர் பதவியில் இருந்து விலகி காரணம் உடல்நிலை மட்டுமல்ல அடுத்த தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நிற்க இப்போதே களப்பணியாற்ற முயல்கிறார் என்கிற தகவல் இறக்கை கட்டி பறக்கிறது உலக மீடியாக்களில். அது உண்மையாக இருந்தால் உலகை ஆளப்போகும் வாய்ப்பை அவருக்கு அமெரிக்க மக்கள் வழங்குவார்கள் என நிச்சயம் நம்பலாம்.

அரசும் - மாஃபியா கும்பலும். வெல்லப்போவது யார்?

தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிப்பரப்பை அரசே நடத்தும் என கடந்த திமுக ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டு பின் கைவிடப்பட்டது. ஜெ ஆட்சிக்கு வந்தப்பின் முதலில் அரசு கேபிள் மூலம் கனெக்ஷன் வழங்க உத்தரவிட்டார். அரசாங்கம் மக்களுக்கு கனெக்ஷன் தர வேண்டும்மே. கவலையே படவில்லை எஸ்.சி.வி, ஹாத்வே போன்ற பெரும் நிறுவனங்கள் நடத்தி வந்த லிங்க் அலுவலகங்களை ஆக்ரமித்துக்கொண்டது அரசு. அதாவது கரையான் புத்துக்குள் பாம்பு புகுந்தது போல. சிறு சிறு ஆப்ரேட்டர்கள் அரசு வசம் மிரட்டி இழுக்கப்பட்டார்கள்.

ஓத்த ரூபாய் செலவில்லாமல் தங்கள் பணியை தொடங்கியது அரசாங்கம். அதிமுக பொது செயலாளரான முதல்வர் ஜெவின், ஜெயா குரூப் சேனல்கள் கேபிளில் முதல் இடத்தை பிரச்சனையில்லாமல் ஒளிப்பரப்ப தொடங்கினார்கள். அதற்கடுத்த இடங்களை எந்த சேனல் இடம் பெற வேண்டும் என எண்ணுகிறார்களோ அந்த சேனல் கேபிள் அதிகாரிகளுக்கு கோடிகளில் பணம் தர வேண்டும். சன் டிவி முதல் சாதாரண உள்ளுர் சேனல் வரை கோடிகளில் தொடங்கி லட்சங்கள் தந்து இடம் வாங்கி ஒளிப்பரப்பி வருகிறார்கள்.

இன்று எப்படி அதிகாரிகள் பணம் வாங்குகிறார்களோ அதேபோல் முன்பு சன் நிர்வாகம் அதாவது கலாநிதி, தயாநிதி நிர்வாகத்தில் இருந்த சுமங்கலி கேபிள் நெட் ஓர்க் பணம் வாங்கியது. கலாநிதி, தயாநிதி செய்த அத்தனை தில்லாலங்கடி வேலைகளையும் அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற சேர்மன் மற்றும் அதன் அதிகாரிகள் இன்று செய்து வருகிறார்கள்.

அதோடு, கொஞ்சம் உச்சமாக டெங்கு இல்லை என செய்தித்தாள்கள், சாட்டிலைட் மீடியாக்கள் செய்தி வெளியிட்டால் அரசாங்கம் லோக்கல் சேனல்கள் மூலம் வதந்தி என செய்தி பரப்புகிறார்கள், அதோடு எதிர்ப்பு செய்திகளை வெளியிடும் சேனல்களின் ஒளிப்பரப்பை நிறுத்தி விடுகின்றனர். அரசை பகைத்துக்கொண்டால் ஒழித்துவிடுவோம் என்பதை மறைமுகமாக எச்சரிக்கிறது அரசு. இதே பணியை முன்பு சன் குரூப்பின் சுமங்கலி செய்தது. தலைமை தான் மாறியுள்ளது. செய்கை ஒன்றே.

தனி நபர் செய்தால் அவர்களை கட்டுப்படுத்த வழிமுறை உண்டு. அரசாங்கம் செய்தால்?.

இதனை உணர்ந்து தான் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் சுருக்கமாக ட்ராய்யிடம், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அரசாங்கம் கேபிள் நடத்த அனுமதிக்க வேண்டும் என கேட்டதற்க்கு, மத்திய மாநில அரசுகள், அரசு நிறுவனங்கள், அரசு–தனியார் கூட்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் தொலைக்காட்சி நடத்தக்கூடாது. காரணம், அவர்கள் ஆளும்கட்சியாக இருக்கும் போது செய்தி இரட்டடிப்பு முதல் ஒளிப்பரப்பை தடுப்பது வரை அதிகாரம் செய்வார்கள் அதனால் அரசாங்கம் சேனல் நடத்த, கேபிள் நடத்த அனுமதி தரக்கூடாது என்பது ஆணையத்தின் விதி எனக்கூறிவிட்டது. உச்சநீதிமன்றமும் ஒரு உத்தரவில் அரசு இலாகாக்கள் மீடியாக்கள் நடத்தக்கூடாது. மக்களுக்கு உண்மைகள் தெரியாமல் போய்விடும் எனச்சொல்லியுள்ளது.

இதனை எதிர்க்கிறது ஜெ அரசு. ட்ராய் மற்றும் உச்சநீதி மன்ற பரிந்துரைகள் தமிழகத்தை மையமாக கொண்டு கூறப்பட்டதல்ல. இந்த உத்தரவு ஒட்டு மொத்த இந்தியாவுக்கும்மே பொருந்தும். இந்த உத்தரவை எதிர்ப்பவர்கள் ஒன்றை நன்றாக புரிந்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் சன் குரூப்பை எதிர்க்க அரச அதிகாரத்துக்கு துணை போகக்கூடாது போனால் இதை விட அதிகமாக நம் சுதந்திரத்தை இழக்க வேண்டும்.

அரசாங்கம் நடத்தவில்லை என்றால் மீண்டும் மீடியா மாஃபியாவாக வலம் வரும் சன் கட்டுப்பாட்டுக்குள் போய்விடும் என்பவர்களே நிச்சயம் அப்படித்தான் போகும். உங்கள் வாதத்தை இல்லை என மறுக்கவில்லை. அதை தடுக்க மாற்று வழிகளை ஆராய வேண்டும். அதை விட்டுவிட்டு அரசு முடிவை ஆதரிக்க கூடாது.