தென்னாப்பிரிக்காவின்
தந்தை நெல்சன் மண்டேலா சிறை வாழ்க்கையோடு ஊழல் புகார் கூறப்பட்டு சிறையில் இருந்த
பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங்பாதலை ஒப்பிட்டு அரசியல் காரணங்களுக்காக இருவரும்
சிறையில் இருந்தார்கள் என தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட சர்வதேச நீதிமன்றதில்
வழக்கு தாக்கல் செய்துள்ளது தென் ஆப்பிரிக்க அரசு.
டெல்லியில் கடந்த
11ந்தேதி ஜெயபிரகாஷ் நாராயணனின் 113வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த
நிகழ்வில் பிரதமர் மோடி, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங்பாதல் போன்றோர் கலந்துக்கொண்டனர்.
( பி.ஜே.பியுடன் பஞ்சாப் அகாலி தளம் கூட்டணியாக உள்ளது. இரு கட்சியின் சார்பில்
தான் நாடாளமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் எதிர்கொள்ளப்பட்டன. ) அங்கு பேசிய நமது
பிரதமர் மோடி அரசியல் காரணங்களுக்கான தென்னப்பிரிக்கா அதிபர் நெல்சன் மண்டேலாவும்,
பஞ்சாப் அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பதலும் சிறையில் இருந்தவர்கள், நெருக்கடி
நிலையின் போது சிறையில் பாதல் இருந்தார் என பேசியவர் அதை தனது டுவிட்டர்
தளத்திலும் பதிவு செய்திருந்தார்.
உடனே பஞ்சாப்
காங்கிரஸ்சின் பாராளமன்ற எதிர்கட்சி துணை தலைவருமான கேப்டன் அமரிந்தர்சிங், இது
நெல்சன் மண்டேலாவை அவமதிக்கும் செயல் என கடுமையாக தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
பலரும் பதிவு செய்துள்ளார்கள்.
பிற நாட்டு
அதிபர்கள், பிரதமர்களின் பேச்சுகளை மற்ற நாடுகள் உன்னிப்பாக கவனிக்கும். இந்திய
பிரதமர் மோடியின் பேச்சை தென்னாப்பிரிக்கா தூதரகமும் கவனித்து உடனடியாக இதுப்பற்றி
தன் நாட்டுக்கு தெரியப்படுத்தியது. இதில் அதிருப்தியான தென்னாப்பிரிக்கா தன் தேச
தந்தையை அவமானப்படுத்திய மோடி மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
செய்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில்
வெள்ளை நிற தோல் தொண்டவர்கள் கறுப்பின மக்களை அடிமையை விட மிக மோசமாக
நடத்தினார்கள். ஏறக்குறைய இந்தியாவில் ஆரியர்கள் திராவிடர்களை நடத்தியதை போல. இப்போதும்
மேல் சாதியென சொல்லிக்கொண்டு கீழ்சாதியினர் என வரைமுறைப்படுத்தி அடிமைப்படுத்தியதை
போல. வெள்ளை நிற தோல் கொண்டவர்கள் செயல்பட்டார்கள். தன் கறுப்பின மக்களின்
விடுதலைக்காக, உரிமைக்காக நீண்ட போராட்டம் நடத்திய மாமனிதர் நெல்சன் மண்டேலா. இந்த
அறவழி போராட்டத்துக்காக தனது வாழ்நாளில் தொடர்ச்சியாக 27 ஆண்டுகள் சிறையில்
கிடந்தவர். ஆர்.எஸ்.எஸ் பிதாமகர் போல ஆங்கிலேய அரசாங்கத்திடம் மன்னிப்பு
கடிதம் எழுதி தந்து காலில் விழுந்தவரல்ல, காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட
காவி கும்பல்கள் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி சிறையில் இருந்து
வெளிவந்தவரல்ல மண்டேலா. இரும்பு மனிதராக மக்களின் போராட்டத்துக்காக உள்ளே
இருந்தபடியே 27 ஆண்டுகள் போராடினார். அந்த மக்களுக்கு
நிறவெறியில் இருந்து விடுதலை வாங்கி தந்தார், அரசியல்
உரிமைகள் பெற்று தந்தார். அதனால் தான் அவரை தென்னாப்பிரிக்காவின்
தந்தை என அந்த மக்கள் அன்புடன் அழைக்கிறார்கள்.
பஞ்சாப் முதல்வர்
பிரகாஷ் சிங் பாதல் யார் என்பது இந்தியாவே அறியும். அவரது ஆட்சி எப்படி என்பதை
அந்த மாநில எதிர்கட்சிகள் விமர்சனமாக அடிக்கடி வைக்கின்றன. விவசாயிகள் தற்கொலை,
இளைஞர்கள் போதைபொருட்களுக்கு அடிமையாகி உள்ளது போன்றவற்றோடு, சர்வதேச அரங்கில்
சிக்கும் போதை பொருள் கடத்தல்காரர்கள் 30 சதவிதம் பேர் போதை பொருளை பஞ்சாப்பில்
தான் வாங்கினோம் என ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மாநில
முதல்வருடன் தென்னாப்பிரிக்காவின் தேச தந்தையுடன் ஒப்பீட்டு பேச எப்படி மோடியால்
முடிந்தது என தெரியவில்லை. மோடி வரலாறு தெரியாமல் இருக்கறார் என்பது அனைவரும்
அறிந்தது தான். அதற்காக ஒரு நாட்டின், கோடிக்கணக்கான மக்களின் நாயகனை
அவமானப்படுத்துவது தேவைதானா?.
தேர்தலின்போது எப்படி
வேண்டுமானாலும் மோடி பேசியிருக்கலாம். அது நம்மோடு போய்விட்டது. இப்போது
இந்தியாவின் பிரதமர், நீங்கள் பேசும் பேச்சு 130 கோடி மக்களின் குரல்.
அப்படிப்பட்டவர் எவ்வளவு தெளிவாக, உண்மையாக பேச வேண்டும். அனைத்தும் அறிந்த
அதிமேதவி என்கிற கணக்கில் பிரதமரானபின்பும் உளற உலக அரங்கில் வெட்கி
தலைகுனிய வேண்டிய விதமாக இந்தியாவின் மானத்தை சர்வதேச கூண்டில்
ஏற்றியுள்ளது தென்னாப்பிரிக்கா அரசாங்கம்.
மோடி என்கிற நபர் மீது மட்டுமே வழக்கு
தாக்கல் செய்துள்ளோம். இந்தியா மீதல்ல என்கிறது தென்னாப்பிரிக்காவின்
அதிகாரபூர்வமற்ற ஒரு செய்தி. மோடி இப்போது தனி மனிதரல்ல இந்தியாவின் பிரதமர்.
பிரைம் மினிஸ்டர் ஆப் இந்தியா என்கிற பெயரில் தான் பதிவு செய்கிறார். ஆக அவர்கள்
மோடி என்கிற தனி நபர் எனச்சொன்னலும் அது இந்தியாவை சர்வதேச அரங்கில் தலை குனிவை
ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக