செவ்வாய், ஜனவரி 27, 2026

ரசிகர்களை அடமானம் வைக்கும் நடிகர்கள். இப்போது விஜய்.

 


என் கேரியரின் உச்சத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துயிருக்கிறேன் என மேடை தோறும் பேசிக்கொண்டே இருக்கிறார் நடிகர் விஜய். நான் 100 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டு வருகிறேன், எனக்கு பணம் பெரிதில்லை, மக்களுக்கு சேவை செய்யவருகிறேன் என உருட்டுகிறார்.

அவர் சொல்வதுப்போல் கேரியரின் உச்சத்தைவிட்டு வருகிறாறா என்றால் உண்மை தான். வருகிறார் ஏன் வருகிறார்?

மக்களுக்கு சேவை செய்ய அரசியலக்கு வருகிறேன் எனச்சொல்வதெல்லாம் உருட்டுகள்.

உண்மை என்னவென்றால், முன்பெல்லாம் கோடம்பாக்கத்துக்கு 10 கோடி ரூபாய் எடுத்துவந்தால் ஒருபடத்தை எடுத்து வெளியிட்டுவிடமுடியும். அந்த நிலை இப்போது மாறிவிட்டது. 10 கோடி பட்ஜெட்டில் நடிகர் ரியோவை வைத்து வேண்டுமானால் எடுக்கமுடியும். சிம்பு, தனுஷ், சூர்யா, விக்ரம்மை வைத்து படம் எடுக்கவேண்டும் என்றாலே 25 முதல் 50 கோடி வரை தேவைப்படும். அதுவே அஜித், கமல், விஜய், ரஜினியை வைத்தெல்லாம் படம் எடுக்கவேண்டும் என்றால் 100 கோடிக்கு மேல் முதலீடு தேவை. அந்தளவுக்கு முதலீடு போட்டு படம் எடுக்க கோடம்பாக்கத்தில் தயாரிப்பாளர்கள் மிகமிகமிக குறைவு.

பெரிய தயாரிப்பாளர்கள் என்றால் சன், லைக்கா, ரெட்ஜெயன்ட், பி.வி.ஆர், வேல்ஸ், தாணு நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. இந்த நிறுவனங்களும் பெரிய பட்ஜெட் படங்கள் எத்தனை எடுத்துவிடமுடியும்? ஒரு நேரத்தில் இரண்டு படங்களுக்கு மேல் எடுத்தால் திணறிவிடுவார்கள். தோராயமாக 300 கோடி ரூபாய் முதலீட்டில் படம் எடுத்தால் 500 கோடி வசூலித்தால் மட்டுமே லாபம். இந்தளவுக்கு விஜய், ரஜினி படங்கள் லாபம் வருகிறதா என்றால் திரையரங்கு டிக்கட் கட்டணம், சாட்டிலைட் கட்டணம், ஓ.டி.டி கட்டணம் என பேப்பர் கணக்கு தான் சொல்கிறார்கள். இவ்வளவு வசூல், அவ்வளவு வசூல் என்பதெல்லாம் தங்களை சூப்பர் ஸ்டார் என வெளிப்படுத்த வசூல் கணக்கை உயர்த்திக்காட்டுகிறார்கள் என்பதே நிஜம். பெரிய லாபம் வருகிறது என்றால் அந்த நிறுவனம் மீண்டும் அடுத்தப்படத்தை ஏன் அதே நடிகரை வைத்து தயாரிப்பதில்லை?

நடிகர் விஜய்யின் கடைசி 5 படங்களின் தயாரிப்பாளர்கள் யார் எனப்பாருங்கள். இந்த நடிகர்களே பினாமிகளை உருவாக்கி தன்னை வைத்து படம் தயாரிக்கிறார்கள். காரணம் தங்களை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வருவதில்லை, அந்தளவுக்கு பெரிய தயாரிப்பாளர்களும் இல்லை. அதனாலயே பினாமி பெயரில் படம் எடுக்கிறார்கள். தங்களின் சம்பளம் 50 கோடி, 100 கோடி என வாங்கியவர்கள் அதிலிருந்து குறைக்கமுடியாது. அப்படி குறைத்தால் தங்கள் இமேஜ் குறைந்து தாத்தா ரோலில் நடிக்க அழைத்துவிடுவார்கள் என பயப்படுகிறார்கள். ஹீரோ மெட்டீரியலாக அரசியலுக்குள் நுழைந்தால் அதிக வருமானம் வரும் என அரசியலுக்குள் நுழைகிறார்கள்.

அதிகாரத்துக்கு வரமுடியாமல் எப்படி இவர்களால் சம்பாதிக்க முடியும்?

அதற்கு தான் இவர்களுக்கு நடிகர் டூ அரசியல்வாதியான விஜயகாந்த் வழிக்காட்டியுள்ளாரே.

சினிமாவில் பி மற்றும் சி சென்டர் ரசிகர்களை கொத்தாக வைத்திருந்தவர் விஜயகாந்த். தான் அரசியலுக்கு வரப்போகிறேன் என மன்றத்தை பக்காவாக அரசியல் அமைப்பாக மாற்றியவர் அரசியல் கட்சி தொடங்கியபோதே ஆட்சி அதிகாரத்தை பிடிக்கமுடியாது என்பது அவருக்கு தெரியும். 2006 சட்டமன்ற தேர்தல் முடிவும், அவர் கட்சி வாங்கிய வாக்கு சதவிதம் தெளிவாக அவருக்கும், அவரது கட்சிக்கும் உணர்த்தியது. ஆனாலும் 2009 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று தன்னுடைய பலம் இதுதான் எனக்காட்டினார். தன் பலத்தைக்காட்டி 2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பெரியளவில் சீட் வாங்கினார், அதே அளவுக்கு ஜெ விடம் பணமும் வாங்கினார். வெற்றி பெற்றார். அப்போதே நான் என் ப்ளாக்கில் எழுதினேன். அவருக்கு இனி அரசியலில் தேய்மானம் என்று. அதுதான் நடந்தது. பின்பு அதிமுகவுடன் கூட்டணி முறிந்தது. பணம் மட்டுமே குறி என களம்மிறங்கியது விஜயகாந்த் மனைவி பிரேமலதா – மச்சான் சுதிஷ் தரப்பு. விஜயகாந்த் உயிருடன் இருந்தபோதை என்னிடம் இவ்வளவு வாக்குகள் உள்ளது, நீ எனக்கு இவ்ளோ தா என பேரம் பேசி 2014ல் பாஜகவிடம் கூட்டு வைத்து லாபம் பார்த்தார்கள். 2016ல் மநகூ என உருவானது முழுக்க முழுக்க பணத்துக்காகத்தான். அதன்பின் 2019, 2021, 2024 வரை சீட் வேண்டாம் ரேட் எவ்வளவு என பேரம் பேசியே கூட்டணி வைத்து தோல்வியடைந்து வருகிறார் பிரேமலதா. வெற்றி பெறவேண்டும் என நினைத்தால் அவரின் அரசியல் நிலைப்பாடு வேறுமாதிரி எப்போதே இருந்திருக்கும். 2026 தேர்தலும் தேமுதிகவின் நிலைப்பாடு சீட்டல்ல நோட்டு தான்.

விஜயகாந்த்துக்கு பின்னர் அரசியலுக்கு வந்த நடிகர் கமல்ஹாசனும் மாநிலங்களவை போதும் என சுருங்கிவிட்டார். ரசிகர்களின் வாக்குகளை தேர்தலுக்கு தேர்தல் பெரிய கட்சிகளிடம் அடமானம் வைத்து சம்பாதிப்பதை பார்த்த நடிகர் விஜய், அந்த இருநடிகர்களை விட அதிகளவில் ரசிகர்கள் வைத்துள்ளோம். நாம் அரசியல்கட்சி தொடங்கினால் சினிமாவில் சம்பாதிப்பதைவிட அரசியலில் சம்பாதிக்கலாம் என்றே கட்சி தொடங்கியுள்ளார்.

அரசியல் என்பது சினிமாவில் வசனம் பேசுவது போன்றதல்ல. மக்களின் மனங்களில் நம்பிக்கையை பெறவேண்டும், எதிர்ப்புகளை தைரியமாக எதிர்க்கொள்ளவேண்டும், மக்கள் பிரச்சனைகள் குறித்து தெரிந்துயிருக்கவேண்டும், மக்களை நேருக்கு நேராக எதிர்க்கொள்ளும் தைரியம் வேண்டும். இது எதுவுமே இல்லாத பயந்தாங்கெல்லி தான் நடிகர் விஜய்.

தான் நடித்த ஜனநாயகன் படம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசால் நெருக்கடிக்கு உள்ளாகி படம் வெளிவராமல் நிறுத்தப்பட்டு பந்தாடப்படுகிறது. முழுக்க முழுக்க அரசியல் எனத்தெரிந்தும் இதுக்குறித்து வாய் திறக்காமல் பயந்துப்போய் இருப்பவர் விஜய். கரூரில் 42 பேர் பலிக்கு காரணம் என ஒப்புக்கொள்ளாமல், குறைந்தப்பட்சம் நேரடியாக சென்று அந்த குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லாமல் பதுங்கியது எல்லாம் மக்களிடம் அதிருப்தியை தான் உருவாக்கியுள்ளது. அப்படியிருக்க இப்போதும் தன்பின்னால் கட்சிகள் வரும், முதலமைச்சராகிவிடுவேன் என என்பதுயெல்லாம் போதை மருந்து உட்க்கொண்டவன் காணும் கனவும், பேசும் பேச்சு போன்றது.

தன்பின்னால் உள்ள பெரும் ரசிகர் பட்டாளத்தின் பலத்தை அரசியல் கட்சிகளுக்கு காட்ட நினைக்கிறார் விஜய். இதனால்தான் நான் அழுத்தமாக சொல்லிவருகிறேன். விஜய் கூட்டணியெல்லாம் போகமாட்டார். தனித்து நின்று என் பலம் இதுதான் எனக்காட்டுவார். அந்த வாக்குசதவிதத்தை வைத்து அடுத்துவரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் பேரம் பேசுவார். கேமரா முன் பேசியதற்கு ஒரு ரேட் வைத்திருப்பதைப்போல அரசியலில் அவர் பேசுவதற்கு ஒரு ரேட் வைத்திருப்பார். அதிக தருபவருக்கு தன் ஆதரவை தருவார். அதனால்தான் சினிமா வசங்களையே மேடையில் பேசிவருகிறார். சினிமாவைப்போலவே அரசியலை, மக்களை அனுகுகிறார். 

முதல். கோணல் முற்றிலும் கோணல் என்பதுப்போல் விஜய்யின் தொடக்கமே கோணலாகத்தான் தொடங்கியுள்ளது. விஜயகாந்த் அளவுக்குகூட விஜய்யால் பிரகாசிக்க முடியாது. அது தற்குறிகளுக்கு தெரிந்து தெரியும்வரை சீமானை சகித்துக்கொள்வதுப்போல விஜய்யையும், சிஷ்ய தற்குறிகளையும் சகித்துக்கொள்ளவேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக