அமெரிக்கா நீதித்துறை வெளியிட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்கள், இளவரசர் ஆண்ட்ரூ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பில்கேட்ஸ், பிரதமர் மோடி, கிளிண்டன் என பல உலகமே அதிர்ச்சியாகிறது. அதிகாரத்தில் இருப்பவர் இதனை கடந்துப்போவார்கள். அவர்கள் கவலைப்படுவது, அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற மக்களிடம் நல்லவர் என்கிற பிம்பம் தேவை. அது உடைவதால்தான் பதறுகிறார்கள்.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் போல் பாலியல் தரகர்கள் உலகம் முழுவதும்மே கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை உண்டு. சாதாரண மக்களுக்கு தெரியாது, ஆட்சி அதிகாரத்திலுள்ள பிரமுகர்கள், பெரும் தொழிலதிபர்கள், கார்ப்பரேட் முதலாளிகள், சமூகத்தின் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு தெரியும். இந்த பிரபலங்களின் பாலியல் தேவையை வெளியுலகத்துக்கு தெரியாமல் பூர்த்தி செய்துதரும் புரோக்கர்கள் தேவை. தங்களுக்கு தேவையானதை கச்சிதமாக செய்துதந்துவிட்டால் அந்த புரோர்க்கர்களுக்கு என்ன தேவையோ அதை இவர்கள் தங்களது அதிகாரத்தை வைத்து செய்துதருவார்கள். இது ஆதிகாலம் முதல் இப்போதுவரை நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.
நம்ம தமிழ்நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.
எம்.ஜி.ஆர் உயிரை காப்பாற்ற வெளிநாட்டில் இருந்து வந்த மருத்துவருக்கு தரப்பட்ட சன்மானம் என்ன?
1991 – 1996 ஜெயலலிதா ஆட்சியில் கவர்னருக்கு தரப்பட்ட விருந்து என்ன?
ஆட்டோ சங்கர் எழுதிய மரணவாக்குமூலம் நக்கீரன் இதழில் தொடராக வெளிவந்தபோது, சமூகம் மதித்த அரசியல் பிரபலங்களின் கறுப்பு பக்கம் தெரிந்து மக்கள் அதிர்ச்சியாகவில்லையா?
2005 காலக்கட்டததில் ஆந்திராவை சேர்ந்த பாலியல் புரோக்கர் ஒருவர் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டாரே நினைவில் இருக்கிறதா? அவரின் வாக்குமூலம் எத்தனை அரசியல்வாதிகள், அதிகாரிகளின் பிம்பத்தை உடைத்தது.
அதற்கு முன்பு பிரபல மருத்துவர் பிரகாஷ் என ஒருவர் இருந்து, இளம்பெண்கள், குடும்ப பெண்களை பிரபலங்களுக்கு பாலியல் சேவை செய்து அதனை வீடியோ எடுத்து இணையத்தில் விற்று தண்டனை பெற்றாறே அவரின் வாக்குமூலம் நினைவில் இருக்கிறதா?
தமிழ்நாட்டில் பாலியல் புரோக்கராக இருந்தவர்கள் கடந்தக்காலத்தில் எம்.எல்.ஏக்களாக அமைச்சர்களாகி நம் கண்முன் இப்போதும் நடமாடிக்கொண்டுதானே இருக்கிறார்கள்.
நமது இந்தியாவின் உச்ச அதிகாரத்தில் உள்ளவர் உத்தரவில் நடத்தப்பட்ட சொரபுதின் என்கௌண்டர் வழக்கு எதற்கானது?
இது எல்லாமே அதிகாரத்தில் இருப்பவர்களின் பாலியல் வேட்கைக்காகத்தான். புரோக்கர்களை அதிகாரவர்க்கம் பாதுகாக்கும். தங்கள் கைமீறி செல்லும்போது பலி தந்துவிடும். அப்படி பலி தந்தவர் தான் ஜெஃப்ரி எப்ஸ்டீன்………. ஜீன் லூக் புருனெல் போன்றவர்கள்.
இது அமெரிக்கா அதிபர் முதல் உள்ளுர் கவுன்சிலர் வரை யாராக இருந்தாலும் இதுதான் எழுதப்படாதவிதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக