புதன், ஜூலை 04, 2012

சிறையும்....... வெறுப்பு சித்திரங்களும்……




திமுக தலைவர் கலைஞரே எதிர்பார்க்காத வெற்றி என்று தான் இதனை சொல்ல வேண்டும். அந்தளவுக்கு சிறை நிரப்பும் போராட்டத்தை வெற்றி பெற வைத்துள்ளார்கள் திமுக தொண்டர்கள். 

போராட்டத்துக்கு வந்தால் கைது செய்து 15 நாள் சிறை வைப்பார்கள் என அரசின் காவல்துறை பத்திரிக்கைகள் மூலம் கிளப்பிவிட்டது. ஜாமீன் கூட கிடையாது என்றார்கள், தமிழக சிறைகளில் இடம்மிள்ளாவிட்டால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநில சிறைகளில் அடைக்கப்படுவார்கள் என்றார்கள். உளவுத்துறையினர் கூட எதிர்பார்க்கும் அளவுக்கு கூட்டம் வராது என்றார்கள். மீடியாக்கள் கூட சம்பாத்தவர்கள் தலைவர்கள், சிறைக்கு போகவேண்டியவர்கள் நாங்களா என தொண்டர்களா விரக்தியில் உள்ளார்கள் என ‘படம்’ காட்டினார்கள். சித்திரம் வரைந்தார்கள், கட்டுரை எழுதினார்கள். அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு மவுனமாக இருந்தார்கள் உடன் பிறப்புகள்.
அந்த மவுனத்துக்கான பதிலை ஜீலை 4ந்தேதி தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் வெளிப்படுத்தினார்கள். 8 மணி போராட்டத்துக்கு காலை 7 மணிக்கே தங்களது சொந்த செலவில் தங்களது ஊர்களில் இருந்து பேருந்து மூலம் போராட்டம் நடத்தும் இடத்துக்கு கட்சி கொடியோடு வந்து சேர்ந்தார்கள். கட்சி கொடி கொண்டு வராதவர்கள் நேராக கட்சியின் அலுவலகங்களுக்கு சென்று கொடிகளை வாங்கிக்கொண்டு வந்து போராட்ட களத்தில் நின்றனர். நிர்வாகிகள் தான் 8 மணிக்கு வந்தார்கள். பலயிடங்களில் 9 மணிக்கு மேல் கூட வந்தார்கள். 

நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவதை போல தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் ஒரு பிரச்சனைக்கூட செய்யாமல் ஆளும் அரசையும், ஜெ வையும் கண்டித்து கோஷமிட்டபடி கைதானார்கள். கைது செய்தவர்களை ஏற்றி போக கொண்டு வரப்பட்ட பேருந்துகள், போலிஸ் வாகனங்கள் தான் பத்தவில்லை. அந்தளவுக்கு முண்டியடித்துக்கொண்டு ஏறினர். அவர்களை மண்டபங்களில் கொண்டு போய் அடைத்தது போலிஸ். 4ந்தேதி மாலை காவல்துறையே 96 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் அத்தனை பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் காவல்துறை தலைவர் ராமானுஜம். 

சில பத்திரிக்கைகள் மட்டும் 1.5 லட்சம் பேர் கைது செய்யப்பட்டார்கள், 3 லட்சம் பேர் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்ற உண்மை விவரத்தை வெளிச்சம்போட்டு காட்டியது. பல டிவிக்கள், செய்தி ஏடுகள் அதிகமானோர், ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டார்கள் என தலைப்பு போட்டு தங்களது வெறுப்பை காட்டியது. 

இருக்காதே பின்னே, கட்சி அழிந்தது, ஒழிந்தது, இனி திமுக அவ்வளவே, கோஷ்டி சண்டை, உலக மகா ஊழல் செய்தவர்கள், குடும்ப கட்சி, தமிழனத்துக்கு துரோகம்  என திமுக ஆட்சிக்கட்டிலில் இருந்து இறங்கியது முதல் முகாரி பாடியவர்கள் இவர்கள். ஜெ அரசின் அடக்கு முறைக்கு பின்னரும் உடன்பிறப்புகள் சுறுசுறுப்பாக உள்ளதை கண்டு இவர்களுக்கு அரிப்பு. அதனாலயே சிறை நிரப்பும் போராட்டம் முடிந்தபின்னும் அதில் குறை, குற்றம் காண்கிறார்கள். 

திமுகவிற்குள் ஆயிரம் சண்டை சச்சரவுகள் இருக்கலாம். அது கணவன்-மனைவிக்குள் இருக்கும் சண்டை போல. வரும் போகும். அடுத்தவனால் பிரச்சனை எனும் போது எந்த தொண்டனும் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டான் என்பதை உணர்த்தியுள்ளார்கள். 

வெற்றிகரமான போராட்டத்துக்கு பின்னும் திமுகவை இணையதளம், செய்திஏடுகள், மீடியாக்களில் நடுநிலை என்ற பெயரில் விமர்சிக்கும் தோழர்களுக்கு ஒரு கேள்வி, இதுபோன்ற ஒரு போராட்டத்தை வேறு எந்த கட்சியாவது எதிர்கட்சியாக இருக்கும் போது நடத்தும் தைரியம் உண்டா என்ற கேள்வியை கேட்கும் தைரியம் உண்டா?, திமுகவை, அதன் தலைவர்களை, அவர்களின் குடும்பத்தை அநாகரிகமாக சித்திரம் வரையும் ஏடுகளின் ஒவியர்களே, வெளியிடுபவர்களே, ஜெவை பற்றியோ, சசிகலா அல்லது அவர்களது குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றி சித்திரம் வரையும் தைரியம் உண்டா?, கைதுக்கு பயந்து வாய்தா மேல் வாய்தா வாங்கும் ஜெவை பற்றி பதுங்கும் முதல்வர் என்ற தலைப்பு போட்டு செய்தி எழுத தில் உண்டா?, முதல்வரை பற்றி வேண்டாம் அவரது தோழி அ அவரது உறவினர்கள் பற்றி சித்திரம் வரைய அ தில்லான தலைப்பில் செய்தி வெளியிட திரணி இருக்கிறதா?. அது இருப்பவர்கள் மட்டும் திமுகவை விமர்சியுங்கள். நடுநிலை என்ற பெயரில் மற்ற கட்சிகளையும் விமர்சியுங்கள். வஞ்சகத்தையும், வெறுப்பையும் வைத்துக்கொண்டு திமுக மேல் பாய்பவர்கள் நாங்கள் அதிமுகவின் விசிறிகள் என அறிவித்து விடுங்கள். ஏன் நடுநிலை என்ற முகமுடி. 

2 கருத்துகள்: