திங்கள், ஏப்ரல் 03, 2017

ஏப்ரல் 2 - உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்.




1984ல் ராகேஷ் சர்மா என்கிற இந்தியர் விண்கலத்தில் பயணித்து விண்வெளி சென்ற முதல் இந்தியர் என வரலாற்றில் இடம் பிடித்தவர்.

1881ல் வ.வே.சு அய்யர் பிறந்த தினமின்று.

1805 ஏப்ரல் 2ந்தேதி பிறந்த ஆன்சு கிறிஸ்டியன் ஆண்டர்சன் என்னும் குழந்தை சிறுவயதிலேயே குழந்தைகளுக்கான நூலை எழுதினார். அதனால் அவரின் பிறந்த தினத்தை உலக சிறுவர் நூல் தினமாக உலகம் கொண்டாடுகிறது. 

அதேபோல் ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாக இந்த நாளை கொண்டாடப்பட்டு வருகிறது. 

ஆட்டிசம் என்பது ?. 

மூளை நரம்பு வளர்ச்சி குறைபாடு கொண்ட நோய்யாகும். கர்ப்ப காலத்தில் நோய் தாக்குதலால் வயிற்றில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிப்பு, மரபணு மாற்றத்தால் மூளை வளர்ச்சி பாதிப்பு போன்றவற்றால் பிறக்கும் குழந்தைகள் வளரும் போது துறுதுறுவென இருப்பார்கள், காது கேட்கும் யார் அழைத்தாலும் பார்க்கமாட்டார்கள், பேசமாட்டார்கள், சக குழந்தைகளுடன் விளையாடமாட்டார்கள், தனியாகவே இருப்பார்கள், கோபம் அதிகமாக வரும் இத்தகைய குழந்தைகளையே ஆட்டிசம் நோய் பாதிப்பு என்கிறது மருத்துவ உலகம். 

இங்கிலாந்தை சேர்ந்த டாக்டர் லியோ கானீர் என்பவர் 1943ல் குழந்தைகளுக்காக எழுதிய கட்டுரையில் தான் முதன் முதலில் ஆட்டிசம் பற்றி எழுதியாக கூறப்படுகிறது. 

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை என 2 வயதுக்குள் கண்டறிந்துவிட்டால் அந்த நோயை குணப்படுத்த முடியாது, ஆனால் அந்த குழந்தைகளை 4 முதல் 5 ஆண்டுகளுக்குள் சராசரி குழந்தையாக மாற்றம் செய்வதற்கான வாய்ப்பு 70 சதவிதம் உண்டு என்கிறது மருத்துவ உலகம். 

உலகத்தில் 1 கோடி குழந்தைகள் இந்த நோயால் ஆட்பட்டுயிருப்பதாக தெரியவருகிறது. ஆண்டுக்கு ஆண்டு ஆட்டிசத்தால் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்த நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் மருத்துவ ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.  2007ல் ஐக்கிய நாடுகள் சபை, ஆட்டிசம் நோய் தடுப்பதற்கான முறைகளை மருத்துவ உலகம் கண்டறிய வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துள்ளது. அதோடு ஏப்ரல் 2ந்தேதி ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாக கொண்டாட வேண்டும் என அறிவித்துள்ளது. 

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட லண்டனை சேர்ந்த ஸ்டீபன் வில்ட்ஷையர் என்பவர் ஏரியல்வியூவில் ஒரு நகரத்தை பார்த்தால் அடுத்த 30 நிமிடங்களுக்குள் ஓவியமாக வரைந்து விடுவார். இவரது சாதனைகளை பார்த்து இங்கிலாந்து அரசே இவரை கவுரவித்துள்ளது. பெண் எழுத்தாளர் கிராண்டின் என்பவர் கொலராடோ பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறை பேராசிரியராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை அன்பு செலுத்தி வளர்த்தால் பெரும் சாதனைகள் செய்வார்கள் என்பது நிகழ்கால வரலாறு.


ஏப்ரல் 1 ந்தேதி வரலாறு அறிந்துக்கொள்ள.

1 கருத்து:

  1. "ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை அன்பு செலுத்தி வளர்த்தால் பெரும் சாதனைகள் செய்வார்கள் என்பது நிகழ்கால வரலாறு." என்ற வழிகாட்டலை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு