வெள்ளி, மே 31, 2013

மாவோயிஸ்ட் அழிப்பு சாத்தியமா?. அரசு செய்வது சரியா ?.



சத்திஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் மாநிலத்தை ஆளும் பி.ஜே.பிக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய பேரணியின் போது சத்திஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், அவரது மகன் தினேஷ், முன்னால் மத்தியமைச்சர் வி.சி.சுக்லா, ஜில்வாஜீடும் என்ற கூலிப்படையை உருவாக்கிய பழங்குடி இனத்தை சேர்ந்த முன்னால் அமைச்சர் மகேந்திரகர்மா இதில் முக்கியமானவர்கள். கார்களில் அடர்ந்த வனப்பகுதி வழியாக இருபதுக்கும் மேற்பட்ட கார்களில் பாதுகாப்பு படையினரின் துணையோடு சென்றபோது சுக்மா மாவட்டம், தர்பாகாட் என்ற காட்டுப்பகுதியில் பெண் மாவோயிஸ்ட்டுகள் கார்களை மடக்கியுள்ளனர். கார்கள் நின்றதும் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்டுகள் கார்களை நோக்கி வெடிகுண்டை வீசியதோடு துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு சுட்டுள்ளனர். இறுதியியல் மகேந்திரகர்மா உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் சம்பவயிடத்தில் பலியாகினர். நந்தகுமார் படேல், அவரது மகன் தினேஷ் கடத்தி செல்லப்பட்டு காட்டுக்குள் வைத்து கொல்லப்பட்டனர், வி.சி.சுக்லா குண்டு காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்ட மாவோய்ஸ்ட்டுகள் அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், நந்தகுமார் மாநில உள்துறை அமைச்சராக இருந்தபோது எங்களுக்கு எதிராக துணை இராணுவப்படையை ஏவினார் என குற்றம்சாட்டியுள்ளனர். தண்டகாரன்யா பகுதியில் இருந்து துணை இராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். 

சத்திஸ்கரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மிக முக்கிய அரசியல் தலைவர்கள் மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற உடன் இந்திய ஒன்றிய அரசு மீண்டும் தவறான முடிவை எடுக்கிறது. அது மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்க கூடுதல் படைகளை அனுப்பியுள்ளது. அதில் குறிப்பிட தக்கது கோப்ரா படை. 

சத்;திஸ்கர் மாநிலம் பழங்குடி மக்கள் அதிகம் கொண்ட மாநிலம். இவர்கள் வாழும் பகுதிகளில் தாதுக்கள் அதிகம். அதை வெட்டியெடுக்க வேண்டுமென்றால் அந்த பகுதியில் உள்ள மக்களை விரட்டினால் தான் முடியும். அதை பெருமுதலாளிகளின் நிறுவனனங்கள் நேரடியாக இறங்கி செய்ய முடியாது. அந்தப்பணியைத்தான் அரசின் பாதுகாப்பு படையினரும், அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட கூலி படையினரும் செய்கின்றனர். 

டாடா, எஸ்ஸார் போன்ற நிறுவனங்கள் சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள தண்டவாடா மற்றும் பஸ்தார் மாவட்டத்தில் தாது வெட்டியெடுக்கும் ஒப்பந்தத்தை மாநில அரசோடும், மத்தியரசோடும் செய்துக்கொண்டுள்ளன. இப்படி மாநிலத்தின் பல பகுதிகளை பல பெரு நிறுவனங்கள் ‘குத்தகைக்கு’ எடுத்துள்ளன. இந்த பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களை கொண்டு சிலப்பணிகளை இந்த நிறுவனங்கள் செய்ய தொடங்கின. புpன் மெல்ல மெல்ல பழங்குடி இன மக்கள் வாழும் கிராமங்களை காலி செய்ய வைத்து விரட்ட தொடங்கினர். வேலையில் இருந்தும் துரத்தினர். வுhழ்விடங்களை இழந்தும், வாழ வழியில்லாமல் தவித்த போது தான் பழங்குடியினர்க்கும் - பெருமுதலாளிக்கும் மோதல் தொடங்கின. புழங்குடி இன மக்களை விரட்டினால் தான் தொழில் செய்ய முடியும். 

இந்தயிடத்தில் தான் பெருமுதலாளிகள் அரசாங்கத்திடம் முறையிடுகிறார்கள். முhநில அரசாங்க படைகள் பாதிக்கப்பட்ட மக்களை துரத்த, அவர்கள் பதிலுக்கு தாக்க மோதல் தொடங்கியது. இதனை தேர்தல் பாதையில் நம்பிக்கையில்லாத மாவோயிஸ்ட் அமைப்பின் பல்வேறு பிரிவுகள் பாதிக்கப்பட்ட பழங்குடி இன மக்களுக்கு ஆதரவு தருகிறார்கள். போராட்ட களத்துக்கு வருகிறார்கள். பாதுகாப்பு படைகளை போல இவர்களும் பாதிக்கப்பட்டவர்கள் கையில் ஆயுதங்களை தருகிறார்கள், பயிற்சி தருகிறார்கள், மோதுகிறார்கள். பிரச்சனை பெரியதாக மத்திய பாதுகாப்பு படைகள் களத்துக்கு வருகின்றன. இவர்களும் மக்களை விரட்ட தொடங்கினர். ஈவு இறக்கம்மின்றி தங்கள் உரிமைக்காக போராடியவர்களை சுட்டுக்கொல்கின்றன அரசப்படைகள். இது மனித உரிமையாளர்களால் பிரச்சனையாக்கப்படுகின்றன. 

மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக மத்திய – மாநில அரசுகளின் திட்டத்தில் உருவாக்கப்பட்டன கூலிப்படைகள். அதில் முக்கியமானது சல்வா ஜீடும் என்ற அமைப்பு. இதனை மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக உருவாக்கினார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகேந்திரா கர்மா. இந்த படைக்கு பெரு நிறுவன முதலாளிகள் நிதி தந்தனர். மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்பு படையினரை கொண்டு ஆயுதங்கள் தரப்பட்டது. இந்த படை பசுமை வேட்டை என்ற பெயரில் மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவான கிராமங்களில் புகுந்து வேட்டை நாய்களை போல மக்களை வேட்டையாட தொடங்கினர். வீடுகளை கொளுத்துவது, பெண்களை பாலியல் வல்லுறுவு செய்வது, இளைஞர்களை கொல்வது என்ற பணியை செய்தனர். இத்தனையும் செய்துவிட்டு அதை மாவோயிஸ்ட்டுகள் மேல் சுமத்துவதை வழக்கமா கொண்டு இருந்தனர். அரசாங்கத்தின் முழு ஆதரவு இருந்தததால் இவர்கள் ஆட்டம் எல்லை மீறியது. பதிக்கப்பட்ட மக்களுக்காக பாதுகாப்பு முகாம் திறக்கிறோம் என அறிவித்த மத்திய – மாநில அரசாங்கங்கள் பழங்குடி இன மக்களை அவர்களது வாழ்விடங்களில் இருந்து இழுத்து வந்து முகாம்களில் தள்ளினர். முகாம்களுக்கு வெளியே சல்வா ஜீடும் அமைப்பு துப்பாக்கிகளோடு நின்றது. அரசாங்கத்துக்கு எதிரான மனித உரிமை போராளிகள், பத்திரிக்கையாளர்கள், இயக்கங்கள் இந்த அரச கூலிப்படைகளால் மிரட்டப்பட்டனர். 

இந்த அமைப்பால் 2005 முதல் 2007 வரை 644 பழங்குடி கிராமங்களில் இருந்து 50000 பேரின் வாழ்விடங்களை காலி செய்ய வைத்து 20 முகாம்களில் அடைத்து வைத்து ஒருநாளைக்கு 50 ரூபாய் தந்துள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாடோடிகளாக மாறியுள்ளனர். முகாம்களில் அடிப்படை கல்வி கிடையாது, மருத்துவ வசதி சுத்தமாக கிடையாது என்பதை டெல்லியில் இருந்து சென்ற உண்மை அறியும் குழு ஒன்று அறிந்து அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு சல்வா ஜீடும் என்ற அமைப்பிடம்மிருந்து ஆயுதங்கள் கலையப்பட வேண்டும், அரசாங்கங்கள் இது போன்ற அமைப்புகளை நடத்துவது அதிர்ச்சியளிக்கிறது என 2011ல் உத்தரவிட்டது. உத்தரவு வருவதற்க்குள் இவர்கள் செய்த அட்டூழியங்கள் கணக்கில் அடங்கா. 

உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது என்பதற்காக அரசாங்கங்கள் கூலி படைகளை கலைத்துவிடவில்லை. பெயர்களை மாற்றி வேறு பெயர்களில் இயங்க வைத்துள்ளன. சத்திஸ்கர் பாதுகாப்பு துறை, கோயா கமாண்டோ படையை சூர்யா என்ற ரவுடியின் தலைமையில் உருவாக்கி நிதி, ஆயுத உதவியை செய்து வருகின்றன என அந்த மாநில உள்துறை அமைச்சரே 2012ல் வெளிப்படையாக குற்றம்சாட்டிய நிகழ்வு நடந்துள்ளனன. 

2012 ஜீன் 28ந்தேதி பிஜாப்பூர் மாவட்டத்திலுள்ள சர்குகேடா என்ற கிராமத்தை சேர்ந்த குழந்தைகள், ஊர் பெரியவர்கள் என 28 பேரை சுட்டுக்கொன்றது துணை இராணுவப்படை. மாவோயிஸ்ட்டுகளுடனான மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என அறிவித்தார் துணை இராணுவப்படையின் இயக்குநராக இருந்த விஜயகுமார். ஆனால் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் அப்பாவி கிராமத்து மக்கள் என்பது வெட்ட வெளிச்சமானபோது மத்திய மாநில அரசாங்கங்கள் வாய்மூடி மவுனியாக இருந்தன. நீண்ட போராட்டத்துக்கு பின்பே உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை நடத்தப்படும் என சத்திஸ்கர் அரசு அறிவித்தது. மாவோயிஸ்ட் தளபதியான கிஷன்ஜீ கொல்லப்பட்டபோது வெற்றி வீரராக தன்னை காட்டிக்கொண்ட விஜயகுமார், அப்பாவி பழங்குடி மக்களை கொன்றதில் அவரது முகமுடி கிழிந்தது. 

தற்போது அரசியல்வாதிகள் மீதான தாக்குதலுக்கு பின் மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்க கூடுதல் படையை இறங்கி விட்டுள்ளது மத்தியரசு. மீண்டும் தவறான முடிவை எடுத்துள்ளது. 

மாவோயிஸ்ட்டுகள் என்பவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்களோ, பாகிஸ்தான் போல் ஜிகாத் என்ற பெயரில் இந்தியாவுக்குள் அனுப்பப்பட்டவர்களோ, இந்திய ஒன்றியத்தை சிதைக்க சீனாவால் உருவாக்கப்பட்ட போலி போராளி அமைப்புகளோ அல்ல. அவர்கள் இந்திய அரசால், இந்திய பாதுகாப்பு படைகளால் சிதைக்கப்பட்ட, சின்னப்பின்னமாக்கப்பட்ட, பெருமுதலாளிகளுக்காக விரட்டப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து உருவானவர்கள். 

பெருநிறுவனங்களால் பாதிக்கப்படும் மக்களின் பிரச்சனை தீரும் வரை மாவோயிஸ்ட்டுகளை அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது. கொல்ல கொல்ல மீண்டும் வந்துக்கொண்டே தான் இருப்பார்கள். ஏன் எனில் மாவோயிஸ்ட் அமைப்பில் உள்ளவர்கள் தங்களுக்கு வசதி வேண்டும் என போராடவில்லை. தங்களது அடிப்படை உரிமைக்காக போராடுகிறார்கள். ஒருவனின் வீட்டையும், நிலத்தை பறிக்கும் போது அவன் வாழ வழியில்லாமல் எதிர்க்கிறான். அவனுக்கு ஏன் வாழ வழியில்லாமல் போனது என்பதை அரசாங்கங்கள் ஆராய வேண்டும். ஆனால் அரசாங்கங்கள் ஆராயாது ஏன் எனில் அதற்கு காரணம் தெரியும். பின் என்ன செய்ய?. அவனுக்கான மாற்று வழிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அதைத்தான் செய்ய மறுக்கின்றன அரசாங்கங்கள். மறுக்க காரணம், அரசாங்கங்கள் என்பது மக்களுக்கானதல்ல. பெருநிறுவனங்களுக்கானது, அரசியல்வாதிகளுக்கானது. 

அதனால் இந்த ‘யுத்தம்’ தொடரவே செய்யும். பாதிக்கப்படும் மக்கள் மாவோயிஸ்ட்டுகளாக மாறவே செய்வர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக