வியாழன், நவம்பர் 15, 2012

தாத்தாவை போல பேரன். காதலோ காதல்.




ஹீனாவின் காதலைப்பற்றி எழுதிய வங்க தேச பத்திரிக்கை ஆசிரியர் கைது செய்யப்பட்டதில் மீண்டும் பரபரப்பாகியிருக்கிறது பாகிஸ்தானின் மேல்மட்ட காதல் விவகாரம்.
பாகிஸ்தான் வெளியுறத்துறை அதிபர் ஹீனா ரப்பானி. 35 வயது அழகு பெண்மணி. இரண்டு குழந்தைகளுக்கு தாய். பொருளாதார நிபுணி. 1977ல் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரத்தில் பிறந்த மங்கை. பஞ்சாப் மேல்தட்டு பெண்களுக்கே உள்ள பேரழகு. பஞ்சாப் மாநிலத்தின் முன்னால் கவர்னர் குலாம் முஸ்தபா கார் மகள் தான் இவர். 

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் 2002ல் பாராளமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2008ல் பொருளாதாரத்துறையின் துணை அமைச்சராக முதலில் நியமிக்கப்பட்டார். 2010ல் நிதித்துறையின் இணை அமைச்சராக மாற்றப்பட்டார். 2011ல் வெளியுறவுத்துறையின் இணை அமைச்சராக இருந்தவர் தற்போது அந்த துறையின் அமைச்சராக உயர்ந்து நாடுகளுக்கிடையே கண்டம் விட்டு கண்டம் பறந்து வருகிறார்.

இவர் செல்லும் நாடுகளில் எல்லாம் இவரின் பணிகள் பற்றி கொஞ்சமாக பேசிவிட்டு இவரது அழகை பற்றி வர்ணித்து பக்கங்களை நிரப்புகிறார்கள். இவரின் பேச்சை விட இவரின் அழகை தான் மீடியாக்கள் கவர் செய்கின்றன. இவரின் வயதும், அழகும் தான் செய்தியாகிறது.   

இந்த சிறிய வயதில் அதுவும் மிக முக்கிய துறையான வெளியுறவுத்துறை என்ற பதவி உயர்வுகளுக்கு பின்னால் ஒரு மெல்லிய காதல் கதை ஓடுவதாக பாகிஸ்தான் பரபரத்துக்கிடக்கிறது. ஹீனாவும் அவரது காதலரும் முத்தம் தந்துக்கொண்டு இருக்கும் ரொமான்ஸ் படங்கள் இணையத்தில் பரவியுள்ளன. ஹீனா காதலருடன் நிரந்தரமாக இணைய கணவரை விவாகரத்து செய்யவுள்ளனார் என்கிறது மீடியா உலகம். காதல்யில்லை என ஹீனா ஹீனஸ்வரத்தில் முழங்குகிறார். மீடியாக்கள் சொல்வது பொய் என ஹீனா கணவர் பெரோஸ் குல்கார் உதவிக்கு வருகிறார். 



ஆனால் ஒரு தரப்பு மட்டும் அமைதியாக இருக்கிறது. அது ஹீனாவின் காதலர் என சுட்டிக்காட்டப்படும் பிலால். ‘மக்கள் தலைவி’ என புகழப்பட்டவரும் எதிரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னால் ஜனாதிபதி பெனாசீர்பூட்டோ – இன்னால் ஜனாதிபதி சர்தாரி தம்பதியின் மகன் பிலால். தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் இந்த பிலால். 1988ல் பிறந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் மாடன் அரசியல் படித்த இளைஞன். திருமணம்மாகாத பாகிஸ்தான் பெண்களின் கனவு நாயாகனாக வலம் வர தகுதி படைத்த பேரழகன். ஹீனாவை விட 11 வயது இளையவர். இன்னமும் இவர் ஹீனா மீதான காதலை மறுக்கவில்லை. 

பிலால் தன் தாத்தாவின் வரலாற்றை படித்திருப்பார். அல்லது அவரின் அணுக்கள் இவருக்கும் வந்திருக்கும். அதனால் தான் அவரைப்போலவே ‘வாழ முற்படுகிறார்’. அரசியல் அறிந்தவர்களுக்கு தெரியும் பிலாலின் தாத்தா பூட்டோ என்பது. 

கிழக்கு பாகிஸ்தானில் 1960களில் வசித்த மிகப்பெரிய கோடீஸ்வரர் அப்துல் அஹத். தன் தொழில்க்கு வெளியுறவுத்துறை அமைச்சரின் ‘ஆசி’ இருந்தால் பிற நாட்டு தொழிலதிபர்களின், அதிகாரிகளின் நட்பு கிடைக்கும் என ஆராய்ந்து அப்போது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பூட்டோவை அடிக்கடி சந்திப்பார். ஒரு சந்திப்பின் போது தன் இல்லத்துக்கு விருந்துக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். பூட்டோ அப்துல்லின் மாபெரும் மாளிகைக்கு சென்றார். அங்கு தான் அந்த அழகியை கண்டார். பேரழகி. ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்திருந்தாலும் வெளிநாட்டில் படித்து, வளர்ந்த அவருக்கு ‘அந்நிய மோகம்’ அதிகமாகவே இருந்தது. 

அப்துல் அஹத் அந்த அழகியை அழைத்தார் இது என் மனைவி ஹஸ்னா என அறிமுகப்படுத்தினார். பூட்டோவின் காதல் மனது குழப்பமானது. இந்த அழகு சிலை இவனின் மனைவியா என தவித்தபோது எதிரில் இருப்பவரின் மனதை நன்கறிந்தவனே நல்ல வர்த்தகன். அதன்படி பூட்டோவின் மனதை அறிந்த வர்த்தகர் அப்துல் தன் மனைவியிடம் இவர் நம் முக்கிய விருந்தாளி இவருக்கு சிறப்பான விருந்து தா என சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

பூட்டோவின் பார்வையில் அவர் மீதான காதல் ஏக்கத்தை நன்கு அறிந்த ஹஸ்னா தன்னையே விருந்தாக்கினார். தான் இரு பெண்களின் கணவன் என்பதை பூட்டோ மறந்தார். தான் மற்றொருவனின் மனைவி என்பதை ஹசீனா மறந்தார். காதல் இருவருக்குள்ளும் பொங்கியது. கிழக்கு பாகிஸ்தான் பக்கம் எப்போதாவது வந்தவர் இப்போது கிழக்கு பாகிஸ்தானில் ஹஸ்னாவின் இல்லம்மே என் உலகம் என மாறிப்போனார். பாய் விரித்து, அதில் மல்லிப்பூ தூவி, தாகத்துக்கு பால் சொம்பு வரை வைத்த அப்துல்க்கு அதற்கு பிரிதிபலனாக தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொண்டார். கோடிகளை சம்பாதித்தார்.

பூட்டோ அமைச்சர் பதவியை துறந்து அரசியல் கட்சி தொடங்கினார். அதுவரை பூட்டோவை சுற்றி சுற்றி வந்த அப்துல் வேறு அதிகாரத்தை தேடிப்போய்விட்டார். அங்கும் தன் மனைவியை பாகடை காயக்கா முயல. ஹஸ்னா – அப்துல் திருமணம் தலாக்கில் முடிந்தது. எதிர்க்கட்சி தலைவராக இருந்த “பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்“ பூட்டோவை காலமும், மக்களும் அவரை பிரதமராக்கினர். அப்போது, கிழக்கு பாகிஸ்தான் மக்கள் தனி நாடு வேண்டும் என கேட்டு போராடினர். 1971ல் பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் என்ற நாட்டை உருவாக்கி தந்தார் இந்திராகாந்தி.

எதிர்கட்சி தலைவராக இருந்தாலும், பிரதமராக மாறினாலும் தன் காதலி ஹஸ்னாவை மறக்க முடியாமல் தவித்தார் பூட்டோ. நாடு பிளவுக்கு பின் இந்த ஏக்கம் அதிகரித்தது. 

ஹஸ்னா இருந்தது வங்க தேசத்தில். பூட்டோ பாகிஸ்தான் பிரதமர். ஹஸ்னா பூட்டோவை நினைத்து உருகினார். பூட்டோ வாடினார் வதங்கினார். பூட்டோ அலுவல் ரீதியாக இந்தியா வந்தார். இந்திராகாந்தியை சந்தித்தார். தன் காதலியை பாகிஸ்தானுக்கு அனுப்பிவையுங்கள் என கோரிக்கை விடுத்தார். இந்திரா வங்கதேச பிரதமரிடம் பேசினார். அடுத்த சில தினங்களில் ஹஸ்னா பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இருந்தார். இரண்டாவது மனைவி நசரேத் கராச்சி, முதல் மனைவி அமீர்பேகம் லார்க்கானா என்ற இடத்தில் தங்கவைத்திருந்தார். ஹஸ்னாவை முறைப்படி திருமணம் செய்துக்கொண்டார் பூட்டோ. நசரேத் எதிர்த்தார், தற்கொலை முயற்சி மேற்க்கொண்டார் பிரதமரின் மனைவி என்கிற பதவி உனக்கு, என் இதயம் ஹஸ்னாவுக்கு என்றார். 

1977 பொது தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானாலும் பூட்டோவுக்கு எதிராக எதிர்கட்சிகள் பிரச்சாரம் செய்தன. உடனே ஹஸ்னாவை கோடிகளில் பணம், தங்கத்தை தந்து லண்டனில் பாதுகாப்பாக தங்கவைத்தார். இராணுவப்புரட்சியின் மூலம் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. இராணுவ ஆட்சியில் சிறையில் இருந்த பூட்டோ விரும்பி கேட்டது ஒரே ஒருமுறை நான் ஹஸ்னாவை பார்க்க வேண்டும் என்பதே. நசரேத் குடும்பம் அதை முற்றிலும் நிராகரித்தது. பாகிஸ்தான் வந்தால் அவர் விசாரணைக்கு ஆளாவார் என்றது இராணுவ அரசு. தன் காதல் தேவதையை காண முடியாத ஏக்கத்தில் இருந்தவரை தூக்கிலிட்டு கொன்றது இராணுவம். இதோடு நிறுத்துவோம். 



தாத்தாவை பேல பேரன் உள்ளார். என்ன பிலால் தன்னை விட 11 வயது மூத்தவரை திருமணம் செய்துக்கொள்வது தான் இடிக்கிறது. சரி என்னச்செய்ய அதிகாரம், பணம் இருக்கும் இடத்தில் இது சகஜம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக