திங்கள், செப்டம்பர் 04, 2017

ராஜாவின் கிறுக்கல்கள்........



சாதி எரிந்துக்கொண்டு இருக்கும்….

நீங்கள் எங்களை கல்வியில் ஏறி மிதிக்கிறிர்கள், ஆனால், நாங்கள் அதையும் மீறி ஏறிக்கொண்டே இருக்கிறோம்...
 
நீங்கள் எங்களை வேலைவாய்ப்பில்  புறக்கணிக்கிறீர்கள். ஆனால், நாங்கள் பறந்துக்கொண்டு இருக்கிறோம்...
 
 நீங்கள் எங்களின் காதலை கசக்கி எரிந்துக்கொண்டே இருக்கிறீர்கள்... ஆனால், நாங்கள் பூத்துக்கொண்டே இருக்கிறோம்...
 
 ஒருநாள் நாங்கள் வாழ்ந்துக்கொண்டு இருப்போம்... ஆனால், உங்கள் சாதி எரிந்துக்கொண்டு இருக்கும்...

சண்டை………….

பகல் சண்டையில் உன்னை வெல்ல விடுவதே... இரவுச்சண்டையில் நான் வெல்லத்தான் என்பதை அறிந்தவள் நீதானேடீ...

கோவைப்பழம்……..

நித்தம் நித்தம் கோபப்படும் மனைவியை அன்பாய் பார்த்தால் கோபமும் கோவைப்பழமாய் தித்திக்கும்...

உணர்வுகள்………..

உன் பெயரோடு என் பெயர் மட்டும் இணையவில்லை.... என் உணர்வுகளும் இணைந்தே வந்ததடீ....

மழை கவிதைகள்……….
 1.

மரகத வீணையின் ஒலியை மயக்கும் மழை துளியே...
என்னவளின் மனதை மயக்க வழிச்சொல்லேன்...

2.
 
அவள் கண்கள் காதல் கணை வீசீயது...
கன்னங்கள் கன்னம் வைக்க துடித்தன...
இதழ்கள் இதழ் பேச இம்சித்தன...
விரல்கள் விளையாட துடித்தன... அவனோ வீதியில் விளையாடிக்கொண்டு இருந்தான் மழையோடு.....

3.
 
முரண்பட்ட நெஞ்சை, முட்ட வைக்கும் மந்திரம்... - மழை.



காதல் கலவி……….
 1.

முன்னழகில் முரணாகி...
பின்னழகில் பித்தாகி...
கலவியில் முத்தெடுக்க முயல்வதே காதல்...

2.
 
கலவியில், உன் இதழ்கள் பேசாமல்  என் இதழ்களை, பேச வைக்கும் தந்திரத்தை அறிந்தவள்  நீ மட்டுமே...

 3.

உன் தனங்கள் என்னை தள்ளாட வைக்கிறது...
உன் தவில்களால் என் விரல்கள் தவிக்கிறது... நீயோ என்னை தவிர்க்கிறாய்... 
 -' ஆடி' யே எங்களை ஆடவிடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக