செவ்வாய், டிசம்பர் 06, 2016

'ஆணவம்' மறைந்தது. நிம்மதியாக உறங்குகள்...




தமிழக முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5ந்தேதி மறைந்தார். சர்வாதிகரிகளை மிஞ்சிய சர்வாதிகாரி ஜெ மறைந்தார் என எழுதலாம் என நினைத்தேன். ஆனால் கொஞ்சம் தயக்கம். இறந்தவர்களை பற்றி தூற்றக்கூடாது என்பது தமிழக மரபு. அதனால் அதிகமாக எழுதவில்லை. அதற்காக அவரை புனிதராக்குவதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்தியாவில் இப்போதுள்ள முதலமைச்சர்களில், இதற்கு முன்பு இருந்தவர்கள், இனி முதலமைச்சராக இருக்கபோகிறவர்கள் ஜெ போல் ஆணவமாக இருந்ததுயில்லை. 

அவர் மீதான நீதிமன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றத்தையே தன் காலுக்கு கீழ் வைத்திருந்தவர். நீதியை நிலைநாட்டக்கூட ஜெயாவை எதிர்க்க முடியாமல் முனுககூட முடியாதவர்களாக தான் இருந்தார்கள் பல நீதிமான்கள். நீதிமன்றம் என்பது அதிகாரம் இருந்தால் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தலாம் என இந்திய அரசியல்வாதிகளுக்கு காட்டியவர். 

சட்டங்களை, விதிகளை துச்சம்மென தூக்கி எறிந்தார். எதிர்கேள்வி வரும்போதுயெல்லாம் என்னை கையை பிடித்து இழுத்தார், சேலையை உருவினார், நான் பெண் என்பதால் எதிர்க்கிறார்கள் என பதில் தந்து எதிர் குரல்களை அடைத்தார். 

தன் அதிகாரத்தை பயன்படுத்தி பிடிக்காதவர்கள் மீது கஞ்சா வழக்குகளாக பாய்ச்சினார், ஆள் வைத்து அடித்தார், ஆசிட் வீசினார். 

சட்டமன்றத்தை நாடக கொட்டையாக மாற்றியவர். அங்கு அவர் மட்டும்மே எல்லா வேடங்களையும் ஏற்றிருந்தார். சட்டமன்ற விதிகளை தன் ரோமமாக நினைத்தவர். அவர் செய்த சட்டவிதி சிதைவுகளை சரிச்செய்ய இன்னும் பலப்பல ஆண்டுகள் ஆகும்.  

உயர் அதிகாரிகளை பந்தாடுவதாக இருக்கட்டும், அதிகாரத்தில் உள்ள ஆண்களை காலில் விழவைப்பதாக இருக்கட்டும், ஒரே கையெழுத்தில் 10 ஆயிரம் சாலை பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாகட்டும், எஸ்மா, டெஸ்மா மூலம் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை வேலையை விட்டு துரத்துவதாகட்டும், அவர்களை கைது செய்வது போன்ற முட்டாள்தனமான முரட்டு தனத்தை தைரியம் என பாராட்டி புலங்காகிதம் அடைவதே அவரின் விசுவாசிகளின் வேலை. 

எம்.ஜி.ஆர்க்கு பின் கட்சியில் தனக்கு நம்பகமானவர்களை அவர் உருவாக்கவில்லை. அதற்கு பதில் அடிமைகளை உருவாக்கினார். அந்த அடிமைகளை ஏவல் நாயாக பயன்படுத்தினார். அவர்களையே உயர்த்தி வைத்தார். இந்த அடிமை முறை தமிழகத்தில் அதிமுகவை பார்த்து அனைத்து கட்சிகளுக்கும் பரவியது. இந்த அரசியல் அடிமைத்தனம் போக இன்னும் ஒரு நூற்றாண்டு தேவை. 

அரசியல் மூலம் அதிகாரத்துக்கு வந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடிக்கலாம், அதை பாதுகாக்கலாம், அதை வைத்து யாரை வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கலாம் என இளைய தலைமுறைக்கு கற்று தந்தவர். இப்படி ஒரு சமூகத்தை தன் சுயநலத்துக்காக ஜோக்கராக்கியவர் இன்று மரணம் அடைந்திருக்கிறார்.
அவரின் மரணத்திலும் ஏகப்பட்ட மர்மங்கள். இதை அந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள், ஏன் இப்போது முதல்வராக வீற்றிருக்கும் பன்னீர்செல்வம், 31 அமைச்சர்கள் உட்பட யாரும் கேள்வி கேட்கவில்லை. எதனால் அவருக்கு மரணம் வந்தது என்பது கட்சியினருக்கோ, பொதுமக்களுக்கோ தெரியவில்லை. இது எத்தனை பெரிய அநியாயம். யாரும் இதுப்பற்றி கேள்வி எழுப்பவில்லை. அதற்கு பதில் அவரை புனிதராக்கும் பணியை தான் செவ்வனே செய்கிறார்கள். 

மறைந்தபின் அவரை புகழக்கூடாதா என கேட்கிறார்கள். நல்லதை புகழட்டும். ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதும், தனிப்பட்ட முறையிலும் அவரால் பயன்பெற்றவர்கள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் இருப்பார்கள். அவர்கள் புகழ்கிறார்கள். அந்த கருத்துக்களை நிச்சயம் வரவேற்கிறேன். எனக்கு கூட தனிப்பட்ட முறையில் ஒரு விஷயத்தில் ஜெவை எனக்கு ரொம்ப பிடிக்கும். இவர் நமக்கு நம்பகமானவர் என தெரிந்தால் அவர்களை எப்போதும், எங்கும் அவர் கைவிட்டதில்லை, உதவிக்கு பதில் உதவி செய்து தன் நன்றிக்கடனை தீர்த்துக்கொள்வார். அதற்காக அவரது ஆணவ ஆட்சியை, அதிகார திமிறை விமர்சிக்காமல் இருப்பது என்பது இன்னும் பல தலைவர்களை நாம் அந்த தன்மையில் உருவாக்கவே வைக்கும், அது தமிழகத்தை சவக்குழியில் தள்ளிவிடும், ஜாக்கிரதை.   

2 கருத்துகள்:

  1. இந்த சமயத்தில் இது போன்ற தலைப்பில் எழுத ஒன்று தனிமனித வெறுப்பு வேண்டும் அல்லது நாகரீமின்மை வேண்டும். இரண்டில் எது என்பது உங்களுக்கே வெளிச்சம்.

    பதிலளிநீக்கு
  2. காரிகனுக்கு,

    உங்களுடைய கருத்துக்கு ஒன்று அறியாமை காரணமாக இருக்கும் இல்லையெனில் "அவாள்" காரணமாக இருக்கலாம்

    பதிலளிநீக்கு