வெள்ளி, மே 15, 2015

ஜெவின் சொத்து பட்டியலின் ஒரு பகுதி.




திமுக தலைவர் குடும்ப சொத்து மதிப்பு என ஒரு பட்டியலை அடிக்கடி வளை தளங்களில் வெளியிடுகிறார்கள். மிகப்பெரிய குடும்பத்துக்கு அவ்வளவு சொத்துக்கள் இருப்பது ஆச்சர்யமில்லை. ஆனால் நான் தனி மனுஷி எனக்கு குடும்பமா குட்டியா என பொன்மொழி உதிர்த்தவருக்கு உள்ள சொத்துக்களின் பட்டியலை படித்தபோது நிச்சயமாக மலைத்து போய்விட்டேன். 


1991 - 1996 ல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வாங்கி குவித்த சொத்துக்களின் பட்டியலை அப்போது மகஇக சிறுவெளியீடாக வெளியிட்டுள்ளது. ஒரு தேடலின் போது அந்த பட்டியல் கிடைத்தது. அப்படியே உங்கள் பார்வைக்கு. அப்போதே அவ்வளவு கொள்ளையென்றால் இப்போது எவ்வளவு கொள்ளையடித்து இருப்பார்கள் என நினைத்தபோது அதிர்ச்சியாக இருந்தது. 

ஜெயா சசி கும்பலின் ஊழல் சாம்ராஜ்யம் குறித்த விபரங்கள்.

வாங்கிக் குவிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்கள்
  • மன்னார்குடி அருகே ரிஷியூரில் முப்போகம் விளையக்கூடிய 80 ஏக்கர் பூமி; இதில் ஜெயா சசிகலா வகையறாக்கள் ஓய்வெடுத்துத் தங்கிச்செல்ல பண்ணை வீடு.
  • வாழாச்சேரியில் 21 ஏக்கர் நஞ்சை நிலம்
  • மூவாநல்லூரில் 15 ஏக்கர் தென்னந்தோப்பு
  • இலஞ்சிக்குடியில் மா, பலா, தென்னை மரங்கள் கொண்ட 250 ஏக்கர் தோப்பு
  • வல்லத்திற்கு அருகிலுள்ள ஆலக்குடி கிராமத்தில் சிறு விவசாயிகளை மிரட்டி வளைக்கப்பட்ட 250 ஏக்கர் நிலம்
  • சிதம்பரனார் மாவட்டத்தில் அரசகுளம், வல்லக்குளம், கிளாங்குளம், கால்வாய், மீரான்குளம், சேரங்குளம் கிராமங்களில் பாமாயில் விதை விவசாயத்திற்காக 2000 ஏக்கர் நிலம்
  • பசும்பொன் மாவட்டத்தில் மாங்குளம், விளாக்குளம், புளியங்குளம், எஸ். காரைக்குடி, தெற்கு சந்தனூர், வடக்கு சந்தனூர் உள்ளிட்ட 25 கிராமங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு அரசு கொடுத்த நிலங்கள், மற்றும் களம் புறம்போக்கு, கால்வாய் ஓடை புறம்போக்கு, மேய்ச்சல் காடுகள் என கிராம பொது நிலங்கள் உள்ளிட்ட 13,000 ஏக்கர் பூமி
  • பட்டுக்கோட்டை அதிராம்பட்டிணம் சாலையில் பள்ளிக்கொண்டான் கிராமத்தில் 15 பம்ப் செட் கொண்ட 60 ஏக்கர் தென்னந் தோப்பும், நீச்சல் குளத்துடன் உள்ள மாளிகையும்,
  • அதிராம்பட்டிணம் மதுக்கூர் சாலையில் ராசியங்காட்டில் 6 பம்ப் செட் கொண்ட 20 ஏக்கர் தென்னந்தோப்பு
  • சென்னைக்கு அருகே பூண்டி ஏரியை ஒட்டியுள்ள வேளகாபுரம் கிராமத்தில் 50 ஏக்கரில் மாந்தோப்பு
  • தஞ்சை குருங்குளம் வட்டத்தில், உடையான்பட்டி கிராமத்தில் 230 ஏக்கர் முந்திரித் தோப்பு.
  • கும்பகோணம் ஒரத்தநாடு சாலையில் தட்டுமால் படுகை கிராமத்தில் 15 ஏக்கரில் தென்னந்தோப்பு
ஆடம்பர அடுக்கு மாளிகைகள் வீட்டு மனைகள்
  • தஞ்சையில் அருளானந்த நகருக்கும், பிலோமினா நகருக்கும் இடையே சசிகலாவின் கணவன் நடராசனுக்கும், சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனுக்கும் சொந்தமான பளிங்குக்கல் பதித்த இரு மாளிகைகள்
  • நாகை வெளிப்பாளையத்திலுள்ள 89 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள மேட்டு பங்களா
  • சென்னைக்கு அருகே கொரட்டூரில் 8 கோடி ரூபாய் செலவில் வளர்ப்பு மகன் சுதாகரனின் ஆடம்பர மாளிகை
  • சென்னையில் கிண்டி தொழிற்பேட்டையில் 3 கோடி மதிப்புள்ள 2 அடுக்கு பட்டை தீட்டிய கருங்கல் கிரானைட் மாளிகைகள்
  • மதுரையில் உள்ள பிரமாண்டமான தங்கம் தியேட்டர்
  • சென்னை லஸ் பகுதியிலுள்ள 1 கோடியே 13 லட்சம் மதிப்பு கொண்ட நாகேஸ்வரராவ் மாளிகை.
  • மதுரை கிருஷ்ணராய தெருவில் உள்ள 18 கோடி ரூபாய் மதிப்புடைய 37,114 சதுர அடி பரப்பு கொண்ட காலி மனையும், அடுக்கு மாடி கட்டிடங்களும்
  • மன்னார்குடியில் திவான் பங்களா
  • மகாபலிபுரத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் திருப்போரூர் செல்லும் வழியில் பையனூர் கிராமத்தில் 50 ஏக்கர் தோப்பில் மையமாக அமைந்த நவீன வசதிகள் கொண்ட ஆடம்பர பங்களா
  • ஹைதராபாத்தில் 100 ஏக்கர் திராட்சை தோட்டம். அதன் நடுவில் கோட்டை போன்று வடிவமைக்கப்பட்ட ஆடம்பர பண்ணை வீடு; செகந்திராபாத் மேற்கு மர்ரேட்பள்ளி பகுதியில் இரண்டு அடுக்கு மாளிகை. இவ்விரண்டு மாளிகைகளிலும் பாதுகாப்பு வசதிக்காக நவீன மின்னணு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆலைகள் தொழில்களில் முதலீடு
  • தஞ்சையில் நவீன வசதிகள் கொண்ட விநோதகன் மருத்துவமனை
  • திருவாரூர் அருகே வண்டாம்பாளையம் எனுமிடத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நெல் அரவை ஆலை. ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் என்ற இவ்வாலை சசிகலாவின் கணவர் நடராசனின் சகோதரர் சம்பந்த மூர்த்தி பெயரில் உள்ளது. இங்கிருந்து தான் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் சமீபத்தில் கைப்பற்றப்பட்டன.
  • தஞ்சை அருகே விளாரில் நடராசனின் மூத்த அண்ணன் சாமிநாதனின் பெயரிலுள்ள ’’மருதப்ப மன்னையார் ஆலை’’.
  • தஞ்சை மேம்பாலம் அருகே சிறுவர் சீர்திருத்தப் பள்ளி மைதானத்தில் எஸ்.டி.எஸ்-ன் பினாமி சொத்தாக ’’டெம்பிள் டவர்’’ என்ற பெயரில் ஆடம்பர நட்சத்திர விடுதி.
  • நாகையில் 6 கோடி ரூபாய் மூலதனம் கொண்ட ’’இந்தியன் ஸ்டீல் ரோலிங் மில்’’.
  • ஸ்ரீ பெரும்புதூர் அருகேயுள்ள மாம்பாக்கத்தில் 15 கோடி ரூபாய் மூலதனம் கொண்ட ’’மைக்கம் லெதர் எக்ஸ்போர்ட்ஸ்’’ என்ற தோல் ஏற்றுமதி நிறுவனம்
  • திருத்துறைப்பூண்டியில் இராஜஸ்தான் பளிங்கு கற்களால் அழகு செய்யப்பட்ட மூற்று அடுக்குகள் கொண்ட அன்னை சந்தியா திருமண மண்டபம்.
  • சென்னை மகாபலிபுரம் சாலையில் பண்டிதமேடு எனுமிடத்தில் 255 ஏக்கர் பரப்பில் கட்டப்படும் ’’பரணி பீச் ரிசார்ட்ஸ் லிட்’’ எனும் சுற்றுலா ஓய்வு விடுதி.
  • ஊட்டியில் 1264.01 ஏக்கர் பரப்பு கொண்ட 45 கோடி ரூபாய் மதிப்புடைய கிரேக்மோர் எஸ்டேட்; கோத்தகிரிக்கு அருகில் 7.60 கோடி ரூபாய் மதிப்புடைய கோடநாடு தேயிலைப் பண்ணை.
  • மன்னார்குடிக்கு அருகில் சுந்தரக்கோட்டையிலுள்ள செங்கமலத் தாயார் மகளிர் கல்லூரி
  • கிண்டி தொழிற்பேட்டையிலுள்ள பத்து கோடி ரூபாய் மூலதனம் கொண்ட ’’ஜெயா பப்ளிகேஷன்ஸ்’’.
  • வினோத் வீடியோ விஷன், மெட்டல் கிங், ஃபிரஷ் மஷ்ரூம்ஸ், மார்பிள் மார்வல், ஜெயா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், ஜெ.எஸ். ஹவுசிங் டெவலப்மெண்ட், ஜெ. ரியல் எஸ்டேட், ஜெ. ஃபார்ம் ஹவுஸ், க்ரீன் ஃபார்ம் ஹவுஸ், ஜெ.ஜெ. லீசிங் அண்ட் மெயின்டனென்ஸ், விக்னேஷ்வர் பில்டர்ஸ், லட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், கோபால் புரமோட்டர்ஸ், நமசிவாயம் ஹவுசிங் டெவலப்மெண்ட், ஐயப்பா பிராப்பர்டி டெவலப்மெண்ட், சீ என்க்ளேவ், நவசக்தி கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் பில்டர்ஸ், ஓசியானிக் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், க்ரீன் கார்டன் அபார்ட்மெண்ட்ஸ், சசி எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட 21 நிறுவனங்கள்
  • அந்நிய நாடுகளுடன் தொடர்புடைய ஜெ.ஜெ. டி.வி மற்றும் சூப்பர் டூப்பர் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனங்கள்.
அந்நிய நாடுகளில் போடப்பட்டுள்ள முதலீடுகள்
  • ஜெ.ஜெ. டி.வி. நிகழ்ச்சிகளை செயற்கைக்கோள் மூலம் ஒளிபரப்புவதற்காக 10 லட்சம் அமெரிக்க டாலர் (4 கோடி ரூபாய்) ரிம்சாட் என்ற அமெரிக்க நிறுவனத்தில் முன்பணமாக செலுத்தப்பட்டுள்ளது.
  • சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கிக் கிளையில் மலேசியாவில் வசிக்கும் சுசீலா என்பவர், அந்நிய நாட்டில் வசிக்கும் இந்தியர் என்ற தகுதியில் 3.35 கோடி ரூபாய் முதலீடு செய்தார். இந்த தொகை பின்னர் இவ்வங்கியில் சசிகலாவின் நிறுவனமான பரணி பீச் ரிசார்ட்ஸ் லிட். வாங்கியிருந்த மூன்று கோடி ரூபாய்க்கு ஈடு செய்யப்பட்டது.
  • அந்நியச் செலவாணி மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள தினகரன் ’’டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஆஃப் விர்ஜின் இந்தியா’’ எனும் பெயரில் 35 கோடி ரூபாயை இங்கிலாந்திலுள்ள பார்க்ளெஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளார்.
  • நிலக்கரி இறக்குமதி ஊழலில் கிடைத்த பணத்தில் வெர்ஜின் தீவுஎன்றொரு தீவை விலைக்கு வாங்கி அங்கே ரூ.300 கோடியை டெபாசிட் செய்துள்ளதாகவும், அத்தீவை அரசுக்கு சொந்தமாக்க வேண்டும் என்றும் த.மா.கா தலைவர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஊழல்கள் மோசடிகள் முறைகேடுகள்
  • பத்து கோடி ரூபாய் லஞ்சம் பெற்று, 176 புதிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அனுமதியை உயர்நீதி மன்றம் முறைகேடானது எனக் கூறி ரத்து செய்தது. இந்நிறுவனங்களில் பயிற்சி முடித்த 50,000 மாணவர்கள் தெருவில் நிற்கின்றனர்.
  • தரமற்ற நிலக்கரியை இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியதில் 31 கோடி ரூபாய் ஊழல்.
  • தென் இந்திய கப்பல் போக்குவரத்தில் தமிழக அரசுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் விற்பனை மதிப்பு கொண்ட பங்குகளை 47 கோடி ரூபாய்க்கு ’’எஸ்ஸார் ஷிப்பிங் கார்ப்பரேஷனுக்கு’’ விற்றதில் 50 கோடி ரூபாய் முறைகேடுகள்
  • தூத்துக்குடியில் இயங்கும் ஸ்பிக் உர நிறுவனத்தில் தமிழக அரசுக்கு சொந்தமான 50 லட்சம் பங்குகளை தரகு முதலாளி ஏ.சி. முத்தையாவுக்கு அடிமாட்டு விலைக்கு விற்றதில், கிட்டத்தட்ட 49 கோடி ரூபாய் முதல் 77 கோடி ரூபாய் வரை கமிஷன். இதில் கையெழுத்திட மறுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகாவின் முகத்தில் திராவகம் வீசப்பட்டது. மதுசூதனன், சாராய உடையார், எம்.ஏ. சிதம்பரம், ஜெயா சசிகலா ஆகியோர்தான் இதற்கு சூத்திரதாரிகள் என்று திராவகம் வீசிய சுர்லா நீதிமன்றத்திலேயே கூச்சலிட்டான். அவனுக்கு பைத்தியம் என்று முத்திரை குத்தி தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டப்பட்டது.
  • ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான மயானங்களில் மேற்கூரைகள் அமைப்பதில் 10.5 லட்ச ரூபாய் கையாடல். இப்படி எல்லா மாவட்டங்களிலும் நடந்தது.
  • இலவச வேட்டி சேலை மற்றும் சீருடை வழங்குவதில் பலவித மோசடிகள் செய்தும், வேட்டி சேலைகளைப் பதுக்கி வைத்தும் 34 கோடி ரூபாய் ஊழல்
  • கர்ப்பிணிப் பெண்களுக்கான சொட்டு மருந்துகள் வாங்கியதில் ஐந்து கோடி ரூபாய் ஊழல்
  • தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் உபகரணங்கள் வாங்க ஏலம் விட்டதில் 400 கோடி ரூபாய்க்கு முறைகேடுகள்
  • தனியார் (ஆம்னி) பேருந்துகளுக்கு வரி குறைத்ததில் 6 கோடி ஊழல்.
  • கிராமங்களுக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்துகளுக்கு, நகரங்களுக்கு திருப்பி விட்டு, உரிமங்களை மாற்றி உத்திரவிட்டதில் 50 கோடி ரூபாய் தனியார் பஸ் முதலாளிகளிடமிருந்து லஞ்சம். இதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட நட்டம் 170 கோடி ரூபாய்.
  • கிராமப்புறங்களுக்கு வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கியதில், ஒரு பெட்டிக்கு 4300 ரூபாய் வீதம் கமிஷன் அடித்ததில் 19.48 கோடி ரூபாய் ஊழல்
  • அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர் / நடத்துனர் நியமனத்தில் ஊழல். 10 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலிகளாக வேலை செய்யும் நடத்துனர்கள், ஓட்டுநர்களுக்குக் கூட வேலை தராமல், பதவி ஒன்றுக்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை கொடுத்தவர்களுக்கு மட்டுமே வேலை தரப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் இவ்வாறு வேலை வாங்கியவர்கள்பல ஆயிரம் பேர்.
  • தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளர்கள் பணி நியமனம், 2000 தட்டச்சர்கள், இளநிலை உதவியாளர்கள் நியமனம், 500 விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டிலும் பேரங்கள் முறைகேடுகள்
  • 8000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்காக பதவி ஒன்றுக்கு 50,000 ரூபாய் விலை
  • சென்னை புழலேரியில் போதுமான அளவு நீர் இருந்தும், அந்நீரைப் பொதுமக்களுக்கு வழங்காது ஏரியில் தண்ணீர் சப்ளை வால்வுகளை அடைத்து விட்டு, லாரிகளின் மூலம் தண்ணீர் வழங்கியதில் நாளொன்றுக்கு 8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் சூறையாடல்
  • டான்சிக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தையும், கட்டிடத்தையும் ஏலம் விடாது ’’ஜெயா பப்ளிகேஷன்ஸ்’’ நிறுவனத்திற்காக சுருட்டியதில் 3 கோடி ரூபாய் ஊழல் மற்றும் முறைகேடுகள். இதுவன்றி தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் நூல்களை இங்கு அச்சிட்ட அதிகார முறைகேடு
  • சென்னையில் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சொந்தமான 47.36 ஏக்கர் காலி மனையை ஜெ.ஜெ. டி.வி.-க்கு வளைத்துப் போடுவதற்கு வசதியாக, தரமணி திரைப்பட நகருக்கு மாற்றி அரசு ஆணை வெளியிட்டதில் அதிகார முறைகேடுகள்.
  • கோவில் கொள்ளைகள்
    • மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோவில் நகைகள் கொள்ளை போனது.
    • திருக்காரவாசல் தியாகராசர் சுவாமி கோவிலில் மரகத லிங்கம் திருட்டு
    • நாகப்பட்டினம் நீலயதாட்சி அம்மன் கோவிலில் கோமேதக லிங்கம் திருட்டு
    • மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவிலில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை
    • கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் கோவிலில் 1 கோடி ரூபாய் பெறுமான நகைகள் கொள்ளை
    • சிதம்பரம் கோவில் நடராசர் காலில் இருந்த வைரக் கொலுசும், 2.25 கிலோ வெள்ளிக் கிரீடமும் களவு போனது.
    • கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் ரூபாய் 5 கோடி பெறுமான நகைகள் திருட்டு. மன்னார்குடி குடும்பத்திற்கு நெருக்கமான மதுசூதனன் என்பவனுக்கு இக்கொள்ளையில் தொடர்பிருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது.
    • தென் மாவட்டங்களில் மட்டும் சிறிதும், பெரிதுமான 400 கோவில்களில் திருட்டு நடந்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன.
    • எந்தவொரு கோவில் கொள்ளையிலும், திருட்டுப்போன தங்க, வைர நகைகள் முழுமையாக மீட்கப்படவில்லை. குற்றவாளிகளும் தண்டிக்கப்படவில்லை. கோவில் கொள்ளையர்களுக்கும், கோட்டைக் கொள்ளையர்களுக்கும் இருந்த தொடர்புக்கு இன்னும் என்ன ஆதாரம் வேண்டும்?
     

3 கருத்துகள்:

  1. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாசனி, மே 16, 2015

    PLEASE PUBLISH PROPERTIES OF DMK FAMILIES ALSO SO THAT AIADMK PEOPLE ARE
    HAPPY. bOTH KARUNA AND JAYA ARE CORRUPT BUT ONLY VALUE OF CORRUPTION
    IS VARIED.

    பதிலளிநீக்கு