புதன், அக்டோபர் 19, 2011

கவிதை முத்தங்கள்……..

ஆசை மனைவியே…

வார்த்தை மோதல் நம்மை வௌ;வேறாக்கின….

நமது இதழ்கள் மோதல் நம்மை ஒன்றாக்கின.

இனி அடிக்கடி மோதுவோம் நமது இதழ்களால் . . .


காதலியே !

இனி அடிக்கடி நாம் சண்டையிடுவோம்…….

வார்த்தைகளாலல்ல நமது இதழ்களால்.




வார்த்தை ஜாலம் புரியும் உன் செவ்விதழ்களை விட…….

வர்ணம் பூசிய உன் இதழ்களை தான் அதிகம் நேசிக்கிறேன்…..



காயம்படாமல் சண்டையிடுவது எப்படி என்பதை என் இதழ்களுக்கு

கற்றுதரச்சொல்லி கட்டளையிடு உன் இதழ்களுக்கு……….





அவளின் இதழ்கள் எத்தனைத்தான் கெஞ்சினாலும்

என் இதழ்கள் சண்டையிடவே துடிக்கின்றன.



சண்டை - சமாதானம் - சாந்தம்……….

இதற்கான அர்த்தம் உன் இதழ்களோடு மோதும் போது தான்

என் இதழ்கள் அறிந்து கொண்டன.



பட்டாசாய் வெடிக்கும் உன் வார்த்தைகளை விட….

மத்தாப்பாய் ஜொலிக்கம் உன் விழிகளை விட…..

புஸ்வனமாய் பிரகாசிக்கும் உன் முகத்தை விட

சுங்கு சக்கரமாய் சுழலும் உன் இதழ்கள் தான் …….

ஏன்னை வசியம் செய்கின்றன.



உன் இதழ்கள் என்ன மதுக்கிண்ணாமா?

பார்க்கும் போதே போதையேறுகின்றன.



அறிந்துக்கொள்ளடா அம்மாஞ்சியே……..

நான் உனக்கு கற்று தந்தது சண்டையை மட்டும் தான்

நீ என்னுடன் சண்டையிட வா…….

அப்போது தான் உனக்கு சமாதானத்தை கற்று தர முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக