செவ்வாய், அக்டோபர் 04, 2011

நர மனிதன் நரேந்திரமோடி.



இந்தியாவின் அடுத்த பாராளமன்ற தேர்தல் பி.ஜே.பி நரேந்திரமோடி தலைமையில் சந்திக்க அதாவது பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முயல்கிறது. காங்கிரஸ் கட்சி ‘இளவரசர்’ இராகுல்காந்தியை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க முயல்கிறது என்பதே கடந்த ஒரு வருடமாக டெல்லி வாலாக்காள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள். தற்போது அந்த கட்சிகளின் செயல்பாடுகளால் அப்பேச்சு வேகம் பெற்றுள்ளது.

1996ல் அரசியலில் காலாடி எடுத்து வைத்த போதே…….. இன்னும் கொஞ்சம் அழுத்தி தெளிவாக சொல்ல வேண்டும்மென்றால் அதாவது இராகுல் பிறந்ததுமே அவர் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிறுத்தும் என எதிர்பார்த்தது தான். ஒரே குடும்பம் ஒரே பதவி அது பிரதமர் பதவி என வாழும் குடும்பம்மது. அதை எதிர்க்க தற்போதைய நிலையில் காங்கிரஸ்சில் முதுகெலும்பு உள்ளவர்கள் யாரும் கிடையாது.

காங்கிரஸ் மட்டுமல்ல தேசம் முழுக்க பரவி கிடக்கும் பல மாநில கட்சிகளும், ஆளும் கட்சிகளும் தன் வாரிசுகளுக்கு பட்டம் கட்ட துடிக்கிறார்கள். பட்டம் கட்டி வருகிறார்கள். பி.ஜே.பியில் உழைப்பவர்களுக்கு அதாவது இந்து ‘தீவிரவாதிகளுக்கு’ பதவி கிடைத்து வருகிறது. வாரிசு அரசியல் அங்கு இப்போது நுழைய தொடங்கியுள்ளது தவறில்லை. அவர்களும் சராசரி மனிதர்கள் தானே?. ஆனால் நரேந்திரமோடியை பிரதமராக முன்னிறுத்துவதை தான் சகிக்க முடியவில்லை.


நரேந்திரமோடி……. பன்முகம் கொண்ட இந்தியாவை இந்துத்துவா நாடாக மாற்ற வந்த இந்துத்துவா தீவிரவாதி. முதல் முறையாக குஜராத் முதலமைச்சராக இருந்தபோது பதவியை கையில் வைத்துக்கொண்டு இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டிவிட்டு அம்மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்து நர மாமிசத்தை உண்ட இந்த மிருகம் தான் இந்தியாவின் பிரதமர் வேட்பாளராம். இரண்டாவது முறை முதலமைச்சரான போது காவல்துறையை கையில் வைத்துக்கொண்டு வேண்டாதவர்களை சுட்டுக்கொன்ற இந்தபேய்யிடம் நாட்டை ஒப்படைக்க இந்து தீவிரவாதிகள் முயன்று வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தை போய் பாருங்கள் செல்வம் கொழிக்கிறது, சாலையில் தேனும் பாலும் ஒடுகிறது, குஜராத்தில் இஸ்லாமியர்கள் சந்தோஷமாக சுதந்திரத்துடன் வாழ்கிறார்கள் என்ற பிரச்சாரத்தை இந்தியா முழுவதும் கட்டவிழ்த்துள்ளது பிராமண சக்திகள். ஆனால் உண்மையில் குஜராத்தின் நிலை தலைகீழ். உலக நாடுகளின் முதலாளியாக தன்னை அடையாளம் காட்டும் அமெரிக்கா எப்படி தன் நாட்டில் வறுமையேயில்லை என 50 ஆண்டுகளாக உலக ஏமாற்றி வருவதை போலத்தான் இந்த பிராமண சக்திகள் குஜராத்தை காட்டுகின்றன.

மதம் என்பது வேறு மனிதன் என்பவன் வேறு என்பதை புரிந்துக்கொள்ளதாவன் இந்த நாட்டின் பிரதமரானால் இந்திய தேசத்தின் வரலாற்று பக்கங்களில் நீண்ட பக்கத்திற்க்கு ஒரு ரத்த சரித்திரம் எழுத வேண்டி வரும்.

பல மொழி பேசும் இந்த தேசத்தில் பல கோடி மக்கள் வாழ்ந்தாலும், பலப்பிரச்சனைகள் வந்தாலும் இன்றும் நெல்லிக்காய் மூட்டையாய் இந்தியாவை சிதறடிக்காமல் வைத்திருப்பது மதங்களை கடந்து இங்கு அன்பு, பரிவு, பாசம் கொண்ட இதயங்கள் வாழ்வதால் தான். அதனால் பிராமண சக்திகள், இந்து தீவிரவாதிகள் உருவாக்கும் மாயையை நம்பிவிடாதீர்கள்.

அதற்காக காங்கிரஸ்க்கும் ஆதரவு வழங்கிவிடாதீர்கள். அவர்கள் இவர்களை விட மோசமானவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக