சனி, அக்டோபர் 20, 2012

இல்லாமை……….. இயலாமை என்ற கப்ஸா.




தினமணியில் ஒர் தலையங்கம் வந்துள்ளது. அதாவது தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டால் அங்காங்கு போராட்டம், மின் நிலையம் முற்றுகை என பொதுமக்கள், அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றன. மின்சார தட்டுப்பாடு அரசின் இயலாமையால் வந்ததல்ல. இல்லாமையால் வறுவது என ‘அவாள்’ ஆட்சிக்கு ஆதரவாக ஒர் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. 

கட்டுரையாளரின் தனிப்பட்ட விருப்பம் என்பது வேறு, ஒரு பத்திரிக்கை ஆசிரியரின் விருப்பம் என்பது வேறு. பத்திரிக்கை ஆசிரியரின் நிலைப்பாடு என்பது மக்களுக்கானதாக, நேர்மையின் பக்கமாக, அலசி ஆராயும் தன்மையோடு இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இருக்ககூடாது. ஆனால் இல்லாமை இயலாமை கட்டுரை முழுக்க முழுக்க பூசி மெழுகும் தன்மையில் எழுதப்பட்டது. 

தமிழகத்தில் சென்னையை தவிர்த்து தற்போது அதிகபட்சம் 18 மணி நேர மின்சார துண்டிப்பு உள்ளது. மீதியுள்ள 6 மணி நேர மின்சாரத்தையும் என்பது ஒழுங்காக தருவதில்லை. 1 மணி நேரம், அரை மணி நேரம் என தருகிறார்கள். இது இல்லாமையால் வந்ததில்லை. இயலாமையால் வந்தது. நிர்வாகம் நடத்த தெரியாததால், பண ஆசையால் வந்தது. கடந்த திமுக ஆட்சியின் போது மின்பற்றாக்குறை ஏற்பட தொடங்கியதும் மத்தியதொகுப்பில் இருந்து கேட்டு வாங்கினார்கள். அதோடு, தனியாரிடம் வாங்கினார்கள். புதிய திட்டங்களை தீட்டினார்கள். 

ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் மத்தியதொகுப்பில் இருந்து மின்சாரம் கேட்டுயிருக்க வேண்டும். கடந்த ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட திட்டங்களை விரைந்து முடிக்க செய்திருக்கவேண்டும், தனியாரிடம் வாங்கியிருக்க வேண்டும் இதை எதையும் ஜெ செய்யவில்லை என்பதை ஏனோ தினமணி சுட்டிக்காட்ட மறுக்கிறது. 

அதோடு, மத்தியரசு தர மறுக்கிறது என்கிற போக்கிலும், கடந்த திமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்பதை போல குற்றம் சாட்டுகிறது. மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கேட்டால் நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பக்கத்து மாநிலங்களுக்கு தரப்படுகிறது. அதை குறைத்து தான் நமக்கு ஒரளவு தருவார்கள். அடுத்ததாக கடந்த காலங்களில் போடப்பட்ட திட்டங்கள் என்னவானது என தினமணி கேட்கவில்லை. கேட்டால் அம்மையார் கோவித்துக்கொள்வார் என்ற பயம்மா? அல்லது இன பாசமா? என தெரியவில்லை. 

கடந்த கால திட்டங்களை நடைமுறைப்படுத்த அம்மையார் தயாரில்லை. அதோடு, தனியாரிடம் வாங்கி எவ்வளவு நாளைக்கு குறைந்த விலைக்கு மின்சாரம் தரமுடியும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது தினமணி. கடந்த 15 ஆண்டுகளாக 30 சதவித மின்சாரம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கி தான் தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்குகிறது. அப்படியிருக்க தினமணி சப்பைகட்டு கட்ட தேவையில்லை. 

அரசு நிறுவனங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மின் உற்பத்தியில்லை என்றதும் தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கு அதிக விலை கேட்கிறார்கள். அதை தருகிறது அரசு. அதை குறைக்க வழி செய்வதில்லை காரணம், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு செல்லும் கமிஷன். அதோடு, அணல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி இறக்குமதியில் நடக்கும் ஊழல் போன்றவற்றால் தான் மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இது எதனையும் சுட்டிக்காட்ட மறுக்கிறார்கள். ஆக மின்தட்டுப்பாடு இல்லாமையால் வந்ததல்ல. இயாலாமையால் தான் மக்கள் இந்த துன்பத்துக்கு ஆளாகியுள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டுங்கள். 

1 கருத்து:

  1. ஒவ்வொரு செய்தி இதழும் எதோ ஒரு இனத்தையோ அல்லது கட்சியையோ சார்ந்தே எழுதபடுகிறது. மக்களுக்காக என்றும் ஏதும் இல்லை.

    பதிலளிநீக்கு