ஞாயிறு, அக்டோபர் 28, 2012

பாடகி சின்மாயும் இணையமும்.




சில தினங்களுக்கு முன்பு வரை சின்மாயியை தெரியுமா என கேட்டுயிருந்தால் அவுங்க எந்த நாட்டுக்காரங்க என கேட்டுயிருப்பேன். இப்போது சின்மாயி பெண் சுதந்திரத்தை காக்க வந்த ‘போராளி’யாக அடையாளப்படுத்துகிறார். 

சில தினங்களுக்கு முன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் சென்று என்னை இணையத்தில், சமூக வளைத்தளத்தில் பாலியல், சாதி ரீதியாக மோசமாக சித்தரிக்கிறார்கள், துன்புறுத்துகிறார்கள் என புகார் வாசித்தார். அவரது புகாரை வாங்கிய காவல்துறை அவர் குற்றம் சாட்டிய சிலரை கைது செய்து சிறைக்கு அனுப்பிவிட்டது. குற்றவாளியாக்கப்பட்டவர் நான் தவறு செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் நிருபிக்க வேண்டும். காரணம் நம் சட்டம் அப்படி. 

என்ன பிரச்சனை என இணையத்தில் சமூக வளைத்தளங்களில் தீவிரமாக தேடியபோது இரண்டு தரப்பும்மே அவரவர் கருத்தை மட்டும்மே பதிவு செய்திருந்தார்கள். அவரவர் எழுத்து அவரவர்க்கு நியாயமே. 


கைது செய்யப்பட்டவர்கள் தரப்போ, தமிழக மீனவர்களுக்காக இணையத்தில் குழு ஆரம்பித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தோம். அதில் தொடங்கியது எங்கள் மோதல் அநாகரிகமாக எதுவும் கருத்து கூறவில்லை. மற்றவர்கள் கூறுவதை என் கருத்தாக எடுத்துக்கொள்வது மிக தவறு என்றுள்ளார்கள். 

அய்யங்கார் வம்சத்தில் பிறந்ததாக குறிப்பிடும் சின்மாயி. இடஒதுக்கீடு, இராணுவத்தால் மீனவன் சுட்டுக்கொலை, சாதி வெறி போன்றவற்றை முன்வைத்து சமூக வளைதளங்கில் எனது கருத்துக்களை பதிவிடுகிறேன் அதில் மற்றவர்கள் கருத்தோடு மாறுப்பட்டுயிருப்பதால் என்னை மோசமாக விமர்சிக்கிறார்கள் என்றுள்ளார். 

சின்மாயி இடஒதுக்கீட்டை எதிர்த்து பதிவிடுகிறார். அப்போது இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும் மீனவர்களுக்காக சிலர் குழு ஆரம்பித்து இணைய தள பிரச்சாரம் செய்கிறார்கள். அப்போது சின்மாயிடம் கருத்து கேட்டுள்ளார்கள். அவர் நாங்கள் (பிராமின்) மீன் சாப்பிடமாட்டோம். மீனை கொல்பவனை இராணுவம் கொல்கிறது அதில் என்ன தவறு. மீனவனுக்காக பரிதாபப்படுபவர்கள் மீனுக்காக பரிதாப்படவேண்டும். மீனும் உயிர்தானே. நான் மீனுக்காக பரிதாப்படுகிறேன் என பதிவிட பிரச்சனை சூடாகிறது. 

இதற்கு குழுவில் உள்ளவர்கள் எதிர்வினையாற்றுகிறார்கள். இதில் கருத்து மோதல் வருகிறது. சின்மாயி கருத்தோடு அனைவரும் ஒத்துபோக வேண்டும் என்பதில்லை. ஆனால் தன் கருத்தோடு மற்றவர்கள் ஒத்து போக வேண்டும்மென எதிர்பார்க்கிறார். அது நடக்கவில்லை. விமர்சனங்கள் இரண்டு தரப்பிலும்மே எல்லை மீற தொடங்குகின்றன. ஒரு கட்டத்தில் சின்மாயி அவர் எழுதிய விமர்சனங்களை அழித்து விட்டு அவருக்கு எதிராக வந்த கருத்துக்களை காப்பி செய்து அதை தனியாக சேமித்து வைத்து என்னை பாலியல் ரீதியாக வார்த்தைகளில் துன்புறுத்துகிறார்கள் என சிலர் மீது புகார் தந்து கண்ணீர் விட அதனை கண்டு ஆணாதிக்கம் இணையத்திலும்மா, இங்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லையா, சுதந்திரம்மில்லையா என கேட்க வைத்துவிட்டது. 

சின்மாயி பிறந்த சாதி, அவருக்குள்ள சினிமா பிரபலம், அவரது அழகு, அவர் சார்ந்துள்ள சமூக அதிகாரம், அவற்றையெல்லாம் விட அவர் பெண் என்பதால் அவர் நினைத்ததை செய்ய வைத்துள்ளது. 

இதில் காவல்துறை எடுத்தோம், கவிழ்த்தோம் என செய்தது முட்டாள்தனம். இன்றளவும் தமிழக காவல்துறைக்கு சைபர் கிரைம்மில் போதிய அனுபவமில்லாமையால் தடுமாறுகிறது. அப்படியிருக்க சின்மாயி தந்த ஆதாரத்தை கொண்டு எப்படி நடவடிக்கை எடுத்தார்கள் என புரியவில்லை. சின்மாயி தந்த புகார் உண்மையா இதில் முதலில் யார் தவறு செய்தது என விசாரணை செய்துயிருக்கலாம். அப்படி செய்ததாக தெரியவில்லை. 

இணையத்தில் இன்றைய டெக்னாலஜி யுகத்தில் கருத்துக்கள், புகைப்படம், ஆடியோ, வீடியோ போன்றவற்றை இருப்பதை இல்லாததை போலவும், இல்லாததை இருப்பதை போலவும் உருவாக்குவது மிக மிக சுலபம். அப்படியிருக்க தீர ஆராயாமல் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். ஓன்று மட்டும் நிச்சயம் சின்மாயி தவறாக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் இப்படியும் நடவடிக்கை எடுக்கலாம் என்பதை இணையத்தில் புழங்கும் பெண்களுக்கு கற்று தந்துள்ளார். இதனை அவர்கள் தவறாக பயன்படுத்தாமல் உண்மையாகவே பாதிக்கப்பட்டால் இச்சட்டப்படி அனுகலாம். 

சமூகவளைத்தளத்தில் இயங்கும் பெண்கள் (ஆண்களும்) நீங்கள் பதிவிடும் ஒரு கருத்துக்கு நியாயமான முறையில் எதிர்வினை வந்தால் அவர்களுடன் விவாதியுங்கள். நியாயமற்றதாக இருந்தால் விவாதிக்காதீர்கள். 

தனிப்பட்ட விரோத தாக்குதல் நடத்தினால் சொல்லி புரியவைங்கள். திருந்தவில்லை தாக்குதல் உச்சத்துக்கு சென்றால் அந்த கருத்துக்களை சேமித்து வைத்து பின் நடவடிக்கைக்கு முயலுங்கள். (சின்மாயி போன்று நடந்துக்கொள்ளாதிர்கள். ஏன் எனில் சின்மாயி – எதிர்வினை ஆற்றியவர்கள் இரண்டு தரப்பும்மே சமாதான உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.)

ஒருவர் உங்களை அநாவசியமாக அருவருக்கதக்க கருத்துக்களை பதிவிட்டு உங்களை தொந்தரவு செய்தால் அவரை ப்ளாக் செய்துவிடுங்கள். பிரச்சனை முடிந்தது. 

இணையம் வழியாக நாம் பதிவிடும் கருத்துக்களை இந்த உலகம்மே கண்டுக்கொண்டுயிருக்கிறது. நீங்கள் இடும் பதிவுகள், கருத்துக்கள், எதிர்வினைகள் தான் நீங்கள் யார், எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம்மிட்டு காட்டும் அதனால் அதனையும் கவனத்தில் வையுங்கள். 

அறிஞர் அண்ணா குறிப்பிடுவதை போல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு செயல்படுங்கள். இணையத்தை நல்லதுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். 

2 கருத்துகள்:

  1. நல்ல பதிவு,

    அதிகாரம் கையில் வந்துவிட்டால் மற்றவனைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் போய்விடுகின்றதே ! என்னத்த சொல்ல ?

    பதிலளிநீக்கு
  2. ராஜப்பிரியன்!சொற் பிரயோக மீறல் எனில் உங்கள் மீதும் கூட விரல் காட்டலாம்:)

    இதனைக் கடந்தும் இரு தரப்பிற்குமான வாழ்க்கை இருப்பதால் இரு தரப்பும் சமாதானத்துக்கு வருவதை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு