சனி, மே 28, 2011

சமச்சீர் கல்வி ‘ அம்மாவின் ‘ பிராமணிய திட்டம்.


நகரத்தில் உள்ள ஆல்பர்ட் வீட்டு பையனும், அருள் குடும்பத்தது மகளும் கற்கும் கல்வியை கிராமத்தில் உள்ள குப்பன் வீட்டு பையனும், சுலைமான் வீட்டு பெண்ணும் படிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கல்வியாளர்கள், சமுக ஆர்வலர்கள் போராட்டங்கள் நடத்தினர். காரணம், தமிழகத்தில் ஸ்டேட் போர்டு கல்வி திட்டம், மெட்ரிக்குலேஷன் பாட திட்டம், ஆங்கிலோ-இந்தியன் பாடதிட்டம், ஓ.எஸ்.எல்.சி பாடத்திட்டம், மத்தியரசின் சி.பி.எஸ்.சி கல்வி திட்டம் என 5 வகை உள்ளது. இதில் ஏழை, கிராமத்து பிள்ளைகள் படிப்பது ஸ்டேட் போர்டு கல்வி திட்டம், நடுத்தர, பணக்கார வீட்டு பிள்ளைகள் படிப்பது மெட்ரிக் அ சி.பி.எஸ்.சி பாட திட்டம்.

ஸ்டேட் போர்டு கல்வி திட்டத்தில் சேரும் பிள்ளைகளுக்கு அவ்வளவாக செலவு ஆகாது. ஆனால் மற்ற பிரிவில் சேரும் பிள்ளைகள்க்கு எக்கச்சக்கமாக செலவாகும். உ.ம் எல்.கே.ஜி சேர்த்தாலே 50 ஆயிரம் பிடுங்கி விடுவார்கள். பணம் பிடுங்க வேண்டும் என்பதற்காக பலர் மெட்ரிக், சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்துக்கு அனுமதி வாங்கி பள்ளி தொடங்கி கல்வி கொள்ளையடிக்கின்றனர். வாங்கிய பணத்திற்க்கு விசுவாசமாக பாடம் நடத்துகிறார்கள் அதை மறுப்பதற்க்கில்லை.

ஆனால், பிள்ளைகள் 12 வது முடித்தபின் தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. 12வதுக்கு பின் இன்ஜினியரிங், மெடிக்கல், ஆர்ட்ஸ் காலேஜ் எது சேர வேண்டும் என்றாலும் கட் அப் மார்க், நுழைவு தேர்வு ஆகியவை வைக்கப்படுகிறது. இதில் தான் ஸ்டேட் போர்டு பிள்ளைகளுக்கு சிக்கல் ஆரம்பமாகிவிடுகிறது. மெட்ரிக், ஆங்கிலோ-இண்டியன், சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில்  படித்த பிள்ளைகள் ஆங்கில அறிவு மற்ற மொழி அறிவு இருப்பதாலும், ஸ்டேட் போர்டை விட உயர்வான கல்வி கிடைப்பதால் அதிகமான மார்க் எடுக்கின்றனர். கட் அப் மார்க் அதிகம் கிடைக்கிறது, நுழைவு தேர்வு ஈசியாக எழுதி கல்லூரி படிப்பில் அதிக இடங்களை பிடித்துக்கொள்கின்றனர். ஸ்டேட் போர்டில் படிக்கும் பிள்ளைகள் ஏழை விட்டு பிள்ளைகள் அதிகமாக இருப்பதால் அவர்களால் அதிக மார்க் எடுக்க முடிவதில்லை. இதனால் இவர்களின் கல்லூரி படிப்பு கானல் நீராகவே போய்விடுகிறது.

இதனை எப்படி மாற்றலாம் என கல்வியாளர்கள் யோசித்தபோது, ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தை தற்போதைக்கு மத்தியரசின் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை போல மாற்ற முடியாது. அதற்க்கு பதில் புதிய தரமான புதிய பாடத்திட்டத்தை மெட்ரிக் தரத்தில் உருவாக்கலாம் அது எல்லா பிரிவிற்க்கும் சரிசமமாக இருக்கும்படி செய்யலாம் என யோசித்தே சமச்சீர் கல்வி என்ற முடிவை எடுத்தனர்.

அதை அரசாங்கத்திடம் பல ஆண்டுகளாக முறையிட்டனர். கடந்த முறை ஆட்சி பொறுப்பில் இருந்த திமுக அரசாங்கம் சமச்சீர் கல்வியை கொண்டு வந்தால் சரியாக இருக்குமா என பல கட்டமாக ஆராய்ந்து, சரிப்பட்டு வரும்மென முடிவு செய்து கல்வியாளர்களை கொண்டு சமர்ச்சீர் கல்விக்கான பாடத்திட்டத்தை உருவாக்கி கடந்த ஆண்டு 1 ஆம் வகுப்பு, 6 ஆம் வகுப்பில் சமச்சீர் பாடத்திட்டத்தை புகுத்திவிட்டார்கள். பொறியியல் கல்விக்கான நுழைவு தேர்வை ரத்து செய்தார்கள். இதனால் மார்க் இருந்தால் போதும் என்ற நிலையில் பணக்கார, நடுத்தர வீட்டு பையன், பெண்ணை போல ஏழை வீட்டு பையனும், பொண்ணும் கல்லூரிக்குள் நுழைந்தனர்.


இந்த ஆண்டு முதல் எல்லா வகுப்புக்கும் சமச்சீர் பாடத்திட்டத்தை அமல் படுத்த 200 கோடி செலவில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. இதன் மூலம், தமிழகத்தில் மெட்ரிக், ஆங்கிலோ-இண்டியன், ஒ.எஸ்.எல்.சி பாடப்பிரிவுகள் இருக்காது. இதனால் ஏழை வீட்டு பையனாக இருந்தாலும், பணக்கார வீட்டு பையனாக இருந்தாலும் சரிசமமான கல்வி கிடைக்கும். வெற்றி தோல்வி சரிசமமாக இருக்கும். இத்திட்டத்தை தமிழகத்தின் பெரும்பாலான பெற்றோர்கள், கல்வியாளர்கள் வரவேற்றனர். ஆனால் தனியார் பள்ளி கூட்டமைப்பு சமச்சீர் கல்வி திட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்றது. அரசு சொல்வதை கேட்க சொன்னது நீதிமன்றம்.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதல்வரானார் ஜெயலலிதா. சமச்சீர் பாடத்திட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் செம்மொழி பாடல், படம் உள்ளது என்ற ஒரே காரணத்திற்க்காக சமச்சீர் கல்வி திட்டத்தையே ரத்து செய்துவிட்டார். அதேபோல் பள்ளி கட்டணம் சீரமைப்பு குழு தனியாக செயல்படுகிறது. இதில் அரசு தலையிட முடியாது. தனியார் பள்ளிகள் கேட்டுக்கொண்டால் மட்டுமே அரசு தலையிடும் என அறிவிவத்துவிட்டார்


எனக்கென்னவோ, கருணாநிதிக்காக மட்டும் அப்பாடத்திட்டத்தை ரத்து செய்துயிருக்க மாட்டார் என எண்ண தோன்றுகிறது. காரணம். ஜெ படித்தது கான்வென்ட்டில். அதனால் அவர் பேச்சில் கான்வென்ட் என்கிற தனியார் பள்ளிகள் மீதான் ‘காதல்’ அவர் பேச்சில் அதிகம் வீசும். அதேபோல் அவர் வாழ்வில் ஏழைகளை கண்டால் ஆகாது. அதற்க்கு காரணம் அவரின் பிறப்பு மற்றும் அவர் சார்ந்த பிராமண சமுகம். மற்றவர்கள் படித்தால் தங்களுக்கு சிக்கல் என வர்ணாசிரம முறையை கொண்டு வந்து அவரவர் தொழிலை அவரவர் வம்சமே செய்ய வேண்டும் என்றவர்கள் பிராமணர்கள். அந்த சமுகத்தை சார்ந்தவர் எப்படி மற்றவர்கள் படிக்க வேண்டும் என எண்ணுவார். மற்றவர்கள் தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என எண்ணியிருப்பார். அதனால் தான் சமச்சீர் கல்வி திட்டத்தை ஊத்தி மூடிவிட்டார் எப்படி அம்மாவின் திட்டம்.

வியாழன், மே 26, 2011

பத்திரிக்கையுலக பிதாமகன் மரணம்.


சின்னக்குத்தூசி - பத்திரிக்கையுலகின் பிதாமகன். தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக திருமணமே செய்துக்கொள்ளாத மனிதர். வாழ்நாள் முழுவதும் எழுத்து, எழுந்து என இறக்கும்போதும் எழுத்தை பற்றியே எண்ணிய அற்புத மனிதர். துக்கடா பத்திரிக்கையில் வேலை கிடைத்தாலே ஏகபோகமாக அலட்டல் விட்டு, மந்திரிகளையே மிரட்டுபவர்களுக்கு மத்தியில் தமிழகத்தின் முதல்வராக 5 முறையிருந்த கலைஞர் கருணாநிதியுடன் நெருக்கமாகவும், பல அமைச்சர்களை ஆட்டி வைக்கும் வல்லமை இருந்தும் கர்வம், பந்தா போன்றவற்றை தன்னிடம் அண்ட விடாதவர். வேள்ளை வேட்டி சட்டையில் எளிமையாக வாழ்ந்தார்.

பத்திரிகைக்கு வந்த சில ஆண்டுகளிலேயே அரசு சார்பில் விட்டுமனை வாங்கும் செய்தியாளர்களுக்கு மத்தியில் சொந்த வீடோ, நிலமோ இல்லாமல் 4 வெள்ளை வேட்டி-சட்டையுடன் மதிப்பிற்க்குரிய ஆசிரியர் அண்ணன் நக்கீரன் கோபால் அரவணைப்பில் வாழ்ந்துவந்தார். அவரின் வாழ்நாளில் யாரிடமும் தனக்கென உதவி என போய் நிற்காதவர். தேடி வரும் இளம் செய்தியாளர்களுக்கு வழிகாட்டியாய் இருந்த கலங்கரை விளக்கம் அவர்.

திருவாரூரில் 1934 ஜீன் 15ந்தேதி ராமநாதன் - கமலா அம்மையார்க்கு மகனாக பிறந்தார். திருவாரூாில் புகழ்பெற்ற தியாகராஜர் என்ற கடவுளின் பெயரை தனது மகனுக்கு வைத்து உச்சி முகர்ந்தனர் பெற்றோர். பிறப்பால் பிராமணராக இருந்தாலும் கடவுள் எதிர்ப்பு கொள்கையில் தீவிரம் காட்டினார். இதனால் படிக்கும் போதே திராவிட இயக்கத்தின் கூட்டங்களில் கலந்து கொண்டு திராவிட கருத்துக்களை உள் மனதில் நிரப்பிக்கொண்டவர்.  இதனாலயே அந்நாளைய திராவிட கழக முன்னோடிகளுக்கு தியாகராஜனை நிரம்ப பிடிக்கும்.


திருவாரூர் திராவிட கழக முன்னோடிகள் மூலம் பெரியாரை சந்தித்தார். தியாகராஜனின் ஆசைப்படி அவரை தன்னுடைய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மாணவராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு சில பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றினார்.

அப்போது திமுகவில் இருந்த ஈ.வி.கே.சம்பத் தியாகராஜனை அழைத்து தன்னுடைய வார இதழ்க்கு பொறுப்பாசிரியராக்கினார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். பின்னர் சம்பத் தமிழ் தேசிய கட்சி தொடங்கியபோது அவருடனே சென்றார். சம்பத், தன்னுடைய தமிழ்செய்தி வார, தின தாளில் தியாகராஜனை, பொறுப்பாசிரியராக்கினார். தனி இயக்கம் கண்ட சம்பத் பின்னாளில் காங்கிரஸ்சில் இணைந்தபோது அவரின் செய்தி நிறுவனத்தில் இருந்து வெளியே வந்து காமராஜர் நடத்திய நவசக்தியில் தலையங்க ஆசிரியராக பணியாற்றினார். பெரியாருடன் குத்தூசி குருசாமி என ஒருவர் இருந்தார். அவரின் எழுத்துக்கள் ஆங்கிலேயனை வெறுப்பேற்றும், பார்ப்பனர்களை வெறி கொள்ள வைக்கும் அளவுக்கு தீவிரமாக இருக்கும். அவரைப்போலவே எழுதியதால் தியாகரான் சின்னக்குத்தூசியானார்.


இவர் எழுதாத பத்திரிக்கைகளே இல்லை என சொல்லும் அளவுக்கு எழுதி குவித்தார். முரசொலி, நக்கீரன், ஜீனியர்விகடன், தாமரை என இவர் பல பத்திரிக்கைகளில் பலப்பல புனைப்பெயர்களில் அரசியல் கட்டுரைகள் அழுத்தமான ஆதாரங்களுடன் எழுதினார். இவர் வைக்கும் ஆதாரங்களை, மேற்கோள்களை சந்தேகம் கொள்ளவோ, ஆராயவோ முடியாது அந்தளவுக்கு அதில் உறுதியிருக்கும்.

இவரின் அரசியல் விமர்சனங்கள் சாட்டையடியாக இருக்கும். அரசியல் கட்சிகளின், தமிழகத்தின் பிரபலமான தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை நடுநிலைமையோடு பதிவு செய்ய ஆசைப்படுபவர்களுக்கு வழிகாட்டியாய், ஆசானாய் இருந்து கற்று தந்தவர். வளரும் செய்தியாளர்களின் சரணாலயம் அவர். அவரால் வளர்ந்து இன்று பத்திரிக்கையாளராய் மின்னுபவர்கள் அனேகமானோர் உள்ளனர். அவரின் எழுத்து நடையை கண்டு இவரைப்போல் நம்மால் எழுத முடியவில்லையே என மற்ற எழுத்தாளர்களை ஆதங்கபட வைத்தது.


கொள்கைக்காக தான் எழுத்துப்பணியே என்பார். முரசொலியில் பணியாற்றியபோது இந்துத்துவா கட்சியான பி.ஜே.பிக்கு ஆதரவாக எழுதுங்கள் என்ற போது கலைஞருடன் கோவித்துக்கொண்டு முரசொலியை விட்டு வெளியே வந்தவர். சில ஆண்டுகளுக்கு பின்னர் ஜெ வின் கைது நடவடிக்கையால் மீண்டும் முரசொலிக்கு போனார். அந்த 5 ஆண்டுகாலம் தன் எழுத்தாற்றலால் ஜெவை நாறடித்தார்.

தன்னுடைய எழுத்தை திராவிட கொள்கைக்காக அர்ப்பணித்துக்கொண்ட எழுத்துலக மன்னன் அவர். அவரின் எழுத்துக்கள் திமுகவை ஆதரிப்பதாக சொல்லப்படும். இதனாலயே அவரை திமுக சார்ப்பானவராக முத்திரை குத்தினார்கள் திராவிடத்தின் பகைவர்கள். உண்மையில் அவரின் எழுத்துக்கள் திராவிட கொள்கையை ஆதரிப்பதாகவே இருந்தன. பெரியாரை ஏற்றுக்கொண்டு அவரின் கொள்கையின் பால் வாழ்ந்து மரணித்துள்ளார்.

கடைசி காலகட்டத்தில் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு மேன்சனில் 10க்கு 10 அறையில் பேப்பர்களுடன் பேப்பராக, புத்தகங்களுடன் புத்தகமாக வாழ்ந்தார். 60 ஆண்டுகால அரசியல், சமுக வரலாற்றை, தலைவர்களின் வாழக்கையை நுணுக்கமாக கேட்பவர்களுக்கு தேதி, ஆண்டுவாரியாக எடுத்துரைப்பார்.


அப்படிப்பட்டவர் கடந்த 22ந்தேதி பில்ரோத் மருத்துவமனையில் மரணமடைந்தார். இந்த பிதாமகன் உடல் இறுதியஞ்சலிக்காக நக்கீரன் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. கலைஞர், வீரமணி, நல்லக்கண்ணு, ஸ்டாலின், கோபண்ணா, தொல்.திருமா, சுப.வீ என ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தினர். அண்ணன் உயர்திரு மரியாதைக்குரிய. நக்கீரன்கோபால் தலைமையில் நக்கீரன் குடும்பத்தினர், மற்ற பத்திரிக்கை சகோதரர்கள், அரசியல் கட்சியினர் இடுகாடு வரை சென்று அந்த பத்திரிக்கையுலக பிதாமகனை திரும்பி வர முடியாத இடத்திற்க்கு அனுப்பிவைத்துவிட்டு வந்தனர். இந்த பிதாமகன் இடத்தை நிரப்ப இன்று வேறுயாரும்மில்லை என்பதே உண்மை. அவருக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

புதன், மே 25, 2011

தில்லாலங்கடி தயாநிதியை தோலுரித்த விக்கிலீக்ஸ்.


பல முறை நமது பல கட்டுரைகளில் சுட்டி காட்டியது இப்போது விக்கிலீக்ஸ்சும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. கடந்த 2008 நவம்பர் மாதம் ஈழத்தில் சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையே உச்சகட்ட போர் நடைபெற்றபோது, தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, போரை நிறுத்த இந்தியா முயற்சிக்கவில்லையெனில் திமுகவின் எம்.பிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிடுவார்கள் என எச்சரித்தார். உடனே கனிமொழி தனது ராஜினாமா கடிதத்தை கொண்டும் போய் கருணாநிதியிடம் தந்தார். மற்ற எம்.பி, மத்திய அமைச்சர்களும் தந்தனர். உடனே பிரணாப்முகர்ஜி சென்னை வந்தார் போர் நின்றுவிட்டது என அறிவித்தார்கள்.

இதுப்பற்றி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அதிகாரிகள் தயாநிதிமாறனை சந்தித்து பேசியுள்ளார்கள். அவர்களிடம், கூட்டணியில் இருந்து கருணாநிதி  விலக மாட்டார். இது அவர் நடத்தும் நாடகம் என கூறியுள்ளார்.

இதேபோல் 2008 பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிகாரிகளிடம், பதவிக்கு வந்ததும் எல்லோரும் மாறிவிடுகிறார்கள். திமுகவினர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக உள்ளார்கள். திமுக தந்த இலவச கலர் டிவியை மக்கள் மறந்துவிட்டனர். இதனால் 2009 நாடாளமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சரிபாதியிடங்களில் வென்றால் பெரிய விஷயம் என்றுள்ளார். இதுயெல்லாம் அமெரிக்காவின் வெளியுறவுத்துறைக்கு கேபிள் வழியாக சென்றுள்ளது. அதைத்தான் விக்கிலீக்ஸ் லீக் செய்துள்ளது. விக்கிலீக்ஸ்சுடன் ஓப்பந்தம் போட்டுள்ள இந்தியாவின் பிரபல ஆங்கில செய்திதாளான தி இந்து அதை முதல் பக்கத்தில் வெளியிட்டு தயாநிதிமாறனின் துரோக தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

ஆனால் தயாநிதிமாறன், என் புகழை கெடுக்க, தங்களது சர்க்குலேஷனை உயர்த்திக்கொள்ள என்மீது வீண் பழி சுமத்துகிறது தி இந்து. உடனே இதற்க்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் வழக்கு தொடருவேன் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

விக்கிலீக்ஸ் நிர்வாகத்துக்கும் தயாநிதிமாறன்க்கும் மாமன் மச்சான் சண்டையா என்ன தயாநிதிமாறனை பழிவாங்க பொய்களை சொல்ல வேண்டும் என்பதற்க்கு. தயாநிதிமாறனை அசஞ்க்கு தெரிவதற்க்கான வாய்ப்பு நிரம்ப குறைவு.

தி இந்து பத்திரிக்கை பொய் சொல்லியிருக்கலாமே என கேட்கலாம். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என முதல் பக்க செய்தி வெளியிட்ட நிறுவனம் தான் அது. ஆனால், தயாநிதிமாறன் விவகாரத்தில் பொய் சொல்வதற்கான வாய்ப்பு குறைவு. காரணம், விக்கிலீக்ஸ் தரும் தகவல்களை மட்டுமே அவர்கள் பெயர் போட்டு வெளியிட முடியும். வெளியிடும் தகவல்களை அந்நிறுவனம் கண்காணிக்கிறது. போட்டி நிறுவனங்களும் அதே கண்கொத்தி பாம்பாக பார்க்கிறார்கள். அதோடு தயாநிதிமாறன் இந்து குடும்பத்தில் தான் பெண் எடுத்துள்ளார். அவர்களே வெளியிடுகிறார்கள் என்றால் நிச்சயம் தகவலை சரிபார்த்தே வெளியிட்டுயிருப்பார்கள். ஆக இது உண்மை செய்தி தான் என நம்பலாம்.


இனி விவகாரத்துக்கு வருவோம் :
ஏதே தயாநிதிமாறன் யோக்கிய சிகாமணி போல் திமுககாரர்கள் பதவிக்கு வந்தபின் மாறிவிடுகிறார்கள் என சொல்லியுள்ளார். திமுகவின் டெல்லி முகமான முரசொலிமாறன் இறந்ததும் வியாபாரியான அவரது மகனை எம்.பியாக்கி அமைச்சராக்கி, டெல்லியில் திமுகவின் முகமாக்கினார். (இன்றுவரை அவர் அரசியல்வாதியாகவில்லை. பெரு முதலாளியாகவே உள்ளார்). திமுக தலைமையின் பிச்சையால் அமைச்சரானதும், அதிகாரத்தின் மூலம், அம்பானி சகோதரர்களுக்கு டெலிகாம் அனுமதி தர 1000 கோடி வாங்கினார். அம்பானிகளுக்காக டாடாவை மிரட்டினார். அமெரிக்காவுக்கு அரசு செலவில் சென்று ஹாலிவுட் படங்களை தமிழாக்கம் செய்து சன் நிறுவனம் மூலம் வெளியிடும் ஒப்பந்தங்கள் செய்தார், எப்.எம் ரேடியோ ஸ்டேஷன்களை நாட்டின் பல மாநகரங்களில் திறந்தார். தனது சன் நிறுவனத்திற்க்கு லேட்டஸ்ட் டெக்னாலஜி இயந்திரங்களை இறக்குமதி செய்தார், உச்சமாக தமிழகத்தில் தாத்தாவை கீழே இறக்கிவிட்டு தான் அந்த நாற்காலியில் அமர காங்கிரஸ்சோடு சேர்ந்து காய் நகர்த்தியவர் தான் தயாநிதிமாறன்.

அப்படிப்பட்டவர் சொல்கிறார் பதவிக்கு வந்ததும் திமுககாரர்கள் மாறிவிடுகிறார்கள் என்று. திமுக நம்பி வந்தவர்களுக்கு துரோகம் செய்ததில்லை என்பது வரலாறு. திமுக தலைமை போட்ட பதவி பிச்சையில் அரியணையில் இன்றும் அமர்ந்துக்கொண்டு காங்கிரஸ்சோடு மறைமுகமாக கை கோர்த்துக்கொண்டு அவரது குடும்பத்தை வளர்த்த இயக்கத்தை அழிக்க துடிக்கும் மாறன் சொல்கிறார் இத்தகவல் பொய் என்று.

இந்த தயாநிதிமாறன்க்காக 2009ல் இரண்டாவது முறையாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைத்தபோது, திமுகவின் முகமாக விளங்கிய டி.ஆர்.பாலுவை அமைச்சராக்க கூடாது. ஆனால் தயாநிதிமாறனை நிச்சயம் அமைச்சராக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமையே முரண்டு பிடித்தது. அதனாலே அவருக்கு ஐவுளித்துறை கிடைத்தது. சீட் கூட அவருக்கு காங்கிரஸ் கட்சியே தர வேண்டும் என சொன்னதாக கூட தகவல்கள் உண்டு.

மதுரை தினகரன் நிறுவனம் தீ வைத்து எரிக்கப்பட்ட அன்று உடைத்து வெளியே அனுப்பப்பட்ட மாறன் சகோதரர்களை மீண்டும் இணைத்துக்கொண்டு கொஞ்சி குலாவியது தவறு என்பது இப்போது திமுக தலைவர் கருணாநிதிக்கு புரிந்திருக்கும். இன்னும் புரியவில்லை எனில் காலம் நிச்சயம் இதை விட அதிகமாக கருணாநிதிக்கு புரியவைக்கும். திமுக தொண்டர்களுக்கும் புரியவைக்கும். 

தி.மு.க ஆட்சி தூக்கியெறிய காரணம்மென்ன ?

தி.மு.க ஆட்சி தூக்கியெறிய காரணம்மென்ன ?

2011 தமிழகத்தின் தேர்தல் களம். அரசியல் கட்சிகள், அரசியல் நோக்கர்கள், விமர்சகர்கள் கணிக்க முடியாததாக இருந்துவிட்டது. தமிழக அரசியல் களத்தில் மட்மல்ல இந்திய அரசியல் களத்தில் இந்த வெற்றி ஒரு திருப்பத்தை ஏற்படுத்தவுள்ளது. தமிழகத்தில் பல நல்ல திட்டங்கள் செய்து பல மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த திமுகவை புறம் தள்ளியள்ளார்கள் மக்கள்.

ஏன், எதனால் இந்த நிலை?. விரிவாகவே ஆராய வேண்டிய தருணம்மிது.
விலைவாசி உயர்வு, திமுகவின் கி.செ முதல் மூத்த அமைச்சர்கள் வரை செய்த அராஜகம், ஊழல், ஆட்சியில், கட்சியில் குடும்ப ஆதிக்கம், தொழில்கள் கபாளிகரம், சினிமா துறை அழிப்பு, ஈழ போராட்டத்தில் துரோகிகளுடன் கை கோர்த்தது, மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு சீரழிவு, நிர்வாகத்தில் தடுமாற்றம், கட்சியில் உள்ள நம்பிக்கை துரோகிகள் இவைகளை விட மக்களை மடையர்கள் என எண்ணியது இவைகள் தான் திமுகவை ஆட்சி கட்டிலை விட்டு இறக்க காரணங்கள் என 5 வரியில் சொல்லிவிடலாம். இவை எப்படியெல்லாம் மக்களின் மனங்களை ஆக்ரமித்தன என்பதை காண வேண்டும்.

விலைவாசி உயர்வு :
கால மாற்றத்தில் பொருட்களின் விலைகள் உயர்வது என்பது இயற்கை. ஆனால் தற்போதுயெல்லாம் செயற்கையாக விலைவாசிகள் உயர்த்தப்படுகின்றன. பக்கத்து மாநிலத்தில் சிமெண்ட் 160ருபாய்க்கு விற்கிறது. ஆனால் தமிழகத்தில் 170 ரூபாயாக இருந்தது. 3 மாத இடைவெளியில் 290 ரூபாய்க்கு உயர்ந்தது. இதை முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியிடம் கொண்டு போனபோது எதிர்பார்த்ததை விட ஏற்றவில்லை என்றார். கிராமத்தில் கூரை வீட்டில் இருந்து கொஞ்சம் மெத்தை வீடு கட்டுபவன் கூட இதனால் அதிர்ந்து போனான் கட்டுமானங்கள் தடைபட்டபோது. தமிழக மக்கள் முகம் சுளித்தபோது சிமெண்ட் முதலாளிகளிடம் குறையுங்களேன் என கெஞ்சினாரே தவிர குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இதேபோல் தான் அரிசி, பருப்பு முதல் தங்கம், தகரம் வரை எல்லா பொருளும் திட்டமிட்டே விலை ஏற்றப்பட்டன. உள்ளுர் அரசு பேருந்துகளில் 6 ரூபாய் டிக்கட் 7.50 என விலை வைக்கப்பட்டது. கேள்வி கேட்டபோது இது எக்ஸ்பிரஸ் என பதில் வந்தது. நேற்று வந்த அதே டிரைவர், அதே கண்டக்டர், அதே ரூட், அதே பஸ் எப்படி விடிந்ததும் எக்ஸ்பிரஸ் என ஆனது தெரியாமல் முழித்தனர். கேள்வி கேட்டபோது விலை ஏறவேயில்லை என்றார் முதல்வர். இப்படி பல விலை உயர்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆளும்கட்சி விலை உயர்ந்து விட்டது என ஒப்புக்கொள்ளாமல் சமாளித்தது வெறுப்பானது.

கட்சியினரின் கிடுகிடு வளர்ச்சி :
கட்சி ஆரம்பித்தபோது டீ குடிக்க கூட காசுயில்லாமல் மாட்டு வண்டியிலும், நடந்தும் 10 மைல், 20 மைல் நடந்துப்போய் மக்களிடம் பிரச்சாரம் செய்தவர்கள் திமுகவினர். மற்ற எந்த கட்சிக்கும் இந்த வரலாறு கிடையாது. படித்தவர்களின் தோழனாக, நடுத்தர மக்களின் நாயகனாக விளங்கிய தி.மு.கழகம் கடந்த 10 ஆண்டுகளாக அந்த இடத்தை விட்டு விலகி வெகு தூரம் போய்விட்டது. இன்றைய காலகட்டத்தில் மாற்று கட்சியினரை கவர்ந்த அளவுக்கு கூட இளைஞர்கள், இளைஞிகளை திராவிட முன்னேற்ற கழகம் கவரவில்லை. தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் செய்த சாதனைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டும் போய் சேர்க்காமல் விட்டு விட்டார்கள். 90களோடு திமுகவில் இளைஞர்கள் சேர்க்கை குறைந்து போய்விட்டது.

விஜயகாந்த், விஜய் பின்னால் ஓடுகிறார்கள் இளசுகள். இதற்க்கு காரணம் கடந்த 10 ஆண்டுகளில் திமுகவில் உள்ள கி.செ முதல் மாநில நிர்வாகிகள் வரை உள்ளவர்களின் கிடு கிடு வளர்ச்சி. சைக்கிளில் போய் கட்சி வளர்த்தவர்கள் இன்று தேர்தல் நேரத்தில் கூட காரை விட்டு இறங்குவதில்லை. முன்பு மக்களுக்கு ஒரு பிரச்சனையென்றால் திமுககாரன் ஒடிவந்து நிற்பான் என்ற நிலை போய் இன்று பிரச்சனையே திமுககாரனால் என்ற நிலை வந்துள்ளது. இதை கட்சி தலைமையும் கண்டுக்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துவிட்டது. அதிலும் குறிப்பாக கடந்த 2006 முதல் 2011 வரை திமுகவினர் வளர்ச்சி பல மடங்கு அதிகம். அது மக்களை முகம் சுளிக்க வைத்துவிட்டது.

மாற்றன் தோட்டத்து மல்லிகைக்கு முக்கியத்துவம் :
உயிரே போகிறது என்றாலும் உண்மையான திமுககாரன் வேறு எந்த கட்சிக்கும் ஒட்டுப்போடமாட்டான் என்பார்கள் பிற கட்சியினர். அந்தளவுக்கு கட்சியின் விசுவாசிகள் அவர்கள். ஆனால் இவர்களுக்கான முக்கியத்துவம் இன்று கட்சியில் சுத்தமாகயில்லை.  எம்.ஜீ.ஆர் கட்சி தொடங்கிய போது, ஆட்சி கட்டிலில் அமர்ந்தபோது அவர் பின்னால் போனவர்கள், அவர் மறைவுக்கு பிறகு ஜெ வின் நடவடிக்கை பிடிக்காமல் வனவாசம் போனவர்கள் பலர் மீண்டும் திமுகவுக்கு வந்தார்கள். குறிப்பாக கே.கே.எஸ்.ஆர், ரகுபதி, எ.வ.வேலு, மதிமுகவிற்க்கு போய் பின் வந்த கண்ணப்பன், செஞ்சியார், டி.பி.எம். மைதின்கான், செல்வராஜ் போன்றவர்கள் திமுகவில் அமைச்சராக முடிகிறது. கட்சியை ஆட்டி படைக்க முடிகிறது ஆனால் திமுகவிற்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டு கழகத்திலேயே இருப்பவர்கள் நிலை பரிதாபமாகவுள்ளது. மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாரி வழங்கப்படும் பதவிகள், முக்கியத்துவம் போன்றவை கழகமே கோயில் என இருப்பவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் வேதனையில் நொந்துபோய்விட்டார்கள்.

அச்சாணியின் வளைவு :
2000ம் வரை முதல்வராக இருந்த கலைஞர், கடை கோடி கன்னியாகுமரியில் இருந்து ஒரு நிhவாகி வந்தாலும் அவரை பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு கட்சியினரோடு நெருக்கமாக இருந்தார். அதன்பின் கட்சியினரை விட்டு வெகு தூரம் போய்விட்டார். அவரை பார்க்க வேண்டும் என்றால் ஆட்சி பொறுப்பில் இருந்தால் அதிகாரிகள் வட்டம், அதன்பின் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் வட்டம், முதல் கட்ட தலைவர்கள் வட்டத்தை நெருக்கி அவரை தரிசிப்பதற்க்குள் நொந்து போய்விடுகின்றனர். ஆட்சியில் இல்லாத போது இந்த வட்டம் குறுகினாலும் பார்ப்பது சுலபமல்ல என்ற நிலை.

இதனால் மாவட்ட நிர்வாகிகளின் ஆட்டத்தை கட்சி தலைமையிடம் நேரடியாக சொல்ல முடிவதில்லை உ.பிகளால். தலைவரை அவ்வளவு சீக்கிரம் யாரும் சந்திக்க முடியாது என்பதால் நிhவாகிகள் ஆடும் ஆட்டம் பயங்கரம். கடந்த முறை அமைச்சர்களாக இரந்த வீரபாண்டி ஆறுமுகம், என்.கே.கே.பி.ராஜா, சுரேஷ்ராஜன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பூங்கோதை என யார் மீதும் தைரியமாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காரணம், தளபதி, அஞ்சநெஞ்சன், கனிமொழி, மாறன் என ஏதாவது ஒரு வாரிசின் ஆதரவாளர்களாக இவர்கள் இருப்பதால் இவர்களுக்கு அவர்கள் சப்போட் செய்வதால் தப்பு செய்தவர்களை தலைவரால் கண்டிக்கவோ, தண்டிக்கவோ முடியவில்லை. இதனால் இவர்கள் செய்த தவறுகள் கட்சியை தான் பாதித்தன.

கட்சியில் அதிகார போட்டி :
1976ல் அதிமுக ஆரம்பிக்கப்பட்டு ஆட்சியை பிடித்த எம்.ஜீ.ஆரால் கடைசி வரை திமுகவை அழிக்க முடியவில்லை. அதற்க்கு காரணம் திமுக மீது இருந்த பற்றும் கலைஞர் பேச்சுக்கும், கடிதத்துக்கும் உ.பிகளிடம் இருந்த ஈர்ப்பு. இப்படிப்பட்ட கருணாநிதி தனக்கு பின் யார் என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதற்க்கு காரணம் திமுக என்பது ஜனநாயக அமைப்பு என்பதால். அப்படியிருந்தும் கட்சியை அடுத்து வழி நடத்த போகிறவர் தனது மகன் ஸ்டாலின் தான் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார். அதற்க்கு ஏற்றாற்போல் கட்சியினர், மக்கள் ஸ்டாலின்னை ஒரு தலைவராக ஏற்றுக்கொண்டனர். ஆனால் குடும்பத்தில் அழகிரி, கனிமொழி, தயாநிதிமாறன் போன்றோர் அடுத்தடுத்து கட்சி பதவி, அமைச்சர் பதவி என வந்து அதிகார மையமாக உருவானதோடு, இவர்களின் வாரிசுகள், அடிப்பொடிகள் செய்த அலப்பரை, அராஜகம் கட்சியினர் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் ஒரு அதிருப்தியை மெல்ல மெல்ல உருவாக்கி விட்டது. இந்த அதிகார போட்டி தான் ஆட்சியை, கட்சியை அசிங்கப்படுத்தியது.


மாறன்களின் ஆதிக்கம் :
இறக்கும் வரை மாமன் பேச்சை மீறாத மருமகனாக விளங்கி வந்தார் முரசொலிமாறன். கட்சி கொள்கையில் இருந்து தடம் மாறும் போது தலைவனை நோக்கி கேள்வி கேட்டாலும்  தலைவனின் விசுவாசமான தளபதியாகவும், மாமன் மெச்சும் மருமகனாகவும் விளங்கினார். அவரின் பிள்ளைகள் கலாநிதிமாறன், தயாநிதிமாறன் இருவரும் தங்கள் தொழில் சாம்ராஜ்யத்தை திமுக என்ற ஆலமரத்தின் கீழிருந்து வளர்த்துக்கொண்டவர்கள், போட்டியாளர்களை திமுக என்ற ஆயுதத்தை கொண்டு நசுக்கியவர்கள் ஒரு கட்டத்தில் கட்சியையே அபகரிக்க பார்த்த புண்ணியவான்கள். மீடியா ஆதிக்கம், சினிமா ஆதிக்கம், தொழில்துறை ஆதிக்கம் போன்றவற்றில் இறங்கி எதிரிகளை உருவாக்கியவர்கள். இந்தியா அளவில் பெரிய பெரிய எதிரிகளை உருவாக்கி அவர்களை திமுக பக்கம் நரித்தனத்தோடு திசை திருப்பி திமுகவை அழிக்க துணை போன சதிகாரர்கள்.

ஸ்பெக்ட்ராம் :
    தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்கமாட்டான். ஆயிரக்கணக்கான கோடி கமிஷனாக கிடைக்கும் துறையில் இருந்துக்கொண்டு ஊழல் செய்யாமல் இருந்தால் அவர் அரசியல்வாதியே அல்ல. ராசா ஊழல் செய்தார். ஆனால் இதில் 60 சதவித பங்கு போய் சேர்ந்தது காங்கிரஸ் கம்பெனியிடம். ஆனால் அவர்கள் ஊழல் என்ற பந்தை திமுக மீது திருப்பி விட்டார்கள். அதை பிடித்ததின் விளைவு. காங்கிரஸ் கம்பெனி தங்களை யோக்கியவான்களாக காட்டிக்கொள்கிறது. அதோடு, இந்த விவகாரம் இந்திய அளவில் பெரியதாக காரணம் காங்கிரஸ் கம்பெனி, தமிழகத்தில் மாறன் கம்பெனி. ஓவ்வொரு எதிர்கட்சி, கூட்டணி கட்சி தலைவர்களின் வீடு தேடி போய் ஆதாரங்களை தந்து திமுகவை அழிக்க துணை போன கனவான்கள். இன்று குடும்பம் ஒன்றினைந்தாலும் காங்கிரஸ் என்ற பந்தத்தை மறைமுகமாக பிடித்துக்கொண்ட மாறன் கம்பெனி திமுகவுக்கு எதிராக மீடியாக்கள் மூலம் சிந்து பாடுகின்றன. கனிமொழியை சிறைக்கு அனுப்பியாகிவிட்டது. கலைஞர் மீடியாவை அபகரிக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம்.

துரோக காங்கிரஸ்:
துரோகத்தின் மறுபெயர் காங்கிரஸ். அந்த கட்சியுடன் கூட்டணி வைத்தபோதே வரலாறு தெரிந்தவர்கள் அலறினார்கள் மீண்டும் ஒரு துரோகத்தை கருணாநிதி சந்திக்க போகிறார். இதிலிருந்து எழ அவருக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்றார்கள். அது இன்று நடந்துவிட்டது. தேர்தலில் தனித்து நின்றால் 1 இடத்தில் கூட ஜெயிக்க முடியாத காங்கிரஸ் ஸ்பெக்ட்ராம்மை காரணம் காட்டி 63 சீட் மிரட்டி வாங்கியது. ஆட்சியில் பங்கு என்ற அஸ்திரத்தை அதே ஸ்பெக்ட்ராம் என்ற பூதத்தை காட்டி மிரட்டியது. இறுதியில் இக்கூட்டணி தேர்தலில் தோற்றதும் தானும் தான் தோற்றோம் என்ற எண்ணமேயில்லாமல் ஜெ வுக்கு வாழ்த்து தெரிவித்து கூடி கும்மியடிக்க அழைப்பு தந்தது. அதே ஸ்பெக்ட்ராம்மை காட்டி திமுகவை அவமானப்படுத்தி காயடித்து வெளியனுப்பும் காங்கிரஸ்.

ஈழம்:
2008, 2009களில் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவித்தபோது காங்கிரஸ் அரசின் பேச்சை கேட்டு வக்காலத்து வாங்கியதோடு, காங்கிரஸ்சின் துரோகத்துக்கு துணை போனதன் விளைவு இன்று கொள்கையில்லாத விஜயகாந்த் கட்சி 25 இடங்கள் வெல்கிறது. திமுக ஆட்சி பொறுப்பை விட்டே இறங்குகிறது. காங்கிரஸ் சுமக்க வேண்டிய பழி என்ற சிலுவையை இடையில் நின்ற திமுக சுமந்ததன் விளைவு தேர்தல் முடிவு காட்டிவிட்டது.

சலுகையோ சலுகை :
    தமிழகத்தில் தினமும் காலை 8 முதல் மாலை 5 வரை உழைத்தாலே 200 ரூபாய் தான் கூலி கிடைக்கிறது. மாதம் 30 நாள் உழைத்தாலும் 6 ஆயிரம் தான். ஆனால் மாதத்தில் 5நாள் அரசின் ரெகுலர் விடுமுறை. மருத்துவலீவு. பாண்டிகை விடுமுறை என சாராசரியாக மாதத்தில் 8நாள் விடுமுறை வந்துவிடுகிறது. மீதி இருப்பதோ 22நாள் தான் இதற்க்கு சாதாரண அரசு ஊழியர் வாங்கும் சம்பளம் மாதம் 20 ஆயிரம். வேலை நேரமோ 8 மணி நேரத்திற்க்கும் குறைவு. அது மட்டுமல்ல ஏதாவது ஒரு வேலை ஆக வேண்டும்மென தாலுக்கா ஆபிஸ் முதல் பள்ளிக்கூடம் வரை எங்கு போனாலும் சம்திங் தரவில்லையென்றால் பணிசெய்ய மாட்டார்கள் இந்த அரசு ஊழியர்கள். அப்படிப்பட்ட அரசு ஊழியர்களுக்கு மேலும் மேலும் வாரி கொடுத்தது எந்த விதத்தில் நியாயம். அது மட்;டுமல்ல ஆயிரக்கணக்கில் சம்பளமும், மக்களிடமும் இருந்து சம்திங் பெறும் அரசு ஊழியர்களை நோக்கி கேள்வி கேட்டால் வழக்கு வேறு பாய்கிறது. மக்களுக்காக உழைக்காத அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் தொடர்வதை தான் மக்கள் விரும்பவில்லை.

சினிமாத்துறை :


 கிளைவுட் நைன், ரைட் ஜெயன்ட், சன் என எத்தனை சினிமா தயாரிப்பு நிறுவனங்கள். அத்தனை நிறுவனங்களும் 10 நிமிடத்துக்கு ஒரு விளம்பரம் என தொலைக்காட்சியில் போட்டு மக்களை நோகடித்துவிட்டார்கள். அது மட்டுமல்ல அவர்கள் சினிமாதுறையினரை மிரட்டியது படு மோசமானது. இதனால் தான் திமுக சார்ப்பானவர் என வர்ணிக்கப்பட்ட சந்திரசேகர் திமுகவின் எதிரியானார். ஊருக்கு 2 ரசிகர்களை கூட வைத்தில்லாத தன் மகன் விஜய்யை வைத்து அரசியல் கட்சி ஆரம்பிக்க பார்த்தார்.

இவைகளே திமுக ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்ப காரணம். மற்றப்படி அ.தி.முக தருவதாக சொன்ன இலவசங்களோ, இல்லை ஜெ பிடித்தோ மக்கள் வாக்களிக்கவில்லை என்பதே உண்மை. 

திமுக  செய்த தவறுகளை சாி செய்வது எப்படி........?

முதல்வரானார் ஜெ.



3வது முறையாக தமிழகத்தின் முதல்வராக கடந்த மே 16ந்தேதி பதவியேற்றுக்கொண்டார் அதிமுக பொது செயலாளர் ஜெ. கடந்த காலங்களை போல துக்ளக் தர்பார் நடத்தாமல் நல்லாட்சி நடத்தினால் சிறந்தது. வாழ்த்துக்கள்.


புதன், மே 11, 2011

வீம்பு காட்டும் தேர்தல் ஆணையம்.



இந்தியாவில் தேர்தல் ஆணையம் தன்னிச்சையான அமைப்பு தான். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அவர்கள் விவகாரத்தில் நீதிமன்றங்கள் கூட தலையிட முடியாது என்பது சரிதான். ஆனால் அவர்கள் நடந்துகொள்ளும் முறையால் அவர்கள் மீது சந்தேகம் தான் வருகிறது. இன்று எதிர்க்கட்சிகள் தங்களது அரசியலுக்காக அவர்களின் அதிகாரத்தை கண்டுக்கொள்ளாமலோ அல்லது தங்களுக்கு சாதகமாக இருக்கிறது என்பதால் விட்டுவிடலாம். ஆனால் காலப்போக்கில் அது பெரிய பிரச்சனையாக வெடிக்கும்.

தமிழகத்தை போல தேர்தல் முடிந்து கடந்த 1 மாத காலமாக கேரளா, பாண்டிச்சேரி உட்பட 3 மாநில அரசியல் கட்சிகளுடன் பொதுமக்கள் ரிசல்ட்க்காக காத்துயிருக்கிறார்கள். தேர்தல் தேதி நடைமுறையில் இருப்பதால் எந்த அரசு பணியும் நடக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. வருவாய்துறை ஊழியர்கள், காவல்துறையினர் வாக்கு இயந்திரங்களை பாதுகாக்க சென்று விட்டார்கள். இதனால் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் சான்றிதழ்கள் வாங்க முடியாமல் தவிக்கிறார்கள். காவல்நிலையங்களில் வழக்குகள் தூங்கிக்கொண்டு இருக்கின்றன.

தற்போது தேர்தல்க்கு முன்பு பண்ண அலப்பரையை விட அதிகமாக வீணாக அலப்பறை செய்கின்றன. கோடிக்கணக்கான பணத்தை சும்மா பந்தாவுக்காக பாதுகாப்பு என்ற பெயரில் வாரி இறைக்கின்றது. 234 தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் அங்கங்கு அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஒவ்வொரு தொகுதிக்கான வாக்குகளை எண்ண 15 டேபிள்கள் போடப்படுகின்றன. ஒவ்வொரு டேபிளிலும் 2 அலுவலர்கள் இருப்பார்கள். எதிரே அரசியல் கட்சி, சுயேட்சைகளின் முகவர்கள் இருப்பார்கள். வாக்கு பெட்டிகள் ஒவ்வொரு ரவுண்ட்டுக்கு கொண்டு வரப்பட்டதும் இயந்திரத்தின் பட்டன் அமுக்கப்படும் அது பதிவான வாக்குகள் எவ்வளவு, எந்த சின்னத்துக்கு எவ்வளவு வாக்கு என்பதை அறிவிக்கும் அதை அங்குள்ள முகவர்கள் குறித்துக்கொள்ளுவார்கள். வாக்கு மைய பொது அதிகாரி ஒவ்வொரு டேபிளாக சென்று எண்ணிக்கையை குறித்துக்கொண்டு டோட்டல் போட்டு முதல் ரவுண்ட் படி யார் யார் எவ்வளவு வாக்கு வாங்கியிருக்கிறார்கள் என்பதை பலகையில் எழுதுவார், அதை மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவார். பின் இரண்டாவது ரவுண்ட்க்கு பெட்டிகள் எடுத்து வரப்படும். இது தான் கடந்த தேர்தல் வரை நடைமுறை. வாக்கு எண்ணும் மையத்தில் பிரச்சனை ஏதாவது ஏற்பட்டால் அதை பதிவு செய்ய ஒரு வீடியோகிராபர் இருப்பார். வாக்கு சீட்டு இருக்கும் போதும் இதான் நடைமுறை. இதன் மூலம் ஒரு ரவுண்ட் அறிவிக்க அதிகபட்சம் 20 நிமிடங்கள் போதுமானது.

இந்த முறை வாக்கு எண்ண 15 டேபிள்கள் அமைக்கப்படும். 2 அதிகாரிகள் நிற்பார்கள். முகவர்கள் இருப்பார்கள். அவர்களோடு உபரியாக ஒவ்வொரு டேபிளிலும் ஒரு வீடியோகிராபர் நிற்பார். ஒரே நேரத்தில் 15 டேபிளுக்கும் வாக்கு பெட்டிகள் தரப்படும். ஆனால் வாக்கு எண்ணிக்கை ஒரே நேரத்தில் நடக்காது. ஓரு டேபிள் எண்ணி முடிக்கப்பட்ட பின்பே, மற்றொரு டேபிளில் உள்ள வாக்கு இயந்திரம் திறக்கப்படும். இப்படி 15 டேபிள் எண்ணி முடிக்கப்பட்டபின் முதல் சுற்று முடிவு வெளியிடப்படும். இப்படித்தான் அடுத்தடுத்த சுற்றும் எண்ணப்படும். ஆக மதியம் 1 மணியளவில் தெரியவேண்டிய தேர்தல் முடிவுகள் மாலை, இரவு வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது ஆணையம். கேட்டால் பாதுகாப்பு ஏற்பாடாம்.


இதில் புரியாத புதிர் எதற்க்காக ஒவ்வொரு டேபிளிலும் வீடியோகிராபர். புpரச்சனை வந்தால் படம் பிடிக்க ஒரு வீடியோகிராபர் போதாதா?. இப்படி நியமிக்கப்பட்டுள்ள வீடியோகிராபர்களால் ஆகும் செலவை கணக்கிட்டபோது தலை சுத்தியது. ஒருநாள் மட்டும் 234 தொகுதி ழூ 15 ஸ்ரீ 3510  வீடியோகிராபர்கள். 3510 ழூ 1500 (ஒருநாள் சம்பளம்) ஸ்ரீ 5265000 ரூபாய். இது மையத்தில் இருப்பவர்களுக்கு மட்டும். தேர்தல் பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் வலம் வரும் வீடியோகிராபர்கள் கணக்கு தனி. உணவு செலவு தனி. அதோடு வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் சென்று வர ஏ.சி உள்ள டவேரா கார் மட்டும் பயன்படுத்துவார்கள், பிரைவேட் டிரைவர்கள், வாடகை, படி என அது தனி செலவு. மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு. அதற்க்கு உள்நாட்டு ராணுவம், வெளிநாட்டு ராணுவம், உள்ளுர் போலிஸ், வெளியூர் போலிஸ் என அது தனி டீம். அவர்களுக்கான செலவு தனி. இப்படி தண்டமாக செலவு மேல் செலவு செய்கிறார்கள். என்னதான் அவர்களை கேட்க விதியில்லை என கூறினாலும் இப்படியா?.

இப்படி பலவற்றை கூறிக்கொண்டே போகலாம். மற்ற மாநிலங்களில் விசாரித்ததில் இப்படியில்லை என்கிறார்கள். ஆக தமிழகத்தில் மட்டும் தான் இந்த நிலை. மற்ற மாநிலங்களை விட வாக்கு எண்ணிக்கையின் போது நமது மாநிலம் மிகவும் அமைதியாகவே இருந்துள்ளது. அப்படியிருக்க வீண் பதட்டத்தை தேர்தல் ஆணையம் உருவாக்குவது ஏன்?

கூட்டு குடும்பம் எதிர்ப்பாளர்களுக்கு……….




சமீபத்தில் தோழி ஒருவர் கூட்டு குடும்பம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்த கட்டுரையின் உள் கருத்து. கூட்டு குடும்பம் என்பது ஆணாதிக்கத்தின் மற்றொரு வடிவம். பெண்கள் அடிமையாக இருக்க கண்டுபிடிக்கப்பட்ட வழி. பெண்களின் சுதந்திரத்திற்க்கு போடப்பட்ட விலங்கு என்பதாகும்.

தமிழ்ச்சமுகம் மற்ற சமுகத்தை போல் சீரழியாமல் இருந்ததற்க்கு காரணம். கூட்டு குடும்ப வாழ்க்கையும் அங்கு உருவான அன்பும் தான்;. கூட்டு குடும்பத்தில் ஒருவருக்கு பிரச்சனையென்றால் ஒடி வந்து உதவும், ஆதரவு தரும் அன்பும், நேசமும் அங்குயிருந்தது. குடும்பத்தில் வேலைகள் பங்கிட்டு செய்யும் ஒற்றுமையிருந்தது. மாமியார் கொடுமைகள் கூட்டு குடும்பத்தில் அவ்வளாக இருந்ததில்லை. பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்ற திட்டமிடல் இருந்தது. கூட்டு குடும்பத்தில் ஆண்கள் போதை, பேதைகளுக்கு அடிமையாக பயந்தனர். பெண்கள் குடும்பத்திற்க்கு தெரியாமல் எதையும் செய்ய தயங்கினர். உற்றார் உறவினர்களுடன் நெருக்கம் வளர்ந்தது. நல்ல நண்பர்கள் யார் என்பதற்க்கான அடையாள படுத்தல் இருந்தது. கூட்டு குடும்பத்தில் வளரும் இளம் வயது இளைஞன் இளைஞிகள் தவறு செய்ய தயங்கினர்.


தனிக்குடித்தனம் முறை மேலே சொன்னவற்றை ஒட்டு மொத்தமாக அழித்தது. ஆனால் தனிக்குடித்தனத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் கூட்டு குடும்பத்தால் பெண்களின் சுதந்திரம் பறிபோய்விட்டது என கூப்பாடு போடுகிறார்கள். கூட்டு குடும்பம் என்பது ஆணாதிக்கத்தின் மற்றொரு வடிவம் என்கிறார்கள்.

எது ஆணாதிக்கம். அண்ணன், அண்ணி, தங்கை, மச்சான் போன்ற உறவுகளுடன் சேர்ந்து வாழலாம் என சொல்வது குற்றமா?. பெண்களின் செலவுகளை குறைக்க சொல்வது ஆணாதிக்கமா?

பெண்கள் திருமணம் ஆனதும் கணவன் குடும்பத்தாற்க்கு சம்பாதிப்பதை தர வேண்டும் என்ற நிலை உள்ளதாக கூறுகிறார். உண்மை தான் மறுப்பதற்க்கில்லை. இந்த நிலை தனிக்குடித்தனம் என்ற நிலை உருவானபோது தான் அதிகாரித்தது. கூட்டு குடித்தனம் என்ற நிலை இருந்தபோது மருமகள் வீட்டுக்கு ஒரு உதவியென்றால் ஒடிப்போய் நிற்க்கும் நிலையும், அவர்களுக்கு உதவி செய்யும் அடக்கமும்மிருந்தது.

சினிமாக்கள் மூலம் கூட்டு குடும்ப வாழக்;கையை கொண்டு வரப்பார்க்கிறார்கள் ஆணாதிக்கவாதிகள் என்கிறார். இதே சினிமாக்களில் தனிக்குடித்தனம் உள்ள பெண்கள் கணவன் தரப்பை சார்ந்தவர்கள் வீட்டுக்கு வருகிறர்களை கவனிக்கும் விதத்தையும், தன் தரப்பை சார்ந்தவர்கள் வீட்டுக்கு வருபவர்களை கவனிக்கும் விதம் பற்றி பல சினிமாக்களில் காட்டுகிறார்களே அதையேன் அவர் விமர்ச்சிக்கவில்லை.

எத்தனை பெண்கள் கணவனை பெத்து வளர்த்தவங்க, கூட பொறந்தவங்க வீட்டுக்கு வந்தால் கவனிக்கும் விதம் பற்றி உங்களை போல் உள்ளவர்களிடம் கேட்காமல் வயது முதிர்ந்தவர்களிடம் போய் கேளுங்கள் தெரியும். தனிக்குடித்தன பெண்கள் மனசாட்சி தொட்டு சொல்ல சொல்லுங்கள் அவர்களின் பெற்றோர், உடன் பிறந்தோர் முன்றாம் பங்காளி, நான்காம் பங்காளி வீட்டுக்கு வரும் போது செய்யும் தராளம் பற்றி சொல்லுங்களேன். இன்று தமிழ் சமுகம் மேலை நாட்டு நாகரீகங்கள் போல் உருவாக காரணம் இந்த தனிக்குடித்தன முறை தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தங்களது தனிப்பட்ட சுதந்திர வாழ்க்கைக்காக ஒரு சமுகத்தை சீரழிப்பவர்களை என்னவென்று சொல்வது?.

சாய்பாபா சாக்கடையா? சந்தனமா?


 
தாயின் கர்ப்ப பையின் ரத்த நாளங்களை அறுத்துக்கொண்டு வெளியே வரும்போது மொழி தெரியாத, பாசம் புரியாத, அன்பு தெரியாதவர்களாக தான் பூக்கிறோம். நம்மை சுற்றியுள்ளவர்களும், இந்த சமுகமும் தான் அவனை நல்லவனாகவோ, கெட்டவனாகவோ உருவாக்கம் செய்கிறது. அவன் வாழ்ந்து மரணிக்கும் போது அவனை சுற்றியுள்ளவர்களுக்கு அது ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு தான். அந்த இழப்பை எதை கொண்டும் சரி செய்ய முடியாது.

அப்படி ஒரு இழப்பு தான் சாய்பாபா.

வயிற்றில் இருந்து வாய் வழியாக லிங்கம் எடுத்து தந்து பக்தர்களை அசிர்வதிக்கிறேன் என உருவானவர் சாய்பாபா. ஆந்திராவில் தவிர்க்க முடியாதவர். புhபாவின் ஆஸ்ரமம் அமைந்துள்ள ஆனந்தபூர் மாவட்டத்தோடு சுத்தியுள்ள 10 மாவட்ட மக்கள் அவரை ரட்சகனாகவே காண்கிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், சுகாதாராம், அடிப்படை தேவைகள் போன்ற சகலத்தையும் அம்மக்களுக்கு உருவாக்கி தந்தார் பாபா. அவர் செய்த சேவைகள் அரசாங்கம் செய்ய வேண்டியது. அதை தனிமனிதனாக தனது அறக்கட்டளை மூலம் செய்தார். அதனால் தான் பாபா மறைவிற்க்கு அவர்களது பக்தர்கள் மட்டுமில்லாமல் இந்தியாவின் குடியரசு தலைவர் முதல் அனந்தபூர் மக்கள் வரை கண்ணீர் விடுகிறார்கள். அது அவர் செய்த சேவைக்கு கிடைத்த அங்கீகாரம்.

அதற்காக அவரை கடவுளாக்குவது எந்த விதத்தில் நியாயம். (நாட்ல இருக்கற கடவுள் போதாதா) நான் கடவுளின் அவதாரம், நானே கடவுள், எனக்கு மரணம் 96 வயதில் என பீற்றிக்கொண்ட பாபா என்கிற போலி சாமியார் மரணித்துள்ளார். வயில் இருந்து லிங்கம் எடுக்கிறேன் என தில்லாலங்கடி வேலை செய்து சம்பாதித்து சம்ராஜ்யத்தை உருவாக்கிவிட்டு மரணித்த அவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. ஆனால் என்ன செய்ய தந்துவிட்டார்கள்.

பாபா உருவாக்கியுள்ள அறக்கட்டளையின் சொத்து மதிப்பு இன்றைய நிலையில் தோராயமாக 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சொத்துகள் அவர் உழைத்து சம்பாதித்ததில்லை. இன்று கண்ணீர் விட்டு அழும் பக்தர்கள், தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என பல தரப்பினர் நன்கொடையாக தந்த பணம். பலரின் கறுப்பு பணம். அந்த பணத்தை கொண்டு தான் அவர் சேவைகள் செய்தார். தனக்கு வந்த பணத்தை வாரி வழங்க ஒரு மனம் வேண்டும்மென்பார்கள். அந்த மணம் சாய்பாபாவிடம் இருந்தது. சேவைகள் செய்தார் அது பாராட்டுக்குரியது. அவர் செய்த சேவையால் சந்தனமாக மணக்கிறார்.

அதோடு விட்டு விடுங்கள் அவரை ஓவராக புகழ்ந்து அவரின் பழைய வில்லங்கங்களை அதிகமாக களறி சாக்கடையாக்கி விடாதீர்கள். விட்டு விடுங்கள் போதும் அவரின் புராணம்.