வியாழன், ஏப்ரல் 04, 2013

ஆபாசம் சற்று சிந்தியுங்கள். சீமானின் தம்பிகளே.



நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான். ஈழப்பெண் ஒருவருடன் ‘நெருக்கமா’ இருக்கிறார் என்ற தகவல்களோடு சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அந்தப்படங்களில் அந்தப்பெண் அறைகுறை ஆடைகளுடன் இருக்கும் தனிப்படங்களும், சீமானுடன் ஜோடியாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த படமும், செய்திகளும் வெளிநாடுகளில் வாழும் ஈழத்து மக்கள் மத்தியில் தீவிரமாக பரவிவருகிறது. இதனை வைத்து பெரும் அரசியல் நடக்கிறது.

அதாவது, அந்தப்பெண் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் அதனால் சீமானை சந்தித்து படம் எடுத்துக்கொண்டார். அந்தப்படங்களோடு அந்தப்பெண்ணின் அந்தரங்கப்படங்களை சேர்த்து கொச்சைப்படுத்துக்கிறார்கள் என சீமானோடு கைகோர்த்தவர்கள் வெம்புகிறார்கள். கூடவே இது சீமான் மற்றும் அந்தப்பெண்ணின் அந்தரங்கம் இதில் மற்றவர்கள் எப்படி தலையிடலாம் என கேட்கிறார்கள்.

சீமான் பற்றிய செய்தி உண்மையா, பொய்யா என்பது ஒரு புறமிருக்கட்டும். ஒரு மாதத்துக்கு முன்பு திமுக தலைவரும் இந்தியாவின் மூத்த தலைவரும்மான 90 வயது கலைஞரை நடிகை குஷ்புவுடன் இணைத்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஒரு செய்தி எழுதப்பட்டுயிருந்தது. எந்த வித அடிப்படை ஆதரமும்மின்றி. ரொம்ப மோசமாக சித்தரித்து எழுதப்பட்ட அந்த செய்தி பற்றி சீமான் தரப்பினர், தமிழ்தேசியவாதிகள், மதிமுகவினர், புலம்பெயர் தமிழர்களின் ஒரு பகுதியினர் இங்கேப்பார் கிழவனின் செயலை என ரொம்ப மோசமாக கிண்டலடித்தார்கள், படு மட்டமாக, கொச்சையாக இணையத்தில், சமூக தளங்களில் எழுதினார்கள். அந்த செய்தி உண்மையில்லை என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் அதைக்கொண்டு கலைஞரை கொச்சைப்படுத்த காரணம். அவர்கள் மனதில் இருந்த வக்கிரம்.

இப்போது, சீமான் பெண்களுடன் கும்மாலமடிக்கிறார் என எழுதி புகைப்படங்களை வெளியிட்டதும் குதிக்கிறார்கள். தனிப்பட்ட அந்தரங்கம் என வக்காலத்து வாங்குகிறார்கள், உண்மையா பொய்யா என விசாரிக்காமல் எழுதுகிறார்கள். ஆதராவாளராக ஒரு கட்சி தலைவரை வந்து சந்திக்ககூடாதா என கேட்கிறார்கள்.


இதே கேள்வி அன்று திமுகவினர் கேட்டபோது, உங்காளைப்பத்தி தெரியாத என கேட்டு கண்ணதாசனின் வனவாசத்தை துணைக்கு அழைத்தார்கள். திமுக தலைவர்களுடன் கவிஞர் கண்ணதாசன் நெருக்கமாக இருந்தார். நெருக்கம் நொறுங்கியப்பின் திமுக தலைவர்களை கொச்சைப்படுத்தி வனவாசம் என ஒரு புத்தகம் எழுதினார். அதில் உள்ள தகவல்களை எடுத்துக்கொண்டு அப்போவே அப்படி, இப்ப எப்படியிருப்பாரு என வசைப்பாடினார்கள். அன்று கலைஞரை பற்றி கொச்சையாக பேசியபோது இனித்த வாய்களுக்கு, சீமான் பற்றி பேசும் போது கசக்கிறது. ( சீமானின் நடவடிக்கை தெரிந்தவர்கள் சீமான்க்கு வக்காலத்து வாங்கமாட்டார்கள் அது வேறு விஷயம். )

கலைஞரை பேசியதால் சீமானை பேசுவதில் என்ன தவறு என கேட்கவில்லை. இன்று வளர்ச்சி பாதையில், அதிகார பீடத்தில் இருப்பவர்களை அசைக்க, ஒழிக்க, அவர்களை கொச்சைப்படுத்த பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை வைத்தாலே போதும் அது எடுப்பட்டு விடும். மீடியாக்களின் போட்டியில் அவர்களே அதை உண்மையா, பொய்யா என ஆராயாமல் ஊதி ஊதி பெரிதாக்கிவிடுவார்கள். அதோடு, ஃபேஸ்புக், டூவிட்டர், ஆர்குட் போன்ற தளங்களில் உள்ளவர்கள் தங்கள் விருப்பத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதுவார்கள். அதனால் வக்கிரத்தை காட்ட வேண்டாம். 

நாம் தமிழர் கட்சி, தமிழ் தேசிய இயக்கங்களை சேர்ந்தவர்கள், புலத்தில் உள்ள இன்றைய இளைய தலைமுறையினரே, கலைஞர், சீமான் மட்டுமல்ல தலைவர்களை விமர்சிக்க எத்தனையோ விஷயங்கள் உள்ளன. அதனை தவிர்த்து தனிமனித அந்தரங்க விவகாரங்களில் நுழைந்தால் அது நன்றாக இருக்காது. அதனால் சிந்தித்து செயல்படுங்கள்.

3 கருத்துகள்:

  1. http://vitrustu.blogspot.in/

    இங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் "என்னமோ நடக்குது!!!!! மர்மமாய் இருக்குது!!!!"

    பதிலளிநீக்கு
  2. எல்லாம் அவனவனுக்கே வெளிச்சம் சகோ

    பதிலளிநீக்கு
  3. சீமானின் சீற்றம் எல்லாம் கலைஞருக்கு எதிராக மட்டும் தான், வெறும் உணர்ச்சி வசப்படுபவர், எதை பெற வேண்டுமோ அதை பெற்று கொண்டு தன்னை முன் நிறுத்தும் மலிவான அரசியல்வாதி, அது சரி, விஜயலட்சுமி.....என்ன ஆயிற்று?

    பதிலளிநீக்கு