புதன், செப்டம்பர் 18, 2013

அன்பே அழகானது. – பகுதி 11.



அறைக்குள் நுழைந்த மதனை பார்த்து என்னப்பா சாப்பிட்டியா என கேட்டாள் கோதை.

சாப்பிட்டம்மா.

பின்னால் சுதா, ரமேஷ், ரம்யா நுழைவதை கண்டு மருமகளை பார்த்து எப்படிம்மா இருக்க என்றாள்.

நல்லாயிருக்கன் அத்தை.

நீங்க ?.

இருக்கேம்மா என்றாள் சலிப்பான குரலில்.

மாமனாரை பார்த்து எப்படி மாமா இருக்கிங்க என கேட்டாள்.

எனக்கென்னம்மா கல்லு மாதிரி இருக்கன் என்றவர் ரமேஷ் பக்கம் திரும்பி நீ எப்படிப்பா இருக்க, பொண்ணு எப்படி இருக்கு ?

நல்லாயிருக்காப்பா என ரம்யா பதில் சொல்ல ரமேஷ் தலையாட்டினான்.

அப்பாவும், அம்மாவும் இருந்தாங்களே எங்க என ரமேஷ் கேட்கவும் தேவராஜ்யும், காவேரியும் அறைக்குள் நுழைந்தனர். தேவராஜ்யை பார்த்து கலிவரதன், சாப்பிட்டிங்களா?.

புள்ள இப்படி இருக்கறப்ப எங்க சாப்பிடறது.

சாப்பிட்டு வாய்யான்னு அனுப்பனா நீ என்னய்யா இப்படி சொல்ற. பெத்தவனே போய் சாப்பிட்டுட்டு வர்றான். அவனை விட உனக்குயென்னவோ அதிக அக்கறை இருக்கற மாதிரி பேசற.

உம்புள்ளயாள தானே இவ்வளவும். ஓன்னுத்துக்கும் உதவாத புள்ளைய பெத்து வச்சிக்கிட்டு பேசற.

நீ என்னய்யா விட்டா பேசிக்கிட்டு போற. அவன் என்னவோ புள்ளய இழுத்தும் போய் வண்டி முன்னாடி நிறுத்தி மோதுன்னு சொன்ன மாதிரி பேசற.

புள்ளய போய் பத்திரமா கூப்ட்டுக்கிட்டு வர்றதில்லயா ?.

தெரியாம நடந்ததுக்கு போய் அவன் மேல குற்றம் சொல்ற.

ஆமாம் அப்படித்தான் சொல்லுவன் என தேவராஜ் குரலை உயர்த்த மதன் தன் அப்பாவிடம் நீங்க அமைதியா இருங்க என்றான்.

பேசிக்கிட்டு இருப்பாரு கேட்டுக்கச்சொல்றியா என கலிவரதன் கோபமாக கேட்டார்.

இது ஆஸ்பிட்டல் மாமா இங்க போய் சத்தம் போடறிங்களே என்றாள் ரம்யா.

நீ சும்மாயிரும்மா. கம்முனு இருக்க இருக்கத்தான் இவுங்களுக்கு திமிரு அதிகமாகுது.

மரியாதையோட பேசு இல்ல நடக்கறதே வேற என கலிவரதன் உட்கார்ந்தயிடத்தில் இருந்து கோபமாக எழுந்திருக்க சண்டை போடாதிங்க என கணவரின் கையை பிடித்தாள் கோதை.

எழுந்தா உன் புள்ளயப்பத்தி சொல்றதுக்கு ஒன்னும்மில்லன்னு ஆகிடும்மா. இப்பவும் சொல்றன் உன் புள்ள ஒன்னுத்துக்கும் உதவாத ஆளு தான் என்றபோது சுதாவின் முகம் கோபத்தில் சிவந்தது.

மதன் கோபமாக, நான் உதவாக்கறை தான். என்னால தான் அடிப்பட்டுச்சி. ஏன் நான் தான் இடிச்சன் போதும்மா இதுக்கு மேல என்ன வேணும் என மதன் தேவராஜ்யை பார்த்து கோபமாக கேட்க மதனை கடுகடு முகத்துடன் பார்த்தபடியிருக்க ஒரு நர்ஸ் வேகமாக அறைக்குள் வந்து இதுயென்ன உங்க வீடுன்னு நினைச்சிங்களா, சண்டை போடறவங்க ஆஸ்பிட்டல விட்டு வெளியில போய் போடுங்க என்றாள் கோபமாக.

அனைவரும் அமைதியாக இருந்தனர். அப்போது மதனின் செல்போன்க்கு ரிங் வந்தது. ஊரில் இருந்து பாக்யராஜ் அழைத்தான். காலை பிக்கப் செய்தவன் சொல்லுடா.

என்ன மாப்ளா பையனுக்கு அடிப்பட்டுச்சின்னு சொல்றாங்க உண்மையா ?.

ம். டூவீலர்க்காரன் மோதிட்டான். சின்ன காயம் தான் ஆஸ்பிட்டல்ல சேர்த்துயிருக்கு.

இப்ப எப்படியிருக்கான் ?.

பரவாயில்ல, இரண்டு நாள் இருந்துட்டு அதுக்கப்பறம் வீட்டுக்கு அழைச்சிம் போகசொல்லியிருக்காரு டாக்டர்.

நான் நாளைக்கு வர்றன் மாப்ள.

ம்.

வச்சிடவா என கேட்டவனிடம் ம் என்றபடி லைனை கட் செய்தான். எப்போது கட் செய்வான் என காத்திருந்த தேவராஜ் டிஸ்சார்ஜ் பண்ணதும் பேரனை நான் என் வீட்டுக்கு அழைச்சிம் போறன் என்றார். என்னய்யா மாத்தி மாத்தி பேசற. அன்னைக்கு பொண்ணு மட்டும் வேணும்ன்னு இழுத்துக்கிட்டு போன இன்னைக்கு என்ன பேரன் மேல பாசம் பொத்துக்கிட்டு வருது என கேட்டார் கலிவரதன்.

ஒழுங்கா பாத்துக்க துப்பிள்ளாத ஆளை நம்பி இனிமே புள்ளய அனுப்ப முடியாது.

நீ சொல்றத கேட்க முடியாது. பேரன் எங்ககூடத்தான் இருப்பான் என சத்தம்மிட்டார். அப்போது உள்ளே வந்த டாக்டர் என்ன மதன் உங்க ரூம் ஒரே சத்தம்மா இருக்கு பையன் ரெஸ்ட் எடுக்கறதா வேணாம்மா.

ஸாரி டாக்டர்.

என்ன பிரச்சனை என டாக்டர் கேட்க அனைவரும் அமைதியாக இருந்தனர். பையனை நாங்க எங்க வீட்டுக்கு அழைச்சிம் போறன்னு சொல்றன், விடமாட்டேன்கிறாங்க என டாக்டரிடம் புகார் சொன்னார் தேவராஜ்.

குழந்தை அவுங்க அப்பா – அம்மாக்கூட இருக்க போறான். பாக்க விரும்பறவங்க போய் பாத்துட்டு போங்க இதல என்னயிருக்கு என குடும்ப விவகாரம் புரியாமல் பேச ரமேஷ் குறுக்கிட்டு குழந்தையோட அப்பா – அம்மா பிரிஞ்சியிருக்காங்க என்றான்.

டாக்டர் கோபமாக இது பைத்தியகாரதனமா தெரியல. ஹஸ்பென்ட் ஒய்ப்புக்குள்ள சண்டைன்னா பேசி தீர்த்துக்கிட்டு ஒன்னாயிருங்க. அதவிட்டுட்டு பிரிஞ்சி உங்க சண்டையில பையனேட லைப்ப ஸ்பாயில் பண்ணிடாதிங்க என்றவர் கொஞ்சம் யோசித்து பெத்தவங்க, தாத்தா, பாட்டி விருப்பத்த விட பையனோட விருப்பம் என்னண்ணு கேளுங்க அவன் முடிவுப்படி இருக்க விடுங்க எனச்சொல்ல மதனும், சுதாவும் அமைதியாக நின்றனர். ரமேஷ் சரி டாக்டர் என்றதும் சத்தம் போடாம இருங்க எனச்சொல்லிவிட்டு கிளம்பினார்.

இது எதுவும்மே தெரியாமல் தூங்கிக்கொண்டு இருந்தான் ரஞ்சித். அவன் எழுந்துருக்கற டைம். எழுந்ததும் பக்குவமா கேளுங்க அவன் முன்னாடியும் சண்டை போடாதிங்க என்றான் ரமேஷ். மதன் எழுந்து ட்ரா அருகே சென்று ஒரு பைலை எடுத்து வந்து ரமேஷ்சிடம் தந்தான். ஹாஸ்பிட்டல் பில் எல்லாம் கட்டியாச்சி. டேப்ளட் எல்லாம் இருக்கு. நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்றன்னு சொல்லியிருக்காங்க. ஒரு வாரம் ஸ்கூல் லீவு சொல்லியிருக்கன். வேணும்ன்னா எக்ஸ்டன் பண்ணிக்குங்க. அவனோட புக்ஸ், ட்ரஸ் தந்து அனுப்பறன் என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே ஏய் என்னடா பேசற என கோபமாக கேட்டார் கலிவரதன்.

அவன் அவுங்க அம்மாக்கூட இருக்கட்டும்ன்னு தான் இதப்பண்றன்.

புள்ளய வளக்க தெரியலன்னு அந்தாளு சொன்னத உண்மையாக்கறியா?.

உண்மையோ, பொய்யோ. எதுவாயிருந்தாயென்ன அவன் அவுங்க அம்மாக்கூட இருக்கட்டும் என்றவன் மீண்டும் ரமேஷ்சிடம், நான் எங்கன்னு கேட்டான்னா அவசர வேலையா சென்னை போயிருக்கன்னு சொல்லுங்க. வர்றதுக்கு ஒருவாரமாகும் ஊருக்கு வந்ததும் வந்து அழைச்சிம் போறன்னு சொல்லுங்க. அதுக்குள்ள உங்களோட பழகிடுவான் என்றவன் கட்டிலில் படுத்துக்கிடந்த மகனின் முகத்தை பார்க்க கண்ணீர் நீர் தளும்ப நான் கிளம்பறன் எனச்சொல்லிவிட்டு தலை குனிந்தபடியே வேகவேகமாக அறையை விட்டு வெளியே வந்தான்.

அறையை விட்டு சற்று தூரம் சென்றுக்கொண்டுயிருந்த மதனை நோக்கி வேகவேகமாக  ரம்யா சென்றவள் மதனை டூவீலர் பார்க்கிங் ஏரியாவில் மடக்கினால். என்னண்ணா, மாமா தான் கோபத்தல பேசறாருன்னா நீங்களும் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டு போறிங்க என கேட்டாள்.

அவர் சொன்னாருன்னுயெல்லாம் இப்படி பண்ணல. நான் என்னதான் அவன் கேட்டதையெல்லாம் வாங்கி தந்து அவனை பாத்துக்கிட்டாலும் அவன் மனசு அவுங்க அம்மாக்கிட்ட தான் இருக்கு. அம்மா பாசத்துக்கு ஏங்கறான். ஏங்கப்பாக்கூட புள்ளைய வளக்க தெரியலன்னு பத்து நாளைக்கு முன்னாடி திட்டனாரு. நான் எம்புள்ளய நல்லாத்தான் வளக்கறன்னு திமிறா சொல்லிட்டு வந்தன். இன்னைக்கு காலையில தான் அப்படியில்லன்னு தெரிஞ்சிக்கிட்டன். நான் வலிக்குதாடான்னு கேட்டன். இல்லன்னு சொன்னவன் கொஞ்ச நேரத்தல அவுங்க அம்மா வந்து கேட்டப்ப வலிக்குதுன்னு சொன்னான்.

அப்ப வலிச்சியிருக்கும் அதனால சொல்லியிருப்பான். அதப்போய் தப்பா எடுத்துக்கலாம்மா என ரம்யா கேட்டதும். 


அது மட்டும்மில்ல ரம்யா. அவன் படிக்கற அதே ஸ்கூல்ல தான் அவுங்க அம்மாவும் டீச்சரா வேலைக்கு சேர்ந்துயிருக்கா. இது அவனுக்கு முன்னாடியே தெரிஞ்சியிருக்கு. அத அவன் எங்கிட்ட சொல்லவேயில்ல. இன்னைக்கு எனக்கு தெரியவந்து அவன்க்கிட்ட ஏண்டா எங்கிட்ட சொல்லலன்னு கேட்டப்ப அவன் சைலண்டா இருந்தான். அவன் சொல்லலனாலும் காரணம் என்னன்னு எனக்கு தெரியம். அப்பாவுக்கு தெரிஞ்சா நம்மள வேற ஸ்கூல்க்கு மாத்திடுவாறோன்னு பயந்து சொல்லல. அது மட்டும்மில்ல எனக்கு பயந்துக்கிட்டு அவுங்க அம்மா கண்ணுல படாம இருந்துயிருக்கான் இது எவ்ளோ கொடுமை. அவன் எதுக்கு பயந்து பயந்து அவுங்கம்மாவ பாக்கனும். அவனுக்கு அவுங்கம்மா வேணும் அதான் அவனை அவுங்க அம்மாக்கிட்ட ஒப்படைச்சிட்டு போறன்.

நீங்க பக்கத்தல இல்லன்னா அவன் கஸ்டப்படுவாண்ணே.

அதைகேட்டு அமைதியாக இருந்த மதன் அப்பப்ப வந்து பாக்கறன். ஃபோன்ல பேசறன்.

இப்படி அவனை அல்லாட விடறதுக்கு பதிலா நீங்க சுதாவ வீட்டுக்கு அழைச்சிம் போகலாம்மில்ல.

இன்னமும் அவ மாறல.

அவ மாறிட்டாண்ணா. தினமும் நைட்ல தூங்காம அழுதுக்கிட்டு இருக்கா தெரியுமா. அவள வேலைக்கு அனுப்பறது அவ மனச டைவட் பண்ணத்தான்.

பையன் கூட இருக்கான்யில்ல. இனிமே அழமாட்டா.

பிள்ளைக்காக மட்டும் தான் அவ அழறமாதிரி பேசறிங்க.

மீண்டும் அமைதியாக இருந்த மதன் ரம்யாவின் முகத்தை பார்த்து அவ கண்ல தண்ணி வர்றதால தெரியுது. என் கண்ணுல தண்ணி வரல அவ்ளோ தான் வித்தியாசம்.

எதுக்கு இரண்டு பேரும் கஸ்டப்படனும். அவளை வீட்டுக்கு அழைச்சிங்கன்னா வந்துடுவா.

அவ மாறலன்னு இன்னைக்கும் காட்டனா எனச்சொன்னதும் ரம்யா குழப்பமாக நின்றாள். நான் கிளம்பறன் இதப்பத்தி அவக்கிட்ட எதுவும் பேசாதிங்க எனச்சொல்லிவிட்டு பைக் எடுக்க திரும்ப பின்னால் கலிவரதனும், கோதையும் நின்றிருந்தனர். கோதை முந்தாணியால் வாயை பொத்திக்கொண்டு அழுதுக்கொண்டு இருந்தாள். கலிவரதன் மதனை பார்த்து உன் புள்ளயோட மனச புரிஞ்சிக்கற அளவுக்கு நீ இருக்க என்றவர் உன் பிடிவாதத்த கொஞ்சம் விட்டுட்டு சுதாவ வீட்டுக்கு அழைச்சிம்போனா நல்லாயிருக்கும்.

நான் யாருக்கும் அடிமையா இருக்க விரும்பல என கோபமாக மதன் சொன்னதும் அதை கேட்டு கிளம்பறோம் என ஒற்றை வார்த்தையில் கலிவரதன் வெறுப்பாக சொல்லிவிட்டு நடந்தார். தனியா இருந்து என்ன பண்ணுவ தினமும் ஊருக்கு வந்துடேன்டா கண்ணில் நீரோடு தாய் பாசத்தில் கோதை கேட்டாள்.

நான் பாத்துக்கறன் நீ கவலைப்படாம வீட்டுக்கு கிளம்புமா எனச்சொல்ல தயங்கி தயங்கி கணவரை நோக்கி நடந்தாள்.

கிளம்பு ரம்யா எனச்சொல்ல அவள் மருத்துவமனையை நோக்கி நடக்க மதன் தன் டூவீலரை எடுத்துக்கொண்டு கிளம்பினான். சுதா தூரத்தில் மறைவாக நின்று மதன் போவதை கண்ணில் நீர் தளும்ப பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

தொடரும்……………

2 கருத்துகள்:

  1. yen innum thodaralai.....please waiting for next part..
    Geetha

    பதிலளிநீக்கு
  2. கீதா அவர்களுக்கு, இரண்டு பகுதிகள் தான் எழுதி வைத்துள்ளேன். அவை முழுமை பெறாமல் உள்ளது. அவை எழுதி முடித்ததும் வெளியிடுகிறேன்.

    பதிலளிநீக்கு