புதன், அக்டோபர் 16, 2013

உலகில் உணவில்லாமல் 92 கோடி பேர்.



கோடிகளில் புரளும் பணக்காரர்கள் சாப்பிட முடியாமல் விதவிதமான உணவுகளை கால்வாயில் கொட்டுவதும், மற்றொரு புறம் ஒரு வேலை உணவு கூட இல்லாமல் அல்லாடும் மக்கள் என இரு தரப்பும் ஒரு சேர இந்த பூமி பந்தில் வாழ்கின்றனர். உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு கிடைக்க வேண்டும்மென அக்டோபர் 16ந்தேதியை உலக உணவு நாளாக கொண்டாடப்படுகிறது. 1947ல் ஐ.நா அமைப்பில் உணவு மற்றும் வேளாண்மை பிரிவு ஏற்படுத்தப்பட்டது. 1979 முதல் அந்நாளை உலக உணவு தின நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நபர்களை தேர்வு செய்து விருதும் வழங்கப்படுகிறது. விருதின் மதிப்பு 13 கோடி. 

உலக ஆய்வு நிறுவனம் ஒன்று சமீபத்தில் 120 நாடுகளில் ஒரு ஆய்வை மேற்க்கொண்டுள்ளது. அதில், உலகத்தில் 92 கோடியே 22 லட்சம் மக்கள் தினமும் பசியால் வாடுவதாக குறிப்பிட்டுள்ளது. ( ஐ.நா. பொது செயலாளர் பான்கீ மூன் கூட அறிவித்துள்ளார் ). அதில் பட்டினியால் மக்கள் துன்பப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 64வது இடத்தில் உள்ளது. இந்தியாவை விட பாகிஸ்தான், சீனா, இலங்கை போன்ற நாடுகளில் பட்டினி சாவுகள் குறைவு என்கிறது அதே புள்ளி விபரம். உணவு பற்றாக்குறை, சத்தாண உணவு இல்லாமல் உலகத்தில் ஒவ்வொரு 12 நொடிக்கும் ஒரு குழந்தை இறப்பதாகவும் கூறப்படுகிறது. 

எதனால் இந்த நிலை ?.

மேற்கத்திய நாடுகள், வளர்ந்த வல்லரசு நாடுகள் தங்களது நாட்டை தொழில் துறையில் முன்னேற்றின. ஆனால் விவசாய துறையில் வளர்ச்சியடையவில்லை. 1990 சந்தை பொருளாதாரத்திற்க்கு உலகம் திறந்துவிடப்பட்டதும் இந்த நிலை அதிகமானது. எல்லா நாடுகளும் விவசாயத்தை பின்னுக்கு தள்ளி தொழில் துறையில் கவனம் செலுத்தின. மேற்கத்திய நாடுகளைப்பார்த்து இந்தியா உட்பட பல வளரும் நாடுகள் உணவு பொருள் உற்பத்தியை கடந்த ஆண்டுகளில் குறைந்துக்கொண்டு தொழில் துறைக்கு அதிக முக்கியத்துவம் தர தொடங்கியிருந்தன. தொழில் துறை வளர்ந்தது. விவசாயத்துறை படுத்துக்கொண்டது. 

நீண்ட கால திட்டமிடல்களை செய்யும் வளர்ந்த நாடுகள் உணவு பற்றாக்குறை ஏற்பட போகிறது என அறிந்ததும் அதில் இருந்து தப்பிக்க மாற்று வழிகளை செய்தன. உணவு, வேளாண் தொழிலில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள தொடங்கின. அதை அந்த நாடுகளும் ஊக்குவித்தன. பன்னாட்டு நிறுவனங்கள் ஆயிரம், லட்சம் ஏக்கர்களை அரசாங்கங்களிடம் இருந்து குத்தகைக்கு பெற்று அதில் விவசாயம் செய்து அந்த பொருட்களை அவர்கள் விற்பனை செய்ய தொடங்கினர். அதோடு, மூன்றாம் உலக நாடுகளில் நேரடியாக விவசாயம் செய்யாமல் விவசாயத்தை அழிப்பது, விவசாய பொருட்களை வாங்கி இருப்பு வைப்பது போன்றவற்றை செய்ய தொடங்கின பன்னாட்டு கம்பெனிகள். இதனை அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் ஊக்குவித்தன. 

இந்தியா போன்ற சில வளரும் நாடுகளில் நேரடியாக விவசாயம் செய்யாமல் விவசாயிகளிடம் உள்ள உணவு பொருட்களான அரிசி, கோதுமை, சக்கரை, பருப்பு போன்றவற்றை வாங்கி இருப்பு வைத்தன. அதனை ஏற்றுமதி செய்கிறோம் என இந்திய அரசின் வழியாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தன. இதனால் இந்திய அந்நிய செலாவாணி கிடைக்கிறது என சந்தோஷப்பட்டது. இந்தியாவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டதும் மீண்டும் அதே கோதுமை, அரிசி, சக்கரை போன்றவற்றை இறக்குமதி செய்தன அரசு. இதில் தான் பன்னாட்டு கம்பெனிகளும், அரச அதிகார வர்க்கங்களும் கோடி கோடியாய் கொள்ளையடித்துள்ளனர். 

இந்தியா அமெரிக்காவுக்கு 1 கிலோ கோதுமையை 50 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் உணவு பொருள் பற்றாக்குறை என்ற நிலை வரும்போது அதே அமெரிக்காவில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்கிறது. இந்தியா தான் விற்ற அதே கோதுமையை தற்போது 250 ரூபாய் விலை தந்து வாங்குகிறது. இது அரசாங்கங்களுக்கு இடையே நடைபெறும் வியாபாரம் என்றாலும் இதனை செய்வது பன்னாட்டு நிறுவனங்கள் தான். இப்படி செய்து மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்தை கொள்ளையடித்துள்ளனர் இரண்டு தரப்பிலும். 

கடந்த 10 ஆண்டுகளாக உணவு பொருட்கள் விலை உயரும். அதற்கு காரணம் கச்சா எண்ணெய் விலையேற்றம் என காரணம் கற்பிக்கப்படும். கச்சா எண்ணெய் விலை உயரும் போதுயெல்லாம் மூன்றாம் உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயரும். இதனால் சங்கிலி தொடர் போல் எல்லா பொருளின் விலையும் உயரும். அதில் முக்கியமானது உணவு பொருட்கள் விலை. வளைகுடா நாடுகள், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் உணவு பொருட்களை தந்துவிட்டு கச்சா எண்ணெய்யை வாங்குகின்றன மேற்கத்திய நாடுகளும், பன்னாட்டு நிறுவனங்களும். இவர்கள் கச்சா எண்ணெய்யை வாங்குவது குதிரை விலைக்கு என்றால், உணவு பொருட்களை விற்பது யானை விலைக்கு. இப்படி அந்த நாடுகளின் பொருளாதாரத்தை சுரண்டும் இந்த பன்னாட்டு கம்பெனிகளும், வளர்ந்த நாடுகளும். அந்த கச்சா எண்ணெய்யை தங்களது விரும்பம் போல் விலை வைத்து விற்கின்றனர். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உணவு பொருட்களின் விலை உயரும். விலையை குறைக்க என்ன செய்யும் அரசாங்கங்கள் வெளிநாட்டில் இருந்து உணவு பொருட்களை இறக்குமதி செய்வார்கள். அப்படி இறக்குமதி செய்யும் போது அவர்கள் குறிப்பிடுவதே விலை. அந்த விலையை நிர்ணயிப்பது பன்னாட்டு கம்பெனிகளும், பன்னாட்டு நிறுவனங்களின் பின்னால் இருக்கும் வளர்ந்த நாடுகளும் தான்.

கச்சா எண்ணெய், உணவு உற்பத்தி, விவசாயம் போன்றவை பன்னாட்டு கம்பெனிகளிடம் இருந்து மாறி சாதாரண மக்களிடம் வரும்போது தான் இந்த நிலை மாற்றம்மடையும். அதோடு, மக்கள் தொகையையும் குறைக்க வேண்டும். இல்லையேல் சில ஆண்டுகளில் உணவு இல்லாமல் 92 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது வருங்காலத்தில் 100 கோடி, 120 கோடி என உயர்ந்துக்கொண்டுத்தான் செல்லும். 

1 கருத்து:

  1. வணக்கம்

    பல ஆதாரங்களுடன் பதிவு வெளியிட்டமை மிக அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு