செவ்வாய், ஜூன் 03, 2014

மோடியின் மோசடி அரசாங்கம்…......



மோடி பிரதமரானால், விலைவாசி குறையும், முடிவுகள் வேகவேகமாக எடுக்கப்படும், சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு பலமாக இருக்கும், லஞ்ச – லாவண்யம்மே இருக்காது, ஊழல்கள் ஊதி தள்ளப்படும், கறுப்பு பணம் கைப்பற்றப்படும், பருப்பு பத்து ரூபாய்க்கு விற்கும், அரிசி 5 ரூபாய்க்கு விற்கும்,  சீனா, பாகிஸ்தான், இலங்கை, அமெரிக்கா உட்பட உலக நாடுகள் எல்லாம் மோடியை கண்டு நடுநடுங்கும். இரண்டு வருடத்தில் நாடு வல்லரசாகும், பெண்கள் பாதுகாப்பாக வலம் வருவார்கள், இலவசம்மே இருக்காது, அந்நிய முதலீடு துரத்தப்படும், சுதேசி முதலீடு உயர்த்தப்படும், எல்லையில் வாலாட்டினால் வெட்ட நறுக்கப்படும், இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டால், தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் சுடப்பட்டால் அந்நாட்டு ராணுவம் துவம்சம் செய்யப்படும். ஈழத்தமிழர்களை கொன்ற இராஜபக்சே இந்தியாவுக்கு வரவைத்து அடிமைப்படுத்தப்படுவார் என இன்னும் என்னன்னவோ சொன்னார்கள், விளம்பரம் தந்தார்கள் அவரது ஆதரவாளர்கள். பி.ஜே.பிக்காரர்களை விட நடுநிலையென சொல்லிக்கொண்டு மோடிக்கு கோஷம் போட்டார்கள்.

மோடி பிரதமராகிவிட்டார். நடப்பதுயென்ன ?.

ஈழத்தமிழர்களை கொன்ற சிங்கள அதிபர் இராஜபக்சே மோடி பதவி ஏற்புக்கு அன்பாக அழைக்கப்பட்டார். தமிழர் அமைப்புகளும், பி.ஜே.பி கூட்டணியில் இருந்த கட்சியினரும் எதிர்த்தனர். மோடியும் அவரது சகாக்களும் கண்டுக்கொள்ளவில்லை. ராஜபக்சேவுக்கு சிறப்பான வரவேற்பு. தன் நாட்டுக்கு புன்னகையோடு திரும்ப போனார்.

மத்தியரசில் உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். குறிப்பிட்ட காலத்துக்கு வேறு எங்கும் பணியில் சேரக்கூடாது, அரசியலுக்கு வரக்கூடாது என்பது அரசு விதி. அந்த விதி மாற்றம் செய்யப்பட்டு சி.ஏ.ஜீ தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்தவரை மோடியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரல் முகுல்ரோத்கி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அலைக்கற்றை வழக்கில் அம்பானியின் பினாமி நிறுவனமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் வழக்கறிஞர்.

கல்வியில் பொய், பித்தலாட்டம் செய்வர்கள், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆலோசகர்களாக, வழக்கறிஞர்களாக இருப்பவர்களை அமைச்சரவையில் சேர்த்தாகிவிட்டது. அமைச்சர்கள் சரியாக முடிவு எடுக்கிறார்களா என ஆராய்ந்து முடிவுகள் எடுக்க கடந்த வாஜ்பாய் காலத்தில் அமைக்கப்பட்ட கேபினட் அமைச்சர்கள் கொண்ட குழுக்கள் கலைக்கப்பட்டுவிட்டன.

இரயில்வே துறை தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டு விட்டது. இரயில்வே கட்டணம் உயரும் என இரயில்வே அமைச்சர் அறிவித்துவிட்டார்.

மோடி பதவிக்கு வந்த மூன்றாவது நாளே டீசல் லிட்டருக்கு 50 பைசா உயர்த்தியுள்ளது பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள்.

பங்கு சந்தையின் புள்ளிகள் படுவேகமாக உயர தொடங்கியுள்ளன. விலைவாசிகள் உயரவே செய்கின்றன.

நாட்டின் மிக மிக முக்கிய துறையான பாதுகாப்பு துறையில் 100 சதவிதம் அந்நிய முதலீட்டுக்கு கதவு திறந்துவிடப்பட்டுள்ளது. நாட்டின் நான்காம் தூண் எனப்படும் பத்திரிக்கை, மீடியா துறையில் 100 சதவிதம் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காஷ்மீர்க்கான சிறப்பு சட்டம் ரத்து செய்ய பேச தொடங்கியாகிவிட்டது.

மோடி பதவியேற்ற நான்காவது நாள், மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற தமிழக மீனவர்கள் 33 பேரை இலங்கை இராணுவம் சிறை பிடித்து சென்றுள்ளது. இலங்கையில் மோடியை இந்தியாவில் புரமோட் செய்த அதானி நிறுவனம் இலங்கையில் மின்நிலையம் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மோடியின் அரசாங்கம் சொல்லில், செயல்பாட்டில் மோசடிகள் செய்ய தொடங்கிவிட்டது. தனை அறிந்தும் நடுநிலை பேசியவர்கள் ஜென் நிலையில் தங்களை வெளிப்படுத்துகிறார்கள். சிலர் இப்பதானே பதவிக்கு வந்தாரு என்கிறார்கள்.

பதவிக்கு வந்த இந்த 15 நாட்களிலேயே இத்தனை குளறுபடியென்றால் இனி எவ்வளவோ……….

3 கருத்துகள்:

  1. WITHIN TWO YEARS MODI GOVT WILL FALL AND AGAIN SONIA WILL RULE THE COUNTRY TO BRING BACK THE GLORY OF THE COUNTRY. SONIA IS THE ONLY FITTEST LEADER TO RULE OUR COUNTRY.

    பதிலளிநீக்கு
  2. Do u bitten by a mad dog idot, hold for some year, after marriage u wait one year for child otherwise u goto doctor,nothing give u result in a month stupid.

    பதிலளிநீக்கு