ஜெயலலிதா என்றால் நீதிமன்றங்களுக்கு என்ன பயம்மோ
தெரியவில்லை. அவர் சார்ந்த வழக்கு என்றால் விதவிதமாக தீர்ப்புகளை தருகிறார்கள்.
1996ல் தொடரப்பட்ட ஜெ, சசிகலா, இளவரசி, சுதாகரன்
மீதான வருமானத்துக்கு அதிகமாக 66.5 கோடி ரூபாய் சொத்துக்குவித்த வழக்கில் 2014
ஆகஸ்ட் மாதம் கர்நாடகா தனி நீதிமன்றத்தில் மைக்கல் டி குன்ஹாவால், 4 ஆண்டு சிறை
தண்டனை 100 கோடி ரூபாய் அபராதம் என தீர்ப்பு தரப்பட்டது. முதல்வர் பதவி
பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா, உடனே ஜாமீன்க்கு முயற்சி
செய்கிறார். கர்நாடகா உயர்நீதிமன்றம் மறுத்துவிடுகிறது. உச்சநீதிமன்றம்மோ, அரசு
தரப்பின் வாதத்தை கேட்காமல் வித்தியாசமாக ஜாமீன் வழங்கி, 3 மாதத்தில்
மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடுகிறது. ( ஜெ
வுக்கு முன்பு இதேபோல் ஊழல் வழக்கில் குறைவான தண்டனை பெற்ற அரசியல் பிரபலங்கள் மாதக்கணக்கில்
சிறையில் இருந்து அதன்பின்பே ஜாமீனில் வெளியே வந்தார்கள் ).
கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட
மேல்முறையீட்டு வழக்கில், அரசின் சார்பில் பவானிசிங் ஆஜராகிறார். இவர் ஆஜராவது
தவறு என்கிறார்கள். உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்துக்கு வழிகாட்டுகிறது.
உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்துக்கு வழிகாட்டுகிறது. உயர்நீதிமன்றம்
தனிநீதிபதிக்கு வழிகாட்டுகிறது, அங்கிருந்து மீண்டும் உச்சநீதிமன்றம் செல்கிறது.
இப்படி பந்தாடப்பட்டு இறுதியில் உச்சநீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட
அமர்வு விசாரிக்கிறது. அதில் ஒருவர் பவானிசிங்கை நியமனம் செய்யும் அதிகாரம்
தமிழகரசுக்குயில்லை என்கிறார். மற்றொரு நீதிபதி உள்ளது என்கிறார். வித்தியாசமான
தீர்ப்பால் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கு மாற்றப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில்
இந்த அமர்வு அமைக்க மாதக்கணக்கில் ஆகும். உதாரணத்துக்கு ஒரு வழக்கு பார்க்கலாம்,
ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தூக்குதண்டனை கைதியாக சிறையில் உள்ள 3 பேர்
வழக்கில் முடிவு எடுக்க அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகியும் அந்த அமர்வு பற்றி உச்சநீதிமன்றம்
வாய்திறக்கவில்லை. இதேபோல் பல வழக்குகள் உள்ளன. ஆனால், இரண்டு நீதிபதிகள் தீர்ப்பு
தந்த மறுநாளே, மூன்று நீதிபதிகள் அமர்வை அமைத்து அறிவிப்பு செய்கிறது உச்சநீதிமன்றம்.
மறுநாள், அவர்கள் என்று விசாரிப்பார்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது. இஸ்ரோ
ராக்கெட் வேகத்தை விட அதிக வேகமாக உச்சநீதிமன்றம் செயல்பட்டுள்ளதை நிச்சயமாக
பாராட்ட வேண்டும்.
மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இரண்டு அமர்வில்
விசாரித்து முடித்துவிட்டார்கள். மூன்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் ஒரே
கருத்தாக கூறியது.
1.
அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமனம் செல்லாது.
2.
அவரது எழுத்துபூர்வ வாதங்களை நிராகரிக்க வேண்டும்.
3.
அன்பழகன் 90 பக்கங்களுக்கு மிகாமல் தங்கள் தரப்பு
பதில் தரலாம்.
4.
சுப்பிரமணியசாமிக்கும் பதில் தர அனுமதி.
5.
ஊழல் எந்தளவுக்கு சமுதாயத்தை பாதிக்கும் என
கருத்தில்கொண்டு தீர்ப்பு வழங்க வேண்டும்………
இப்படி தீர்ப்பு தந்து குழப்பி வைத்துள்ளார்கள்
நீதிபதிகள். அரசு வழக்கறிஞர் நியமனம் தவறு என மூன்றாம் தரப்பு உச்சநீதிமன்றத்துக்கு
வந்ததன் நோக்கம்மே அரசு வழக்கறிஞர் குற்றவாளிகளுக்கு சாதகமாக கீழ் நீதிமன்றத்தில்
செயல்பட்டு அபராதம் விதிக்கப்பட்டார், ஜாமீன் மனு மீதான விசாரணையில்
பல்டியடித்தார், மேல்முறையீட்டில் முறையான அனுமதியில்லாத போதும், வழக்கு நடைபெறும்
மாநில அரசு அனுமதியில்லாமல், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நியமன கடிதத்தை வைத்துக்கொண்டு
மேல்முறையீட்டு மனுவில் ஆஜராகிறார் என்பதால்தான்.
அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமனம் செல்லாது என
தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் எழுத்து வடிவிலான வாதத்தை நிராகரிக்கசொல்கிறது. அப்படியாயின்
அவரது வாய் வார்த்தை வாதங்களை ஏற்றுக்கொள்ளளாம் என அர்த்தமாகிறது.
தவறான சட்ட வழியில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞரின்
வாதம் எப்படி அரசு தரப்புக்கு சாதகமாக இருந்திருக்கும் என யோசிக்காமல் போனது ஏன்
?.
அவரது நியமனம் செல்லாது எனச்சொல்லும் போது அவரது
வாதங்கள் முழுவதும்மே தவறு தானே?. வாய் வார்த்தை வாதத்துக்கு அனுமதி, எழுத்துபூர்வ
வாதத்துக்கு அனுமதியில்லை என்பது எப்படி சரியாகும். இல்லை பவானிசிங் நியாயமாக
வாதாடியிருப்பார் என நீதிபதிகள் கருதினார்கள் என்றால் எழுத்து பூர்வமான
வாதத்துக்கு அனுமதி வழங்கியிருக்கலாம்மோ ஏன் செய்யவில்லை ?.
ஜெ, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பில் பிரபலமான
மூத்த வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரருக்கு சாதகமாக வாதங்களை எடுத்து
வைத்துள்ளார்கள், ஆவணங்களை சமர்பித்துள்ளார்கள், அரசு தரப்பு தவறு செய்துள்ளது என
வாதாடியுள்ளார்கள்.
அரசு தரப்பில், அதனை மறுத்தும், முறையான ஆவணங்களை
பரிசீலிக்க சொல்ல வேண்டும்மென்றால் வாய் வாதங்கள், எழுத்துபூர்வ சட்ட நுணுக்கள்
இருந்தால் தானே முடியும். பவானிசிங்கின் எழுத்துபூர்வ வாதத்தை ஏற்றுக்கொள்ளகூடாது
என உத்தரவிட்டுள்ளது. எதிர் தரப்புக்கான அரசு தரப்பின் வாதங்கள் எழுத்து வடிவிலான
வாதத்தில் மட்டும் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இப்போது அந்த வாதங்கள் ரத்து
செய்யப்பட்டுள்ளன. இப்போது குற்றவாளிகள் தரப்பின் வாதம் மட்டும் தான் நீதிபதி முன்
உள்ளது. அவர் எப்படி தீர்ப்பு வழங்குவார் ?.
சட்டம் என்ன சொல்கிறது, ஆவணங்கள், சாட்சிகள்
அடிப்படையில், நீதிபதியின் ஏற்றுக்கொள்ளும் தன்மையின் அடிப்படையில் மட்டும்மே தீர்ப்பு
வழங்கப்படுகிறது. ஒரு தரப்பு தன் வாதத்தை பலமாக வைத்துள்ளது. அதனை மறுக்க வேண்டிய
அரசு தரப்பு பலகீனமாக இருந்தது. அந்த பலகீனத்தில் எழுத்து பூர்வ வாதத்தை
ஏற்றுக்கொள்ளகூடாது எனச்சொல்லி இன்னும் பலகீனமாக்கியுள்ளது. இப்போது நீதிபதி முன்
குற்றவாளி தரப்பு பதில்கள் மட்டும்மே உள்ளது. இந்த நிலையில் தீர்ப்பு
வழங்கச்சொன்னால் எதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவார் ?.
ஊழல் எந்தளவுக்கு சமுதாயத்தை பாதிக்கும் என
கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்குங்கள் எனச்சொல்லியுள்ளார் ஒரு நீதிபதி. அந்த கடமை
கீழ்நீதிமன்ற நீதிபதிக்கு மட்டும் தான் உள்ளதா ? உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு
கிடையாதா ?.
இந்த வழக்கில் அதிகாரவர்க்கத்தின் கைகள் உச்சநீதிமன்றம் வரை
வந்துள்ளது என்பது கண்கூடாக தெரிகிறது. உச்சநீதிமன்ற தலைமை வழக்கறிஞர் தத்து மீது
வழக்கறிஞர்களே, சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறார் என ஜனதிபதி வரை புகார் தந்துள்ளார்கள்.
நீதித்துறை என்பது மக்களுக்கு நம்பிக்கை தரும்
இடமாக இருக்க வேண்டும். ஏன் எனில் பாமர மக்கள் அதைத்தான் நம்பிக்கொண்டு
இருக்கிறார்கள். ஆனால் நீதித்துறை செல்லரிக்கும் அமைப்பாக மாறிக்கொண்டுயிருப்பதை
உச்சநீதிமன்றம்மே வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டுயிருக்கிறது.
நீதியை நிலைநாட்ட வந்ததாக நீங்கள்
நினைக்கலாம்........... நிச்சயம் மக்கள் அதை நம்பவில்லை என்பதை உணருங்கள்.