வெள்ளி, பிப்ரவரி 03, 2012

சுகமான சுமைகள்………… பாகம் 15.




என்னடா மச்சான் சினிமா அதுக்கு புடிக்காதுன்ன அதுவும் தேவிக்கிட்ட நீ போடீங்குது என்னடா நடந்துச்சி உங்களுக்குள்ள என காலேஜ் மதியமே முடிந்தாலும் வீட்டுக்கு போகாமல் ரூம்க்கு வந்து கேட்டுக்கொண்டுயிருந்தான். 

சும்மா சொன்னான். அதுவும் திடீர்ன்னு நான் வரலன்னு சொல்லுதுன்னா அதுக்கு நான் என்ன பண்றத்து. 

இல்ல நீ எதையோ மறைக்கற.

உங்கிட்ட எதையாவது மறைச்சியிருக்கறனா. சத்தியமா ஒன்னும் மறைக்கலடா. வேணும்ன்னா நாளைக்கு அதுங்கிட்டயே ஏன் படத்துக்கு போகலன்னு கேட்டு சொல்றன் என்றதும் சமாதானமாகி சென்றான். இரவு முழுவதும் நாம சொன்னதுக்காக போகலயா? உண்மையாலுமே போக புடிக்கலயா என மனதிற்க்குள் கேள்வி எழுந்தது. 

காலை எழுந்ததும் சீக்கிரமாக கிளம்பி காலேஜ் புறப்பட இருடா மச்சான் நானும் வர்றன் என்ற ரமேஷ்சிடம் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் முன்னாடி போறன் நீ பின்னாடி வா எனச்சொல்லிவிட்டு வந்தோன். அவளுக்காக நேற்று அமர்ந்திருந்த அதே சிமெண்ட் பெஞ்ச்சில் காத்துயிருந்தேன். 

மச்சான் என கையாட்டியபடி ஜான் வந்து அருகில் அமர்ந்தான். 

என்னடா சீக்கிரம் வந்துயிருக்க?.

நீ தான் நேத்து என்னை கேள்வி மேல கேள்வி கேட்டயில்ல. ப்ரியாக்கிட்ட கேட்டு பதில் சொல்றன் எனும் போதே சைக்கிள் ஸ்டாண்டில் இருந்து ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டு வந்தவள் எங்களை பார்த்துவிட்டு உடன் வந்தவளை அனுப்பிவிட்டு எங்களை நோக்கி வந்தாள். 

மச்சான் நீ எதுவும் கேட்காத நான் கேட்கறன். 

என்ன கேட்கப்போற. ஏடாகூடமா ஏதாவது கேட்டு பிரச்சனையாக்கிடாதா. ப்ரியா அருகில் வந்து ஹாய் என்றாள். காலேஜ் வந்திருக்கிங்க மழை வரப்போகுது பாரு. 

மழை வந்தா சந்தோஷம் தானே. போதும்டா என தோளை அழுத்தி பிடித்த ஜான். 

முதல்ல நான் கேட்கற கேள்விக்கு பதில் சொல்லு. நேத்து சினிமாவுக்கு போறன்னு தானே நீயும், தேவியும் சொன்னிங்க. கிளம்பறப்ப இவன் உனக்கு சினிமாவே புடிக்காதுன்னான். நீயும் நான் வரலன்னிட்ட. இவனை கேட்டா சும்மா சொன்னன்டாங்கறான். எதுக்கு நீ சினிமாவுக்கு போகல. நேத்து நீங்க ரெண்டு பேரும் என்ன பேசிக்கிட்டிங்க. அகிலனை கேட்டா அது என்ன மிரட்டுச்சி அதனால வந்துட்டன் அவுங்க இரண்டு பேரும் தான் பேசிக்கிட்டு இருந்தான்கிறான். என்ன பேசனிங்கங்கற உண்மை எனக்கு தெரியனும். 

நீ ஒன்னும் தெரிஞ்சிக்க வேணாம். வாய மூடு. 

டேய் கம்முனு இருடா.

உனக்கு தெரியாதுன்னிட்ட. விடு நான் அதுங்கிட்டதானே கேட்கறன்.  

அப்படியா. என் மேல இருக்கற அக்கறையில படம் புடிக்காதுன்னு சொன்னதால நான் சினிமாவுக்கு போகல என சூடான ப்ரியா. இப்ப இங்கயிருந்து போறியா அடிவாங்கறியா என்றாள். 

கத்திரிக்காய் முத்தனா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகனும் அப்ப பாத்துக்கறன் என எழுந்து நடந்தான். 

அழுவி போன குப்பைக்கும் போகும் அதையும் தெரிஞ்சிக்க என்றாள். 

அவனை எதுக்கு திட்டற. 

லூசு மாதிரி கேள்வி கேட்டா திட்டாம என்ன செய்வாங்களாம். 

சரி நேத்து நீ ஏன் படத்துக்கு போகல?.

உண்மையாலுமே போக விருப்பம்மில்ல என்றவள் வகுப்பை நோக்கி சென்றுக்கொண்டிருந்த இரண்டு பெண்களை கைகாட்டி அழைத்தாள். அவள்கள் அருகே வந்ததும் இவளுங்க என் கிளாஸ் ப்ரெண்ட்ஸ். அவ சவிதா, இவ கீதா என்றவள் என்னை அறிமுகப்படுத்தினாள். எம்பேரு ஜான் என பின்னால் இருந்து குரல் வந்தது. திரும்பிபார்த்தபோது, 5 அடி தூரத்தில் சிரித்துக்கொண்டு நின்றிருந்தான். எனக்கும் ப்ரியாவுக்கும் சண்டை அதனால தான் என்னை அறிமுகப்படுத்தல. நானும் இவனும் திக் பிரண்ட்ஸ், ஒரே க்ளாஸ் என்றான். 

சார் ரொமான்ஸ் மன்னன். ஜாக்கிரதைப்பா என ப்ரியா தன் நண்பிகளிடம் சொல்ல. 

சும்மா சொல்றாங்க. நான் என் மச்சானை போல நல்லவன் என நெருங்கி வந்து என் தோள் மேல் கைவைத்தான். 

நான் நல்லவன்னு எப்படா உங்கிட்ட சொன்னன். 

மச்சான் விளையாடாதடா. நாமயெல்லாம் ப்ரண்ட்ஸாகியிருக்கோம் ட்ரீட்டெல்லாம் கிடையாதா ?. 

இதுக்கெல்லாம்மா ட்ரீட்டு என கீதா ஆச்சர்யமானால். 

பொண்ணுங்க ஒருத்தனை பார்த்து சிரிச்சாலே அவன்க்கிட்ட ட்ரீட் கேட்கற ஆளுங்க நாங்க. இரண்டு டீம் ஒன்னாயிருக்கு ட்ரீட் இல்லன்னா எப்படி. 

ஆமாம். இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் டீம்மு ஒன்னாயிருக்கோம். போட டேய் என்றேன். 

பாய்ஸ்சும் கேள்ஸ்சும் ப்ரண்ட்ஸ்ஸாகறதுன்னா சும்மாவா என ஜான் திருப்பி கேட்டான். 

நீ சொல்றதும் கரெக்ட் தான் மச்சான். ஈவ்னிங் பார்ட்டி நிச்சயம் செலவெல்லாம் ஜான்து என்றதும் மூன்று பெண்களும் கோரஸாக ஒ.கே சொல்லி சிரித்தனர். ஜான் என்னை கடுப்பாக முறைக்கவும் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது. 

லஞ்ச் டைமில் என்ன மச்சான் இப்படி பண்ணிட்ட என கேட்க உடன் இருந்த தயா, ரமேஷ்;, அகிலனும் என்னடா என கேட்டார்கள். 

நம்ம ஜான் ஈவ்னிங் ட்ரீட் தர்றான் என சொன்னதும். 

எதுக்குடா என அகிலன் ஆர்வமாக. 

நடந்ததை சொன்னதும் அப்பாடா நைட் சமைக்கற வேலை மிச்சம் என்றான் ரமேஷ். 

நீங்களுமாடா என ஜான் டென்ஷனாக. 

வா மச்சான் யார்க்கு செலவு பண்ற. உன் நண்பன்களுக்கு தானேடா என தயா பிட்டை போட. 

காசுயில்லடா.

அமெரிக்காகாரன் இலங்கையை பாத்து பயப்படுறான்னு சொல்லு நம்பறன். உன்கிட்ட காசுயில்லன்னு சொன்னா நம்பமாட்டன் என்றேன். 

செலவுக்குன்னே வாங்கடா என புலம்பியபடி வந்தான். 

மாலை 6மணிக்கு வேலூர் கோட்டை பூங்காவில் அங்காங்கே சிலர் அமர்ந்து பேசிக்கொண்டுயிருந்தனர். ஜான், ரமேஷ், நான், தயா, அகிலன்னும் பூங்கா வெளியே காத்திருக்க மூன்று பெண்களும் சைக்கிளில் வந்தனர். தயாவையும், ரமேஷ்சையும் அறிமுகப்படுத்தியபின். எந்த ஹோட்டலுக்கு போலாம் என ப்ரியா கேட்டாள். ஒவ்வொரு பேராக அலசப்பட்டு கடைசியில் சுரபி என முடிவானது. 

எனக்கு நான்வெஜ் தான் வேணும். 

டேய் சும்மாயிருடா என முறைத்தான் ஜான். 

வெஜ்டேரியன் போகலாம் என ப்ரியா சொல்ல மற்ற பெண்களும் அதற்கு தலையாட்டினர். 

ஒருவழியாக ஒத்துக்கொண்டு கிளம்ப இருங்கடா போகலாம் என தயா நிறுத்தினான். 

ஏண்டா?. 

இருடா சொல்றன். 2 நிமிடம் என்பது 20 நிமிடமாக போயிடலாம் போயிடலாம் என்றானே தவிர கிளம்பவில்லை. 

டேய் இவனுங்க ரெண்டு பேரும் அவுங்க ஆளுங்கள வரச்சொல்லியிருப்பானுங்க. அதான் நிக்கறானுங்க என்றதும் 

மச்சான் எப்படிடா இவ்ளோ கரெக்டா சொல்ற என்றான் ரமேஷ். 

கடுப்பாக என்னைப்பார்த்தான் ஜானிடம் கெஸ்ல சொன்னன். அதுக்கு எதுக்குடா என்னை முறைக்கற என்றேன் கடுப்புடன். ஜான் முகத்தை திருப்பிக்கொண்டான். 

சொன்னது போலவே அந்த இரண்டு பெண்களும் வந்தனர். ரமேஷ் அருகே வந்த பெண்ணை காட்டி இவுங்க சத்தியா என்றான். தயாவோ இவுங்க மீனா என்றான். அறிமுகப்படலம் முடிந்ததும். சைக்கிளில் தான் கிளம்பினோம். 

மயிரு மாதிரி எல்லார்க்கிட்டயும் சொல்லிட்ட இப்ப இவ்ளோ பேர்க்கு எப்படி பில் தர்றது காசுயென்ன மரத்தலயா காய்க்குது என சைக்கிளில் வரும்போதே என்னிடம் கோபப்பட்டுக்கொண்டு வந்தான். 

ஏய் அவனுங்க அழைச்சி வர்றானுங்க. அதுக்கு என்னப்பண்றத்து. 

நீ ஒன்னும் சொல்ல வேணாம் மூடிக்கிட்டு வா?.  

டேய் சும்மா பேசாத ட்ரீட் கேட்ட. நீ தருவன்னு நான் ஜாலியா சொன்னன். நீ அப்பவே முடியாதுன்னு சொல்லியிருக்கனும். இப்ப வந்து என் மேல கோபப்பட்டா என்னடா நியாயம். 

எல்லார்க்கும் ஓசியில வாங்கி தர்றதுக்கா எங்கப்பன் என்னை பெத்து விட்டுயிருக்கான் என்றதும் கடுப்பாகி அவனை முறைத்தேன். சைலண்டாக ஹோட்டலுக்குள் போய் 10 பேரும் ஒரே டேபிளில் அமர்ந்தோம். தோசை, சோளாபூரி, இட்லி என ஆளாளுக்கு ஆர்டர் தந்தனர். நான் அமைதியாக இருந்ததை பார்த்து உனக்கு என்னப்பா என்றார்கள் முதல்ல இரண்டு இட்லி தாங்க என்றேன். 

ஜாலியாக பேசியபடி சாப்பிட்டு கொண்டிருக்க எனக்கோ ஜான் சொன்ன வார்த்தைகள் மனதை நெருடிக்கொண்டேயிருந்தன. மற்றவர்கள் முன் அதைக்காட்டிக்கொள்ளாமல் போலியாக முகத்தில் சிரிப்பை வரவைத்துக்கொண்டு பேசிக்கொண்டுயிருந்தேன். ஜான் என் அருகில் அமர்ந்திருந்தும் அவனும் என்னிடம் பேசவில்லை, நானும் அவனிடம் பேசவில்லை. 

சாப்பிட்டு முடித்ததும் பில் கொண்டு வரும்போதே சர்வர்க்கு கண் சைகையிலேயே பில்லை என்னிடம் கொண்டு வா என்றேன். அவன் கொண்டு வந்து வைக்க பில் பார்த்தேன் 460 ரூபாய் என இருந்தது. பாக்கெட்டில் இருந்த 100 ரூபாய் தாள்கள் ஐந்தை எடுத்து வைத்தேன். 

ஏய் இருடா என்றான் ஜான். 

ட்ரீட் ஜான் தர்றான்னு தானேடா சொன்ன நீ எதுக்கு காசு தர என கேட்டான் அகிலன். 

யார் தந்தா என்னடா. 

இல்ல நான் இத ஒத்துக்க மாட்டான் என காசை பிடுங்க ப்ரியா கையை பிடித்தாள்.  

விடு ப்ரியா. 

முடியாது. 

ஏய்………… அறிவில்ல. விடுடீ. பெரிய இவளா நீ என கத்த ப்ரியாவே அதிர்ந்து போனாள். மற்றவர்களும் அதே நிலையில் இருக்க அவளது கையை தட்டிவிட்டு காசை தந்து நீங்க போங்கண்ணே என சர்வரை அனுப்பிவிட்டு வேகவேகமாக ஹோட்டலை விட்டு வெளியே வந்தேன். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக