வியாழன், டிசம்பர் 27, 2012

எதிரியால் புலி என வர்ணிக்கப்பட்ட சச்சின்



1973 ஏப்ரல் 27ந்தேதி மும்பையில் பந்தரா பகுதியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் கிரிக்கெட் உலகின் நட்சத்திரம் சச்சின். பிரபல இந்திப்பட இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மனின் ரசிகரான அவர் தன் பேரன்க்கு சச்சின் என பெயர் வைத்தார்.

சச்சின் அப்பா பேராசிரியர். அவரது அம்மா ஆயுள் காப்பிட்டு நிறுவன ஊழியர். படித்தது கிரிக்கெட்டுக்கு புகழ் பெற்ற சாரதா ஆஸ்ரமம் பள்ளியில். பள்ளி தேர்வில் ஆங்கிலத்தில் தோல்வியை தழுவினார். விளையாட்டில் சுட்டியாக இருந்தார். கிரிக்கெட் மீதான வெறியால் பள்ளி படிப்போடு சச்சினின் நின்றுவிட்டார்.

நட்புக்கு சிறந்த உதாரணமாக விளங்குபவர் சச்சின். தன் வீட்டு வாட்ச்மேன் மகன் ரமேஷ் தான் சச்சினின் நெருங்கிய நண்பர். சச்சின் உதவியாளர் உட்பட எல்லாம் அவரே.

டென்னிஸ் விளையாட்டு தான் சச்சினுக்கு பிடித்த விளையாட்டு. டென்னிஸ் சூப்பர் ஸ்டார் சுவீடன் நாட்டை சேர்ந்த ஜான் மெக்கன்ட்ரோ தான் அவரது ஆஸ்தான ஹீரோ. அவர் ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தபின் தான் சச்சின்க்கு கிரிக்கெட் மீது காதல் தொடங்கியது. அதன்பின் எந்த பொருள் கிடைத்தாலும் அது பந்தாக, மட்டையாக மாறியது. சச்சின் பயிற்சியாளர் ராம்காந்த் அச்ரேகர். சச்சினுக்கு கிரிக்கெட் உலகில் ஆதர்ச நட்சத்திரங்கள் கவாஸ்கர், கபில்தேவ். 

சச்சினின் சகோதரர் அஜித் தான் சச்சினுக்கு உந்து சக்தியாக இருந்தவர். 10 வயதிலேயே வயதுக்கு மீறி விளையாட்டில் புலியாக திகழ்ந்தார். இவரின் போட்டி திறமையை கண்டு சச்சினின் 13 வது வயதில் அதாவது 1986ல் மும்பை மிட்டே என்ற பத்திரிக்கை அவரை பேட்டி கண்டது. வெகுவாக அவரை புகழ்ந்தது.

இந்தியாவில் பம்பாய் கிரிக்கெட் சங்கம் பிரபலமான சங்கம். அந்த சங்கம் வீரர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கும் விருது பெரியது. தனது 14வது வயதில் பலப்பல போட்டிகளில் கலந்துக்கொண்டு மும்பை கிரிக்கெட் ஆர்வலர்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார். அந்த ஆண்டுக்கான இளம் வீரர் என்ற விருதை எதிர்பார்த்தார். ஆனால் இவரை விட திறமை குறைவான ஒருவருக்கு கிடைத்துவிட்டது. இது சச்சினை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. பி.சி.ஏ பெரும் சர்ச்சையில் சிக்கியது.

அப்போது கிரிக்கெட் உலகில் பிரபல நட்சத்திரமாக இருந்த கவாஸ்கர் சச்சினுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், நீ மன வேதனையில் இருப்பாய் என்பதை நான் அறிவேன். பட்டம், பதவி, பதக்கம் பக்கம் உன் கவனத்தை திருப்பாதே. கடமையை செய் பலனை எதிர்பாராதே என்ற கீதை சொல்படி வாழ கற்றுக்கொள் எனக்குறிப்பிட்டுயிருந்தார். தன் வாழ்க்கையில் அதை அன்று முதல் கடைப்பிடிக்க தொடங்கினார் சச்சின்.

ஸ்டார் கிரிக்கெட் க்ளப் சார்பாக 1988ல் கிரிக்கெட் விளையாட முதன் முறையாக இங்கிலாந்து சென்றார் சச்சின்.

14 வயதில் சச்சினின் திறமை, விளையாடும் முறை போன்றவை பிரபலமான, பழமையான இந்திய கிரிக்கெட் க்ளப்பின் தலைவர் ராஜ்சிங்கை கவர்ந்தது. இதனால் சங்க விதிமுறைகளை தளர்த்தி அந்த பாரம்பரிய க்ளப்பில் உறுப்பினராக்கி சச்சின் திறமைகளை வெளிக்கொண்டு வர உந்து சக்தியாக இருந்தார் ராஜ்சிங். 


1989ல் டெஸ்ட் போட்டிக்காக ஸ்ரீகாந்த் தலைமையில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணியில் சச்சின்க்கு வாய்ப்பு தரப்பட்டது. அப்போது அவரது வயது 16. இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் கலந்துக்கொண்டு விளையாடினார். புhகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமல்ல அரசியல்வாதிகள், மீடியாக்கள் கூட இந்தியாவை விரோதமாக தான் பார்க்கும். சச்சினின் திறமையான விளையாட்டை கண்ட பாகிஸ்தான் செய்தித்தாள் ஒன்று, இதே ஒரு புலி வந்துவிட்டது என பாராட்டியது.

இங்கிலாந்தில் மேற்கண்ட சுற்றுப்பயணத்தில் முதல் பேட்ஸ்மேனாக களம்மிறக்கப்பட்டார் சச்சின். அங்கு நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் செஞ்சுரியை பதிவு செய்தார் அப்போது 18 வயதை நெருங்கிக்கொண்டு இருந்தார். ஆட்ட நாயகம் விருது தரப்பட்டது. மைதானத்தில் சச்சினுக்கு ஏற்ற ஜோடி காம்ப்ளி. டீம் கேப்டன், துணை கேப்டன் என பொறுப்பு வகித்தவர் பின் கேப்டன் பதவியே வேண்டாம் என மறுத்தவர் தான் சச்சின்.

1995 முதல் சச்சின் நினைப்பவர்கள் தான் இந்திய கிரிக்கெட் அணியில் கோலோச்ச முடியும் என்ற நிலையை உருவாக்கினார். அவர் தான் அதிக வருமானம் பெறும் விளம்பர தூதர். அந்தளவுக்கு உச்ச அந்தஸ்த்தில் இருந்தாலும் மைதானத்தில் எப்போதும் சோர்ந்து இருந்தது கிடையாது.

சச்சின்க்கு எதிராக மும்பையில் இருந்தே இறக்கிவிட்டார்கள். அவர்கள் சச்சின் முன் தாக்கு பிடிக்க முடியாமல் காணாமல் போய் பல ஆண்டுகள் ஆனப்பின்பே தற்போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் சச்சின்.

இதுவரை கிரிக்கெட் உலகில் இருந்த உலக சாதனைகள் பலவற்றை முறியடித்து சகாப்தம் படைத்தவர் சச்சின். தன் தந்தை இறந்த சில தினங்களிலேயே உலக கோப்பை போட்டியில் கலந்துக்கொண்டு தன் பங்கை சிறப்பாக வெளிப்படுத்தியவர் சச்சின்.

இந்திய ரசிகர்களிடம் மட்டுமல்ல கிரிக்கெட் விளையாட்டு உள்ள நாடுகளில் உள்ள விளையாட்டு பிரியர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார் சச்சின். தற்போது அவரிடம்முள்ள நாடாளமன்ற உறுப்பினர் என்ற சிம்மாசனத்தை விட சிறந்த சிம்மாசனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக