ஞாயிறு, டிசம்பர் 30, 2012

வேகத்தில் விவேகமில்லா இளைய சமுதாயம்.



இந்திய ஒன்றியத்தின் தலைநகரான டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்தில் இருந்து வீசப்பட்ட மாணவிக்கு ஆதரவாக உடனடியாக குற்றவாளிகளுக்கு தண்டனை தர வேண்டும் என மாணவ சமுதாயம் திரண்டுள்ளது. பாராட்ட வேண்டியது. மாணவியின் கொடூர மரணம் கண்டிக்க தக்கது. 

நீதி கேட்டு நடு இரவில் பிரதமர் இல்லம் முற்றுகை, பாராளமன்றம் முற்றுகை, ரயில் மறியல், காவலர்களுடன் மோதல் என தினம் தினம் நடு இரவிலும் பிரச்சனை செய்கிறார்கள். உடடியாக பாலியல் குற்றங்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க சட்ட திருத்தம் செய்யுங்கள் என்கிறார்கள். 

இப்படி கேட்பது முட்டாள் தனமாக இல்லையா ?.

இதுயென்ன மீடியாவ நீங்கள் சொல்வதை அப்படியே கேட்டுக்கொண்டு ஒளிபரப்ப. பாலியல் குற்றத்துக்கு தூக்குதண்டனை, மரண தண்டனை தாருங்கள் என கோஷமிட்டால் உடனே தந்துவிட முடியாது. சட்டமியற்ற வேண்டும். சட்டம் இயற்றி அதை நடைமுறைக்கு கொண்டு வர பல படிகள் உண்டு. சட்டம்மியற்ற கமிட்டியுண்டு. அந்த கமிட்டி சட்டவிதிகளை உருவாக்க வேண்டும், அதன்பின் அதில் உள்ள நிறை குறைகள் பற்றி விவாதம் செய்ய வேண்டும். மாநிலங்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். பாராளமன்றத்தன் இரு அவைகளில் அவை விவாதம் செய்ய வேண்டும் அதன்பின் அது சட்டமாக்கப்பட வேண்டும், அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டும். இப்படி எத்தனையோ நடை முறைகள் உண்டு.

ஆனால், இன்றே செய், இப்போதே செய் என்பது அவசரத்தின் கோலம். இளைய சமுதாயத்தினருக்கு உணர்ச்சி வேகத்தில் செயல்படுவார்கள். அதனை ஒருமை படுத்த வேண்டியது வயது முதிர்ந்தவர்களின் கடமை. ஆனால் இந்திய தேசத்தில் அதில் லாபம் பார்க்கவே துடிக்கிறார்கள் அரசியல் கட்சியினர். 



உணர்ச்சி கொந்தளிப்பில் நடக்கும் இந்த போராட்த்தில் மட்டுமல்ல கடந்த ஆண்டு ஊழலுக்கு எதிராக டெல்லியில் பெரும் போராட்டம் அன்னஹசாரே, பாபாராம்தேவ் தலைமையில் நடத்தினார்கள். அப்போது நாட்டின் தலைநகரை ஸ்தம்பிக்க வைத்தார்கள். சில வாரம் டெல்லியை பரபரப்பாக வைத்திருந்தார்கள். ஊழலை ஒழிக்க உடனே சட்டம் கொண்டு வரவேண்டும், கறுப்பு பணத்தை மீட்டு வர இப்போதே சட்டமியற்ற வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்து போராடினார்கள்.

இப்போதே நடக்க வேண்டும் என எண்ணி போராடுவது முட்டாள்தனமானது. போராட்டத்தை தூண்டி விடுபவர்களுக்கு வேண்டுமானால் இப்படி செய்வது நன்றாக இருக்கும். உணர்ச்சி வேகத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்படுவது இளைய சமுதாயத்துக்கு நல்லதல்ல. 


தீர்ப்பை எழுதிவிட்டு அதை நடைமுறைப்படுத்துங்கள் என அரசாங்கத்தை இளைய சமுதாயம் நெருக்குவது அழகல்ல. ஒரு பிரச்சனைக்கு குறிப்பிட்ட கால அளவு தர வேண்டும். அதனை அரசாங்கம் செய்யாவிட்டால் போராட்டம்மென்ன அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனால் உணர்ச்சியை கட்டுப்படுத்திக்கொண்டு அறிவு பூர்வமாக சிந்தியுங்கள் இளையோர்களே. 

வேகம் விவேகமல்ல என்பது சாலை பயணத்துக்கு மட்டுமல்ல........... வாழ்க்கை பயணத்துக்கும் என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள். 

1 கருத்து:

  1. காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்

    நன்மக்களே!
    வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
    நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
    இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.

    பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
    மத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
    காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.

    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.

    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.
    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.

    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.
    இன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
    மக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.
    புதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.

    மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.
    நம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.
    இந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013
    வரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
    காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
    மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.

    -இந்தியன் குரல்

    பதிலளிநீக்கு