வெள்ளி, டிசம்பர் 14, 2012

கமல் புகுத்தியுள்ள வியாபார யுக்தி.




தமிழ் சினிமாவில் புதிய யுக்தியை புகுத்தியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். அதாவது, படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் அதே நாளன்று டி.டி.எச் மூலம் ஒளிப்பரப்புவது. இந்தியாவில் முதல் முறையாக என்றுக்கூட சொல்லும் வகையில் இந்த புதிய யுக்தியை செயல்படுத்தியுள்ளார். கமலின் நடிப்பில், இயக்கத்தில் உருவாகியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடப்படும் அதே நாளன்று ஏர்டெல் டி.டி.எச் மூலம் வீட்டில் இருந்தபடியே குடும்பத்தோடு அமர்ந்து படத்தை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

டி.டி.எச் மூலம் ஒருமுறை பார்க்க ஆயிரம் ரூபாய் கட்டணம். படத்தை காப்பி செய்ய முடியாது. செட்டப் பாக்ஸ்சில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளவும் முடியாத தொழில் நுட்பத்தில் படத்தை திரையிடும் யுக்தி. இதுக்காக பெரும் தொகைக்கு ஏர்டெல்லுடன் ஒப்பந்தம் போட்டுள்ளார் கமல்ஹாசன். இதனைத்தான் திரையரங்க உரிமையாளர்கள் எதிர்க்கிறார்கள். சினிமா பார்க்கும் வரும் கூட்டம்மோ மிகக்குறைவு. தற்போதைய இந்த யுக்தியால் திரையரங்குகள் காணாமல் போய் அழிந்து விடும் என எதிர்ப்பு காட்டுகிறார்கள். 

திரையரங்கங்கள் அழிக்கபடுகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கட்டும். திரையரங்குக்கு மக்களின் வரத்து குறைந்து போனதற்க்கு காரணம் நல்ல கதையம்சம் கொண்ட சினிமாக்கள் வராதது மட்டும் காரணமல்ல. திரையரங்குகளில் வசூலிக்கப்படும் நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணம், இடைவேளையின் போது அங்குள்ள திண்பண்ட அரங்குகளில் விற்கப்படும் கூல்ட்ரிங்ஸ், ஸ்நாக்ஸ் போன்றவற்றில் அடிக்கப்படும் கொள்ளைகள் போன்றவையே மக்கள் திரையரங்கு பக்கம் வரமுடியாமல் செய்து வைத்துள்ளது. 

கடந்த தீபாவளியன்று திரையரங்குகளில் டிக்கட் கட்டணம் இருநூறு ரூபாய் என விற்கப்பட்டது. இரு சக்கர வாகன பார்க்கிங் கட்டணம் பத்து ரூபாய், வெளியே பத்து ரூபாய்க்கு விற்கப்படும் ஐஸ்கிரிம் உள்ளே 25 ரூபாய், பன்னிரென்டு ரூபாய் கூல்ட்ரிங்ஸ் இருபது ரூபாய். இப்படி எல்லாம்மே அதிக பட்ச விலை. இங்கே குறிப்பிட்டது வேலூர், கடலூர், தருமபுரி, கன்னியாகுமரி போன்ற சின்ன நகரங்களில் தான். சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற பெரும் நகரங்களில் இதைவிட ரொம்ப அதிகம். அதோடு, தற்போது சிலப்பல சினிமா தியேட்டர்கள் வரும்போது நொறுக்கு தீணிகள் கொண்டு வரக்கூடாது என்ற கண்டிப்பு வேறு. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் தியேட்டரில் போய் படம் பார்க்க குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவாகிவிடுகிறது. டிக்கட்டில் பிரிண்ட் செய்துயிருக்கும் கட்டணத்தை விட இருபது மடங்கு அதிகமாக வாங்குகிறார்கள் அரசாங்கத்துக்கு கேளிக்கை வரி, சேவை வரியாக கட்டுவது டிக்கட்டில் குறிப்பிட்டுயிருக்கும் தொகைக்கே. இப்படி அரசாங்கத்தையும், ரசிகர்களை தியேட்டர்காரர்கள் நன்றாக ஏமாற்றி சம்பாதித்து விடுகிறார்கள். 

இதில் பாவப்பட்டவர்கள் படத்தை வெளியிடும் விநியோகஸ்தார்கள், வட்டிக்கு பணத்தை வாங்கி படம் தயாரிக்கும் முதலாளிகள் தான். படம் வெற்றியடைந்தால் மட்டுமே முதலாளிக்கு லாபம். இல்லையேல் நடுத்தெரு நாராயணா தான். இதனை உணர்ந்து தான் தயாரிப்பாளருக்கும் லாபம் தரும் வகையில் இந்த புதிய ஹாலிவுட் யுக்தியை கொண்டு வந்துள்ளார் கமல். 

இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக திரைக்கு வந்து நில நாட்களே ஆனா என சேட்டிலைட் சேனல்கள் இன்று கூவுவதற்க்கு பின்னால் கமலின் வியாபார யுக்தியே காரணம். 

திரைப்படங்கள் தியேட்டரில் வெளியிடப்பட்ட பின்பு சில ஆண்டுகள் கழித்து டிவியில் ஒளிப்பரப்பிக்கொள்ள சேட்டிலைட் சேனல்களுக்கு உரிமை தந்து விற்க்கும் முறையை கமல் தான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் புகுத்தினார். ( தற்போது படம் வெளியாகும் முன்பே சேட்டிலைட் சேனல்கள் படத்தின் உரிமையை வாங்கி விடுகின்றன, படம் வந்த சில வாரங்கள் பொறுத்து சேனல்கள் ஒளிப்பரப்புகின்றன ). அப்போதும் இதேபோல் தான் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் அந்த முறை தான் இன்று பல தயாரிப்பாளர்களை நஸ்டத்தில் இருந்தும், தற்கொலையில் இருந்தும் காப்பாற்றி வருகின்றன. 

திருட்டு டி.வி.டி பற்றி கமல் தனது கருத்தாக, வளரும் தொழில்நுட்பத்தில் அதை தடுக்க முடியாது. அதனை ஒழிக்க ஆடியே சி.டி, டி.வி.டி வெளியிடுவதைப்போல திரைப்படம் திரையரங்கில் வெளியிட்ட ஒரு வாரம் கடந்து தயாரிப்பாளர்களே அத்திரைப்படத்தை டி.வி.டியாக வெளியிட்டால் திரையரங்குக்கு வர முடியாதவர்கள் டி.வி.டி வாங்கி படத்தை பார்ப்பார்கள். ஒர்ஜினல் டி.வி.டி கிடைக்கும் போது யாரும் திருட்டு டி.வி.டி வாங்கி படம் பார்க்கும் நிலை வராது. இதனால் தயாரிப்பாளர்க்கு வருமானம் வரும். அதோடு எந்தப்படத்தையும் தியேட்டரில் போய் பார்த்தால் தான் படம் பார்த்த தன்மையிருக்கும். டிவிடியில் பார்த்தால் படம் பார்த்த தன்மையிருக்காது. அதனால் ரசிகர்கள், தியேட்டரில் படம் பார்க்க விரும்பும் மக்கள் நிச்சயம் திரையரங்கம் வருவார்கள். இதனால் திரையரங்குகள் பாதிக்கப்படாது. இந்த யுக்தியை ஹாலிவுட்டில் பல வருடங்களுக்கு முன்பே புகுத்திவிட்டார்கள் தொழில் நுட்பத்தோடு சேர்ந்து அவர்கள் தங்களை மாற்றிக்கொண்டார்கள் நாமும் காலத்திற்க்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார். 

அதையேத்தான் இன்றும் கூறுகிறார். வளரும் தொழில் நுட்பத்துக்கு தகுந்தார்போல் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். நமக்காக தொழில் நுட்பம் வளராமல் இருக்காது. அதோடு சேர்ந்து நாம் பயணம் செய்யும் வகையில் நம்மையும், தொழிலையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார்.

தற்போது புகுத்தியுள்ள டி.டி.எச் யுக்தி, தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை தருவதோடு டி.டி.எச் தொழிலில் உள்ள நிறுவனங்களுக்கு வியாபார போட்டியை உருவாக்கி தந்துள்ளது. இனி ஒரு படம் தொடங்கும் போதே உரிமையை வாங்கிட போட்டி போடுவார்கள் என்பது மட்டும் நிஜம். 

‘முதல் நாளே முதல் ஷோ வீட்டிலேயே அமர்ந்து குடும்பத்தோடு காண எங்கள் நிறுவன டி.டி.எச்யை வாங்குங்கள் என்ற விளம்பரம் வரும் பார்த்துக்கொண்டே இருங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக