வெள்ளி, மார்ச் 18, 2011

தெரியாது தெரியாது தெரியாது. -

இந்தியாவின் பிரதமராக 2004 முதல் அந்த நாற்காலியில் உட்கார்ந்துயிருப்பவர் முன்னால் உலக வங்கி தலைவரான பொருளாதார நிபுணர் என வர்ணிக்கப்படும் காங்கிரஸ் கட்;சியை சேர்ந்த நேர்மையானவர் என அடையாளப்படுத்தப்பட்ட மன்மோகன்சிங். மன்மோகன் சிங் அந்த நாற்காலியில் அமர வைக்கப்பட்டபோதே அவர் அமெரிக்காவின் அடிவருடி. இனி இந்தியா அமெரிக்காவின் ஒரு மாகாணம் போல் செயல்பட போகிறது என்ற குரல்கள் கேட்டன. காலப்போக்கில் அப்படியே நடந்து வருகிறது. அதை செயல்படுத்தி வருகிறார் சிங்.

முதலாவது, 2ஜி ஸ்பெக்ட்ராம் பிரச்சனை 2008ல் கிளம்பியது 2010ல் விசாரணை 2011ல் முன்னால் அமைச்சரவை சகா கைதானபோது செய்தியாளர்கள் பிரதமரிடம் கேள்வி கேட்டபோது, ஸ்பெக்ட்ராம் விவகாரம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்றார்.

இரண்டாவது, காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் விளையாடோ விளையாடு என விளையாடிவிட்டார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி கல்மாடி. இதுப்பற்றி மீடியா, அரசியல் கட்சிகள், உள்கட்சியினர் என பல தரப்பில் இருந்தும் கேள்வி எழுப்பியபோது எனக்கு எதுவும் தெரியாது என்றார் பிரதமர் சிங்.

மூன்றாவது, ஆதர்ஷ் வீடு கட்டும் திட்டத்தில் நடந்த முறைகேடு பற்றியும் தெரியாது என்றார். பிரதமரின் நேரடி கண்காணிப்பில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் 4ஜி ஸ்பெக்ட்ராம்மில் நடந்த ஊழல் பற்றியும் தெரியாது என அறிவித்தார். நான்காவது, கேரளாவில் பணியாற்றும் போது பாமாயில் இறக்குமதி செய்ததில் ஊழல் செய்து சிக்கிய தாமஸ் என்பவரை மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் பதவியில் பிரதமர் சிபாரிசில் ஜனாதிபதி நியமித்ததை பிரச்சனையாக்கி நாடாளமன்றத்தில் பெரிய களோபரமே நடந்தது. உச்சநீதிமன்றம் அவரை பதவி நீக்கம் செய்ய சொன்னதும் அவர் மீது இருந்த வழக்குப்பற்றி எதுவும் தெரியாது எனச்சொல்லிவிட்டார்.

இன்று உலக நாடுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் விக்கிலீக்ஸ், 2008ல் இந்தியாவில் பிரதமர் மன்மோகன்சிங் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது எம்.பிக்களுக்கு பணம் தந்து தீர்மானத்தை தோற்கடித்தார்கள் என்ற தகவலை வெளியிட்டது. அப்படி நடந்தது எனக்கு தெரியாது என பதிலளித்துள்ளார் சிங்.

நாளை…………….

உங்க தலைவி சோனியாகாந்தியப்பத்தி சொல்லுங்க ? எனக்கு தெரியாது.

இந்தியா எப்படி இருக்கு? எனக்கு தெரியாது.

சாப்பிட்டிங்களா? தெரியாது.

உங்க செயலாளர் யார்? தெரியாது என சொல்லப்போகிறார் இந்தியாவின் பிரதமர் நாற்காலியில் உள்ள சிங்.

அவர்க்கு என்னதான் தெரியும் ?. ஊழலை ஒழிப்போம் என பேச தெரியும், சோனியாகாந்தி சொல்லி தந்ததை அப்படியே ஒப்பிக்க தெரியும், இலங்கையில் தமிழர்களை கொல்ல ஆயுதம் தர தெரியும், அதுப்பற்றி கேட்டால் அப்படி எதுவும்மே தரவில்லை என பொய் சொல்ல தெரியும். கேள்வி கேட்டால் தெரியாது என சொல்ல தெரியும்.

இந்தியாவில் இருப்பவன் முட்டால்கள் என்பது காங்கிரஸ்காரனுக்கு தெரியும். இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வைத்துக்கொண்டு வாழ்க, வளர்க்க சோனியாகாந்தி குடும்பம். ஓத்து ஊதும் சிங் குடும்பமும், கவடி தூக்கும் கூட்டணி கட்சிகளும் வாழ்க, வளர்க்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக